Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றப் போவதில்லை என்று சிறிலங்காவின் ஜனாதிபதி உறுதியளித்திருப்பதாக, புதிய இராணுவத் தளபதி க்ரிஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். வடக்கில் இருந்து ஒரு இராணுவத்துறுப்பினரேனும் குறைக்கப்பட போவதில்லை. அத்துடன் இராணுவ முகாம்களும் அகற்றப்படாது. முப்படைகளின் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி இதற்கான உத்தரவாதத்தை வழங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார். http://www.pathivu.com/news/38947/57//d,article_full.aspx

  2. புங்குடுதீவு “தாயகம்” நிறுவனத்தின் சார்பில், சிறப்புற நடைபெறும் “சொக்கலிங்கம் அகடமி”யின் இலவச வகுப்புகள்..! [Wednesday 2015-04-01 21:00] புங்குடுதீவு பன்னிரண்டாம் வட்டாரம், அம்மாகடை சந்தியைச் சேர்ந்த அமரர்கள் சொக்கலிங்கம், சீதேவிப்பிள்ளை (நாகேஷ்) அவர்களது ஞாபகார்த்தமாக, நிறுவப்பட்ட “தாயகம்” நிறுவனம் சார்பில், அவர்களது புங்குடுதீவு வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட “சொக்கலிங்கம் அகடமி”யானது 2014 ஆண்டு எட்டாம் மாதம் தொடங்கி வெகு சிறப்பாக இயங்கி வருவது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் 18 பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட எமது அகடமியானது பின்பு 28 பிள்ளைகளாக அதிகரித்து கல்வி நடவடிக்கைகள்; விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சுமார் 61 பிள்ளைகள் வரையில் அங்கு கல்வி பயின்று வர…

  3. முன்னாள் அரசுத் தலைவர் ஆவிகளின் தொல்லையால் அலைந்து திரிவதாகவும், அவரின் மனநிலை அமைதியடையாது இருக்க அவரின் அதிகார காலத்தில் மாண்ட மனித ஆவிகள் துரத்தி வருவதாகவும் தெரியவருகின்றது. முன்னாள் அரசு தலைவர் தற்பொழுது அதிகாரத்தை இழந்த போதும் அனுபவித்த வசதி வாய்ப்புக்கள் மற்றும் அதிகாரம் என்பவற்றை நினைத்து புழுங்கிக் கொண்டு இருக்கும் அவரை அவரின் அதிகார காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளில் மாண்ட மனித உயிர்களின் ஆவிகள் துரத்துவதாகவும், அவரால் நிம்மதியாக படுத்து உறங்க முடியாமல் அவஸ்தைப் படுவதாகவும் நித்திரைக்கு முன் அதிக மதுபானங்களை அருந்துவதாகவும், அதிகாரத்தில் இருந்த போது இருந்த ஆடம்பர வசதிகள் ஆணைகள் போன்றவைகளை இழந்தப்படியால் மனதில் விரக்தியான நிலை ஏற்பட்டு அதிகாரத்தில் இருந்த போத…

    • 0 replies
    • 756 views
  4. சிங்கள அரசியல்வாதியும் அமைச்சருமான ரஞ்சன் நாமநாயக்க விரைவில் ஜனதிபதி சிறிசேனா உதயசிறியை விடுவிக்கும் பொது மன்னிப்பை வழங்குவார் எனச் சொல்லியுள்ளார். இதற்குப் பெரிதும் உதவிய நீதி அமைச்சர் ராஜபக்சேவுக்கும் நன்றி கூறியுள்ளார் ராமநாயக்க. http://www.asianmirror.lk/news/item/7964-president-pardons-batticaloa-girl-who-scribbled-on-mirror-wall

    • 7 replies
    • 1.1k views
  5. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 219 பேரே சிறைகளில் உள்ளனர்! - நீதியமைச்சர் தெரிவிப்பு. [Thursday 2015-04-02 07:00] பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான பல்வேறு தரவுகள் முன்வைக்கப்பட்டாலும் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரான காலப்பகுதியில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 219 பேரே தற்போது சிறைச்சாலை தடுப்புக் காவலில் இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். அரசியல் கைதிகள் தொடர்பில் அநுராதபுரத்தில் விசேட நீதிமன்றமொன்றை தற்போது உருவாக்கி அதனூடாக விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப் பிட்டார். மேற்குறித்த தரவுகளின் அடிப்படையில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டத…

  6. தேசிய பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்! - மகிந்த ராஜபக்ச கூறுகிறார் அறிவுரை [Thursday 2015-04-02 07:00] தேசிய பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.கடுவெல, கொரதொட்ட பத்தினி தேவாலயத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 'தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்நோக்கியுள்ளது. 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உடையவன் என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பேரம்பேசக் கூடாது என்ற அறிவுரையை புதிய அரசாங்கத்திற்கு வழங்குகின்றேன். நாட்டை ஐக்கியப்படுத்தி சுதந்திரத்தை ஏற்படுத்தியே ஜனவரி மாதம் 9ம் திகதி நான் புதிய அர…

  7. ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை! [Thursday 2015-04-02 07:00] தலைநகரின் பல பிரதேசங்களிலும் 2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடத்தப்பட்ட 9 மாணவர்கள் தொடர்பில் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டீ.கே.பீ.தஸநாயக்கவிடம் வாக்கு மூலம் ஒன்று பெறப்பட்டுள்ள போதிலும் அவரிடம் மேலும் விசாரணை செய்யும் அவசியம் ஏற்படும் என குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றிடம் தெரிவித்தது. அத்துடன் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூவர் ரவிராஜ் எம்.பி.கொலை தொடர்பிலும் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில் மேலும் சிலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு மேல…

  8. 19வது திருத்தச்சட்டம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதா? - உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதம். [Thursday 2015-04-02 07:00] உத்தேச 19ஆவது திருத்தச்சட்டத்தின் மீது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவதா இல்லையா என்பது உள்ளிட்ட அத்திருத்தின் மீதான நன்மை தீமைகள் குறித்து உயர்நீதிமன்றில் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உத்தேச 19ஆவது சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்றது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் நீதிபதிகளான சந்திரா ஏக்கநாயக்க பிரியசத் டெப் ஆகிய மூவரடங்கிய குழாம் முன்னிலையில் அம்மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட…

  9. அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் - விக்கிரமபாகு கருணாரட்ண "காரணமின்றி கைதுசெய்து வைத் திருக்கும் அரசியல் கைதிகளை உடன டியாக விடுதலைசெய்ய வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மைத்திரி ஆட்சி இருக்கும்வரை நீடிக்க அனுமதிக்க முடியும்.'' இவ்வாறு தெரி வித்தார் நவசமசமாஜக் கட்சியின் தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரம பாகு கருணாரட்ன. கொழும்பில் நேற்று நடைபெற்ற அதி காரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்துவோம் அமைப்பின் ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத் துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ""காரணமின்றி கைதுசெய்து வைத்திருப்போரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும். நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்துவதும் இல்லை. எந்தவொரு விச…

  10. முச்சக்கரவண்டி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் சாவு! இருவர் காயம்! : மன்னாரில் சம்பவம் நால்வர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் தலைமன்னார் பொலிஸ் நிலையப் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா என்றும் இடத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது - தலைமன்னார் மேற்கு பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், வெளிநாட்டிலிருந்து வந்து மன்னாரில் தங்கியிருந்த தெரிந்தவர்களின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி வீதியில் உள்ள பள்ள…

  11. சர்வதேச ஒட்டிசம் தினம் இன்று நாட்டில் “93 சிறார்களில் ஒருவர்” ஒட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 10 வருடங்களில் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், சிறுவர் நோய்கள் குறித்த விசேட வைத்தியருமான சமன்மலி சுமனசேன குறிப்பிட்டுள்ளார். இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச ஒட்டிசம் தினத்தை முன்னிட்டு, ஒட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட சிறார்களை அடையாளங் காணுதல் மற்றும் அவர்களுக்கான செயற்றிட்டங்கள் சில முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒட்டிசம் நோயால் பாதிக்கப்படும் சிறார்களுக்கு தாமதமின்றி சிகிச்சை வழங்குவதன் மூலம், அவர்களுக்கு ஏற்படும் பாதிப…

  12. திஸ்ஸ கரலியத்த இராஜினாமா புத்தசாசனம் மற்றும் பொது நிர்வாக பிரதி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசின் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டபோது, திஸ்ஸ கரலியத்தவிற்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது. அரசியல் பழிவாங்கல்களை நிறுத்தாமை உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக, தாம் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததாக திஸ்ஸ கரலியத்த மேலும் தெரிவித்துள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=240653955202202071

  13. யாழ் முதலமைச்சர் ஐ.நா. சிறப்பு நிபுணரோடு பேசியது என்ன? ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் பப்லோ டீ கிறெப் தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு நிபுணர் பப்லோ டீ கிறெப் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மன்னார் ஆயர் உள்ளிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன், நண்பகல் 12.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். குறித்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் இடம்பெற்றிருந்தது. எனினும் குறித்…

    • 6 replies
    • 1.3k views
  14. மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர்; உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர். இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பி மைத்திரி அரசை ஆட்சிபீடத்தில் ஏறவைத்தனர் தமிழ் மக்கள். - இவ்வாறு அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகின்றன. இந்த அரசின் ஆட்சி…

  15. வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறுங்கள் என்று முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் மேற்படி வழக்கிற்கு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சென்றிருந்த நிலையில் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு என்றும், அனந்தியே உனது கணவன் காணாமல் போனதாக நீ கூறும் நாடகம் எப்போது முடிவுக்கு வரும்?, எங்கே எமது பிள்ளைகள் ஒழிந்திருக்கும் உன் கணவரிடம…

    • 2 replies
    • 1.6k views
  16. இலங்கை, பொருளாதார வளர்ச்சிப் போக்கில் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றி, உலகில் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்புறவை நிலைநிறுத்தும். எந்த நாட்டுக்கும் எதிராக நாம் முரண்பாட்டை ஏற்படுத்தமாட்டோம்.' - இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால, அங்கு வானொலி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எனது முதலாவது சீனப் பயணம், மிகவும் வெற்றிகரமாக இருக்கின்றது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக, இப்பயணத்தின் மூலம், சீன அரசின் மேலதிக ஆதரவுகளைப் பெறலாம் என நினைக்கின்றேன். மருத்துவ சிகிச்சை, வேளாண்மை முதலிய துறைகளிலான ஒத்துழைப்பு உடன்படிக்கைகளில் சீனாவும் இலங்கையு…

    • 19 replies
    • 862 views
  17. சரணடைந்து காணாமற் போனவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனு மீதான விசாரணை மே மாதம் 12 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற் போனவர்கள் தொடர்பில், வவுனியாமேல் நீதிமன்றத்தில் ஆட்;கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குரிய நீதிமன்றத்துக்கு ஆரம்ப கட்டவிசாரணைகளிற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு மாற்றப்பட்டது. கடந்த சில தவணைகளாக வழக்கில், முறைப்பாட்டாளர்களும், சாட்சியாளர்களும் தமது தரப்பு விளக்கங்களை மன்றில் முன்வைத்து வருகின்றனர். நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது, கடந்த தவணையில் சாட்சியமளித்தவரிடம் தொடர்ந்தும், அரச …

    • 0 replies
    • 500 views
  18. மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் காட்டுவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள், கொழும்பில் நேற்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…

    • 0 replies
    • 399 views
  19. விமானம் ஒன்றுகூட சொந்தமில்லாத விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையே: பிரதமர் விமானம் ஒன்றுகூட சொந்தமில்லாத ஒரே விமான சேவை நிறுவனத்தைக் கொண்ட நாடு இலங்கையேயாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எங்கள் விமான சேவை நிறுவனங்களிடம் பஸ், லொறி உள்ளிட்ட ஏனைய வாகனங்களே உண்டு. ஸ்ரீலங்கன் விமான சேவை நாட்டுக்கு பெரும் சுமையாகவே காணப்படுகின்றது. விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து மூவர் அடங்கிய ஆணைக்குழு விசாரணை நடத்தியது. குறித்த விசாரணை அறிக்கை அலரி மாளிகையில் வைத்து நேற்று பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் போது பிரதமர் ரணில…

  20. யாழ்.மாவட்டம் வடமராட்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டித்துறை, தீருவிலில் அமைந்துள்ள குமரப்பா, புலேந்திரனினதும், தளபதி கேணல் கிட்டு உட்பட 12 வேங்கைகளின் நினைவுத்தூபிகள் 2010 ஆம் ஆண்டு சிங்கள படையினரால் இடித்தழிக்கப்பட்டது. இன்று அழிந்து போகும் நிலையில் காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படைக் காலத்தில் இலங்கை இந்திய கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் உயர்மட்ட உறுப்பினர்கள் பலாளியில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை சயனைட் அருந்தி வீரச்சாவைத் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். அவர்களின் உடல்கள் தீக்கிரையாக்கப்பட்ட தீருவில் பகுதியிலேயே இந்த நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டு இருந்த…

  21. யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் தொடர்­பி­லான விசா­ர­ணையை துரி­தப்­ப­டுத்த விசேட நீதி­மன்­ற­மொன்றை கட்­ட­மைக்கும் ஒழுங்கு முறை அர­சாங்­கத்­திடம் உள்­ளதா என சர்­வ­மத தலை­வர்கள் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் யுத்­த­த்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்தி, இதன்போது குற்­ற­மற்­ற­வர்­களை உடன் விடு­தலை செய்­ய­வேண்டும். மேலும் யுத்­த­தினால் இடம்­பெ­யர்ந்­தோரின் காணிகள் தொடர்­பி­லான சட்­டத்தில் சிக்­கல்கள் இருப்பின் திருத்­தங்­களை மேற்­கொண்­டா­வது உட­…

    • 0 replies
    • 355 views
  22. ராஜபக்சே - சிறீசேனா விரைவில் சந்திப்பு என தகவல். இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே - தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறீசேனவிற்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறான சந்திப்பானது வதந்திகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையும். மிக விரைவல் இந்தப் பேச்சு நடைபெறும் எனவும், பெரும்பாலும் கொழும்பில் இந்த சந்திப்பு இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.nakkheeran.in/

  23. http://youtu.be/mLfD6AZcels நியானி: காணொளி சீராக்கப்பட்டுள்ளதுடன் தலைப்பும் திருத்தப்பட்டுள்ளது.

    • 24 replies
    • 2.1k views
  24. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதல்வர் சீ. வி. விக்னேஸ்வரன் ஆகிய இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஆயுத போரை மனதில் கொண்டு இந்த பனிப்போர் நின்றிட வேண்டும். தேசிய நலன் கருதி இந்த கோரிக்கையை நான் இந்த இருவரையும் நோக்கி பகிரங்கமாக விடுக்கின்றேன் என தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்த இருவரிடையேயும் மத்தியஸ்தம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை, யாழ்ப்பாணத்திலும், கொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.