Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று வெள்ளிக்கிழமை (03.07.2015) காலை யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடி பொதுத்தேர்தல் நெருங்கிவரும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாம் ஆற்றக்கூடிய - ஆற்றவேண்டிய - ஜனநாயக பங்குபணி குறித்து சுமார் மூன்று மணி நேரம் ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த சிரேஷ்ட போராளிகள் பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு, பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்தனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் அறப்போர் நிகழ்த்தி, தன்னையே ஆகுதியாக்கிய தியாகி திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த நல்லூர் கோய…

  2. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில், முன்னாள் போராளிகளும் போட்டியிடவுள்ளதாக, அந்தக் கட்சியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமது வேட்பாளர் பட்டியலில் முன்னாள் போராளிகள் பலரும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பல முன்னாள் போராளிகள் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், தமது சமூகத்துக்காக தியாகங்களைச் செய்த அவர்களை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதில் தவறு ஏதுமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தாம் இம்முறை வடக்கு, கிழக்கிலும், நுவரெலிய மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுடன் ஒத்துப் போகவில்லை என்பதால் அதனுடன் இணைந்து போட்டி…

  3. திருகோணமலை மக்கெய்ஸர் விளையாட்டரங்கை அண்மித்த பகுதியில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மனித எச்சங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி திருகோணமலை மக்கெய்ஸர் விளையாட்டரங்கின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்த விடயம் தொடர்பில் திருகோணமலை நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் அந்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட…

    • 0 replies
    • 370 views
  4. எழுப்பப்படும் கேள்விகளுக்கு குடும்ப சுகாதார நிலையம் மகப்பேற்று வைத்தியர்கள் மற்றும் தாய்மை நல வைத்தியக்குழுமம் பதிலளிக்குமா? குடும்ப சுகாதார நிலையம் மகப்பேற்று வைத்தியர்கள் மற்றும் தாய்மை நல வைத்தியக்குழுமம் ஆகியோரால் ஒழுங்கு செய்யப்பட்ட செயற் பயிற்சி நிகழ்வொன்று இன்று (06.07.15) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரியவருகிறது. யாழ்க்குடா நாட்டுப் பெண்களிடையே கர்ப்பப் பையுட் பொருத்தப்படும் கருத்தடைச் சாதனத்தை விளம்பரப்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கத்தை கொண்டதாக அக்களப்பயிற்சி அமைந்திருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் எமக்குத் தெரிவிக்கின்றன. கிடைத்த தகவல்களின்படி இனிவரும் காலத்தில் மேற்குறித்த கருத்தடைச் சாதனத்தையே அனைத்துப் பெண்களுக்கும் பயன்ப…

  5. மேலும் எட்டு வருடங்கள் ஆட்சியிலிருக்க கனவு கண்ட மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பியது போன்று, எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை வழங்கி நமது கட்சியை பேரம் பேசும் சக்தியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். கைதடி, நவபுரம் சனசமூக நிலையத்தின் 50ஆவது நிறைவு தின விழாவும் நினைவு மலர் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவா தெரிவித்தார். நவபுரம் சனசமூக நிலையத்தின் 50 ஆவது நினைவு மலரை மாவைசேனாதிராஜா வெளியீட்டு வைக்க பண்டாரவளை கல்வி வலயத்தின் தமிழ்ப்பாட உதவிப்பணிப்பாளர் எஸ்.மதியழகன் பெற்றுக்கொ…

  6. சுன்னாகம் நிலத்தடிநீரில் ஒயில்கசிவு; தமது தவறு இல்லை என்கிறார் சம்பிக்க சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் டீசல் கலந்துள்ளமை எமது தவறு இல்லை என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண பதில் பொது முகாமையாளர் அலுவலக கட்டட தொகுதி அமைச்சரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் கடந்த காலங்களில் மின்சாரத்தை வழங்குவதற்கு எண்ணெயினைப் பயன்படுத்துவதற்கு 160 கோடி ரூபாவைத் தாண்டியது. தனியார் நிறுவனத்தினால் அன்று வழங்கப்பட்ட மின்சாரத்தை நிறுத்த முடியாத நிலை இருந்தது. அதனையட…

    • 1 reply
    • 199 views
  7. இந்தியாவின் இராமேஸ்வரம் பகுதயிலிருந்து தலைமன்னார் பகுதிக்கு கஞ்சா கடத்திய இந்திய மீனவர்கள் 4 பேரை இன்று திங்கட்கிழமை(06) காலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 29 கிலோகிராம் கஞ்சாவையும் மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்தனர். தலைமன்னார் கடற்பகுதியில் அத்துமீறி வருகை தந்த இந்திய மீனவர்களின் படகை சோதனையிட கடற்படையினர் சென்ற போது குறித்த மீனவர்கள் தமது படகில் வைத்திருந்த மூடைகளை கடலில் தூக்கி எறிந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த நான்கு இந்திய மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த கஞ்சா மூடைகள், இராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் வாசி ஒருவருக்கு கைமாற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதாக தெரியவந்துள்ளது. …

  8. பருத்தித்துறை, தும்பளை மணல் ஒழுங்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணெருவரை 285 கிராம் ஹெரோயினுடன் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணும் அவரது கணவனும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் ஹெரோயினை பெற்றுக் கொள்வது போன்று பாவனை செய்து பருத்தித்துறை கடற்கரைப்பகுதிக்கு இருவரையும் அழைத்துள்ளனர். குறித்த இடத்துக்கு வந்தபோது பெண்ணின் கணவன், வந்திருப்பது பொலிஸார் என அடையாளம் கண்டுதப்பி ஓடியுள்ளார். எனினும் குறித்த பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 285 கிராம் ஹெரோயின் சுமார் 10 மில்லியன் பெறுமதியானது எனவும் திங்கட்கிழமை (06) பரு…

    • 3 replies
    • 293 views
  9. மகிந்தவின் அறக்கட்டளை புத்தகத்தை விசாரிக்கவும் ,வங்கிக் கணக்கை பரீசீலிக்கவும் நீதிமன்று அனுமதி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை கொண்டுள்ள ரக்னா லங்கா நிறுவனம் பேணுகின்ற இலங்கை வங்கியின் டொரின்டன் கிளை வங்கி கணக்கை சோதனைக்கு உட்படுத்துவதற்கு இரகசிய பொலிஸாருக்கு அனுமதியளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, அந்த வங்கியின் முகாமையாளருக்கு கட்டளையிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிர்வாக காலத்தில் அறக்கட்டளை புத்தகம்( பிங் புத்தகம்) அச்சடிப்பதற்காக தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவுடன் இணைந்து 25 இலட்சம் ரூபாவை மோசடியான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்கு…

  10. யாழ். மத்திய கல்லூரியிலேயே வாக்குகள் எண்ணப்படும்! - அரசஅதிபர் தகவல்[Monday 2015-07-06 20:00] பொதுத் தேர்தலிலுக்கான ஆயத்தங்கள் தற்போது நடைபெற்று வருவதாகவும் எதிர்வரும் 13 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் வேட்புமனுக்களை தாக்கல் செய்யுமாறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான நா.வேதநாயகன் இன்று தெரிவித்தார்.யாழ். மாவட்ட செயலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்தித்து தேர்தல் ஆயத்தங்கள் மற்றும் வேட்பு மனு தாக்கல் தொடர்பில் விளக்கமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வழமை போன்று, யாழ். மத்திய கல்லூரியை வாக்கெண்ணும் நிலையமாக பயன்படுத்தவுள்ளதாகவும், பரீட்சை காலம் என்ற படியினால். பரீட்சைகளுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் பரீட்சைகள் …

  11. யாழ்ப்பாணத்தில் முதல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தது சிங்களக் கட்சி! [Monday 2015-07-06 20:00] நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சிங்கள கட்சி ஒன்று இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இன்று தொடக்கம் 13 ம் திகதி வரையிலான காலம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலமாக குறிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய தினம் ஐனசத பெரமுன என்ற கட்சி யாழ்ப்பாணத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=135412&category=TamilNews&language=tamil

  12. மஹிந்தவைத் தோற்கடிக்கவே ஓகஸ்ட்டில் தேர்தலை நடத்துகிறார் மைத்திரி! [Monday 2015-07-06 20:00] யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மீள்பிரவேசத்தை தகர்ப்பதற்கான சரியான தருணம் பார்த்தே, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பொதுத்தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ கடந்த மூன்று தசாப்த காலமாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தத்தை விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் முடிவுக்கு கொண்டு வந்தார் என்பதால், சிங்கள மக்களிடையே பலத்த ஆதரவைப் பெற்றவராவார். அந்த ஆதரவு இன்றும் அவருக்கு தொடர்ந்து கிடைக்கின்றது. ஆயிரக்கணக்கான தனது ஆதரவாளர்களின் முன்னால் கடந்த ஜூலை முதலாம் திகதி மஹிந்த தனது அரசியல் மறு பிர…

  13. மேல் மாகாண சபையின் உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர விரைவில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.வெகு விரைவில் ஹிருனிகாவின் திருமணம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.பிரபல ஆடையலங்கார கலைஞரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஒருவரே ஹிருனிகாவின் கரம் பற்ற உள்ளதாக குடும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன.காதல் தொடர்பு காரணமாக நடைபெறவுள்ள இந்த திருமணத்தில், ஓர் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்க உள்ளார்.திருமண வைபவத்திற்கு இரண்டு குடும்பங்களினதும் மிக நெருங்கிய உறவினர்கள் சிலர் மட்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஹிருனிகா பிரேமசந்திர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் விண்ணப…

  14. பிரபாகரன் தமிழர்களை, நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார்: சிறீதரன் [ சனிக்கிழமை, 04 யூலை 2015, 06:35.22 PM GMT ] பிரபாகரன் தமிழர்களை நமது மண்ணை தன் வீரத்தால் அடையாளப்படுத்தினார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி மத்திய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்புவிழா நேற்று நடைபெற்றுள்ளது. பாடசாலையின் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டார். தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து பேசிய அவர், இந்தப்பாடசாலையின் வரலாற்றில் இந்த தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் வரவு ஒரு…

  15. யுத்தக்குற்ற அறிக்கை வெளியாகவுள்ள காலத்தின் அடிப்படையிலேயே பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை ரொயிட்டர்ஸ் செய்திஸ்தாபனத்துக்கு தெரிவித்துள்ளார். யுத்தக்குற்ற அறிக்கை பெரும்பாலும் ஆகஸ்ட் மாதம் வெளியாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுத்தக்குற்ற அறிக்கை வெளியாகும் பட்சத்தில், அது மகிந்தராஜபக்ஷவுக்கு சாதமான நிலைமையை உருவாக்கிவிடும். இதனை வைத்து மகிந்தராஜபக்ஷ சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுப்பார். இதன்காரணமாக பல வெளிநாட்டு அரசாங்கங்கள் உடனடியாக தேர்தலை நடத்துமாறு மைத்திரிபாலவை வலியுறுத்தியது. இதன் காரணமாகவே ஆகஸ்ட் 17ம் திகதி தேர்தலைநடத்த தீர்மானம் மே…

    • 0 replies
    • 144 views
  16. வடமாகாண சபைத் தேர்தலில் இரண்டாவது நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற அனந்தி சசிதரன், இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளபோதும் கட்சி தலைமை அதனை நிராகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதையடுத்து கட்சி தலைமைக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் மாற்று தரப்பிற்கு பகிரங்க ஆதரவினை வழங்கலாமென தகவல்கள் தெரிவிக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்ட பெண் என்பதனாலும், இறுதிப் போரின் முக்கிய சாட்சி என்ற வகையிலும், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கையின் போர்க்குற்றம், மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களில் நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாகவே தன்னை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதனை கருதுவதாக அனந்தி சசிதரன் கூறியிருந்தார். …

    • 1 reply
    • 545 views
  17. தனித்துப் போட்டியிடப் போகிறார் ஆனந்தசங்கரி! [Monday 2015-07-06 07:00] எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடுவதென ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் தற்போதைய கொள்கைகளுடன் இணங்காமையே இதற்குக் காரணம் என அக் கட்சியின் தலைவர் ஆனந்த சங்கரி குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மக்களைப் பற்றி சிந்திக்காது, தமது தனிப்பட்ட தேவைகள் தொடர்பிலேயே செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்ட சங்கரி தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. http://w…

    • 1 reply
    • 316 views
  18. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் எவையும் சம்மந்தப்படவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்ஷ தோல்வி கண்டமைக்கு, வெளிநாட்டு சக்திகளே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. மகிந்தராஜபக்ஷவும் அவ்வாறே பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார் ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சுமந்திரன் கூறியுள்ளார். உள்நாட்டு மக்களின் வாக்களிப்பின் ஊடாகவே இந்த தேர்தலில் மகிந்த தோற்கடிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.pathivu.com/news/41379/57//d,article_full.aspx

  19. ஐதேகவில் இணைகிறது அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழு! [Monday 2015-07-06 07:00] மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்பட்டதை எதிர்த்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் ஐ.ம.சு.முவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ. தே. கவுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக மஹிந்தவை எதிர்த்து வெளியேறிய குழுவில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் பிரதானமானவர். அர்ஜுனவும் அவரோடு அப்போது வெளியேறியோரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐ.தே.க அரசுடன் நூறு நாள் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளித்தனர். இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.ம.சு.மு. முன்னணி…

  20. தொடங்கியது வேட்புமனு தாக்கல்! மாவட்ட செயலகங்களுக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு! பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மாவட்ட செயலகங்களுக்கு இன்று முதல் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகமெங்கும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் விசேட கலகம் அடக்கும் நீர்ப்பாய்ச்சி வாகனங்களும் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்தல் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் வேட்பு மனுக்கள் இன்று 06 ஆம் திகதி முதல் 10ம் திகதி வரை காலை 08.30 மணியிலிருந்து மாலை 4.15 மணிவரை மாவட்ட செயலகங்களில் ஏற்றுக் கொள்ளப்படும். இறுதித் தினமான 13 ஆம் திகதி பகல் 1…

  21. வாழைக்குலை திருடர்கள் கைவரிசை மீள ஆரம்பம்: வலி.கிழக்கு விவசாயிகள் கவலை வலி.கிழக்கு பிரதேசத்தில் உள்ள வாழைத்தோட்டங்களில் வாழைக்குலைகளை களவாடி செல்லும் திருடர்களின் கைவரிசை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இரவு வேளையில் வாழைத் தோட்டங்களுக்கு செல்லும் திருடர்கள் வாழைக்குலைகளை களவாகத் திருடிச் செல்கின்றனர்.குறிப்பாக சிறுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் கடந்த ஒரு வார காலத்தில் 50க்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் களவாக வெட்டிச் செல்லப்பட்டுள்ளன. அதனை விட நவக்கிரி, நீர்வேலி,கோப்பாய்,ஊரெழு,புன்னாலைக்கட்டுவன் போன்ற பகுதிகளிலும் உள்ள வாழைத்தோட்டங்களில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருகின்றனர் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். …

  22. சந்திரிகா பிறந்தநாள் விழாவில் மைத்திரி, ரணில்! [Monday 2015-07-06 07:00] முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பதவியில் இருந்த காலத்தில் அவர் பொதுமக்களின் நிதியை கொள்ளையடிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சந்திரிக்கா குமாரதுங்கவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுநிகழ்வு இதுவாகும். மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கப்பட்டமைக்கு எதிராக சந்திரிகா கடு…

  23. யாழ்.மாவட்ட தாச்சி போட்டியில் வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கி வைப்பு யாழ்.மாவட்ட தாச்சி சங்கத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் தாச்சி சுற்றுப் போட்டியின் இறுதிச்சுற்றுப் போட்டி நேற்றைய தினம் பனிப்புலம் சாந்தை பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டு தாச்சி இறுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றியீட்டிய கழகங்களுக்கு வெற்றிக் கேடயங்களை வழங்கி வைத்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=755034129906269788#sthash.vvsEbmnS.dpuf

  24. வட மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளின் அதிபர்களை இடமாற்றம் செய்யபதெரியவருகின்றது. பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி சமூகம் போராட்டங்களினில் குதிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. வடக்கினில் அவசரமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆண்டின் நடுப்பகுதியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நெருங்கிவரும் நிலையில் ஏன் இந்த இடமாற்றங்கள் அவசரமாகச் செய்யப்படுகின்றன? பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் வட மாகாண முதலமைச்சர் நாட்டிலில்லாத சமயத்தில் பாரிய அளவிலான, பாடசாலைகளை நிலைகுலைய வைக்கக்கூடிய இடமாற்றங்கள் செய்யப்படுவதற்கு நோக்கங்கள் எதுவும் உள்ளதா? என்ற வினாக்கள் பாடசாலைகளின் நலன்விரும்பிகளால் முன்வைக்கப்படுகின்றன. வட மாகாணக் கல்வியமைச்சு வட மாகாண…

    • 0 replies
    • 368 views
  25. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய இராஜினாமா செய்துள்ளார். அனைத்து அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும் தான் விலகுவதாகவும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் சனத் அறிவித்துள்ளார். http://www.thinakkural.lk/article.php?local/dtocsrjhzx322985ae750ad115808t1dqxdbdc5c2703bcfe97e77152wekbl#sthash.xVKnRSOw.dpuf

    • 0 replies
    • 266 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.