ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143523 topics in this forum
-
சம்பூர் மீள்குடியேற்றத்துக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும் தடைகள் நேர்ந்தாலும் அந்த மக்களை அவர்களின் சொந்தக்காணிகளில் மீள்குடியேற்றியே தீருவோம் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு உச்ச நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து தமது காணிகளை துப்புரவு செய்தவர்களும் தற்காலிக கொட்டில்களை அமைத்து அங்கு தங்கியிருந்தவர்களும் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டமை தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சம்பூர் வர்த்தக வலயம் சார்பில் உ…
-
- 5 replies
- 1.8k views
-
-
மிக் போர் விமானக் கொள்வனவு ஊழல் – இரகசிய வெளிநாட்டு வங்கிக்கணக்கு சிக்கியது MAY 31, 2015 | 13:12by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு செய்த போது, பணப்பரிமாற்றம் செய்யப்பட்ட இரகசிய வங்கிக் கணக்கு ஒன்றின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், மிக் போர் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற முறைகேடுகளில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மற்றும், ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்குத் தொடர்புகள் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மிக் போர் விமானக் கொள்வனவு, அரசாங்கங்களுக்கு இடையிலான பரிமாற்றம் என்றே, இது தொடர்பான ஆவ…
-
- 4 replies
- 707 views
-
-
வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கூடாது – நிமால் சிறிபால டி சில்வா JUN 03, 2015 | 2:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு கூறுவதற்கு விக்னேஸ்வரன் ஒன்றும் சிறிலங்கா அதிபர் அல்ல, யார் சொன்னாலும் வடக்கில் உள்ள இராணுவத்தை வெளியேற்றக் கூடாது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்து விட்டதாக குறிப்பிட்டாலும், அவர்கள் அனைத்துலக அளவில் இன்னமும் பலமாகவே உள்ளனர். விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு மீண்டும் சிறிலங்காவைத் தாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளன. இவ்வாறான நிலையில் எமது நாட்டை பாதுகாக்க வேண்டியது எமது கடமை. வென்றெடுத்த விட…
-
- 0 replies
- 452 views
-
-
மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு அழைப்பு JUN 02, 2015 | 9:06by கார்வண்ணன்in செய்திகள் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும், அதிபர் ஆணைக்குழு, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, கற்கைநெறி ஒன்றை மேற்கொண்டு வருகிறார். அவரை மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான அதிபர் ஆணைக்குழு விசாரணைக்கு வருமாறு அழைப்பு அனுப்பியுள்ளதாக, ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் குறித்து விசாரிக்க, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நியமிக்கப்பட…
-
- 1 reply
- 723 views
-
-
மகிந்தவுக்கு சவால் விடுத்தார் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க JUN 03, 2015 | 2:01by கி.தவசீலன்in செய்திகள் பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதம் பந்துல குணவர்த்தன விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்தப் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமான, முன்னைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை குறித்து விவாத்த்துக்கு வருமாறு மகிந்த ராஜபக்சவிடம் சவால் விடுத்துள்ளார். சிறிலங்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து விவாதிக்க வருமாறு கொள்கை திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹர்ஷா டி சில்வாவிடம், பந்துல குணவர்த்தன சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை ஹர்ஷா டி சில்வா ஏற்றுக் கொண்டுள்ளார். அதேவேளை, நாட்டைப் பொ…
-
- 0 replies
- 2.1k views
-
-
மேலும் மூவருக்கு பிரதி அமைச்சர் பதவி – மகிந்த அணியை பலவீனப்படுத்துகிறார் மைத்திரி JUN 03, 2015 | 1:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. காலி, கொழும்பு, புத்தளம் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரே நாளை சிறிலங்கா அதிபரால் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு அமைச்சர்கள் அண்மையில் வெளியேறிய பின்னர், ஐந்து புதிய அமைச்சர்களை நியமித்திருந்தார் சிறிலங்கா அதிபர். இந்த நிலையில் மேலும் மூவரை பிரதி அம…
-
- 0 replies
- 461 views
-
-
காவல்துறையினரை கல்எறிந்து கொல்லப்போவதாக எச்சரித்த மகிந்தவின் சகாவிடம் விசாரணை JUN 03, 2015 | 1:02by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்ச பிரதமரானதும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் கல் எறிந்து கொல்லப்படுவர் என்று எச்சரித்த, தென்மாகாண அமைச்சர் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச கலந்து கொண்ட கூட்டம் ஒன்றில் உரையாற்றிய, தென்மாகாண மீன்பிடி அமைச்சர் டி.வி.உபுல், “நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில் பணியாற்றும் காவலர் தொடக்கம் பிரதிக் காவல்துறை மா அதிபர் வரையான பட்டியல் சேகரிக்கப்படுகிறது. மகிந்த ராஜபக்ச பிரதமரானதும் இவர்கள் அனைவரும் கல் எறிந்து கொல்லப்பட வேண்டும…
-
- 0 replies
- 351 views
-
-
வலிகாமம் பகுதியினில் கழிவு ஓயில் கலந்த நிலத்தடி நீர் தொடர்பான விடயத்தை கிடப்பினில் போட சதிகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. நிலத்தடி நீர்; தொடர்பான சுகாதாரக் கலந்துரையாடல் நேற்று யாழ் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் பணிமனையில் சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர். இ. தேவநேசன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இக்கலந்துரையாடலில் கழிவு எண்ணெயினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சார்ந்த சுகாதார வைத்திய அதிகாரிகள், ஏனைய தொடர்புபட்ட வைத்தியர்கள் மற்றும் மேற்பார்வைப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.பதிவு இணைய செய்திகள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கான சுகாதாரக் கல்வி அறிவூட்டல் நடவடிக்கைகள் சுகாதார அமைச்சரிடமிருந்தான அனுமதி என்ற போர்வையி…
-
- 2 replies
- 707 views
-
-
கிளிநொச்சி, பளைப் பகுதியில் பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி சீவல் தொழிலாளிகள் பளைப் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகூடிய பனை வளத்தைக் கொண்ட பகுதியாக காணப்பட்ட பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேசத்தில் காணப்பட்ட ஏராளமான பனைமரங்கள் கடந்த யுத்தகாலத்தில் அழிவடைந்தன. யுத்தம் முடிந்த பின்னர் ஏஞ்சிய பனைமரங்கள் இப்பகுதியில் மீள் குடியேறிய மக்களின் வீட்டுத்திட்ட தேவைகளுக்கு வெட்டப்பட்ட நிலையில், தற்போது இப்பகுதியில் உள்ள பனை மரங்கள் வகை தொகையின்றி வெட்டப்பட்டு வேறு இடங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. பனை மரங்;களின் வருமானத்தை…
-
- 2 replies
- 661 views
-
-
தேசிய சேமிப்பு வங்கியில் மஹிந்த அரசினால் பெறப்பட்ட 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது?: ரணில் விக்ரமசிங்க MONDAY, 01 JUNE 2015 04:46 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெருந்தெருக்கள் அமைச்சுக்காக பெறப்பட்ட 5500 கோடி ரூபாவில் 2100 கோடி ரூபாவே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். கண்டி இராஜசிங்க வித்தியாலயம் மற்றும் கலகா பத்ராவதி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பசுமை பூமி காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் குறிப்பிட்டுள்ளதாவது, “இந்தப் பகுதியிலிருந்து (கண்டி) ஒரு நபர் கடந்த…
-
- 1 reply
- 419 views
-
-
நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த தலைமையில் புதிய கூட்டணி! - மாவட்ட, தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் [Tuesday 2015-06-02 20:00] எதிர்வரும் பொதுத்தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிடுவதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இதில் பெரும்பான்மையாகவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ நாற்காலி சின்னத்தில் அல்லது வேறு ஏதேனும் சின்னத்தில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி எனவும் தெரிவிக்கப்படுகின்ற…
-
- 2 replies
- 533 views
-
-
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுப்போராட்டமும் அதனைத் தாங்கிசென்ற விடுதலைப்புலிகளும், லட்சத்துக்குமேலான மக்களும் கொன்றொழிக்கப்பட்ட தினமான மே18 ஆனாது ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து தமிழர் மட்டுமன்றி மனிதத்தினை மதிக்கும் அனைத்துலக மக்களாலும் மறக்கமுடியாமல் போன ஒரு துன்பியல் நாள். இந்நாளில் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதி கிடைத்தால் கூட அந்நாள் அனைத்து மக்களின் மனங்களில் வாழ்நாள் முழுக்க மறக்கமுடியாத வலிகள் நிறைந்த நாளாகவே இருக்கும். இனப்படுகொலை நடைபெற்று 6 ஆண்டுகள் கடந்தாலும், குறித்த நாளில் அனைத்து தமிழர்களும் ஏதோ ஒரு வகையில் பல அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது அஞ்சலி செய்து கொண்டே வந்துள்ளனர். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்பின்னர் தமிழ்மக்களின் தலைவராக வந்தவராக சொல்…
-
- 9 replies
- 1.1k views
-
-
சிறுபான்மையினரின் ஆதரவு இல்லாமல் மகிந்தவைப் பிரதமராக்க முடியும்! - உதய கம்மன்பில [Wednesday 2015-05-27 07:00] சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமராக்க முடியும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன என்று தூய்மையான ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறவேண்டுமானால் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கும் பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கும் சிறுபான்மையினத்தவரின் வாக்குக…
-
- 4 replies
- 611 views
-
-
அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் நியமனத்தில் சர்ச்சை – நாளை நாடாளுமன்றில் சூடு பறக்கும் JUN 02, 2015 | 13:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியலமைப்பு சபைக்கான உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. 19வது திருத்தச்சட்டத்துக்கு அமைய உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சபைக்கு, உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, அரசியலமைப்புச் சபைக்கான உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இவற்றில், நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களின் நியமனங்களை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நாளை கூட்டப்பட்டுள்ள…
-
- 0 replies
- 564 views
-
-
ஊர்காவற்றுறை, நாரந்தனை பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் வெள்ளிக்கிழiமை (29) இரவு அத்துமீறி நுழைந்து இளைஞனொருவனை வாளால் வெட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய அதேயிடத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் எஸ்.சசிகரன் (வயது 21) என்பவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். முச்சக்கரவண்டியில் வந்த மூன்று பேர் கொண்ட குழு, இத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக உறவினர்கள், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டவரின் தந்தை மற்றும் சகோதரன் எனவும் அவ்விருவரையும் கைது செ…
-
- 6 replies
- 638 views
-
-
புத்தளம் அநகாரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை நபர் ஒருவர் இன்று கடத்திச் சென்றுள்ளார். குறித்த நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்கு மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலை அடுத்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் சிறுமியை கடத்திச் சென்ற நபர் காட்டில் பதுங்கியிருந்த நிலையில், பிடிக்க முடிந்ததாக புத்தளம் காவற்துறையினர் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுமி புத்தளம் தில்லையடி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் இரட்டை பிள்ளைகளில் ஒருவர் எனவும் மற்றைய பிள்ளை ஆண் பிள்ளை எனவும் கூறப்படுகிறது. சிறுமி தினமும் தனது சகோதரனுடன் முச்சக்கர…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதி எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள JUN 02, 2015 | 8:33by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக எயர்வைஸ் மார்ஷல் ககன் புலத்சிங்கள நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று நடந்த விமானப்படையின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில், தற்போதைய விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் கோலித குணதிலக இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தம்மை கூட்டுப்படைகளின் தளபதியாக நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளதாகவும். எயர் மார்ஷல் கோலித குணதிலக, குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்…
-
- 0 replies
- 2.1k views
-
-
சிராந்தியிடம் இரகசிய இடத்தில் விசாரணை – மகிந்த போட்ட திட்டம் பிசுபிசுப்பு JUN 01, 2015 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தி ராஜபக்சவிடம், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர் இன்று இரகசிய இடமொன்றில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கார்ல்டன் சிரிலிய சவிய பவுண்டேசன் என்ற அமைப்பின் வங்கிக் கணக்குத் தொடர்பாக இன்று விசாரணைக்கு வருமாறு நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சிராந்தி ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில், அவர் கொள்ளுப்பிட்டியில் உள்ள நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்கு மூலம் அளிப்பதற்காக சமூகமளிப்பார் என்று நேற்று சிராந்தி ராஜபக்சவின் ஊடக இணைப்பா…
-
- 4 replies
- 808 views
-
-
மஹிந்தவை மீளக் கொண்டுவருவதாக தொிவிக்கும் சிலர் அவருக்கு பாதகத்தன்மைகளை ஏற்படுத்தி வருவதாகவும் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் இந்தியாவின் ஒத்துழைப்பின்றி யுத்தத்தை வென்றிருக்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போது விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஸவை அண்மையில் முன்னாள் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் சந்திக்கச் சென்றிருந்த போது, இதனைக் குறிப்பிட்டுள்ளார்.விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பசில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தியா எமக்கு வழங்கிய சில உதவிகளை அவர்களினால் பகிரங்கமாக வெளியிட முடியாது எனவும் அவ்வாறான உதவிகள் காரணமாகவே யுத்தம் வெற்றிகொள்ளப்பட்…
-
- 2 replies
- 713 views
-
-
கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து: நால்வர் பலி! 35 பேர் படுகாயம் [ செவ்வாய்க்கிழமை, 02 யூன் 2015, 03:31.12 AM GMT ] கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் நால்வர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை மாங்குளம் - கொக்காவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பருடன் குறித்த பஸ் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டாம் இணைப்ப…
-
- 0 replies
- 986 views
-
-
கலிபோர்னியா: அமெரிக்காவில் நடக்க உள்ள ஃபெட்னா தமிழ் விழாவில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி. விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை(ஃபெட்னா), சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்தும் தமிழ் விழா 2015ஐ வரும் ஜூலை மாதம் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கலிபோர்னியாவில் நடக்கின்றது. இந்த விழாவில் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி. விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தமிழ் மக்களால் மாபெரும் பலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டு அல்லலுற்றுவரும் தமிழ் உறவுகளுக்கு தன்னால் முடிந்த அளவில் அரவணைப்பு காட்டி நல்லாட்சி செய்து வரும் இவர், அண்மையில் 2009-ம் ஆண்டு வன்னியில் நடந்தது ஒரு திட்டமிட்ட தமிழின படுகொலை தான் என்று …
-
- 2 replies
- 581 views
-
-
முல்லைத்தீவு பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் மீது கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் சென்ற சொகுசு பஸ் மோதியதில் பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் கூறினர். இவ்விபத்தில், சுமார் 15 பேர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பஸ் குடைசாய்ந்தமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மாங்குளம் பொலிஸார் கூறினர் http://www.tamilmirror.lk/147407#sthash.uYMMljzE.dpuf
-
- 0 replies
- 549 views
-
-
வித்தியா படுகொலையை அடுத்து புங்குடுதீவை விட்டு வெளியேறும் குடும்பங்கள் JUN 02, 2015 | 2:21by கி.தவசீலன்in செய்திகள் மாணவி வித்தியா படுகொலையைத் தொடர்ந்து புங்குடுதீவை விட்டு பல குடும்பங்கள் வெளியேறி வருவதாக, பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளார். வித்தியாவின் வயதை ஒத்த பெண் பிள்ளைகளைக் கொண்ட நான்கு குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி ஏற்கனவே புங்குடுதீவை விட்டு வெளியேறி, யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளன. இந்த நான்கு மாணவிகளும் வித்தியாவுடன் ஒரே வகுப்பில் கல்வி கற்றவர்களாவர். வித்தியாவுக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை அடுத்து அதிர்ச்சி அடைந்துள்ள- மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள அந்த மாணவிகளை வேறு பாடசாலைகளில் சேர்க்கவும், வே…
-
- 0 replies
- 618 views
-
-
நடுக்கடலில் 54 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா JUN 02, 2015 | 0:57by கார்வண்ணன்in செய்திகள் இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை அவுஸ்ரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி அனுப்பியுள்ளனர். இந்தோனேசிய காவல்துறை அதிகாரியை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெரோல்ட் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை, மியான்மார், பங்களாதேஸ் நாட்டு அகதிகள் 65 பேரும், இந்தோனேசியாவின் ரோட் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்ரேலிய கரையில் இருந்து 500 கி.மீ தொலைவில் உள்ள மேற்கு ரோட் மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு ஒருகே இரண்டு படகுகள் தத்தளிப்பதை அவதானித்த மீனவர்களே, இவர்களை நேற்றுமு…
-
- 0 replies
- 598 views
-
-
சுருக்கிட்ட நிலையில் இந்தச் சிறுமி இறந்துள்ளார். இந்த சிறுமியின் தாய் தந்தையர் வீட்டில் இல்லாத நேரம், தனிமையில் இருந்தபோதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதென, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். பாடசாலைக்குச் சென்றிருந்த இந்தச் சிறுமியின் சகோதரி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்து மூடியிருந்த கதவைத் திறந்தபோது தனது சகோதரி சுருக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார். இதனையடுத்து, அவர் தெரிவித்த தகவலையடுத்து அயலவர்கள் ஒன்று கூடியிருந்த போதே தாய் தந்தையர் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். தந்தையாருடனும், ஒரு சகோதரன் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்த இந்ச் சிறுமி நான்கு மாதங்களாகப் பாடசாலைக்குச…
-
- 2 replies
- 567 views
-