Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒரு மில்லியனைக் கடந்து வெற்றி நடைபோடு கையெழுத்து இயக்கம்: உணர்வாளர்கள் மகிழ்சிக் கொண்டாட்டம் [ செவ்வாய்க்கிழமை, 14 யூலை 2015, 01:03.08 PM GMT ] இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் பத்து இலட்சத்தினைக் கடந்து வெற்றி நடைபோட்டு வருகின்றது. உலகத் தமிழர் பரப்பெங்கும் எழுச்சி பூர்வமாக இடம்பெற்று வரும் இக்கையெழுத்து இயக்கம், முதற்கட்டமாக குறிக்கப்பட்ட யூலை 15க்குள் மில்லியனை அடைந்துள்ள நிலையில், உணர்வாளர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 'போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்ல…

    • 0 replies
    • 362 views
  2. இவர்களை என்ன செய்யப்போகிறது உச்ச நீதிமன்றம்? July 14, 20158:55 am எழுவர் விடுதலை மீதான தீர்ப்பு மனித உரிமைகளோடு, மாநிலங்களின் உரிமைகள் சார்ந்ததாகவும் அமையப் போகிறது. குற்றம் – குற்றவாளி – தண்டனை என்ற முக்கோண உறவு மனித உரிமைகளின் வெளிச்சத்தில் பார்க்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் இன்றைய சூழலில், இதற்கு நேர் தொடர்புடைய ஒரு வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட முழு ஆயத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ஒரு குற்றம் நிகழ்ந்து, அது மெய்ப்பிக்கப்பட்டு, குற்றவாளிக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் தண்டனை அனுபவித்து மீண்டு வருவதில் மூன்று கட்டங்கள் உள்ளன: 1. குற்றத் தீர்ப்பு (Conviction). அதாவது, குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான குற்றத…

  3. ஜனநாயகப் போராளிகள் ‘புலிமுகச்சிலந்தி’ சின்னத்தில் போட்டிJUL 15, 2015 | 1:06by கார்வண்ணன்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை இந்த தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்றில் நிறுத்தியிருக்கிறது. யாழ். மாவட்டச் செயலகத்தில் சுயேச்சைக் குழுக்களுக்கு பல்வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சுயேச்சைக் குழு தமது சின்னமாக புலிமுகச் சிலந்தியைத் தெரிவு செய்துள்ளது. தாம் சிலந்தி சின்னத்தை தெரிவு செய்திருப்பதாகவும், அது புலிமுகம் கொண்டதாக இருப்பதால், தமது க…

  4. "தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்திதான், இந்தியாவின் பேரம் பேசும் சக்தி" - அவுஸ்திரேலியாவில் இருந்து ஒலிபரப்பாகும் 'தாயகம்' தமிழ் ஒலிபரப்புச் சேவையின் 'சதுரங்கம்' நிகழ்ச்சிக்காக அரசியல் விமர்சகரும் ஆய்வாளருமான நிலாந்தன் வழங்கிய நேர்காணல். நேர்கண்டவர்: ஊடகவியலாளர் ப.தெய்வீகன். நேர்காணலை கேட்க: http://yourlisten.com/ttbsradio/nilathans-interview-140715

    • 2 replies
    • 740 views
  5. கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகனிடம் மகிந்த இலஞ்சம் கேட்டதால் இலங்கையில் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை கைவிட்டனர் - எரான் விக்கிரமரட்ண ஜேர்மனியின் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகனிடம் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் இலஞ்சம் கேட்டதால் அவர்கள் இலங்கையில் கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை கைவிட்டனர் என பிரதியமைச்சர் எரான் விக்கிரமரட்ண குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்கம் தற்போது அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது, சிறிசேன அரசாங்கம் வெளிப்படையான, நேர்மையான முதலீட்டு சூழல் குறித்து உறுதியளித்துள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தற்போது இலங்கை குறித்து ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.global…

    • 0 replies
    • 291 views
  6. வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. தாயகத்தில் இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின் திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த, திருமண தம்பதிகளால் பண உதவி வழங்கி வைக்கப்பட்டது. மணமகனின் தந்தையான முன்னாள் கிராம சேவகரான முத்துராசாவினால் வவுனியா பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொண்டு நலிவுற்ற குடும்பத்திற்கு உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது. திருமணம் என்பது பெரும் பணச்செலவில் ஆடம்பரமாக இடம்பெறுவது மாத்திரமே என்பதற்கு அப்பால் நலிவுற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்த…

  7. ஓய்வூதியத் தேசிய வாதிகளே கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார் பத்தி எழுத்தாளர் ஜதீந்திரா. இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தின் சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் தெரிவிக்கும் கருத்துக்கள் காணொலியில் பார்வையிடலாம். https://www.youtube.com/watch?v=a5nQlND8728 http://www.pathivu.com/news/41581/57//d,article_full.aspx

    • 0 replies
    • 589 views
  8. ரெலோ அமைப்பின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம், மன்னார் ஆகாஸ் கொட்டலில் இன்று செவ்வாய்கிழமை (14) நடைபெற்றது. ரெலோ கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட ரெலோவின் ஆதரவாளர்கள் தாழ்வுபாடு வீதியூடாக ஆகாஸ் கொட்டல் சென்றடைந்தனர். இதன்போது வட மாகாண சபையின் கடற்றொழில் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநோனோதரலிங்கம், வேட்பாளர் செல்லத்துரை, வட மாகாண சபை உறுப்பினர் ஞானசீலன் குணசீலன், மன்னார் நகரசபையின் முன்னார் தலைவர் எஸ்.ஞானபிரகாசம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எழுர்ச்சி கவிஞர் மாணிக்கம் மற்றும் மத குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். குறித்த கூட…

    • 0 replies
    • 191 views
  9. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் எதிர்வரும் தேர்தலில் குதிக்கவுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிறிலங்கா சுதந்திர கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரை களமிறக்கும் யோசனைகளை தீவிராமாக ஆராய்ந்து வருவதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன.மகிந்தவின் அரசியல் பிரவேசத்திற்கு அனுமதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரியின் முடிவு தொடர்பாக வெளிப்படையாக அதிருப்தி வெளியிட்டிருந்த சந்திரிகா அம்மையார், தான் அரசியலுக்கு மீண்டும் வருவது தொடர்பாக கோடி காட்டிவிட்டு தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு லண்டன் புறப்பட்டுள்ளார். அங்கிருந்து வந்து தனது அரசியல் செல்நெறி குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.சந்திரிகா அம்மையாரின் அ…

  10. 65 வருடகாலமாக புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒரு தேர்தலாக எதிர்வரும் பொதுத்தேர்தல் அமையும் என்;று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் பொன்.செல்வராசா தெரிவித்தார். புதிய அரசாங்கத்துடன் இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று திங்கட்கிழமை (13) பூர்த்தியடைந்துள்ளன. இதன் பின்னர் காந்திபூங்காவில் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். http://www.tamilmirror.lk/1…

  11. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய படடியலில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு தேசிய பட்டியல் மூலமான உத்தேசிக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகளின் பெயர்களை மூன்று பிரதான கட்சிகள் இன்று வெளியிட்டுள்ளன. அவ்வாறு வெளியிடப்பட்டுள்ளவர்களின் பெயர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப் பட்டியலில், 1. ஏ.எச்.எம்.பௌசி 2. ஜீ.எல்.பீரிஸ் 3. டி.யூ. குணசேகர 4. திஸ்ஸ விதாரண 5. மொஹமட் குஷேன் ரிஸ்வி ஷெரீப் 6. சரத் அமுணுகம 7. திஸ்ஸ அத்தநாயக்க 8. டிலான் பெரேரா 9. ஜெயரத்னம் ஶ்ரீரங்கா 10.…

  12. நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிற்பகல் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல், யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுவை மாவை சேனாதிராசா தலைமையில் சென்ற கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் கையளித்தனர். இந்த வேட்பாளர் பட்டியலில் மதினி நெல்சன் என்ற பெண் வேட்பாளரும் நிறுத்தப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், யாழ். மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள்- மாவை சேனாதிராசா – யாழ்ப்பாணம் சுரேஸ் பிரேமச்சந்திரன் – கோப்பாய் …

    • 4 replies
    • 2.3k views
  13. மலேசியா சிங்கப்பூரில் பரப்படைந்துள்ள கையெழுத்து இயக்கம்: - நடிகர் சிம்புவும் இணைந்தார் ! [Saturday 2015-07-11 19:00] சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கம் மலேசியா, சிங்கப்பூரிலும் பரப்பரப்படைந்துள்ளதோடு, தமிழக திரைநட்சத்திரம் நடிகர் சிம்புவும் இதில் தன்னை இணைத்துள்ளார். இணையவழி மூலமும் நேரடிப்படிவங்கள் ஊடாகவும் உலக தமிழர் பரப்பெங்கும் முனைப்பு பெற்றுள்ள இக்கையெழுத்து இயக்கம் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் சூடுபிடித்துள்ளது. தமிழர் இளைஞர் ஒன்றியத்தின் சிங்கப்பூர் பிரதிநிதிகள் அங்கு நேரடி ஒப்பங்களை பெற்றுள்ளதோடு இணையமூலமும் மின்னொப்பங்களை இட்டு வருகின்றனர். இதேவேளை நாம் தமிழர் கட்சியின் மலேசிய மையம் …

    • 0 replies
    • 330 views
  14. தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை கொடுப்பாராம்! - மஹிந்த கூறுகிறார் [Tuesday 2015-07-14 07:00] நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபத மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் மோசடிகள், பொய், வீண் விரயம் ஆகியனவற்றை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளித்து செயற்பட உள்ளேன் என்பதனை மக்களின் முன்னிலையில் ஆணையிட்டு கூறுகின்றேன். எனது வேட்பாளர்கள் மக்கள் முன்னிலையில் அளிக்கும் உறுதிமொழிகளை அதேவிதமாக நிறைவேற்றுவார்கள்.அனைவரும் அமைதியான ஓர் பொதுத் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எமது மக்கள் பிரதிநிதிகள் உரிய முறையில் தமது கடமைகளை ஆற்றுவார்கள் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். http://seithy.…

    • 4 replies
    • 357 views
  15. பொதுத் தேர்தலில் தமிழ் தேசியத்திற்கு முரணான சக்திகள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அவை எமது வாக்குகளை சிதறடிப்பதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். பொதுத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நான் மக்களோடு மக்களாக இருப்பவன் என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக சில மனக்குறைகளை என்னிடத்தில் அவர்கள் முன்வைக்கின்றார்கள். எனினும் தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது தற்போதைய காலத்தில் மிகமிக முக்கியமானது என்பதையும், அதன் அவசியத்தையும் அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்கின்றார்கள். அதனடிப்படையில் கூட்டமைப்பு தொடர்பாக அவர்கள் கொ…

    • 4 replies
    • 348 views
  16. அம்பாறை, மல்வத்தை தம்பிநாயகபுர பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை தயாளன் (வயது 24) என்ற இளைஞர் கத்திக் குத்துக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். கத்திக் குத்தில் மரணமடைந்த நபரும் அவரது நண்பரும்; சம்மாந்துறை 12ஆம் கொலனி பிரதேசத்தில் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் திங்கட்கிழமை (13) இரவு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளின் ஒளியை செலுத்திப் பார்த்தபோது, வீதியோரத்தில் இளைஞர்கள் சிலர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், மேற்படி இருவருக்கும் இளைஞர் குழுவுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பில் செல்லத்துரை தயாளன் கத்திக் குத்துக்கு உள்ளாகி அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு …

    • 0 replies
    • 193 views
  17. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுமார் 160 கிலோகிராம் கஞ்சா போதைபொருளை கடத்திய நான்கு இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் நால்வரும் மன்னார் பிரதேசத்தில் வைத்து கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட கஞ்சாவையும் கொழும்பு சுங்கபிரிவு அதிகாரிகளிடம் தலைமன்னார் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். - http://www.tamilmirror.lk/150224#sthash.3yTGedSB.dpuf

    • 0 replies
    • 187 views
  18. நான் பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைய என்றுமே விரும்பியதில்லை. எனது கணவர் மற்றும் அவரைப் போன்று காணாமல் ஆக்கச் செய்யப்பட்டோரைக் கண்டறிவதற்கான முயற்சிகளிலேயே நான் முழுமூச்சுடன் ஈடுபட்டிருந்தேன். கடந்த வருடங்களில் தமிழ்த தேசியக் கூட்டமைப புடன் இணைந்து தேடுதல் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும் எனது முயற்சிக்குப் பலன்கிட்டவில்லை. எனது கணவரான எழிலன் பெயர் பிரபலமாக இருந்ததாலும் அவர் சரவதேச மத்தியஸ்தர்களின் அறிவுரையின் பிரகாரம் சரணடைந்ததாலும் நான் அவரையும் அவருடன இணைந்து காணாமல் ஆககச் செய்யப்பட்டோரையும் கண்டறிவதில் அதீத முயற்சி எடுத்துக் கொண்டதாலும் கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப பின் தலைமையில் யாழ்ப பாணமாவட்டததில் போட்டியிடுமாறு இ…

    • 0 replies
    • 337 views
  19. ஆனந்தசங்கரி கொழும்பில் வேட்புமனு – வடக்கை விட்டு ஓட்டம்JUL 13, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஆனந்த சங்கரியை முதன்மை வேட்பாளராக கொண்டு, கொழும்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி 22 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கடந்த 2004ஆம், 2010ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆனந்தசங்கரி, யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுத் தோல்வி கண்டார். இந…

    • 15 replies
    • 765 views
  20. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக தனித்து தேர்தலில் ஒரு அணியை இறக்க போவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விரும்பியிருந்த போதும் தமிழரசு கட்சியினர் தான் ஆசன ஒதுக்கீட்டை மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக தமிழரசு கட்சி மக்களது ஆணையையும் மக்களது கருத்துகளையும் உறுப்பினர்களது எண்ணங்களையும் மதிக்காமல் புரிந்து கொள்ளாமல் தமிரசு கட்சி தலைமை எதேச்சதிகாரமாக செயற்படுவதை எதிர்த்து கட்சிக்குள் தொடர்ந்து போராட போவதாகவும் அனந்தி தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/41531/57//d,article_full.aspx

    • 3 replies
    • 574 views
  21. அனந்தியின் அரசியல் முடிவும் எதிர்காலமும்..... நடராஜா குருபரன்... "எந்தக் கட்சியில் இருப்பது என்பது முக்கியம் அல்ல மக்களுடனான உங்கள் பிணைப்பும், ஒடுக்கப்பட்டவர்களின், வஞ்சிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக நீங்கள் கொடுக்கும் குரல்களும் எதிர்காலத்தில் உங்களை அரசியல் தலமைத்துவத்திற்கு உயர்த்தும்... அதுவரை போராடுங்கள்....." தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக தனித்து தேர்தலில் ஒரு அணியை இறக்க போவதில்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விரும்பியிருந்த போதும் தமிழரசு கட்சியினரே ஆசன ஒதுக்கீட்டை மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலைய…

    • 4 replies
    • 489 views
  22. தமிழ் மக்களின் உரிமைகள், நீதிகள் மறுக்கப்படுவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களிடம் உள்ளார்ந்தமாக இருக்கும் கோட்பாடுகளை, கொள்கைகளை முன்கொண்டு செல்வதற்கான மாற்றுப் பாதையாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தமிழ் மக்கள் கடந்த பல வருடங்களாக உன்மையான தமிழ்தேசியம், சுயநிர்ணய உரிமை, தாயகம் ஆகிய கோட்பாடுகளுக்காக வாக்களித்திருக்கின்றார்கள். …

  23. இலங்கையில் 200 றோ அதிகாரிகள் ஊடுருவல்? [Tuesday 2015-07-14 07:00] நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இலங்கையில் இந்திய உறவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விரிவான உளவுப் பணிகளை றோ ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலா வீசா மூலம் பல்வேறு வழிகளில் இந்திய றோ உளவுப் பிரிவின் 200 பேர், வடக்கு கிழக்கு மற்றும் மத்திய மலையகத்தில் ஊடுருவியுள்ளனர். இந்தியாவிற்கு விரும்பியவாறு இலங்கையில் ஆட்சியை நிர்ணயிக்கும் நோக்கில் றோ உளவுப் பிரிவினர் செயற்பட்டு வருகின்றனர். பல்வேறு வேடங்களில் றோ உளவுப் பிரிவினர் இலங்கையில் பல்வேறு வழிகளில் தகவல்கள…

    • 0 replies
    • 809 views
  24. சம்பூர் காணிகள் மக்களுக்கே! - இனி எவரும் மேல்முறையீடு செய்ய முடியாது [Monday 2015-07-13 07:00] சம்பூர் காணி சம்பந்தமாக தனியார் நிறுவனமான கெற்வேயால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேல் அவர்களால் மேன்முறையீடு செய்ய முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். சம்பூர் காணிகளை மீள அளிப்பதற்கு தடைவிதிக்க வேண்டுமென பொருளாதார வர்த்தக வலயத்தின் முதலீட்டாளரான கெற்வே நிறுவனத்தினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது சம்பந்தமாக விளக்கமளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து விளக்குகையில்; 2009 ஆம் ஆண்டு…

  25. சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் 501 வேட்புமனுக்களில் 6,151 வேட்பாளர்கள் போட்டிJUL 14, 2015 | 0:55by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள தேர்தலில் 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று நண்பகல் வேட்புமனுத் தாக்கல் மற்றும் மீளாய்வு என்பன முடிவுற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். 225 உறுப்பினர்களைக் கொண்ட சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 196 உறுப்பினர்கள், தேர்தல் மூலம் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். 29 உறுப்பினர்கள் தேசியப்பட்டியலில் இருந்து நியமிக்கப்படுவர். சிறிலங்காவில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலும்,…

    • 0 replies
    • 300 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.