ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143509 topics in this forum
-
இன்று அதிகாலை கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் பலியாகியுள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் ஏ9 சாலையின் வழியே, கொடிகாமம் வீரசிங்கம் மகாவித்தியாலயத்துக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த வாகனமே விபத்துக்குள்ளானது. வாகனத்தை செலுத்தி வந்த சாரதி நித்திரையானதனாலேயே அருகில் இருந்த மதில் சுவருடன் வாகனம் மோதுண்டு விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வாகனத்தில் பயணித்த இருவர் பலியாகினர். ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.colombomirror.com/tamil/?p=5428
-
- 0 replies
- 924 views
-
-
நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் கட்டாயமாக தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் 'கபே' அமைப்பு தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு அதிகாலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. வாக்காளர்கள் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும் அதேவேளை அக்கட்சியின் ஊடாகப் போட்டியிடும் ஊழலற்ற சிறந்த வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை வழங்குமாறு கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த தேர்தல்களோடு ஒப்பிடுகையில், இம்முறை சுயாத…
-
- 0 replies
- 633 views
-
-
வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை கடந்த தேர்தல்களில் எமது மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திற்கும் நிரூபித்துக்காட்டினர். இம்முறையும் அதனை எமது மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். எனினும், தீர்வை நாம் விரைவில் பெற மாபெரும் வெற்றி இம்முறை எமக்குத் தேவைப்படுகின்றது. இந்த வெற்றிச் செய்திக்காக சர்வதேச சமூகம் காத்திருக்கின்றது. எனவே, 17ஆம் திகதி காலையிலேயே தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.'' - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். "தமிழ்…
-
- 5 replies
- 887 views
-
-
2014 அக்டோபர் 29 இல் மீரியபெத்த – கொஸ்லந்த பகுதியில் நடந்த மன்சரிவலில் பெருமளவான மலையக தோட்டத்தொழிலாளர்கள் தமது வீடு, மற்றும் இருந்த சொத்துக்களோடு மண்ணோடு மண்ணாக புதையுண்டு மாண்டனர். காலை 07.30 மணியளவில் நிகழ்ந்த இந்த கொடுமையான அனர்த்தம் நிகழ சற்று முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்களும் தொழிலார்கள் சிலரும் மாத்திரமே தப்பித்தனர். அப்படி தப்பிய தொழிலாளர் ஒருவர் தான் யோகராஜா. அவரது மனைவி பிள்ளைகள், பேரப்பிள்ளை என ஐவர் புதையுண்டு மாண்டனர். அவரது மனைவியின் உடலும் ஒரு சில மாத பேரக்குழந்தையின் உடலும் மாத்திரமே மண்ணுக்குள் இருந்து சடலங்களாக மீட்க கிடைத்தன. சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. எஞ்சிய பலர் அகதிமுகாம்களில் வாழ்கிறார்கள். அனர்த்தம் நிகழ்ந்த இடத்திலிரு…
-
- 0 replies
- 390 views
-
-
ஐ.தே.க ஆட்சியமைக்க த.தே.கூ ஆதரவு வழங்கும்: சம்பந்தன் ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது இல்லத்தில் நேற்று பல்வேறு அமைப்புகளின் பிரதிநிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐ.தே.க. 105 ஆசனங்களுக்கு மேல் பெற்று வெற்றிப்பெறுமென கருத்துக்கணிப்புக்களும் ஆய்வாளர்களும் கூறுகின்றன. நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன். இதேவேளை ஐ.ம.சு.மு 70க்கும் 85 க்கும் இடைப்பட்ட ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. …
-
- 14 replies
- 685 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பெயரினை துஸ்பிரயோகம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அப்பட்டமான போக்கிலித் தனத்தை வெளிப்படுத்தி நிற்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய சூழல் தொடர்பினில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தாயகம்.தேசியம்.சுயநிர்ணயமெனும் கோசங்களை வலியுறுத்தி ‘ பொங்குதமிழ்’ பிரகடனம் ஊடாக தமிழ் மக்களின் அங்கிகாரத்திற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நீண்டதொரு பாதையை கடந்தே வந்துள்ளது. நடந்தது இன அழிப்பு என்பதில் மாற்றுக்கருத்தேயில்லையென்பதுடன். சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்புக்களையும் இணைத்து நடத்தியபோராட்டம் மிகப் பெரும் அவ…
-
- 13 replies
- 560 views
-
-
சிறிலங்காவின் நாடாளுமன்றத் தோ்தலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடும் ! - ஒரு பார்வை [Saturday 2015-08-15 18:00] சிறிலங்கா அரசாங்கத்துக்கான நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரும் 17ம் நாள் நடைபெறவிருக்கின்ற நிலையில், சிங்கள அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழர் தாயகப்பகுதியிலும் இத்தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் மக்கள் எத்தகையவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறிக்கையொன்றின் மூலம் சில நாட்டுகளுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை முன்வைத்து, தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்க…
-
- 0 replies
- 282 views
-
-
வணக்கம் எல்லாரும் சுகமாய் இருக்கிறியளோ? உங்கட கருமங்களை பார்க்கிறதுக்காகத்தான் வயதுபோன நேரத்திலயும் உங்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கிறன். ஓமோம் உந்தக் கறுமத்தை ஏன் கேப்பான் எண்டு முணுமுணுப்பியள். ஆனா ஒண்டை விளங்கிக்கொள்ளுங்கோ இண்டைக்கு இருக்கிற மூத்த அரசியல்வாதி நான் தான். தம்பி நான் 33 இல பிறந்து 56 இல தமிழரசுக் கட்சியில சேர்ந்து 77 இல எம்பி ஆனவன் தம்பி. இண்டைக்கு பார் 59 வருசமாக இந்த அரசியலுக்க தான் நிக்கிறன். இண்டைக்கு 82 வயசிலயும் எங்கட மக்களுக்காக அரசியல் செய்துகொண்டிருக்கிறன் என்ன? தமிழீழம் வேணும் எண்டு கேட்டுப்போட்டு நீங்கள் போயிட்டியள். இண்டைக்கு அந்த இலட்சியத்திற்காக எத்தினை பிள்ளையள் செத்து போச்சுதுகள் ஆனா இண்டைக்கு அந்த விடுதலைப்போராட்டத்தை மதிக்கிற நோக்…
-
- 2 replies
- 1.2k views
-
-
வடக்கில் போருக்குப் பிந்திய சூழலில் சமூக உளவியல் புனர்வாழ்வுAUG 15, 2015 | 12:41by நித்தியபாரதிin ஆய்வு கட்டுரைகள் சட்டம், ஒழுங்கு மற்றும் நீதி போன்றவற்றுக்குப் பொறுப்பளிக்க வேண்டியவர்கள் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். போரின் போதும் அதன் பின்னரும் மக்கள் இவ்வாறான சட்ட ஒழுங்கின் பாதிப்பால் பல்வேறு துன்பங்களைச் சந்தித்துள்ளனர். இதுவே அவர்கள் இன்று சட்டத்தை தமது கைகளில் எடுத்துள்ளமைக்கான பிரதான காரணம். இவ்வாறு, வடக்கு, கிழக்கில் போருக்குப் பிந்திய உளவியல் பாதிப்புகள் குறித்து, சண்டே ரைம்ஸ் வாரஇதழில், விரிவான கட்டுரையொன்றை வரைந்துள்ளார் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட உளநலத்துறை பேராசிரியர் கலாநிதி தயா சோமசுந்தரம். இந்த கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இராணுவ அழுத்தங்களால் பிரகீத் கடத்தல் குறித்த விசாரணைகளை நிறுத்த ரணில் உத்தரவுAUG 15, 2015 | 12:09by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா இராணுவத்தின் அழுத்தங்களால், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறுத்தும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் சிறிலங்கா படையினருக்குள் குழப்பங்கள் ஏற்படக் கூடும் என்று இராணுவ உயர் மட்டத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்தே, சிறிலங்கா பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது குறித்த விசாரணைகளில்,…
-
- 0 replies
- 587 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 11:17.48 AM GMT ] கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இராணுவத்துக்கு சார்பாக வாதாடி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை தோல்வியடைய செய்தார் யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் சட்டத்தரணி சுமந்திரன் அவர்களுக்கு எதிராக “வடமராட்சி வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம்” என்கின்ற பெயரில் இனம்தெரியாதவர்களால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் தொடர்பில் திரு. சுமந்திரன் அவர்கள், அவரது யாழ் அலுவலகத்தில் இன்று காலை ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தார். அதன் பொழுது, போராளிகள் கல்வியறிவற்றவர்கள் என்று தான் கூறியதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக் குறித்து விளக்கமளித்த அவர், போலிஸ் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டால், குறித்த மாகாணங்களை சேர்ந்த …
-
- 28 replies
- 2.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆறு பேர் நேற்று இந்தியாவின் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்கள் 4 நாட்களுக்கு முன்னர் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு வந்துள்ளமை விசாணைகளில் இருந்த தெரிய வந்துள்ளது. இந்திய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/08/15/விடுதலைப்-புலி-உறுப்பினர்கள்-6-பேர்-கைது
-
- 0 replies
- 314 views
-
-
இந்தியாவின் 69 ஆவது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாணத்திலும்! இந்தியாவின் 69 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஜந்தாவது தடவையாக கொண்டாடப்படும் இந்த நிகழ்வில் இந்திய தேசிய கோடியை இந்திய துணை தூதுவர் நட்ராஜ் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில் இலங்கை வாழ் இந்திய பிரஜைகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=174214197315379484#sthash.OP0hTSwK.dpuf
-
- 1 reply
- 353 views
-
-
சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல; நடைபெறும்: ஜனாதிபதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் சுதந்திரமானதாகவும், நீதியானதாகவும் நடைபெறுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2015 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொது நலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் அவ…
-
- 0 replies
- 419 views
-
-
தெரிவாகும் எம்.பிக்களை வளைத்துப் போட சீனாவிடம் பணம் கேட்கும் மகிந்த! [Saturday 2015-08-15 07:00] வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், ஐ.ம.சு.முன்னணிக்கு தேவையான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள ஐதேகவில் தெரிவாகும் உறுப்பினர்களை பணத்திற்கு கொள்வனவு செய்ய மஹிந்த ராஜபக்ச தனது சிரேஸ்ட இராஜதந்திரிகள் ஊடாக சீன அரசாங்கத்திடம் பணம் கேட்டுள்ளார். ஒரு உறுப்பினருக்கு 200 மில்லியன் என்று கணக்கிட்டுள்ள மஹிந்த, அதிக உறுப்பினர்கள் எண்ணிக்கையை காட்டி அதற்கான பணத்தைப் பெற்றுத் தருமாறு சீனாவிடம் கேட்டுள்ளார். சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு குறைந்தது 500 மில்லியன் கொடுக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தரப்பு சீனாவிடம் கூறியுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாட்களில் சீன…
-
- 0 replies
- 277 views
-
-
விடுதலைப் புலி சந்தேகநபரை இலங்கையிடம் ஒப்படைத்தது மலேசியா! [Saturday 2015-08-15 07:00] மலேசியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் நேற்று கொழும்பக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். கோலாலம்பூரில் வைத்து அவர் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 37 வயதான குறித்த நபர் கடந்த 2012ம் ஆண்டு சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்குள் பிரவேசித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் மலேசியாவில் குறித்த நபர் பணம் திரட்டியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பிரஜைகளுடன் இணைந்து கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டதாக விசாரணைகளின் போது குறித்த நபர் ஒப்புக்கொண்டுள்ளார். http://w…
-
- 0 replies
- 227 views
-
-
மைத்திரி எதிர்த்தாலும் மஹிந்தவே பிரதமர்! - விமல் வீரவன்ச சூளுரை[Saturday 2015-08-15 07:00] ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்த்தாலும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியே தீருவோம் என்று சூளுரைத்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ. கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். "மைத்திரிபால சிறிசேன அழுத்தங்களினாலேயே இவ்வாறான ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். தேர்தலின் பின்னர் மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து மைத்திரி - மஹிந்த இருவரும் இணைந்து செயற்படுவார்கள். ஐக்கிய மக்கள் சுதந்திர ம…
-
- 0 replies
- 260 views
-
-
மகிந்த - மைத்திரி பனிப்போரால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் பெரும் பிளவு! [Saturday 2015-08-15 07:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பனிப்போர் உக்கிரமடைந்து பகிரங்க மோதலாக வெடித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் கட்டுப்பாட்டு பணிமனை நேற்றுமாலை திடீரென அகற்றப்பட்டுள்ளது. உயர்மட்ட அழுத்தம் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் நேற்று அகற்றப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாததிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு தலைமை ஏற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…
-
- 0 replies
- 164 views
-
-
1-அனைத்துத் தமிழ் மக்களும் ஒரே இனம் என்ற தேசாபிமான உணர்வுடன் போராட்டத்தில் பங்கு கொண்டால் எமது விடுதலை இலட்சியம் வெற்றி பெறுவது நிச்சயம் 2-அரசியல் என்பது மக்கள் மீது ஆட்சியை நடாத்தும் அல்லது அதிகாரம் செலுத்தும் விவகாரம் அல்ல. அரசியல் என்பது மக்களுக்குச் சேவை புரியும் பணி. மக்களின் நல்வாழ்வுக்கு ஆற்றுப்படும் தொண்டு. 3-சொல்லுக்கு முன்னே எப்போதும் செயல் இருக்கவேண்டும். செயலால்தான் நாங்கள் செல்வாக்குப் பெற்றோம் செயல்தான் நமது நடவடிக்கைகளுக்கு அரசியல் வடிவம் தருகின்றது. 4-எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
போர் முடிவடையும் போது கஜேந்திரகுமார் பேசியது உண்மை! பேசியது என்ன? - விளக்குகிறார் சம்பந்தன்! [ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 06:06.47 PM GMT ] போர் முடிவடையும் கட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போர் முடியும் கட்டத்தில் என்னோடு பேசியது உண்மையென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேசியது என்ன? தேர்தலின் பின்னர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாது? எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு எவ்வாறு இருக்கின்றது? என பல்வேறு விதமான கருத்துக்களை அவர் முன்வைத்திருக்கின்றார். அது தொடர்பான முழுமையான விபரங்கள் இங்கே. …
-
- 6 replies
- 665 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆதரவளித்து அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் என வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கேட்டுள்ளார். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தனை ஆதரித்து நடந்த பிரசாரக் கூட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கலந்து கொண்டார். இதேவேளை இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சித்தார்த்தன் பேசுகையில்: எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை தொடர்ந்தும் ஒரு பலமான கட்சியாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் பயணம் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல …
-
- 20 replies
- 1.4k views
-
-
"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு விலைபோய் தமிழ்த் தேசியத்தை - தமிழ்க் கூட்டமைப்பை சிதைக்கமாட்டார்கள். வாக்குகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமடையச் செய்வார்கள். கடந்த தேர்தல்கள் இவற்றுக்கு உதாரணங்களாக உள்ளன. இதனை அனைவரும் உணரவேண்டும்" - என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "இன்று தமிழர் பிரச்சினை சர…
-
- 17 replies
- 795 views
-
-
-
- 0 replies
- 390 views
-
-
யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பெயரினை துஸ்பிரயோகம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அப்பட்டமான போக்கிலித் தனத்தை வெளிப்படுத்தி நிற்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய சூழல் தொடர்பினில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தாயகம்.தேசியம்.சுயநிர்ணயமெனும் கோசங்களை வலியுறுத்தி ‘ பொங்குதமிழ்’ பிரகடனம் ஊடாக தமிழ் மக்களின் அங்கிகாரத்திற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நீண்டதொரு பாதையை கடந்தே வந்துள்ளது. நடந்தது இன அழிப்பு என்பதில் மாற்றுக்கருத்தேயில்லையென்பதுடன். சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனைத்து தரப்புக்களையும் இணைத்து நடத்தியபோராட்டம் மிகப் பெரும் அ…
-
- 11 replies
- 817 views
-
-
[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 09:14.22 PM GMT ] இம்முறை பொதுத் தேர்தலில் பெருன்பான்மை கட்சிகளிடையே காணப்படும் போட்டியை விட தமிழ் கட்சிகளுக்கிடையே காணப்படும் போட்டி மிகவும் கடுமையாக காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக போராளிகள் அமைப்பும் இந்த எதிர்பாராத போட்டிக்கு காரணமாக இருக்கின்றது ஆனால் இந்த இரண்டு கட்சிகளின் தலைமைத்துவமும் ஒரு காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கமாக இருந்தவர்கள் என்பதுதான் இவர்கள் யார் என்பதை காட்டி கொடுக்கின்றது. முதலாவது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றவர், அதை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத் தேர்தலில் திரு.சம்பந்தன் …
-
- 6 replies
- 611 views
-