ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
-யோ.வித்தியா யாழ்.மாவட்டத்தில் இவ்வருடம் (2014) நிலவிய அதிகவெப்பம் மற்றும் பனிப்பூச்சியின் தாக்கத்தால், திராட்சைப்பழ உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வடமாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளர் கிருஸ்ணன் ஸ்ரீபாலசுந்தரம் வியாழக்கிழமை (28) தெரிவித்தார். கடந்த வருடங்களைவிட (100 ஏக்கர்) இவ்வருடம் அதிக நிலப்பரப்பில் (120 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில்) திராட்சைப் கொடிகள் செய்கை பண்ணப்பட்டது. இதன்மூலம் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அதிக வெப்பத்தால் கொடிகள் அதிகம் பூக்கவில்லையென்பதோடு, பனிப்பூச்சிகளின் தாக்கமும் அதிகமாக காணப்பட்டதால் இம்முறை விளைச்சல் குறைவாகவேயுள்ளது. வழமையாக திராட்சைச் செய்கையில், ஒருகொடியில் இருந்து 20 கிலோகிர…
-
- 5 replies
- 623 views
-
-
இந்தியாவுடன் என்ன கதைத்தோம் என்பதை முழுமையாக இந்தியாவும் வெளியிடமாட்டாது; நாமும் வெளியிட முடியாது. இராஜதந்திர ரீதியாக நடக்க வேண்டிய கால கட்டம் இது. அதனைப் பின்பற்றி நாமும் செயற்பட வேண்டியமை மிகவும் அவசியமாகும். - இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் எண்பத்தாறாவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்வை நினைவு கூரும் வகையில் நேற்று செவ்வாய்ககிழமை பிற்பகல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைக் கிளையின் தெல்லிப்பழையில் அமைந்துள்ள அலுவலகத்தில் 'இலங்கைத் தமிழரசுக…
-
- 20 replies
- 1.1k views
-
-
ஒருங்கிணைந்த இலங்கையில் போதிய அதிகாரங்களுடன் தமிழர்கள் வாழவேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பமாக உள்ளநிலையில் நாட்டைப் பிரித்துத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தாங்கள் கோரமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்கள் தமது பூர்வீக நிலத்தில் சமூக, பொருளாதார, கலை, கலாசார விழுமியங்களுடன் சுதந்திரமாக வாழவே விரும்புகின்றனர். எனவே, தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் எப்போதும் இணைக்கப்பட்டே இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த பின்னர் தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழுவினர் …
-
- 7 replies
- 785 views
-
-
'கத்தி'யை பிரச்சினையில் இருந்து மீட்பதற்காக, முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பது உள்ளிட்ட முயற்சிகளில் நடிகர் விஜய் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. அதேவேளையில், செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வி.ஐ.பி.-க்கள் பலரும் தயக்கம் காட்டி மறுத்துள்ளனர். விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படம் ஆரம்பிக்கும்போதே அறிவித்துவிட்டார்கள். தற்போது, சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு, விரைவில் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் ச…
-
- 0 replies
- 730 views
-
-
இலங்கை சுற்றுலாத்துறைக்கு சீன அழகிகள் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் சீன அழகுராணிகள் 15 பேர் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் தேசிய அழகு ராணிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருக்கும் அழகிகளே நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=333643371628554231#sthash.CwVt4Txp.dpuf
-
- 3 replies
- 541 views
-
-
பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் தாஹிர் ராபிக் பட், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு தனது பாரியார் சகிதம் நேற்று புதக்கிழமை இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி தலைமையிலான குழுவினரை, இலங்கை விமானப் படையின் தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக தனது பாரியார் சகிதம் வரவேற்றார். இலங்கை விமானப் படைத் தளபதிக்கும் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது மூன்று நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் விமானப் படைத் தளபதி, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட…
-
- 0 replies
- 286 views
-
-
இலங்கையின் இறைமையில் தலையிட மேற்குலகை அனுமதியோம்! - அமைச்சர் பசில் திட்டவட்டமாகத் தெரிவிப்பு. [Thursday 2014-08-28 11:00] இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் தலையிட மேற்குலகத்துக்கு ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று பூநகரி ஆதார வைத்தியசாலையைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த நாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் அபிவிருத்தியையும் ஏற்படுத்தினார். மக்களின் நன்மைகருதி எமது அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடரும். அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எவரும் தடை போடக்கூடாது. வெளிநாடுகளுக்குச் சென்று முறையிடுவார்கள் என்று பயந்து நாம் இங்கு அபிவிருத்தி செய்யவில்லை. சிரி…
-
- 1 reply
- 519 views
-
-
வடக்கின் உயர்பாதுகாப்பு வலயங்களைக் கண்காணிக்கிறது அமெரிக்கா! வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்கள் செய்மதி ஊடாக கண்காணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்தில் காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களே இவ்வாறு கண்காணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க நிறுவனமொன்று இவ்வாறு செய்மதி ஊடாக அண்மைய நாட்களில் கண்காணிப்பு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு கண்காணிக்கப்பட்டுள்ளது. பலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளின் துல்லியமான செய்மதி படங்கள் கண்காணிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் கண…
-
- 0 replies
- 577 views
-
-
கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு முன்னர் அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்துவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தால் அதனை பரிசீலிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். கூட்டமைப்புடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு முடியாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என்று அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். தீர்வு தேவையாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்நாட்டில் உள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கே வரவேண்டும். மாறாக இந்தியாவுக்கும் ஜென…
-
- 0 replies
- 381 views
-
-
உலகம் பூராகவும் இன்று முஸ்லிம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது உலகம் பூராகவும் இன்று முஸ்லிம் பயங்கரவாதம் தலைவிரித்தாடுகின்றது. எனவே, ஐ.எஸ்.ஐ.எஸ்.போகோ ஹராம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதம் தொடர்பில் இலங்கையிலுள்ள சூறா சபை உலமா சபைகளின் நிலைப்பாடு. இதனை ஆதரிக்கின்றீர்களா? எதிர்க்கின்றீர்களா? என்பதை பகிரங்கப்படுத்த வேண்டுமென சவால் விடுக்கும் பொதுபலசேனா. அரபுலகின் பணத்துக்கும் எண்ணெய்க்கும் இலங்கையையும் சிங்கள பௌத்தத்தையும் காட்டிக்கொடுக்க முடியாதென்றும் அவ் அமைப்பு தெரிவித்தது. கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அதன் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார். இங்கு…
-
- 0 replies
- 437 views
-
-
245 ஏக்கருக்கு காணி உறுதி இல்லை: இராணுவம் வியாழக்கிழமை, 28 ஓகஸ்ட் 2014 04:14 முல்லைத்தீவில் இராணுவத்தினர் நிலங்களை கையகப்படுத்தியதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அங்கிருந்த விமானஓடுபாதையை புனரமைப்பதற்காக பெறப்பட்ட 250 ஏக்கரில் 245 ஏக்கருக்கு உரிய காணி உறுதி பத்திரங்கள் இல்லை என்று பாதுகாப்பு மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளரும் இராணுவபேச்சாளருமான பிரிகேரியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இந்த விமான ஓடுபாதை அமைக்கப்படவுள்ள 250 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் காணப்படுகின்றது. அதில் நாம் 5 ஏக்கர் நிலத்தை மாத்திரமே பெற்றுக்கொண்டுள்ளோம். மிகுதி 245 ஏக்கர் காணிகள் அப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு விவசாயத்தை மேற்கொள்வதற்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர்…
-
- 0 replies
- 407 views
-
-
அப்பரையும் சித்தப்பரையும் விஞ்சும் நாமல் ராஜபக்ச:- குளோபல் தமிழ்ச் செய்தியார் கொழும்பு- 28 ஆகஸ்ட் 2014 லலித் கொத்தலாவலயின் எஞ்சியிருக்கும் சொத்துக்களை அபகரிக்க முயற்சி:- இலங்கையின் பிரபல வர்த்தக பிரமுகர் லலித் கொத்தலாவலயின் எஞ்சியிருக்கும் சொத்துக்களை அபகரிப்பதற்கு நாமல் ராஜபக்ச மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது நாமல் ராஜபக்சவும் இலங்கை பங்கு சந்தையில் பாரிய மோசடிகளில் ஈடுபட்ட அவரது நண்பரான நிமால் பெரேராவும் இணைந்து புதிய நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளனர். என்என் என இந்த நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ராஜபக்ச அரசாங்கத்தால் பாரிய மன அழுத்தத்திற்கும் அநீதிக்கும்உட்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் பிர…
-
- 0 replies
- 525 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய அரசின் மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்: 28 ஆகஸ்ட் 2014 தமிழக ப.ஜ.க சந்திப்பின் பின் சம்பந்தன்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இந்திய அரசின் மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஸ்ணன், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் இல.கணேசன் ஆகியோரை நேற்று புதன் கிழமை (27.08.14) சந்தித்தார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளி…
-
- 0 replies
- 388 views
-
-
தமிழகத்தின் சேலம் மேட்டூர் வனத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் புலிகளுடையதா? வீரப்பனுடையதா? 28 ஆகஸ்ட் 2014 இந்தியாவின் தமிழகத்தின் சேலம் மேட்டூர் அருகே வனப்பகுதியில் மீட்கப்பட்டுள்ள கையெறி குண்டுகள் உட்பட்ட ஆயுத குவியல் வீரப்பனுக்குச் சொந்தமானதா.. அல்லது விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததா என்ற கோணத்தில் தமிழக பொலிசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகில் பச்சமலை காப்புகாடு உள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக நேற்று முன்தினம் வனத்துறையினர் குழிகள் தோண்டியபோது ஏராளமான ஆயுதங்கள், குண்டுகள் செய்வதற்கான வெடிப் பொருட்கள் சிக்கின. மாவட்ட கண்காணிப்பாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சென்று, அவற்றை அப்புற…
-
- 0 replies
- 896 views
-
-
தெல்லிப்பழை துர்க்கையம்மனுக்கு இன்று கொடி ( படங்கள் இணைப்பு ) தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த பெருந்திருவிழா இன்று முற்பகல் 11.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இவ் பெரும்திருவிழாவில் அடுத்தமாதம் 6 ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு இரதோற்சவமும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளது. - See more at: http://onlineuthayan.com/News_More.php? id=737383372028107075#sthash.7WVnqrZN.dpuf
-
- 0 replies
- 338 views
-
-
வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்கள் செய்மதி மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது– குளோபல் தமிழ்ச் செய்தியாளர்: 28 ஆகஸ்ட் 2014 வடக்கின் உயர் பாதுகாப்பு வலயங்கள் செய்மதி ஊடாக கண்காணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணத்தில் காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்களே இவ்வாறு கண்காணிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க நிறுவனமொன்று இவ்வாறு செய்மதி ஊடாக அண்மைய நாட்களில் கண்காணிப்பு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு கண்காணிக்கப்பட்டுள்ளது. பலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளின் துல்லியமான செய்மதி படங்கள் கண்காணிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்ட…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தியாவிற்குச் செல்லாமல் தடுக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுப்பட்டது. ஆனால், அது வெற்றியளிக்கவில்லை. இது இலங்கை அரசுக்கு ஏற்பட்ட மோசமான தோல்வியாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார். அம்பிளாந்துறை அறநெறிப் பாடசாலையின் ஏற்பாட்டில் அழகுதனு ஆசிரியரின் 'அப்பா எங்கே?' என்ற குறுந்திரைப்பட வெளியீட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- "எமது கலை, பண்பாடுகளைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக இதைப் போன்ற வெளியீடுகள் எமக்குத் துணைபுரிகின்றன. அதிலும் 'அப்பா எங்கே?' என்ற குறுந்திரைப்படம் தொழில…
-
- 2 replies
- 789 views
-
-
யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தை சர்வதேச அரங்காகப் புனரமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னோஸ்வரன், இந்தியத் துணைத் தூதரக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, வடமாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, வடமாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு விளையாட்டு அரங்குக்கான அடிக்கல்லை நட்டுவைத்தனர். இல…
-
- 27 replies
- 1.2k views
-
-
இலங்கைக்கு எதிரான பிரசாரத்திலிருந்து தப்பிப்பது தொடர்பில் பீரிஸ் சர்வதேச ஆலோசனை!? மனித உரிமைகள் உட்பட ஏனைய விடயங்களை இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்திற்கான ஆயுதமாக பயன்படுத்துவதை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் ஜரோப்பிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்களுடன் ஆராய்ந்துள்ளார். ரோமில் உள்ள இலங்கைக்கான தூதரகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பிரான்ஸ்,ஜேர்மனி,இத்தாலி மற்றும் ஜெனீவாவிற்காக நிரந்தர வதிவிடபிரதிநிதி ஆகியோருடன் வெளிவிவகார அமைச்சர் மேற்கொண்ட இந்த கலந்துரையாடலின் போது மனித உரிமைகள் உட்பட ஏனைய விடயங்களை இலங்கைக்கு எதிரான பிரச்சாரத்திற்கான ஆயுதமாக பயன்படுத்துவதை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்த…
-
- 0 replies
- 188 views
-
-
ம.தி.மு.க. காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ‘ஆய்வுக்களம்’ என்ற பெயரில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் மாநில தலைமையகமான தாயகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு வைகோ அளித்த பதில்களும் வருமாறு:- கேள்வி:- அடுத்த மாதம் ஐ.நா.வில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்று பேச இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே?. பதில்:- இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது போர் தொடுத்து, ஏராளமான மக்களை கொன்று குவித்த ராஜபக்ஷவை, ஐ.நா. மன்றம் அழைத்ததற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரிகளுக்கு இலங்கை அரசு விசா வழங்க …
-
- 1 reply
- 620 views
-
-
எதற்காக அமெரிக்கா சென்றார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச? - வெளியாகும் பரபரப்புத் தகவல்கள். [Wednesday 2014-08-27 18:00] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட நோய் காரணமாகவே கடந்த 22ம் திகதி அமெரிக்காவுக்கு சென்றதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எம். டி என்டர்சன் புற்றுநோய் சிகிச்சை மத்திய நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவருக்கு இரத்தத்தில் சிறுநீர் கலந்து விட்டதாகவும் அது சம்பந்தமான சிகிச்சையே நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. இவருடன் இவரின் சகோதரரான டட்லி ராஜபக்ச (அமெரிக்கப் பிரஜை) இருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்கா சென்ற ஜனாதிபதிக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பரிந்துரைத…
-
- 0 replies
- 853 views
-
-
சனி, ஆகஸ்ட் 23, 2014 - 22:07 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் நல்லூரில் காவல்துறை குவிப்பு!! நல்லார்க்கந்தன் ஆலய தேர் மற்றும் தீர்த்தத் திருவிழா தினங்களில் ஐந்நூறிற்கும் அதிகமான காவல்துறையினரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக யாழ். மாவட்டப் பிரதி காவல்துறை அதிபர் றொகான் டயஸ் என்பவர் தெரிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் ஆலய வருடதந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா நடைபெற்று வருகின்றது. இதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்து புலம்பெயர்ந்திருக்கின்ற பலரும் என பெருமளவான அடியவர்கள் நாளாந்தம் வருகை தருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியக்களைத் தவிர்க்கும் பொருட்டும் பொது மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் பொருட்டும் ஆலய நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு அமைய இலங்க…
-
- 102 replies
- 5k views
-
-
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் இன்று நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவென ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஸ சென்ற நிகழ்வில் இந்திய துணைதூதர் அவமதிக்கப்பட்டமை தூதரக அதிகாரிகளிடையே கடும் கோபத்தை தோற்றுவித்துள்ளது. முதலில் யாழ். சென்ற பஸில் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கை புனரமைக்க அடிக்கல் நாட்டினார்;. இதற்கான நிதியினை இந்திய அரசே வழங்கியுள்ளது. அத்துடன் இந்திய அரசின் நிதியின் பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில்; டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து பஸில் திறந்துவைத்துள்ளார். அதை தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் பூநகரி ஆதார வைத்தியசாலையும் …
-
- 1 reply
- 539 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வன்னி:- வடக்கு-கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் எல்லைப்பகுதியாக அமைந்துள்ள மணலாற்றினை சூறையாடுவதில் இலங்கை அரசு முனைப்பு காட்டியே வருகின்றது. அவ்வகையில் புல்மோட்டையில் அமைந்துள்ள இல்மனைட் தொழிற்சாலைக்கு வடமாகாணசபை எல்லைக்குட்பட்ட கொக்கிளாய் வாவியடியிலிருந்து மணல் ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. எனினும் இது தொடர்பில் வடமாகாணசபையில் எந்தவொரு அனுமதியும் பெறப்படாது அடாவடியாகவே மணல் ஏற்றி செல்லப்படவுள்ளது. எனினும் 1983 ம் ஆண்டின் முற்பகுதியில் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்ட தமிழ் குடும்பங்கள் இதுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. ஏற்கனவே இப்பகுதியில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பு ஜனாதிபதியின் புதல்வரான நாமல்ராஜ பக்ஸவ…
-
- 0 replies
- 527 views
-
-
சென்னை: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கூறினார். சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர், இலங்கை தமிழர் பிரச்னையில் மாற்றம் ஏற்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளதாகவும், தமிழர் பிரச்னையில் தீர்வை எட்ட ராஜபக்சேவிடம் வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார் என்றும் சம்பந்தன் கூறினார். இலங்கை அரசுடனான எங்களது கடந்த கால பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை என்று கூறிய சம்பந்தன், தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அரசு முன்வராதபோது எப்படி நாடாளுமன்ற குழுவில் சேருவது என்று வி…
-
- 0 replies
- 524 views
-