ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143541 topics in this forum
-
"மிஸ்டர் பிரபாகரன்''என்று கூறுவதில் தவறேதுமில்லை : மங்கள 'மிஸ்டர் பிரபாகரன்' என்று கூறுவதில் தவறேதுமில்லை. சிங்கள மக்கள் எதிரியையும் நண்பனாக கவனிக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். எனினும் மஹிந்த ராஜபக் ஷ முதலில் பிரபாகரனுக்கு 'மிஸ்டர்' என்று அழைத்தவர். அதேபோன்று 600 பிக்குகளை கொன்ற கருணா அம்மானுக்கு 'மாண்புமிகு அமைச்சர்' என்ற நாமம் சூட்டியவரும் மஹிந்தவே ஆவார் என்று மாத்தறை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை ஜனவரி 9ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன வெற்றி வாகை சூடிய பின்பு ராஜபக் ஷ குடும்பத்தினருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அவர்களது பாதுகாப்பு உறுதிப்படு…
-
- 0 replies
- 438 views
-
-
இலங்கையின் ஐனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துத்தும். இனப்படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராகவும் தமிழீழம் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதிய கட்டடிடத்தொகுதியில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. http://www.pathivu.com/news/36633/57//d,article_full.aspx
-
- 0 replies
- 563 views
-
-
TNAயின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் இழுத்து வீழ்த்தி வெளியேற்றப்பட்டார்? 04 ஜனவரி 2015 முல்லைதீவு விசுவமடுப் பகுதியில் பொதுஜன ஜக்கிய முன்னணி சார்பில் மஹிந்தவிற்கு பிரச்சாரம் செய்ய மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினம் இழுத்து வீழ்த்தி வெளியேற்றப்பட்டார். விசுவமடுச் சந்தியில் நாமல்ராஜபக்ஸவினது ஏற்பாட்டில் இன்றிரவு இப்பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. கண்ணன் என்பவர் தலைமையில் இசைக்குழுவொன்று இசை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த நிலையில் மஹிந்தவிற்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்யவென மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினத்தை…
-
- 1 reply
- 908 views
-
-
இறுதிக்கட்டத்தை எட்டுகிறது அதிபர் தேர்தல் – இன்றுடன் பரப்புரைகள் முடிவு JAN 05, 2015 | 0:44by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கான கால எல்லை இன்று நள்ளிரவு முடிவுக்கு வந்த பின்னர், எல்லா அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களும், எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாகவோ, அல்லது, எதிராகவோ பரப்புரைகளை மேற்கொள்ளக் கூடாது என்று அறிவித்துள்ளார். இதற்கிடையே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், கடுமையான போட்டியை ஏற்படுத்தியிருக்…
-
- 0 replies
- 411 views
-
-
ஜே,வி.பியின் அனுர குமார திசநாயக்காவின் செவ்வி https://www.facebook.com/video/video.php?v=399373063550480
-
- 0 replies
- 328 views
-
-
8ம் நாளுக்குப் பின்னர் எதிரணியில் இருப்பேன் என்கிறார் அமைச்சர் மேர்வின் சில்வா JAN 05, 2015 | 0:06by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். கிரிபத்கொடவில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலகத்தில் நேற்று உரையாற்றிய அவர், “மகிந்த ராஜபக்ச ஒரு உயர்வான மனிதர். அவரது குடும்பத்தினர் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று விரும்பிய யாருக்கேனும் வாக்களியுங்கள். வரும் 8ம் நாளுக்குப் பின்னர், எதிரணியில் நான் அமர்ந்திருப்பேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜ…
-
- 0 replies
- 460 views
-
-
திரு.பிரபாகரன் என்று அழைத்ததை மறந்து போனாரா மகிந்த? – மங்கள சமரவீர கேள்வி JAN 05, 2015 | 0:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை, மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைத்துள்ளார் என்று, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, திரு.பிரபாகரன் என்று, தேர்தல் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறியது குறித்து, சிறிலங்கா அரசாங்கம், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. தீவிரவாத தலைவரை மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைப்பதா என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டோர் விசனம் வெளியிட…
-
- 0 replies
- 464 views
-
-
தேர்தலில் இராணுவத் தலையீடு குறித்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கவலை JAN 04, 2015 | 15:09by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரச வளங்களின் பயன்பாடு மற்றும், இராணுவத் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கருத்து வெளியிட்டுள்ள கொமன்வெல்த் கண்காணிப்பாளர் குழுவின் தலைவர் கலாநிதி பாரத் ஜக்டியோ, “தேர்தல் நாளன்றோ, அதற்கு முதல் நாளோ, இராணுவம் பயன்படுத்தப்படுவது குறித்த முக்கியமான கவலை உள்ளது. தேவை எனக் கருதினால், இதுகுறித்து விவாதிக்க இராணுவத்துடன் ஒரு சந்திப்பைக் கோருவோம். அரசாங்க வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவது, வன்முறைகள், முறைகே…
-
- 0 replies
- 423 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பணிகள் ஆரம்பம் news ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைப் பணிகள் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம்,கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டன. 02 ஜனவரி 2015, வெள்ளி 10:15 மு.ப - See more at: http://onlineuthayan.co…
-
- 16 replies
- 878 views
-
-
கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியினில் இன்றிரவு இலங்கை இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் ஆறு வயது சிறுகுழந்தை உள்ளிட்ட பலர் படுகாயமடைந்துள்ளனர். இதனிடையே தாக்குதலை நடத்திய சிப்பாய் மனநிலை பாதிக்கப்பட்டவரென கூறி கிளிநொச்சி வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளான். முன்னதாக அப்பகுதியினில் தையலகம் நடத்தி வந்திருந்த பொதுமகன் ஒருவரை சிப்பாயொருவர் சீருடையுடன் வந்து தாக்கியுள்ளார்.இதில் சிவராசா(வயது 46) என்பவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு படைமுகாம் முன்பதாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.அதனையடுத்து அவாகள் மீது படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தாக்குதலில் ஆறு வயதேயான பிறின்ஸி என்றழைக்கப்படும் சதீஸ்குமார் சதுஸிகா(வயது 6) படுகாயமடைந்து …
-
- 6 replies
- 810 views
-
-
பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவை ஆதரித்து இன்று ஞாயிற்றுக்கிழமை தலவாக்கலை நகரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா, ஜனநாயக முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகா மற்றும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிருமான பழனி திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க, நவீன் திஸாநாயக்க, புத்திரசிகாமணி, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, இராஜாராம் உள்ளிட்ட பலர் க…
-
- 1 reply
- 345 views
-
-
தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்:- 04 ஜனவரி 2015 மாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்லைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர்கள் ஏன் அரசியல் மாற்றத்திற்கு வாக்களிக்க வேண்டும்? என்பது குறித்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் விடுத்த அறிக்கை முழுமையாக: இலங்கையில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பாரம்பரியமாக நீண்ட காலமாகவாழ்ந்துவரும் தமிழர்களுக்கு,சிங்கள மக்களுக்கு சமமாகஅனைத்து அரசியல் பொருளாதார உரிமைகளை பெற்று வாழும் உரிமை உண்டு. இது மறுக்கப்பட்டது மட்டும் அல்ல தமிழ் இனத்தை அழிப்பதற்கு பல இன ஒடுக்கு முறைகள் கடந்த காலத்தில் நடைபெற்றது. ஆனால…
-
- 13 replies
- 703 views
-
-
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிரணியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதால் தமிழ் மக்களும் அப் பக்கமே சென்றுவிடுவார்கள் என்ற தோற்றப்பாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மாற்றங்கள் ஏற்படலாம் என்று நம்பிக்கை வெளியிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமில்லை என்றும், மூன்றில் ஒரு பெரும்பான்மையே போதுமானது என்றும் சுட்டிக்காட்டினார். அண்மையில் அலரிமாளிகையில் வைத்து வாரப் பத்திரிகைகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயங்களை குறிப்பிட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ தமது புதிய அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும், அப்பட…
-
- 0 replies
- 674 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளினை கூட்டமைப்புடன் இணைந்து மேற்பார்வை செய்யவென மைத்திரியின் தேர்தல் பிரச்சார ஏற்பாட்டுக்குழு பிரதிநிதிகள் ஒன்பது பேர் யாழ்.வருகை தந்துள்ளனர். அவர்கள் தமிழரசுக்கட்சியின் மார்டின் வீதி அலுவலகத்தில் வைத்து அதன் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். எதிர்வரும் மூன்று தினம் வடக்கில் தங்கியுள்ள அவர்கள் கூட்டமைப்பின் முகவர்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.முதல் கட்டமாக இக்குழுவினர் வடமராட்சி பகுதியினில் சந்திப்புக்களினை நட…
-
- 8 replies
- 1.1k views
-
-
எதிர்வரும் எட்டாம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் நிட்சயம் தனக்கே கிடைக்கும் என்று சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையிலேயே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதால் தமிழ் மக்களும் அரசாங்கத்துடன் இல்லை என அர்த்தப்படாது என்றும் அவர் இன்றைய தினம் வாராந்த பத்திரிகைளுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்ற தமிழ் அரசியல் தலைவர்கள் தம்முடன் இருப்பதாகக் …
-
- 0 replies
- 389 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி சிறிலங்கா அரசஅதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்தலில் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய கேள்விகள் தொடர்பாக எமது பார்வையை இங்கு பதிவுசெய்கின்றோம். இவை தமிழ்த்தேசிய சிந்தனை வெளியில் தமிழ்மக்களுக்கு இருக்கக்கூடிய கடந்த கால நிகழ்கால எதிர்கால செல்வழிகளை மையப்படுத்திய பார்வையாகவே முன்வைக்கப்படுகின்றன. 1. தற்போது நடைபெறவுள்ள சிறிலங்கா அரச அதிபருக்கான தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டுமா? ஆம். இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்களவர் தேசம் என இருவேறு தாயகப்பகுதிகள் கொண்ட இரு நிர்வாக அலகுகள் கொண்ட அரசியல் தீர்வே இலங்கைவாழ் அனைவருக்கும் பொருத்தமானதாகும். அதற்கான கோரிக்கைகள் இன்னும் வலுப்பெறவேண்டும். அதனால் ஒற்றையாட்சி அமைப்பைக்…
-
- 0 replies
- 748 views
-
-
முல்லைத்தீவு தனியார் பேரூந்து நிலையம் சேறும் சகதியுமாக காணப்படுவதன் காரணமாக முல்லைத்தீவு நகரத்துக்கு வருகை தரும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு அருகில் தனியார் பேரூந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்துக்கு உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தினமும் பலர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் சேறும்சகதியும் நிறைந்த பகுதியால் இறங்கியே நகருக்கு செல்லவேண்டிய நிலையுள்ளது - http://www.tamilmirror.lk/136956#sthash.odizNxUs.dpuf
-
- 0 replies
- 459 views
-
-
எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு தனது தந்தையாரான மகிந்த ராஜபக்சவை ஆதரித்து பரப்புரை செய்யும் நோக்குடன் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ளார். சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் வரவழைக்கப்பட்ட நாமல் தற்போது பலாலியை வந்தடைந்ததுடன் கட்டளைத் தளபதி ஜகத் அல்விஸ் உடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டு பின்னர். தேர்தல் விதிமுறைகளை மீறி பண்டத்தரிப்பில் கட்டப்பட்ட வீடுகளை 20 பேருக்கு கையளித்துள்ளார். இவ் வீடுகள் கையளிக்கும் நிகழ்வின் போது மோப்ப நாயுடன் பொலிசார் வருகைதந்திருந்தனர். அதன் பின்னர் ஆரியகுளத்திலுள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் நாமல் ராஜபக்ச வரவுள்ளார் ஒரு மணிநேரம் நில்லுங்கள் அவரிடம் உங்கள் கல்விதொடர…
-
- 1 reply
- 518 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் பெண்கள் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோட்டைகளில் இந்த பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. மட்டக்களப்பு, கல்லடி, நாவற்குடா, நொச்சிமுனை பிரதேசங்களில் இன்று காலை முதல் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் வீடு வீடாகச் ஜனாதிபதிக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்களை வினியோகித்தனர். மட்டக்களப்பு மாவட்ட மகளிர் சங்க கூட்டமைப்பின் தலைவி செல்வி மனோகரர் உட்பட பல மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் இணைந்திருந்தனர். http://www.virakesari.lk/articles/2015/01/04/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%…
-
- 0 replies
- 569 views
-
-
மாத்தளை, நாவுலையில் சாரம், சேலை மற்றும் சேர்ட் வழங்கும் வைபவத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்டு முதியோர் அறுவர் காயமடைந்துள்ளனர் என்று மாத்தளை மாவட்ட முதியோர் அமைப்பின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு பிரதியமைச்சர் ஒருவரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் வைத்து 20 ஆயிரம் சாரம், சேலை மற்றும் சேர்ட் வழங்கிவைக்கப்படவிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்தமுடியாது என்று மாத்தளை உதவி தேர்தல்கள் ஆணையாளர் சாந்திக ரூபாசிங்க தெரிவித்ததுடன் அந்த நிகழ்வையும் நடத்தவிடாது தடுத்தார். இந்த நிகழ்வு நாவுலையில் மற்றுமொரு இடத்தில் வைத்து நடத்தப்பட்டதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பு குழுவினர் உட்பட் உள்ளூர் …
-
- 0 replies
- 526 views
-
-
அதிகாரத்திலிருந்து நீங்கப்போகும் அரசுடன் நாம் தேவையற்ற விடயம் குறித்து பேசவில்லை. சில பிரச்சினைகள் தொடர்பில் பேசவேண்டிய தேவை இருந்தது. அதைத்தான் பேசினோம். அதைத் தற்போது தவறான முறையில் திரிபுபடுத்தி, நாம் தனி வலயம் கேட்டோம் என்றும், தனி மாவட்டம் கேட்டோம் என்றும் முழுமையாக தவறான கருத்தைக் கொண்டுசெல்ல அரசு முயற்சிக்கிறது. இது குறித்து நாம் கவலையடைகின்றோம். ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்திருப்பதால், இவ்வாறாக கீழ்த்தரமான அர்த்தமற்ற பிரசாரங்களை அவிழ்த்து விடுகின்றார்கள். நாட்டினுடைய உரிமை, ஒற்றுமை என்ற விடயத்தில் நாங்கள் ஜனநாயக ரீதியான எங்களுடைய போராட்டங்களை அடிப்படையாக வைத்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சியில்த…
-
- 0 replies
- 269 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஆளும்கட்சியின் உறுப்பினர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று குடிவரவு திணைக்களத்திடம் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிரணி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார். சில அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக வெளியான தகவலை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சில அதிகாரிகள் வெளிநாட்டு தூதரகங்களிடம் தமது வீசா விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எதிரணியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டவர்களுக்கு எதிராக தேர்தலின் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராஜித எச்சர…
-
- 0 replies
- 251 views
-
-
"தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும்." - இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் வாக்களிப்பது மிகவும் அவசியமாகும். கடந்த பல வருடங்களில் நாம் பட்ட துன்பங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு நன்றாகத் தெரி…
-
- 1 reply
- 275 views
-
-
மன்னார் ஆயரிடம் மகிந்தவை மன்னிப்புக்கோர வைத்த அரச வானாலி JAN 04, 2015 | 1:14by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அரசாங்க வானொலியில் செய்யப்பட்ட தரக்குறைவான பரப்புரைக்காக, மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகையிடம், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மன்னிப்புக் கோரியதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன், மன்னார் ஆயரை சந்தித்து ஆசி பெற்றதையடுத்து, சிறிலங்கா அரச வானொலியில், ஆயர் இராயப்பு யோசெப்புக்கு எதிராக தரக்குறைவான விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. இந்தநிலையில், கடந்தவாரம் தேர்தல் பரப்புரைக்காக வடக்கிற்குச் சென்ற சிறிலங்கா அதிபர், மடு தேவாலயத்துக்கும் சென்று மன்னார் ஆய…
-
- 2 replies
- 554 views
-
-
மைத்திரி, ரணில், சந்திரிகா, சம்பந்தன், ஹக்கீம் இணைந்து தனி அலகுகளை உருவாக்க முயற்சி :அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மைத்திரிபால, ரணில், சந்திரிகா, ரவூப், சம்பந்தன் ஆகிய அனைவரும் இணைந்து நாட்டில் இனரீதியாக தமிழ் முஸ்லிம் அலகுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர். தமிழ், முஸ்லிம் என்ற இன அடிப்படையில் அலகுகளை அமைத்து நாட்டை துண்டாட முயற்சிக்கின்றனர். இது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, எதிரணி முகாமானது குழப்பங்களின் கூடாரமாகவே தொடர்ந்த…
-
- 5 replies
- 602 views
-