Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மீதான ஐ.நா விசாரணை ஆரம்பம் வியாழக்கிழமை, 07 ஓகஸ்ட் 2014 08:44 இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நியமித்த ஆணைக்குழு, தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தகவல் மற்றும் ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/120986-2014-08-07-03-24-35.html

  2. இலங்கை இராணுவம் மிகவும் திட்டமிட்ட வகையில் நாட்டின் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் மீது செல்வாக்கு: 07 ஆகஸ்ட் 2014 கோத்தாபயவின் நேரடி கண்காணிப்பும் கடுமையான உத்தரவும் தொடர்கிறது:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- இலங்கை இராணுவம் மிகவும் திட்டமிட்ட வகையில் நாட்டின் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகள் மீது செல்வாக்கு செலுத்த முனைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி கண்காணிப்பு மற்றும் கடுமையான உத்தரவின் கீழ் இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் ஹோட்டல்கள் மற்றும் உல்லாச பயண சேவைகள் இந்த துறையில் உள்ள ஏனையவர்களுக்கு கடும் சவாலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு படையை சேர்ந்த பெருமளவு ஆண்களையும் பெண்களையும் மிக …

  3. மஹிந்தோதய திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் பின்பற்றப்படும் தொழில்நுட்பவியல் ஆய்வுகூட கல்வி முறைமையில் மேல்மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு இடமளிக்காமல் மத்திய கல்வியமைச்சு இனவாதத்துடன் செயல்படுகின்றது. இது சம்பந்தமாக மத்திய கல்வியமைச்சர் பந்துல குணவர்தவுடன் கடிதம் மூலமும் நேரடியாகவும் எனது கண்டனத்தை தெரிவித்த போதும், வேறு நோக்கங்களை முன்வைத்து தனது இனவாதத்தை வெளிப்படுத்துகின்றார் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன், ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்ததாவது, இதுவரை காலமும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து இணைந்திருப்பது கொழும்பு மாவட்ட தமிழ் பாடசாலைகளின் நலனைக் கருத்திற் கொண்டேயாகும். அதேபோல் பொருளாதா அபிவிருத்…

    • 0 replies
    • 304 views
  4. "காஸா தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட 'டுவிட்'டில் முதலில் குறிப்பிடப்பட்டிருந்த 'மனிதப் படுகொலை' என்ற பதம் பின்னர் நீக்கப்பட்டது ஏன்?'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். . நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற வெளிநாட்டு சேவைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- "இஸ்ரேல் - காஸா தொடர்பில் இலங்கை இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. பலஸ்தீனத்தின் நண்பர்களெனக் கூறும் இலங்கை, இஸ்ரேலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை இன்னும் ஏன் தெரிவிக்கவில்லை? இலங்கை வெளிவிவகார அமைச்சினால் காஸா தொடர்பில்…

    • 0 replies
    • 309 views
  5. காணாமல் போனோரின் உறவினர்கள் ( ஆவணப்படம்) வட பகுதியில் காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று கொழும்பில் நடத்திய கூட்டத்தை, பௌத்த பிக்குகள் சிலர் அச்சுறுத்தித் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். இன்று மாலை கொழும்பு மருதானையில் ,கத்தோலிக்க தேவாலயமொன்றில் இந்த கூட்டம் நடைபெற்றதாக கூட்டத்துக்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த அமைப்பாளர்களின் ஒருவரான அருட்தந்தை என்.சத்தியவேல் தெரிவித்தார். இத்தேவாலயத்துக்குள் பலவந்தமாக நுழைந்த பிக்குகள், வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்தது நாட்டுக்கு எதிராக சதி முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்று கூறி, அச்சுறுத்தியாதாகவும் சத்தியவேல் கூறினார். இந்த கூட்டத்தின்போது, சட்ட விரோதமான செயல்கள் எதுவும் கூடியிருந்தவர்களால் செய்யப்படவில்லை என்று கூறிய அவர் பிக…

    • 6 replies
    • 793 views
  6. அரசியலில் விரைவில் களமிறங்குவேன் - தனியார் தொலைக்காட்சி செவ்வியில் கோத்தாபய:- பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அரசியலில் ஈடுபடுவதனை விரும்பவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் போது ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடுமாறு கோரியிருந்ததாகவும், அதனை கோதபாய நிராகரித்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகப் பிரதானிகளுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கோதபாய ராஜபக்ஷ போன்ற திறமையான அமைச்சுச் செயலாளர்கள் மிகவும் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சுச் செயலாளர் பதவியை விட்டு திறமை வாய்ந்த ஓர் அதிகாரி, அரசியலில் களமிறங்குவதனை தாம் தற்போதைக்கு விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இத…

  7. "காணாமற்போனவர்களின் குடும்பத்தினர் என்ற வகையில் நீங்கள் அனுபவிக்கும் அச்சுறுத்தல்களை நான் நேரில் கண்டுகொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க பதில் பிரதித் தூதுவர் மைக்கல் யஹானிஸ்டைன். சமூக சமய நடுநிலையத்தில் நடைபெற்ற காணாமற்போனவர்களின் குடும்பத்தாருடனான சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்கத் தூதரகத்தின் பதில் பிரதித் தூதுவர் மைக்கல் யஹானிஸ் டைன் குண்டர்களால் சந்திப்பு இடைநடுவில் குழப்பப்பட்டதையடுத்து அங்கிருந்த காணாமற்போனோர் மத்தியில் உரையாற்றினார். அதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "இங்கு நடைபெற்றுள்ள வற்றை நீங்கள் நேரிலே கண்டு கொண்டீர்கள். உலகமும் இதனைக் கண்ணுற்றுள்ளது. முன்னே வந்து எம்மோடு உங்க ளது கதைகளைப் பகிர்ந்துகொண்டதில் உங்களுக்குள்ள துணிச்சலை நான் …

  8. தமிழ்ப் பெண்ணுக்கு உற்பத்தியாளர் விருது news வல்லாரை, பீற்றூட், கரட் ஆகியவற்றில் அப்பளம் தயாரித்த தமிழ்ப் பெண்ணுக்கு புதிய உற்பத்தியாளர் விருது கடந்த சனிக்கிழமை கொழும்பில் வைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்இவினால் வழங்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் சாயிராணி என்னும் பெண்ணுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்பாளர்களாக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 24 பெண்களில் இவர் ஒருவரே தமிழ்ப் பெண் ஆவார். இவரால் உற்பத்தி செய்யப்பட்ட அப்பளம் பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய வர்ணங்களில் கடைகளில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. 05 ஆகஸ்ட்டு 2014…

  9. - சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி கல்லாறுக் கிராமத்தில் கொக்கோகோலா நிறுவனத்தின் நிதி உதவியுடன் யு.என் கபிரெட் நிறுவனத்தினால் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தின் செயற்றிட்டத்தை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு கல்லாறு பொதுநோக்கு மண்டபத்தில செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்றது. வருடம் முழுவதும் குடிநீர் வழங்க வேண்டிய கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறுப் பிரதேசத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்புத்திட்டமானது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதென கிளிநொச்சி மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், 'தற்போது நிலவுகின்ற வரட்சியால் மாவட்டத்தின் …

  10. பிரபாகரனின் உறுதிப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்திய அதிகாரிகள் தவறிவிட்டனர்! ஹரிகரன் கருத்து [Tuesday 2014-08-05 21:00] தமிழீழத்தை உருவாக்குவதற்கான போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் பிரபாகரனின் உறுதிப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்திய அரசு, புலனாய்வு அமைப்புகள், இராணுவம் என்று எல்லோருமே தவறிவிட்டனர் இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்திய இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் அதிகாரியான கேணல் ஹரிகரன். இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் எழுதியுள்ள நூலில், இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்புவதற்கு முன்னர், அமைச்சரவையின் அனுமதியைப் பெறவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் த…

    • 0 replies
    • 563 views
  11. காணாமற்போனோரின் உறவுகளுக்கும் சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் இடையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பில் சர்வதேச நாடுகள் பல தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன. பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இதுகுறித்த அந்த நாடுகளின் இலங்கைத் தூதரகங்கள் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் சட்டம் மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பன கவலையளிப்பதாகவே உள்ளன. ஒன்று கூடுவதற்கும், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குமான சுதந்திரத்தை நிலைநாட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் வடபகுதியில் இருந்து கொழும்புக்கு வந்து தமது பிரச்சினைகளை வெளிப்படுத்திய 30 குடும்ப உறுப்பினர்களும் மீளவும் தமது இட…

  12. க.ருத்திரன் பெண்கள் முகாமைத்துவ அபிவிருத்தி திட்டத்தினரின் அனுசரணையில் நாட்டிலுள்ள சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளருக்கான சாதனை விருது வழங்கும் நிகழ்வு கடந்த (25)ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இவ் விருது வழங்கும் நிகழ்வுக்கு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வேவ்வேறு வகையான பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதன்போது, மட்டக்களப்பு முகத்துவாரம் பார் வீதியிலுள்ள திருமதி. விஜயலெட்சுமி அன்ரனி ஜேசுதாசன் படங்களுக்கு பிரேம் செய்தற்காகன சிறந்த பெண் சுயதொழில் முயற்சியாளராக தெரிவுசெய்யப்பட்டார். நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த பெண்கள் சுயதொழில் முயற்சியாளருக்கான சாதனை என்ற விருதை பொ…

    • 0 replies
    • 480 views
  13. -ஏ.எச்.ஏ.ஹுஸைன் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் கீழுள்ள ஏறாவூர் மிச்நகர் மாதிரி விவசாயப் பண்ணையில் விளைவிக்கப்பட்ட குடை மிளகாய் மற்றும் செவ்வெண்டிக்காய் என்பன செவ்வாய்க்கிழமை (05) அறுவடை செய்யப்பட்டதாக ஏறாவூர் விவசாய விரிவாக்கல் பிரிவின் போதனா ஆசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார். இந்த குடை மிளகாய் மற்றும் செவ்வெண்டிக்காய் என்பன இப்பிரதேச காலநிலையில் விளைவிக்கப்பட்டது இதுவே முதல் தடவை என்றும் அவர் மேலும் கூறினார். பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் செய்கை மூலம் இப்பிரதேசத்திலுள்ள ஏனைய வீட்டுத் தோட்ட விவசாயிகளும் பெரும் தோட்டச் செய்கையாளர்களும் வர்த்தக நோக்கில் இந்த மரக்கறிகளைச் செய்கையை எதிர்காலத்தில் விஸ்தரிப்பது சாத்தியப்பட்டுள்…

    • 0 replies
    • 660 views
  14. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பாக இலங்கையில் உள்ள குமரன் பத்மநாபனை அழைத்து விசாரிக்க கோரிய வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் காவல்துறை அதிகாரி மோகன்ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் கே.பி. என்ற குமரன் பத்மநாபனுக்கு தொடர்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாபன் தற்போது இலங்கையில் உள்ளதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்து விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். கே. கவுல…

    • 1 reply
    • 447 views
  15. மஹிந்தவின் ஆலோசகர் குழுத்தலைவர் இலங்கையை சென்றடைந்தார்! மற்றொரு குழுவும் தயாராகிறது! காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் அதிபர் ஆணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சிறிலங்கா அதிபர் மகிநத ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட, மூன்று பேர் கொண்ட அனைத்துலக நிபுணர் குழுவின் தலைவரான சேர் டெஸ்மன்ட் டி சில்வா சிறிலங்கா வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவின் ஏனைய இரண்டு உறுப்பினர்களின் வருகைக்காக அவர் காத்திருப்பதாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோரே இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர். காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்கும் அதிபர் ஆணைக் குழு, இந்த நிபுணர் குழுவைச் சந்தித…

    • 0 replies
    • 594 views
  16. அரசின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கையெழுத்து வேட்டை! பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் புலமைப் பரிசுத் தொகை 09 வரு­டங்­க­ளாக அதி­க­ரிக்­கப்­ப­டாமை இலங்கை மாணவர் அமைப்­பிற்கு எதி­ரான அரசின் அடக்கு முறை என்­ப­வற்றை கண்­டித்து நேற்று முன்­தினம் முதல் அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் கையெ­ழுத்து வேட்டை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றிய செயற்­பாட்­டாளர் நஜித் இந்­திக்க தெரி­வித்தார். அனைத்து பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தால் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மரு­தானை சி.எஸ்.ஆர். மண்­ட­பத்தில் நடத்­தப்­பட்ட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.அவர் மேலும் தெரி­விக்­கையில் , பல்­க­லைக்­க­ழக மாண­வர…

    • 0 replies
    • 313 views
  17. யுத்தக் குற்றங்கள் தொடர்பில் தகவல்வழங்க விரும்புவோர் கவனத்திற்கு! இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பாக தகவல்களை சமர்ப்பிக்க விரும்புவோர் மின்னஞ்சல் ஊடாக அதனை பகிர்ந்து கொள்ளலாம் என ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. oisl_submissions@ohchr.org என்ற மின்னஞ்சல் முகவரியையே பயனபடுத்துமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வழிமுறை ஊடாக தகவல்களை பெற்ற பின்னர், தாங்கள் அதன் நம்பகத்தன்மைய உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை அரசாங்க அதிகாரிகளையும் ஏனையவர்களையும் சந்திப்பதற்காக அந்த நாட்டிற்கு செல்வதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஐ.நா ஆணையாளர் கோரவுள்ளதாகவும் …

    • 0 replies
    • 500 views
  18. முஸ்லிம் அரசியல்வாதிகளின் வார்த்தைகள் நீர் மேல் எழுதிய எழுத்துக்கள் – பிரசன்னா இந்திரகுமார் எமது நாட்டில் முஸ்லிம் இன­வாத அர­சி­யல்­வா­திகள் தமிழ் மக்­க­ளுடன் சேர்த்து முஸ்லிம் மக்­க­ளையும் ஏமாற்­றி­ய­தா­கவே வர­லா­றுகள் காணப்­ப­டு­கின்­றன. அவர்கள் காலத்­திற்கு காலம் கூறி வரு­கின்ற வார்­த­தைகள் எல்லாம் நீர் மேல் எழு­திய எழுத்துப் போலவே இருக்­கின்­றது என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் பிர­சன்னா இந்­தி­ர­குமார் தெரி­வித்தார். ஞாயிற்­றுக்­கி­ழமை அமிர்­த­க­ழியில் இடம்­பெற்ற விளை­யாட்டுப் போட்டி நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:– எமது சமூகம் விளை­யாட்டு, …

    • 0 replies
    • 506 views
  19. ஐ.நாவின் கோரிக்கையை உதாசீனம் செய்தது அரசாங்கம்- 06 ஆகஸ்ட் 2014 ஐக்கிய நாடுக்ள அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கையில் அடைக்கலம் பெற்றுக்கொண்டுள்ள பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திடம், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் கோரியிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்து 36 பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நாடு கடத்தியுள்ளது. இரண்டு மாதங்களாக தடுத்து …

  20. ஞானசார தேரருக்கு வீசா வழங்கியது அவுஸ்ரேலியா! [Friday 2014-07-11 18:00] அமெரிக்கா உட்பட சில மேற்குலக நாடுகள் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கிய வீசாக்களை ரத்துச் செய்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா அவருக்கு வீசா வழங்கியுள்ளது. எந்த முன்னுதாரணத்தையும் கவனத்தில் கொள்ளாது ஞானசார தேரர் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்வதற்கான வீசா அனுமதியை அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஞானசார தேரர் இந்த வருட ஆரம்பத்தில் கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் வீசாவுக்கான விண்ணப்பத்தை செய்திருந்ததுடன் தூதரகம் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது. இதனால் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் சந்தர்…

    • 9 replies
    • 993 views
  21. "யுத்தத்திற்குப் பின்னர் மதுசாரப் பாவனையில் இலங்கையில் 2ஆம் இடம் முல்லைத்தீவுக்கு என்று இன்டெர் பிரஸ் சர்வீஸ் செய்தித்தளம் http://www.ipsnews.net/2014/08/former-war-zone-drinking-its-troubles-away/ கூறுகிறது. இது பற்றி பருத்து வெளியிட்டுள்ள சமூக ஆர்வலரான குமாரவடிவேல் குருபரன், சனத்தொகையில் 34.4மூ மானவர்கள் முல்லைத்தீவில் மதுபானத்தை பொதுவில் அருந்துபவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார் இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், தருமபுரம் கள்ளச் சாராயத்தின் தலைமை இடமாக மாறிவிட்டது என்கிறது இந்தச் செய்தி. குறிப்பாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் கள்ளச் சாராயத்தை இலகு வருமானம் ஈட்டும் தொழிலாக வரித்துள்ளனர் என்பது இதில் மேலும் வருந்தக்கதக்க செய…

    • 1 reply
    • 385 views
  22. கடந்த காலத்தில் இருந்து இன்று வரையில் பெரும்­பான்மை வாதமே இந்த நாட்டின் அர­சியல் முறை­மை­யினை தீர்­மா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஒரு தரப்பின் கருத்­துக்­களை வைத்து அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதே தேசிய இணக்­கப்­பாட்­டுக்கு முட்­டுக்­கட்­டை­யாக அமைந்­துள்­ளது என தெரி­விக்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் மாற்றம் ஒன்­றினை எதிர்­பார்த்த எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஏமாற்­றமே எமக்கு கிடைத்­தது எனவும் சுட்டிக் காட்­டினார். 1978 ஆம் ஆண்டு யாப்பு மீளாய்வு நிய­மங்கள் தொகுப்­பாய்வு எதிர்­கால நோக்­கங்கள் மற்றும் யதார்த்­தங்கள் தொடர்­பான நூல் தொடர்­பி­லான கலந்­து­ரை­யாடல் நிகழ்வு நேற்று கொழும்பில் லக் ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத…

  23. முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் மாந்தை கிழக்கு, நெல்லிப்பிளவு - செல்வபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய 14 வீடுகள் பயனாளிகளிடம் இன்று காலை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. இந்தியத் துணைத் தூதரகத்தின் பதில் கவுன்ஸிலர் ஜெனரல் திரு.எஸ்.டி.மூர்த்தி, முல்லைத்தீவு அரச அதிபர் திரு.வேதநாயகம், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிருதாரன் மற்றும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர். இந்தக் கிராமத்துக்கு மின்சார விநியோகம், தண்ணீர் வசதி, வீதி அமைப்பு ஆகியன விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என முல்லைத்தீவு அரச அதிபர் அந்த மக்களுக்கு உறுதியளித்தார் http://malarum.com/article/tam/2014/08/05/4247/%E0%AE%AE%E0%AF%81%E0%AE…

    • 0 replies
    • 314 views
  24. ஆளுநர் நிராகரித்த சட்ட வரைவு ஒன்றை திருத்தங்களுடன் முதல் வாசிப்பில் நிறைவேற்றியது வடக்கு மாகாண சபை. வடக்கு மாகாண சபையின் 13 ஆவது கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள அதன் அவை மண்டபத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற போதே இவ்வாறு அந்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது. இன்று சபை கூடியதும் மூன்று நியதிச் சட்ட விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தச் சட்டவரைவுகளை சபையில் விவாதத்திற்குச் சமர்ப்பிக்க முன்னர் மாகாண ஆளுநரின் சிபாரிசுக்காகத் தாங்கள் அவருக்கு அனுப்பி வைத்திருந்தனர் என்றும் - அவற்றுள் ஒன்றை சிபாரிசு செய்துள்ள ஆளுநர் மற்றொன்றை நிராகரித்துள்ளார் என்றும், மூன்றாவதைத் திருத்தும்படி கூறியுள்ளார் என்றும் - சபையில் முதலமைச்சர…

    • 0 replies
    • 492 views
  25. யாழ் குடாநாட்டில் பெரும் குடிதண்ணீர் பிரச்சினை ஏற்படும் என கடந்த பல வருடங்களாக பலரும் தெரிவித்து வரும் நிலையில் இருக்கும் நீர் நிலைகள் கூட சுயநலத்திற்காக அழிக்கப்படும் சம்பவங்களை யிட்டு உள்ளூராட்சி சபைகள் மற்றும் பொது அமைப்புக்கள் கண்மூடி இருப்பது மிகவும் வேதனையான விடயமாகும். இந்த வகையில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கேணியான நாயன்மார் கட்டு கேணி குப்பைகள் போடப்பட்டு மூடப்படும் நடவடிக்கைகள் நடை பெற்று நிலை காணப்படுகின்றபோதிலும் மாநகர சபை எந்த வகையான நடவடிக்கைளும் மேற்க்கொள்ளாது கண்மூடி இருப்பதாகக் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தரவையில் மேய்ந்துவிட்டு வரும் கால்நடைகள் செம்மணி வெளிக்கு அருகில் காணப்படும் இந்தக் கேணியில் நீர் அருந்தி வந்தன. அதுமட்டுமின்றி அயல் பகுதிகளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.