Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரான்சில் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் துணை அமர்வு, சிறிலங்கா அரசுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ யோர்க்கில் மைய அமர்வினை மேற்கொண்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், மையத்தோடு இணைந்ததாக துணை அமர்வினை சமாந்திரதாக பிரான்சில் மேற்கொண்டிருந்தது. பாரிசின் புறநகர் பகுதியான LE BLANC MESNIL நகரசபையில் துணை அமர்வு இடம்பெற்றிருந்ததோடு ,நகரபிதா மற்றும் நகரசபை உறுப்பினர்கள் என அரச உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக பிரான்சின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மரி ஜோர்ச் புவே அவர்களும் நேரடியாக கலந்து கொண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தனது தோழமையினைத் வெளிப்படுத்தியிருந்தார். இந்ந…

  2. தேர்தல் சட்டங்களை மீறும் அரச அதிகாரிகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்கு 'பிளாக் புக்' ஐ (கறுப்பு புத்தகம்) அறிமுகம் செய்த பொது எதிரணி, இந்தப் புத்தக்கத்தில் சேமிக்கப்படும் தகவல்களை வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு வாராந்தம் அனுப்பவும் தீர்மானித்துள்ளது. அத்துடன், அரச அதிகாரிகள் தேர்தல் சட்டங்களை மீறும் நடவடிக்கைகள் தொடர்பில் தகவல் வழங்குவதற்கு 0770 700 371 என்ற 24 மணித்தியாலமும் சேவையிலிருக்கும் துரித அழைப்பு இலக்கத்தையும், booklanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் பொது எதிரணி அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மங்கள சமரவீர எம்.பி. கருத்து வெளியிடுகையில், "யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கடந்த 5 வருட காலப் பகுதியில் யுத்தத்தை விற்றுத்தான் அரசு …

  3. வடமாகாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்தபோது யாழ்.குடாநாட்டில் அவர் சென்றிருந்த தேசிய பாடசாலைகளை அழகுபடுத்துவதற்கு வடமாகாணசபையின் கல்வியமைச்சிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மாகாணத்திலுள்ள மற்றய மாவட்டங்களின் பாடசாலைகளுக்கும் அவ்வாறே நிதி ஒதுக்கப்பட்டதா? என மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன் மாகாண கல்வியமைச்சர் த.குருகுல ராஜாவிடம் மாகாணசபையின் 20வது அமர்வின் தொடர் அமர்வில் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மொத்தமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளுக்கு 8.87மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாக கல்வியமைச்சர் பதிலளித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும் பேசப்படுகையில், கடந்த முறை ஜனாதிபதி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு வந்திருந்த நிலையில் இரு மா…

  4. மிருசுவில் பகுதியில் 52 ஆவது படையணியின் தலைமையகம் அமைந்துள்ள, தனியாருக்கு சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை சுவீகரிப்பதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை ஆட்சேபித்தும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, 52 ஆவது டிவிஷனின் கட்டளைத் தளபதி அனுர சுபசிங்க, காணி அமைச்சர், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆகியோரை எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடவும் நீதிமன்றம் பணித்தது. மேற்படி, 52ஆவது டிவிஷன் அமைக்கப்ப…

  5. முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளினால் தமது தொழிலை மேற்கொள்வதற்கு வசதியாக உரிய நடவடிக்கை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என அம்மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் பெரும் எண்ணிக்கையில் வருகை தருகின்ற இந்திய மீனவப் படகுகளினால், ஜனவரி மாத பருவகால இறால் மீன்பிடித் தொழில் கடந்த 3 வருடங்களாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரிடம் முறையிட்டுள்ள போதிலும் பிரச்சினைக்கு முடிவு ஏற்படாத காரணத்தினால், அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நேரடியாகச் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியதாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் கூறுகிறார்கள். அது தொடர்பில்…

  6. இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்கினால் மாத்திரமே புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித நிபந்தனைகளும் இல்லாது குளத்தினைப் புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க முன்வந்துள்ளது என வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், உணவு வழங்கல், சுற்றாடல், மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய் பரவியுள்ளமை தொடர்பான வாராந்தக் கூட்டம் அமைச்சரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இரணைமடுக்குளத்தை நம்பி விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள், …

  7. “முன்னாள் ஜனாதிபதிக்கு இப்படி கூறினால் சாதாரண பெண்களின் நிலை எப்படி” றோசி:- “சந்திரிக்கா என்பவர், கீழே தள்ளி மிதித்து நிர்வாணப்படுத்தி, வீதியில் ஓட வைக்க வேண்டியவர்” – மகிந்தவின் உயர் கல்லி அமைச்சர்- “முன்னாள் ஜனாதிபதிக்கு இப்படி கூறினால் சாதாரண பெண்களின் நிலை எப்படி” உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்தானது நாட்டு பெண்களுக்கு செய்த பாரிய குற்றம் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்தாது குற்றவியல் சட்டத்தின் கீழ் வரும் இழிவுப்படுத்தும் குற்றம் எனவும் அவர் கூறியுள்ளார். சந்திரிக்கா பண்டாரநாயக்க என்பவர் கீழே தள்ளி மிதித்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஓடவைக்க வேண்டியவர் என எஸ்.பி. …

  8. மகிந்த வாக்காளர்களை அரச பஸ்களில் கொண்டு செல்லும் காட்சி https://www.facebook.com/video/video.php?v=10152831857626259

    • 0 replies
    • 619 views
  9. எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதி முடிவொன்றினை எடுக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவசரமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்ப உள்ளாதாக தெரிய வருகிறது. நேற்று முன்தினம் கூட்டமைப்பின் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் கூட்டமொன்று அவசரமாக யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அனைத்துத் தரப்பினர்களதும் கருத்துக்கள் கோரப்பட்டதாகவும் எனினும் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான இறுதி முடிவுகள் ஏதும் நேற்றைய கூட்டத்தில் எய்தப்பட்டிருக்கவில்லை என்றும் இது தொடர்பில் பரவி வரு…

  10. தேர்தலைக் கண்காணிக்க இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் சிலர் சிறீலங்கா விரைவு!! தேர்தல் நிலைமைகளை அவதானிப்பதற்காக இந்தியாவின் புலனாய்வு பிரிவினர் சிலர் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய புலனாய்வு பிரிவின் தகவல் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த புலனாய்வாளர்கள் புடவை வர்த்தகர்கள், சுற்றுலா பயணிகள் போன்ற வேடங்களில் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் கள நிலவரங்களை உடனுக்குடன் இந்தியாவுக்கு அறியப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்கட்சிகளின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இவ்வாறான புலனாய்பு பிரிவினரை இந்தியா அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்…

  11. நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் விடயத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சருக்கு அதிகாரங்கள் இல்லையெனக்கூறி மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகள் அம்பலத்திற்கு வந்துள்ளது. நெல்சிப் திட்டத்தில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில், அதற்கு பொறுப்பான பொறியியலாளர் செய்த 100 மில்லியன் ரூபாய் ஊழல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரனால் வடமாகாணசபையினில் அண்மையினில் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இந்த பிரேரணை தொடர்பில் முதலமைச்சர் கருத்துக்கூறுகையில், இந்த ஊழல் நடவடிக்கையை விசாரிக்க மத்திய அரசாங்கத்தின் விசாரணைக்குழுவொன்று கடந்த 3 நாட்களாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. விசாரணை அறிக்கைகள் கிடைக்கப்ப…

  12. ஜனாதிபதி, திருப்பதிக்குச் சென்று திரும்பும் போது, அந்த தெய்வத்தை வணங்கும் பக்தர்கள் இருவர் எங்கள் வசம் வந்துவிட்டனர் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பன்னல பிரதேசத்தில் நேற்று (11) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போதுள்ள அரசாங்கம், இந்த நாட்டு மக்கள் எதிர்ப்பார்க்கும் அரசாங்கம் அல்ல. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜோதிடர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர்' என்றார். http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/135816-2014-12-12-07-45-38.html

  13. கண்டி வீதியருகே மிருசுவில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 52 ஏக்கர் தென்னங்காணியை பலவந்தமாகக் கையகப்படுத்திய பின்னர், அதில் 52 ஆவது படையணியின் தலைமையகத்தை தம்பாட்டில் கட்டி அமைத்துவிட்டு, பின்னர் தற்போது அந்தக் காணியை வலோற்காரமாக படைத்தரப்புக்கு எனச் சுவீகரிப்பதற்கு அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையை ஆட்சேபித்தும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. மனுவில் எதிர் மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, 52 ஆவது டிவிஷனின் கட்டளைத் தளபதி அனுர சுபசிங்க, காணி அமைச்சர், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆகியோரை எதிர்வரும…

  14. குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு கட்சி தாவுவோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளார். எதிர்வரும் வாரம் வரையில் எதிர்க்கட்சியிலிருந்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள அவகாசம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கண்டியில் வைத்து ஜனாதிபதி, முக்கிய அமைச்சர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.ஒரு வார காலத்தின் பின்னர் எந்தவொரு உறுப்பினரும் ஆளும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவரும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவித்துள்ளார்.கட்சி தாவுவது தொடர்பில் எந்த நேரத்திலும் கவலைப்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் வாரத்தி…

  15. இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கின் புனர்நிர்மாண பணிகளுக்கு 145 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக துணைத்தூதரகத்தின் பிரதித்தூதுவர் தட்சணாமூர்த்தி தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ்.துரையப்பா மைதானத்தில் ஆரம்பமாகிய புனரமைப்பு பணிகளை நேரில்சென்று பார்வையிட்டதுடன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்திக்குறிப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் கடந்த மாதம் 6 திகதி அன்று புனர்நிர்மான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. குறித்த புனரமைப்பு பணியில் இரண்டு பார்வையாளர் அரங்குகளும், உள்ளங்குகின்றன. அத்துடன் மைதானத்தில் புதிதாக 400 மீட்டர் நீளம் உடைய தடகள பாதையும் சர்வதேச தரத்தில் உருவாக…

  16. சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அரச பயங்கரவாதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். லுனுகம்விஹர என்னும் இடத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் பாரிய திட்டங்களின் மூலம் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இதனால் உண்மையான விபரங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு புலனாய்வு செய்திகளை அம்பலப்படுத்திய லசந்த விக்ரமதுங்க இதன் ஓர் கட்டமாகவே மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என அவர் தெரிவித்துள்ளார். இந்த படுகொலைக்கு அரச பயங்கரவாதமே காரணம் என அவர் குறிப்பி…

  17. எச்­சந்­தர்ப்­பத்­திலும் கட்­சியின் தலை­மைத்­துவம் எடுக்கும் முடி­வு­க­ளுக்குக் கட்­டுப்­பட்டு நடப்போம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் உல­மாக்கள் முன்­னி­லையில் நேற்று உறுதி மொழி வழங்­கி­யுள்­ளனர். கட்­சியின் தலை­மை­ய­க­மான தாருஸ்ஸலாமில் உல­மாக்கள் முன்­னி­லையில் இடம்­பெற்ற இந்நிகழ்வில் கட்­சியின் தேசியத் தலை­வரும் நீதி­ய­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீ­மிடம் எச்­சந்­தர்ப்­பத்­திலும் தலை­மைத்­து­வத்­திற்குக் கட்­டுப்­பட்டு நடப்போம் என 'பைஅத்' எனும் உறு­தி­மொ­ழியை கட்­சியின் உறுப்­பி­னர்கள் வழங்­கினர். ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பான தனது உத்­தி­யோ­க­பூர்வ தீர்­மா­னத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இன்ன…

  18. கொழும்பில் தளங்களை அமைத்துள்ள சீனா கடத்தல்காரர்கள். கேரளாவில் மீண்டும் செயற்படத் தொடங்கியிருக்கும் நக்சலைட்களுக்கு ஆயுதங்களை வழங்கிவருவதாக இந்திய இணையமொன்று குறிப்பிட்டுள்ளது. அது மேலும் தெரிவித்துள்ளதாவது. நக்சைலைட்கள் மீண்டும் கேரளாவில் தலைதூக்கியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர், வைனாட்டின் வெலமுண்டா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சமரின் பின்னரே இது தெரியவந்தது. சிலகாலமாக அமைதியாக காணப்பட்ட கேரளா நக்சலைட்கள் தாங்கள் மீண்டும் வந்துள்ளதை அறிவிப்பதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் கேரளா இவர்களது நடவடிக்கைகளை வெற்றியகரமாக எதிர்ககொண்டிருந்தது, எனினும் தற்போது அவர்கள் திரும்பி வந்துள்ளதுடன்,கேரளாவின் வடபகுதியில் உள்ள வனங்களில் செயற்பட்டு…

  19. ஐனாதிபதி தேர்தலின் பின் அமையும் அரசு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை நிச்சயமாக வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களை நேற்று கொழும்பில் எதிரணியின் ஊடக இல்லத்தில் சந்தித்த அவர் கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையில்; தற்போதைய அரசு போன்று, பாராளுமன்றத் தெரிவுக்குழு போன்று காலத்தை இழுத்தடிக்காது, குறித்த கால எல்லைக்குள் தீர்வினை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; பெரும்பாலும் மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வாக அது இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே மாகாண சபை முறைமை கொண்டுவரப்பட்டது. அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மகிந்த அரசாங்கம் பறி…

  20. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தற்போது தேர்ந்தெடுத்துள்ள ஆடை இலங்கையருக்கு பொருத்தமான ஆடையல்ல என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன, கண்டி கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அணியும் ஆடையை ஒத்த ஆடையை அணிந்திருந்தமை தொடர்பிலேயே இந்த விமர்சனத்தை அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜெயவர்த்தன, பிரேமதாஸ, சந்திரிக்கா மற்றும் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் தமது அடையாளங்களை விட்டுக்கொடுக்கவில்லை. விசேட நிகழ்வுகளுக்காக ஆடைகளை மாற்ற முடியும். எனினும் உலக தலைவர்கள் தமது ஆடைகளை உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் போது மாற்றுவது இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID…

  21. எதிரணிக்கு மாறிய ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மேல் மாகாண சபை உறுப்­பி­னரும் மறைந்த முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான பாரத லக் ஷ்மன் பிரே­மச்­சந்­திரவின் புதல்­வி­யு­மான ஹிரு­ணிகா பிரே­மச்­சந்­திரவின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களால், கழிவு எண்ணெய் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு கட் அவுட்டுகளும் கிழிக்கப்பட்டுள்ளன. வெள்ளை வேன் மற்றும் டிப்பன்டர் வாகனங்களில் வந்த நபர்களே இன்று அதிகாலை மேற்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனக்கு பாரிய அநீதி இழைக்­கப்­பட்­டுள்ளது. இதனால் சுதந்­திரக் கட்­சியில் இருந்­து­கொண்டே பொதுவேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …

  22. யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 5 ரயில் நிலையங்கள் இன்று புதன்கிழமை தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளன. இதன்படி உப ரயில் நிலைய அதிபர்களாக நியமனம் செய்யப்பட்ட 5 உப நிலைய அதிபர்களிடம் நேற்று பதில் ரயில் நிலைய அதிபர் (பயணப் பிரிவு) மொகமட் இஸ்மாயில் ஹாரூம் பொறுப்புக்களைக் கையளித்தார். கடந்த எட்டாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் உபநிலைய அதிபர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பிரகாரம் தச்சன்தேர்பபு உப ரயில் நிலையம், சங்கத்தானை உப ரயில் நிலையம், மீசாலை உப ரயில் நிலையம், மிருசுவில் உப ரயில் நிலையம், எழுதுமட்டுவாழ் உப ரயில் நிலையம் ஆகிய நிலையங்களுக்கே உப நிலைய அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி இந்த உபநிலையங்கள் இன்று தொடங்கம் இயங்க ஆரம்பித…

  23. 'மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப, கொடுர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க இன,மத,மொழி வேறுபாடின்றி மக்கள் அணிதிரண்டுள்ளனர்' என எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைதிரிபால சிறிசேனவின் சகோதரரும் தொழிலதிபருமான டட்லி சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி பொது வேட்பாளர் மைதிரிபால சிறிசேனவை ஆதரித்து சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் வியாழக்கிழமை(12) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2005 ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை மக்களால் மதிக்கப்பட்ட ஒரு தலைவனாக, வீரனாக மக்களின் மனங்களில் நிறைந்திருந்தார். அதன் பின்னர் அவருடைய குடும்பத்தின் ஆதிக்கம் மேலோங்கியதால் ஆணவமிக்கவராக மக்களையும்…

  24. பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பீடமேறினால், தமிழீழம் மலரும் சாத்தியக்கூறுகளே உள்ளன. அதனால் அரசைப் பாதுகாப்பவே மீண்டும் அதில் இணைகின்றேன் எனத் தான் கட்சி தாவியமைக்கு காரணம் கற்பித்தார் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதிப் பொதுச் செயலாளரும் மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில. "எமது கொள்கைகளை மறந்து பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஹெல உறுமய கைக்கோர்த்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதில் ஹெல உறுமயவுக்கு உடன்பாடில்லை. கட்சிக் கொள்கையை விட தாய் நாட்டின் ஸ்திரத்தன்மை முக்கியம் என்பதற்காக ஆளும் தரப்புடன் இணைந்து கொண்டேன்" என்றும் அவர் தெரிவித்தார். அண்மையில் அரசிலிருந்து எதிர்க்கட்சியில் இணைந்த உதய கம்மன்ப…

  25. இந்தியாவின் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அங்கு நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு நேற்றைய தினம் நாடு திரும்பினார். திருப்பதி கோயிலில் வைத்து, கர்நாடகா அரசால் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளிக்கப்பட்டது. http://onlineuthayan.com/News_More.php?id=424323718311638881

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.