ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
மூதூர் பிராந்திய வைத்திய அதிகாரி பணிமனையும் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரும் இணைந்து சஞ்ஜீவி திட்டத்தினூடாக 'ஒரு கோப்பை உணவில் நிறை உணவு' தயாரிக்கும் திட்டத்தை மூதூரில் உள்ள சகல கிராமங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். கிராம மட்டத்திலுள்ள அன்னையர் ஆதரவு குழு மற்றும் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தினர் இணைந்து பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர். மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 80 கிராமங்களில் இச்செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உள்ளுர் உற்பத்தியான காய்கரிகள், பழங்கள், கீரைகள், தானியங்கள், புரத உணவுகளை பாவித்து குறைந்த செலவில் மனித உடலுக்கு தேவையான 6 வகையான போசாக்கு சத்துக்களை எவ்வாறு பெறலாம் என்பத…
-
- 1 reply
- 437 views
-
-
நிராயுதபாணிகளாக விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த 600 பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை போர்க்குற்றம் என்றே கருதப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். அரச தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கம்போடியாவின் பொல்போட் மற்றும் ஈராக், குர்திஷ் மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை என்பனவும் போர்க்குற்றங்கள். இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இலங்கை படையினர் போர்க்குற்றங்களை செய்யவில்லை. போரின் இறுதிக்கட்டத்தில் துப்பாக்கி முனையில் ஆயிரக்கணக்கான மக்களை பணய கைதிகளாக வைத்திருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை வி…
-
- 9 replies
- 1.3k views
-
-
கிழக்கில் அமைச்சரவைத் தெரிவு! சம்பந்தனின் தன்னிச்சையான தெரிவை மனவருத்தத்துடன் நிராகரிக்கிறோம்: சிவசக்தி ஆனந்தன் கிழக்கு மாகாணசபைக்காக த.தே.கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட இரு அமைச்சுப் பதவிகளுக்கும், பிரதி தவிசாளர் பதவிக்குமான தெரிவு எமக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் மீண்டும் உட்கட்சி ஜனநாயகம் மறுக்கப்படுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமைச்சுப் பதவி தொடர்பில் த.தே.கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளுடன் கலந்தோசிக்காமல், கட்சிகளுக்கு பங்கிட்டு வழங்காமல் தனியே சம்பந்தர் ஐயா மாத்திரம் எடுத்த தன்னிச்சையான இத்தெரிவை நாம் மிகுந்த வருத்தத்துடன் நிராகரிக்கின்றோம். கிழக்கு மாகாண அமைச்சரவை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கு…
-
- 0 replies
- 456 views
-
-
மகிந்த ஆட்சிக்காலத் திட்டங்களின் இன்றைய நிலை – ஏஎவ்பி FEB 26, 2015 | 7:09by நித்தியபாரதிin கட்டுரைகள் அம்பாந்தோட்டையில் 15.5 மில்லியன் டொலர் செலவில் மாநாட்டு மண்டபம் அமைக்கப்பட்டது. 2013 பொதுநலவாய மாநாடு இடம்பெற்ற பின்னர், இந்த மண்டபம் வெறுமையாகக் காணப்படுகிறது. இதில் தற்போது திருமண விழாக்களும் இடம்பெறுகின்றன. இவ்வாறு ஏஎவ்பி செய்தி நிறுவனத்துக்காக அமால் ஜெயசிங்க எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. பல மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட விமான நிலையம் விமான சேவையினரால் புறக்கணிக்கப்பட்டதிலிருந்து, ஆடம்பரமான துடுப்பாட்ட அரங்கம் விளையாட்டு வீரர்களால் நிராகரிக்கப்பட்டது வரையான விடயங்களை நோக்க…
-
- 0 replies
- 671 views
-
-
11 ஆண்டுகளுக்குப் பின்னர் கணிசமாக குறைந்தது சிறிலங்காவின் பணவீக்கம் FEB 28, 2015 | 0:22by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் பெப்ரவரி மாத பணவீக்கம், 11 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக சிறிலங்காவின் அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதையடுத்தே, பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. சிறிலங்காவின் பணவீக்கத்தை அளவிடும் பிரதான சுட்டியான, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, பெப்ரவரி மாத பணவீக்கம் 2.6 வீதமாக குறைந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாத பணவீக்கம் 3.2 வீதமாக இருந்தது. இது பெப்ரவரி மாதத்தில், 0.6 வீதத்தினால் குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில…
-
- 0 replies
- 837 views
-
-
சீனாவுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தும் சிறிலங்கா – சீனப் பிரதமர் நம்பிக்கை FEB 28, 2015by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் சீனாவின் முதலீட்டுக்கு உகந்த சூழலை சிறிலங்கா ஏற்படுத்தும் என்று நம்புவதாக சீனப் பிரதமர் லி கெகியாங் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, சீன பிரதமர் லி கெகியாங் நேற்று பிங்கில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சீனப் பிரதமர் லி கெகியாங், “இருநாடுகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கு சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விருப்பம் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், சீனாவின் முதலீடுகளுக்கு உகந்த சூழலை சிற…
-
- 0 replies
- 302 views
-
-
கடைசி நேரத்தில் தேர்தலை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம் FEB 27, 2015 | 12:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் நாளை நடைபெறவிருந்த புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று பிரதேசசபைத் தேர்தல்களை வரும் மார்ச் 27ம் நாள் வரை நடத்துவதற்கு, சிறிலங்கா உயர் நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவை அடுத்து, நாளை தேர்தல் நடைபெறாது என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உறுதிப்படுத்தியுள்ளார். வாக்காளர் பட்டியல் தொடர்பான பிரச்சினையை முன்வைத்து, இந்த தேர்தலை இடைநிறுத்துமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுகொண்டே, நாளை நடைபெறவிருந்த தேர்தலை சிறிலங்கா உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. ஏற்கனவே, இந்த பிரதேச …
-
- 1 reply
- 317 views
-
-
யாழ்ப்பாணமும் செல்கிறார் ஐ.நா உயர் பிரதிநிதி FEB 27, 2015 | 1:20by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவுக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள, ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் அதிகாரியான ஜெப்ரி பெல்ட்மன் யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ள அவர் கொழும்பில் மட்டுமே பேச்சுக்களை நடத்துவார் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று முன்தினம் தகவல் வெளியிட்டிருந்தார். எனினும், தற்போது ஜெப்ரி பெல்ட்மன், யாழ்ப்பாணமும், செல்வார் என்று, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். ஐ.நா விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று நடத்தப்பட்டதன்…
-
- 0 replies
- 308 views
-
-
பேராசிரியர் றொகான் குணரத்னவுக்கு ஒரு பதிலடி FEB 27, 2015 | 12:04 by நித்தியபாரதிin கட்டுரைகள் கடற்படையினர் மீன்பிடியில் ஈடுபடுவதும், இராணுவத்தினர் பண்ணைகள், விடுதிகள் மற்றும் உணவகங்களை வைத்திருப்பதும் தான் தேசிய பாதுகாப்பின் நோக்கங்களா? இவ்வாறு பேராசிரியர் றொகான் குணரத்னவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் பொருளியல் நிபுணரும், ஆய்வாளருமான கலாநிதி முத்துகிருஸ்ண சர்வானந்தா. ‘சிலோன் ருடே’ இதழில், பேராசிரியர் றொகான் குணரத்ன வெளியிட்ட கருத்துகளுக்குப் பதிலளித்து, அவர் எழுதியுள்ள பத்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி’. பெப்ரவரி 15,2015 அன்று வெளியிடப்பட்ட Ceylon Today ஊடகத்தின் பத்தாவது பக்கத்தில் ‘வடக்கிலிர…
-
- 0 replies
- 454 views
-
-
வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் 37 லட்சம் ரூபா பெறுமதியில் தீயாகி அறக்கட்டளை அமைப்பால் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுமார் 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கில சஞ்சிகையில் வாசித்த ஞாபகம் இன்னுமொரு 60 இல்லது 70 வருடங்களில் நீர் பற்றாக்குறை உலகத்தை பாதிக்கும். மாசடைந்த நீரால் மக்களுக்கு மருத்தவ சிகிச்சையளிக்க வேண்டிய கடப்பாட்டை உண்டாக்கும். நீரற்ற நிலை ஒரு புறம். நீரிருந்தும் மாசுற்ற நில…
-
- 14 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின் அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் இனப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததுடன், இதற்கான உந்துதல் கொடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், மேற்படி அமைப்பு அதிகாரத்தை பகிர்ந்து இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு எவ்வாறு செயற்படுமென ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படவுள்…
-
- 22 replies
- 1.1k views
-
-
இலங்கையில் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் தென்னாபிரிக்காவில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாமை நடத்தியதாக கூறப்படும் இரகசிய ஆவணமொன்றை மேற்கோள் காட்டி அல் ஜெசிரா இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலியா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளை சேர்ந்த புலம் பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இதை முற்றாக மறுத்துள்ள தென்னாபிரிக்கா புலனாய்வு பிரிவினர், அவ்வாறான முகாம் எதுவும் தென்னாபிரிக்காவின் எந்தப் பகுதியிலும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். http://www.tamilwin.com/show-RUmtyCRbSUnv6A.html
-
- 1 reply
- 649 views
-
-
இந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கண்டனம் வெளியிட்டு யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மதியம் 1.30 மணிக்கு தொழுகை முடிந்ததும் ஐந்து சந்திப் பகுதியில் கூடிய மக்கள் வீதியை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய வீட்டுத்திட்டம் வழங்குவதில் தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும், எனவே அரச அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். http://onlineuthayan.com/News_More.php?id=263733894627381176
-
- 0 replies
- 362 views
-
-
சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 86 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியில் இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் செய்ய உள்ள நிலையில், இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது. பெரும்பாலும் இந்த மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=127335&category=TamilNews…
-
- 0 replies
- 299 views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்து வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர், மனித உரிமைமீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள உள்ளக விசாரணைகள் குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக புரிந்து கொள்ளவில்லை. இவ்வாறான ஓர் நிலைமையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணைகளை எதிர்த்து வருகின்றது. சகல தரப்பும் சகல விடயங்களையும் உள்ளடக்கும் வகையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசாரணைகள் தொடர்பில் பிற்போக்கான நிலைப்பாட்டை பின்பற்…
-
- 0 replies
- 455 views
-
-
அவுஸ்ரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தம்மீது சுமத்திய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று முன்னாள பாதுகாப்புச் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளார். அதேவேளை, வெள்ளைவான் கடத்தல்களின் பின்னணி குறித்த தகவல்கள் தம்மிடம் உள்ளதாகவும், அதுபற்றிய விசாரணை ஒன்று நடத்தப்பட்டால், அதில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடத் தயாராக இருப்பதாகவும், முன்னாள் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்று நாடு திரும்பிய அவர், கலதாரி விடுதியில் ஊடகவியலாளர்களைச சந்தித்தார். அங்கு கருத்து வெளியிட்ட அவர், வெள்ளைவான் கடத்தல்கள் மற்றும் கொலைகளின் பின்னணியில் சில இராண…
-
- 0 replies
- 274 views
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ மற்றும் அவரது அமைச்சின் கீழ் செயற்பட்ட ஆயுதக் குழுக்களின் கொலை அச்சுறுத்தல் காரணமாகவே நான் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா சென்றேன். அப்போது நாட்டில் இருந்த வெள்ளை வேன் கலாசாரம் தொடர்பில் தான் அறிந்திருந்ததால் தனது மகள், மனைவியின் நிலைமையை எண்ணி அந்த முடிவை எடுத்தேன் என முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். வெள்ளை வேன் கடத்தல்களின் பின்னால் இருந்த முக்கிய இராணுவ அதிகாரிகள் தொடர்பில என்னிடம் ஆதாரம் உள்ளது. அக்காலப்பகுதியில் கருணா அம்மான் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் காணப்பட்டது. வெள்ளை வேன் கலாசரம் தொ…
-
- 3 replies
- 781 views
-
-
வடக்கில் சிங்கள மக்களின் காணி உரிமைகளை உறுதிபடுத்துமாறு ஹெல உருமய கோரிக்கை வடக்கில் சிங்கள மக்களின் காணி உரிமைகளை உறுதிபடுத்துமாறு ஜாதிக ஹெல உருமய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேல் மாகாணசபை உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு தனது வேண்டுகோளினை முன்வைத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் காணி உரிமைகள் குறித்து மாத்திரமே பேசுகின்றார்கள். சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இழந்த காணிகளின் உரிமைகள் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என நிஷாந்த வர்ணசங்க தெரிவித்துள்ளார். tamilwin.com
-
- 0 replies
- 363 views
-
-
உள்ளக விசாரணையை நியாயப்படுத்த தொடங்கினார் சின்னக்கதிர்காமர்! யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்படுவது அத்தியாவசியமானதாகும். இதனை விளங்கிக்கொள்ளாமல் பலரும் இந்த உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லையென்று தெரிவித்துவருகின்றனர். ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் 10ஆவது பந்தியில் சர்வதேச விசாரணையும் உள்ளக விசாரணையும் நடத்தப்படவேண்டும் என்றே கூறப்பட்டிருக்கிறது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள் அதன் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்பதே எம் அனைவரத…
-
- 5 replies
- 603 views
-
-
கிழக்கு மாகாண சபையில் இரண்டு அமைச்சுக்களும் பிரதித் தவிசாளர் பதவியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளன. இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சி.தண்டாயுதபாணி கே.துரைராஜசிங்கம் ஆகியோர் மாகாண அமைச்சுப் பதவிகளையும், பிரசன்னா இந்திரகுமார் பிரதி தவிசாளர் பதவியையும் பெறவுள்ளனர். கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் மேற்படி அமைச்சுப் பதவிகளுக்கான பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணியும், விவசாய, கால்நடை மற்றும் சுற்றுலா அபிவிர…
-
- 3 replies
- 1.4k views
-
-
கேபி தொடர்பில் விசாரணை நடத்த ஆறு மாத கால அவகாசம்! கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி குறித்த விசாரணை காலத்திற்குள் குமரன் பத்மநாதனுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குமரன் பத்மநாதன் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு சுமார் 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு மீண்டும் 2015 ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வழக்கு விசாரணையின் பின் மனுதாரர்களான மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி சுனில் வட்டகல, “கேபி தொடர்பில் மக்கள் வி…
-
- 0 replies
- 346 views
-
-
தற்போதைய பாராளுமன்றத்தின் ஆட்சி ஏப்ரல் 23ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. எனவே ஐக்கிய தேசிய கட்சி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முழுமையாக தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தொிவித்தார். மேலும் பொதுத்தோ்தலில் ஐக்கிய தேசிய கட்சிவுடன் யானை சின்னத்தில் போட்டியிடக்கூடிய சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் ஆசனம் பகிர்ந்தளிப்பது தொடர்பில் அடுத்த வாரம் முதல் ஆராயவுள்ளோம். அத்தோடு விகிதாசார முறைமையின் கீழே தோ்தல் நடாத்தப்படும் எனவும் பிரதமர் தொிவித்தார். ஏப்ரல் 23ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ள நிலையில், பொது தோ்தலில் எவ்வாறு ஐக்கிய தேச…
-
- 0 replies
- 301 views
-
-
கொழும்பு, நாரஹன்பிட்டி பகுதியில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற வசீம் தாஜூதீன் என்ற றகர் வீரரின் மரணம் விபத்தால் ஏற்பட்டதல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "2012 மே 17 ஆம் திகதி நாரஹன்பிட்டியில் இடம்பெற்ற றகர் வீரர் வசீம் தாஜூதீன் என்பவரின் மரணம் தொடர்பில் நாரஹன்பிட்டி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை ஆரம்பித்தது. இதில் இரண்டு விஞ்ஞானபூர்வ சாட்சிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. முதலாவது பிரேத பரிசோதனை நடத்திய வைத்தியரின் அறிக்…
-
- 0 replies
- 382 views
-
-
எனது 35 வருடகால அரசியல் வரலாற்றில் நான்கண்ட மக்கள் தலைவன் என்றால் அது ஈரோஸ் இயக்கத்தின் தலைவன் பாலகுமாரராகும். இன்று வரைக்கும் முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டது என்றால் இந்த ஈரோஸ் பசீரே தவிர, முஸ்லிம் காங்கிரஸின் பசீர் அல்ல என்று முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏராவூரில் மர்ஹூம் றூபி முஹைதீன் மாதிரிக்கிராமத்தை திறந்துவைத்த பின்னர் "இம்முறையும் பசீர் வெல்லுவாறு; அது எப்படியென்று மேடையில் சொல்லுவாரு" என்ற தலைப்புடன் இடப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். நாங்கள் முகாமிலே இருந்தவேளை எங்களை ஒவ்வொரு நாளும்…
-
- 9 replies
- 1.7k views
-
-
ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் என்பது எமது கட்சியின் கொள்கைகள் அல்ல.அதற்காக எமது கட்சியினர் ஒருவரும் குற்றமற்றவர்கள் அல்ல எனவும் நான் வாதிடவில்லை. தனிப்பட்ட சில குற்றச்செயல்களுடன் அவர்கள் தொடர்புபட்டிருக்கலாமெனவும் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. உதாரணமாக கமலேந்திரன் செய்தது தனிப்பட்ட குற்றச்செயல்.அதற்காக அவரை கட்சியிலிருந்து விலக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வீணைச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலுவான பொது கூட்டணி ஒன்று இணையுமாக இருந்தால் தமது முடிவு தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் சம்மந்தமாக முற்போக்கு சக்திகள், பொத…
-
- 3 replies
- 487 views
-