ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
மஹிந்தவின் எதேச்சதிகாரத்தை தோற்கடிக்க மைத்திரிக்கு வாக்களிப்போம்! தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை நிறைவேற்று அதிகார முறைமை மூலம் முழுநாட்டையும் நலிவுறச் செய்து எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்தி நெடுங்காலமாக கோலோச்ச நினைக்கும் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து அனைத்து மக்களுக்கும் நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஏற்படுத்தக்கூடிய கொள்கையுடைய பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக ஒன்றிணைவோம். - இவ்வாறு தமிழ் பேசும் மக்களை கோரியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:- தமிழ்த்தேசியக் கூ…
-
- 1 reply
- 367 views
-
-
பொலிவூட் நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அக்குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 9W256 என்ற இலக்கத்தைகொண்ட விமானத்திலேயே இக்குழுவினர் மும்பாய் நகரத்திலிருந்து வருகைதந்துள்ளனர். http://www.tamilmirror.lk/136586#sthash.ZnFjsBwk.dpuf
-
- 12 replies
- 948 views
-
-
இருவர் வலையில் வீழ்ந்தனர் இலங்கை அரசினது நீண்ட பேரம்பேசல்களின் மத்தியில் இதுவரை இரண்டு கூட்டமைப்பு சார்பு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளை வலைக்குள் விழுத்த முடிந்திருந்தது. அவ்வகையில் கணவன் மனைவியென இரு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் நேற்று அரச பக்கம் பாய்ந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற முதலாவது கட்சி தாவல் இதுவாகும். பருத்தித்துறை நகரசபை உறுப்பினரான நிரஞ்சன் மற்றும் அவரது மனைவியும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான சிவசாந்தி ஆகிய இருவருமே இவ்வாறு கட்சி மாறியுள்ளனர். குளிரூட்டிய கார் பெமிட் மற்றும் இரண்டு கோடி பணம் தனக்கு பேரம் பேசப்பட்டதாக கூட்டமைப்பு சார்பு நகரசபை உறுப்பினரொருவர் தகவல் தெரிவித்தார். பொது மேடையில் ஏறி மஹிந்தவிற்கு ஆதரவை வெளியிட்டா…
-
- 0 replies
- 545 views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்ட இறைவனிடம் பிரார்த்திப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு திங்கட்கிழமை (29) மாலை அனுப்பிவைத்துள்ள தனது இராஜினாமா கடிதத்திலேயே அவர் இவ்வாறு கூறினார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நாட்டு மக்களை பாதுகாப்பதில் விஷேடமாக முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு இறைவனுக்கு அடுத்தபடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்துள்ளதுடன், கட்சியின் முடிவுக்கு அமையவே நான் வெளியேறுகின்றேன் எமது கட்சி எடுத்த தீர்மானத்துக்கு இணங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களிடையே எமது கட்சி த…
-
- 1 reply
- 287 views
-
-
சீன நீர்மூழ்கிகளின் வருகை குறித்து இந்தியாவுக்குத் தெரியுமாம் – மகிந்த கூறுகிறார் DEC 30, 2014 | 2:57by அ.எழிலரசன்in செய்திகள் சீனக் கடற்படையின் நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்து நிற்பது குறித்து இந்தியாவுக்குத் தெரியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். தமிழ்நாட்டின் தந்தி தொலைக்காட்சியில் நேற்று இரவு ஒளிப்பரப்பான செவ்வியிலேயே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அவர்கள் (சீன நீர்மூழ்கிகள்) இந்தப் பக்கம் வரும் போதெல்லாம், அவர்கள் எப்போதும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் தகவல் கொடுக்கிறார்கள். மத்திய கிழக்கை நோக்கிச் செல்கிறோம் என்றும், இங்கே வருகிறோம் என்றும், அவர்களே, தகவல் தெரிவிக்கிறார்கள். சீன அதிபரின் பயணத்து…
-
- 0 replies
- 338 views
-
-
தமிழர்களுக்கு எதிராக என்னால் செயல்படவே முடியாது: ராஜபக்சே இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெற உள்ள பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை அதிபர் ராஜபக்சேவை செய்தியாளர் எஸ்.ஏ.ஹரிஹரன் சிறப்பு பேட்டி கண்டுள்ளார். அவர் கேட்ட சுறுசுறுப்பான கேள்விகளுக்கு, ராஜபக்சே விறுவிறுப்பாக பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- சமீபத்தில், சார்க் மாநாட்டின்போது நீங்களும், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் சந்தித்தீர்கள். இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்களை விடுவித்ததற்கு மோடி நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நல்லெண்ண நடவடிக்கையாகக்கூட இது கருதப்பட்டது. மீனவர்களும் வரவேற்றார்கள். ஆ…
-
- 0 replies
- 402 views
-
-
வட மாகாணசபைக்கு எல்லா சுதந்திரமும் உள்ளதாம் – தந்தி தொலைக்காட்சியில் மகிந்த DEC 30, 2014 | 0:50 by அ.எழிலரசன்in செய்திகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் உள்ள வடக்கு மாகாணசபைக்கு, தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம் இருப்பதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து ஒளிபரப்பாகும் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர், வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுனரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். இந்தச் செவ்வியில் அவர், “தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம் அவர்களுக்கு (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) உள்ளது. துரதிஸ்டவசமா…
-
- 0 replies
- 387 views
-
-
https://www.facebook.com/video/video.php?v=826827164044210 நான் கர்ப்பமாக உள்ளேன்! கணவரை கொல்லாதீர்கள் மகிந்தவிடம் கெஞ்சல்…. தனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என முல்லேரியா -கொட்டிகாவத்த பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்காரச்சியின் மனைவி நிவங்கா சோலங்காரச்சி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தான் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாகவும் தயவு செய்து எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் எனவும் நிவங்கா சோலங்காரச்சி அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சோலங்காரச்சி, பிரத…
-
- 0 replies
- 476 views
-
-
சல்மான் கான் ஓர் துரோகி – வை.கோ - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- 30 டிசம்பர் 2014 பாலிவுட் நட்சத்திரம் சல்மான் கான் ஓர் துரோகி என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோ. தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்காக சல்மான் கான் நேற்றைய தினம் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தார் என கொழும்பு ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி மஹிந்தவிற்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என வை.கோ தெரிவித்துள்ளார். சல்மானின் இந்த நடவடிக்கையானது ஓர் துரோகச் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொரளையில் நேற்றைய தினம் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ ஆகியோருடன் சல்மான் கான் மற்றும் நடிக…
-
- 0 replies
- 728 views
-
-
DEC 30, 2014 | 0:00by கார்வண்ணன்in செய்திகள் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தல், அமைதியான முறையிலும், நம்பகமான வகையிலும் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இதுதொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கடந்தவாரம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இதன்போதே, அமைதியாகவும், நம்பகமாகவும் தேர்தல் நடத்தப்படுவதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற தனது பலமான எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார் பான் கீ மூன். ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிறிலங்காவுக்கு, நல்லிணக்கம், அரசியல் பேச்சு, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு ஐ.நா தொடர்ந்தும் உதவ…
-
- 0 replies
- 291 views
-
-
சகல இன மக்களும் எந்த எதிர்பார்ப்புமின்றி எனது பக்கம் வருகின்ற இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உடனடியாக எனக்கு ஆதரவு வழங்கி எனது பக்கம் வரவேண்டும் என ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு, சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில் மக்களது பணங்களைக் கொண்டு மக்களுக்கு சேவை செய்யாமல் தனது பொக்கட்டில் போடுகிறார் மகிந்த. அரசாங்க ஊழியர்களையும் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட முடியாமல் செய்வதுடன் ஒரு சர்வாதிகாரியாகச் செய…
-
- 0 replies
- 598 views
-
-
உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்ற மன அழுத்தத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முதலி கோவிலடி கொக்குவில் பகுதியில்வசிக்கும் யாழ். கொக்குவில் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவியான தவராசா மஞ்சுஜா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டன. உயர்தர மாணவர்கள் அனைவரும் தமது பெறுபேற்றினை எதிர்பார்த்து பரீட்சை பெறுபேறுகளை பார்த்த நிலையில், பல மாணவர்களின் பெறுபேறுகள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை. இந்த நிலையில், யாழ்; கொக்குவில் இந்து கல்லூரியில் கலைப்பிரிவில் பரீட்சை எழுதிய மாணவியான இவர், தனது பரீட்சை பெறுபேற்றினை சனிக்கிழமை பா…
-
- 0 replies
- 404 views
-
-
முதலைகளின் நடமாட்டம்... 29-12-2014 04:14 AM கிழக்கு மாகாணத்தில் கடந்த நாட்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்துவந்த நிலையில், முதலைகளின் நடமாட்டமும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், வெல்லாவெளி மற்றும் மாவடிப்பள்ளி வாவிகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதை படங்களில் காணலாம். (படங்கள்: ஜ.நேகா) www.tamilmirror.lk
-
- 1 reply
- 468 views
-
-
கொந்தளிப்பு... 29-12-2014 11:03 AM -ற.றஜீவன் யாழ்.வடமராட்சி கடல் திங்கட்கிழமை (29) அதிகாலை முதல் கடும் கடற்கொந்தளிப்புடன் காணப்படுவதாக வடமராட்சி மீனவர் சமாசத்தலைவர் அந்தோனிப்பிள்ளை அருள்தாஸ் தெரிவித்தார். மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாம் என எவ்வித அறிவுறுத்தல்களும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவிடமிருந்து மீனவர்களுக்கு கொடுக்கப்படவில்லையென்றும், வழக்கத்துக்கு மாறான கடற்கொந்தளிப்பு காணப்படுவதையடுத்து பல மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லையென அவர் கூறினார். முல்லைத்தீவை சார்ந்த கடற்பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்படுவதால், முல்லைத்தீவில் கொக்குளாய் தொடக்கம் நல்லதண்ணீர் தொடுவாய் வரையுள்ள மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங…
-
- 0 replies
- 375 views
-
-
எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மீது தாக்குதல் இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் மூன்று தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் திங்களன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். போலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன மஹியங்கனைய, தெனியாய மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார் காரியாலயங்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார். அதிகாலை வாகனங்களில் வந்த சிலர் மஹியங்கனையவில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார அலுவலகம் மீது மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அங்கிருந்த மூன்று நபர்கள் காயமடைந்ததாக கூறிய போலிஸ் ஊடக பேச்சாளர் அவர்கள் தற்பொது மஹியங்கனைய வைத்…
-
- 0 replies
- 249 views
-
-
எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என்று அரசங்கத்திடம் கேட்டுக் கொள்வதாக கொலன்னாவ - முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்கஆராச்சியின் மனைவி அழுகையுடன் தெரிவித்துள்ளார். எதிர் கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பிரசன்ன சோலங்கஆராச்சியின் மனைவியான திவங்கா சோலங்கஆராச்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, தான் தற்போது கர்ப்பிணி தாயாக இருப்பதாகவும் தயவு செய்து எனது கணவரை கொலை செய்ய வேண்டாம் என்றும் பிரசன்ன சோலங்கஆராச்சியின் மனைவி இதன் போது மேலும் தெரிவித்துள்ளார். http://virakesari.lk/articles/2014/12/29/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B…
-
- 1 reply
- 409 views
-
-
உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவல்.... எனது கணிப்பின்படி சுமார் 2 லட்சம் வரையிலான வாக்குகளால் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறலாம். Assumptions: 1. நியாயமான அல்லது 2 சதவீதத்திற்கும் குறைவான மோசடிகளுடன் தேர்தல் நடைபெறும். 2. வாக்குகளில் பெரும் மாற்றத்தைச் செலுத்தக் கூடிய பக்க மாறல்கள் இனி இடம்பெறாது. 3. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை தமது விருப்பின்படி வாக்களிக்கும் படி கோரும். 4. தேர்தல் 8ம் திகதி இடம்பெற்றால் அதற்கு முன்னர் காலநிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வெள்ள அவலம் பெருமளவு குறைந்திருக்கும்..
-
- 2 replies
- 604 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், தி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸூம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை இன்று திங்கட்கிழமை காலை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.pathivu.com/news/36435/57//d,article_full.aspx
-
- 2 replies
- 1.2k views
-
-
வடக்கின் உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாது – மகிந்த பிடிவாதம் DEC 29, 2014 | 15:10by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முகநூல் பயன்படுத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹன்வெல்லவில் இன்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “முகநூல் வழியாக செய்யப்படும் பொய்யான பரப்புரைகளை இளைஞர்கள் நம்பிவிடக் கூடாது. ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கோரினால், அதனால் நல்லதா கெட்டதா என்று கேள்வி எழுப்ப வேண்டும். லிபிய அதிபர் கடாபிக்கு நேர்ந்த கதியே எனக்கும் நேரும் என்று சிலர் கூறுகிறார்கள். பொதுமக்களின் ஆதரவு இருக்கும் வரை எவராலும் என்னைத் தோற்கடிக்க…
-
- 0 replies
- 365 views
-
-
அரசாங்கமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் அசராங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு மக்கள் தேர்தலை புறக்கணிக்கச் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் சிரில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்த போது இந்த திட்டம் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்ளி…
-
- 1 reply
- 257 views
-
-
'வியாபாரத்தை எவ்வாறு நேசித்து அணுகுகின்றோம் என்பதிலேயே அதன் வெற்றி தோல்வி தங்கியுள்ளது" வியாபாரம் என்றால் அது ஒரு தொழில் ரீதியிலான உறவுமுறை. அதை எப்படி நாம் நேசிக்கின்றோம், அணுகுகின்றோம் என்பதிலேயே அதன் வெற்றி, தோல்வி தங்கியுள்ளது. இலங்கையின் அந்நியச்செலாவணி வருமான ஈட்டலில் எனது நிறுவனத்தின் சிறு பங்களிப்பும் உள்ளது என்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என சிறந்த தொழில் முயற்சியாளருக்கான தேசிய விருதினை பெற்றுக்கொண்ட இளம் வர்த்தகர் சு. வெங்கட சரண்ய ஐயர் தெரிவித்தார். 2012– 2013 ஆம் ஆண்டுக்கான ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளருக்கான விருது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சு. வெங்கட சரண்ய ஐயருக்கு அண்மையில் கிடைத்…
-
- 10 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, ஞாயிற்றுக்கிழமை (28) தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்தது. இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து, காங்கேசன்துறைவரை புகையிரதத்தில் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார். எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் யாழ்தேவி புகையிரத சேவை காங்கேசன்துறைவரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/…
-
- 4 replies
- 651 views
-
-
நல்லாட்சியை ஏற்படுத்து வதற்காக எங்களோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன் என பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா இன்று திங்கட்கிழமை காத்தான்குடியில் வைத்து தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதான வீதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தொடர்ந்துரையாற்றிய பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா, இன மத பேதங்களுக்கு அப்பால் சிங்கள பௌத்த, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர், பறங்கியர் என அனைவரும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். இன்று இந்த பயணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், உட்பட முஸ்லிம் மக்க…
-
- 1 reply
- 442 views
-
-
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கும், இலங்கை அரசுக்கும் தொடர்பு இல்லை எனவும், என்னால் தமிழர்களுக்கு எதிராக செயல்படவே முடியாது என்றும் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது, அவர் மேற்கொண்டிருக்கும் அயலுறவுக் கொள்கைக்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன். நமது இரு நாட்டு உறவுகள் வலுப்பெறும் வண்ணம், அயலுறவுக் கொள்கையை அவர் விரிவுபடுத்தியுள்ளார். இதுவே மீனவர்களை விடுதலை செய்வதற்கான முடிவெடுக்க காரணமாக இருந்தது. மீனவர் பிரச்சினையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டிய பிரச்சினையாகவே நான் பார்க்கிறேன். மீன் வளத்துறையின் அமைச்சராக நான் இருந்த காலத்தி…
-
- 1 reply
- 1.5k views
-
-
பல பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ள போதிலும் அதனை மறுத்துள்ள தேர்தல் ஆணையாளர் மழைவெள்ளத்திற்காக தேர்தலை பிற்போடப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றார். நாட்டின் அனர்த்தமுகாமைத்துவ பிரிவு 21 மாவட்டங்களை சேர்ந்த 11060386 பேர் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. ஊவா, வடமத்தி மற்றும் மத்திய கிழக்கு மாகாணங்களே அதிகளவில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.30 பேர்வரை பலியாகியுள்ளதுடன் 6 பேர்காணமற்போயுள்ளனர். இந்த சூழ்நிலையில் தேர்தலை பிற்போடுமாறு பல தரப்புகள் வேண்டுகொள் விடுத்துள்ளன. எனினும் அவ்வாறான ஒரு முடிவை எடுப்பதற்கு பரிசுத்த பாப்பரசரின் விஜயம் உட்பட பல விடயங்கள் தடையாக இருப்பதாக தேர்தல்திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் க…
-
- 0 replies
- 412 views
-