Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ருவாண்டா இனப் படுகொலையில் ஒட்டிக்கொணட வெட்கக் கேட்டுடன் இலங்கையின் வெட்கத்தையும் ஐநா ஏற்கப் போகிறதா? 03 பெப்ரவரி 2015 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக துவாரகா கலைக்கண்ணன்:- பான் கீ மூனின் பருவ நிலை மாற்றம் “இலங்கையின் புதிய அரசாங்கம் உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க முயற்சித்து வருகின்றமை குறித்து அறியக்கிடைத்துள்ளது, எனினும் இவ் விசாரணைப் பொறிமுறை சர்வதேச தர நிர்ணயங்களுக்கு உட்பட்ட வகையில் இருக்க வேண்டியது அவசியம்” என ஐக்கியநாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர் எரிக் கனாகோ தெரிவித்துள்ளார். ஐ.நா வின் சர்வதேச விசாரணைக்காக காத்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு மேற்குறித்த கருத்தானது அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விசாரண…

    • 1 reply
    • 398 views
  2. சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த நீதித்துறையை செம்மைப்படுத்த வேண்டியது அவசியம் - மங்கள சமரவீர:- 02 பெப்ரவரி 2015 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்த நீதித்துறையை செம்மைப்படுத்த வேண்டியது அவசியம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் நீதிமன்றக் கட்டமைப்பு ஒழுங்காகவும் கிரமமாகவும் காணப்படுகின்றது என்பதனை உலகிற்கு உணர்த்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றம் சுயாதீனமாகவும், பக்கச்சார்பற்றதாகவும் இயங்குவதனை உறுதி செய்வதன் மூலம் சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்களை இலங்கை சிறந்த முறையில்…

    • 1 reply
    • 299 views
  3. தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க எம்மால் முடியும் – மஹிந்த அமரவீர Feb 03, 2015 Ariram Panchalingam Local, News Ticker 0 தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான இயலுமை உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ரன்ன பகுதியில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் கூறியுள்ளார். தற்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலேனும் அரசாங்கத்தை நாம் கைப்பற்ற முடியும். இன்று கூட எமக்கு தேவை ஏற்பட்டால் பாராளுமன்றத்தில் கையொப்பிமிடப்பட்ட பிரேரணையொன்றை முன்வைத்து எமது பிரதமர் ஒருவரை நியமிக்க முடியும். எமது அமைச்சரவையை நியமிக்க முடியும். புதிய ஜனாதிபதிக்கு கௌ…

  4. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நான்கு பங்காளிக் கட்சிகள் இணைந்து எதிர்வரும் வியாழக்கிழமையன்று புதிய கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாக தெரியவருகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய நான்கு பங்காளிக் கட்சிகளும் இணைந்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. தினேஸ் குணவர்தன எம்.பி தலைமையில் முன்வைக்கப்பட்டுள்ள இ…

  5. 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடந்த ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போக செய்யும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரியை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இந்த குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்திய புலனாய்வுப் பிரிவு பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக கடற்படை அதிகாரியான பீ.கே. தஸநாயக்க என்பவர் வெளிநாடு செல்ல தடையுத்தரவை பெற்றிருந்தனர். கடற்படையின் நடவடிக்கை பணிப்பாளரான கப்டன் பீ.கே. தஸநாயக்கவை அமெரிக்காவில் கடற்படை பாடநெறி ஒன்றை கற்பதற்காக கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின…

  6. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சியினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் ஆணையாளர் கோராமலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராணுவத்தை அழைத்துள்ளார். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து முன்னிலை சோசலிச கட்சியினர் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஆயுதப் படையினருக்கு பொலிஸ் அதிகாரங்களை அளிக்கும் நியதிகளுக்கு அமைய படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். 2011ம் ஆண்டில் அப்போதைய அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீக்கியது. எனினும், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்தி முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் பொலிஸ் அதிகாரங்களை, முப்படையினருக்கு வழங்கும் சுற்று நிருபமொன்றை அரசாங்கம் தொட…

  7. கலாச்சாரக்குழு - எரியாமல் தப்பிய நாட்குறிப்புகள் ஊடாக:- தேவ அபிரா:- 02 பெப்ரவரி 2015 முன்குறிப்பு: 1989ம் ஆண்டளவில் தற்பொழுது கிழக்குப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் திரு ஜெயசங்கர் அவர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவரினதும் அவரின் நண்பர்களினதும் நாடகம் மீதான ஈடுபாடு என்னை நாடக அரங்கக்கல்லூரியை நோக்கி இழுத்துச் சென்றது. அக்காலப்பகுதியில் நாடக அரங்கக்கல்லூரியில் இருந்த திரு சிதம்பரநாதன் அவர்கள் பிற்பாடு விடுதலைக்கான அரங்கச் செயற்பாடு என்னும் கருத்தியலுடன் செயற்பட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நாடகக்களப்பயிற்சிகளைச் செய்யத் தொடங்கியசிதம்பரநாதன் நாடகக்களப்பயிற்சிகளினூடாக ஒன்றிணைந்த நாடகமற்றும் சமூக ஆர்வம் கொண்டவர்களை இணைந்துக் கொண்டுஒரு குழுவாக செயற்ப…

  8. தண்ணீர்த் தாகம்! வைத்தியர். க. செந்தூரன்:- 02 பெப்ரவரி 2015 ஒரு பகிரங்க கடிதம். - க.வ.ஜெயதாசன் - யாழ் குடாநாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலத்தடி நீருடன் கலந்துள்ள கழிவு எண்ணெய் தொடர்பாக பல்வேறு கருத்து மோதல்களும், போராட்டங்களும், அமைதிப்படுத்தல்களும், ஆறப்போடுதல்களும், வாதப் பிரதிவாதங்களும் தொடர்கின்றன... இதில் மக்களுக்கான ஊடகம் ஒன்று நிலவும் முரண்பாடுகளிடையே உண்மையை கண்டறியும் செயற்பாட்டில் மௌனம் காக்க முடியாது என்ற தெளிவான உணர்வுடன் அனைவரது கருத்துகளையும் பகிர்ந்து வருகிறோம்... அந்த வகையில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் தமது பக்க கருத்துகளை அனுப்பும் பட்சத்தில் அவை முழுமையாக பிரசுரிக்கப்படும்... ஆர் யாழ் குடாநாட்டில் வேகமாகப் பரவி வரும் நிலத்தடி நீ…

  9. வவுனியா ஓமந்தைச் சோதனைச் சாவடியில் சாதாரண பதிவு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், அந்த இடத்தில் சோதனை நிலையம் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைள் நண்பகல் முதல் தளர்த்தப்பட்டுள்ளன என்று வன்னிப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார். சோதனைச் சாவடி ஊடாக பயணிக்கும் வாகனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் மற்றும் பயணிகளை சோதனையிடும் நடவடிக்கைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன என்றும், எனினும், வடபகுதியிலிருந்து இரும்பு கொண்டு செல்லும் வாகனங்களின் விவரம் தொடர்ந்து பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டுப் பிரஜைகள் வடபகுதிக்குச் செல்வதற்கான கட்டுப்பாடுகள் ஏற்க…

  10. வடக்கிற்கான புதிய ஆளுநர் நியமனமானது தமிழ் தரப்பினது கோரிக்கை என்பதற்கப்பால் இலங்கை அரசினது பிரச்சாரத்திற்கானதென அம்பலமாகத்தொடங்கியுள்ளது. அவ்வகையினில் வடக்கு ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டதும் ஆளுநர் பாளிகக்ஹார தனது முதலாவது சந்திப்பாக இலங்கையில் தூதரகம் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்து அவர் கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. வடக்கு ஆளுநராக பளிஹக்கார இன்று காலை பதவியேற்றுக் கொண்டதையடுத்து மேற்கொண்ட முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர். முன்னதாக காலை தனது கடமைகளினை பொறுப்பேற்றுக்கொண்ட பாளிகக்ஹார உள்ளுர் ஊடகவியலாளர்களை தனது வாசஸ்தலத்தினுள் வருகை தரக்கூட …

    • 3 replies
    • 1.2k views
  11. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது. எனினும் தேர்தல் எதிர்வரும் 28ம் திகதி நடைபெறவுள்ளது.இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்றிருந்த நிலையில் அந்தப் பகுதியில் மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படாமையினால் தேர்தலை உடனடியாக நடத்தமுடியாமல் போனது. இரு சபைகளுக்குமான தேர்தல் 2011ம் ஆண்டும் பின்னர் 2012ம் ஆண்டும் நடத்தப்படுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த போதும் குறித்த தே…

  12. இலங்கையின் சுதந்திரதின விழாவில் 5 ஆயிரம் முப்படையினரே இம்முறை கலந்து கொள்வர் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த ஜயவீர தெரிவித்தார். இலங்கையின் 67 வது சுதந்திர தினவிழா வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை கொண்டாடப்படுகின்றது. பத்தரமுல்ல நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிப் பகுதியில் இடம்பெறும் இந்த நிகழ்வில் முப்படைகளையும் சேர்ந்த 101 அதிகாரிகளும் 2250 இராணுவ சிப்பாய்களும், 25 அதிகாரிகளும் 595 கடற்படை சிப்பாய்களும், 30 அதிகாரிகள் 470 விமானப் படையினரும் 975 பொலிஸாரும், 11 அதிகாரிகளும் 498 விசேட அதிரடிப் படையினரும் 450 இளைஞர் படையினரும் 5 ஆயிரம் வரையிலானோரே கலந்து கொள்வர். http://seithy.com/breifNews.php?newsID=125824&catego…

  13. பாராளுமன்ற விவாத முடிவில் வாக்கெடுப்பு வேண்டும் - தோற்றால் பதவி விலக வேண்டும் வாசுதேவ - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். பெரும்பான்மை பலமற்ற அரசாங்கமொன்றின் பிரதமர் எதேச்சாதிகார போக்கில் செயற்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பணி நீக்கப்பட்டமை குறித்து இன்று பாராளுமன்றில் நடைபெற்று வரும் விவாதத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் விவாதங்களின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமெனவும் வாக்கெடுப்பில் தோல்விய…

    • 2 replies
    • 449 views
  14. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா இலங்கையுடன் ஆழமான உறவை ஏற்படுத்த விரும்புவதாகவும், அதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அதிகாரிகள் குறிப்பிடுவதாகவும் அசோசியேட்டட் செய்திச்சேவை-(ஏபீ) தெரிவித்துள்ளது. இலங்கையின் ஏதேச்சாதிகார தலைவரின் ஆச்சரியமளிக்கும் தோல்வியும், ஒடுக்குமறைகளை முடிவிற்கு கொண்டுவருவதற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும், அமெரிக்காவுடன் இலங்கை உறவுகளை மீண்டும் சரிசெய்யும், சீனாவிடமிருந்து தனிமைப்படும் என்ற நம்பிக்கையை ஓபாமா நிர்வாகத்திற்கு அளித்துள்ளது. தென்னாசியாவிற்கான பிரதிவெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தின் மூலமாக உறவுகளை மீண்டும் ஏற்படுத்துவது குறித்த முக்கிய நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொள்கின்றது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் இலங…

  15. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தான் வளர்த்து வந்த யானைக்குட்டிகள் இரண்டையும் மீள ஒப்படைத்து விட்டதாக சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இந்த இரண்டு யானைக்குட்டிகளும் பின்னவல சரணாலத்துக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த இரண்டு யானைக்குட்டிகளையும் கோத்தபாய ராஜபக்ச சட்ட ரீதியாகவே வளர்த்து வந்துள்ளார். எனினும் இவ்விரண்டு யானைக்குட்டிகளையும் தம்மால் பராமரிக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் தன்னிடம் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த யானைக்குட்டிகளுக்கு சரித்த, சாரிகா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் இதில் சாரிகா என்ற யான…

  16. வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுனர், தலைமைச் செயலர் பதவியேற்பு FEB 02, 2015 by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் வடக்கு மாகாண சபையின் புதிய தலைமைச் செயலராக சிறிலங்கா நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரியான ஏ.பத்திநாதன் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். மொனராகல மாவட்ட அரசாங்க அதிபராகப் பணியாற்றிய இவர், புதிய அரசாங்கம் பதவியேற்றதையடுத்து, வடக்கு மாகாண தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியில் அமைந்துள்ள வடக்கு மாகாண தலைமைச் செயலரின் பணியகத்தில் இன்று காலை இவர் கடமையைப் பொறுப்பேற்ற நிகழ்வில், வடமாகாண அமைச்சுக்களின் செயலர்கள் அதிகாரிகள் மற்றும் மொனராகல மாவட்டச் செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதேவேளை, வடக்கு மாகாண ஆளுனர் பாலிஹக்காரவும் இன்று காலை தனத…

  17. இலங்கை புதிய அரசாங்கத்தின் 100 நாள் சிறிய வேலைத் திட்டத்திற்கு நட்பு நாடு என்ற ரீதியில் ஆதரவு வழங்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை வந்துள்ள அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், ´இலங்கையின் முன்னேற்றம் குறித்து நேரில் அறிவதற்கு நான் ஆவலாக உள்ளேன். இலங்கையில் ஏற்பட்ட ஜனாதிபதித் தேர்தல் ஆட்சி மாற்றம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியும் கருத்து வெளியிட்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் சிறிய 100 நாள் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அதில் பல வாக்…

  18. வடக்கில் கோத்தா அபகரித்த தமிழ்மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படும் – சம்பிக்க ரணவக்க FEB 02, 2015 | 9:51by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தமிழ் மக்களிடம் இருந்து அபகரித்த காணிகள் மீண்டும் அவர்களிடமே வழங்கப்படும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். “வடக்கில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சில இடங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அவை தொடர்ந்தும் அவ்வாறே கணிக்கப்படும். ஆனால், கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச தன்னிச்சையாக தனது சொந்த வியாபார நோக்கத்திற்காகவும் தமிழ் ம…

  19. இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மென்பொருள் பல்தேசிய நிறுவனமாகிய WSO2 நேற்று முன்தினம் தனது கிளை நிறுவனத்தை யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் ஆரம்பித்துள்ளது. - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=392653849302578082#sthash.JqPP3nUe.dpuf

  20. புதிய மைத்திரி அரசு காணாமல் போனவர்கள் தொடர்பில் விரைவில் பதில் கூற வேண்டும் என்றும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. கிளிநொச்சி காணாமல் போனோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஏ 9 வீதியில் உள்ள பழைய மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது. இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனவர்களது உறவுகள் , சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் மதத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள்…

  21. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தினது பெரும்பான்மை பலத்தை பரீட்சிக்கும் பலப்பரீட்சையாக, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அமையும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என இன்றைய தினம் பாராளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்கள், அடக்குமுறைகளை தடுக்க அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உள்…

  22. வடக்கில் இடம்பெற்ற, இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக அமெரிக்கா கவனம் செலுத்தியுள்ளதாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களிற்கான சிரேஷ்ட அதிகாரி மண்ணகழ்வு தொடர்பான தகவல்களை பெற்றுச் சென்றார் என இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் "வடக்கில் கடந்த காலங்களில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளினால் தான்தோன்றித்தனமாக எந்த அனுமதியும் இல்லாமல் மண்ணகழ்வில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் இலாபமீட்டினர். எனினும் மண் அகழ்வுக்குள்ளான பிரதேசங்கள் மிக மோசமான முறையில் சூழல் அழிவை எதிர்நோக்கியுள்ளன. குறிப்பாக நாகர்கோவில்…

  23. போர்க்குற்றவாளிகளை தண்டித்து விட்டு பொதுமன்னிப்பு அளிக்க திட்டம்? FEB 02, 2015 | 1:52by கார்வண்ணன்in செய்திகள் போரின்போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளை நடத்தி, குற்றம் இழைத்தவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்து விட்டு பின்னர் அவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சராக இருந்த போது, நியோமல் பெரேரா, ஐ.நாவின் விசாரணைகளையும், அனைத்துலகத் தர நியமங்களுக்கேற்ப உள்நாட்டு விசாரணைகளை நடத்தும் யோசனைகளையும் நிராகரித்து வந்தவர். ஆனால், அவர் தற்போது அனைத்துலகத் தடைகளை தவிர்த்துக் கொள்வதற்காக, அனைத்துலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு விசாரணைக…

  24. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை புதிய அரசிலும் தொடரும் புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை புதிய மைத்திரி அரசிலும் நீடிக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித். பி. பெரேரா தெரிவித்தார். வாரப்பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் , விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் புலம்பெயர் அமைப்புக்கள் செயற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டு கடந்த மகிந்த அரசில் புலம்பெயர் நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் தற்போது புதிய அரசு தோன்றியுள்ளது. இந்த நிலையில் தமிழ் அமைப்புக்களின் தடை குறித்து பிரதி அமைச்சரிடம் கேட்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.