Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சஜித் பிரேமதாச! ”முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்த கூட்டணியையும் அமைக்கப் போவதில்லை” என ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளதாவது” பொது தேர்தலை இலக்கு வைத்து பிரச்சாரம் செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தயாராகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகங்களில் இருந்து எனக்கும் ஆதரவு கிடைத்தது. இலங்கையின் முன்னேற்றத்திற்கான எனது அர்ப்பண…

  2. Published By: VISHNU 22 SEP, 2024 | 07:55 PM கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு …

  3. (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் 15 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஜனாதிபதி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) புதிய செயலாளர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்பட்டன. பிரதமரின் செயலாளர், அமைச்சின் செயலாளர் உட்பட 15 அமைச்சுக்களின் செயலாளர்கள் வருமாறு, பிரதமரின் செயலாளர் -சபுநந்திரி அமைச்சரவை செயலாளர் - எம்.டி.ஜே. பெர்னான்டோ, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் - டி.எஸ்.ருவன் சந்திர, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கைத் திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் - கே.எம்.எம். சிறிவர்தன, வெளிவிவகார…

  4. நரம்பியல் வைத்திய நிபுணரின் செயலால் தவிக்கும் நோயாளர்கள்! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் அவர்கள் கடந்த ஆறு நாட்களாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு நரம்பியல் வைத்திய நிபுணர்கள் கடமையில் உள்ளார்கள். அந்தவகையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகியோர் கடமையில் உள்ளார்கள். வைத்திய நிபுணர் திருமதி. கவிதா அவர்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை கூட பாராமல் தினசரி வைத்தியசாலை விடுதிக்கு சென்று தனது நோயாளிகளை பார்வையிட்டு வருகின்றார். ஆனால் வைத்தி…

  5. பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நிர்வாகக் குழுவிற்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேட்புமனுத் தயாரிக்கும் போது புதிதாக ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. Thinakkural.lk

  6. 23 SEP, 2024 | 03:11 PM இலங்கை தனது இறுதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்துள்ளது என ஜேவிபியின் மத்தியகுழு உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். இந்த ஜனாதிபதியின் பதவிக்காலத்திற்கு பின்னர் நீங்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை பார்க்கமாட்டீர்கள் என அவர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கும் அரசியல் உறுதிப்பாடுடைய ஒருவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார், இந்த நோக்கத்திற்கு மக்கள் தங்களின் ஆதரவை தரவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ள சுனில் ஹந்துநெத்தி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்பதை உறுதி செய்துள்ளார். https://www.virakesari.lk/article/194619

  7. நேபாளம் சென்றார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ! ShanaSeptember 24, 2024 இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார். அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்சேவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாகவும், அவரை நேபாளத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணம் அரசியலை விட தனிப்பட்ட மற்றும் குடும்பம் சார்ந்தது. …

  8. தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார் Published By: DIGITAL DESK 7 24 SEP, 2024 | 10:19 AM (நா.தனுஜா) தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்று, அவர்களைத் தனித்தேசமாக அங்கீகரித்து, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை வழங்காமல் தென்னிலங்கை மக்கள் கோருகின்ற மாற்றம் முழுமையடையாது என்ற உண்மையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அம்மக்களுக்குக் கூறவேண்டும். அதேபோன்று தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல், முன்நோக்கிப் பயணிக்கமுடியும் என கருதினால், அது ஒருபோதும் சாத்தியமாகாது என்பதையும் அவர் புரிந்துகொள்ளவேண்டும் என தமி…

  9. 23 SEP, 2024 | 05:55 PM (இராஜதுரை ஹஷான்) எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக் கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக் கொள்ள தயாராகுவேன். நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேர்தலில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதா…

  10. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை - புதிய ஜனாதிபதி அனுரகுமார Published By: RAJEEBAN 24 SEP, 2024 | 12:22 PM இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார கொள்கை என்ற அணுகுமுறைக்கான விருப்பத்தை அவர் வெளியிட்டுள்ளார். சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் புவிசார் அரசியல் மோதல்களில் இருந்து விலகியிருப்பதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தினை அனுரகுமாரதிசநாயக்க வெளியிட்டுள்ளார். …

  11. யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? கடந்து வந்த பாதை!! #முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க. #பிறப்பு – 1968.11.24. #பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார். #ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம். #உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி. குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார். 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார். #அரசியல் வாழ்க்கை! #1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். #1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1…

  12. ஒவ்வொரு நாளும் இலங்கையர்கள் 6.5 பில்லியன் ரூபா கடனில் உள்ளதாக தகவல் September 24, 2024 இலங்கையர்கள் நாளாந்தம் 6.5 பில்லியன் ரூபாய் கடனாளிகளாக மாறியுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார். கடந்த 26 மாதங்களில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் நாட்டு மக்கள் நாளாந்தம் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், நாடு கடுமையான கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக புதிய பொருளாத…

    • 0 replies
    • 159 views
  13. சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஐக்கிய மக்கள் சக்தி(SJB) மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஆகியவை ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளன. தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம், தேசிய மக்கள் சக்தி எவ்வாறு அரசாங்கத்தை அமைக்கும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சாகர காரியவசம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா என பொது ஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம்(sagara kariyawasam) …

  14. மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதே தற்போதைய தேவை – மஹிந்த தேசப்பிரிய! நாடாளுமன்ற தேர்தலை விடவும் மாகாண சபைத் தேர்தலை நடத்தி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதே முக்கியத்துவமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார். இராஜகிரியவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், ஜனாதிபதியின் உரைக்கமைய நாடாளுமன்றம் ஓரிரு தினங்களுக்குள் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்ததன் பின்னர் 52 தொடக்கம் 66 நாட்களுக்குள் பொதுத…

  15. Published By: DIGITAL DESK 7 24 SEP, 2024 | 09:52 AM (இராஜதுரை ஹஷான்) தடைப்படாத எரிபொருள் மற்றும் மின்சாரத்தை வழங்கக் கூடியவாறான போதிய நிலக்கரி, பெற்றோலிய உற்பத்திகளின் கையிருப்புடன் வலுவான நிதி நிலைமையைக் கொண்ட கட்டமைப்பை கையளித்துச் செல்கிறேன் என முன்னாள் மின் மற்றும் சக்தி வலு அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார். அமைச்சுக்கான வாகனங்களையும் பொறுப்புக்களையும் நேற்று திங்கட்கிழமை (23) கையளித்ததன் பின்னர் எக்ஸ் வலைத்தளத்தில் வருமாறு பதிவேற்றம் செய்துள்ளார். நான் பயன்படுத்திய அரச வாகனங்கள், வலுவான நிதியியல் கட்டமைப்பை கொண்டிருந்த மின் மற்றும் சக்தி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களை போதியளவு பெற்றோலிய உற்பத்தி மற…

  16. சட்டத்தால் வடக்குக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே மக்கள் அனைவரும் நாங்கள் ஒன்று பட்டுக் கொண்டிருக்கின்றோம் என தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர் தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்துள்ளார். பொதுக் கட்டமைப்பின் கீழ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரனின் மட்டக்களப்பு, அம்பிளாந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய பொது கட்டமைப்பு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை சம்பந்தப்பட்ட சகல விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தப் பி…

  17. Published By: DIGITAL DESK 3 16 SEP, 2024 | 10:33 AM கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஜ்மா நகர் பகுதியில் நடக்க முடியாமல் யானை ஒன்று கண்ணீர் சிந்திய நிலையில் காணப்படுகிறது. இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை (16) மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எல்.சமீம் வனவிலங்கு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இவ்வாறு நடக்க முடியாமல் விழுந்து கிடக்கும் யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/193821

  18. 23 SEP, 2024 | 07:56 PM (நா.தனுஜா) இலங்கையில் நடைபெற்று முடிந்த ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியானதும், நியாயமானதுமான முறையில் நடாத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவர் நச்சோ சன்செஸ் ஆமர், இம்முறை தேர்தல் பிரசார மேடைகளில் இன, மதபேதங்களை முன்னிலைப்படுத்தி பிரிவினைகளை ஏற்படுத்தக்கூடியவாறான விடயங்கள் பேசப்படாமல் பொருளாதார மீட்சி, மக்களின் அன்றாடப்பிரச்சினைகள் போன்ற அவசியமான விடயங்கள் எதிரொலித்தமை மிகவும் ஆரோக்கியமான விடயம் எனப் பாராட்டியிருக்கிறார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுமுடிந்தது. இத்தேர்தல் சுதந்திரமானதும், நியாயமானதுமான முற…

  19. நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தேர்வானதைத் தொடந்து நாடாளுமன்ற விரைவில் கலைக்கப்படும். விருப்பு வாக்குகளின் இறுதி முடிவுகளின் பின்னர் உரையாற்றிய அனுரகுமார நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என சரியாக கூறாத நிலையில் விரைவில் கலைக்கப்படும் என உறுதியளித்திருந்தார். இதற்கமைய, நாடு விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லும் என்பது உறுதியாகிறது. தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரான பிமல் ரத்நாயக்கவும் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். தேர்தல் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க தனது முந்தைய அறிக்கைகளைப் பின்பற்றி இந்த வாரம் நா…

  20. புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுத் தேர்தலை நடத்தும் நோக்கில் குறித்த அமைச்சரவை நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை மேற்படி அமைச்சரவை அமைச்சர்களின் பணிகள் தொடரும். எனினும், அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமைச்சரவையைக் கூட்டி பாராளுமன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ததன் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றம் கலைக்கப்படுவதற…

  21. இருப‌து வ‌ருடமாக‌ முஸ்லிம் ச‌மூக‌த்தை தேர்த‌லுக்கு ம‌ட்டும் ப‌ய‌ன்ப‌டுத்தி எந்த‌ உரிமையையும் பெற்றுத்த‌ராத‌ ச‌மூக‌த்தை ஏமாற்றும் முஸ்லிம் க‌ட்சிக‌ளை முஸ்லிம்க‌ள் ஒன்று ப‌ட்டு நிராக‌ரிக்காத‌ வ‌ரை முஸ்லிம் ச‌மூக‌ம் அர‌சிய‌லில் வெற்றிபெற‌ முடியாது என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, ஒரு உறையில் இர‌ண்டு வாள்க‌ள் இருப்ப‌து த‌வ‌று என‌ ரிசாத் ப‌தியுதீனுக்கு ப‌கிர‌ங்க‌மாக‌ சொன்னோம். ஹ‌க்கீம் இருக்கும் ப‌க்க‌ம் இருப்ப‌து பிழை என்றும் அர‌சிய‌ல் சாண‌க்கிய‌ம் ப‌ற்றிய‌ அறியாமை என்றும் சொன்னோம். இப்போது இர‌ண்டு பெரிய‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் ஆத‌ரித்தும் ச‌ஜித் பிரேம‌தாச‌ தோற்ற‌த‌ன் மூல‌ம் இந்த‌ இரு ஏ…

  22. Published By: DIGITAL DESK 3 23 SEP, 2024 | 01:28 PM புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/194602

  23. வெளிநாடு செல்வதை தடுக்கும் நடவடிக்கை! வெளிநாடு செல்வதை தடுப்பதற்காக 30 பேரின் பெயர்ப்பட்டியல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியையும் ,ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைத்து வரும் தேர்தலில் போட்டியிடவைத்து, நாடாளுமன்ற பலத்தை அனுரவுக்கு வழங்காதிருக்க முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்ட்டு வருகிறது. நாடாளுமன்றக் கலைப்புக்குப் பின்னர் ஊழலுடன் தொடர்புபட்ட கைதுகள் அடுத்தடுத்து இடம்பெறலாம்? அவ்வாறான செயற்பாடு இடம்பெற்றால் ஜனாதிபதித் தேர்தலை விட கூடுதல் ஆதரவை நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுர தரப்பு பெற்றுவிடும். வரும் நாட்களில் படைத் தளபதிகளில் இருந்து நாட்டில் பல மாற்றங்கள் நிகழவுள்ளதாக கொழும்பு உய…

    • 10 replies
    • 774 views
  24. இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்க ஐக்கியதேசிய கட்சி தீர்மானம் - இன்று விசேட கூட்டம் Published By: RAJEEBAN 23 SEP, 2024 | 08:44 PM பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது. இன்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டமொன்றில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பது என தீர்ம…

  25. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்ற எதிர்பார்ப்போடு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களின் மனவிருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமென ஈழமக்கள் ஜனாநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் நாட்டின் பொருளாதார நிலைமைகளையும் மனதில் நிறுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தீர்க்கமான முடிவொன்றை எடுத்து செயலாற்றி இருந்தோம். ஆனாலும் எமது நம்பிக்கைகளுக்கு மாற்றாக இலங்கைத் தீவில் வாழுகின்ற மக்களில் கணிசமானவர்கள் ஆட்சி மாற்றம் ஒன்றையே தமத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.