Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுய நிர்ணைய உரிமையை அங்கீகரித்த இலங்கை ஆசிரியர் சங்கம் நாளை போராட்டம் ஆசிரியர்களின் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் மற்றும் பொறுப்புவாய்ந்த தரப்புக்கள் கவனயீனமாக இருப்பதனைக் கண்டித்து நாளை-06.10.1014- கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் சர்வதேச ஆசிரியர் தினமான நாளை யாழ்.நகரில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. மாணவர்களின் ஆளுமையை வளப்படுத்துவது மட்டுமல்லமல், மாணவர்களுடைய எதிர்காலத்திற்கான அத்திபாரத்தையும் இடும் ஆசிரியர்கள் சமகாலத்தில் பல்வேறு விதமான நெருக்குவாரங்களை எதிர் கொள்கின்றார்கள். அவர்களுடைய நலன்கள் தொடர்பில் அரசாங்கமும் பொறுப்புவாய்ந்த தரப்பு க்களும் கவனயீனமாகவே இருக்கின்றனர். எனவே சர்வதேச ஆசிரியர் தினமான ஒக்ட…

    • 0 replies
    • 413 views
  2. இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மூன்று நாடுகள் பாதுகாப்பு வழங்க முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் வெளியுறவுப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு ஆப்ரிக்க நாடுகளும், ஒரு ஆசிய நாடும் இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தாம் 2008ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை யுத்த நிறுத்தம் குறித்து வலியுறுத்தி வந்த போதும், அவர் இதனை கருத்தில் கொள்ளவில்லை என்றும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதன் …

  3. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்தராஜபக்ஷ போட்டியிடுவராக இருந்தால், அவரால் வெற்றி பெற முடியாமல் போகலாம் என்று சர்வதேச அரசியல் ஆய்வு இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. யுரோஏசியா ரவீவ் என்ற அந்த இணையத்தளம் இது தொடர்பில் விசேட ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் மகிந்தராஜபக்ஷவின் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குகளுக்கும், இறுதியாக நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு கிடைத்த வாக்குகளுக்கும் இடையில் 20 சதவீதமான வீழ்ச்சி காணப்படுகிறது. ஊவா மாகாணத்தை சிறிலங்காவின் முழுமையான ஜனப்பரம்பலை காட்டும் மாகாணமாக ஏற்றுக் கொள்ள முடியாத போதும், பதுளை மாவட்டத்தில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் சமமாக வாழ்கின்றனர். எனவே பதுளை…

  4. உடலுறவிற்கு வற்புறுத்தி ராஜபக்ச போலிஸ் படையால் தெருத்தெருவாகத் தாக்கப்பட்ட பெண்: நிவேதா ரத்தினபுரி இலங்கையின் சப்ரகமுவ மாகாணத்தின் தலைநகர். மலையகத்தின் மலைகள் ஒருங்கி உறையும் அழகான பிரதேசம். இலங்கையில் ஏழை விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாகாணங்களில் சப்ரகமுவ மாகாணாம் பிரதான் இடம் வகிக்கிறது. இரத்தினபுரியில் கடந்த வாரம் ஒரு போலிஸ் அதிகாரி அப்பாவிப் பெண் ஒருவரைத் பட்டப்பகலில் நடுத்தெருவில் எந்தக் கூச்சமும் இன்றி வயர்களால் தாக்கி தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம் பலரது உறங்கிக்கிடந்த உள்ளுணர்வைத் தட்டியெழுப்பியுள்ளது. ராஜபக்ச தண்டிக்கப்படப் போகிறார் என்ற மேலோட்டமான மாயைக்குள்ளும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான அச்ச உணர்விற்குள்ளும் முடக்கப்பட்டிருந்த மக்களின் சிந…

    • 5 replies
    • 1.6k views
  5. நெடுங்கேணி பிரதேச கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை வழங்கி உரையாற்றும் போதே “எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நடக்கும் காலம் விரைவில் வரும்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தெரிவித்தார். வடமாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் நெடுங்கேணி பிரதேசத்தை சேர்ந்த பட்டிக்குடியிருப்பு, துவரங்குளம், கற்குளம், மாமடு, முத்துமாரி நகர், கனகராயன்குளம், புத்தூர்சந்தி, மன்னகுளம், கொல்லர் புளியங்குளம், அனந்த புளியங்குளம், ஆகிய கிராம மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு உதவிகளை செயற்படுத்தினார் வைத்திய கலாநிதி சி.சிவமோகன். மேற்படி நிகழ்வு நெடுங்கேணி நகர மத்தியில் நானூறுக்கும் மேற்பட்ட மக்களின் பங்குபற்றலுடன் இன்று ஞா…

    • 0 replies
    • 443 views
  6. தேர்தல்கள் ஆணையாளரால் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியா நிலை காணப்படுகின்றதன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. இலங்கை தமிழரசு கட்சியைத் தவிர, கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகள் அனைத்தும் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளன. தமிரசு கட்சி மாத்திரம் இதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறது என்று தமக்கு புரியவில்லை என்று சுரேஷ்பிரேமசந்திரன் கூறியுள்ளார். அதேநேரம், முல்லைத்தீவ…

    • 0 replies
    • 356 views
  7. சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்குமான பாதுகாப்பு பேச்சுவார்த்தை இந்த மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. புதுடில்லியில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சிறிலங்காவின் சார்பில் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், இந்தியாவின் சார்பில் இந்திய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துக் கொள்ளவுள்ளனர். கடந்த வருடமும் இந்த பேச்சுவார்த்தைகள் புதுடில்லியிலேயே நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/34350/57/10/d,article_full.aspx

    • 0 replies
    • 243 views
  8. தமி­ழ­கத்தின் முன்னாள் முதல்வர் ஜெய­ல­லிதா சிறைவாசம் சென்று விட்டார். இனி எமக்கு எந்த பிரச்சி­னையும் இல்லை எல்லாம் முடிந்­து­விட்­டது என்று அர­சாங்கம் குதூ­க­லிக்­கு­மாயின் அது அர­சாங்கத்தின் தப்­புக்­க­ணக்­காகும். இனிதான் அர­சாங்­கத்­திற்கு பல­மான பிரச்­சி­னைகள் காத்­தி­ருக்­கின்­றன என்று நவ­ச­ம­ச­மாஜ கட்­சியின் தலைவர் விக்கி­ர­ம­பாகு கரு­ணா­ரட்ண தெரி­வித்தார். இலங்­கையில் இலட்­சக்­க­ணக்­கான அப்­பாவி தமி­ழர்­களை கொன்று குவித்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஒரு போர்க்­குற்­ற­வாளி என்றும் அவரை சர்­வ­தேச நீதி­மன்றில் நிறுத்த வேண்­டு­மென்றும் முன்னாள் தமி­ழக முதல்வர் ஜெயல­லிதா உரக்க குரல் கொடுத்தார். இன்று அந்த குரல் முடங்கி விட்­டது. இனி எம்மை யாரும் அச்­சு­றுத்த முடி­…

  9. இலங்கை மற்றும் குவைத் ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என கருதப்படும் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன், கைது செய்யப்பட்ட ரசூல் மைதீன் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அம்ஜத் கான் என்ற நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இலங்கைக்கு புறப்பட்டுச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிந்ததாக இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சென்னை பிராந்திய பணிப்பாளர் பிரேம் ஆனந்த் சிங்ஹா வெளியிட்டுள்ள அற…

  10. -ஏ.எம்.அப்துல் பரீத் 60 வருடம் பழமைவாய்ந்த வெள்ளைமணல் நீரோட்டுமுனை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல், தனவந்தர்கள் மற்றும் பொதுமக்களின் நிதி உதவியுடன் 90 இலட்சம் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு நேற்று வெள்ளிக்கிழமை(03) திறந்து வைக்கப்பட்டது. இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் மற்றும் உலமாக்களும் கலந்து கொண்டனர். அத்தோடு உலமா மௌலவி ஒருவருக்கு நினைவுச்சின்னம் வழங்கி வைத்தார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-52/129526-2014-10-04-11-17-01.html

    • 2 replies
    • 384 views
  11. ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ நெடுந்தீவுக்கு அடுத்த வாரம் செல்லவுள்ள நிலையில் ஒரு வருட காலமாக யார் கண்ணிலும் படாமல் ஓய்வெடுத்த வடதாரகைப் படகு நேற்றைய தினம் திடீரென குறிகட்டுவான் துறைமுகத்துக்கு கடற்கடையினரால் கொண்டுவந்து விடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதுவரை காலமும் வடதாரகை கடற்படையினரின் கைவசமிருந்தது. இது தொடர்பில் பல தரப்பினராலும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டும் இருந்தது. ஆனாலும் மக்கள் பயன்பாட்டுக்காக வராத வடதாரகை தற்போது ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு தனது சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=522383513105383138

  12. கைதடி சந்தியில் கடந்த செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் வியாழக்கிழமை (02) கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். கைதடியிலுள்ள வாசிகசாலை ஒன்றின் முன்னால் நின்றிருந்த நால்வர் மீது, மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இதில் சிறுகாயங்களுக்குள்ளாகிய நால்வரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு, சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்;குட்பட்ட இருவர், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூவர் மற்றும் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூவர் என எண்மர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களை கைது செய…

    • 0 replies
    • 756 views
  13. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எதிரான தடையை நீக்குமாறு பொதுபல நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் தனிப்பட்ட நபர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு எதிரான தடையை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் தலைவர் வணக்கத்திற்குரிய எஸ்.ஜே.இமானுவல் அருட்தந்தை கோரியுள்ளார். பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகாரச் செயலாளர் பிலிப் ஹாமொன்டிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இ…

  14. நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பிறகு பொதுபலசேனாவை ஊக்குவித்து தனது நோக்கத்தை அடைய நோர்வே நாடு மறைமுகமாக பொதுபலசேனாவுக்கு நிதி வழங்கி வருகின்றது என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பொதுபலசேனா கட்சி மக்களுக்கிடையில் உள்ள இன ஐக்கியத்தை சிதைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது. இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவே செயற்படுகின்றது. தமிழ் மக்களிடம் சிநேகபூர்வமாக உள்ளது. தற்போது தமிழ் கூட்டமைப்பின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜா பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இணைந்து தங்களது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். இனப்பிரச்சினையை தீர்க்க ஆதரவு வழங்காமல் இழுத்தடிப்பதன் மூலம…

  15. வடபகுதிக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் நலன்சார்ந்த பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ள நிலையில், அவரது இப்பயணம் வெற்றி பெறுவதற்கும், இதன்மூலம் மக்கள் முழுமையான பயன்களை பெற்றுக்கொள்வதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் சனிக்கிழமை (04) இடம்பெற்ற ஜனாதிபதியின் வடபகுதிக்கான விஜயம் தொடர்பாக இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 12ஆம் திகதி வடபகுதிக்கு வருகைதரவுள்ளார். இவ்வாறு வருகைதரும் ஜனாதிபத…

  16. சம்பந்தனுக்கு மோடி கூறிய அறிவுரை என்ன? - புதுக்கதை விடும் சுப்பிரமணியசுவாமி [sunday 2014-10-05 09:00] ஈழத்தையும், தமிழக அரசியல் தலைவர்களையும், புலம்பெயர் தமிழர்களையும் மறந்து விடுமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு அறிவுரை வழங்கியுள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர், மோடியின் இந்த அறிவுரையை ஏனைய தமிழ்க்கட்சிகளும் பின்பற்றி இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணமுன் வரவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.எனினும், மோடியை சந்திக்கச் சென்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர், தமிழகத்திலும் பாரதீய ஜனதா கட்சியினரை சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. h…

  17. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடமொன்றை திறந்து வைப்பதற்கு சென்ற உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்கவுக்கும் சத்தியக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரினால் நீர் தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலாங்கொடை பம்பஹின்ன பகுதியில், சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட விடுதியை திறந்து வைப்பதற்காக இன்று காலை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அங்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது மாணவர்களுக்கும் உயர்கல்வி அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையொன்றின் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்தே …

    • 0 replies
    • 373 views
  18. சிறிலங்காவில் 2012ஆம் ஆண்டு வவுனியா சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல்களின்போது கொல்லப்பட்ட மரியதாஸ் தில்ருக்ஷன் எனும் கைதியின் மரணம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கை ஏற்கக்கூடாது என்று அரச தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை நீதிமன்றம் நிராகரித்தது. மரியதாஸ் தில்ருக்ஷனின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை விசாரிப்பதற்கு, பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு அனுமதி அளித்தது. மனு அழைக்கப்பட்டபோது ஆட்சேபனைகளை முன்வைத்த அரசதரப்பு வழக்குரைஞர், சிறைச்சாலை கலவரத்தை முறியடிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதே குறித்த கைதி உயிரிழந்ததாக கூறினார். இந்த நடவடிக்கைய…

    • 0 replies
    • 395 views
  19. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுபெறவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கடந்த 3ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5ம் திகதி மாலை நிறைவுக்கு வரவுள்ளது. நல்லை ஆதினக்குருக்களால் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைக்கவுள்ளார். உண்ணாவிரதம் இருந்த முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் சுதர்சிங்க விஜயகாந்த் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின் பிணையில் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/34336/57//d,article_full.aspx

    • 0 replies
    • 363 views
  20. யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் போலி தங்கம் விற்பனை செய்து பொது மக்களை ஏமாற்றி வந்த நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபர்களிடம் இருந்து கெப் வாகனம், பித்தளை செம்பு, 2 கிலோ 800 கிராம் போலி தங்க பொத்தான்கள் மற்றும் 3 கிலோ 230 கிராம் ஈயம் என்பன மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்கள் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாகத் தெரிவித்த யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.http://www.pathivu.com/n…

    • 0 replies
    • 336 views
  21. -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி வட்டக்கச்சி குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் சனிக்கிழமை(04) மாலை உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை(05) தெரிவித்தனர். இராமநாதபுரம் புதுக்காடு பகுதியை சேர்ந்த கருணாநிதி கோகுலகீதன் (வயது 13) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனியார் கல்வி நிலையத்திற்கு சென்றுவிட்டு, நண்பர்களுடன் குளத்தில் குளிக்க சென்ற வேளையிலேயே மேற்படி சிறுவன் உயிரிழந்துள்ளார். சடலம் மீட்கப்பட்டு, பிரதேச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். மேற்படி மாணவன் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்விகற்று வந்தவர் ஆவார். இதேவேளை, கிளிநொச்சி கந்தன் குளத்தில் நீரில் மூழ்கி கடந்த…

  22. ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவைப் போட்டியிட வேண்டாம் என்றும் பொது வேட்பாளரை களமிறக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தன்னை சந்தித்த ரணிலுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பொதுவேட்பாளருக்கு ஆதரவு வழங்காமல் ஐ.தே.கட்சி தனியாகக் களமிறங்கும் எனவும் அதன் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் எனவும் உத்தியோகபூர்வமற்ற செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கும…

  23. வடக்கில் இராணுவத்தால் 28, 316 ஏக்கர் நிலம் அபகரிப்பு news வடமாகாணத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 28. 316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள். நண்பர்கள் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழிந்துகொண்டிருப்பதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாகாண சபையில் எதிர்வரும் 9 ஆம் திகதி நில அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பில் ஆராய்வதற்கான விசேட அமர்வு நடைபெறவுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய 3 மாவட்டங்களிலும் மேற்படி அளவு நிலம் அபகரிப்பக்கட்டுள்ளதா…

  24. -எஸ்.றொசேரியன் லெம்பேட் மடு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முள்ளிக்குளம் குளத்துக்கு, வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் நிதியுதவியின் கீழ், அங்குள்ள நன்னீர் மீன்பிடியியலாளர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கோடு, வெள்ளிக்கிழமை (03) சிலாப்பிய மற்றும் காப் இனம் சார்ந்த சுமார் 80 ஆயிரம் நன்னீர் மீன்குஞ்சுகள் அமைச்சர் பா.டெனிஸ்வரனால் உத்தியோகப்பூர்வமாக விடப்பட்டது. இந்நிகழ்வுக்கு, மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ். வரப்பிரகாசம், பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ். பீட்டர் மற்றும் எம். ராசசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/…

  25. மடு பிரதேசத்தில் சூரிய சக்தி மூலம் ஒளிரும் வகையில் பொருத்தப்பட்ட வீதி விளக்குகள் வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனிலால் உத்தியோக பூர்வமாக திறந்து மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு மாந்தை மேற்கு பிரதேச சபையின் தலைவர் எஸ். வரப்பிரகாசம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ்.பீட்டர்,எம்.ராசசிங்கம் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர். இத்திட்டத்தின் மூலம் மின்சார வசதிகள் அற்ற கிராமங்களான தட்சனா மருதமடு, கீரி சுட்டான், முள்ளிக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் நன்மை அடைவார்கள் எனபதும் குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=119893512604876007

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.