ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலும் – அமைச்சரவைப் பொறுப்புக்களில் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பேசப்படுகின்ற நிலையிலும் வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது. இன்றைய அமர்வின் போது, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதிஒதுக்கீடுகளில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்வதற்கான, குறைநிரப்பு பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் சமர்ப்பிப்பார் என்று, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அதேவேளை, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை தயாரிக்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும், அடுத்தவாரம் அது சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்ற…
-
- 0 replies
- 426 views
-
-
இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்:- போரால் இழக்கப்பட்ட அங்கங்கள் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன்:- டிசம்பர் 3 ஆம் திகதி உலகலாவிய மட்டத்தில் மாற்றுதிறனாளிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற வேளையில் போரினால் தமது அவயங்களை இழந்த ஈழ மாற்றுத் திறனாளிகளின் இன்றைய நிலை குறித்து பேசுதல் அவசியமானது. யுத்தம் ஈழத் தமிழர்களை சகல விதத்திலும் பாதித்துள்ளது. இந்தப்போரில் பல்லாயிரக் கணக்காணவர்கள் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்கு முந்தைய கால யுத்தங்களினாலும் தமது அவயங்களை இழந்தவர்கள் பலர். முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல்லாயிரம் பேர் தங்கள் அவயங்களை இழந்துள்ளனர். ஈழத்தின் பல பாகங்களிலும் இன்று கண்கள் அற்றவர்களை, கால்கள் ஆற்றவர்களை, கைகள் அற்…
-
- 0 replies
- 348 views
-
-
மஹிந்தவுக்கு கட்-அவுட் வைப்பதை எதிர்த்தவரின் வீட்டில் தாக்குதல்ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார கட்-அவுட் ஒன்றை வைக்க அவரது ஆதரவாளர்கள் எடுத்த முயற்சிக்கு எதிர்ப்பை தெரிவித்த ஒருவரது வீடு தாக்குதலுக்குள்ளானது. திவுலப்பிட்டிய , ,குடகம்மன பிரதேசத்தைச் சேர்ந்த துசித வீரசிங்க என்பவரின் வீட்டின் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக இரண்டு நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த 29 ம் திகதி தனது விட்டின் முன் பகுதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார உருவப் படமொன்றை வைக்க முயன்ற நபர்களுக்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாக துசித வீரசிங்க தெரிவித்தார். இன்று அதிகாலை 2.00 மணியளவில் தனது வீட்டு…
-
- 1 reply
- 352 views
-
-
சிறிலங்கா அதிபர் தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 10 வேட்பாளர்கள் சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில் 9 பேர் அரசியல் கட்சிகளின் சார்பிலும், ஒருவர் சுயேட்சையாகவும் போட்டியிடவுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, ஒக்கம வெசியோ, ஒக்கம ரஜவரு கட்சி சார்பில் தாமினிமுல்ல, சமாஜவாடி சமந்த கட்சி சார்பில் பானி விஜேவர்த்தன, ஐக்கிய சோசலிசக் கட்சி சார்பில் சிறிதுங…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், ஜனநாயகத்தையும், நல்லாட்சியையும் மீண்டும் கட்டியெழுப்பவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்ததுடன் இந்த இலக்குகளை அடைவதற்காக நாட்டிலுள்ள மற்றைய முற்போக்கு சக்திகளுடன் இணைந்து செயற்படுவதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகவே பிரயைகளின் சக்தி என்ற பொது அமைப்பு இந்த விடையங்கள் சம்பந்தமாக ஒழுங்கு செய்த கூட்டத்தில் நான் பேசுவதற்கு இணங்கியிருந்தேன். ஆனால் இக்கூட்டத்தில் நான் பங்குபற்றுவது திரு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கும் செயலாகக் சித்தரிப்பதற்கு முயற்சிகள் இடம் பெறுகின்றன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக …
-
- 2 replies
- 511 views
-
-
விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தீர்ப்பு செயல்முறையை அடிப்படையாக கொண்டது என்றும், விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டமை, அவர்களது நிதியை முடக்கியமை, குறித்து நீதிமன்றம் எந்தவித மதிப்பீடுகளையும் முன்வைக்கவில்லை எனவும் கொழும்பு அவலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒக்ரோபர் மாதம் 16 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம், விடுதலைப் புலிகள் மீதான தடையை இரத்துச் செய்து தீர்ப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. தடைக்கு எதிராக வழக்கு தொட…
-
- 9 replies
- 876 views
-
-
இப்படியே போனால் நாங்கள் வீதியில் இறங்கமுடியாத நிலைவரும், நாங்கள் வெளிநாட்டிற்கும் செல்ல முடியாது, கடலில்தான் குதிக்க வேண்டும் குளோபல்தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு மைத்திரி எனது நண்பர், எங்களின் தவறுகாரணமாகவே நாங்கள் அவரை இழந்தோம்; என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். மாத்தறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகலரட்ணாயக்கவின் சகோதரர் கவின் ரட்ணயாக்காவின் கொழும்பு 7 இல்லத்திற்கு சென்று தனது மனக்குமுறலை அவர் வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி எவருடைய ஆலோசனையையும் ஏற்க மறுக்கிறார், நானும் அண்ணன் சமலும் சில நாட்களுக்கு முன்னர் அவரது வீட்டிற்கு சென்று அனைத்தையும் தெளிவுபடுத்தினோம், அவ்வேளை அவர் அதற்கு இணங்கினார், ஆனால் பின்னர் வேறு மாதிரி ச…
-
- 9 replies
- 790 views
-
-
யாழில் பெய்துவரும் கடும் மழையால் தாழ்நிலம் மற்றும் அதனை அண்டிய கரையோரப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இடம்பெயர்ந்த மக்கள் வாழுகின்ற சில முகாம்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்து அந்த மக்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் அவ்வப் பகுதிகளில் உள்ள பொது நோக்கு மண்டபங்கள் பாடசாலைகள் என்பனவற்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சேந்தாங்குளம் பகுதியில் உள்ள 18 குடும்பங்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சேந்தாங்களம் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதனை அண்மித்துள்ள வலித்தூண்டல் பகுதி மக்களும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். தெல்லிப்பளை பிரதேச செயலகர் பிரிவின் கீழ் உள்ள ஜே 219 அளவெ…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ்.கொக்குவில் பொற்பதி வீதியில் மாவீரர் தினத்தன்று விளக்கேற்றிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்துள்ள படையினர் அவர்களுடன் சேர்ந்து விளக்கேற்றிய ஏனைய 8 பேருடன் ஒரு வாரத்திற்குள் தம்மிடம் சரணடைய வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தவிர்ந்த ஏனைய 8 இளைஞர்கள் தலைமறைவாகியிருக்கின்றனர். யாழ்.குடாநாட்டில் பலத்த கெடுபிடிகளுக்கு மத்தியில் யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள பொற்பதி வீதியின் முடிவில் உள்ள கிராமத்தில் கூடிய இளைஞர்கள் சிலர் மாவீரர் தினத்தன்று தீபங்களை ஏற்ற முற்பட்டதை ரோந்துவந்த படையினர் கண்டுள்ளனர். அவர்கள் உள்ளே வருவதற்கு முன்னதாகவே இளைஞர்கள் தீபத்தை அணைத்து விட்டு விளக்கை மறைத்து விட்டனர். இதனையடுத்து படைய…
-
- 0 replies
- 369 views
-
-
இரணைமடு குளத்தின் வான் கதவு காப்பகத்துக்கு அருகில் படையினரால் நிறுவப்பட்ட புத்தர் சிலை இப்போது விகாரையாக மாறி வருகிறது. இப்போது அங்கு சிறிய விகாரை ஒன்று அமைக்கப்பட்டு சுற்றிவர அழகுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குளத்து வான்கதவுகளுக்கு செல்லும் பாதையும் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் சிறியதாக அமைக்கப்பட்ட இந்த புத்த சிலை படிப்படியாக புனரமைக்கப்பட்டு, விஸ்தரிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இரணைமடு பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாக இந்த புத்த விகாரை அமைக்கப்பட்டு அது விரிவாக்கப்படுவது குறித்து மக்கள் விசனமடைந்துள்ளனர். http://seithy.com/breifNews.php?newsID=121971&category=Tami…
-
- 0 replies
- 414 views
-
-
புலி இல்லாமல் அரசாங்கத்தால் ஆட்சி நடத்த முடியவில்லை என வட மாகாணசபை உறுப்பினர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாட்டுக்குத் தேவையான அரசியல் சட்டங்களையும் பொருளாதார கொள்கைகளையும் உருவாக்கி ஆட்சி செய்யும் வல்லமை இந்த அரசாங்கத்திடம் இல்லை. சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிரான இனவிரோதத்ததைத் தூண்டி அவர்களை சரியான பாதையில் சிந்திப்பதை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்துவருகின்றது. ஆனாலும் சிங்கள மக்கள் விழித்து விட்டார்கள். இனியும் புலிகளை சாக்குவைத்த அவர்களை ஏமாற்ற முடியாது. மாகாணசபைக்கு என சட்டக்குழு ஒன்று இருக்கவேண்டும். அது வட மாகாணசபைக்கு இல்லை. அந்தக் குழு அமைச்சர்கள் கோருகின்ற சட்டங்களை வரைபு செய்யவேண்டும். மேலும் மாகாணம் தொடர்பில் வருகின்…
-
- 0 replies
- 267 views
-
-
புதன், டிசம்பர் 3, 2014 - 08:12 மணி தமிழீழம் | சயந்தன் சிறிலங்கா கொடியுடன் இந்தியப் பெருங்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட சீன மீன்பிடிக் கப்பல்கள் கண்காணிப்பதற்கு நடவடிக்கை! சிறிலங்கா கொடியுடன் இந்தியப் பெருங்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட சீன மீன்பிடிக் கப்பல்கள் வேறேதும் பணிகளில் ஈடுபட்டுள்ளனவா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்கா கொடியுடன் மீன்பிடியில் ஈடுபடும் சீனக் கப்பல்கள் தமது வருமானத்தில் 10 வீதத்தை சிறிலங்கா அரசுக்குச் செலுத்தும் என்றும், பிடிக்கப்படும் மீன்கள் சிறிலங்கா கரைக்குக் கொண்டு வந்தே விற்பனை செய்யப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது. இதன் மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முட…
-
- 2 replies
- 355 views
-
-
வடக்கு மக்கள் கைதிகளைப் போன்று வாழ்ந்து வருவதாக ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் தங்களது கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில் வாழ்வதற்கான உரிமையை இழந்துள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு மக்கள் இராணுவத்தின் கைதிகளாக காணப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மக்களினால் விடுக்கப்பட்டு வரும் நியாயமான எந்தவொரு கோரிக்கையையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களை புலிகளாகவும், தமிழ் புலம்பெயர் மக்களை சூழ்ச்சிகாரர்களாகவும் அரசாங்கம் நோக்குவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கு வாழ் மக்களை புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாகவும் அவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பி…
-
- 0 replies
- 381 views
-
-
ஊழல் மோசடிகள் தொடர்பில் பேசக் கூடாது என தமக்கு தற்போதைய அரசாங்கத்தின் உயர் பீடம் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது என எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் தொடர்பில் அம்பலப்படுத்த வேண்டாம் என கோரப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். வீதி அபிவிருத்தி தொடர்பில் இடம்பெற்று வரும் பாரியளவிலான மோசடிகள் குறித்து தாம் எதிர்ப்பை வெளியி;ட்டதாகவும் இது குறித்து பேசக் கூடாது என தம்மை உயர் பீடம் எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பணியை செய்யக் கூடாது என தமக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். பாரத லக்;ஸ்மன் பிரேமசந்திர கொலை சம்பந்தமான பிரச்சினைகளில் தலையீடு செய்ய வேண்டாம் என ஐக்கிய மக்கள் சு…
-
- 1 reply
- 382 views
-
-
வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடியாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் பழிவாங்குவேன் என்று தெரிவித்துள்ளார் ராமன்ய பீடத்தின் அனுநாயக்க தேரர் கிராம்பே ஆனந்த தேரர். பொலனறுவையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தோற்கடிக்கும் வரையில் நாம் போராட்டத்தை கைவிடோம். இந்த ஜென்மத்தில் தோற்கடிக்க முடியாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் பேயாக வந்தேனும் பழி வாங்குவேன். இது ஆச்சரியமான ஓர் விடயம்.அண்ணன்மார், தம்பிமார், மகன்மார், மருமகன்மார் மற்றும் வயிற்றில் இருப்பவர்களுக்கும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற அரசாங்கமொன்று இதுவரை இருந்ததில்லை. மைத்திரி…
-
- 1 reply
- 440 views
-
-
யுத்த காலத்தில் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை கோத்தாபயவுடன் அமெரிக்கா பரிமாறிக்கொண்டது -02 டிசம்பர் 2014 அமெரிக்கா தமிழீழு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படவில்லை என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவுடன், அமெரிக்கா பரிமாறிக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் தலைவர் சர்வதேச சதித் …
-
- 3 replies
- 783 views
-
-
நான் இந்த நாட்டின் தலைவரான பிறகு, மிகவும் பொறுப்புடன் கடமைகளை முன்னெடுப்பேன். அலரி மாளிகையின் சமையலறையில் உள்ள இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாப்பேன். பாதுகாப்பு தரப்பிலுள்ள அனைவரதும் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க ஜாதிக ஹெல உறுமய கட்சி தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு, கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அலரி மாளிகையி…
-
- 1 reply
- 617 views
-
-
-பொ.சோபிகா அச்சுவேலியில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டையில் பூங்கனியியல் தாய் தாவர பண்ணை அமைப்பதற்குரிய ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக வடமாகாண பிரதி விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபாலசுந்தரம் செவ்வாய்க்கிழமை (02) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் 12 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பண்ணை அமைக்கப்பட்டு வருகின்றது. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து முதலாம் கட்டமாக 7 மில்லியன் ரூபாய் செலவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு தெரிவு செய்யப்பட்ட தாய் தாவரங்களை (பழமரக்கன்றுகள்) பேணிக்காத்தல், புதிய உற்பத்திகளை அறிமுகப்படுத்துதல், கன்றுகளை விநியோகித்தல், அத்துடன் ஒட்டுமுறை பண்ணையாளர்களுக்கு மூலப்பொருட்களை …
-
- 0 replies
- 575 views
-
-
ஐக்கிய தேசிய கட்சியுடன் அமைச்சர் விமல்வீரவன்ச இரகசிய பேச்சுவார்த்தை அமைச்சரவைப் பாதுகாப்பு வாபஸ்:- ஐக்கிய தேசிய கட்சியுடன் அமைச்சர் விமல்வீரவன்ச இரகசிய பேச்சுவார்த்தை அமைச்சரவைப் பாதுகாப்பு விலக்கப்பட்டது ஐக்கிய தேசிய கட்சியுடன் அமைச்சர் விமல்வீரவன்ச இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை தெரியவந்ததை தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவைப் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. தனது முந்தைய ஜேவிபி சகா நந்தனகுணதிலக ஊடாக அமைச்சர் விமல்வீரவன்ச ஐக்கியதேசிய கட்சியுடன் இரகசியபேச்சுக்களை மேற்கொண்டுள்ளார். இது அரசாங்கத்தின் மிகஉயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்ததை தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவினரின் பாதுகாப்பு வி…
-
- 0 replies
- 626 views
-
-
பாவம் மனுசன் இத எதுக்கு சொல்லுது எண்டு தெரியேல்ல. திரும்ப திரும்ப பயங்கரவாதியள அழிச்சம், இரண்டாய் கிடந்த நாட்ட ஒண்டாக்கினம், தொடர்ந்தும் நாட்ட இப்பிடியே வைச்சிருக்கவேணும் எண்டுதான் போற போற இமெல்லாம் மகிந்த கதைச்சுக் கொண்டு இருக்கிறார். அத சொல்லித்தான் போன முறையும் வாக்கு கேட்டவர். போனமுறை மகிந்த தோத்தவர் எண்டும் தான்தான் ஜனாதிபதி எண்டும் சரத்பொன்சேகா சொன்னவர். அப்ப உந்தக் கதையள கேட்டு சிங்கள மக்கள் மகிந்தவுக்கு வாக்களிக்கேல்ல எண்டு பொன்சோகா சொல்லுறாரோ? தேர்தல் முடிய... அவரும் சிறைவாசம் போயிட்டார். ஆருக்குத் தெரியும்? யுத்தத்த சொல்லி சொல்லி வாக்கு கேட்டவர். இப்ப கொஞ்ச நாளாய் வேற விதமாய் உளறுறார். இண்டைக்கு ஒரு நிகழ்வில இப்பிடி சொல்லியிருக்கிறார். எகிப்திலும்,…
-
- 0 replies
- 450 views
-
-
நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை 24 மணிநேரத்தில் பிரதமராக்குவேன் என ஒருபோதும் கூறவில்லை என தெரிவித்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தினால் திரிவுபடுத்தி கூறப்படுவதே இந்த விடயமாகும் என்றார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாம் புதிய அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து எம்முடன் பலர் வந்து இணைந்துகொண்டிருக்கின்றனர். அந்தவகையில் நவீன் திஸாநாயக்க எம்முடன் இணைந்துகொண்டமையினால் நான் மகிழ்ச்சியடைகின்றேன். நவீன் திசாநாயக்கவின் தந்தையான காமினி திசாநாயக்கவை போன்றே திஸாநாயக்கவும் திறமையான ஒருவர். ஆன…
-
- 0 replies
- 339 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஆதரவு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனாவுக்கு ஆதரவு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய உடன்பாடு ஒன்றிலும் கையெழுத்திட்டுள்ளது. எதிரணியில் பௌத்த கடும்போக்கு அமைப்புகள் என்று கருதப்படும் கட்சிகளும், அமைப்புகளும் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பு நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெரியாத சூழலே உள்ளது. இந்நிலையில் நாட்டில் ஆட்சி மாற்றம் தேவை என்றும் அதை ஏற்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எ…
-
- 0 replies
- 560 views
-
-
எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விஞ்ஞாபனம் அடுத்த மாதம் 1ம் திகதி முன்வைக்கப்படவுள்ளது. எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த விஞ்ஞாபனம் அடுத்த மாதம் 1ம் திகதி முன்வைக்கப்படவுள்ளது. இது மூன்று பிரதான அம்சங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கட்சியுடன் இணைந்துள்ள முக்கிய நிபுணர் ஒர்வரே தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை என்று கூறுப்படுகிறது. இது மூன்ற…
-
- 101 replies
- 5.9k views
-
-
- ற.றஜீவன் வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேசசபைக்கான ஆயிரம் லீட்டர் கொள்ளளவுடைய 18 நீர் தாங்கிகள் வடமாகாணசபை உறுப்பினரான பா.கஜதீபனின் ஏற்பாட்டில் இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவியுடன் வெள்ளிக்கிழமை (28) கையளிக்கப்பட்டுள்ளன. இந்நீர்த்தாங்கிகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வலி.தெற்கு பிரதேசசபைத்தலைவர் தி.பிரகாஷ் மற்றும் சபையின் செயலாளரிடம் கையளித்தார். சுன்னாகத்தில் இயங்கிவரும் இலங்கை மின்சார சபையின் கழிவு எண்ணை நிலத்துக்குள் கசிந்து, நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமையால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கான நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை வலி.தெற்கு பிரதேசசபை மேற்கொண்டு வந்தது. இதனிடையே, அங்குள்ள பல கிணறுகள…
-
- 22 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடமிருந்து முஸ்லிம்களை தூரமாக்கி அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னாலிருந்து சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இவர்களது சதித்திட்டங்களுக்கு பலியாகாது முஸ்லிம்கள் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு முஸ்லிம்களுக்கு நூறு வீத பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பேருவளை சீனன்கோட்டையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம்களுடனான விசேட கலந்துரையாடலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இங்கு தொடர்ந்து…
-
- 1 reply
- 717 views
-