Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் தமிழர் பிரச்சினைக்கு முதலில் தீர்வைக் காணமுன் வரவேண்டும் என்று இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதாக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் விஜய் ஜொலி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை காண வேண்டும் என்று கூறியிருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்சவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஜொலி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையின் ஜனநாயகத்துக்காக சமாதானமான நீதியான தேர்தல் அவசியம் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் …

    • 3 replies
    • 751 views
  2. நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்றுக்காலை 7 மணியளவில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமானது . யாழ்ப்பணத்தில் கற்கோவளம் பாடசாலையில் திரு மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரன் அவர்கள் வாக்களித்தார். வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன், பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்சீவன் ஆகியோரும் இன்று குடத்தனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் வாக்களித்தார். http://www.pathivu.com/news/36726/57//d,article_full.aspx

    • 189 replies
    • 8.7k views
  3. அதிகாலையில் அலரி மாளிகையைச் சுற்றி சிறிலங்கா இராணுவம் குவிப்பு JAN 08, 2015 | 22:03 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகளில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பின்னடைவை கண்டுள்ள நிலையில், அலரி மாளிகைப் பகுதியில் பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வியாழன் மாலையில் இருந்தே சுமார் 800 வரையான காவல்துறையினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கிய பின்னர், பெருமளவு சிறிலங்கா இராணுவத்தினர் அலரி மாளிகைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கொழும்பு நகரின் வேறு சில பகுதிகளிலும், சிறில…

  4. "கடமையை செய்; பலனை பாராதே" என்று உழைக்கிறேன். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான எனது போராட்டம், நடந்து முடிந்த தேர்தலுடன் ஆரம்பித்தது அல்ல. அது என் நண்பன் ரவிராஜுடன் நான் ஆரம்பித்த போராட்டம். பல்லாண்டுகளாக மனந்தளராமல் மீண்டும், மீண்டும் முயற்சி செய்து, கொலைக்கார மகிந்தவை வீழ்த்த முதல் நபராக பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்று உழைத்தேன். இன்று நான் இந்த கட்டத்தில் வெற்றிக்கண்டுள்ளேன் என நம்புகின்றேன். ஆனால், மைத்திரிபால ஆட்சி என்பது ஒரு விடுதலை என்றோ, ஒரு மீட்சி என்றோ நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இதை தாய் நாட்டிலும், புலம் பெயர்ந்தும் வாழும் என் உடன் பிறப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். வேண்டுகிறேன் ! <மனோ கணேசன்>

    • 0 replies
    • 988 views
  5. எதிர்வரும் சனவரி 8, 2015 அன்று இலங்கையில் நடைபெறவிருக்கும் சனாதிபதி தேர்தல் தொடர்பாக கடந்த 31.12.2014 அன்று வெளியான Indian Express நாளிதழில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்கள் வழங்கியிருக்கும் நேர்காணலில் "குறிப்பாக பிரபாகரனின் சர்வாதிகாரமோ அல்லது மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகாரமோ தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்காது" என சம்பந்தன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தமிழினத்துக்கு அடையாளம் தந்த தேசியத் தலைவரையும், தமிழின அழிப்பில் முதன்மையானவரான மகிந்த ராஜபக்சவையும் சம்பந்தன் அவர்கள் சமப்படுத்தியமை உலகத்தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது . தேர்தல் காலத்தில் தமிழ் மக்களிடம் வாக்குகள் பெறுவதற்கு தேசியத் தலைவரை புகழ்வதும், சில சந்தர்ப்பங்களில் தேசியத…

  6. இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில், விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மலரும் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. (மலரும்) http://www.tamilmirror.lk/137270

  7. விமான நிலைய வீதிகளில் இராணுவம்.. அலரிமாளிகையை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டு உள்ளன... தேர்தல் முடிவுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு பாதகமான விதத்தில் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாகியிருப்பதை காணமுடிகின்றது. கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் பொலிஸாருடன் இராணுவத்தினரை காணமுடிகின்றது. நகரி;ன் பாதுகாப்பை உறுதிப்படுத்த படையினரை பயன்படுத்தப்போவதில்லை என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டிருந்தமை முக்கியமானது. விமான நிலைய வீதிகளில் இராணுவம் நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் அலரிமாளிகையை சுற்றியுள்ள வீதிகள் மூடப்பட்டு உள்ளதாகவும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://globalt…

  8. அரசியலமைப்பு சட்டத்தரணியும் சிஹல உறுமயவின் முன்னாள் தலைவருமான எஸ்.எல்.குணசேகர தனது 71ஆவது வயதில் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/137233#sthash.VxMMVAJh.dpuf

  9. காலை 7 மணிக்கு ஆரம்பமான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு பி. ப. 4 மணியுடன் முடிவடைந்துள்ளது . : http://thinakkural.lk/article.php?local/nwpcamtho142010530e22dea15634whozh41e24a039563139cdc215exrgoa#sthash.tq19nuAs.dpuf

  10. யாழ். மாவட்டத்தின், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 133 கிராமஅலுவலர் பிரிவை (கூழாவடி) சேர்ந்த 5 பேரின் 0.3492 ஹெக்டேயர் காணிகள், ஸ்ரீலங்கா இராணுவத்தின் 11 ஆவது சிங்க ரெஜிமென் 'பி' அணிக்கான நிலையத்தை அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளதாக காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்;பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரால் அனுப்பப்பட்டுள்ள இந்த கடிதத்தில், எதிர்வரும் 21 ஆம் திகதி காணிகள் சுவீகரிக்கப்பட்டு, இராணுவத் தேவைக்காக எடுக்கப்படவுள்ளதாகவும் அச்சமயம் காணி உரிமையாளர்கள் வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் கூறப்பட்டுள்ளது. கடந்த 05ஆம் திகதியிடப்பட்டு அனுப்பப்பட்ட கடிதம் காணி உரிமையாளர்களுக்கு இன்று புதன்கிழமை (07) கிடைத்தது. மரியாம்பிள்ளை சிங்கராசா, சுப்பி…

  11. சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த ஊரான மெதமுலனவில் வைத்து இன்று வாக்களித்ததன் பின்னர், அவர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக மாலைத்தீவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. பிற்பகல் 12.10 அளவில் இந்த விமானம் புறப்பட்டு சென்றதாக விமான நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையை சுற்றி 700க்கும் அதிகமான காவற்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் வெளியிடப்படவில்லை.http://www.pathivu.com/news/36755/57//d,article_full.aspx

  12. நுவரெலியாவில் 60 வீத வாக்குப் பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் பிற்பகல் 1 மணிவரை 60 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை பிற்பகல் 1 மணிவரை கண்டியில் 65 வீதமும் காலியில் 55 வீதமும் பொலனறுவையில் 55 வீதமும் குருநாகலில் 40 வீதமும் வாக்களிப்பு பதிவாகியுள்ளன. http://www.virakesari.lk/articles/2015/01/08/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81

  13. வாக்களிப்பு ஒருவருடைய விருப்பமாகும் அந்த விருப்பத்தை பலவந்தமாகவோ அல்லது களவாகவோ அபகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, கள்ளவாக்கு போடுவதற்கு யாராவது வந்தால் அவருடைய தலையில் சுடுமாறு பொலிஸாருக்கு தான் பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொலிஸாருக்கு ஆகக்குறைந்த பலத்தை பயன்படுத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனினும் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தால் முழங்காலுக்கு கீழே சுடுவதற்கு பொலிஸாருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதான என்று ஊடாகவியாளர் வினவினார். ஆகக்குறைந்த பலம் என்று ஒன்றுமில்லை. தற்போது த…

  14. மன்னார் மாவட்டத்திலும் மந்த கதியில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், இன்று முற்பகல் 11 மணிவரை 13.38 சத வீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்றும் மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தார். - http://www.malarum.com/article/tam/2015/01/08/7937/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-.html வவுனியாவில் வாக்களி…

  15. யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படும் அரச ஆதரவு தொலைக்காட்சியான டாண் ரீவிக்கு யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.வாக்களிப்பிற்கான நேரம் மாலை 4 மணியுடன் முடிவுற்ற நிலையினில் அது 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியாக இத்தொலைகாட்சி செய்திகளை ஒளிபரப்பிய வண்ணமுள்ளது. இதன் மூலம் வாக்காளர்களை குழப்பமடைய செய்வதுடன் அவர்கள் குறித்த காலப்பகுதியினுள் வாக்குசாவடிகளிற்கு செல்வதை தடுப்பதே நோக்கமென நம்ப்பபடுகின்றது. இந்நிலையினில் குறித்த புகார் அடிப்படையினில் உதவி தேர்தல் ஆணையாளர் ஒளிபரப்பினை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலிலும் இதே பாணி பிரச்சாரங்களையே இத்தொலைக்காட்சி முன்னெடுத்திருந்தது. இதனிடையே யாழில் வாக்குச் சாவடிகளை அண்மி…

  16. ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- இன்று நண்பகல் 12 மணி வரையில் 45 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் மதியம் வரையில் 45 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் நண்பகல் அளவில் 50 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்ழ 38 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் 60 வீதமானவர்களும், பொலனறுவை மாவட்டத்தில் 55 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர். மாத்தளையில் 62 வீதமானவர்களும், அனுராதபுரத்தில் 30 வீதமானவர்களும், மாத்தறையில் 45 வீதமானவர்களும், களுத்துறையில் 40 வீதமானவர்களும் குருணாகல் மாவட்டத்தில் 50 வீதமானவர்களும் வாக்களித்துள்ளனர…

  17. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வீரகெட்டிய மெதமுலன டி.ஏ. ராஜபக்ஷ மகா வித்தியாலத்தில் இன்று காலை வாக்களித்தார். எதிர்க்கட்சியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொலன்நறுவை புதிய நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் வாக்களித்தார். ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்! பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமானது. இன்று காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானதுடன் வாக்காளர்கள் மாலை 4.00 மணி வரையில் வாக்களிக்க முடியும். இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்களிப்பதற்காக 15044490 வாக்காளர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில் 12314 வாக்களிப்பு…

  18. கொழும்பில் ஜனாதிபதித் தேர்தல் பதாகைகள் பலவும் இன்னமும் அகற்றப்படாத நிலையில், சில முக்கிய இடங்களில் தேர்தல் பதாகைகளுக்குப் பதிலாக தெற்கில் நடந்த குண்டுத்தாக்குதல் காட்சிகளைக் கொண்ட புதிய பதாகைகள் நேற்று கட்டப்பட்டுள்ளன. கோட்டை புகையிரத நிலையம், தலதா மாளிகை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் காட்சிகள் கொண்ட பதாகைகளை கொழும்பின் பல்வேறு பகுதியிலும் காணக்கூடியதாக உள்ளது. இந்தப் பதாகைகளில் யுத்த வெற்றி குறித்தும் விடுதலைப் புலிகளை தோற்கடித்தமை குறித்த வரிகளும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எழுதப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்கை பெறும் நோக்கிலேயே இவை வைக்கப்பட்டுள்ளன. குறித்த தாக்குதல்களை நினைவுபடுத்தி விடுதலைப் புலிகளை அழித்தமையை நினைவுபடுத்தி …

  19. பாரிசில் இன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தொிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “உலகத்தில் எங்கு இடம்பெற்றாலும் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராட உலகம் ஒன்றாக சேரவேண்டும்” எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது மெதமுன இல்லத்தில் இருந்து பேசும்போது தெரிவித்ததாக ஜனாதிபதியின் சர்வதேச ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்தின் கொடுமையை 30 ஆண்டுகள் அனுபவித்த இலங்கை, அதன் கொடூரத்தை நன்கு உணர்கிறது. பயங்கரவாதம் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு மட்டும் அன்றி அது உலகின் அனைத்து பாகங்களிலும் காணப்படுகிறது என்பதை இந்தச் சம்பவம் நிரூபிக்கிறது. பயங்கரவாதம் ஒரு நாட்டை எ…

    • 5 replies
    • 608 views
  20. சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழீழ விடுதலைக்கு எதிராக பிரச்சாரங்களை மேற்கொள்ளும் "சாத்திரி" அல்லது "சிறீ" என்றழைக்கும் சிறீரங்கநாதன் கெளரிபாலன் என்பவர் வருகின்ற 9 ஆம் திகதி தமிழகத்தில் நூல் வெளியீடு ஆயுத எழுத்து என்ற நூலினை வெளியிடுகின்றார். இதனால் தமிழகத்தில் உள்ள உணர்வாளர்கள் பலத்த எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்த நூலை வெளியிடுவதற்கு இருக்கிறார் டெக்கான் குரோனிக்கலின் ஆசிரியரான பகவான் சிங். இவர் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸின் நண்பர் ஆவார் , இவர் 2009 ஆண்டிற்கு பின்னர் சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதர் அம்சாவின் விருந்தினராக கொழும்பு சென்றார். அங்கே நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்து விருந்துண்ட பகவான் சிங், சிங்கள அரசினரைச் சந்தித்துவிட…

  21. பசில் ராஜபக்சவுடன் தொடர்பா? – நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் மறுப்பு JAN 08, 2015 | 0:02by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அரசாங்கம், தன்னுடன் தொடர்புகளை வைத்திருப்பதாக, எதிரணியினர் கூறிய குற்றச்சாட்டை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்திரகுமாரன் மறுத்துள்ளார். ருத்திரகுமாரனுக்கும், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக, எதிரணியினர் குற்றம்சாட்டியிருந்தனர். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன், சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தாம் எந்த தொடர்புகளையும் வைத்திருக்கவில்லை என்றும், அத்தகைய குற்றச்சாட்டுகள் அடிப்படையற்…

  22. ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இன்று காலை 7 மணிக்கு நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளது. காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ள வாக்களிப்பு மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.எனவே வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையினை பயன்படுத்துமாறு பல்வேறு தரப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அந்த வகையில் யாழில் இன்று காலை முதலே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று மிகவும் சுறுசுறுப்பாக வாக்களித்து வருகின்றனர். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=284213789108704340#sthash.WiLYkFdW.dpuf

  23. தேர்தல் புறக்கணிப்பால் லாபம் பெறும் தரப்பினரும் புனைதைகளை சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர்:- TNA தேர்தலை புறக்கணிக்கச் சொல்வதாகவும், இறுதி நேரத்தில் பின்வாங்கியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் என அரச சார்பு இணையங்கள் போலிப் பிரசாரங்களை அவிழ்த்து விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்த்தரின் தகவலின்படி ஏற்கனவே கட்சி எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக அனைவரும் மதியத்திற்கு முதல் வாக்களிக்குமாறு கோரப்பட்டுள்ளனர். இதேவேளை தேர்தல் புறக்கணிப்பால் லாபம் பெறும் பல்வேறு தரப்பினரும் புனைதைகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாகவும் அது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடைய…

  24. யார் கூடுதலான தீமைகளைச் செய்தவர் என்ற கண்ணோட்டத்தில் மகிந்த இராஜபக்சவையும், மைத்திரிபால சிறிசேனவையும் பார்க்க முடியாது என அயர்லாந்து றினிற்றி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் கலாநிதி யூட் லால் பெர்னான்டோ தமிழ்நெற் இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். அச் செவ்வியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: “சிங்கள ஜனநாயகவாதிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள் கூறுவதுபோன்று, தமிழ் மக்களுக்கான ஜனநாயகமும், சிங்கள மக்களுக்கான ஜனநாயகமும் ஒன்றல்ல. இவர்கள் உறுதியளிக்கும் ஜனநாயகம் என்பது தமிழர்களுக்கு ஒரு அர்த்தத்தையும், சிங்களவர்களுக்கு வேறான அர்த்தத்தையும் வழங்குகிறது. சிங்களமக்களுக்கு நல்லாட்சியை வழங்குவதனையும், தமிழ் மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்படுவதனைய…

    • 0 replies
    • 440 views
  25. நாளை ஜனாதிபதி தேர்தல் நடை பெற உள்ள நிலையில் யாழ்ப்பணத்தில் தற்போது முன்னாள் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் என்ற பெயரில் துண்டு பிரசுரங்கள் விநோயகிக்கப்பட்டு வருகின்றது.. http://www.pathivu.com/news/36713/57//d,article_full.aspx

    • 4 replies
    • 746 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.