ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
சீனாவின் தலைநகரமாகிறது இலங்கை! – நாடாளுமன்றில் ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு. [saturday 2014-11-08 10:00] சீனாவின் தலைநகரமாக இலங்கை மாறி வருவதாக ஐ.தே.கட்சி எம்.பி. ரவி கருணாநாயக, குற்றம்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், கப்பற்துறை அபிவிருத்தி மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே ரவி கருணாநாயக இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்- இலங்கையின் துறைமுகங்கள் அனைத்தையும் அரசு சீனாவுக்கு வழங்கி விட்டது. கொழும்பு துறைமுகம் சவுத்போர்ட் திட்டத்தின் கீழ் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று இத்துறைமுகத்திற்கு சீனாவின் நீர்மூழ்கிக் க…
-
- 1 reply
- 478 views
-
-
ஏழு இலங்கை அகதிகளுக்கு புகலிடம் அளிக்கிறது பிரேசில்! [saturday 2014-11-08 10:00] கடந்த இரண்டு வருடங்களாக ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள துறைமுகம் ஒன்றில் காத்திருந்த ஏழு இலங்கை அகதிகளுக்கு, பிரேசில் புகலிடம் அளித்துள்ளது. இவர்கள் பிரேசிலில் புதிய வாழ்க்கை ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை அங்கு செல்லவுள்ளதாக, யுஎன்எச்சிஆர் உறுதி செய்துள்ளது. 4 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை அடங்கலாக ஏழு பேரே பிரேசில் செல்லவுள்ளனர். இவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை நிரந்தர வீடு ஒன்றை வழங்கியுள்ளது. சுமார் 45 இலங்கை அகதிகள் அடங்கிய படகு ஒன்று அவுஸ்திரேலியாவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கையில் நடுக்கடலில் தத்தளித்த போது, சிங்கப்பூர் கப்பல் ஒன்றினால் காப்பாற்றப…
-
- 1 reply
- 626 views
-
-
இலங்கையில் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை உறுதிப்படுத்தப்படவில்லை ?– பிரதிபா மஹானாமஹேவா அனைத்து மனிதர்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதிபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் உரிமையானது தற்போது சர்வதேசமயமான ஓர் எண்ணக்கருவாக மாற்றம் பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் மனித உரிமை தொடர்பில் எவரும் பேசியதில்லை எனவும், தற்போது மனித உரிமை பற்றிய விவகாரங்கள் நாள் தோறும் பேசப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து மனிதர்களும் வாழ்வதற்கு உரிமை உண்டு எனவும், பௌத்த, இந்த…
-
- 0 replies
- 563 views
-
-
சன் மாஸ்டர் இந்தியாவிற்கு தப்பிச் சென்று விட்டார்? ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு போலி சாட்சியங்களை வழங்க முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள விஜேந்திரகுமார் எனப்படும் சன்மாஸ்டர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்காக வெற்று சாட்சியப் படிவங்களில் கையொப்பங்களை திரட்டியதாக சன் மாஸ்டர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை சன்மாஸ்டர் நீர்கொழும்பிலிருந்து படகு மூலமாக இந்தியா சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒக்ரோபர் மாதம் 25ம் திகதி கை…
-
- 0 replies
- 846 views
-
-
ஐ.நா விசாரணைக் குழு மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை 08 நவம்பர் 2014 ஐக்கிய நடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுஇலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மீண்டும் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இணைய தளத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என இலங்கை திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையிலும் மீண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய விசாரணைகளுக்கு இலங்கையின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முயற்சிக்கப்படும் என அறிவித்துள்ளது. பல்வேறு வ…
-
- 0 replies
- 321 views
-
-
வத்திக்கான் புலனாய்வுப் பிரிவு கொழும்புக்குப் பயணம்! – பாதுகாப்புக் குறித்து ஆராய்கிறது [saturday 2014-11-08 07:00] பாப்பரசரின் இலங்கைப் பயணம் தொடர்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கை வரவுள்ளனர். இந்த மாத இறுதியில் வத்திக்கான் புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாப்பரசரர் பிரான்ஸிஸ் இலங்கையில் பயணம் செய்யவுள்ள மருதமடு தேவாலயம் மற்றும் கொழும்பின் முக்கிய பகுதிகள் தொடர்பில் வத்திக்கான புலனாய்வுப் பிரிவினர் கண்காணிக்கவுள்ளனர். உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா, பாதூப்பு அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்து அவர்கள் ஆராயவுள்ளனர். http://www.seithy.com/breifNews…
-
- 0 replies
- 382 views
-
-
பாப்பரசர் வருகையும் ஜனாதிபதி தேர்தலும் கட்டுரையால் சிங்கள் பத்திரிகைக்கு மூடுவிழா news பாப்பரசர் வருகையால் ஜனாதிபதி தேர்தல் பிறப்போடப்படலாம் என கட்டுரை எழுதிய ஒஎத்தஒ (உண்மை) பத்திரிகை நிறுவனம் இழுத்து மூடப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலை பீட பீடாதிபதி வைத்திய கலாநிதி மைக்கல் பெர்னாண்டோ ஆசிரியராக கடமையாற்றும் இப் பத்திரிகையின் பிரதிகள் நேற்று அதிகாலை விநியோகம் செய்யத் தடை விதிக்கப்பட்டதோடு பத்திரிகை நிறுவனமும் இழுத்து மூடப்பட்டுள்ளது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உயர் பீடத்தின் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு நிறுவனம் மூடப்பட்டதாக பத்திரிகையின் ஆசிரியரான மைக்கல் பெர்னாண்டோ இத்தகவலை தனது முகப்புத்தகப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி த…
-
- 0 replies
- 357 views
-
-
எனது கணவர் மகேஸ்வரனை புலிகள் சுட்டதாகக் கூறும் நீங்கள் அப்போது பக்கத்தில் இருந்தீர்களா என்று அமைச்சர் ரோஹித அபே குணவர்தனவிடம் கேள்வி எழுப்பினார் ஐ.தே.கவின் விஜயகலா மகேஸ்வரன் எம்.பி. இதே சமயம், நடராஜா ரவிராஜ், மகேஸ்வரன் ஆகியோரை புலிகள் கொன்றனர் எனக் கூறுவது அப்பட்டமான பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் ரோஹித அபே குணவர்தன, மகேஸ்வரனை புலிகள் சுட்டனர் எனக் கூறினார். இதன்போது என் கணவரான மகேஸ்வரனை புலிகள் சுட்டனர் எனக் கூறும் நீங்கள் அப்போது பக்கத்தில் இருந்தீர்களா? என்று விஜயகலா மகேஸ்வரன…
-
- 2 replies
- 594 views
-
-
இலங்கை அரசின் அணுகுமுறை குறித்து ஐநா மனித உரிமை ஆணையர் கண்டனம் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் புலன்விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐநா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐநா மனி…
-
- 0 replies
- 413 views
-
-
பளையில் காற்று மின் ஆலைகளை நிர்மாணித்துவரும் யூலிபவர் மற்றும் பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் இணைந்து வடக்கு விவசாய அமைச்சுக்கு 20 மில்லியன் ரூபா பெறுமதியான ஆறு தண்ணீர்த்தாங்கி வாகனங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்ற இவ்வாகனங்களின் கையளிப்பு நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு வாகனங்களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். பளை பிரதேச செயலர் பிரிவில் புலோப்பளையிலும் வள்ளிமுனையிலும் யூலிபவர், பீற்றாபவர் என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் காற்று மின் ஆலையை நிர்மாணித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் வடக்கு மாகாணத்தின் வரட்சி நிவாரணம், குடிநீர் வழங்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போ…
-
- 0 replies
- 390 views
-
-
எங்களைப் பிரிக்க வேண்டாம் ஒரே இடத்தில் குடியேற்றுங்கள் நாங்கள் காலா காலமாக வாழ்ந்து வந்த மீரியபெத்த தோட்டத்தைஒரு புதிய பாதுகாப்பான இடத்தில் அமைத்து மீரியபெத்த தோட்டத் தில் வாழ்ந்த அனைத்து மக்களையும் அங்கு குடியேற்றவேண்டும். தயவு செய்து மீரியபெத்த தோட்டத்தில் ஒற்றுமையாக வாழ்ந்த எங்களை பிரித்துவிடவேண்டாம் என்று மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டமக்கள் மன்றாட்டமாககோரிக்கைவிடுக்கின்றனர். பாதுகாப்பான இடங்களில் எங்களுக்கு வீடுகளை பெற்றுத் தாருங்கள். மீரியபெத்ததோட்டத்தில் இருந்தமகாமுனிகோயில்,விளையாட்டுமைதானம் உள்ளிட்டஅனைத்தும் எமக்கு…
-
- 1 reply
- 619 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளின் நம்பகத் தன்மை, நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் ஷெயித் ராத் அல் ஹுசைன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த புலன்விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு தர விழையும் தனிநபர்களையும் இலங்கை அரசாங்கம் தடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை, இந்த விசாரணைக்கான ஆணையைப் பெற்றுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்…
-
- 2 replies
- 541 views
-
-
பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள். 29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம். தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள். மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது. கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :- 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் – 82 (பெண்குழந்தைகள்)…
-
- 38 replies
- 3.4k views
-
-
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலங்கை பிரதமர் சென்றுள்ளதை அடுத்து அங்கு பதற்றம் உருவாகியுள்ளதாள். பிரதமரின் வருகையும்,அவரது தரிசன நேரம் ரகசியமாக பேணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக இலங்கை பிரதமர் திசநாயகே முதியன்சேலாகே ஜெயரத்னே இன்று திருப்பதி சென்றுளார். அவரது வருகையை முன்னிட்டு தமிழக எல்லையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருத்தணி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. மேலும் திருப்பதி கோவிலை சுற்றியும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயரத்ன, ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வசதியாக கோயில் அருகே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பிரேக…
-
- 0 replies
- 340 views
-
-
சிரியாவின் போராளிக் குழுக்களுடன் இணைந்து கொள்ளும் நோக்கில் வந்த மூன்று மாலைதீவுப் பிரஜைகள் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 23 மற்றும் 25 வயதான இரண்டு ஆண்களும் 18 வயதான பெண்ணுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு மாலைதீவுக்கே நாடு கடத்தப்பட்டுள்ளதாக மாலைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மூவரும் துருக்கியின் ஊடாக சிரியாவுக்குள் பிரவேசிக்க திட்டமிட்டதோடு மருத்துவ வியடம் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் அவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கும் போது ஒருவழி விமான அனுமதிச் சீட்டுக்களையே கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூவரில் 23 வயதான ஆணும் 18 வயதான பெண்ணும் சட்டபூர்வமற்ற முறையில் திருமணம் செய்து கொண்டவர்கள் எனவும் குறித்த பெண் …
-
- 0 replies
- 437 views
-
-
மன்னார் முள்ளிக்குளம் கடற்படை முகாம் அமைந்திருக்கும் பகுதியை தவிர ஏனையவை கடற்றொழிலாளர்களது பாவனைக்கு விடப்படுமே தவிர படை முகாம் அகற்றப்படாது என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், மன்னார் குரு முதல்வர் விக்ரர் சூசை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் ஆகியோருக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, பாதுகாப்பு அமைச்சின் செயல…
-
- 0 replies
- 395 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தினை சூழவுள்ள பகுதிகளில் படையினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில தினங்களாக பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் நிலைகொண்டுள்ள படையினர் பல்கலைக்கழகத்திற்குள்ளே என்ன நடைபெறுகிறது ஏதாவது கூட்டம் நடைபெறுகிறதா? அல்லது கூட்டமாக மாணவர்கள் என்ன உரையாடுகின்றார்கள்? போன்ற கேள்விகளை விரிவுரைகளை முடித்து வெளியே வரும் மாணவர்களிடம் படையினர் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான தடை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியமையினைத் தொடர்ந்து இம்முறை யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுட்டிக்கப்படலாம் என்ற அச்சத்தினாலேயே படையினரின் நடமாட்டம் பல்கலைக்கழக பகுதிகளில் தற்போதே அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. - …
-
- 0 replies
- 398 views
-
-
சீன நீர்முழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தர்த்து நிற்கின்றமை குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இந்த செயல் 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறுவதாகவும், இதனால் இந்திய - இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படலாம் எனவும் இந்தியா எச்சரித்துள்ளது. இலங்கைக்கு சீனா, விமான நிலையம் , வீதிப் போக்குவரத்து, ரயில் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வருகிறது. மேலும் சீனாவிடம், இலங்கை மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் நட்பு நாடாக இலங்கை இருந்த போதிலும் இலங்கை கடந்த சில நாட்களுக்கு இந்திய நிதி உதவியுடன் போர் பாதித்த தமிழர்கள் பகுதியில் மீண்டும் ரயில் போக்குவரத்து சேவையை தொடக்கியது. கடந்த சில நாட்…
-
- 2 replies
- 539 views
-
-
ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதற்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கருத்தை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வரவேற்றுள்ளார். ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதாகவும், இது ஐ.நா மீதான தாக்குதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் கீத் ஹாப்பர் நேற்று முன்தினம் டுவிட்டர் பதிவு ஒன்றில் எச்சரித்திருந்தார். இதுகுறித்து, டுவிட்டரில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ள நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவரின் கருத்து மிகவும் சரியானது என்று வரவேற்றுள்ளார். ஐ.நா விசாரணைக் குழுவுக்குச் சாட்சியம் அளிப்பதற்கான…
-
- 0 replies
- 241 views
-
-
மீரியபெத்த மண்சரிவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளை வடமாகாணசபை பொறுப்பேற்கப் போவதாக கூறியது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர, பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொடர்பில் தொடர்ந்தும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. முன்னதாக 75 பிள்ளைகள் தமது பெற்றோரை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. தற்போது 3 பிள்ளைகள் மாத்திரமே தமது பெற்றோர் இருவரையும் இழந்துள்ளதாகவும் ஏனைய பிள்ளைகள் பெற்றோரில் ஒருவரையே இழந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. குறித்த பிள்ளைகளை பராமரிக்க அரசாங்கம் முழுமையான ஆளுமையை கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். http…
-
- 1 reply
- 293 views
-
-
முஸ்லிம்களுக்காக தனி நிர்வாக மாவட்டத்தை ஏற்படுத்துமாறு கோருவதை தனிநாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையமாகக் கொண்டு கரையோரமாக வாழும் முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை பிரதமர் திமு ஜயரட்ண நிராகரித்தது குறித்து கருத்துக் கூறும் போதே ஹசன் அலி இவ்வாறு தெரிவித்தார். அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல. கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய …
-
- 0 replies
- 129 views
-
-
ஆயுத பலமோ பண பலமோ இல்லாத எம்மால் வன்முறை ஊடாக எதனையும் சாதிக்க முடியாது. எமது சமூகத்தின் முன் தீர்வுக்காக இருக்கின்ற ஒரே ஆயுதம் அஹிம்சைதான். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் 8 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நேற்று சாவகச்சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நினைவுப் பேருரை ஆற்றும் போதே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிகளை தவறென வெளிப்படையாகவே ரவிராஜ் தெரிவித்து வந்தார். அத்தோடு இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை நேரடிய…
-
- 0 replies
- 147 views
-
-
இந்திய அமைதிப்படையினர் இலங்கையில் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டடை மறுத்துள்ள இந்தியா, இது தொடர்பாக இலங்கை அரசாகங்கத்திடமிருந்து முறைப்பாடுகள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் தெரிவித்துள்ளவை வருமாறு:- இலங்கை அரசாங்கம் இது குறித்து எங்களிடம் கேள்விகள் எதனையும் எழுப்பவில்லை. அப்படியான கேள்வி வந்தாலும் எங்களால் இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரமே பதிலளிக்க முடியும்.- என்று கூறியுள்ளார். இலங்கையில் இந்திய அமைதிப்படையினர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர் என்று பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://malarum.com/artic…
-
- 1 reply
- 766 views
-
-
இலங்கையூடாக சிரியா செல்ல முயன்ற மூன்று மாலைதீவு பிரஜைகள் கொழும்பில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 25, 23 வயதான இரு இளைஞர்களும், 18 வயதான யுவதியுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சையைக் காரணம் காட்டி இலங்கை வந்த இவர்கள் பின்னர் கொழும்பிலிருந்து துருக்கிக்கு செல்ல முயன்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட வேளை, இலங்கையில் மருத்துவ சிகிச்சை தமக்கு திருப்தியளிக்கவில்லை என்றும் இதனால் தாங்கள் துருக்கி செல்ல முயன்றனர் என்றும் விசாரணைகளின்போது இவர்கள் தெரிவித்துள்ளனர். மாலைதீவு பொலிஸார், அந்நாட்டின் பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு வழங்கிய …
-
- 0 replies
- 505 views
-
-
பொது வேட்பாளரிடம் 4 கோரிக்கைகளை முன் வைக்கவுள்ளோம்' மனோ கணேசன்
-
- 0 replies
- 401 views
-