ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
MRன் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரையும் விலகிக் கொள்ளுமாறு MY3 உத்தரவு:- 06 டிசம்பர் 2015 முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் பாதுகாப்பிற்கு என வழங்கப்பட்டிருந்த 500 இராணுவத்தினரையும் விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க இந்தவாரம் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்த அறிக்கையொன்றை ஆராய்நத பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதியின் பாதூப்பிற்கு என 500 இராணுவத்தினரும் 130பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் இதற்கான அனுமதியை பொலிஸ் தiiமையகம் வழங்கியுள்ளது என்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லையெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டி…
-
- 0 replies
- 760 views
-
-
பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இராணுவத்திடம் இருந்து மீட்கப்படும்! - கல்வி அமைச்சர் உறுதி [Sunday 2015-12-06 08:00] இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அரசு பொறுப்பேற்கும் என்று என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான விவாதம் நடைபெற்றது. இதில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போது, 14 கற்கை நெறிகள் கற்பிக்கப்பட்ட பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது சுட்டிக்காட்டினார். இதன்போதே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பலாலி ஆசிரியர் பயிற்சி…
-
- 0 replies
- 494 views
-
-
பொருளாதார காரணங்களுக்காக வடக்கு கிழக்கை இணைக்க அவசியம் இல்லை: இலங்கை அரசாங்கம் [ ஞாயிற்றுக்கிழமை, 06 டிசெம்பர் 2015, 03:11.47 AM GMT ] பொருளாதார காரணங்களுக்காக வடக்கு கிழக்கு இணைப்பு என்ற திட்டத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை கோடிட்டு இந்த செய்தியை இந்திய செய்தித்தாள் ஒன்று வெளியிட்டுள்ளது. செலவுகளை குறைப்பதை நோக்காகக் கொண்டு இந்த விடயம் மேற்கொள்ளப்படக்கூடாது என்பதற்கு பதிலளித்துள்ள அமைச்சர், பௌதீக ரீதியாக மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இனங்களையும் மதங்களையும் ஒன்றுபட வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது இது அவசியம் இல்லை என்று அவர் தெரிவித்துள்…
-
- 0 replies
- 655 views
-
-
துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்த இலங்கை தயார் – சீனா:- 06 டிசம்பர் 2015 துறைமுக நபர் அபிவிருத்தி திட்டத்தை முன்னெடுக்க இலங்கை தயாராக உள்ளது என சீனா தகவல் வெளியிட்டுள்ளது. இடைநிறுத்தப்பட்டுள்ள குறித்த திட்டத்தை முன்னெடுக்க இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தித்திட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகிய திட்டங்கள் இலங்கையின் அபிவிருத்;திக்கும், சீனப்பட்டுப்பாதைக்கும் முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை மீளாய்வு செய்து இலங்கை அரசாங்கம் அபிவிருத்தித் திட்டங்களுக்கு …
-
- 0 replies
- 754 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து எதனையும் வாங்க கூடாது என கிளிநொச்சியில் இராணுவத்தினர் உத்தரவு போட்டிருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கனாகாம்பிகை குளம் பகுதி ஒன்றில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கு ஏற்பாடு சேர்த்து மறுநாள் தானும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் அவற்றை வழங்க சென்றதாகவும், கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு அமைப்பின் ஆசிரியர்கள் இன்று மாணவர்கள் யாரும் வரவில்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வழங்கும் எந்த பொருளையோ, உதவியையோ வாங்க வேண்டாம் என இராணுவத்தினர் கூறியுள்ளதாக தங்களை திருப்பி அனுப்பியதாகவும் கூறினார். அத்தோடு, …
-
- 0 replies
- 926 views
-
-
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் நிலைமை இலங்கையிலும் உருவாகலாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வானியலாளர்கள் இந்த எச்சரிக்கைச் செய்தியை வெளியிட்டுள்ளனர். இந்த அபாய எச்சரிக்கையை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது பொலன்னறுவை மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அநுராதபுரத்திலும் நாச்சியாதீவு, கலா-பளளுவெவ போன்ற குளங்கள் நிரம்பி வழிந்து, வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. வடக்கில் கிளிநொச்சி, கிழக்கில் திருமலை , மட்டக்களப்பு மாவட்டங்களும் இவ்வாறான வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளன. அத்துடன் வருடம் முழுவதும் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்படும் ஹம்பாந்தோட்டை மாவட்டமும் இம்ம…
-
- 0 replies
- 705 views
-
-
அடுத்த இப்போ பெய்த மழையைவிட பலமடங்கு மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜப்பானிய வான்வெளி ஆய்வு முகவர் ஒருவரும் நாசாவும் வெளீயிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையில் பெய்வது மழை அல்ல EL Nino சூழற்சிப் புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 250 Cm வரைக்கும் பெய்த இந்த சுழற்சிப் புயல் மீண்டும் சென்னையை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையே முழுகி போக வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதனால் சென்னை கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி உடனே நகரும்படி பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாசா வானிலை மையம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இதுவரை அடித்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியலானது என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டுள்ளது :முதலமைச்சர் ஆதங்கம் அரசியலானது என்னை நுனிப்புல் மேயும் ஆடாக மாற்றி விட்டுள்ளது. எதையும் ஆரஅமரச் சிந்தித்து ஆராய்ந்து அறிவை மேம்படுத்தக் கூடிய ஒரு அவகாசத்தை என்னிடம் இருந்து பறித்தெடுத்து விட்டது என வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக மண் தினமான இன்று காலை 9.30 மணிக்கு யாழ். கிறீன் கிறாஸ் விடுதியில் ஆரம்பாமான “மண் – உயிர் வாழ்வதற்கான திடமான தளம் கருத்தமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மண்ணாட்சி என்பது நாடுகளாலும் அரசுகளாலும் பயன்படுத்தப்படும் க…
-
- 0 replies
- 1.3k views
-
-
அரசியல் தீர்வுக்காகவே அரசாங்கத்துடன் பொறுத்துப் போகிறோம்! - மாவை சேனாதிராஜா [Thursday 2015-12-03 09:00] ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடன் அமைதி காத்து அரசாங்கத்துடன் இணைந்து போகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வரும் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார். ஐ.நா தீர்மானத்தின் பிரகாரம் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்து கொள்வதற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடன் அமைதி காத்து அரசாங்கத்துடன் இணைந்து போகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலை வரும் கூட்டமைப்பின் செயலாளரும்…
-
- 10 replies
- 1.3k views
-
-
வீட்டுத்திட்ட உதவிக்கு பாலியல் இலஞ்சம் கோரப்பட்டதான குற்றச்சாட்டு பொய்! - இந்திய அரசு அறிவிப்பு [Friday 2015-12-04 09:00] இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின் போது வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் பெண்களிடம் பாலியல் ரீதியான விருப்பங்களை எதிர்ப்பார்த்தார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் ராஜசபாவில் இந்த விடயம் நேற்று வெளியிடப்பட்டது. இலங்கையின் வடக்கில் மேற்கொள்ளப்படும் இந்திய வீட்டுத்திட்டத்தின் போது வீடுகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கை செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் பெண்களிடம் பாலியல் ரீதியான விருப்பங்களை எதிர்ப்பார்த்தார் என்ற குற்றச்சாட்டு ப…
-
- 1 reply
- 993 views
-
-
நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறப்பு , அதி மழையின் காரணமாக, பல நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்படி ராஜாங்கனை, இங்கினிமிட்டிய, தப்போவ, தெருவோய, பராக்கிரம சமுத்திரம், கவுடுல்ல, வெஹேரகல, லுனுகம்வெஹெர மற்றும் சேனாநாயக்க சமுத்திரம் என்பவற்றின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த நீர்நிலைகளுக்கும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், பொலன…
-
- 0 replies
- 945 views
-
-
கிளிநொச்சி பொலீசாாின் மூா்க்கத்தனமான தாக்குதல் மாடு பாா்க்கச்சென்றவா் மருத்துவமைனையில் 05 டிசம்பர் 2015 http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126582/language/ta-IN/article.aspx
-
- 1 reply
- 830 views
-
-
போர்க் குற்றம் விசாரணை உள்ளகப் பொறிமுறை ஜனவரியில் ; நீதியமைச்சர் தகவல் [ Saturday,5 December 2015, 04:53:13 ] மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க் குற்றம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை தொடர்பான பேச்சுக்களை வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னர் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் உள்ளகப் பொறிமுறையை ஆரம்பிப்பற்கும் அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை நிறைவுக்கு வந்த பின்னர், உள்ளகப் பொறிமுறையை அமைத்தல் தொடர்பான பேச்சுக்களை நடத்த எதிர்பார…
-
- 0 replies
- 810 views
-
-
தாஜூடீனின் பிரேதப்பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் மஹிந்த ரணிலை சந்தித்து இரகசிய பேச்சு 05 டிசம்பர் 2015 பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் பிரேதப் பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கொழும்புத் தகவலகள்; தெரிவிக்கின்றன. பாராளுமன்ற வளாகத்தில் பிரதமரின் அலுவலகத்தில் நேற்றைய தினம் இந்த இகரசிய மூடிய கதவு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. தாஜுடீன் கொலைய…
-
- 0 replies
- 756 views
-
-
அவன்ட்கார்ட் விடயத்தில் தம்மை இணக்க வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முயன்றார்: சந்திரிக்கா [ சனிக்கிழமை, 05 டிசெம்பர் 2015, 03:16.08 AM GMT ] அவன்ட்கார்ட் ஆயுதக்கப்பல் விடயம் தொடர்பில் தமது சாதகப் போக்கை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்பார்த்தார் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனையவர்களையும் அவன்ட்கார்ட் விடயத்துக்கு சாதகமாக கொண்டு வரமுயற்சித்தார். எனினும் தாம் அதனை நிராகரித்துவிட்டதாக சந்திரிக்கா கூறினார். துறைமுக கப்பல்துறையின் ஓய்வுப்பெற்ற உறுப்பினர்களுக்கான நிகழ்வு ஒன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் அழைப்பின்பேரில் சந்…
-
- 0 replies
- 570 views
-
-
12 ஆயிரம் புலிகள் விடுதலையா? 38 தமிழ்க் கைதிகளின் பிணையா பாரதூரமானது? : ரணில் கேள்வி 12 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை கடந்த ஆட்சியில் விடுதலை செய்தது பாரதூரமானதா? அல்லது 38 தமிழ்க் கைதிகளை பிணையில் விடுவித்தமை பாரதூரமானதா? என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர்களின் மீதான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த தரப்பு அணியினர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பதிலளி…
-
- 0 replies
- 638 views
-
-
மகேஷ்வரன் கொலை சூத்திரதாரி சபையில்;விசாரிக்குமாறு விஜயகலா வலியுறுத்து [ Saturday,5 December 2015, 03:18:52 ] தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்த முன் னாள் அமைச்சர் அமரர் மகேஸ்வரனின் படுகொலை சூத்திரதாரி நாடாளுமன்றத்திலேயே இருக்கிறார். இவரை விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். வடக்கில் பொதுமக்களுக்குச் சொந்தமான 250 ஏக்கர் நிலப்பிரப்பில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்த மாளிகையை இடித்து உடைத்து அந்நிலப்பகுதியை நில உரிமையாளர்களுக்கு கையளிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வ…
-
- 0 replies
- 752 views
-
-
மஹிந்த புலிகளை விடுவித்தது சரியென்றால் நான் கைதிகளை விடுவித்தது தவறா? மைத்திரி [ Saturday,5 December 2015, 03:06:41 ] கருணா அம்மானை சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் பிள்ளையானை முதலமைச்சராகவும் நியமித்து கே.பி.யை பாதுகாத்ததுடன் புலிப்பயங்கரவாத போர்க்களத்தில் நின்றிருந்த 12 ஆயிரம் புலி உறுப்பினர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுதலை செய்தது சரியென்றால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் இருந்தவர்களை நான் பிணையில் விடுவித்தது தவறா? என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். “கபடத்தனமான அரசியல்வாதிகளின் இறுதிப் புகலிடமே தேசப்பற்று” என்று இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் ஜவஹர்லால் நேரு தெரிவித்திருப்பதாகவ…
-
- 0 replies
- 645 views
-
-
விநாயகமூர்த்தி முரளீதரனை SLFPயின் பிரதிதலைவராகவும் அமைச்சராகவும் நியமித்தது சிறந்த முடிவு விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவரான விநாயகமூர்த்தி முரளீதரனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதிதலைவர்களில் ஒருவராகவும் அமைச்சராகவும் நியமித்தது சிறந்த முடிவு என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன இன்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தின்போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மக்கள் மனதில் இனதீவிரவாதத்தை பரப்புவது மிகவும் தவறான செயலாகும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை விடுவிப்பதற்கும், புலம…
-
- 1 reply
- 880 views
-
-
இந்தியாவும், அமெரிக்காவும் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது புலனாய்வுத் தகவல்களை வழங்கின:- 04 டிசம்பர் 2015 இந்தியாவும், அமெரிக்காவும் தமிழீழ விடுதலைகளுக்கு எதிரான யுத்தத்தின் போது புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாக அரசாங்கம் இன்று பாராளுமன்றில் அறிவித்துள்ளது. குறிப்பாக கடற் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது அமெரிக்காவும் இந்தியாவும் புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாகவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா ஆட்சி செய்த காலத்திலும் தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்திலும் இந்த தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் பிரதமர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாட…
-
- 0 replies
- 832 views
-
-
நினைத்துப் பார்க்க முடியாத துயரினைத் தமிழகம் இன்று சந்தித்திருக்கின்றது. வானம் பிளந்தது போலக் கொட்டித் தீர்த்த மழை ஆற்றுப்படுத்தவே முடியாத அளவுக்குத் தமிழகத்தினை வாட்டி வதைத்திருக்கின்றது. தமிழகமே வெள்ளக்காடாகிப் பல இலட்சம் மக்கள் தமது சொந்த வீட்டில் வாழ முடியாத நிலையில் இடம்பெயர்ந்து அவலத்துக்குள்ளாகியிருக்கின்றார்கள்;. தாழ்நிலங்களில் வாழ்ந்த ஏழை மக்களில் பலரது உயிர்கள்கூட இழக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. பல்லாண்டுகளாக மக்கள் சிறுகச்சிறுகச் சேமித்த, சேகரித்த சொத்துக்கள் கூட அழிவடைந்திருக்கின்றன. வார்த்தைகளுக்குள் விபரிக்க முடியாத துயர் நிறைந்த இவ்வாறான வாழ்க்கையைத் தமிழகத்திலிருக்கும் எங்களுடைய தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
மாணவி உயிரைப் பறித்த கடற்படை பேருந்து : வேலணையில் சம்பவம் வேலணை புளியங்கூடல் சரவனை சந்தி பகுதியில் கடற்படையினரின் பேருந்து ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் வேலணை மேற்கு நடராஜா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவியும், ஊர்காவற்றுறை நாராந்தனைப் பகுதியைச் சேர்ந்த உசாந்தினி உதயகுமார் வயது (15) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த மாணவி பாடசாலை செல்லும் வழியில் கடற்படைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று மாணவியை மோதியது. இதில் குறித்த மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த மாணவியின் சடலம் யாழ்…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பகூடாது - சரிகா திராணகம தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பகூடாது என ரஜனிதிராணகமவின் மகளும் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின்மனிதவியல் ஆய்வாளருமான சரிகா திராணகம இந்திய செய்தித்தாள் ஓன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையின் அகதிகள் மற்றும் இடம்பெயர்வுகள் குறித்த ஆய்வுகளிற்காக தென்னிந்தியாவிற்கு விஜயம் செய்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை திருப்பியனுப்புவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவரும் வேளையில் அவ…
-
- 8 replies
- 2.3k views
-
-
அவன்ட் காட் ஆயுத கப்பல் தொடர்பான விசாரணைகளுக்கு சமுகமளிக்காமல் இருந்தால், அந்த நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதியை கைது செய்ய இன்டர்போலின் உதவி நாடப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இந்த கப்பல் தொடர்பில் தற்போது பாரிய ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது. எனினும் மருத்துவ சிகிச்சை ஒன்றை வெளிநாட்டின் பெறுவதன் காரணமாக சேனாதிபதிக்கு இந்த விசாரணையில் பங்கேற்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையிலேயே அவர் விசாரணையில் இருந்து தப்ப முயற்சித்தால் சர்வதேச பொலிஸின் உதவி நாடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இதேவேளை அவன்ட் காட் நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக…
-
- 0 replies
- 1.1k views
-
-
சில்லறைத்தனத்திலிருந்து விடுபடுங்கள் : வடக்கு முதல்வர் அறிவுரை எமது முன்னோர்கள் மிகக்குறைந்த வருவாயுடன் எவ்வித மேலதிக வருமானங்களும் இன்றி தமது வாழ்க்கை முறைமையை அழகாக அமைத்துக் கொண்டார்கள். ஆனால் இன்றோ ஓடியோடி உழைத்தும் எமது வருமானங்கள் போதுமானதாக அமைவதில்லை காரணம் வீண் விரயங்கள். ஒருவர் ஒன்றைச் செய்தால் அதிலும் இருமடங்காக நாங்கள் செய்து காட்ட வேண்டும் என்ற ஒரு சில்லறைத்தனம் எம்முள் பலரிடம் குடிகொண்டிருக்கின்றது இதிலிருந்து விடுபடுங்கள் இவ்வாறு வடக்கு முதல்வர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்வோம் செய்விப்போம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற மாகாணக் கண்காட்சியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் …
-
- 5 replies
- 1.7k views
-