Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வங்கதேச இந்து சமூதாயத்தின் பாதுகாப்புக்காக அமைதி ஆர்ப்பாட்டம்! உலக இந்து அமைப்புகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் முன்பாக நடைபெற்றது. வங்கதேசத்தில் ஒடுக்கப்படும் இந்து சிறுபான்மை சமூகத்தின் துயர நிலையை வெளிக்கொண்டு வரும் விதமாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இவ்விடயத்தில் சர்வதேச தலையீட்டின் அவசியம் குறித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களினால் வலியுறுத்தப்பட்டது. மேலும் இவ் ஆர்ப்பாட்டத்தின் போது, வங்கதேச இந்து சமுதாயத்தின் பாதுகாப்பு, சமத்துவம், மற்றும் அடிப்படை மனித…

  2. ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் மட்டுப்படுத்துவதற்கு தயாரில்லை-ஜனாதிபதி! மிகச்சிறந்த அரசொன்றைக் கட்டியெழுப்பி அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி பங்குதாரர்களாக தான் கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துளார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் தெரிவித்தார். சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு வி…

  3. 06 DEC, 2024 | 11:33 AM தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறை காரணமாக சாத்தியமாகியுள்ள ஏதேச்சதிகார ஆட்சியானது ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டமானது இலங்கையில் உள்ள பயங்கரவாதஎதிர்ப்பு கட்டமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது,மேலும் சட்டபூர்வமான கருத்து சுதந்திரத்தை நசுக்குவதற்கு தொடர்ச்சியான ஆட்சியாளர்கள் தனிநபர்கள் குழுக்கள் நிறுவனங்களிற்கு எதிராக இ…

  4. மதுவரி அனுமதிப் பத்திரம் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை December 6, 2024 07:12 am மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில் ஒழுங்கான முறைமையொன்றைப் பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார். மதுவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். அதிகாரிகள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டத்திற்கு முரணான விடயங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சட்டத்தை அமுல்படுத்துவது அவசியம் எனவும் வலியுறுத்திய ஜனாதிபதி, உரிய நேரத்தில் வரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகளுக்கு பணிப்புர…

    • 1 reply
    • 420 views
  5. 05 DEC, 2024 | 11:58 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டதுடன், சூரிய சக்திகள வேலைத்திட்டம் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றில் பயனுள்ள வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிக்குமாறு வலியுறுத்திய ஜனாதிபதி, ஒப்பந்தம் செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் செயல்திறன் அற்றவையாக காணப்படும் பட்சத்தில் அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். வலுசக்தி அமைச்சர் மி…

  6. இனவாதத்தை மீண்டும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) தெரிவித்தார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் எந்த நேரத்…

  7. மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு! வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூளாயைச் சேர்ந்த சிறிபானுசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இரண்டு மாணவர்கள் இன்று காலை வகுப்பிற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மறந்துபோய் வீட்டில் விட்டுச் சென்ற பணத்தினை எடுப்பதற்காக திரும்பி வந்துகொண்டிருந்தவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் மதலுடன் விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த இரண்டு மாணவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை ஒரு மா…

  8. ஊர்காவற்றுறையைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றவிசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான குழுவினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அந்நபர் தலைமறைவாக இருந்த போது வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக 14 முறைப்பாடுகள் தனித்தனியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன எனவும் அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய வழக்கை விசாரித்த நீதிமன்றம்…

  9. தென்மராட்சி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்! தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரி தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று காலை வயலில் இறங்கிப் போராட்டம் செய்துள்ளனர். தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதால் விரக்தியடைந்த விவசாயிகள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ப) தென்மராட்சி விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்!

  10. (நா.தனுஜா) நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வளர்ச்சி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அமெரிக்காவினால் எத்தகைய உதவிகளை வழங்கமுடியும் என்பது குறித்து இருநாடுகளுக்கும் இடையிலான உயர்மட்ட பிரதிநிதிகளின் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ தலைமையில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் பிரதி உதவிப்பணிப்பாளர் அஞ்சலி கௌர் மற்றும் திறைசேரியின் பிரதி உதவிச்செயலர் ரொபர்ட் கப்ரொத் ஆகியோர் அடங்கிய அமெரிக்க உயர்மட்டப்பிரதிநிதிகள் குழுவினர் வியாழக்கிழமை (5) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர். அதன்படி அமெரிக்க திறைசேரியின் பிரதி…

  11. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஒன்லைன் செயலியில் அதிகளவானோர் உள்நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதையடுத்து, செப்டம்பர் 31ஆம் திகதி மக்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் என திணைக்களத்தின் முன்பாக வரி செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் நின்றதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று தெரிவித்தார். அரசாங்கத்தின் திட்டத்திற்கு வரி செலுத்துவோர் விருப்பத்துடன் வரி செலுத்த முன்வந்துள்ளதாகவும் அது மிகப்பெரும் பலம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். செப்டம்பர் 15 முதல் 30 வரையான காலப்பகுதிக்குள் குறித்த செயலியின் நெரிசல் காரணமாக வரி செலுத்த வங்கிகளில் பிரத்யேக கருமபீடங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழில் அதிபர் சிலர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக அமை…

  12. (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) கல்முனை பிரதேச செயலகம் தொடர்பில் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினை இருக்கிறது. அதனால் இது தொடர்பில் நாங்கள் கலந்துரையாடி இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக்கொள்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வாக்குப்பதி கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடி இருக்கின்றனர். கலந்துரையாடலுக்கு பின்னரு…

      • Like
    • 2 replies
    • 280 views
  13. 05 Dec, 2024 | 12:44 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று வியாழக்கிழமை (5) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புதன்கிழமை (4) காலை மீன் பிடிக்க வந்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே தலைமன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களும் இரண்டு இந்திய இழுவைப் படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களும் இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப…

  14. 05 DEC, 2024 | 06:06 PM எதிர்வரும் 7 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வானிலை நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த காற்றுச் சுழற்சியை பொறுத்தவரையில், உருவாகியதன் பின்னர் மிக மெதுவாக மேற்கு அல்லது வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில், அதாவது 10ஆம் திகதி அல்லது 11 ஆம் திகதி அளவில் இலங்கைக்கு அண்மித்த பகுதிகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் …

  15. 05 DEC, 2024 | 05:30 PM நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்குதல் போன்ற எந்தவொரு அரசியல் அழுத்தங்களும் இனிமேல் இடம்பெறாது. நாட்டுக்கு உகந்த தூய்மையான முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முழுச் சுதந்திரத்தை இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைய முதலீட்டுச் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசியல்…

  16. 05 DEC, 2024 | 05:13 PM பிளாஸ்ரிக் பொருட்கள் மற்றும் கழிகளை கண்ட கண்ட இடங்களில் வீசி எறியாமல், அவற்றை உரிய இடத்தில் போடுவதை பாடசாலை மட்டங்களிலிருந்து பழக்கப்படுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். யுஎன்டீபி நிறுவனத்தால் மன்னாரில் முன்னெடுக்கப்படும் சுற்றுச்சூழல் தொடர்பான அபிவிருத்தி திட்ட மீளாய்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது . அதில் கலந்துகொண்டு கருத்து தெரவித்தபோதே மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யுஎன்டிபி அமைப்பானது மன்னார் மாவட்டத்தில் ஆறு குழுக்களுக்…

  17. நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு? சந்தையில் உப்புக்குத் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மழை பெய்து வருவதால், போதிய அளவு உப்பை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அதிக அளவு உப்பு கரைந்து நாசமாகியுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன் பண்டிகை காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் உப்பின் விலை சடுதியாக அதிகரிக்கலாம் எனவும் வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். இதற்கு பரிகாரமாக இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் வர்த்தகர்கள் சு…

  18. நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி யாழில் நிதி மோசடி நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம் பெற்று வருவதாகவும், அவ்வாறு பொய்கூறி வருபவர்களை நம்ப வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி காணி பிடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களது வீடுகளுக்குச் சென்று நாங்கள் விசாரிப்பது வழமை. அ…

      • Haha
      • Like
    • 12 replies
    • 1.1k views
  19. புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறைகள் சர்வகட்சிக் கூட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அரசியல் தீர்வின் ஆரம்பப்புள்ளியாக விளக்கும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் ஒருபோதும் நீக்கப்படக்கூடாது எனவும், புதிய அரசியலமைப்பு உருவாக்க செயன்முறைகள் சர்வகட்சிக்கூட்டத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அச்செயன்முறைகள் 13 ஆவது திருத்தத்தின் அம்சங்களை மேலும் செழுமைப்படுத்தும் வகையிலேயே அமையவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா வீரகேசரி வார வெளியீட்டுக்…

  20. மீளமைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை Vhg டிசம்பர் 05, 2024 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) கொழும்புக் கிளை நேற்று (04-12-2024) மீளமைக்கப்பட்டுள்ளது. இதன்போது கொழும்புக் கிளையின் முன்னாள் செயலாளர் சி.இரத்தினவடிவேல் தலைவராகவும், மலர்விழி சிங்காரநாதன் செயலாளராகவும், முத்துக்குமாரசாமி பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மத்திய செயற்குழு உறுப்பினர்கள் அத்துடன் ஐவர் மத்திய செயற்குழு உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளும்னற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர். https://w…

  21. மாவீரர் நாள் குறித்து பொய் தகவல்களை பரப்பிய மொட்டு கட்சியின் முக்கியஸ்தர் கைது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாகச் செயலாளர் ரேணுக்க பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/313178

      • Thanks
      • Like
    • 11 replies
    • 696 views
  22. IMF உடன்படிக்கை திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு December 5, 2024 09:45 am சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தப்பட்ட விடயங்கள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். "அடுத்த மூன்று ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் நாங்கள் செயல்பட வேண்டும் என்று நாங்கள் கூறினோம். அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம். ஆம், அது திருத்தப்பட்டுள்ளது. அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்ட…

  23. 13 ஆம் திருத்தம் மட்டுமே தமிழருக்கு உள்ள ஒரே பாதுகாப்பு” - சுரேஷ் க. பிரேமச்சந்திரன் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தியினர் மாகாணசபை தொடர்பாக அண்மையில் வெளிப்படுத்திவரும் கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடக அறிக்கையொன்றினை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்பொழுது மாகாணசபை முறைமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அதற்கான தேர்தல் விரைவாக நடத்தப்படும் என்றும் அதிலுள்ள அதிகாரங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப…

  24. தேசிய மக்கள் சக்தி தமிழர்களுக்கு எதிரான அரசியல் போரை தீவிரப்படுத்தும்: அருட்தந்தை மா.சத்திவேல் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி காலம் என்பது வடகிழக்கு தமிழர்களின் அரசியலுக்கு எதிரான உக்கிரமான அரசியல் போர்க்காலமாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. அரசியல் களச் சூழ்ந…

  25. டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தம் December 4, 2024 05:53 pm 5.7 பில்லியன் ரூபா வரி மற்றும் மேலதிக கட்டணங்களை செலுத்த தவறியதன் காரணமாக டபிள்யு எம்.மெண்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமம் நாளை முதல் நிறுத்தப்படவுள்ளது. குறித்த நிறுவனம் கலால் வரியை செலுத்தத் தவறியதன் காரணமாகவும் அது தொடர்பான 5.7 பில்லியன் ரூபா கலால் திணைக்களத்திற்குச் செலுத்தப்பட வேண்டியதன் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை நாளை (05) முதல் இடைநிறுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். மேலும், மதுபான உற்பத்தி ச…

      • Haha
      • Like
    • 18 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.