Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1.  'மீள்குடியமர்த்தப்பட்டால் 38 நலன்புரி முகாம்களையும் மூடலாம்' -சொர்ணகுமார் சொரூபன் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மயிலிட்டி பகுதியில் மக்கள் குடியமர்த்தப்பட்டால் யாழ்ப்பாணத்தில் உள்ள 38 நலன்புரி முகாம்களையும் மூடலாம். ஏனெனில், இம்முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் இப்பகுதியை சேர்ந்தவர்கள். இவ்வாறு மக்கள் குடியமர்த்தப்பட்டால் தமது வாழ்வாதாரத்தை மீன்படி மூலம் உயர்த்திக்கொள்வார்கள் என்று அப்பகுதி மீனவ சங்கத்தினர் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்தனர். அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (10) யாழ்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல…

  2. தமிழரசுக் கட்சி தனித்துப்போட்டி? 10-01-2016 10:48 AM எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. - See more at: http://www.tamilmirror.lk/163427/%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-#sthash.XqvaZjN5.dpuf

  3. கொள்கைப் பரப்புக் கூட்டங்களை நடத்தும் தமிழரசுக் கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி, தங்கள் கொள்கைகள் மற்றும் நிலைப்பாடுகளை பரப்பும் வகையில், தேர்தல் தொகுதிகள் தோறும் கூட்டங்களை நடத்தி வருகின்றது. பருத்தித்துறை, உடுவில் மற்றும் கோப்பாய் பிரதேசங்களிலேயே இவ்வாறான கூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இத்தகைய கூட்டங்களை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் இந்தக் கூட்டங்களை ஒழுங்குபடுத்துகின்றனர். எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக இந்தக் கூட்டங்கள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகிய பின்னர் மக்களிடையே ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமையை போக்கும் முகமாக இந்த கூட்…

    • 2 replies
    • 686 views
  4. சிங்கராஜா வனத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை [ Sunday,10 January 2016, 07:01:04 ] உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சிங்கராஜா வனத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள ஆயிரம் ஹெக்டயர் காணிகளை வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் சிங்கராஜ வனத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை இந்த வருடத்திற்குள் நிறைவு செய்யவுள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார். இதில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் அடங்கியுள்ளதாக அவர்…

  5. முல்லைத்தீவில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கு சிலை [ Sunday,10 January 2016, 05:13:20 ] வன்னி பெருநிலப்பரப்பை ஆண்ட வீர தமிழ் மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் உருவச் சிலையை முல்லைத்தீவு நகரில் அமைப்பதற்கான முயற்சிகளை வடமாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டுள்ளது. இந்தநிலையில், மேற்படி சிலை அமைப்புக்கான முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் சிலை அமைக்கப்படும் எனவும் தெரியவருகின்றது. மாவீரன் பண்டாரவன்னியன் சிலை வடமாகாணத்தில் குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பில் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த நிலையில், ஒட்டுசுட்டான் பகுதியில் பண்டாரவன்னியனின் சிலை போருக்குப் பின்னர் அமைக்கப்பட்டது. எ…

  6. யோசித்த ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம்- குளோபல் தமிழ்ச் செய்தியாளா் கொழும்பு:- 10 ஜனவரி 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெகு விரைவில் யோசித்த ராஜபக்ஸ கைது செய்யப்படலாம் என குற்றப் புலனாய்வுப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடர்பில் யோசித்த கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவிற்கு நெருக்கமானவர்கள் கைது செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். எனினும், கடந்த ஆண்டிலும் ராஜித இதனையே கூறியதாகவும் இந்த ஆண்டிலும் இதனைக் கூறி வருவதாகம் ராஜிதவின்…

  7. இலங்கைக்கு நிதியுதவிகளைத் திறந்து விடுகிறது அமெரிக்கா [Sunday 2016-01-10 08:00] இலங்கைக்கு பாரியளவில் அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைக்கு அபிவிருத்தி உதவியாக 80 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. நீண்ட இடைவெளியின் பின்னரே இலங்கைக்கு, அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இலங்கைக்கு பாரியளவில் அபிவிருத்தி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கைக்கு அபிவிருத்தி உதவியாக 80 கோடி அமெரிக்க டொலர்களை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளத…

  8. சிறிலங்காவில் துறைமுகம் அமைக்கும் சீனாவின் முயற்சி – அமெரிக்க, இந்திய தளபதிகள் ஆலோசனை JAN 09, 2016by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், தனது துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டம் தொடர்பாக, அமெரிக்க- இந்தியக் கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். மூன்று நாள் பயணமாக நேற்றுமுன்தினம் புதுடெல்லி வந்திருந்த அமெரிக்க கடற்படையின் பசுபிக் கடற்படைப் பிரிவின் தளபதி அட்மிரல் ஸ்கொட் ஸ்விப்ட், நேற்று இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர்.கே.டோவனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தப் பேச்சுக்களில், இந்தியப் பெருங்கடலில், சீனாவின் முன்னகர்வுகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது இந்தியப் பெருங்கடலில் சீன…

  9. ஊடகவியலாளர்கள் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஐ.நா: குளோபல்தமிழ்ச் செய்தியாளா் கொழும்பு 10 ஜனவரி 2016 ஊடகவியலாளர்கள் கொலை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டமை குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்டீவன் டுஜோரிக் தெரிவித்துள்ளார். சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி தொடர்பில் …

  10. கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டம் கிளிநொச்சியில்! - முக்கிய விவகாரங்கள் குறித்து ஆராயத் திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், இரா. சம்பந்தன் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் எதிர்வரும், 21ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாகவும், மாற்றியமைக்கப்படவுள்ள அரசியலமைப்பு தொடர்பில், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பிலும் இந்த…

    • 0 replies
    • 271 views
  11. சிங்க லேயை தடுக்காவிடின் புலி இரத்தமும் உருவாகும்! - ஊடக அமைப்பு எச்சரிக்கை நாட்டில் தற்போது இனநல்லிணக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் ‘சிங்க லே’ அமைப்புத் தடைசெய்யப்பட வேண்டும் என ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கையினை பொலிஸ்மா அதிபர் எடுக்க வேண்டும் என்றும் அந்த ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. ஊடகவியலாளர்களின் தேசிய ஒன்றியம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அதன் தலைவர் சிசிர சி விதானகே இதனைத் தெரிவித்தார். இந்த அமைப்பினூடாக இனங்களுக்கிடையில், மோதல்கள் ஏற்பட்டால் அதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும…

    • 0 replies
    • 375 views
  12. தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாட்டை நிறுத்த விக்னேஸ்வரனுக்கு இந்தியா அழைப்பு? [ Sunday,10 January 2016, 00:23:56 ] இனப்பிரச்சினை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை இந்தியாவின் தலையீடு உள்ளது. குறைந்தது இரண்டு வருடத்திற்கு ஒருமுறையேனும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு புதுடில்லிக்குச் சென்று இந்திய பிரதமரை சந்திப்பது அல்லது இந்திய வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடுவது பின்னர் அந்த சந்திப்பு தொடர்பாக அதீத நம்பிக்கையுடன் ஊடகங்களுக்கு கருத்துச் சொல்வது வழமை. ஆனால் கடந்த ஒரு வருடமாக இந்தியா பற்றிய பேச்சுக்களை விட மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கைவைத்து பேசுகின்ற பண்பை காணமுடிகின்றது. அதுவும் இந்திய மத்திய அரசின் ஆசீர்வாதத்…

  13. சுதந்திரக் கட்சியின் தலைமப் பதவியை கைப்பற்றும் இரகசிய முயற்சியில் மஹிந்த: 10 ஜனவரி 2016 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமப் பதவியை கைப்பற்றும் இரகசிய முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் யாப்பு விதிகளில் திருத்தங்களைச் செய்து கட்சியின் தலைமைப் பதவியை மீளவும் கைப்பற்றும் முயற்சியில் மஹிந்த தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே மஹிந்த கட்சியை விட்டு வெளியேறாமல் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, நாடு தழுவிய ரீதியில் உள்ள தொகுதி அமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்பட…

  14. சிறிலங்கா செல்கிறார் இந்திய வெளிவிவகாரச் செயலர் – தமிழ்க்கட்சிகளைப் புறக்கணிப்பு? JAN 09, 2016 | 12:33 சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வரும் 12ஆம் நாள் கொழும்பு செல்லவுள்ளார். வரும் 12ம் நாள் காலை மாலைதீவில் இருந்து கொழும்பு செல்லும் இந்திய வெளிவிவகாரச் செயலர், உடனடியாக, சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் சித்ராங்கனி வகீஸ்வரா, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சுக்களை நடத்துவார். அதேவேளை, இந்திய வெளிவிவகாரச் செயலரைச் சந்தித்துப் பேச தமிழ்க் கட்சிகளும் விருப்பம் வெளியிட்டுள்ள போதிலும், சந்திப்புகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தி…

  15. [ ஞாயிற்றுக்கிழமை, 10 சனவரி 2016, 04:02.21 AM GMT ] வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்ற செய்தி ஒரு கட்டுக்கதை என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஊடகவியலாளர் சந்திப்பில், வடக்கு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒரு கட்சி முயல்வதாகத் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே, வடக்கு மாகாண அவைத் தலைவர் மேற்கண்டவாறு பதிலடி வழங்கியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில…

  16. மன்னித்தார் ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சராக பதவிவகித்த போது 2006ஆம் ஆண்டு பொலன்னறுவையில் வைத்து அவரை கொலைசெய்ய முயன்ற நபருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார். சிவராஜா ஜெனிகன் என்ற குறித்த நபர், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் வைத்து இன்று ஜனாதிபதியை சந்தித்தார். இதன்போது ஜெனிகனின் கைகளை பிடித்து, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினார். - See more at: http://www.tamilmirror.lk/163379/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-#sthash.kcTyZZih.dpuf

  17. சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞனை 10 வருடங்கள் விசாரணை இன்றி சிறையில்.. வைத்திருந்துவிட்டு.. 2005 இல் மைத்திரியை கொல்ல வந்ததாக.. கடந்த ஆண்டில்.. தான்.. 10 வருட சிறைத்தண்டனை விதித்த விநோதத்தை மறைக்க அவருக்கு சொறீலங்கா சிங்கள சனாதிபதி இன்று பகிரங்க மன்னிப்பு வழங்கி அந்த தமிழ் அரசியல் கைதியை விடுதலை செய்தார் என்ற செய்தியோடு.. Jenivan, now aged 36, was taken into custody in April 2006, accused of being part of an attempt a year earlier to kill Mr Sirisena, who was then a senior cabinet minister. He was sentenced by the Polonnaruwa High Court only in July last year. In pardoning him, Jenivan's lawyer said the president had taken into account the…

    • 12 replies
    • 1.3k views
  18. புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு இணைக்கப்படாது? புதிய அரசியல் சாசனத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாது எனவும் சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஊடகமொன்று அரசாங்கத் தகவல்களை ஆதாரம் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. புதிய அரசியல் சாசனம் புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் தேவைக்காக உருவாக்கப்பட உள்ளதாகவும், வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் மஹிந்த தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனினும், அவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படும் எந்தவிதமான திருத்தங்களும் புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ச…

    • 9 replies
    • 978 views
  19. அடுத்தமாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் சுஸ்மா சுவராஜ் JAN 09, 2016 இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க அடுத்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய – சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்துக்கு வரும் பெப்ரவரி 05 மற்றும் 06ஆம் நாள்கள் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க சிறிலங்கா செல்வும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் யாழ்ப்பாணத்துக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது, இந்தியா புனரமைத்துக் கொடுக்கும் துரையப்பா விளையாட்டரங்கை அதிகாரபூர்வமாக கையளிப்பார் என்றும் தெரிவிக்கப்…

  20. ஜெனீவாவில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை சொன்னபடி நிறைவேற்றுமா? இலங்கை அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தில் கடந்த ஆண்டு அளித்திருந்த உத்தரவாதங்களை புதிய ஆண்டில் நிறைவேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை வலியுறுத்தி சிவில் அமைப்புகளுடன் மனித உரிமை ஆர்வலர்கள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந் ஓராண்டில் ஏற்பட்டுள்ள சில அரசியல் சீர்திருத்தங்களையும் முன்னேற்றங்களையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை முழுமையாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரியுள்ளது. குறிப்பாக, சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனம், 19-ம் …

  21. அதிகாரமற்ற தீர்வை ஏற்போம் என அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்- சம்பந்தன்- குளோபல் தமிழ் செய்தியாளர்:- 09 ஜனவரி 2016 தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதுடன் அதற்கான சபையாக புதிய அரசியலமைப்புச் சபை செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்று எதிர்பார்பார்ப்பதாகவும் எதிர்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நியாயமான தீர்வொன்றை புதிய அரசாங்கம் முன்வைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சம்பந்தன் அதிகாரம் அற்ற எந்த தீர்வையும் கூட்டமைப்பு ஏற்கும் என எவரும் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் புதிய அரசியலமைப்பு சபையாக மாறுவது தமிழ் ம…

  22. நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு காணும் முயற்சிகள், மீள்குடியேற்றம் மற்றும் காணிகள் விடுவிப்பு போன்ற அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஐ.நா தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுபினை நத்தி உறுதியளித்தார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியிருந்தார். ஏனைய சர்வதேச நாடுகளுடன் இணைந்து ஐ.நா இலங்கைக்கு உதவி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஒரு வருடத்தில் இலங்கை பாரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. மா…

  23. விஸ்வமடு பகுதியில் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் முல்லைத்தீவு பதில் நீதவான் பரஞ்சோதியின் அனுமதியோடு இராணுவ வீரரின் சடலம் என சந்தேகித்து அகழ்வு நடைபெற்று வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் படியே அகழ்வு நடைபெறுவதாக கூறப்படுகிறது. நிட்டம்புவ அல்கம பகுதியைச் சேர்ந்த ஒருவர் இராணுவ சிவில் படைப்பிரிவில் விஸ்வமடுவில் கடமையாற்றி இருந்ததாகவும் குறித்த நபர் கடந்த 2010.02.02 அன்றிலிருந்து காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் குறித்த சடலம் அவருடையதாக இருக்கலாம் என சந்தேகித்து அவரது அம்மா மற்றும் உறவினர்கள் வரவழைக்கப்பட்டு இந்த அகழ்வு நடை பெற்று வருகின்றது. குறித்த அகழ்வில் ஊடகவியல…

  24. பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அடிக்கடி அழைக்கப்படுகின்ற போதும் மோசடி தொடர்பில் இன்னும் தன்னிடம் விசாரணை செய்யப்படவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 'இது ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. நேற்றும் பல மணிநேரம் விசாரணை செய்யப்பட்ட போதும் ரக்ன லங்கா நிதி மோசடி தொடர்பில் எதுவும் கேட்கப்படவில்லை. நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படுமாகவிருந்தால் எனது சொத்துக்களை சோதனை செய்யமுடியும். வங்கிக் கணக்குகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் ஆராய முடியும். இதனை விடுத்து தாம் மோசடியில் ஈடுபட்டமையை எவ்வாறு நிரூபிப்பர். நான் சட்டத்துக்கு உட்பட்ட விதத்திலேயே வருவாயை தேடிக் கொண்டேன். …

  25. இராணுவத்தினரை வடிகானை சுத்தம் செய்யக் கூறும் அளவிற்கு வட மாகாண முதலமைச்சருக்கு நல்லாட்சி அரசாங்கம் பலத்தை வழங்கியுள்ளதாக விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு நேற்றுடன் ஒராண்டு பூர்த்தி அடைக்கின்ற நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். நல்லாட்சியினர் பிரிவினைவாதத்திற்கு பலத்தை வழங்கியுள்ளனர். சிவா பசுபதி இலங்கைக்கு வருகை தந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தலையீடு செய்வதற்கான சந்தர்ப்பதை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். புலிகளின் சின்னம் உள்ளிட்ட சட்டையை அணிந்து வடக்கில் இருக்க கூடியவாறு சூழல் மாறுபட்டுள்ளது. நாட்டை பாதுகாத்த இராணுவத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.