Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊவா முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம் விசாரணை APR 10, 2015 | 9:45by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம், நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு காவல்துறைக் குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வெளிவிவகார அமைச்சின் அதிநவீன சொகுசு பேருந்துகளைப் பயன்படுத்தியமை தொடர்பாகவே இன்று அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட சொகுசுப் பேருந்துகளில் ஒன்று சசீந்திர ராஜபக்சவின் பயன்பாட்டில் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரான சசீந்திர ராஜபக்ச, தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகன…

    • 0 replies
    • 493 views
  2. உதயங்க வீரதுங்க குறித்து விரைவில் அறிக்கை – மங்கள சமரவீர வாக்குறுதி APR 10, 2015 | 2:50by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க உக்ரேனிய பிரிவினைவாதப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரான உதயங்க வீரதுங்க, அந்த ஒரே காரணத்துக்காக எந்த கல்வித் தகைமையோ, இராஜதந்திர தகைமையோ இல்லாத போது…

    • 0 replies
    • 400 views
  3. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் இவருடன் 12 பேர் அடங்கிய குழுவினர் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/09/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D http://www.tamilmirror.lk/143758

  4. குடிநீரில் அரசியலைப் புகுத்தாதீர் – வடக்கு மாகாண முதலமைச்சர் வேண்டுகோள் APR 10, 2015 | 1:05by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் யாழ்.குடாநாட்டில் எழுந்துள்ள குடிநீர்ப் பிரச்சினையில் அரசியலைப் புகுத்த வேண்டாம் என்று கோரி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, குடாநாட்டின் சில பிரதேசங்களில் நிலத்தடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்களின் கரிசனைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் முயன்று வருவதுடன் இது தொடர்பில் வடமாகாண சபை அசமந்தப் போக்கில் உள்ளது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ள…

    • 0 replies
    • 394 views
  5. செலுத்த முடியாத தொகையை கடன் வாங்கிய மகிந்த அரசு: குற்றம் சுமத்தும் சந்திரிக்கா [ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015, 01:17.52 PM GMT ] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் வெளிநாடுகளிலும் உள்நாட்டு வங்கிகளிலும் செலுத்த முடியாதபடி பெருந்தொகை நிதியை கடனாக பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மட்டத்தில் நடந்த ஊழல், மோசடிகளை மாற்றி, ஊழல் ஆட்சிக்கு பதிலாக நல்லாட்சியை ஏற்படுத்தி, நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. கடந்த மூன்று மாதங்களில் அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை செய்துள்ளது. செய்ததை விட செய்ய வேண்டிய பணிகள் 100 மடங்காக உள…

  6. ஜூன் இறுதியிலேயே உள்நாட்டு விசாரணை அறிவிப்பு – பின்வாங்குகிறார் மைத்திரி APR 09, 2015 | 13:00by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான பொறிமுறை பற்றிய விபரங்களை வரும் ஜூன் மாத இறுதியிலேயே வெளியிடவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ரைம் சஞ்சிகைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். முன்னதாக, கடந்த மார்ச் மாதம் பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிபிசி சிங்கள சேவைக்கு அளித்திருந்த செவ்வியில் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை ஒரு மாத காலத்துக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த…

  7. மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பானம்வெளி குளத்தில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒருவன் முதலைக்குப் பலியாகியுள்ளான். வியாழக்கிழமை பகலளவில் இந்த மூன்று சிறுவர்களும் குளக்கரையில் நீராடிக்கொண்டிருக்கும் போது, நீரினுள் மறைந்திருந்த முதலையொன்று அதிசயராஜா ஜெயராஜ் (13) என்ற சிறுவனை இழுத்துச் சென்றுள்ளது. சிறுவனின் சகோதரன் குளிக்கச் சென்ற தனது தம்பியை தேடிச் சென்றபோது ஏனைய சிறுவர்கள் இருவரும் தங்களுடன் நீராடிய நண்பனான ஜெயராஜை முதலை இழுத்துச் சென்றது பற்றிக் கூறியுள்ளனர். அதன் பின்னர் குளத்தில் தேடியதில் முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சிறுவனின் இடது கால் முறிந்துள்ளதோடு உடலில் ஆங்காங்கே காயங்களும் காணப்படுகின்றன. கரட…

    • 0 replies
    • 496 views
  8. குடாநாட்டின் சில பிரதேசங்களில் நிலத்தடிநீர் மாசடைந்திருப்பது தொடர்பில் பொதுமக்களின் கரிசனைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த பல்வேறு தரப்பினரும் முயன்று வருவதுடன் இது தொடர்பில் வடமாகாண சபை அசமந்தப் போக்கில் உள்ளது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முனைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார். அவர்களுடைய நடவடிக்கைகள் பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதை நோக்கிச் செல்லாது பிரச்சினைக்கான குற்றச்சாட்டினை எம் மீது முன்வைப்பதனை மையமாகக் கொண்டு நகர்ந்து செல்கின்றது. இவ்வாறான செய்கைகள் குடிநீர்ப் பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைப் பெற்றுத்தரப் பயன்படப் போவதில்லை என்பதுடன் பொதுமக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளுகி…

    • 0 replies
    • 625 views
  9. சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பான போராட்டம் சர்ச்சைக்குரிய வகையினில் முடிவுறுத்தப்பட்டமை பல்வேறு தரப்புக்களிடையேயும் சந்தேகங்களினை தோற்றுவித்தேயுள்ளது. கோரிக்கை தொடர்பாக எம்மால் அணுகப்பட்ட முத்தரப்பினரதும் சாதகமான கூற்றுக்களைக் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு இப்பிரச்சினையில் உறுதியான தீர்வைத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் எமது போராட்டத்தை நேற்று புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நிறுத்திக்கொண்டதாக போராட்டகாரர்கள் தெரிவித்திருந்தனர். அத்துடன் 72மணித்தியாலத்தினுள் தீர்வெனக்கூறி உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் வெறும் 30மணித்தியாலத்துடன் அதனை முடித்துக்கொண்டனர்.அதன் போது மயக்கமுற்று சிலர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தனர…

    • 0 replies
    • 584 views
  10. நுவரெலியாவில் 200 வருடங்கள் பழமையான பாதை கண்டுபிடிப்பு [ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015, 11:58.06 AM GMT ] நுவரெலியாவில் சுமார் 200 வருடங்கள் பழமையான பாதையொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பல வரலாற்றைக் கொண்ட இப்பதையானது ஆரம்ப காலத்தில் ஒரு அடிப்பாதையாக காணப்பட்டது. அது அங்குராங்கத்தையும் கொத்மலையையும் இணைக்கும் ஒரு பாதையாக காணப்பட்டது. அக்காலத்தில் தேயிலையை முதன் முறையாக இலங்கைக்கு கொண்டு வந்த ஜேம்ஸ் டெயிலரும் இந்த பாதை காணப்படும் பிரதேசத்திலேயே வாழ்ந்து வந்துள்ளார். தற்போதும் அவர் வாழ்ந்த இடம் பாவித்த பொருட்கள், நாட்டிய தேயிலை இப்பிரதேசத்தில் அருங்காட்சியகமாக காணப்படுகின்றது. இந்த பாதையின் ஊடாகவே நுவரெலியா பிரதேச தோட்டங்களுக்கு தேயிலை உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.…

    • 0 replies
    • 584 views
  11. நல்லாட்சியை ஏற்படுத்துவதன் மூலம் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவிட முடியாது! குருபரன் [ வியாழக்கிழமை, 09 ஏப்ரல் 2015, 04:48.34 PM GMT ] நல்லாட்சியை ஏற்படுத்துவதன் மூலமும் சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்துவதன் மூலமும் தமிழர்களின் பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்கின்ற வாதத்தினை நாங்கள் மறுதலிக்கின்றோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டம் தொடர்பாகவும், தேசிய அரசாங்கம் உட்பட்ட முக்கிய விடையங்களை தமிழ்வின் இணையத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு செவ்வியிலேயே குருபரன் தெரிவித்துள்ளார். https://www.youtube.com/watch?v=6Z8WM-Q7piU http://www.tamilwin.com/show-RUmtyETdSUku3E.html

    • 0 replies
    • 335 views
  12. முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு கடற்பகுதியில் தொழில் செய்வதற்கு பெற்றுக்கொண்ட தற்காலிக அனுமதிகளுக்கு அப்பால் தென்னிலங்கை மீனவர்கள் யாருடைய அனுமதியுமின்றி அதிகமாகப் படகுகளைக் கொண்டு வந்து தொழில் செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கை மீறி மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாணசபையில் நேற்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வடக்கு மாகாணசபையின் 27 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது மேற்படி விடயம் தொடர்பான பிரேரணை வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முன்மொழியப்பட்டது.. முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு கடல்பகுதியில் 2011ஆம் ஆண்டு பருவகாலத் தொழிலுக்காக வந்து தங்கியிருந்த சிங்கள மீனவர்களுக்கு படையினர் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின்…

  13. குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ, அழுத்தங்களோ எமக்கில்லை: விக்கினேஸ்வரன் குடாநாட்டு குடிநீர் நெருக்கடியில் எந்த ஓர் விடயத்தையும் நாம் மறைக்க வேண்டிய தேவையோ அழுத்தங்களோ எமக்கில்லை என வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் கலந்த விவகாரம் அண்மைய காலங்களில் பெரும் சிக்கலுக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இது தொடர்பான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். குடிநீர்ப் பிரச்சினையில் அரசியலை புகுத்தாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்கும் அவர் இப்பிரச்சினைக்கு சரியான தீர்வை பெறமுடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்…

  14. கடலடி மின்வழித்தட இணைப்பு திட்டம் குறித்து சிறிலங்காவே முடிவெடுக்க வேண்டும் – இந்தியா APR 09, 2015 | 1:25by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின் வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய அரசுத் துறை நிறுவனமான பவர் கிரின்ட் கோப்பரேசன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறவனத்தின் பணிப்பாளரான ஆர்.என்.நாயக், புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது, “இந்தியாவின் பவர் கிரின்ட் கோப்பரேசன் நிறுவனமும், சிறிலங்காவின் மின்சார சபையும் இணைந்து, 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை நிறுவுவது தொடர்பான…

  15. சுசிலிடம் பந்தை வீசினார் சபாநாயகர் – சம்பந்தனுக்கு வாய்ப்புக் குறைவு APR 09, 2015 | 0:31by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, அந்தப் பதவிக்குப் பொருத்தமான ஒருவரின் பெயரைத் தருமாறு கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜெயந்தவிடம் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து உறுப்பினர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ச, இது ஒரு உட்கட்சி பிரச்சினை என்று தனக்குத் தெரிவாகத் தெரிவதாகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி…

    • 3 replies
    • 720 views
  16. 19வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்த உயர்நீதிமன்றத்தின் கருத்து வெளியானது APR 09, 2015 | 12:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு இசைவானதே என்றும், எனினும் இதன் சில பகுதிகளை நிறைவேற்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் வியாக்கியானம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த பின்னர், அதுபற்றிய தமது கருத்தை, நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பியிருந்தது. சபாநாயகர் சமல் ராஜபக்ச இன்று பிற்பகல் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதன்படி…

    • 0 replies
    • 371 views
  17. 19 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் 20 ஆம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/articles/2015/04/09/20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

    • 0 replies
    • 382 views
  18. அம்­பாறை ஆலை­ய­டி­வேம்பில் நேற்று நடை­பெற்ற காணாமல் போனோர் தொடர்­பாக விசா­ரணை நடத்தும் ஆணைக்­கு­ழுவின் விசா­ரணை அமர்வை நேற்­றைய தினமும் அதி­க­மான மக்கள் பகிஷ்­க­ரித்­த­துடன் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்­திலும் ஈடு­பட்­டனர். பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­ட­வர்கள் அழு­த­வாறு எம்மை தொடர்ந்தும் ஏமாற்­று­வதை விட்டு விடுங்கள், இனியும் இழப்­ப­தற்கு ஒன்­று­மில்லை என அமை­தி­யாக கோஷங்­களை எழுப்­பினர். அத்­துடன் ஐ.நா. விசா­ர­ணையே வேண்டும். உள்­நாட்டு விசா­ரணை வேண்டாம். நாங்கள் கேட்­பது எங்கள் சொந்­தங்­களை. நீங்கள் ஆடு, மாடு, கோழி­களை சர்­வ­தே­சத்தை ஏமாற்ற வழங்க முற்­ப­டு­கின்­றீர்கள். இது காணா­மற்­போனோர் தொடர்­பான விசா­ரணை. நல்­லி­ணக்கம் சொல்லும் அரசே ஐ.நா.வின் விசா­ர­ணைக்­கு­ழுவை அழை. உண­…

    • 1 reply
    • 276 views
  19. பதவி விலகாவிடின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – எதிர்க்கட்சி எச்சரிக்கை APR 09, 2015 | 0:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கம் பதவி விலகாது போனால், அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்ப்போம் என்றும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம எச்சரித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற கட்டத் தொகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய முன்னாள் அமைச்சரான குமார வெல்கம, “செவ்வாய்க்கிழமை அரசாங்கம் கொண்டு வந்த நிதிச் சட்டமூலம் ஒன்றை 21 பெரும்பான்மை வாக்குகளால் எதிர்க்கட்சிகள் தோற்கடித்துள்ளன. எனவே நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து, அரசாங்கம் பதவி விலக வ…

    • 0 replies
    • 265 views
  20. யாழ். ஊடகவியலாளர் சிறையில் அடைப்பு APR 08, 2015 | 16:43by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் நாளிதழில், பிரதேச செய்தியாளராகப் பணியாற்றும், ஊடகவியலாளர் ஒருவர் இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். என்.லோகதயாளன் என்ற ஊடகவியலாளரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறையினர் ஒருவரால், பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, செய்யப்பட்ட முறைப்பாடு குறித்த செய்தியை வழங்கியது தொடர்பாகவே ஊடகவியலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தி தொடர்பாக இன்று காலை விசாரணைக்கு வருமாறு நெல்ல…

    • 0 replies
    • 499 views
  21. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனக்கு 200 கோடி ரூபாவை இலஞ்சமாக வழங்குவதற்கு முயற்சித்தார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். கம்பளை நகர சபையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தகவலுக்கு மேல் தகவல் வந்து கொண்டிருந்தது. 200 கோடி ரூபா பணம் தருகின்றேன், கொழும்பில் வசிப்பதற்கும் காணி தருகின்றேன், ஜெனரல் அதிகாரத்தை மீண்டும் தருகின்றேன், பாதுகாப்பு வழங்குகின்றேன், மனைவிக்கும் வேலை பெற்றுக்கொடுக்கிறேன், பிள்ளைகளுக்கும் அவசியமானதைச் செய்து தருகிறேன் எனத் தகவல் வந்துகொண்டே இருந்தது.…

  22. நிதி ஒழுங்கு விதிகள் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னணியில் மஹிந்த: ரவி நிதி ஒழுங்கு விதிகள் தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சதியொன்று இருந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். எவ்வாறாயினும் இந்த தோல்வி அரசாங்கத்தின் பயணத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுப்பது போல இதற்காக அரசாங்கம் பதவி விலக வேண்டிய அவசியம் எதுவும் இல்லை எனவும் அவர் சொன்னார். நிதி ஒழுங்கு விதிகள் தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் ந…

    • 1 reply
    • 389 views
  23. ஐக்கிய நாடுகள் சபைக்கான ஜேர்மனியின் தூதரகத்தினால் இனப்படுகொலைகளில் இருந்து வினைத்திறனானதும், பொறுப்புவாய்ந்ததுமான பாதுகாப்பை வழங்குவது குறித்த அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிலங்காவின் இனப்படுகொலைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு ஆய்வாளர்களால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் உட்கிடக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த அறிக்கையில் 10 இடங்களில் சிறிலங்கா குறித்து கூறப்பட்டுள்ளதாக, இந்த செய்தியை வெளியிட்டுள்ள இன்னர் சிட்ரி பிரஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது. எனினும், சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்படாமை குறித்த எந்த விதமான விடயங்களும் இத…

    • 0 replies
    • 410 views
  24. தாம் அழைக்கப்பட்ட நிகழ்வுக்கு மஹிந்த ராஜபக்சவையும் அழைத்தமை தொடர்பில் சந்திரிக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமரநாயக்கவுக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தமது தந்தையான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் 55வது வருட நாடாளுமன்ற அரசியல் தொடர்பிலான நிகழ்வுக்கே விதுர விக்கிரமநாயக்க, சந்திரிக்காவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிகழ்வு நாளை 10ஆம் திகதி ஹொரனையில் இடம்பெறவுள்ளது. இதில் சந்திரிக்கா, ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோரை அழைக்க விதுர விக்கிரமநாயக்க திட்டமிட்டிருந்தார். இது தொடர்பான அழைப்பு கிடைத்ததும் தொலைபேசியில் விதுரவை தொடர்பு கொண்ட சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்சவுக்கும் முன்வரிசையில் ஆசனமிடப்படுவது ஏற்றுக்கொள்ள …

    • 0 replies
    • 351 views
  25. கடந்த ஒருவருடமாக சிறையில் அடைக்கப்பட்டு அண்மையில் விடுதலையான ஜெயக்குமாரியும், அவரது மகள் விபூசிகாவும் இருக்க இடமின்றி ஆலயமடமொன்றில் தங்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறையிலிருந்து விடுதலையான ஜெயக்குமாரிக்கு யாரும் இருக்க இடம் கொடுக்காத நிலையில், ஆலயமொன்று தமது மடத்தில் தங்கியிருக்க அனுமதியளித்துள்ளது. விடுதலைப்புலிகளின் மீளுருவாகத்திற்கு உதவினர் என ஜெயக்குமாரியும், அவரது மகள் விபூசிகாவும் கைது செய்யப்பட்டிருந்தனர். மகிந்த ஆட்சிக்காலத்தில் அவர்களின் விடுதலையென்ற பேச்சிற்கே இடமில்லையென்ற நிலையிருந்தது. பின்னர் மைத்திரிபாலவின் ஆட்சியில் ஜெயக்குமாரி பிணையில் விடுதலையானார். சிறுவர் இல்லத்திலிருந்த விபூசிகாவும் தாயாருடன் இணைந்தார். இதன்பின்னர் பாதுகாப்பான இருப…

    • 6 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.