ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
சிறிலங்கா – இந்தியா இடையிலான மேம்பாலத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பச்சைக்கொடிJUL 18, 2015 | 13:46by அ.எழிலரசன்in செய்திகள் இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தலைவழிப்பாதையை அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வழங்கி நிதி உதவி வழங்கத் தயாராக இருப்பதாக இந்திய அரசாங்கத்துக்குத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நேற்று மதுரை மற்றும் சுசீந்திரத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்திய மத்திய அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட 23ஆயிரம் கோடி ரூபா செலவில், இந்தியாவையும் சிறிலங்காவையும்…
-
- 2 replies
- 512 views
-
-
Hon cheif Justice CV Wigneswaran CM of NPC Speech - Q and A on 17.07.2015 in London by IATAJ .
-
- 1 reply
- 505 views
-
-
அரசியல்வாதியின் கள்ள மது சிக்கியது…. July 18, 20157:04 pm மதுபானத்தில் கலப்பதற்காக கசிப்பு தயாரித்ததாக கூறப்படும் மேல் மாகாண பிரதேசசபை உறுப்பினர் என்று சொல்லப்படுகின்ற ஒருவருக்கு சொந்தமான கோழிபண்ணையை சுற்றிவளைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாதுவை பிரதேசத்தில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்த கோடா மற்றும் பிரதேசசபை உறுப்பினரின் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸார் அவ்விடத்துக்கு சென்றதும் குறித்த பிரதேசசபை உறுப்பினர் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். http://www.jvpnews.com/srilanka/117092.html இலங்கையில் விற்பனையாகும் மது கலப்படம் என்பது நிருபிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 641 views
-
-
மைத்திரி அரசில் உள்ள சுதந்திரக் கட்சியினரை பதவி விலகுமாறு மகிந்த தரப்பு அழுத்தம்JUL 19, 2015 | 5:29by கி.தவசீலன்in செய்திகள் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை பதவி விலகும் படி, மகிந்த ராஜபக்ச தரப்பினரால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம், மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களை அடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 3 பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். எனினும், இன்னமும் 25 வரையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், அமைச்சர், பிரதி அமைச்சர், இராஜாங்க அமைச்சர்களாகப் பதவியில் இருக்கின்றனர். …
-
- 0 replies
- 377 views
-
-
மகிந்த அரசின் முறைகேடு குறித்து விசாரிக்க அவுஸ்ரேலியாவிடம் உதவி கோருகிறது சிறிலங்காJUL 19, 2015 | 4:05by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கு அவுஸ்ரேலிய சமஷ்டி காவல்துறையின் உதவியை சிறிலங்கா காவல்துறை நாடியிருக்கிறது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், குறிப்பிட்ட அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தவே, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் இந்த உதவி நாடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அதிகாரி சிறிலங்காவில் முறைகேடுகளைச் செய்து திரட்டிய பணத்தைக் கொண்டு அவுஸ்ரேலியாவில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தவே அவுஸ்ரேலிய காவல்துறையின் உத…
-
- 0 replies
- 404 views
-
-
தமிழ் அரசியல்வாதிகள் பலரைப் படுகொலை செய்த முதல்தரக் கொலைகாரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ள முதல் தர கொலைகாரன் பற்றிய உறுதியான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவே இந்த தனிநபருக்கு தனது சுயவிருப்பில் இடமளித்திருக்கிறார். இந்த நபர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்…
-
- 8 replies
- 850 views
-
-
வடக்கு கருணா கிளிநொச்சி பளை மக்களுக்கு அச்சுறுத்தல் July 18, 20159:39 am வடக்கு கருணா என்று அழைக்கப்படும் முன்னாள் ஈறோஸ் உறுப்பினரும் பின்னாள் விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக்கழகம் தொலைக்காட்சி என்வற்றில் விடுதலைப்புலிகளின் சொத்துக்களை அனுபவித்தவரும் தற்போதைய ஒட்டுக்குழு உறுப்பினரும் சந்திரகுமார் என்ற சாராயத்தவறணை மற்றும் கடத்தல் குழுக்களின் ஆலோசகரும் மைத்துனருமான சிவகருணாகரன் என்று அiழைக்கப்படும் கருணா நேற்று கிளிநொச்சி பளைப்பிரதேசத்தில் உள்ள இயக்கச்சி பனிச்சையடி பிரதேச மக்களை தொலைபேசியில் அழைத்து கொலை அச்சுறுத்தல் விட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினரை அப்பகுதி மக்கள் அழைத்து வரவேற்று தேர்தல் தொடர்பான விளக்கங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களின் இலக்…
-
- 1 reply
- 483 views
-
-
ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து போரிட்ட இலங்கையர் சிரியாவில் விமானத் தாக்குதலில் பலிJUL 19, 2015by கார்வண்ணன்in செய்திகள் ஐஎஸ்Iஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுடன் இணைந்து போரிட்ட சிறிலங்காவைச் சேர்ந்த கராத்தே பயிற்சி ஆசிரியர் ஒருவர் சிரியாவில் கடந்தவாரம் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். அனைத்துலக மற்றும் சமூக ஊடகங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகளால் அபு சுரையாஹ் சைலானி என்ற பெயரிடப்பட்ட கண்டி, கலேவெலவைச் சேர்ந்த கராத்தே பயிற்சி ஆசிரியரே கொல்லப்பட்டவராவார். இவரது உள்ளூர் பெயர் வெளியிடப்படவில்லை. ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு மரணமான சிறிலங்காவைச் சேர்ந்த முதல் நபர் இவராவார். இவரிடம் கராத்தே பயின்…
-
- 0 replies
- 357 views
-
-
புலித்தேவன் – எஸ்.நடேசன் பற்றி ஹக்கீம் பரபரப்பு கருத்து. July 18, 20159:01 am வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடைக்கால சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்திருந்தார் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 2005ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்படிக்கை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றியீட்டினார் என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பினை புறக்கணிக்க வேண்டும் என்பதே இந்த இரகசிய உடன்படிக்கையின் பிரதான விடயமாக அமைந்திருந்தது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ…
-
- 1 reply
- 617 views
-
-
தமிழ் தேசியவாத சொல்லாடலை தவிர்த்து இரு கட்சிகளினது நடைமுறைக் கொள்கை எனப் பார்க்கும் போது ஈ.பி.டி.பிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் கொள்கை வித்தியாசம் இல்லை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
-
- 21 replies
- 1k views
-
-
தேர்தலில் யாருக்கு வாக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கலாம். ஆனால் யாருக்கு போடக்கூடாது என்பதில் தமிழ் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். தமிழ்மக்கள் ஜ..தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றுக்கு ஒருபோதும் வாக்கு போடக்கூடாது. மாறி மாறி ஆட்சி புரிந்த இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்காது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வந்துள்ளன. யாழ் மாவட்டத்தில் இம்முறை ஜ.தே.க கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கக் கூடாது. ஆம், தமிழ் மக்கள் ஜ.தே.க சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்கு போடக்கூடாது. விஜயகலாவுக்கு அளிக்கும் வாக்கு, (1)ஜ.தே.க யாழ் நூலகத்தை எரித்தமையை சரி என்று ஏற்றுக் கொள்வதற்கு ஒப்பாகும் (2)ஜ.தே.க 1983ல் ஏற்படுத்திய இ…
-
- 8 replies
- 417 views
-
-
வரலாற்றில் இன்றைய நாளான சூலை 18, 64 - ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது. "இப்படியும் நிகழுமா?" என கேட்காதீர்கள். எங்கள் மண்ணில் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த நாட்களில் எம் கண் படவே கருணா போன்ற சில தமிழர்கள் உல்லாசமாக களியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ரோமாபுரி தீக்கு நீரோ மன்னன் காரணமில்லாமல் இருக்கலாம் "முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சத்தியமாக நான் தான் காரணம்!" என இன்றும் வெட்கம் இன்றி உரிமை கோருகின்றது கருணா (நாகம்). மனிதர்கள் உருவில் மனிதம் இல்லாதவர்களும் இருப்பதும் அவர்களின் நடுவே மனிதம் மரணிப்பதும் அன்று முதல் இன்று வரை....தொடரும் அவலங்கள்...…
-
- 0 replies
- 726 views
-
-
மட்டக்களப்புக்கு இரண்டரை அடி நீளமான வாக்குச்சீட்டு JUL 18, 2015 | 12:55by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு சுமார் இரண்டரை அடி நீளமான (30 அங்கும்) வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக சிறிலங்கா அரசாங்க பதில் அச்சகர் ஏ.ஜி.பொன்சேகா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும், 30 சுயேட்சைக் குழுக்களுமான மொத்தம் 46 குழுக்கள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே மிகநீளமான வாக்குச்சீட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அச்சிடப்படுகிறது. அதையடுத்து, கொழும்பு மாவட்டத்துக்கான வாக்குச்சீட்டு மிக நீளமானதாக அமைந்துள்ளது. இங்கு 36 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் ப…
-
- 0 replies
- 410 views
-
-
முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் JUL 18, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக, முப்படைகளின் தளபதிகளுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பாதுகாப்புச் செயலராக நியமிக்கப்பட்ட, பஸ்நாயக்க யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும். இன்று காலை பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை, யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த வரவேற்றார். அதையடுத்து, அவருக்கு முதலாவது கவசப்படைப் பிரினரால் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து. உயர் பாதுகாப…
-
- 0 replies
- 486 views
-
-
மகிந்தவைப் போட்டியிட அனுமதித்த மைத்திரியின் மர்மம் – உபுல் ஜோசப் பெர்னான்டோJUL 18, 2015 | 12:39by நித்தியபாரதிin கட்டுரைகள் மகிந்தவினதும் சீனாவினதும் நிலைப்பாடு ஒத்திசைவாகவே காணப்படும் நிலையில், மகிந்த ராஜகபக்சவிற்கு மைத்திரிபால சிறிசேன ஏன் தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதித்தார் என்பது இரகசியமாகவே உள்ளது. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. மைத்திரிபால சிறிசேன அதிபராகப் பதவியேற்ற பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறிலங்காவுக்கான தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பின்போது இவர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்துக் கலந்துரையாடி…
-
- 0 replies
- 532 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பான விரிவான விளக்கத்தை தேசிய அமைப்பளர் திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசம் தனது உரிமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிங்களதேசதேசத்துடன் நடத்துவதற்கு முன்பாக வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கி தமிழ்த்தேசிய அவை ஒன்று நிறுவப்படும். அவ்விதம் நிறுவப்படும் தமிழ்த்தேசிய அவையானது சிங்களதேசத்துடன் வலுச்சமநிலையில் இருந்தவாறு பேச்சுவாத்தைகளைத் முன்னெடுக்கும். - திரு விஸ்வலிங்கம் மணிவண்ணன் (தேசிய அமைப்பளர் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)http://www.pathivu.com/news/41678/57//d,article_full.aspx https://youtu.be/wVP-rblht60
-
- 2 replies
- 330 views
-
-
தொன்மையும் நாகரீகச் சிறப்பும் மிக்க தமிழினம் இன்று தாழ்வுற்று நலிந்து கிடக்கின்றது- திருமதி பத்மினி சிதம்பரநாதன் தொன்மையும் நாகரிகச் சிறப்பும் மிக்கது எமது தமிழினம். இன்று தாழ்வுற்று நலிந்து கிடக்கின்றது. இந்நிலையில் அதனை மீளக்கட்டியெழுப்பி அதன் உச்ச ஆற்றலை வெளிக்கொணர்ந்து சிங்கள இனத்துடன் சரிநிகர் சமானமாய் இந்நாட்டில் வாழும் நிலைமையை உருவாக்கும் ஒரு பாரிய பொறுப்பு எம்மீது சுமத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மினி சிதம்பரநாதன் குறிப்பிட்டார். பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஊடகங்களிற்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித…
-
- 0 replies
- 1.3k views
-
-
கூட்டமைப்பு முதியோர் இல்லமாகிவிட்டது! ஊடகவியலாளரும் வேட்பாளருமான யதீந்திரா!! கூட்டமைப்பினுள் இளம் அரசியல் தலைமை காலத்தின் தேவையாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ஊடகவியலாளரும் கூட்டமைப்பு வேட்பாளருமான யதீந்திரா. பதிவு இணையத்திற்கு வழங்கிய செவ்வியினில் இது பற்றி தெரிவிக்கையினில் கூட்டமைப்பு என்பது தற்போது முதியவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களிற்கான விடுதியாகிவிட்டது.இதனை அனுமதிக்கமுடியாது.இளம் சமூகத்தின் தியாகம் தேவைப்பட்டவர்கள் தற்போது அவர்களை புறந்தள்ளி தமது நலன்களை பாதுகாக்க முற்படுவதாகவும் யதீந்திரா தெரிவித்தார். அவ்வகையினில் இளம் தலைமுறையின் தலைமை அற்றுப்போகும் சூழல் அபாயகரமானதெனவும் அவர் தெரிவித்தார்.அவர் வழங்கிய செவ்வி திருமலையினிலிருந்து http://www.pathivu.com/new…
-
- 1 reply
- 354 views
-
-
-
வடக்கு கிழக்கில் பயங்கர நிலை ஏற்பட்டுள்ளதாம்! - மஹிந்த கூறுகிறார். [Saturday 2015-07-18 09:00] விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கூட தூற்றாத வார்த்தைகளால் என்னை தூற்றினார்கள். என்னை துடைப்பத்தால் பெருக்கி தள்ளவேண்டும். புதைக்க வேண்டும். இல்லாமல் செய்ய வேண்டும் என்றார்கள். பிரபாகரனும் இதையே தான் சொன்னார். அதையே அவர்கள் பிரதிபலிக்கின்றார்கள். மேலும் வடக்கு கிழக்கில் மிகவும் பயங்கரமான நிலை காணப்படுகின்றது. மக்கள் அங்கு செல்ல மிகுந்த அச்சம் கொள்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தெரிவித்தார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மெதமுலனவுக்கு சென்றேன் 'தீ…
-
- 2 replies
- 476 views
-
-
சம்பூரில் புலிகளுக்கு தொடர்பாடல் நிலையம் அமைத்துக் கொடுத்தாராம் ரணில்! - சரத் என் சில்வா கூறுகிறார் [Saturday 2015-07-18 08:00] நோர்வேயின் உதவியுடன் சம்பூரில் புலிகளுக்குத் தொடர்பாடல் நிலையமொன்றை ரணில் விக்கிரமசிங்க அமைத்துக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா.அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், மஹிந்த பிரதமர் கதிரைக்குச் செல்வது உறுதி. அவருக்குப் பிரதமராக முடியாது என்று சட்ட ரீதியான கருத்துகளைத் தற்போது முன்வைக்கின்றனர். 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியைவிட பிரதமருக்கு அதிகாரம்…
-
- 3 replies
- 654 views
-
-
‘ கட்சித் தாவல் ‘ ஹக்கீம் விளக்கம் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தமக்கும் இடையில் உள்ள உறவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெளிவுப்படுத்தியுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அமைச்சர் ரவுப் ஹக்கீம் இதனை குறிப்பிட்டார்.”இது தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வரும் விடயம் தான். கேள்விப்பட்டிருக்கும் விடயமாகவும் இருக்கலாம். ரவுப் ஹக்கீம் தவளை போன்று அங்கு இங்கு பாயும் ஒருவர் என்று எண்ணலாம். ஆனால் அதிலும் ஒன்று நான் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சியை காட்டிக் கொடுத்துச் செல்லவில்லை. இது ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றாக தெரியும். இவரிடம் நான் சொல்லிவிட்டுத்தான் செல்வேன்.முடியாத சந்தர்ப்பத்திலே கட்சியை காப்பாற்றிக்கொள…
-
- 1 reply
- 482 views
-
-
கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது! - எமது சந்ததியினரின் எதிர்காலத்திற்கான தேர்தல் இது!: இரா.சம்பந்தன் [ வெள்ளிக்கிழமை, 17 யூலை 2015, 08:22.44 PM GMT ] எமது சந்ததியினரின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தலில் நாங்கள் ஒவ்வொரும் எங்களது பங்களிப்பை செய்து அதிகபடியான விகிதாசாரத்தை பெற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று திகோணமலை மூதூர் பட்டித்திடலில் நடந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கிடையிலான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர், 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாங்கள் திருகோணமலை மாவட்டத்தில் அறுபத்தி எண்ணாயிரம் வாக்குகளை பெற்றிருக்கின்றோம். இரண்டு உறுப்பினர…
-
- 9 replies
- 583 views
-
-
அமைச்சர் பௌசி தான் சிறிலங்காவின் அடுத்த பிரதமரா? JUL 18, 2015 | 1:38by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அடுத்த பிரதமர் பதவியை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனக்குத் தந்தால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்று தெரிவித்துள்ளார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி. ‘பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு 55 ஆண்டு கால அரசியல் அனுபவம் இருக்கிறது. அவ்வாறு பிரதமர் பதவி அளிக்கப்பட்டால், மூப்புக்கு மரியாதை அளிக்கப்படுவதாகவும், சிறிலங்காவில் சிறுபான்மையினருக்கு நீதி வழங்கப்படுவதாகவும் உலகத்துக்கு ஒரு செய்தி சொல்லப்படும். சிறுபான்மையினரால் பெரிதும் கவரப்பட்டுள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேன, எனக்குப் பிரதமர் பதவியை அளிப்பதன் மூலம், நல்லதொரு முன்னுதாரணத்தை …
-
- 2 replies
- 480 views
-
-
சம்பூரில் புலிகளுக்கு தொடர்பாடல் நிலையம் அமைத்துக் கொடுத்தாராம் ரணில்! - சரத் என் சில்வா கூறுகிறார் [Saturday 2015-07-18 08:00] நோர்வேயின் உதவியுடன் சம்பூரில் புலிகளுக்குத் தொடர்பாடல் நிலையமொன்றை ரணில் விக்கிரமசிங்க அமைத்துக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா.அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், மஹிந்த பிரதமர் கதிரைக்குச் செல்வது உறுதி. அவருக்குப் பிரதமராக முடியாது என்று சட்ட ரீதியான கருத்துகளைத் தற்போது முன்வைக்கின்றனர். 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதியைவிட பிரதமருக்கு அதிகாரம்…
-
- 0 replies
- 257 views
-