ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
Published By: VISHNU 06 OCT, 2024 | 07:43 PM கம்பஹாவில் உள்ள ஹோட்டல் மற்றும் ஹன்வெல்லவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இணையம் மூலம் மோசடி செய்த 40 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 சீனர்கள், 4 இந்தியர்கள் மற்றும் 6 தாய்லாந்து பிரஜைகள் உட்பட 40 வெளிநாட்டவர்கள் ஆவர். தடயவியல் பரிசோதனைக்காக 499 மொபைல் போன்கள், 25 மடிக்கணினிகள் மற்றும் 29 டெஸ்க்டாப் கணினிகள் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195647
-
-
- 3 replies
- 646 views
- 1 follower
-
-
06 OCT, 2024 | 05:11 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்துவதோடு, மீண்டும் அவ்வாறானதொரு அழிவுக்கு நாட்டுக்குள் இடமளிக்காத வகையில், பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியும் நியாயமும் நிலை நிலைநாட்டப்படுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டிய சென். செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு உறுதியளித்தார். இன்று காலை கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக…
-
-
- 10 replies
- 381 views
- 1 follower
-
-
சமஸ்டியை - பாரம்பரிய தமிழர் தாயகத்தை - யுத்த குற்றங்களிற்கான சர்வதேச பொறிமுறையை ஏற்காத - சமாதான முயற்சிகளை எதிர்த்த ஜேவிபி - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 06 OCT, 2024 | 03:04 PM ஜேவிபியின் தமிழர் விரோத கடந்த காலங்கள் சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை, இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒரு மூலோபாய கூட்டணியை உருவாக்கி எதிர்கால ஜனநாய செயல்முறையை ஒற்றுமையாக எதிர்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறிலங்காவில் அடுத…
-
-
- 9 replies
- 717 views
- 1 follower
-
-
06 OCT, 2024 | 01:17 PM (ஆர்.ராம்) பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து போட்டியிடுவதற்கு சாதகமான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா, பொதுச்செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம், சுமந்திரன், சிறிதரன், குகதாசன் ஆகியோர் நேற்று மாலை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயெல் இம்மானுவேல் ஆண்டகையை நேரில் சந்தித்து உரையாடி இருந்தார்கள். திருகோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தினையே தக்க வைத்துக்கொள்ளும் நிலைமைகள் காணப்படுகின்ற நிலையில் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்ற …
-
- 4 replies
- 329 views
- 1 follower
-
-
https://www.virakesari.lk/article/195618 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லை ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் ஒதுங்கியிருப்பதா இல்லை பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளாக அரசியல் கட்சிகளை கட்டுப்படுத்தி வைத்திருப்பதா என்று தீர்மானம் எடுக்க முடியாது சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபை தடுமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் பங்காளிகளில் ஒன்றான சிவில் அமைப்புக்களின் ஒருங்கிணைவான தமிழ் மக்கள் பொதுச்சபையானது, ஆரம்பத்தில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை இணைத்து தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பாக தேர்தலுக்கு முகங்கொடுப்பதென பேச்சுக்களை நடத்தியிருந்தது. பின்னர் இருநாட…
-
- 4 replies
- 301 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு நாள் இன்று ஞாயிற்றுக்கிழமை சர்வமத நிகழ்வுடன் கொண்டாடப்படவுள்ளது. பொன் அகவை நிறைவு நாளான இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள இந்து மாமன்றம், பௌத்த சகோதரத்துவ சமூகம், கத்தோலிக்க மாணவர் மன்றம் மற்றும் முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பல்வேறு மதப் பிரார்த்தனைகள் இடம்பெற்று கைலாசபதி கலையரங்கத்தில் கூட்டு மத நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேகமும், விசேட பூஜையும், சிறப்பு வழிபாடுகளும், பௌத்த சகோதரத்துவ சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஶ்ரீ நாகவிகாரை சர்வதேச மத்திய நிலையத்தில் பௌத்த மதப் பிரார்த்தனைகளும், கத்தோலிக்க மாணவர் மன்…
-
- 1 reply
- 993 views
- 1 follower
-
-
உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது. 1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரி 50 ரூபாவில் இருந்து 60 ரூபாவாகவும், பெரிய வெங்காயத்திற்கான வரி 10 ரூபாவில் இருந்து 30 ரூபாவாகவும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலைகள் கனிசமான அளவு அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/310319
-
- 1 reply
- 120 views
- 2 followers
-
-
06 OCT, 2024 | 07:13 PM எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் யாழ். மாவட்டத்திற்கான வேட்பாளர்களின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தை செல்வா மற்றும் இரும்பு மனிதர் நாகநாதன் ஆகியோரின் பேரனும் சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான இளங்கோவன் தேர்தலில் போட்டியிட கட்சியின் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/195645
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
மீண்டும் கூடியுள்ள தமிழரசுக்கட்சியின் நியமனக்குழு Vhg அக்டோபர் 06, 2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழு வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் இன்று (06-10-2024) கூடியுள்ளது. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 பேர் கொண்ட நியமனக்குழுவை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நியமித்திருந்தது. களம் இறங்கவுள்ள வேட்பாளர்கள் இந்நிலையில் குறித்த நியமனக்குழு இன்று காலை 11 மணியளவில் வவுனியாவில் கூடியுள்ளது. இதன்போது எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில்…
-
- 0 replies
- 445 views
-
-
விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்! இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் விவசாய வேலைகளை விட்டு மக்கள் வெளியேறுவதுடன் நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டினார். இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதார…
-
- 3 replies
- 495 views
- 1 follower
-
-
தேர்தலில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம்! எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் என சர்வஜன அதிகாரம் கூட்டணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார் தெரிவித்துள்ளார். இன்று (06) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு தெரிவிக்க எங்களிடம் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த புதிய இளைஞர்கள், யுவதிகள், அரசியல் செய்ய விரும்புபவர்கள் ஒரு செய்தி நாங்கள் கூற விரும்புகின்றோம். நாங்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு கட்சிகளுடனும் தேசிய கட்சிகளுடனும் இணைந…
-
-
- 3 replies
- 1.1k views
-
-
விபத்தில் காயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வடமராட்சி – கிழக்கு, செம்பியன்பற்று பகுதியில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து உள்ளக வீதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று வடக்கு நாற்சந்தியில் ஒன்றுடன் ஒன்று மோதி குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தின் போது பலத்த காயமடைந்த மாமுனை பகுதியை சேர்ந்த முன்னாள் போராளியும், கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணியை மேற்கொண்டுவந்தவருமான நடேசு…
-
- 0 replies
- 165 views
-
-
வன்னியில் தனித்து களமிறங்கும் சிறீரெலோ கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமது கட்சி சொற்ப வாக்குகளால் ஆசனத்தை இழந்திருந்தது, எனினும் மக்கள் எமக்கு அன்று அளித்த வாக்கு எண்ணிக்கை வன்னியில் பெரும் வாக்கு வங்கி உள்ள கட்சியாக எம்மை உருவாக்கியது என்று சிறீரெலோ கட்சி தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அன்பிற்கினிய எங்கள் உதிரத்தில் கலந்த வன்னிப் பெரு நிலப்பரப்பின் மக்களுக்கான அறிவித்தல் மாற்றத்திற்கான வன்னியில் சந்தர்ப்பத்தை தருமாறு கேட்கின்றோம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சியானது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் இணைந்த வன்னி தேர்தல…
-
- 0 replies
- 247 views
-
-
மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திய வீரகெட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய மின் கம்பிகள் மின்சார சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டன. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளை அகற்றும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில், வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய இரண்டு மின் கம்பிகள் அகற்றப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் வலஸ்முல்ல பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கார்ல்டன் தோட்டத்தில் 03 மும்முனை மின்கம்பிகள் போடப்பட்டுள்ளதாகவும…
-
- 0 replies
- 635 views
-
-
புதிய கூட்டணிக்கு ரணில் தலைவர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. எனினும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடிய போதி…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச adminOctober 6, 2024 அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அவா் தீர்மானித்துள்ள நிலையில் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த காலங்களில் பல்வேறு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அங்கம் வகித்த பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள மைதொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ள…
-
-
- 8 replies
- 785 views
- 1 follower
-
-
காத்தான்குடியிலிருந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுமிகள் பாலியல் வன்கொடுமை பெற்றோர்களின் தொல்லை தாங்க முடியாது, கொழும்பு சென்று வாழ வேண்டும் என வீட்டை விட்டு வெளியேறிய 14 வயதுடைய இரு சிறுமிகளை விடுதி ஒன்றிற்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்த சென்ற தனியார் பேருந்தொன்றின் நடத்துனர் மற்றும் சாரதி சனிக்கிழமை (5) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர் . காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய இரு சிறுமிகளின் பெற்றோர்கள் தொடர்ச்சியாக கண்டித்து வருவதன் காரணமாக அவர்களின் தொல்லை தாங்க முடியாது வீட்டை விட்டு கொழும்புக்கு சென்று தங்கி வாழ வேண்டும் என திட்டமிட்ட சிறுமிகள் புதன்கிழமை (02) அன்று காலை பாடசாலை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறி மட்டக்களப்புக்கு சென்று ஓர் இ…
-
- 0 replies
- 202 views
-
-
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள்! Share This : ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி என்பன இணைந்து ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் போட்டியிடுகின்றன. குறித்த கட்சியில் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான…
-
- 0 replies
- 232 views
-
-
Published By: DIGITAL DESK 7 06 OCT, 2024 | 10:00 AM கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2023ம் ஆண்டிற்கான 28 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா நேற்று சனிக்கிழமை (05) மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்று வருகின்றது. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில் நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது. இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராஜா பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்குவதுடன் பட்டதாரிகளின் பட்டங்களையும் உறுதிசெய்துள்ளார். இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் (யாழ்ப்பாணம்) ஸ்ரீ சாய் முரளி அவர்கள் இந்நிகழ்…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
06 OCT, 2024 | 09:39 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வதற்கு ஆதரவளித்தல் உள்ளடங்கலாக ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக நாட்டில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளைப் புதிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என 25 சிவில் சமூக அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இதுகுறித்து சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம், சட்டம் மற்றும் சமூக நிதியம், பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, இனக்கற்கைளுக்கான சர்வதேச நிலையம் உள்ளிட்ட 25 அமைப்புக்கள் ஒன்றிணைந்து வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நாட்டில் நட…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
05 OCT, 2024 | 09:39 PM (நா.தனுஜா) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரால் எழுதப்பட்ட 'இந்திய வழி: நிலையற்ற உலகுக்கான உத்திகள்' எனும் நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் 'பாத்பைன்டர் பவுன்டேஷனின்' ஸ்தாபகரும், இந்தியாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான மிலிந்த மொரகொடவினால் நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகைதந்திருந்த அமைச்சர் ஜெய்சங்கரிடம் கையளிக்கப்பட்டது. குறுகிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை (04) நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங…
-
- 1 reply
- 139 views
- 1 follower
-
-
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு நபர்களுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த சந்தேக நபர்கள் அவர்களது சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஆணைக்குழு வட்டாரங்கள் இது தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு வட்டாரங்கள் கூறுகையில், இந்த ஏழு நபர்களிடம் அவர்கள் சாதாரண சம்பளத்தில் வாங்க முடியாத அளவுக்கு அதிக சொத்துக்களை எப்படி சம்பாதித்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட விசாரண…
-
- 0 replies
- 107 views
- 1 follower
-
-
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். Digital News Team அரசியல் தீர்மானம் எடுத்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வது அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான அரசியல் கௌரவமாகும். ஆனால் அதனை செய்ய எள்ளளவும் துணிய மாட்டார்கள் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று(05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் தெற்கு அரசியலில் மாற்றம் என்பது தற்போது கவர்ச்சி அரசியலாகி மக்கள் …
-
- 1 reply
- 155 views
-
-
மன்னார் தேர்தல் தொகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம். Digital News Team இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து களம் காண்கிறது. அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தின் வேட்பாளர்கள் தெரிவில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் மன்னார் தேர்தல் தொகுதியை மையமாகக் கொண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதன், மன்னார் மாவட்டத்தைச் சே…
-
- 0 replies
- 168 views
-
-
புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம் | யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் written by பூங்குன்றன் October 5, 2024 6 minutes read 0 FacebookTwitterPinterest புதியதொரு அரசியற் பண்பாட்டினால் புத்துயிர் பெறட்டும் தமிழர் தேசம் ! சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் மற்றும் தேர்தல் புறக்கணிப்பு என்பன கனிசமானளவு தமிழ் மக்களை அணி திரட்டுவதில் முன்நகர்ந்…
-
- 0 replies
- 142 views
-