Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்க்கட்சித் தலைவராக நாளை நியமிக்கப்படுகிறார் சம்பந்தன்? – தட்டிப்பறிக்க முனையும் வாசுSEP 02, 2015 | 0:52by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நேற்று இடம்பெற்ற போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் அறிவிக்கப்படவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள – தேசிய அரசாங்கத்துடன் இணையாள கட்சிகளின் உறுப்பினர்கள், தமக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வ…

    • 21 replies
    • 1.1k views
  2. ஒற்றையாட்சியில் அதிகாரப் பகிர்வு இல்லை சமஸ்டியே இறுதி தீர்வு : சுமந்திரன் எம்.பி ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் இதற்கு மேலும் அதிகாரங்களைப் பகிர முடியாததன் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி முறையிலான தீர்வினை வழியுறுத்துவதாகவும், இதுவே தமது உறுதியான நிலைப்பாடு என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவந்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். எட்டாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, அதில் பங்கேற…

  3. "மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச தலையீடு தேவை""மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையில் சர்வதேச தலையீடு தேவை" இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார்.இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச உதவியுடன் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அழுத்தக் குழுவான இன்டர் நேஷனல் க்ரைசிஸ் க்ரூப்பின் இலங்கைத் திட்ட இயக்குனர் ஆலன் கீனன் கூறியிருக்கிறார். பிபிசிக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை …

  4. போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தொழில்நுட்ப உபாயங்களை கையாள்கிறார் ஜனாதிபதி நாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் கடைபிடிக்கப்படும் தொழில்நுட்ப உபாயங்களை பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சுக்கள் மற்றும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டையும், இளம் சந்ததியினரையும் போதை பொருள் பாதிப்பில் இருந்து மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களை தாம் பொறுப்புடன் முன்னெடுக்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சுக்களும், நிறுவனங்களும் உதவ வேண்ட…

  5. உள்ளக விசாரணைக்கு கூட்டமைப்பு துணை போகக்கூடாது! - சுரேஷ் பிரேமச்சந்திரன்[Wednesday 2015-09-02 19:00] உள்ளக விசாரணை காலத்தை இழுத்தடிப்பு செய்து குற்றவாளிகளை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இருக்கும், எனவே அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போகக் கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.நீர்வேலியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்திற்கு அமைய விசாரணைகள் நடாத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெளி வந்த பின்னர் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் …

  6. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு 3 கட்சிகள் கடிதம்! [Wednesday 2015-09-02 19:00] வட கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பிற்கும், போர்க்குற்றங்களுக்கும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியன ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது- ஸ்ரீலங்காவில் வாழ்கின்ற தமிழ் மக்களை பிரதிநித்துவப்படுத்துகின்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களை சேர்ந்த நாங…

  7. தென்மராட்சியில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய அதிபருக்கு விளக்கமறியல் நீடிப்பு! [Wednesday 2015-09-02 19:00] பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபரை தொடர்ந்தும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் செல்லையா கணபதிபிள்ளை, நேற்று உத்தரவிட்டார். சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அதிபருக்கு பிணை வழங்குமாறு மன்றில் கோரியிருந்தார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சாவகச்சேரி பொலிஸார், சந்தேக நபர் அங்கு கல்வி கற்கும் மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதற்கு சாட்சிகள் இருப்பதாக கூறி பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சாவகச்சேரி பொலிஸா…

  8. சுதந்திரக் கட்சியை முழுமையாகப் புனரமைக்கப் போவதாக மைத்திரி அறிவிப்பு! - மாநாட்டில் மஹிந்தவும் பங்கேற்பு [Wednesday 2015-09-02 19:00] ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை முழுமையாகப் புனரமைப்புக்கு உட்படுத்த உள்ளதாக அதன் தலைவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64வது மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பூரண மீள்புனரமைப்புக்கு உட்படுத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக்கூடிய சக்தியாக முன்னேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு பயணிக்கவுள்ளதாகவும் ஆனால் தனது பயணம் வேகமான பயணம் இல்லை என்றும் மெதுவான பயணம் என்பதால் மீள்திருப்பம் இல்லை …

  9. மல்லாவி விபத்தில் பரீட்சை எழுதச் சென்ற மாணவன் பலி! - மற்றொரு மாணவன் படுகாயம். [Wednesday 2015-09-02 19:00] முல்லைத்தீவு, மல்லாவி ஒட்டக்குளம் சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் உயர்தரப் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த மாணவனான தர்மலிங்கம் பிரதீப் (வயது 19) உயிரிழந்துள்ளதுடன், எஸ்.சுஜீவன் (வயது 20) என்ற மாணவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர். மல்லாவி மத்திய கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களான இவர்கள், 12.30 மணிக்கு உயர்தர புவியியல் பாடப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தனர். இதன்போது, ஒட்டக்குளத்திலிருந்து பாண்டியன்குளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு …

  10. அண்மைக்காலமாக தனது குரல் வழி பேட்டியினை தவிர்த்து வந்த இரா.சம்பந்தன் அவர்கள் வழங்கிய இந்த நேர்காணலை கேட்கத் தவறாதீர்கள். "முதலமைச்சர் விவகாரம் விரைவில் முடிவு எடுக்கப்படும்": அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையில் 28.08.2015 அன்று ஒலிபரப்பாகிய 'இடி முழக்கம்' நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ப.தெய்வீகன். ஒலிப்பதிவினை கேட்க: https://soundcloud.com/imurasuweb/i0wiuf6ehmt3

  11. பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகாSEP 01, 2015 | 2:52by கார்வண்ணன்in செய்திகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறியிருந்தார். பிரபாகரனின் தலையில் ஏற்பட்ட காயம், அவரது கைத்துப்பாக…

  12. எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்படாவிடின், கௌரவப் பதவியை தூக்கி எறிவேன் பெரும் எதிர்ப்பார்ப்பையும், வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படாவிட்டால், தனக்கு வழங்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதித் தலைவர் என்ற கௌரவப் பதவியை தூக்கி எறியப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டார். நாடாளுமன்றில் மக்கள் பலம் கொண்ட மூன்றாவது கட்ச…

  13. கருணாவிற்கு சுடலை ஞானம் பிறந்துள்ளது: சுரேஷ் பிரேமச்சந்திரன் [ புதன்கிழமை, 02 செப்ரெம்பர் 2015, 12:07.31 PM GMT ] தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி கருணாவுக்கு வந்திருப்பதற்கு பெயர்தான் சுடலை ஞானம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சிகளுக்கு கருணா வழங்கிய செவ்வி தொடர்பாக யாழ்.ஊடகவியலாளர்களுடன் கருத்து பகிர்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், கருணா தனது நேர்காணலில் தான் சமஷ்டி தீர்வுக்காக நீண்டகாலம் உழைத்ததாக கூறியுள்ளார். அவர் நாடாளுமன்றத்தில் இருந்த காலத்தில் நானும் நாடாளுமன்றத்தில் இருந்தவன் என்றவகையில் அவர் சமஷ்டி குறித்து பேசியதை ஒரு…

  14. அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 30ஆவது நினைவுதினம் அனுஷ்டிப்பு தழிழரசுக்கட்சியின் மூத்த தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உடுவில்-மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 30ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. 30ஆவது நினைவுதின நிகழ்வுகள் யாழ். தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,தர்மலிங்கத்தின் புதல்வருமான சித்தார்த்தன் கலந்து கொண்டு அவரது தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=237864239102297545#sthash.yM8p9JWk.dp…

  15. இந்தியா புறப்படுகிறார் பிரதமர் ரணில் பிரதமர் ரணில் விக்கரமசிங்க, இம்மாதம் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பிரதமரின் விஜயத்திற்கான திகதி குறித்து தற்போது இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், எதிர்க்கட்சி தலைவர் நியமனம் மற்றும் அமைச்சரவைக்கு அதிக உறுப்பினர்களை நியமிப்பதற்குரிய நாடாளுமன்ற அங்கீகாரம் ஆகியன பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இவ்விஜயம் அமையுமென தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த அரசாங்கத்தை பெரிதும் எதிர்த்த இந்தியா, தற்போதைய மைத்திரி அரசாங்கத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. சீனாவுடனான இராஜதந்திர உறவுகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பிரதமரின் இந்திய விஜயம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையவுள…

  16. சுதந்திரக்கட்சியின் 64ஆவது மாநாடு இன்று! [Wednesday 2015-09-02 06:00] ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64ஆவது மாநாட்டு இன்று பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொள்வார்களென எதிர்பார்க்கப் படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவிருக்கும் கட்சியின் 64 ஆவது ஆண்டு நிறைவு நிகழ் விற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர்களான முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் களுக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு …

  17. நாளை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்படுகிறார் சம்பந்தன்? [Wednesday 2015-09-02 07:00] இலங்கை நாடாளுமன்றத்தில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி 8வது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் நாளை 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துள்ளன. இந்த நிலையில் அரசாங்கத்தில் இணையாத தமிழ்த் தேசியக் கூ…

  18. இராணுவத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்! - ஞானசார தேரர்[Wednesday 2015-09-02 07:00] ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவத்தின் போர்வையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் கடந்த 2001ம் ஆண்டு மிலேனியம் சிட்டி சம்பவத்தின் ஊடாக புலனாய்வுப் பிரிவினர் காட்டிக் கொடுக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் புலனாய்வுப் பிரிவு பாரியளவில் வீழ்ச்சி அடையவும், அதிக எண்ணிக்கையிலான புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் கொலை செய்யப்படவும் காரணமாகியது. புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர…

  19. அரசின் நகர்வுகளைப் பொறுத்தே கூட்டமைப்பின் ஆதரவு! - சித்தார்த்தன்[Wednesday 2015-09-02 07:00] புதிய அரசாங்கம் தமிழர் விடயத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்தார். அரசாங்கத்துக்கு, வெளியில் இருந்து தேவைக் கேற்ப ஆதரவை வழங்கினாலும், இனப்பிரச்சினைத் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவத்தினால் அபரிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்களில், எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொறுத்தே, ஆதரவு தொடருமா என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php…

  20. இலங்கையுடன் வலுவான உறவு ஏற்பட்டுள்ளது! - இந்திய துணைப்பாதுகாப்பு ஆலோசகர்[Wednesday 2015-09-02 07:00] இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் தற்போது வலுவான உறவு ஏற்பட்டுள்ளதாக இந்திய துணைப்பாதுகாப்பு ஆலோசகர் கலாநிதி அரவிந்த் குப்தா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஆரம்பமான பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “பிராந்திய வலயத்தின் அபிவிருத்திக்கு இவ்வாறான உறவுகள் அத்தியாவசியமானது. பயங்கரவாதம் தொடர்ந்தும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இளையவர்கள் அதிகளவில் அடிப்படைவாதத்தை தழுவத் தொடங்கியுள்ளனர். இணைய வழிகளின் ஊடாக பல்வேறு தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றன. பயங்கரவாதத்தை தடை செய்ய அனைத்…

  21. மோடியைச் சந்திக்க இந்தியா செல்கிறார் ரணில்SEP 02, 2015 | 2:06by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் புதிய பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இந்த மாதம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை் இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா பிரதமரின் புதுடெல்லிப் பயணத்துக்கான நாட்களை ஒழுங்கு செய்யும் பணியில். இந்திய, சிறிலங்கா அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக, புதுடெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, இந்தியாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர், ”ரணில் விக்கிரமசிங்கவின் பயண நாட்கள் தொடர்பான விபரங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் இந்தப் பயணம் இடம்பெறக் கூடும்” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜன…

  22. அவைத் தலைவராக லக்ஸ்மன் கிரியல்ல நியமனம் எட்டாவது நாடாளுமன்றின் அவைத் தலைவராக, முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் இந்தப் பதவிகள் குறித்து முன்னதாகவே எதிர்வு கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல, இம்முறை கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அமோப வெற்றியீட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வரும் கயந்த கருணாதிலக்க, காலி மாவட்டத்தில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.…

  23. சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சுSEP 02, 2015by கார்வண்ணன்in செய்திகள் இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலாநிதி அர்விந்த் குப்தா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பிலுள்ள கலதாரி விடுதியில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில், நேற்று ஆரம்பமான சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக, இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலாநிதி அர்விந்த் குப்தா கொழும்பு வந்துள்ளார். இந்தப் பாதுகாப்பு மாநாட்டின் ஒரு பக்க நிகிழ்வாகவே, நேற்றைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியத் தூதுவர்…

  24. புதுடெல்லியில் மோடியைச் சந்திக்கிறார் சந்திரிகாSEP 02, 2015 | 1:09by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை தேர்தல்களில் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றியவரான முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். புதுடெல்லியில் நடக்கவுள்ள அனைத்துலக இந்து- பௌத்த மாநாட்டின் பக்க நிகழ்வாகவே, இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாநாடு, நாளை தொடக்கம், எதிர்வரும் 5ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. பாஜக ஆதரவு விவேகானந்தா அனைத்துலக நிறுவகம், ரோக்கியோ பவுண்டேசன், அனைத்துலக பௌத்த சம்மேளனம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த மாநாட்டை, இந்தியப்…

  25. இலங்கையில் சர்வதேச விசாரணை கோரி வடமாகாணசபை தீர்மானம் Image captionசர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை வடமாகாண முதல்வர் சி வி விக்னேஸ்வரன் முன் மொழிந்தார்இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்மொழிந்தார். ஏற்கனவே சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட்டிருக்கிறது என்று பிபிசி தமிழோசையிடம் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருந்த பின்னணியில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த தீர்மானம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.