Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஐந்து மில்லியன் டொலர் தரை புகையிரத பாதைகள் குறித்து மீண்டும் ஆராய்கின்றோம் - இலங்கை அதிகாரி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஐந்துபில்லியன் டொலர் வீதி புகையிரதபாதை இணைப்பு திட்டம் குறித்து மீண்டும் ஆராயப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி இந்தியாவின் மின்டிற்கு தெரிவித்துள்ளார். இதற்கான செலவை இந்தியாவே பொறுப்பேற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பொறுப்பேற்றுள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது பெரும் இரு தரப்பு திட்டம…

  2. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தமது இராஜினாமா கடிங்களை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அறிவித்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு…

  3. முன்னைய அரசாங்கம் உகாண்டாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பொதுமக்களின் பணத்தை முதலீடு செய்துள்ளது – அவற்றை மீட்பதற்கான சட்டங்கள் இயற்றப்படும் - தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் முன்னைய அரசாங்கம் உகாண்டாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் முதலீடு செய்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.கறுப்பு பணம் சட்டவிரோதபணபரிமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் உள்ளன. எங்களுடைய அரசாங்கத்தின் போது களவாடப்பட்ட சொத்துக்களை பணத்தை மீட்பதற்கான சட்டங்களை இயற்றவுள்ளோம்.என தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- உகாண்டாவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மறைத்துவைக்…

  4. அனுர அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது! October 14, 2024 அனுரகுமார திசநாயக்க அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது பொதுவேட்பாளருக்கு சார்பாக செயற்பட்ட ஒருவருக்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர் எனமக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும் சமூக செயற்பாட்டளருமான ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-; இந்த ஆட்சியில் இருக்ககூடிய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம் என உறுதியளித்திருந்தது. இன்று இவர்கள் ஆட்சிக்கு வந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இன்று சிலருக்கு பயங்கரவாத தடுப்புபிரிவிலிருந்து கடிதங்க…

  5. மட்டக்களப்பில் சரவணபவனுக்கு வாக்களித்தாலும் யாழ்ப்பாணத்தில் சுமந்திரனே வெல்லுவார்! Vhg அக்டோபர் 14, 2024 சரவணபவானுக்கு வாக்களித்தால் எப்படி சுமந்திரன் வெல்லுவார் என்று நீங்கள் எழுப்புகின்ற கேள்வி புரிகின்றது. ஆனால் அதுதான் உண்மை. மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் தான் இந்த சரவணபவன். தமிழரசுக் சின்னத்தில் மட்டக்களப்பில் போட்டியிட்டு மிகக் குறைவான வாக்கைப் பெறுவார் என்று கூறப்படுகின்ற ஒரு வேட்பாளர். ஆனால் மட்டக்களப்பில் நிச்சயம் தோற்பார் என்று கருதப்படுகின்ற இந்த வேட்பாளருக்கு நீங்கள் யாராவது வாக்களித்தால்கூட, அந்த வாக்கில் யாழ்ப்பாணத்தில் போட்டிபோடுகின்ற சுமந்திரன் வெற்றிபெற வாய்ப்பிருக்கின்றது. எப்படி என்று பார்ப்போ…

  6. இலங்கையின் பிரம்மாண்ட சொகுசு ஹோட்டல் இன்று திறப்பு. Cinnamon Life at City of Dreams Sri Lanka சொகுசு ஹோட்டல் இன்று (15) திறக்கப்பட உள்ளது. 1.2 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் , இலங்கையில் தனியார் துறையின் மிகப் பெரிய முதலீடாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹோட்டல் வசதிகள், வணிகம், ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு ஆகிய வசதிகள் இங்கு உள்ளது., தெற்காசியாவின் மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இந்த நாட்டின் சுற்றுலாத் துறைக்கு ஒரு புதிய அர்த்தம் சேர்த்துள்ளது. 687 அறைகளைக் கொண்ட சினமன் லைஃப் Ballroomகள், விருந்து அரங்குகள் மற்றும் மாநாட்டு வசதிகளைக் கொண்டுள்ளது. 5,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுக்கு ச…

  7. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய நல்லிணக்கக் கொள்கை மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் செயற்றிட்டம் உருவாக்கலுக்கான ஆலோசனைச் செயலமர்வு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் திங்கட்கிழமை (14) யாழ்ப்பாண மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், இன,மத, மொழி, சமூக,பொருளாதார, அரசியல் சமத்துவத்தை பேணுவதற்காக இவ் அலுவலகம் செயற்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றம் ஊடாக சட்டம் அமுல்படுத்தப்பட்டது எனவும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எல்லோரும் எவ்வித வேறுபாடுகளின்றி சமமானவர்கள் என்ற நோக்கத்தை …

  8. யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சை குழு - 17 இல் ஊசி சின்னத்தில் போட்டியிடும் சாவகச்சேரி வைத்திய சாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சர் அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுகம் திங்கட்கிழமை (14) யாழில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. சுயேட்சை குழுவில் இராமநாதன் அருச்சுனா , சிவப்பிரகாசம் மயூரன், சிவசுப்பிரமணியம் யோகபாலன், கௌசல்யா நரேந்திரன் , இராமகிருஷ்ணா அறிவன்பன் , பத்மலோஜினி நவரத்தினம் , தம்பிஜயா கிருஷ்ணானந், சிறிகண்ணன் சிறிபிரகாஷ் மற்றும் பவித்திரா கிருபானந்தமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். https://www.virakesari.lk/article/196306

  9. தேர்தல் செலவுக்கான செலவு அறிக்கையை அரியநேத்திரன் சமர்ப்பிக்கவில்லை! இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலுக்கான பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வடக்கு கிழக்கின் தமிழ் பொது வேட்பாளராக சங்கு சின்னத்தில் போட்டியிட்ட அரியநேத்திரன் வழங்கத் தவறியுள்ளார். பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் சரத் கீர்திரத்ன ஆகியோரும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. இந்த மூவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …

      • Haha
    • 2 replies
    • 193 views
  10. இலங்கை தமிழரசுக்கட்சியை உடைக்கவேண்டும், கட்சியை இல்லாமல்செய்யவேண்டும் என சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றது : இரா. சாணக்கியன் ! kugen இலங்கை தமிழரசுக்கட்சியை உடைக்கவேண்டும்,கட்சியை இல்லாமல்செய்யவேண்டும் என புலம்பெயர் நாடுகளில் உள்ள சில பிரதான தொழிலதிபர்கள்,வர்த்தகர்கள் சில சதிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இரா.சாணக்கியனுக்கும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்,இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி கிளைகளின் முக்கிய உறுப்பினர்களுக்கான சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் மட்டக்களப்…

  11. தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் : டக்ளஸ் தேவானந்தா ! By kugen தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்தவர்களே இன்று சங்கை ஊதிக்கொண்டு திரிகிறார்கள் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (14 ) காலை கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கொழும்பில் ஏன் நீங்கள் போட்…

    • 2 replies
    • 372 views
  12. கட்சி பெயரை திருடியவர்கள் சின்னத்தையும் திருடி விட்டார்கள் - பிரதான தமிழ் கட்சியாக இருப்பது இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே : எம்.ஏ.சுமந்திரன் ! kugenOctober 14, 2024 ஒரு காலகட்டத்தில் திருடர்களாக, கப்பம் பெற்றவர்களாக, கடத்தல்காரர்களாக, கொள்ளையர்களாக, கொலையாளிகளாக இருந்தவர்கள் திருந்திவிட்டார்கள் என்று நம்பி சேர்த்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. முன்னர் கட்சிப் பெயரை திருடினார்கள் இப்போது சின்னத்தையும் திருடியுள்ளார்கள். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுகவிழா நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இ…

  13. பெரும் நெருக்கடிக்குள் சிக்கும் தமிழரசுக் கட்சி! யாழ்.நீதிமன்றில் மீண்டுமொரு வழக்கு இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. மட்டக்களப்பு - கோட்டைக் கல்லாறைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா என்பவரால் கடந்த 10ஆம் திகதி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிராளிகளாக, இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் மற்றும் சேவியர் குலநாயகம் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்போது, வழக்கை தொடர்ந்துள்ள மார்க்கண்டு நடராசா முன்வைத்துள்ள கோரிக்கைகளாவன, 1 முதல் 3 வரையான எதிராளிகள் 27.01.2024…

  14. அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்திற்குள் விமானிக்கும் துணை விமானியயான பெண்ணிற்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து விமானி துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிபூட்டினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் பயணத்தை தொடர்ந்த போதிலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானியறையின் செயற்பாடுகள் பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தொடர்ந்து விமானி பணியிடை நிறுத்தம் செய்யப்பட…

  15. சீரற்ற காலநிலையினால் 158,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தீவைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, இதுவரை 12 மாவட்டங்கள் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக 126.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் களனிமுல்ல, கடுவெல உள்ளிட்ட அண்டிய பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், அத்தனகலு ஓயா பெருக்கெடுத்து ஓடியதால் கொழும்பு-குருநாகல் பிரதான வீதி ஜா…

  16. ஈஸ்டர் தாக்குதல்அறிக்கைகளை ஜனாதிபதி வெளியிடாவிட்டால் நான் வெளியிடுவேன்! -உதயகம்மன்பில- ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும், ஜனாதிபதி இன்னும் 7 நாட்களில் வெளியிடாவிட்டால், அவற்றை தான் வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார். மேலும், குறித்த அறிக்கைகளில் எந்தவொரு பக்கமும் காணாமல் போகவில்லை என்றும் எந்தவொரு விசாரணை அறிக்கையும் மாயமாகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளதாவது” ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நீர்க்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அண்மையில் சென்றிருந்தார். அவர் வெறுங்கையுடன்தான் அங்கு சென்றிருந…

  17. யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு முன்பாக வலி வடக்கு சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சாராயத்தை விற்று எமக்கு வாய்க்கரிசி போடாதே, வீரியம் குறைப்பதும் சாராயம் காரியம் கெடுப்பதும் சாராயம், மதுவை ஒழிப்போம் மாண்பை காண்போம் உள்ளிட்ட பல வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமயம் அப் பகுதியில் ஏராளமான பொல…

  18. வட் வரி செலுத்த தவறியமைக்காக டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் அலோசியஸுக்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 3.5 பில்லியன் வரியை செலுத்த தவறியமைக்காவே நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த குற்றத்துக்காக மேலும் இருவருக்கும் நீதிமன்றம் ஆறு மாதகால சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/196245

  19. மன்னார் காற்றாலை திட்டம் மீள்பரிசீலனை மன்னார், விடத்தல்தீவு பகுதியில் இந்திய அதானி நிறுவனத்தினால் காற்றாலை மின் நிலையத்தை உருவாக்கும் திட்டத்தை மீள்பரிசீலனை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். காற்றாலை மின் நிலையத்தை அமைப்பது தொடர்பாக இலங்கை அரசுக்கும் இந்திய அதானி நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (14) அழைக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இது தொடர்பான மனுக்கள் இன்று எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் …

    • 0 replies
    • 516 views
  20. நான் இலங்கைத் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறி விடுவேன் எனப் பலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னைக் கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி செய்கின்றார்கள். ஆனால், நான் கடைசி வரை போராடுவேன். நாங்கள் இந்தத் தேர்தலில் குறைந்தபட்சம் 15 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்ற வேண்டும். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ். தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெ…

  21. மன்னார் விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுக்கவுள்ள காற்றாலை மின் திட்டம் குறித்து மீள்பரிசீலனை செய்ய தயார் என அரசாங்கம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றத்திற்கு இதனை தெரிவித்துள்ளது. விடத்தல்தீவில் அதானிகுழுமம் காற்றாலை மின் திட்டத்தினை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டவேளை சட்டமா அதிபர் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/196239

  22. நஷ்டத்தில் இயங்கும் அனைத்து அரசநிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்வது குறித்த பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் தீர்மானிக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட நஷ்டத்தில் இயங்கும் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பது மற்றும் மத்தல விமானநிலையத்தினை வேறு நிர்வாகத்திடம் கையளிப்பது போன்ற முடிவுகளை பொதுத்தேர்தலின் பின்னரே அரசாங்கம் எடுக்கவுள்ளதாக விடயமறிந்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னைய அரசாங்கம் அரசநிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான பிரிவொன்றை உருவாக்கியிருந்தது. எனினும் அனுரகுமாரதிசநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர். முன்னைய அரசாங்கம் உரு…

  23. இலங்கை விமானப்படை 73 வது வருடத்தை முன்னிட்டு வட மாகாணத்தை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட நட்பின் சிறகுகள் எனும் அமைப்பின் கீழ் "என்னிடமிருந்து வடக்கிற்கு ஒரு புத்தகம்" எனும் செயல்திட்டத்தின் ஊடாக வட மாகாணத்தில் 73 பாடசாலைகளை புனர்நிர்மானம் செய்தல் 73 ஆயிரம் புத்தகங்களை பாடசாலை மாணவர்களுக்காக வழங்குதல் 73 ஆயிரம் மரக்கன்றுகளை வட மாகாணம் முழுவதும் நடுதல் எனும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த வகையில் யாழ்ப்பாணம் மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்திற்கான புதிய கட்டிடம் ஒன்று கடந்த 11ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டு பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது. அத்தோடு யாழ்…

  24. அரசியலில் இருந்து ஓய்வு பெறும் கெஹலிய? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என தான் உறுதியாக நம்புவதாகவும், நிரபராதியாக அரசியலுக்குத் திரும்புவேன் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403969

  25. நீர்க் கட்டணங்களைச் செலுத்தத் தவறிய 41 முன்னாள் எம்.பிக்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 41 பேர் தமது உத்தியோகபூர்வ இல்லங்களுக்கான நீர்க்கட்டணங்களை இன்னும் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இவ்வாறு அறவிடப்படாது 9 மில்லியன் ரூபா நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பொதுவிதிகளுக்கு அமைய குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக எவ்வித விசேட சலுகைகளும் இன்றி சுற்றறிக்கைகளுக்கு அமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403924

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.