Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா சிங்களவருக்கே சொந்தம்; தமிழருக்கு உரிமையில்லை – என்கிறது சிங்கள அமைப்பு MAY 21, 2015 | 3:37by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்கா சிங்களவருக்குரிய நாடு என்பதால், தமிழ், முஸ்லிம் பிரதிநிதித்துவம் நீக்கப்பட்ட சிங்களக்கொடியே நாட்டின் தேசியக்கொடியாகப் பயன்படுத்தவேண்டும் என்று சுவர்ண ஹங்ச பதனம என்ற சிங்கள அடிப்படைவாத அமைப்பின் தலைவர் கால்லகே புண்ணியவர்தன தெரிவித்தார். கொழும்பில், நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “சிங்களவர்கள் ஒருபோதும் இலங்கையர்களாக அடையாளப்படுத்தப்பட கூடாது. சிங்களவர் என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தப்பட வேண்டும். ஏனையோர் சிறுபான்மையினத்தவராகவே அடையாளப்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலேயரிடம் இருந்து சிறிலங்கா சுதந்திரம் அடைந்தபோ…

  2. தேசவிரோத சக்திகளின் சதி முயற்சிகள் குறித்து தமிழ் சிவில் சமூக அமையம் எச்சரிக்கை போரின் பேரழிவுகளுக்கு முகம்கொடுத்த தமிழ் மக்களை மீண்டும் துன்பத்திலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ள புங்குடுதீவு மாணவியின் கொடூரப் படுகொலை குறித்த மக்களின் நியாயமான கோபத்தைத் தவறாகத் திசைதிருப்பத் தேச விரோத சக்திகள் முயற்சித்து வருவதாக தமிழ் சிவில் சமூக அமையம் இன்று எச்சரித்திருக்கிறது. உயர்தர வகுப்பு மாணவி வித்தியா கொடூரமாக கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை குறித்த நீதிக்கான போராட்டத்திற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, “உரிமைக்காகப் போராடிய ஒரு சமூகத்தில் இத்தகைய கொடூரமான சமூகப் பிறழ்வுகள்” பெரும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கிறது. “ஒரு சமூகமாக சுய தேடலும், …

  3. பொது பலசேனாவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார் கிரம விமலஜோதி தேரர்! [Thursday 2015-05-21 09:00] பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தலைமைப் பதவியிலிருந்து விலகிக் கொண்டதுடன், அமைப்புடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டுள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பாதை தமக்கு பொருத்தமான வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பதவி விலகுதல் தொடர்பில் விமலஜோதி தேரர், அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னதாக இயக்கத்தின் பொதுச் சபைக் கூட்டம் சுகததாச அரங்களில் நடைபெற்ற போது, பௌத்த பயங்கரவாதி என்றழைக்கப்படும் மியன்மாரின் விராது தேரரும் கூட்டத்தி…

    • 1 reply
    • 510 views
  4. சட்டமும், நீதியும் பணத்துக்கு விலை போகுமோ? : கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டம் புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மாணவிக்கு நீதி கோரியும் கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் இன்று கண்டன போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை கொக்குவில் பல்கலைக்கழக கல்லூரிக்கு முன்பாகவே குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர். மேலும் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு மானம் போக்கிய மானிடரை மன்னிக்காதே, தண்டனையை தயங்காமல் வழங்கு தப்பினால் நம் தாய்மண் சீரழியும்,எவனும் குற்றம் செய்து நீதியின் பிடியில் தப்பலாம்.ஆனால் மக்கள்,மாணவர் பிடியிலிருந்து தப்ப முடியாது, சட்டமும் நீதியும் பணத்துக்கு விலை போகுமோ என்று எழுதப…

    • 3 replies
    • 522 views
  5. புங்குடுதீவு மாணவிக்கு நீதி கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் போராட்டம் புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மாணவிக்கு நீதி கோரியும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கண்டன போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று மதியம் 12 மணியளவில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும் நாளைய தினம் மட்டக்களப்பில் ஹர்த்தால் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் பாடசாலைகள்,அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்,கடைகள் என்பன மூடப்பட்டு குறித்த மாணவிக்கு நீதி கோரி மாணவர்கள் ,பொதுமக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=347624044321149710#sthash.jRXGHOF9.dpu…

  6. பாடசாலைகளில் நாளை காலைப் பிரார்த்தனையில் வித்தியாவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி! - தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை [Thursday 2015-05-21 08:00] புங்குடுதீவில் காமுகர்களால் சிதைக்கப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவிற்கு அனுதாபமும் அஞ்சலியும் செலுத்துமுகமாக சகல பாடசாலைகளிலும் நாளை 22ம் திகதி வெள்ளி காலைப் பிரார்த்தனையில் ஒரு நிமிட நேர ஆத்மார்த்த அஞ்சலியைச் செலுத்துமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சகல அதிபர்களையும் ஆசிரியர்களையும் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், மாணவர்களின் ஒழுக்கவியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வுச் சொற்பொழிவை நிகழ்த்துமாறும், நாளை 22ம் திகதி வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் இச்செயற்பாட்டை மனிதாபி…

  7. டுபாயில் வெற்றி விழாக் கொண்டாடச் சென்ற குணதாச அமரசேகர, வசந்த பண்டார ஏமாற்றம்! [Thursday 2015-05-21 08:00] டுபாயில் நடத்தப்படவிருந்த போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டுபாயில் இலங்கையர்கள் வருடாந்தம் போர் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக போர் நிறைவைக் குறிக்கும் வகையில் போர் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. டுபாயில் அமைந்துள்ள இலங்கை கொன்சோல் காரியாலயத்தினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் பங்கேற்பது வழமை. எனினும், போர் வெற்றியீட்டப்பட்ட ஆறாம் ஆண்டை கொண்டாடும் நிகழ்வுகளுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு தடை ஏற்படுத்தியுள்ளது. போர் வ…

  8. வித்தியாவிற்கு வடக்கு அவையில் அஞ்சலி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு சிறுமிக்கி வடக்கு மாகாண சபையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் காலை 9.30மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் புங்குடுதீவில் வன்புணர்விற்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி வித்தியாவிற்கு ஏகமனதாக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன், அமைச்சர்களான கல்வி அமைச்சர் குருகுலராசா , மீன்பிடி அமைச்சர் டெனீஸ்வரன் , உறுப்பினர்களான நடராஜ், அனந்தி, குணசீலன் , சுகிர்தன், இந்திரராசா , ஆனோல்ட் மற்றும் விந்தன் கனக…

  9. வவுனியா பஸ் தரிப்பிட பகுதியில் குழுமியிருந்த மக்களை பொலிஸார் விரட்டியடித்ததையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து இன்று (21) வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. வவுனியா வர்த்தகர்கள் சங்கத்தினால் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் வங்கிகள், பாடசாலைகள் என்பனவும் இயங்காதுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் தனியார் பஸ் சேவைகள் மற்றும் முச்சக்கரவண்டி சேவைகள் உட்பட போக்குவரத்து வசதிகளும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. வவுனியா தபால் நிலைய ஊழியர்கள், நகரசபை மாவட்ட செயலக ஊழியர்கள், …

  10. இலங்கை ஜனாதிபதி அவர்கள் மே மாதம் 20ஆம திகதி நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் அரசின் உள்ளூர் விசாரணைப் பொறிமுறையின் தேவையைப் பற்றி தனது தெளிவான கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றார். மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் உள்ளூர் விசாரணை என்பது நேரத்தை வீணடிக்கும் ஒரு செயலாகவும் தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் முட்டாள்களாக்குவதற்கான ஒரு செயற்பாடாகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பார்க்கின்றது. இலங்கையில் முன்னர் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள், பல்வேறுபட்ட கொலைச்சம்பவங்கள், கடத்தல்கள், காணாமல் போகடிக்கப்பட்டவர்கள் போன்றவற்றின் மீதான அரசாங்க விசாரணைகள் தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ஏமாற்றமளிக்கும் விடயமாகவே அமைந்திரு…

    • 0 replies
    • 440 views
  11. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஹர்த்தாலின் போது குழப்பங்களை விளைவித்த 129 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்துள்ளார். யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.நீதிமன்ற கட்டடத்துக்கு கல்வீசி கண்ணாடிகளை உடைத்தமை, நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தியிருந்த வாகனங்களை உடைத்தமை, பொலிஸாரை தாக்கி காயப்படுத்தியமை, பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள், சமாதானத்துக்கு பங்கம் விளைவித்தவர்கள், கலகத்தில் ஈடுபட்டவர்கள் என 129 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்…

    • 0 replies
    • 455 views
  12. வீ.ரி தமிழ்மாறன் மன்றில் ஆஜர்ப்படுத்தப்படார்; வடக்கு டிஐஜி அசாதாரண சூழ்நிலையில் சமாதானத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள முடியும் என்று வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார். வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. அதன்போது, கடந்த 19 ஆம் திகதி புங்குடுதீவு மக்களுடைய கோரிக்கைக்கு அமைய வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரால் 20 ஆம் திகதி நேற்றைய தினம் 12 மணிக்கு கொழும்பில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவரையும் அவரை தப்பிக்க வைத்தார் என மக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட சட்ட விரிவுரையாளரையும் நீதிமன்றத்தி…

  13. யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குலில் கைதான நபர்களுள் கணிசமானவர்கள் திட்டமிட்டு இறக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.சிறிடொலோ மற்றும் முற்போக்கு மக்கள் முன்னணியின் முக்கிய தலைகள் கைதாகியுள்ளதன் மூலம் இது அம்பலமாகியுள்ளது. பொலிஸாருக்கும் எமக்கும் இடையில் மனஸ்தாபங்களை ஏற்படுத்தி நிலைமையைச் சீர்குலைக்க சில விசமிகள் கங்கணங் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் என்பது எமக்கு நன்றாகப் புலப்படுகின்றதென தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்றைய வன்முறைச் சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சங்கமும் இதேகருத்துக்களினை முன்வைத்துள்ளது.சிறு கட்சிகளினை சேர்ந்தவர்களே இவ்வாறாக வன்முறையினை தூண்டியதாக சிரேஸ்ட சட்டத…

    • 0 replies
    • 403 views
  14. புதிய போர்க்குற்ற விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “புதிய போர்க்குற்ற விசாரணை அனைத்துலக தரத்துடன் உள்நாட்டில் நடத்தப்படும். இதில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு சிறிலங்காவுக்கு உரிமை உள்ளது. வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் இந்த விசாரணைகள் நடைபெற வேண்டும். ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் நடத்திய தொலைபேசி உரையாடலின் போதும், ஐ.நா சிறப்புப் பிரதிநிதியிடமும், நான் அனைத்துலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு விசாரணையை நடத்துவதில் உறுதியாக…

    • 3 replies
    • 369 views
  15. ஷரிஆ சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் : வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்களுக்கு ஷரிஆ சட்டத்தின் படி தண்டனை வழங்குதன் மூலம் இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. வித்தியாவின் படுகொலை குறித்து வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வித்தியாவின் படுகொலை சம்பவமானது மனித நேயம் மிக்க எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத படு பாதக செயலாகும். இது போன்ற பல்வேறு வன்செயல்கள் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுத…

    • 10 replies
    • 1.5k views
  16. கடந்த ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோதாபய ராஜபக்ஷ மிக் விமானக் கொள்வனவிலும் லங்கா ஹொஸ்பிடல்ஸிலும் செய்ததாக கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பிலும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு கோதாபய ராஜபக்ஷவிடம் நேற்று புதன்கிழமை வாக்கு மூலத்தைப் பதிவு செய்துள்ளது. பொலிஸ் நிதி மோசடிப் பிரிவு விடுத்த அழைப்பின் மீது நேற்றுக்காலை விசாரணைப்பிரிவுக்கு வந்த கோதாபய ராஜபக்ஷவிடம் நிதிமோசடி விசாரணைப்பிரிவு அதிகாரிகள் காலை 9.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை வாக்கு மூலத்தைப் பெற்றுக் கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு இலங்கை விமானப் படைக்கு உக்ரைன் நாட்டிலிருந்து நான்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இந்…

    • 0 replies
    • 318 views
  17. யாழ்.நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது போராட்டம் அல்ல. அராஜகத் தர்பாரென கூறியுள்ள யாழ்.சட்டத்தரணிகள் சமூகம், இந்த அராஜக தர்பாருக்கு போராட்டக்காரர்களுள் ஊடுருவிய இரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களே காரணமெனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. போராட்டக்காரர்களுக்குள் ஊடுருவிய தென்னிலங்கை இனவாத சக்திகளின் வழிநடத்தலில் செயற்படும் சிறிய இரண்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களே வன்முறைகளுக்கும் இவ்வாறான அட்டகாசங்களுக்கும் காரணமெனவும் இராணுவத்தையும் விசேட அதிரடிப் படையினரையும் வீதிகளுக்கு இறக்குவதற்கே இந்த சமூக விரோத குழுக்கள் செயற்படுகின்றார்கள் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளது. யாழ்.நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் உள்ள நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்து…

    • 0 replies
    • 434 views
  18. அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளோ அவர்களின் பெயர் பட்டியலோ கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைச் சிறைகளில் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் பேர்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119978/language/ta-IN/article.aspx

    • 0 replies
    • 332 views
  19. இலங்கையில் பொதுத்தேர்தல் ஒன்று அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இடம்பெறலாம் என்று உறுதியாகியுள்ள நிலையில் தமிழர்களின் அரசியல் பயணம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் எவ்வாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்பது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னப்பலத்திற்கும், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களுக்கும் இடையில் பகிரங்க விவாதம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ள இந்த ஆரோக்கியமான அரசியல் விவாதமேடையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள், கட்சிகளின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவிற்கு நிபந்தனை…

    • 8 replies
    • 1k views
  20. ரணில், சந்திரிகாவுடன் மைத்திரி நேற்றிரவு நீண்ட ஆலோசனை! - பாராளுமன்றம் விரைவில் கலைப்பு. [Wednesday 2015-05-20 08:00] பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் நேற்றிரவு நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பாராளுமன்றத்தை விரைவில் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தேர்தல் முறை மாற்ற யோசனையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டு பாராளுமன்றத்தை கலைப்பதா? அல்லது தேர்தல் முறையை மாற்றாமல் பாராளுமன்றத்தை கலைப்பதா என்பது தொடர…

  21. சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பான விபரப்பட்டியல் ஏதும் தம் வசம் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி இல்லத்தில் நேற்று ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் நிறைவில் ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். சர்வதேச தரப்பினர் தம் வசமுள்ள பல்வேறு பட்டியல்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை அரசிடம் தடுப்பிலுள்ள அரசியல் கைதிகள் தொடர்பான விபரப்பட்டியல் ஏதேனும் உள்ளதா என வினவியதற்குப் பதிலளித்த ஜனாதிபதி தம் வசம் எந்தவொரு பட்டியலும் இல்லை என்று பதிலளித்தார். இதேவேளை, ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற சதிப்புரட்சி தொடர்பான விசாரணையின் நிலை எ…

    • 0 replies
    • 250 views
  22. மஹிந்தவை இறுக்க நிலைக்குள் வைத்திருக்கிறார் மைத்திரி! - சிரேஸ்ட ஆய்வாளர் அலன் கீலன் [Wednesday 2015-05-20 08:00] மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் சாதாரண உறுப்பினராக இருந்த போதும் ஜனாதிபதியாகிய பின்னர் மைத்திரிபால சிறிசேனவினால், நாட்டின் அரசியலில் மாற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளது என்று சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு தெரிவித்துள்ளது. குழுவின் சிரேஸ்ட ஆய்வாளர் அலன் கீலன், இலங்கைக்கு சென்று அண்மையிலேயே நாடு திரும்பியிருந்தார். இந்தநிலையில் அவர் மைத்திரிபால சிறிசேனவினால் பல முன்னேற்றமான செயற்பாடுகளை செய்ய முடிந்திருக்கிறது என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். 19வது திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம் நாடாளுமன்றத்துக்குள் உள்ள மஹிந்த ஆதரவுக…

  23. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சீ.பி. ரத்னாயக்க, மஹிந்த யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் அவர்களது அமைச்சு பதவிகளை சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/146530#sthash.lHWB4fU0.dpuf

    • 0 replies
    • 329 views
  24. தீவக படுகொலையை கண்டித்து யாழ் நகர்ப்பகுதியில் பேரணி நடைபெற்ற வேளையில் பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியில் யாழ் நகர காமுகர்களும் காவாலிகளும் இணைந்த ஒரு பேரணி நடைபெற்றது. இது சற்று வித்தியாசமாக தடிகள் பொல்லுகள் இரும்புச்சங்கிலிகளுடன் கூடியதாக இருந்தது. ரோட்டோர கடைகள் தாக்கப்பட்டும் போக்குவரத்து தடுக்கப்படும் கடைகளில் நின்றவர்கள் தாக்கப்பட்டும் மிகவும் அமைதியான முறையில்??? நடந்த இந்த பேரணிக்கு பொலிஸார் முழு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்கியிருந்தனர். மற்றைய பேரணிகளுக்கு வழங்காத ஒத்துழைப்பை இந்தக் காவாலிகளுக்கு வழங்கியது ஏன் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம் இனத்தை அழிக்க வெளியில் இருந்து ஒருவன் வரத்தேவையில்லை. இதுவே நம் இனத்தின் சாபக்கேடு. இவர்கள் தங்களின்…

  25. வடக்கில் இடம்பெறும் அனைத்துக் குற்றச்செயல்கள் மற்றும் குழப்பகரமான செயல்களுக்கு பின்னணியில் ஆயுதக் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், வித்தியாவின் படுகொலைக்கும் இந்த ஆயுதக்குழுவே காரணமெனவும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். வடக்கில் இருக்கும் குறித்த ஆயுதக்குழுவை ஒழித்துக்கட்ட ஜனாதிபதியும் பிரதமரும் நடவடிக்கை எடுக்கவேண்டிய அதேவேளை, மாணவி படுகொலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென இதன்போது குறிப்பிட்டார். இதேவேளை, மாணவி வித்தியாவின் விடயத்தில் பொலிஸார் அசட்டையாக செயற்பட்டதாக குறிப்பிட்ட பிரதியமைச்சர் விஜயகலா, கடமையை உரிய…

    • 0 replies
    • 845 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.