ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை இந்திய பிரதமர் மோடி நிராகரித்தார் - திவயின கூறுகின்றது திகதி: Aug 30, 2014 | இணைத்தவர்: மாலதி 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற அதிகார பரவலாக்கத்தை சிறீலங்கா அரசாங்கத்தின் ஊடாக பெற்றுத் தருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த கோரிக்கையை சிறீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. அப்படியான விரிவான அதிகாரங்களை எந்த வகையிலும் வழங்க முடியாது என சிறீலங்கா அரசாங்கம் மீண்டும் இந்திய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்ட தரப்புகள் தெரிவித்ததாக திவயின கூறியுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு பரந்துபட்ட அதிகார பரவலாக்கலை பெறுவதற்காக சிறீலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்க…
-
- 1 reply
- 486 views
-
-
குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி அதிக வருமானம் ஈட்டத்தக்க வகையில் கற்றாளைச் செய்கைகை மன்னாரில் விவசாயிகளிடத்தில் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மன்னார், முருங்கனில் உள்ள நீர்பாசனத் திணைக்களத்தின் பிரதம வதிவிடப் பொறியியலாளர் காரியாலயத்தில் பரீட்சார்த்தமாக இந்த கற்றாளைச் செய்கை சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படுகிறது. ஒரு வருடகாலத்தில் கற்றாளை பழம் அறுவடைசெய்ய கூடியதாகவுள்ள இவ் செய்கையில், சுமார் 25 வருடங்கள் வரை அதன் பயனை பெற்றுக்கொள்ளமுடியும். இங்கு அறுவடை செய்யப்படும் கற்றாழைபழம் ஒரு கிலே 400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக முருங்கள் நீர்ப்பாசன திணைக்களத்திலிருந்து கார்கில்ஸ் நிறுவனத்தின் அனுராதபுர கிளைக்கு கற்றகழைபளம் ஏற்றுமதி செ…
-
- 32 replies
- 10.4k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் மூன்று தினங்களுக்கு ஜெயலிலதாவின் அழைப்புக்காக காத்திருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று ஜெயலலிதாவை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு ஜெயலலிதாவுடனான சந்திப்புக்கான கால அவகாசத்தை கோரியுள்ள போதும், இன்னும் இந்த காலம் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை வரையில் அங்கு தங்கி இருந்து இந்த முயற்சியை தொடரவிருப்பதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/news/33504/57//d,article_full.aspx
-
- 16 replies
- 1.1k views
-
-
இலங்கை திருப்திகரமான அதிகாரப் பகிர்வு ஒருபோதும் கிடைக்காது என்கிறது முஸ்லிம் காங்கிரஸ்
-
- 0 replies
- 453 views
-
-
இலங்கையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் தேவையாகவுள்ளது. இதன் தாற்பரியத்தை புரிந்துகொள்ளாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா ஊடாக தமது தேவைகளை நிறைவேற்ற முயற்சிக்கின்றது என்று அமைச்சரும் முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டால் அது இங்குள்ள அனைத்து மக்களையும் பாதிக்கும் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் கூறினார். பதவி விலகிச் செல்லும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கை விடயத்தில் பக்கச்சார்பாகவே செயற்பட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் புலம் பெயர் மக்களின் தேவைக்காகவே அவர் இவ்வாறு செய…
-
- 1 reply
- 415 views
-
-
சர்வதேச காணாமற் போனோர் தினம் இன்று! குளோபல் தமிழ் செய்தியாளர்:- 30 ஆகஸ்ட் 2014 உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களால் காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது. கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு என்ற அரச சார்பற்ற அமைப்பினால் இலத்தீன் அமெரிக்காவில் இரகசியமான முறையில் கைது செய்யப்படலை எதிர்த்து இக்கோரிக்கை முதன் முதலில் விடுக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக சர்வதேச மன்னிப்புச் சபைஇ மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறையும் கரிசனையும் செலுத்தி செ…
-
- 6 replies
- 810 views
-
-
இந்தியாவில் பிறந்த 21வயதுக்கு மேற்பட்டோருக்கு இலங்கை பிரஜா உரிமை பெற 25000.00 அபராதம் - பலர் தவிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:- யுத்தத்தினால் இடம்பெயர்ந்து சென்று பின்னர் நாடு திரும்பியுள்ள குடும்பங்களில், இந்தியாவில் பிறந்த 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலங்கை பிரஜா உரிமை பெறுவதற்கு அபராதமாக 25 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தாம் கிரமமான நிரந்தர வருமானத்தி;ற்கு வழியற்ற நி;லையில் இருக்கும்போது, தமது வளர்ந்த பிள்ளைகளுக்குப் பிரஜா உரிமை பெறுவதற்கான அபராதத்தைச் செலுத்த முடியாதிருப்பதாக நாடு திரும்பியுள்ள குடும்பங்கள் கூறுகின்றன. அத்துடன் கடவுச்சீட்டு பெறுவதற்கு இந்தியாவி…
-
- 0 replies
- 439 views
-
-
இந்திய பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதமரையும் சந்தித்திருந்தது. இதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு திறந்த மனத்துடன் முகம் கொடுக்க இலங்கை அரசாங்கத் தாம் வலியுறுத்துவதாகவும் மோடி தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதி வழங்கியுள்ளார். இதன்அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அரசாங்கத்…
-
- 0 replies
- 362 views
-
-
காணாமற்போனோர் தினமான இன்று பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று வவுனியாவில் நடத்தப்பட்டது. பொதுக் கூட்ட நிறைவில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்காக மனு ஒன்றை கையளிக்க வவுனியா மாவட்டச் செயலகம் நோக்கிச் சென்றவர்களை கலகம் அடக்கும் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூட்டமாக செல்லக்கூடாது என்று பொலிஸார் பணித்ததால் தாம் தனித் தனியே சென்று அரச செயலகத்தில் மனுவைக் கையளிக்கின்றோம் என்று கூறிய போதும் பொலிஸார் அதற்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் சுமார் 30 நிமிடங்கள் வரை ஏ - 9 வீதியில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டது. பின்னர் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா பஸ் நிலையம் வரை வ…
-
- 0 replies
- 449 views
-
-
யாழ்.தேவியை வரவேற்க நாவற்குழி பாலம் தயார் news கொழும்பு -காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஒக்ரோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குடாநாட்டிலுள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. அதன் ஒரு அம்சமாக யாழ்ப்பாணத்தில் முக்கிய புகையிரத நிலையங்களில் ஒன்றான நாவற்குழிப் புகையிரத நிலையத்தின் தோற்றத்தையும்,அதிலிருந்து சிறிது தூரம் செல்லும் பொழுது நாவற்குழி கடல் எல்லையினை ஊடறுத்துச் செல்லும் பாலத்தின் நவீன தோற்றத்துடனும் இது அமைக்கப்பட்டுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=557383377930240612#sthash.T68JWibE.dpuf
-
- 8 replies
- 944 views
-
-
வடக்கில் அமைச்சர் றிசாட் பதியுதீன் 18 ஆயிரம் ஏக்கர் காணியை கையகப்படுத்தியுள்ளார் திகதி: Aug 28, 2014 | இணைத்தவர்: மாலதி அமைச்சர் றிசாட் பதியுதீன், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 18 ஆயிரம் ஏக்கர் காணிப் பரப்பை கையகப்படுத்தி இருப்பதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து பொதுபல சேனாவின் பேச்சாளர் சமில லியனகே இதனைத் தெரிவித்துள்ளார். அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறுகின்ற நில அபகரிப்புகள் தொடர்பில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கவனத்தில் எடுப்பதில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார். http://www.sankathi24.com/news/18_2/58/article
-
- 3 replies
- 637 views
-
-
கோத்தாபயவும் நெருக்கமானவர்களும் களத்தில்:- குளோபல் தமி்ழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- யாழ். மணற்காடு குடத்தனைப் பகுதியில் மணல் அள்ளும் வடிக்கையில் கோத்தபாயவும் களமிறங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கென விசேட அதிரடிப்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளமை சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இது வரை காலமும் டக்ளஸிற்கு சொந்தமான மகேஸ்வரி பவுண்டேசன் மட்டுமே மணல் அகழ்ந்து விற்பதில் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் நாள் தோறும் பல மில்லியன் பணம் கைமாறி வந்திருந்தது. அதை தொடர்ந்து கோத்தபாயவின் பினாமியான விண்ணன் என்பவர் களமிறங்கியிருந்த நிலையில் தற்போது இலண்டனில் இருந்து சென்று கோத்தாபயவிற்கு நெருக்கமான புள்ளி ஒருவரும் நெய்தல் எனும் பேரில் டக்ளஸிற்கு போட்டியாக மணல் அகழ்ந்து…
-
- 22 replies
- 1k views
-
-
-ற.றஜீவன் யாழ்., வடமராட்சி, தும்பளைத் தெற்குப் பகுதியில் வடமாகாண வர்த்தக வாணிப அமைச்சின் 1.8 மில்லியன் ரூபாய் செலவில் தும்பளை மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் அமைக்கப்படவுள்ள பற்றிக் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது. வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அடிக்கல் நாட்டினார். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராம அபிவிருத்தி வர்த்தக வாணிப அமைச்சால் கிராமஅபிவிருத்தி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 46 மில்லியன் ரூபாய் நிதியில், 2 மில்லியன் ரூபாய் வடமராட்சிக்கு ஒதுக்கப்பட்டே இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுகின்றது. இ…
-
- 1 reply
- 568 views
-
-
சிறுநீரக நோயினால் வடக்கு மக்கள் பாதிகிக்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் சிறுநீரக நோயினால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு மாகாண மக்களும் தற்போது சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்கள் வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் அதிகமானவர்கள் விவசாயிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் ஆயிரம் பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். நெல் விவசாயிகளே அதிகளவில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். யுத்த காலத்தில் காவுகொள்ளப்பட்ட உயிர்களை விடவும், அதிகமானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 356 views
-
-
அழுத்கம பேருவளையில நடந்த வன்முறைச் சம்பங்களில மூட்டப்பட்ட நெருப்பு ஆறேல்ல பாருங்கோ... அது இன்னும் புகையுது. புகையிற நெருப்பை நிரந்தரமா அனைக்க சரியான ஒரு நிலைப்பாடட்டயோ சரியான எதிர்வினையையோ ஆற்றாமல் அரசாங்கத்த அசளகரியப்படுத்த விரும்பேல்ல எண்டு சொன்ன, நீதி கெட்ட நாட்டின்ட நீதி அமைச்சர் ஹக்கீம் இப்ப முஸ்லீம் மக்கள தேர்தல் காலத்தில சூடேத்திறாருங்கோ... ஊவாவில அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கப் போறாராம்.. தேர்தலில வெண்டு எடுக்கிற வோட்டோட போய் பேரம் பேசி அரசாங்கத்தில ஒட்டீண்டு இருக்கிறதுக்கு பேர் அதிர்ச்சி வைத்தியமோ??? போங்க சார்... நல்ல நீதி அமைச்சர் தானுங்கோ நீங்கள்.. ஓ.. அப்ப கிழக்கில தேர்தல் காலத்தில முஸ்லீம் தேசியம் பேசீ அங்க உள்ள பெடி – பெட்டையள உசுப்பேத்த…
-
- 0 replies
- 456 views
-
-
இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழைத்து இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலி தெரிவித்தார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அமுல் படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமி 13 ஆவது திருத்தம் 90 வீதம் அமுல்படுத்தப்பட்டதாக கூறியது முற்றிலும் பொய்யானது என்றார். புத்தி சுவாதீனம் இல்லாதவர் சுப்பிரமணிய சுவாமி என்பதும் தெட்ட தெளிவாகி விட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்த…
-
- 0 replies
- 268 views
-
-
பிரதமராகப் பதவியேற்று மூன்று மாதங்களே ஆகியிருக்கும் நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நேரம் ஒதுக்கி பிரதமர் நரேந்திர மோடி சந்தித்ததை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதுகிறது இலங்கை அரசு. பதவியேற்ற புதிதில் சார்க் மாநாட்டுத் தலைவர்களோடு பத்தோடு பதினொன்றாக ராஜபக்சவையும் அழைத்து அனுப்பி வைத்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கோ டெல்லியில் தனி மரியாதை. வெளியுறத் துறை அமைச்சர், அதிகாரிகள், பிரதமர் எனச் சந்திப்பை முடித்து சென்னை வந்திருக்கும் கூட்டமைப்பின் பிரமுகரும் எம்.பி-யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜூனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு, டெல்லி சந்திப்பு பற்றி சொல்லுங்கள்? எங்கள் கூட்டமைப்பின் மூத்த தலைவர் சம்பந்தன் தலைமையில் மாவ…
-
- 2 replies
- 306 views
-
-
தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினாலேயே மோடி கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கின்ற காரணத்தினால்தான் தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினை அழைத்து இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலி தெரிவித்தார். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அமுல் படுத்துவது தொடர்பில் பிரதமர் மோடி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் ஒப்பந்தக்காரராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமி 13 ஆவது திருத்தம் 90 வீதம் அமுல்படுத்தப்பட்டதாக கூறியது முற்றிலும் பொய்யானது என்றார். ப…
-
- 1 reply
- 453 views
-
-
-ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு – ஏறாவூர் வாவியில் சமீப சில நாட்களாக பெரிய மீன்கள் பிடிபடுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். சட்டவிரோத வலைகளை பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்துவருவதால் தற்போது பெரிய மீன்கள் பிடிபடுவது சாத்தியமாகியுள்ளதாக மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் ஏ.ஏ.பரீட் தெரிவித்தார். சிலவேளைகளில் மீனவர்களின் வருமானம் நாளொன்றுக்கு 10,000 ரூபாய் வரை கிடைப்பதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பு வாவி சூழ்ந்துள்ள ஏறாவூர், பன்குடாவெளி, நரிப்புல்தோட்டம், விளாவெட்டுவான் வலையிறவு போன்ற பகுதிகளிலுள்ள மீனவர்கள் தற்போது வாவியில் பெரிய மீன்பிடியில் ஈடுபடுவதாக ஏறாவூர் 3ஆம் குறிச்சி மீனவர் சங்கத் தலைவர் தாவூத் றம்ழான் தெரிவித்தார். தற்போது வாவியில் 3 கிலோகிராம் நிறையுடைய திலாப்…
-
- 17 replies
- 1.3k views
-
-
சீனாவுக்கான விமானசேவைகளை அதிகரிக்கிறது ஸ்ரீலங்கன் விமான சேவை! [saturday 2014-08-30 09:00] சீனாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் திமுத்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். சீனாவின் 15 உப நகரங்களுக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.உப நகரங்களில் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் எந்தெந்த நகரங்களில் விமான சேவைகளை நடாத்துவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும். தற்போது சீனாவின் நான்கு நகரங்களுக்கு வாரமொன்றில் 15 விமானப் பயணங்களை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மேற்கொள்கின்றது. இலங்கையின் பிரதான சுற்றுல…
-
- 0 replies
- 397 views
-
-
'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்' திரைப்படத்தில் வரும் பாலத்தை மீளப் புனரமைக்க இலங்கை அரசு முடிவு! [saturday 2014-08-30 09:00] 1957இல் வெளியான 'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்' ஆங்கிலத் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட பாலத்தை மீள புதுப்பித்துக் கட்டவுள்ளதாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தாய்லாந்து- பர்மிய ரயில் பாதையை அமைப்பதற்காக இந்தப் பாலத்தை கட்டுவதற்கு, ஜப்பானியர்களால் பிடிக்கப்பட்ட பிரிட்டிஷ் போர்க் கைதிகள் நிர்ப்பந்திக்கப்பட்ட கதையை இந்தத் திரைப்படம் காண்பிக்கின்றது. ஆனால், இந்தப் படம் இலங்கையில் தான் காட்சிப்படுத்தப்பட்டது. அந்தப் படத்தில் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட பாலத்தை அதேவிதமாக புதுப்பித்துக் கட்டவுள்ளதாக இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். கேகாலை மாவட்டம், கி…
-
- 0 replies
- 425 views
-
-
தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய முடியாது – அரசாங்கம்:- 30 ஆகஸ்ட் 2014 இலங்கையின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தை மீறிச் செயற்படக் கூடிய அதிகாரம் எந்தத்தரப்பிற்கும் கிடையாது என சட்ட மா அதிபர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். 240 பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதனை தடுக்குமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணைகளில் பங்கேற்ற போது சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய பிரதி சொலிசுட்டர் ஜெனரல் ஜனக் டி சில்வா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் …
-
- 0 replies
- 306 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- தம்புள்ள பள்ளிவாசலுக்கு செல்ல பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கிரிக்கட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் தேசிய அணியின் வீரர்கள் இன்று தம்புள்ள பள்ளி வாசலில் தொழுகைகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர்களும் ஏனைய அதிகாரிகளும் முயற்சித்துள்ளனர். எனினும், இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தம்புள்ள மஸ்ஜிதுள் கஹய்ரா என்னும் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்க…
-
- 8 replies
- 583 views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னியில் 31வயதான இலங்கை பெண் வாவி ஒன்றில் மூழ்கி மரணமாகியுள்ளார்.இந்தநிலையில் அவரின் மரணம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமையன்று இரவு அமேஷா ராஜபக்ச என்ற பெண், கடைக்கு பொருட்களை வாங்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என்று உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அவருடைய சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இவரின் மரணம் தொடர்பாக சந்தேகம் இருக்குமானால் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிங்களவரான அமேஷா ராஜபக்ச 2009ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இதேவேளை ஒருவாரத்துக்கு முன்னர் குறித்த பெண் உடல்கட்டுமான நிலையம் ஒன்றுக…
-
- 4 replies
- 586 views
-
-
கொழும்பில் இன்று பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச குறுக்கு விசாரணை செய்யப்படவிருந்த வழக்கொன்று குறித்து ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளர் தெரிவிக்கிறார். மிக் 29 கொள்வனவு ஊழல் குறித்து சண்டேலீடரில் வெளியான கட்டுரை தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் தொடுத்திருந்த மானநஷ்ட வழக்கு விசாரணையில் இன்று கல்கிஸை நீதிமன்றத்தில் சட்டத்தரணி சுமந்திரன் கோத்தாவை குறுக்கு விசாரணை செய்கிறார். எனினும் நீதிமன்றத்திற்கு வெளியே பிரசன்னமாகியிருந்த கோத்தாவின் விசுவாசியான பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க ஊடகவியலாளர்களை இன்றைய அமர்வு தொடர்பாக செய்தி சேகரிக்கவிடாமல் தடுத்த…
-
- 3 replies
- 614 views
-