Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீதிக்கான தேடல் திரைப்படம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தத் தயாராக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் கெலம் மக்ரே அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியொன்றை பீ.பீ.சி. சிங்கள சேவை வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் இருந்து மேலும் தெரியவருவதாவது, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் நோக்கில் நீதிக்கான தேடல் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் வழமை போன்று இலங்கை அரசாங்கம் இது தொடர்பில் ஆதாரங்கள் இல்லை என்ற வழமையான மறுப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆவணப்படத்திற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாக அதன் தயாரிப்பாளர் கெலம் மக்ரே அறிவித்துள்ளார். …

  2. அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியாவின் ஆதரவைக் கோருகிறார் சம்பந்தன்SEP 12, 2015 | 1:37by கார்வண்ணன்in செய்திகள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைகளையே இந்தியா மரபுவழியாக வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கொல்கத்தா ரெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு மூன்று நாட்கள் மு…

  3. ஈபிடிபி கட்சியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் விலகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈபிடிபி கட்சியின் கொள்கையுடன் இணங்கி செயற்படுவதனால், மக்கள் மத்தியில் அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என்பதால் அக்கட்சியில் இருந்து அவர் விலகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த பொதுத் தேர்தலில் ஈபிடிபி கட்சியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற போதிலும், சந்தமிரகுமார் வெற்றி பெற முடியாது போனது. கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்த சந்திரகுமார் ஈபிடிபி கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் மக்களின் அரசியல் செயற்பாட்டினை முன்னெடுக்க உள்ளமை தொடர்பில் தற்போது செய்திகள் கசிய ஆரம்பித்துள்ளன.சந்திரகுமார் எந்தக் கட்சியுடன் …

    • 2 replies
    • 631 views
  4. இன்று பகிரங்கமாக வெளியிடப்படுகிறது ஐ.நா விசாரணை அறிக்கை?SEP 13, 2015 | 1:38by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை இன்று பகிரங்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்துலக நிபுணர்களான மார்டி அதிசாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்மா ஜஹாங்கீர் ஆகியோரின் வழிகாட்டலில், சன்ட்ரா பெய்டாஸ் தலைமையிலான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் நிபுணர் குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா அரசாங்கத்திடம், இந்த அறிக்கையின் நீர்எழுத்து முத்திரையிடப்பட்ட இரண்டு பிரதிகள் கையளிக்கப்பட்டுள்…

  5. துணை ஆயுதக்குழுவுக்கு மகிந்த அரசு வழங்கிய 1000 துப்பாக்கிகள் – சிஐடி விசாரணையில் அம்பலம்SEP 13, 2015 | 1:54by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால், ஆயிரம் ரி 56 துப்பாக்கிகள் துணை ஆயுதக் குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. முன்னர் துணை ஆயுதக் குழுவொன்றின் தலைவராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்த ஒருவரிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் பெருமளவு ஆயுதங்கள் கைமாறப்பட்டது பற்றிய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரிலேயே, ஆயிரம் வரையான ரி 56 துப்பாக்கிகளும்…

  6. ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பான அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை - மனிதாபிமான சட்டமீறல்கள் குறித்து ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் சர்வதேச விசாரணை, உள்ளகப்பொறிமுறை எனப் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் வெளிவருகின்றமை தொடர்பாக மத்திய குழு உறுப்பினர்களால…

  7. யாழ். ஆவரங்காலில் கோர விபத்து: 32பேர் காயம் [ சனிக்கிழமை, 12 செப்ரெம்பர் 2015, 06:43.55 AM GMT ] யாழ்.பருத்துறை வீதியில் புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் பாரவூர்தி ஒன்றும் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் விபரம் உடனடியாக வெளியாகவில்லை. (இரண்டாம் இணைப்பு ) இன்றைய தினம் காலை புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் காயமடைந் துள்ளனர். எனினும் உயிரிழப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்றைய தினம் …

  8. போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோரி வரும் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தடைகளையும் ஏற்படுத்தவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு கட்சி தடை விதிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 10ம் திகதி கிளிநொச்சியில் போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியமானது என அழுத்தம் கொடுக்கும் வகையில் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாடு கிடையாது எனவும் அது சிவாஜிலிங்கத்தின் தனிப்பட்ட நிலைப்பாடு …

  9. ஐ.நா விசாரணை அறிக்கை சிறிலங்காவிடம் கையளிப்பு – அடுத்தவாரம் பகிரங்கமாகும்SEP 12, 2015 | 1:16by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கையின் அதிகாரபூர்வ பிரதி ஒன்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தவார இறுதியில் சிறிலங்கா அரசாங்கம் இந்த விசாரணை அறிக்கையின் பிரதி ஒன்றை பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, இந்த அறிக்கை பெரும்பாலும் நேற்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, இந்த அறிக்கை கிடைத்த கையுடன், நேற்று சி்றிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீச ஜெனிவா புறப்பட்டுச் ச…

  10. ரவிராஜைக் கொல்ல கொலையாளிகளுக்கு துப்பாக்கியைக் கொடுத்த மூத்த இராணுவ அதிகாரிSEP 12, 2015 | 11:10by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரி-56 துப்பாக்கியை, கொலையாளிகளுக்கு சிறிலங்காவின் மூத்த இராணுவ அதிகாரி வழங்கியது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு நொவம்பர் 10ஆம் நாள் கொழும்பில், நாரஹேன்பிட்டியவில் வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தப் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ரி 56 துப்பாக்கியை கொலையாளிகளுக்கு, மூத்த இராணுவ அதிகாரி ஒருவரே வழங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை உறுதிப்பட…

  11. சிறிலங்கா மீதான அனைத்துலக விசாரணையை மோடி அரசு ஏற்காது – முன்னாள் இந்திய இராஜதந்திரிSEP 12, 2015 | 10:52by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை இந்தியாவின் மோடி அரசாங்கம் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமானது என்றும், சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் நிருபம் சென். கல்கத்தா ரெலிகிராப் நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இத்தகையதொரு முன்னுதாரணம், இதுபோன்ற விசாரணைகளை காஷ்மீரிலும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையைத் தூண்டி விடும் என்று இந்தியா எச்சரிக்கையாக இருக்கிறது. தனது அண்டை நாடாக இருப்பதால், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணை நடத்துவதற…

  12. உள்நாட்டு விசாரணைக்கு கூட்டமைப்பை இணங்க வைக்குமாறு மோடியிடம் கோருவார் ரணில்SEP 12, 2015 | 10:12by கி.தவசீலன்in செய்திகள் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணங்க வைப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆதரவு கோரவுள்ளார். இந்தியாவின் பாரம்பரிய நண்பரான சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாளை மறுநாள் இந்தியாவுக்கு தனது முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அவர் வரும் 15ஆம் நாள்- செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசும் போது, ஐ.நா விசாரணை அறிக்கை மற்றும் ஜெனிவாவில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக பேச்சு நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவ…

  13. சிறிலங்காவின் ‘பொறுப்புக்கூறல்’ தடுமாற்றம்SEP 12, 2015 | 6:42by நித்தியபாரதிin கட்டுரைகள் சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் அனைத்துலக நாடுகளை ஒன்றுபடுத்துவதில் அமெரிக்கா முன்னிற்க வேண்டும். தற்போது அமெரிக்கா சிறிலங்காவின் உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஆதரவளிப்பதானது அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு மிகப் பாரிய தடையாக உள்ளது. இவ்வாறு the diplomat ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது தொடர் ஆரம்பமாவதற்கு இன்னமும் சில நாட்கள் உள்ளநிலையில், சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்த மீறல்களை உள்ளடக்கிய ஐ.நா மனித உரிமைகள் அறிக்க…

  14. வடக்கு மாகாண சபை முதல்வர் விக்கினேஸ்வரன் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, பாராளுமன்ற தேர்தலின்போது, விக்னேஷ்வரனின் நடத்தை கேள்விக்குறியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் செயல்பாடுகள் கட்சிக்கு எதிராக இருந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லை. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து வரும் 11-ம் திகதி நடக்கும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். http://www.colombomirror.co…

  15. குடும்ப தலைவர், கணவர்,தந்தை, எம்முடன் இல்லாத காரணத்தால் தாம் நாளாந்தம் செய்யும் அன்டறாட வேலைகளை கூட செய்யமுடியாமல் பெரும் சிரமப்படுவதாக நீண்ட காலமாக எவ்வித வழக்குகளும் இன்றி சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு சிறையில் வாடும் தமிழ் அரசிய் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது இதில் கலந்து கொண்டிருந்த சிறைக்கைதிகளின் உறவுகள் தமது நிலமைகளைச்சொல்லி அழுத காட்சி அங்கிருந்த பலரை சோகத்தில் ஆழ்த்தியது. இதில் கலந்து கொண்ட சிறைக் கைதியொருவரின் மனைவி கருத்து தெரிவிக்கையில், 2007 ம் ஆண்டு எனது கணவர் வீட்டில் இருந்…

  16. உலகின் சமூக, அரசியல் மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் அடிக்கடி மாறி, மாறி இடம்பெறும் போன்று தெரிகின்றது. அவை சில சமயங்களில் விசித்திரமானதாகவே அமைந்துவிடுவதுண்டு. எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என்றவகையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. அந்தவகையில் அரசியலை பொறுத்தவரை உயர் பதவிகளில் இருக்கின்றவர்கள் பதவி இழப்பதும் முன்னர் இருந்ததைவிட குறைந்த பதவிகளுக்கு செல்வதும் தற்போது அடிக்கடி இடம்பெற்றுவருகின்றன. அதற்கு அண்மைக்கால சிறந்த உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 10 வருடங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்து விட்டு தற்போது பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கின்றமையை குறிப்பிட்டுக்கூற முடியும். இதேவேளை தற்போது நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந…

  17. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் எதுவும் நடத்தப்படமாட்டாது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகள் மாத்திரமே நடத்தப்படும் என்று தெரிவித்த அவர், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலும் தெரிவித்தார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்ட ருவன் விஜேவர்தன நேற்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக்காலை இடம்பெற்ற நிகழ்விற்கு பின்னர் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிலர் சர்வதேச விசாரணைகள் தேவை என்று வலியுறுத்தி…

  18. ஐந்து இலட்சம் ரூபா பணம் தருவதாகக் கூறி தனது சிறுநீரகத்தை பெற்றுக் கொண்ட நபர் தன்னை ஏமாற்றிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக ஹட்டன் எபோஸ்ட்லி தோட்டத்தைச் சேர்ந்த ஜோன்ஸ்டன் என்ற இளைஞன் முறையிட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நோயாளியை கவனித்துக் கொள்ளும் தற்காலிக பணியில் குறித்த இளைஞன் ஈடுபட்டிருந்தார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சிறுநீரகம் தேவைப்படுவதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் கேட்டபோது அதற்கு ஜோன்ஸ்டன் விருப்பம் வெளியிட்டுள்ளார். சிறுநீரகத்தை தானம் செய்வதற்காக 5 இலட்சம் ரூபா தருவதாகவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் வாய்மூலமாக உறுதியளித்துள்ளார். …

  19. விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர் நெடியவன் எனப்படும் பேரின்பராசாவுக்கு செய்மதித் தொலைக்காட்சி அனுமதிப்பத்திரமொன்றை பிரான்ஸ் வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நோர்வேயின் ஒஸ்லோவில் வசித்து வரும் நெடியவன், 2009ம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக இனம் காணப்பட்டுள்ளார். இவர் முன்னர் ரிரிஎன் எனும் தொலைக்காட்சி சேவையை நடத்தி வந்தார். எனினும் சட்டச்சிக்கல்கள் காரணமாக பின்னர் அது மூடப்பட்டது. இந்நிலையில் நெடியவனின் புதிய தொலைக்காட்சி சேவைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பிரான்சின் ரியூடெல் சாம் செய்மதி ஊடாக குறித்த சேவை இலங்கை, இந்தியா நாடுகளிலும் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள…

  20. எதிர்கட்சித் தலைவராக இரா.சம்பந்தனை ஏற்றுக்கொள்ள முடியாதென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவை நியமிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர். இந்தக் கடிதத்தின் பிரதியொன்றை சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். எதிர் கட்சியில் அதிக எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கே இருப்பதால், தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வேல்கமவை எதிர்கட்சித் தலைவர…

  21. சீபா உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்டு இலங்­கையை இந்­திய கால­னித்­துவ நாடாக மாற்­றவே ரணில் முயற்­சிக்­கின்றார். கடந்த தேர்­தலில் இந்­தியா செய்த உத­விக்கு ரணில் இப்­போது மாற்­று­தவி செய்­கின்றார் என விமல் வீர­வன்ச தெரி­வித்தார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். உலகில் எங்கும் இல்­லா­த­வா­றான ஒரு அர­சாங்கம் இலங்­கையில் இன்று நடை­மு­றையில் உள்­ளது. கடந்த ஆட்­சியில் இருந்த அமைச்­ச­ரவை மிகவும் மோச­மா­னது எனவும் தான்­தோன்­றித்­த­ன­மாக அமைச்சுப் பத­விகள் வழங்கப்படு­கின்­றது எனவும் குறிப்­பிட்­ட­வர்கள் இன்று நல்­லாட்­சி­யிலும் அதே முறை­மை­யையே கையாள்­கின்­றனர். தமது அதி­கா­ரங்­களை தக்…

  22. செய்மதிப் பயன்பாடு குறித்த உடன்பாட்டில் இந்தியாவுடன் கையெழுத்திடுகிறார் ரணில்SEP 11, 2015 | 11:46by கி.தவசீலன்in செய்திகள் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்புக்கான (சார்க்) செய்மதி தொடர்பாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுடன் உடன்பாட்டில், கையெழுத்திடவுள்ளார். சிறிலங்கா உள்ளிட்ட சார்க் உறுப்பு நாடுகளின் தேவைக்கான செய்மதி ஒன்றை ஏவும் திட்டத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்திருந்தார். காத்மண்டுவில் நடந்த 18ஆவது சார்க் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் முன்வைத்த இந்த யோசனைக்கு சிறிலங்கா உள்ளிட்ட நாடுகள் ஆரம்பத்திலேயே வரவேற்புத் தெரிவித்திருந்தன. தற்போது சார்க் நாடுகளின் தேவைக்கான செய்மதியை கொடை அடிப்படையில் இந்தியா தயாரித்து, விண்ணில் செலுத்…

  23. வடக்கு மாகாணத்திலே பல வைத்தியசாலைகள் அரசினால் பல்வேறு வசதிகளுடன் நடாத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் மனச்சாட்சிகளுடனும் மனிதாபிமானத்துடனும் மக்களுக்கு சேவையை வழங்குவாற்கான மனிதர்களை இவ் வைத்தியசாலைகள் கொண்டிருக்கவில்லை. குறிப்பாக வவுனியா மாவட்டத்தின் போதனா வைத்தியசாலையில் இந்த அசாதாரண நிலை மிக அதிகமாக காணப்படுகிறது. கடந்த மூன்று வருட காலமாக விசேட சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரின் தவறான வைத்திய முறையால் பல நோயாளிகள் இறந்துள்ளனர். அத்துடன் பெண் நோயாளிகளையும் குறித்த மருத்துவர் தவறாக கையாண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்திரசிகிச்சை கூடத்தில் பெண் நோயாளி ஒருவரை துஷ்பிரயோகதிற்கு உள்ளாக்கியமை அனைவரும் அறிந்திருந்த நிலையிலும் அவர் ஒரு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்…

  24. இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகவும் கனடா அறிவித்துள்ளது. கனடாவிற்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் அஹமட் ஜவாட், கனேடிய ஆளுனர் நாயகம் டேவிட் ஜொன்ஸ்டனை நேற்று சந்தித்த போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் உட்பட இலங்கையின் தற்போதைய வளர்ச்சி குறித்து உயர்ஸ்தானிகர் ஜவாட், கனேடிய ஆளுனர் நாயகத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளார். அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கியுள்ள உலகம் முழுவதும் வாழும் இலங்கை வாழ் புலம்பெயர்ந்தோருடன் இணக்கப்பாடுகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் வரலாற்று ரீதியாக இரு…

  25. பல்லாயிரம் பக்தர்களின் அரோகரா கோசம் முழங்க நல்லூரான் தேரில் உலா நல்லூர்க் கந்தன் தேர்த்திருவிழா இன்று பக்திபூர்வமான முறையில் நடைபெறுகிறது. இன்று காலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெறுவதுடன் மங்கள வாத்தியங்களுடன் ஆலய உள்வீதி வலம் வந்து 7.15 மணிக்கு திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளுவார். நல்லைக்கந்தன் ஆலயத்தின் முன்றலில் அமைந்துள்ள தேர்முட்டியிலிருந்து திருத்தேர் புறப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலயத்தின் திருவீதி உலாவந்து நிலையை வந்தடையும். திருத்தேர் நிலையை வந்தடைந்ததும் பச்சைசாத்தி சுவாமியை ஆலயத்துக்குள் எழுந்தருளச் செய்வதுடன், பிராயச்சித்த அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விசேட பூஜைகளும் நடைபெறும். இன்று மாலை 6 மணிக்கு வழமைபோன்று சுவாமியின் திருவீதி உலாவும் நடைபெறும். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.