Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நகைப்பிற்கிடமான இலங்கையின் நீதித்துறை பாகம் –3 -குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக இனியவன்- நகைப்பிற்கிடமான இலங்கையின் நீதித்துறை பற்றி வெளிக்கொண்டு வரும் கட்டாய பணியின் தொடர்ச்சியாக இந்த வாரம் மற்றுமொரு சம்பவத்தைப் பார்ப்போம். யாழ்ப்பாணம் நல்லூரடியை சேர்ந்த 16 வயதேயான இளைஞர் ஒருவர் அங்குள்ள தேநீரகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருடைய அம்மா, அப்பா இவர் சிறுவயதில் இருக்கும் போதே இறந்து போனார்கள். இவர் மிகவும் வறுமையான நிலையில் தனது உறவினர்களுடன் வசித்து வந்தார். இவரது வறுமையினை கண்ணுற்ற இவரது உறவினரின் நண்பர் ஒருவர் இவரை உலோக ஓட்டு வேலை பழகுவதற்காக அவரிற்கு சொந்தமான கொழும்பிலுள்ள உலோக ஓட்டு வேலை நிலையம் ஒன்றிற்கு அழைத்து சென்றார். இந்த குறிப்பிட்ட இளைஞன் வேலை செய்யும்…

  2. கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் புரூனோ றொட்றிகியூஸ் பரில்லா உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை இலங்கை வருகிறார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை - கியூபா நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 55 ஆவது ஆண்டு பூர்த்தியை இணைந்து கொண்டாடும் விதத்திலேயே அவரின் வருகை அமைகின்றது. http://malarum.com/article/tam/2014/09/06/5179/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE…

  3. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருக்கமான உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது என நன்கு தகவலறிந்த வட்டாரங்கள் தெரவித்துள்ளன. இந்தக் குழுவில் திஸ்ஸ அத்தநாயக்க, மங்கள சமரவீர, கபீர் ஹசீம், மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இருந்தனர் என நம்பப்படுகின்றது. இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக சந்திரிகா குமாரதுங்கவை போட்டியிடுமாறு கேட்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு அவர் பதில் கூறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்த சந்திப்பின்போதான பேச்சுக்களில் ஐ.தே.க. குழுவினரின் வேண்டுகோளை சந்திரிகா மறுக்கவும் இல்லை எனக் கூறப்படுகின்றது. - http://malarum.com/article/ta…

  4. குடும்ப விபரங்கள் கேட்கப்படுகின்றன - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- கொழும்பில் மீண்டும் பதிவுகள்- வீடுகளுக்குச் செல்லும் பொலிஸார் படிவங்களை வழங்குகின்றனர். குடும்ப விபரங்கள் கேட்கப்படுகின்றன - யுத்தம் நடைபெற்ற காலத்தில் கொழும்பில் வாழும் தமிழ் மக்களை பொலிஸார் பதிவு செய்தது போன்று தற்போதும் பதிவுகள் மேற்கொள்ளப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பம்பலப்பிட்டி பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸார் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து கையளிக்குமாறு கேட்டுள்ளனர். வீட்டு உரிமையாளரின் பெயர் மற்றும் வீட்டில் வாடகைக்கு தங்கியுள்ளவர்களின் விபரங்கள் அனைத்தும் படிவங்களில் கோரப்பட்டுள்ளன. இதனால் கொழும்பில்…

    • 4 replies
    • 550 views
  5. மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள சர்வதேச விசாரணையின் போது சாட்சியமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டால் அதனை ஏற்க தான் தயாரென முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையோன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த போதே முன்னால் இராணுவத் தளபதி இவ்வாறு கூறினார். தான் தலைமை வகித்த இராணுவம் சர்வதேச சட்ட விதிமுறைகளுக்கு அமையவே யுத்தத்தில் ஈடுபட்டதாகக் கூறிய சரத் பொன்சேகா, வெள்ளைக் கொடிகளை ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொல்லுமாறு தான் உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இவ்வாறான விசாரணையோன்றுக்கு முகம் கொடுக்க நான் தயங்க மாட்டேனென்று கூறிய அவர், இலங்கை இராணுவம் போர்க் குற்றங்களில் ஈட…

    • 3 replies
    • 913 views
  6. தாம் யாழ்ப்பாணம் வரும்போது புலனாய்வாளர்கள் எங்களையும் விட்டுவைப்பதில்லை. பின்தொடர்ந்து ஒவ்வொரு விடயத்தையும் கண்காணிக்கிறார்கள். அவர்கள் பின்தொடர்கிறார்கள் என்பதை அவதானித்துள்ளேன் என முதலமைச்சரிடம் தெரிவித்தார் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜூர்கன் மொர்காட். இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட்டுள்ளதாக காட்டப்படுகின்றபோதும், சிவிலுடையில் இராணுவ ஆதிக்கம் தொடர்வதாக இன்றைய சந்திப்பின்போது ஜேர்மன் தூதருக்கு முதலமைச்சர் விளக்கமளித்தார். இதனைக் கேட்ட தூதுவர், அதனை ஏற்றுக்கொண்டு தானும் இவ்வாறான விடயங்களை அவதானித்துள்ளார் எனவும் தம்மையும் அவர்கள் விட்டுவைப்பதில்லை எனவும் கூறினார். தூதுவருடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது தமக்கிடையிலான உரையாடல்கள் குறித்து முத…

  7. யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் இன்று அதிகாலை மர்ம விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த வடிரக வாகனம் வீதியின் அருகிலுள்ள மதிலுடன் மோதியதாலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் இவ் விபத்து இடம்பெற்று 8.30 மணிவரை யாழ். போக்குவரத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும் விபத்தில் காயடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை எந்த விதமான தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இவ்விபத்தின் தடையங்களை வைத்து பார்க்கும் போது வாகனத்தில் பயணித்த இருவரும் படுகாயம் அடைந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டனர். இதேவேளை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் இதுவரை யாழ்.போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள…

  8. மீள்குடியேற்றத்தை வலிறுத்தி வலி.வடக்கு மக்கள் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் ஏற்பாடு செய்திருந்த கூட்டுப் பிரார்த்தனை இரண்டாவது தடவையாக இன்றும் புலனாய்வாளர்களது அச்சுறுத்தலால் நிறுத்தப்பட்டுள்ளது. பிற்பகல் 3மணியளவில் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாமில் நடாத்த ஏற்பாடு செய்திருந்த கூட்டுப்பிரார்த்தனைக்கு பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வு துறையினரும் இணைந்து குறித்த இடத்திற்கு வந்து கொட்டகைகள் மற்றும் ஏற்பாட்டு இடங்களை அகற்றுமாறும் அச்சுறுத்தியுள்ளனர். அத்துடன் இன்றைய கூட்டுப்பிரார்த்தனையினை நிறுத்த வேண்டும் என்றும் அவ்வாறு தவறும் பட்சத்தில் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தியதால் ஏற்பாட்டாளர்கள் பிரார்த்தனை கொட்டகைகளை அகற்றியதுடன் பிரார்த்தனையினையும் கை…

  9. இன்று காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற, மாகாணசபை உறுப்பினர்களுடனான இலங்கைக்கான அமெரிக்க பிரதி பிரதி பிரதம திட்டப்பணிப்பாளர் உடனான சந்திப்பு. http://www.pathivu.com/news/33651/57//d,article_full.aspx

  10. சிறீலங்காவுக்கான ஜேர்மன் தூதுவர் ஜூர்கன் மொர்காட் யாழ்ப்பாணத்திற்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஒருநாள் பயணமாக இன்று யாழ்பாணம் வந்த அவர் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து வடமாகாண செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி குறித்தும் கலந்துரையாடியுள்ளார். சந்திப்பானது முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. http://www.pathivu.com/news/33649/57//d,article_full.aspx

  11. இன்னுமாடா இந்த உலகம் எங்கள நம்புது எண்டு ஹக்கீம் நானாவும் அவரின்ட சகோதர் ரிஷாட்டும் சொல்லுறது நல்லாக் கேக்குது பாருங்கோ. உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமே? அமைச்சர் ஹக்கீமும் அமைச்சர் ரிசாட்டும் சேந்தது ஏன் தெரியுமே? முஸ்லீம்களுக்கு எதிராய் தலைதூக்கியுள்ள தீவிரவாத அமைப்புக்களுக்கு எதிராய்தானாம் ஒண்டு சேந்திருக்கினமாம்... அட மெய்யாத்தான்.. சிரிக்காமல் நம்புங்கோ.. எனக்குத் தெரியும் நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டு. ஓ... உவையள் குடியிருக்கிற அரசாங்கம்தான் தீவிரவாத அரசாங்கம் கண்டியளோ? சிறுபான்மை இனங்களான முஸ்லீம்களையும் தமிழர்களையும் ஒடுக்கி அழிக்கிற தீவிரவாத அரசாங்கம். உங்களுக்கு எதிராய் சுழன்றடிக்கிற பொதுபலசேனாவைப் போன்ற ஆக்களையும் நீங்கள் குடியிருக்கிற அரசாங்கம்தான் உர…

  12. நாம் கடந்த காலத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை எமது வெற்றுக் கோஷங்களாலும் கற்பனாவாதத்தாலும் இழந்திருக்கிறோம். இனியும் நாம் அப்படி இருந்துவிடமுடியாது. முஸ்லிம் மக்களையும் எமது தாயகப் பிரதேசத்திலுள்ள அனைத்தத் தரப்பினரையும் ஒன்றிணைத்து இறுதித் தீர்வுக்கான நடவடிக்கையை எடுப்போம். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவைர் இரா.சம்பந்தன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு இன்று மாலை 4.30 மணிக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இன்று இடம்பெற்ற மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- மஹிந்த அரசுக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு மக்கள் …

  13. எமது இனத்தை தொடர்ச்சியாக கையேந்தும் இனமாகவைத்திருப்பது தான் மத்திய அரசினதும், அவர்களுக்கு சேவை புரியும் கும்பலினதும் வேலைத்திட்டமாக இருக்கிறது என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். கல்விரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், ஒரு இனம் பலவீனமாக இருக்கும் போது அந்த இனம் தான் விரும்பிய அரசியல் இலக்கை அடைவது மிகவும் கடினமானதாகும். தமிழினத்தை கல்வி, பொருளாதார ரீதியாக தொடர்ச்சியான முறையில் பலவீனப்படுத்துவதற்கு ஆள்கின்ற மத்திய அரசாங்கம், மக்களுடைய வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பிடவும், கல்வி ரீதியான உயர்வை எய்திடவும் முயற்சி எடுக்கின்ற மாகாண அரசாங்கத்தை செயற்படவிடாமல் திட்டமிட்ட வகையில் முடக்கி வருகின்றது. வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் அளவெட்டி பிரதேசத்த…

  14. 03.09.2014 இலங்கைக்கு எதிராக நோர்வை அரசாங்கம் வாய்த்திறக்க வேண்டிய தருணம் வந்திருப்பதாக நோர்வேயில் வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. யுத்த காலத்தில் இலங்கை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நோர்வே அரசாங்கம் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தது. யுத்தம் நிறைவடைந்த பின்னரும், இலங்கை மக்களின் நலன் தொடர்பில் நோர்வே அரசாங்கத்துக்கு அக்கறை இருக்குமாக இருந்தால், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட வன்செயல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் நோர்வை அரசாங்கம் தற்போது வாய்த்திருக்க வேண்டும். மகிந்தராஜஷவின் சர்வதேசத்துக்கு எதிரான பிடிவாதத்தை நோர்வே தமது அமைதியின் மூலம் மேலும் வளரவிடக்கூடாது என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. மேலும் இலங்கை அரசாங்கத்த…

  15. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் முன்னாள் புலி உறுப்பினருக்கு 20 வருட சிறைத்தண்டனை! [Friday 2014-09-05 15:00] மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சண்முகநாதன் சுதாகரன் என்பவருக்கே இன்று அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, இதில் இரண்டாவது சந்தேகநபரான சண்முகநாதன் சுதாகரன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இன்று இவருக்கு …

  16. கடந்த வருடம் 05.09.2013 அன்று தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழீழ விடிவிற்காய் போராடிய இரத்தினசிங்கம் செந்தில்குமரன் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர் தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக ஜெனிவாவில் தீயினில் தன்னையே ஆகுதியாக்கினார் .http://youtu.be/2cVbbTDjIkw சுவிஸ் சிசன் நகரில் வசித்து வந்த 35 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இரத்தினசிங்கம் செந்தில்குமரன் சுவிஸ் நாட்டுக்கு வந்திருந்த காலந்தொட்டு இவர் எந்தவொரு ஒரு தமிழர்கள் நடத்திய போராட்டத்தையும் தவறவிட்டதில்லை. அவரிடம் எந்த நேரத்திலும் தலைவரின் படமும், தேசியக் கொடியும் எப்பொழும் இருக்கும். அவர் தீக்குளிப்பதற்கு முன்னதாக தந்தையுடன் கைபேசியில் …

  17. யார் தலையிட்டு அழுத்தங்களை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. யார், எந்த அழுத்தத்தை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கில் மாத்திரமில்லை, கொழும்பிலும் 50 மீற்றருக்கு ஒரு முகாம் என்ற ரீதியில் படை முகாம்கள் காணப்படுகின்றன என்றும் அமைச்சர் கெஹெலிய மேலும் கூறினார்.http://www.pathivu.com/news/33643/57//d,article_full.aspx

  18. வர்த்தகமானியில் குறிப்பிடப்படாத ஒரு பிரதேசத்தை, பிரதேச செயலகமாக உருவாக்கி, அதற்கு சகல உதவிகளையும் எவ்வாறு வழங்கி வருகின்றீர்கள் என முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் மற்றும் வெலிஓயா பிரதேச செயலாளர் ஆகியோரிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், வடமாகாண முதலமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரின் இணைத் தலைமையில் கரைத்துரைப்பற்று மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (03) மாலை இடம்பெற்றது. இதன்போது, வெலிஓயா பிரதேசம் தொடர்பில் இடம்பெற்ற காரசாரமான விவாதத்தின் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். வெலிஓயாவிற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததுடன் அபிவிருத்தி நடவடிக்கைகள…

    • 2 replies
    • 610 views
  19. ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும்! - என்கிறது அரசாங்கம். [Friday 2014-09-05 07:00] ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், அதனை எவரும் சவாலுக்கு உட்படுத்தினால், நீதிமன்றத்தின் ஊடாகத் தீர்வு பெறப்படும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மூன்றாவது தடவை போட்டியிட முடியாது என்று தொடர்ச்சியாக கூறப்பட்டால் ஜனாதிபதி உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தைக் கோருவார் என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.http://www.s…

  20. "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துகளுடன் புதிய இந்தியப் பிரதமர் மோடி நூற்றுக்கு நூறு வீதம் உடன்பட்டுப் போகின்றார் என்று அவரே கூறினார் எனத் தெரிவிக்கப்படுவதில் எமக்கு வியப்பு ஏதுமில்லை. ஏனென்றால் புதுடில்லியின் விருப்பப்படி, அவர்களின் நிகழ்ச்சி நிரல் பிரகாரம், இந்திய எடுபிடிகளாகவே கூட்டமைப்பினர் செயற்படும் போது, அப்படித்தானே உடன்பாடு இருக்கமுடியும்..!" - இவ்வாறு தெரிவிக்கின்றார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில், ஐ.நா. விசாரணைகள் தொடர்பாகத் தமிழ் மக்கள் சாட்சியமளிப்பதற்கான வழிகாட்டல் தகவல்கள் மற்றும் அது தொடர்பான மாதிரி விண்ணப்பப் படிவம் ஆகி…

  21. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முதலாம் வருட மாணவர்கள் மூவர் மோசமான பகிடிவதைக்கு உள்ளான நிலையில், உடல் நிலை பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை (3) மாலை அனுமதிக்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கூழாவடியைச் சேர்ந்த ஆர்.தனஞ்செயன் (வயது 20), மாமாங்கத்தைச் சேர்ந்த ஆர்.விஜிகரன் (வயது 22), புன்னைச்சோலையைச் சேர்ந்த சி.சபேஸ்கரன் (வயது 21) ஆகியோரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். வந்தாறுமூலையிலிருந்து கல்லடிக்கு புதன்கிழமை (3) காலை தங்களை அழைத்துச்சென்ற கலைப்பிரிவின் இரண்டாம் வருட மாணவர்கள் 8 பேர், பகிடிவதை என்ற பெயரில் கல்லடியிலுள்ள தனியார் வீடொன்றில் தங்களை முழுநாளும் சித்திரவதை செய்ததாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் பாதி…

  22. அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்க செய்தியாளர் மாநாடு

  23. வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இந்தியாவிற்கு விஜயம் செய்ய வேண்டுமாயின் அவர், வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறியின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளும் போது உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். எந்தவொரு அதிகாரியும் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் போது அவரை விடவும் உயர் அதிகாரியிடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். அனுமதியின்றி வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிற்கு அமை…

  24. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு வழங்கக்கூடிய உதவிகள்தொடர்பாக நாம் நேற்று அமெரிக்க துணைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடியுள்ளோம். அவர்களும் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களுக்கான ஆங்கிலப் பயிற்சிப் பட்டறையை நடத்துவதற்கான உதவிகள் உள்ளிட்ட வேறு பல உதவிகளை எமக்குச் செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்று யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதுவர் அன்டறூ மான் உள்ளிட்ட குழுவினர் நண்பகல் யாழ்.டில்கோ விருந்தினர் விடுதியில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்…

  25. நாட்டின் ஏனைய மாவட்டங்களைவிட கிளிநொச்சி மாவட்டமே போசாக்கின்மையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது இங்கு 35.9 வீதமான குழந்தைகள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதற்கு கடந்த காலத்தில் இங்கு இடம்பெற்ற போரே காரணம் என்று அவர் மேலும் கூறியுள்ளார். சுகாதார அமைச்சின் புள்ளி விவரங்களின்படி நாட்டில் குழந்தைகளின் போசாக்கின்மை கடந்த தசாப்தத்தில் 17.3 வீதத்தில் இருந்து 21.1 வீதமாக அதிகரித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 18.4 வீதமாக போசாக்கின்மை குறைபாடு இருந்தது. இதேசமயம் நிறைகுறைந்த பிள்ளைகளின் பிறப்பு இலங்கையில் 22.8 வீதமாக உள்ளது எனக் கூறிய அவர் ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை திருப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.