Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியில் சாவகச்சேரி நகர பொதுச்சந்தை மீள் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சாவகச்சேரி நகரசபையினால் நிர்மாணிக்கப்பட்டு செயற்பட்டு இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்த பொதுச்சந்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 1995 வரையாயான காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் லட்சக்கணக்கில் வியாபாரிகளும் வர்த்தகர்களுமென பெரும் சன நெருக்கடியை எதிர்கொண்ட நகரம் அதன் பின்னரான யுத்தகால சுழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சந்தை கட்டிட தொகுதியை மீள் நிர்மாணம் செய்யும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=7764636059048…

  2. இலங்கையில் தனது நீர்மூழ்கிகள் தரித்து நிற்பது வழமையான ஒரு நடவடிக்கை என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கியொன்றும் -யுத்தக்கப்பலொன்றும் வந்துள்ளமை குறித்து கரிசனைகள் வெளியாகியுள்ளதை தொடர்ந்தே இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் நிரப்புவதற்காகவும், மாலுமிகளுக்கு ஓய்வுஅளிப்பதற்காகவும் இவ்வாறு துறைமுகங்களில் நீர்மூழ்கிகள் தரித்து நிற்பது வழமையான விடயம் என சீனாவில் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஏடென் வளைகுடாவிற்க்கு சோமாலியாவிற்க்கும் செல்லும் சீனா கப்பற்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லும் வழியிலேயே நீர்மூழ்கிகள் சீனா வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவளை இலங்கைக்கு என்ன காரணத்திற்காக நீர்மூழ்கிகள் சென்றுள்ளன, என்பதை சீ…

  3. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராம்ஙகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்கள் எலி பொந்தெடுப்பதுபோல் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி வருகிறது. ஆனால் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே இடம்பெறுகின்றன. - இவ்வாறு தெரிவித்திருக்கிறார் வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெபநாதன். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: இத்தகைய செயற்பாடுகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் அதேவேளையில் சகலதையும் இழந்து நிலத்திற்காக போராடும் எமது மக்களின் வாழ்விற்காக - இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு விரைவான - வினைத்திறன்மிக்க - நடவடிக்கைகள் உடன் எடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அரச தரப்பினரால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற …

  4. முல்லைத்தீவு மாவட்டத்திற்கான சாட்சியப்பதிவுகளின் மூன்றாம் நாளான இன்று விடுதலைப்புலிகள் , இராணுவத்திற்கு எதிரான முறைப்பாடுகளே அதிகமாக முன்வைக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போதும் யுத்த முடிவின் பின்னர் சரணடைந்தும் காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட அமர்வின் மூன்றாம் நாள் சாட்சியமளிப்பு இன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலக த்தில் நடைபெற்று வருகின்றது. அதன்படி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 16 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான சாட்சியப்பதிவுகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரை சாட்சியமளித்தவர்களின் சாட்சியங்களில் இருந்து இராணுவம் , விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு…

  5. பருவ மழையினால் யாழிலுள்ள சந்தைகளில் மீன்களின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழிலுள்ள பண்ணை, சின்னக்கடை, நாவாந்துறை, காக்கைதீவு உள்ளிட்ட சந்தைகளிலேயே மீன்களின் விலைகள் குறைவடைந்துள்ளன. இதன்படி கணவாய் ஒரு கிலோ 350 ரூபாய் , நண்டு, கயல் மீன் ஆகியன ஒரு கிலோ 250 ரூபாய் , ஒட்டி வகை மீன்,பாலை மீன், சீலா மீன் ஆகியன ஒரு கிலோ 200 – 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=756753607204312036#sthash.TIUcNPdr.dpuf

  6. இந்திய அமைதி காக்கும் படையினர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார். 1987 மற்றும் 1990ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினர் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் தமிழர்களை கொலை செய்ததாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்திய அமைதி காக்கும் படையினர் மேற்கொள்ளச் செயல்களை நிரூபிக்க ஆதாரங்கள் இருப்பதாக முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண இராணுவத் தளபதியான கருணா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கடற்படையினர் …

  7. –வடிவேல் சக்திவேல் தொலைக்காட்சி நாடகங்கள் மாணவர்களின் கல்வியை வீணடிப்பதாகவும் இதற்கு பக்கபலமாக இருப்பவர்கள் பெற்றோர் எனவும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய, கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தெரிவித்தார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முதலைக்குடா கனிஷ்ட வித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (03) வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'மாணவர்கள் அனைவரும் திறமையானவர்கள். அவர்களை உயர்நிலைக்கு கொண்டுவருவது அனைவரதும் கடமையாகும். தற்போது, அநேகமான மாணவர்கள் உட்பட அனைவரும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகங்களையே ப…

  8. கொஸ்லந்த மீரியபெத்த பிரதேசத்தில் மூடுபடை தாவரங்களை பயிரிடாமையே பாரிய அனர்த்தத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என வன பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. மண்ணைப் பற்றிப் பிடிக்க கூடிய மரச்செய்கையை ஊக்குவிப்பதனை விடுத்து மரக்கறிவகைகளை பயிர்செய்திருந்தமையும் அப்பிரதேசத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான மலையகத்தின் தோட்டப் பகுதிகளின் வளங்களை பாதுகாப்பதற் கான அதிகாரம் எமக்கு இல்லாதபோதும் எதிர்காலத்தில் மேலும் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறுவதனை தவிர்க்கும் நோக்கில் வனப்பாதுகாப்பு திணைக்களம் தோட்டப் புறத்திலுள்ள தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட விரும்புகிறது. இந்நிறுவனங்கள், விரும்பும்பட்சத்தில் தொழிநுட்ப உதவிகளை பெற்றுக்கொடுக…

  9. சென்னை : 'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் இதழியல் கருத்தரங்குசென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையுடன், இலங்கை, யாழ்ப்பாண பல்கலையின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் இணைந்து, கடந்த 20ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரையிலான, 12 நாள், தமிழ் இதழியல் கருத்தரங்கை நடத்துகின்றன. அதில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து, 25 மாணவர்கள், ஒரு இயக்குனர் பங்கேற…

  10. வித்தியின் 'என் எழுத்தாயுதம்' நூல் கொழும்பில் 9 ஆம் திகதி வெளியீடு மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய "என் எழுத்தாயுதம்" (ஒரு பத்திரிகையாளனின் பட்டறிவுப் பகிர்வு) நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 'திசை காட்டி' குழுமத்தின் அனுசரணையுடன், சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் 'திசை காட்டி ஸ்தாபகர் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் முன்னிலையில் நடைபெறும் இந்த நிகழ்வில், வரவேற்புரையை திசைகாட்டிக் குழும சிரேஷ்ட உறுப்பினர் சி. சுபசீலன் நிகழ்த்துவார். நூல் வெளியீட்டுக்கான வாழ்த்துரையை வடக்கு மாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவர் எஸ்.தவராசா, தமி…

  11. வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நீடித்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதிலேயே அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை அரசாங்கம் பலவந்தமாக பெற்றுக் கொள்கின்றது. இது ஓர் பாரதூரமான பிரச்சினையாகும். வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் இராணுவ ஆட்சியை நீடித்து வருகின்றது. பெரும் எண்ணிக்கையிலான படையினர் தொடர்ந்தும் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். பிரதேசத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு எவ்வித சுதந்திரமும் கிடையாது. அதிகாரத்தில் நீடிப்பதற்கு அரசாங்கம் பல்வேறு உபாயங்களை பின்பற்றி வருகின்றது. உண்மையான ந…

  12. மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்ற மாற்றுத் திட்டங்களை அரசு முன்னெடுக்காவிட்டால் அவர்களுக்கு வடக்கு - கிழக்கில் இடம் இருக்கின்றது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, எங்களுடைய பயணம் என்பது எந்தவித அரசியல் நோக்கமும் கொண்டதல்ல. மலையக மக்களிடம் நாங்கள் வாக்குகேட்டு வரப்போவதுமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் ஊவா மாகாண அமைச்சராக இருக்கும் செந்தில் தொண்டமானும் சரி, ஏனைய அமைச்சர்களும் சரி இந்த மக்கள் தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. கொஸ்லந்தை, மீரியாபெத்தயில் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று …

  13. காணமற்போன தனது கணவரை மீட்டுத்தருமாறு தொடர்போராட்டங்களை நடத்திவரும் மயூரி இனோகா என்ற பெண்மணியை இனந்தெரியாதவர்கள் கடத்தி கணவரை தேடும் முயற்சியை கைவிடுமாறு எச்சரித்த பின்னர் வீதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளதாவது காணமற்போன மதுசிகா ஹரிஸ் டி சில்வாவின் மனைவி மயூரி நவம்பர் முதலாம் திகதி கடத்தப்பட்டார்.இவரது கணவர் செப்டம்பர் 2013 காணமற்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது. காணமற்போனவர்களுக்காக சீதுவ-ரத்தொழுவையில் நவம்பர் 27 ம் திகதி நடைபெற்ற நிகழ்வில் மயூரி கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். இதன்பின்னரே அவர் கடத்தப்பட்டுள்ளார். தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்காக பால்மா வாங்குவதற்காக அனுராதபுரத்தில் கடையொன்றிற்கு சென்றுகொண்டி…

  14. தலைவர் எப்போ வருவார் என ஏங்கும் தமிழ் மக்கள் இன்றும் அவர் வருகையை எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள்.ஆனால் சிங்களம் அவர் வந்து விடுவார் என பயத்தில் வாழ்கிறது.உண்மைகள் நெடுங்காலம் தூங்காது நேற்று சிறிலங்கா நடளுமன்றத்தில் தலைவரின் இருப்பு உறுதி செய்யப்பட்டது. ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்துள்ள யோசனையானது சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அதிகாரங்களை கூட பறித்து கொள்ளும் யோசனைகள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவிக்கும் போதே தலைவர் பற்றிய உண்மையையும் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத…

    • 4 replies
    • 2.6k views
  15. இலங்கை தொடர்பான ஐ.நா.வின் விசாரணைகளுக்கு சமர்பிப்பதற்காக புணைக்கப்பட்ட தகவல்களுடன் பொய் சாட்சியங்கள் உட்படுத்தப்பட்ட படிவங்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மூத்த அதிகாரியான அல்வா புள்ளே விஜேந்திரகுமார் ஊடாக, அக்கட்சி மேற்கொள்கின்றது என்ற தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என்று அறிவித்துள்ள கூட்டமைப்பு, தமது கட்சிக்கும் விஜேந்திர குமாருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா ஏற்பாட்டாளரைத் தேடி போலிஸ் வலை விரிப்பு, அனந்தியின் நடவடிக்கை பற்றி வட மாகாண சபைக்கு ஆளுநர் முறையீடு, ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவாக கையெழுத்து சே…

  16. -எஸ்.தியாகு தமிழ் தேசிய கூட்டமைப்பு உணர்வுபூர்வமாக கூறிய கருத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். அவர்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகவே அவர்கள் கொஸ்லாந்தை, மீரியபெத்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வடக்கில் காணிகளை வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்கள் என மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது, 'மீரியபெத்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் விரும்பினால் நாங்கள் வடக்கில் காணிகளை வழங்க தயாராக இருக்கின்றோம் என்று, பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்த்த கூட்டமைப்பினர் உணர்வுபூர்வமாக தெரிவித்தனர். ஆனால், அரசியலில் அனுபவமில்லாத, தமிழ் தேசிய கூட்டமைப்பு மலையகத்துக்கு வர…

  17. இன ஒற்றுமை குறித்து மேடைகளில் பேசாது செயல்களில் காட்டவேண்டும். என வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்திருக்கிறார். பெரும்பான்மை சிங்களவர்கள் வாழும் கிராமமான மருதமடு குளத்தில் நேற்று திங்கட்கிழமை மீன்குஞ்சுகளை விட்ட பின்னர், அக்கிராம பெளத்த விகாராதிபதியையும், நன்னீர் மீன்பிடியாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் மக்களையும் சந்தித்து அமைச்சர் உரையாடினார். இதன்போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார். மேலும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடக்கு மாகாணத்தில் உள்ள குளங்களில் மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன. இந்த விடயத்தில் இன மத வேறுபாடின்றியும் பிரதேசவாதம் இன்றியும் வடக்கு மக்களுக்கு சமமாக பகிரப்படும் என்றும் வடக்கு பகுதியில் அரசாங்கத்தினராலும், ஆக்கிரமிப்பாள…

  18. வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களினதும் நூலகங்களுக்கு பகிர்ந்தளிக்கும் வகையில் ஒரு தொகுதி நூல்கள் யாழ். இந்திய துணைத் தூதரகத்தால் முதலமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது. இந்தியத் துணைத் தூதரக பிரதித்தூதுவர் எஸ்.தட்சணாமூர்த்தி வடக்கு முதலமைச்சரிடம் நூல் தொகுதியை கடந்த 29 ஆம் திகதி வழங்கி வைத்தார். இந்த நூல்கள் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்தே மாவட்ட நூலகங்களுக்கு பகிந்தளிக்கப்பட்டன. இந்த நூல்கள் இந்து தத்துவம், மதம், தகவல்தொழில்நுட்பம் உட்பட பல வகையான நூல்களே இவ்வாறு நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் ஆங்கிலத்திலிருந்து சமீபத்தில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட நூல்களாகும். மேலும் இந்த நிகழ்வில் பதில் துணைத்தூதுவர் எஸ்.டி.…

    • 2 replies
    • 574 views
  19. வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மாபெரும் மலர் கண்காட்சி எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், திங்கட்கிழமை (03) தெரிவித்தார். 5ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த மலர் கண்காட்சி தொடர்ந்து எதிர்வரும் 9ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் அலங்கார தாவரங்களையும், பயன்தரு மரங்களையும் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பண்ணையாளர்கள் கலந்துகொண்டு தங்கள் உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ளதுடன் விற்பனை நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளனர். மேலும், இந்த கண்காட்சியில் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தினமும் இலவசமாக பயன்தரு மரக்கன்றுகள் விநியோகிக்கப்படவுள…

    • 2 replies
    • 536 views
  20. -எம்.எஸ்.எம்.நூர்தீன் கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நூலகமொன்றை காத்தான்குடியில் அடுத்த வருடம் திறக்கவுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார். தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரசபையால் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, காத்தான்குடி நகரசபையின் பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். வாசிப்பு அவசியமாகுமென்பதுடன், வாசிப்பு மனிதனை முன்னேற்றும். வாசிப்பின் மூலம் பல்வேறுப்பட்ட அறிவை நாம் பெற்றுக்கொள்கின்றோம். காத்தான்குடியில் ஒரு சிறிய நூலகமே உள்ளது. இந்நிலையில், நாங்கள் நூலகமொன்றை…

    • 21 replies
    • 1.7k views
  21. ஐ.நா விசாரணைக்கான சாட்சியப் படிவத்துடன் கைதானவர் சட்ட உதவி பெறுவதற்குத் தடை! [Tuesday 2014-11-04 09:00] போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜ.நா. மேற்கொள்ளும் விசாரணைக்கு சாட்சியமளிக்கும் படிவங்களைத் வைத்திருந்ததாக குற்றம்சாட்டி பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சி.கிருஸ்ணராசா சட்ட உதவிகள் பெறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை மனித உரிமை மீறல் என்றும், கைது செய்யப்பட்டவருக்கான சட்ட உதவிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கே.சயந்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்: ஜ.நா விசாரணைக்காக மக்கள் சாட்சியங்களை வழங்குவதற்கு கடந்த 31 ஆம் திகதி மட்டும் கா…

  22. ஜோதிடர்களே தேர்தல் திகதிகளை தீர்மானிக்கின்றனர்! - ரணில் குற்றச்சாட்டு. [Tuesday 2014-11-04 09:00] தேர்தல் திகதி பற்றிய தீர்மானத்தை ஜோதிடர்களிடம் விட வேண்டிய பரிதாப நிலையில் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பரிய இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். வரவு-செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது, ஜனாதிபதிக்கும் அவரின் கீழ் வரும் நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட செலவின் தலைப்புகள் மீதான விவாதத்தை தொடங்கிவைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசியலமைப்பின் படி தேர்தல் திகதியை தீர்மானிப்பவர் தேர்தல்கள் ஆணையாளர் தான். ஆனால், இந்த அரசாங்கத்தில் அவருக்கு இந்த அதிகாரம் மறுக்கப்பட்டுள்ள…

  23. லயன்எயர் விமானம் வீழ்த்தப்பட்ட வழக்கு – நீதிமன்றில் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து விசாரணை. [Tuesday 2014-11-04 09:00] இரணைதீவு கடலில், கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி லயன் எயர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது தொடர்பான வழக்கை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விசாரிக்குமாறு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி பிரேமா சுவர்ணாபதி பணித்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே நீதிபதி மேற்கண்டவாறு பணித்தார். இதன்படி இம்மாதம் 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. இரணைதீவுக் கடலில் கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி சுட்டுவீழ்த்தப்பட்ட லயன் எயர் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட 72 வகையான தடயப் பொருட்களில…

  24. கொஸ்லாந்தை வீதியில் பாரிய வெடிப்பு செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2014 09:38 கொஸ்லாந்தை, பூனாகலையூடாக பண்டாரவளைக்கு செல்லும் வீதியில், 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீதியும் கீழிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிக்கும் பயணிகள் 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் நடந்து சென்று பஸ்களில் மாறி தங்களுடைய பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/131924-2014-11-04-04-10-03.html

  25. மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ள கொழும்பு வெலிக்கடா சிறைச்சாலை. இலங்கை உயர்நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரும் தூக்கு தண்டனை கைதிகளுக்கான தனிச்சிறைக்கு மாற்றப்பட்டனர். தமிழக மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாந்த் மற்றும் லாங்லெட் மற்றும் இலங்கை யாழ்ப்பாணம் மீனவர்கள் கிறிஸ்துராஜா சீல்தன், ஞானப்பிரகாசம் துஷாந்தன் கமல கிறிஸ்ரியன் ஆகிய எட்டு பேரையும் போதைப்பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கடந்த நவம்பர் 2011ல் கைது செய்தனர். கடந்த அக்டோபர் 30ம் தேதி இந்த 8 மீனவர்களுக்கும் தூக்குதண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழக மீனவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.