ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்தால் மட்டுமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பாராம். இவ்வாறு கூறியிருக்கிறார், பாஜகவின் பிரமுகர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி. கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய, சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்கும் அவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் கருத்து வெளியிடுகையில், “வழக்கமாக, எந்தவொரு நாட்டு அரசாங்கத்துடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் தரப்புகளுடனான சந்திப்புகளை நாம் ஊக்குவிப்பதில்லை. தற்போதைய பிரதமர், சந்திப்புக்கான நியமனங்களை இலகுவாக வழங்குவதில்லை . சிறிலங்காவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் செயல்முறைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. …
-
- 2 replies
- 449 views
-
-
வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சால் ஊர்காவற்துறை தம்பாட்;டி கிராமத்துக்கான குடிநீர் விநியோகம் திங்கட்கிழமை (18) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் நிலவும் வறட்சியால் பல்வேறு இடங்களிலும் குடிநீருக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகிறது. உள்ளூராட்சி மன்றங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகள் குடிநீர் வழங்கலை பவுசர்கள் மூலம் மேற்கொண்டு வந்தபோதும், குடிநீருக்கான தட்டுப்பாடு இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் அண்மையில் வடமாகாண விவசாய அமைச்சில் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுடன் குடிநீர் வழங்குதலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்இடம…
-
- 0 replies
- 415 views
-
-
சம்பந்தன் நாளை இந்தியா பயணம்? - மோடி, சுஸ்மாவை சந்திப்பாராம். [Tuesday 2014-08-19 09:00] நாளை இந்தியா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சம்பந்தன் நாளை இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பிரதிநிதிகள் நாளை மறுதினம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். கூட்டமைப்பின் இந்திய விஜயம் குறித்த…
-
- 1 reply
- 633 views
-
-
பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பொதிகள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு:- 19 ஆகஸ்ட் 2014 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொதிகள் களவாடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் திரும்பும் வீட்டுப் பணிப் பெண்கள், பயணப் பொதிகள் மற்றும் பயணப்பைகள் என்பனவற்றை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். பயணப் பொதிகளை உரிய முறையில் மூடி விட வேண்டுமென தெரிவித்துள்ளார். பயணப் பொதிகளை பெற்றுக்கொண்டு வெளியேறுவதற்கு முன்னதாக பொருட்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். பொதிகள் உடைக்கப்பட்டோ அல்லது ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால் அது …
-
- 0 replies
- 300 views
-
-
ஜனாதிபதி ஆணைக்குழுவின் கோரிக்கையை மேற்குலக நாடுகள் நிராகரிப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- 19 ஆகஸ்ட் 2014 ஜனாதிபதி ஆணைக்குழுவின் கோரிக்கையை மேற்குலக நாடுகள் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போதல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால், மேற்குலக நாடுகளிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது, காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழு நோர்வே, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளிடம் விடுத்த கோரிக்கை இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் நபர்கள் வெளிநாடுகளில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்ப…
-
- 0 replies
- 406 views
-
-
மூன்று முக்கிய ஆசிய நாடுகளின் தலைவர்கள், அடுத்த சில மாதங்களில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே அடுத்த மாதம் 9ம் நாள் உரையாற்றவுள்ளார். அதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பின் சிறிலங்கா வரவுள்ளார். அவர், வரும் செப்ரெம்பர் 18ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். எனினும், அவரது உரை நாள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம், சிறிலங்காவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் கூட நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்து…
-
- 2 replies
- 500 views
-
-
தனிப்பட்ட விண்ணப்பக் கோரிக்கைகளை குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களம் மீளாய்வு செய்கிறது. இதுகுறித்த விளக்கங்கள் தமிழ், டொச் மற்றும் பிரஞ்சு மொழிகளிலான இணைப்புகள் கீழே தரப்படுகின்றது அவற்றை சுட்டியால் அழுத்தி முழுமையான தகவல்கள் பாருங்கள். 1. தமிழ் மொழியில் பார்வையிட 2. டொச் மொழியில் பார்வையிட 3. பிரஞ்சு மொழியில் பார்வையிட http://www.pathivu.com/news/33264/57//d,article_full.aspx
-
- 0 replies
- 420 views
-
-
வடமாகாணசபை அலுவலகங்களிற்கான பாதுகாப்பு ஏற்பாடெனும் பேரில் பிரதம செயலாளர் தன்னிச்சையாக செய்ய முற்பட்ட மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது. மாகாண நிதியினூடாக செலவீனம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு விடயமும் மாகாண அமைச்சர் வாரியத்தின் சிபாரிசுடனும், மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகளுக்கு அமைவாகவுமே மேற்கொள்ளப்படல் வேண்டும். ஆயினும் அமைச்சர் வாரியத்தின் சிபாரிசினைப் பெறாமல் 200 மில்லியன் பெறுமதியான பாதுகாப்புச் சேவையினூடாக 296 பாதுகாப்பு ஊழியர்களை பணியிலமர்த்தல் தொடர்பான பெறுகைக்குழுத் தீர்மானம் ஒன்றில் கையொப்பமிடுமாறு குறித்த பிரதம செயலாளரால் முதலமைச்சரின் செயலாளருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்குமுகமாக முதலமைச…
-
- 0 replies
- 434 views
-
-
செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014 - 00:27 மணி தமிழீழம் | ஆர்த்தி , சென்னை சென்னையில் ராஜபக்சேவின் ஸ்டார் ஓட்டல்! மகிந்தவின் பினாமிகளின் இடமாக தமிழக மாறுகிறதா? "இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள் மீது பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என தமிழகமே ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகப் போராடி வருகிறது. இதே தமிழகத்தின் தலைநகரில், அந்த இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளி ராஜபக்சே, சொகுசு ஓட்டல் தொழிலை நடத்தப்போகிறார்' என்கின்றன அதிர்ச்சித் தகவல்கள். "எயிட்கென் ஸ்பென்ஸ்'’- இது நட்சத்திர அந்தஸ்து கொண்ட பிரபல பிராண்ட் சொகுசு ஓட்டல். பிரிட்டன் தொழிலதிபர் ஒருவரால் தொடங்கப்பட்டு, இலங்கை, இந்தியா, மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகளில், புகழ்பெற்று இருக்கும் ஓட்டல் இது. பின்னர், இந்த ஓட்டலை ஹாரி ஜெயவர்த்தன…
-
- 1 reply
- 774 views
-
-
முள்ளிவாய்க்கால் மனிதப் புதைகுழியில் திடுக்கிடும் நீலப் பிரதிகள் Ca.Thamil Cathamil August 18, 2014 Canada முள்ளிவாய்க்கால் மற்றும் அதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களின், புதைகுழிகளின் நீலப் பிரதிகள் இராணுவத்திடம் உண்டு எனவும், அதனை தான் நேரில் பார்த்ததாகவும் ஒரு சாட்சி தற்போது தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட மக்களை இராணுவம் அப்படியே புதைத்தது என்றும், புதைத்த இடங்களை அவர்கள் வரைபடமாக வரைந்து வைத்திருந்தார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். தற்போது (2009ம் ஆண்டுக்குப் பின்னர்) அவர்கள் அந்த இடங்களை தேடி கண்டுபிடித்து, தோண்டி எலும்புகளையும் எச்சங்களையும் எடுத்து அழித்து வருகிறார்கள் என்றும் அவர் பரபரப்பு சாட்சியம் வெளியிட்டுள்ளார். இதுபோன்ற பல செய…
-
- 0 replies
- 777 views
-
-
சென்னை சத்தியம் திரையரங்கில் "புலிப்பார்வை" திரைப்படத்திற்கான இசைத்தட்டு வெளியீட்டு விழா இன்று நடைபெற்றுக்கொண்டிருந்த போது திரையரங்கில் இருந்து மாணவர்கள் அப்படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தது கோசங்களை எழுப்பியதுடன், சந்தேசகத்திற்கிடமான கேள்விகளையும் கேட்ட முற்பட்ட போது அங்கு கட்சிகளின் அடியாட்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பச்சைமுத்துவின் அடியாட்களே இவ்வாறு தாக்குதலை நடத்தியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்வுகள் ஆரம்பமாகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் "புலிப்பார்வை" திரைப்படம் தமிழர்களுக்கு எதிரான திரைப்படம் அல்ல என நற்சான்றிதழ் வழங்கினார். அதனைத் தொடர்து புலிப்பார்வை தாயாரிப்பாளர் பச்சைமுத்து உரையாற்ற தயாரான…
-
- 69 replies
- 4.5k views
-
-
இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றனவா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்துங்கள் என்று வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையினில் 33 உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள அந்த கடிதத்தில்:- தமிழ் மக்கள் தாங்கள் சிங்கள அரசினால் இனப் படுகொலைக்குட்படுத்தப்பட்டனர் என்றும் தொடர்ந்தும் உட்படுத்தப்படுகின்றனர் என்றும் உறுதியாக நம்புகின்றனர். இறுதிப்போரில், தமிழர்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப்பட்டனர், அவர்களது வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டன, அவர்களது யாழ். நூலகம் அழிக்கப்பட்டது இவை எல்லாம் நடந்து முடிந்தவை. இப்போதும்கட…
-
- 1 reply
- 465 views
-
-
"புலிப் பார்வை" மற்றும் லைக்கா தயாரிக்கும் கத்தி திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்? அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மாணவர் அமைப்புகளின் கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை ஒழுங்கமைத்துள்ளார் தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் அவர்கள். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்தில் திரையிடப்பட இருக்கின்ற புலிப் பார்வை மற்றும் இலங்கையின் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்படம் ஆகியவற்றை எதிர்பது ஏன் என்பது குறித்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள், தமிழர் இயக்கங்கள், மாணவர் இயக்கங்கள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இடம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம…
-
- 0 replies
- 529 views
-
-
தனது காதலியுடன் டெனிம் அணிந்த நிலையில் ஞானசார தேரர் உள்ள படம் பிரசுரமாகியுள்ளது. உண்மையில் பௌத்த துறவிகள் பெண்களுடன் தொடர்பற்று இருப்பர். ஆனால் ஞானசாருக்கு காதலி உள்ளார். வாகனம் ஓட்டுனர் மதுபானம் உட்பட அனைத்து தீயப்பழக்கங்களையும் கொண்டவராகவுள்ளார். இவர் தொடர்ந்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்தால் 99.9 வீதமான சிங்கள பௌத்தம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை. என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் நோர்வே நிதி உதவியுடனேயே தனது அராஜகங்களை அரங்கேற்றி வருகின்றார். என்பது தெட்டத்தெளிவாகி விட்டது. அத்துடன் லங்கா ஈ நியூஸில் அவர் தனது காதலியுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் பிரசுரமாகியுள்ளது. இஸ்ரேலுக்கு விரோதமாக யாரேனும் குரல…
-
- 3 replies
- 626 views
-
-
மக்களைப் பாதுகாக்க அரசியலைப்பை மீறியேனும் தொண்டர் அமைப்புக்கள் உருவாக்கப்படும் என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இராணுவ முகாம்களிலிருந்து ஆடு மாடுகள் மேச்சலுக்குப் போவதைப் போலப் போய் பாலியல் வேட்டைகளிலும், தேடுதல்களிலும் படையினர் ஈடுபடுவதாக சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கில் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் பாலியல் வன்புறவுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக வடக்கு பிரதேசத்தில் அதிகரித்துள்ளமை குறித்து எமது செய்தியாளர் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தைத் தொடர்புகொண்டு கேட்டார். இதுகுறித்துமேலும் கருத்து தெரிவித்த சிவாஜிலிங்கம்... (வீடியோ)
-
- 0 replies
- 515 views
-
-
உலகிலேயே, அதிக மின்சாரக் கட்டணத்தை அறவிடும் நாடுகளாக இத்தாலியும் சிறிலங்காவும் இருப்பதாக, கொழும்பு பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார். சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் நூல் தொடர்பாக கொழும்பு தேசிய நூலகத்தில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அவுஸ்ரேலியா, சிங்கப்பூர், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், மலேசியா, இந்தியா, பாகிஸ்தான். நேபாளம் போன்ற நாடுகளையும் விட சிறிலங்காவில் மின்சாரக் கட்டணம் அதிகமாக அறிவிடப்படுகிறது. உலகிலேயே அதிக மின்கட்டணத்தை அறிவிடும் நாடு இத்தாலி. இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் சிறிலங்கா இருக்கிறது. சிறிலங்கா அபிவிருத்தியடைவதற்கு, இயற்கை வளங்களில் தங்கியிராமல்…
-
- 1 reply
- 432 views
-
-
(க.கிஷாந்தன்) ஹட்டன் பகுதியில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாக நம்பப்படும் புரதான வாளுடன் மூவர் பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர் இந்நிலையில் குறித்த வாள் பல வருடங்கள் பழைமை வாய்ந்த கண்டி இராச்சியத்திற்குரியது என தொல்பொருள்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வாளை விற்பனை செய்ய முயன்ற 3 சந்தேக நபர்கள் கடந்த 07.08.2014 அன்று இரவு அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 08.08.2014 அன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மேற்படி வாளை பற்றி விசாரணைகளை நடத்தி அட்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் தொல்பொருள்துறை திணைக்களத்திற்கு அட்டன் நீதிமன்றத்தின் நீதிவான் அமில ஆரியசேன உத்தரவிட்டம…
-
- 0 replies
- 267 views
-
-
காணாமற் போனோரை கண்டறியும் ஆணைக்குழு செயற்பாடுகளின் சுயாதீன தன்மை இல்லை. தமிழ் மக்கள் மீது புலிச்சாயம் பூசும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது என குறிப்பிடும் ஐ.தே.க. வின் எம்.பி மங்கள சமரவீர ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளிப்பதை விடவும் சர்வதேசத்திடம் சாட்சியம் அளிப்பது அர்த்தப்பூர்வமானது எனவும் சாடியுள்ளார். காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை சமர்பிப்பதில் காலதாமதம் ஏற்படும் என ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வில் பரணகம தெரிவித்துள்ளதையடுத்து இவை தொடர்பில் வினவிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்; காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் செ…
-
- 0 replies
- 454 views
-
-
திருகோணமலை சீனன்குடாவை அண்மித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் இராணுவத்தினால் இடிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் முன்வைத்தக் குற்றச்சாட்டுகளை கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் இராணுவம் மறுத்துள்ளது. உண்மை நிலை அறிவதற்காக கருமலையூற்று உயர் பாதுகாப்பு வலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் இன்று திங்கட்கிழமை நேரில் சென்றிருந்தார். பாழடைந்த நிலையில் காணப்பட்ட பள்ளிவாசல் கட்டடம் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய மழை காரணமாகவே இடிந்து விழுந்துள்ளதாக இராணுவத்தினால் விளக்கமளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தங்களது அவதானிப்பில், மழைகாரணமாக குறித்த பள்ளிவாசல் இடிந்து விழுவதற்கான வாய்ப்பு உண்டா என முதலமைச்சரிடம் கேட்ட போது அதனை ஏற்றுக்கொள்ள…
-
- 0 replies
- 247 views
-
-
வெல்லம்பிட்டி, நவகமுவ பட்டேவெல சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 27 வயதான இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே அந்த இளைஞன் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். துப்பாக்கித்தாரிகள் வந்ததாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் பற்றைக்காட்டுக்குள் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாக வெல்லம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/122640-2…
-
- 0 replies
- 231 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவை 112ஆவது அமர்வு, ஐ.நா அலுவலகத்தில் ஒக்டோபர் 07 தொடக்கம் 31 வரை நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின் போது ஒக்டோபர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் இலங்கை பற்றி ஆராயப்படும் என்று ஐ.நா அறிவித்துள்ளது. யுத்தம் நடந்த காலத்தில் பொதுமக்களுக்கு உண்டான இழப்புக்கள் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் விசாரணை, நீதிமன்றத்தின் விசாரணைகள் கண்டுள்ள முன்னேற்றம், அரசு அல்லது அரசல்லாத வேறு நிறுவனங்களிலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறலுக்கான 'தண்டனை இன்மை' எனும் பிரச்சினை தொடர்பில் அரசின் நடவடிக்கை உட்பட பல பிரச்சினைகள் பற்றியும் இலங்கை அரசாங்கத்திடம் வினவியுள்ளது. 112 ஆவது அமர்வின் போது இலங்கை புறுண்டி, ஹைய்ட்டி, மால்டா, மொன்ரேநெக்ரோ மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீதான அறிக்கைகள் கவ…
-
- 0 replies
- 344 views
-
-
மகிந்த ராஜபக்சவின் பங்காளி நிறுவனமான லைக்கா மொபைல் நிறுவனம் தற்போது தமிழர்களின் தாயகத்திலும் தமிழகத்திலும் எதிர்ப்புக்களை சம்பாதித்து வரும் நிலையில் தற்போது ஐரோப்பாவிலும் தமிழர்களின் எதிர்ப்புக்களுக்கு முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் லைக்கா மொபைல் தொடர்பாக தமிழர் அமைப்புக்கள் மௌனமாக இருக்கும் இவ்வேளையில் இவ்வெதிர்ப்பலைகள் ஐரோப்பாவில் பரவலாக ஆரம்பித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பிரான்சில் தமிழர் வர்த்தக மையங்களிலும் ஏனைய பிரதேசங்களில் பரவலாகவும் லைக்கா மொபைல் நிறுவனத்தின் மீதான எதிர்ப்புக்கள் அவர்கள் ஒட்டும் சுவரொட்டிகள் மீது காட்டப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்தம் பரவலாக காணப்படும் லைக்கா விளம்பரங்கள் பதாதைகள் இனந்தெரியாத நபர்களா…
-
- 10 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளார்? மூன்று முக்கிய ஆசிய நாடுகளின் தலைவர்கள், அடுத்த சில மாதங்களில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜப்பானிய பிரதமர் சின்ஷோ அபே அடுத்த மாதம் 9ம் நாள் உரையாற்றவுள்ளார். அதையடுத்து, சீன அதிபர் ஜி ஜின்பின் சிறிலங்கா வரவுள்ளார். அவர், வரும் செப்ரெம்பர் 18ம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். எனினும், அவரது உரை நாள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம், சிறிலங்காவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் கூட நாடாளுமன்ற…
-
- 1 reply
- 479 views
-
-
திருகோணமலையில் 130 ஆண்டு பழைமைவாய்ந்த பள்ளிவாசல் படையினரால் அழிப்பு! [sunday 2014-08-17 19:00] திருமலை, வெள்ளைமணல் கருமலையூற்று பள்ளிவாசல் இன்றுக் காலை இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கி தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வரும் இப்பள்ளிவாசல் தகர்க்கப்பட்டமை நாசகாரச் செயல் என்றும் பள்ளி நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று காலை பள்ளியை தாம் நோட்டமிட்ட போது இருந்த இடம் தெரியாமல் அது தரை மட்டமாக்கப்பட்டுள்ளது என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இது பற்றி பள்ளி நிர்வாகத்தின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது; கடந்த மூன்று நாட்களாக கடும் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த மழை பெய்த நேரத்தைப் பயன்படுத்தி பள்ளிவாசல் கனரக இயந்திரத்த…
-
- 3 replies
- 755 views
-
-
இலங்கையின் நன்மதிப்பை உயர்த்த அமெ. நிறுவனத்துக்கு ரூபா 10 கோடி news இலங்கையின் நன்மதிப்பை மேம்படுத்தும் பணிகளுக்காக இலங்கை மத்திய வங்கி அமெரிக்காவின் பரப்புரை நிறுவன மொன்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதை அடுத்து, மத்திய வங்கிக்கு அதற்கான அதிகாரம் உள்ளதா என்ற புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. புளோரிடாவில் உள்ள பிரபல மில்லாத "லிபேட்டி இன்டர் நஇனல்' என்ற பரப்புரை அமைப்புடன் இலங்கை மத்திய வங்கி 99 மில்லியன் ரூபா பெறுமதியிலான இந்த ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். அதேவேளை, மத்திய வங்கி அமைச்சரவையின் ஒப்புதலை பெறாமலும் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் கலந்தா லோசிக்க…
-
- 1 reply
- 398 views
-