Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர் பற்றி எவ்வித கருத்துக்களையும் வெளியிட முடியாது என கனடா அறிவித்துள்ளது. இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் அவரை நாடு கடத்துமாறும் இலங்கை கோரியுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், இவ்வாறு இலங்கை கோரிக்கை விடுத்ததா இல்லையா என்பது பற்றி கனடா எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை. இலங்கை அரசாங்கம் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்ததா இல்லையா என்பது குறித்து எதனையும் கூற முடியாது கனேடிய நீதி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கனராஜா ரவிசங்கர் என்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினருக்கு வவுனியா உயர் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்திருந்…

  2. ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க ஆயத்தமாவோருக்கு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பிலான விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்போருக்கு எதிராக அரச இரகசிய சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் அரசாங்கப் படையினருக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்க சிலர் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சாட்சிமளிக்க ஆயத்தமாகும் நபர்களுக்கு விமானச் சீட்டு, உணவு, தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை சில தன்னார்வ தொண்டு நிறுவன…

  3. இலங்கையில் அமெரிக்காவின் சதியா? அமெரிக்காவின் சதியா? அளுத்கமையில் தொடங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை வெளிநாட்டுச் சக்திகளின் சதியென்று நிரூபிப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் தீவிர கவனம் எடுத்துவருகிறது. வன்முறைகளை தடுக்கத்தவறிய குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக பழியிலிருந்து விடுபடுவதற்கான இலகுவானதொரு உபாயமே இந்த வெளிநாட்டுச் சூழ்ச்சி. அரச தரப்பிலுள்ள அமைச்சர்களும் இராணுவ அதிகாரிகளும் இது நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் சதியென்ற பிரசாரத்தை தெளிவாகவே மேற்கொண்டு வருகின்றனர். இன்போ தமிழின் கொழும்பு செய்தி ஆய்வாளரான கே.சஞ்சயன் அவர்கள் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா, முஸ்லிம் பிரமுகர்கள் மத்தியில் நிகழ்த்திய உரையொன்றிலும் அமைச்…

    • 0 replies
    • 162 views
  4. வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று (25.06) காலை பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வுகளுக்கு சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் இணைப்பாளருமான திரு.சிவநாதன் கிஷோர், அவரது பாரியார் உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர். பாடசாலையில் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய மாணவர்கள் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். -பண்டிதர்- http://www.vavuniyanet.com/?p=37338

    • 2 replies
    • 912 views
  5. புலிகளால் நேசிக்கப்பட்ட பிரசன்ன விதானகேயை புதிதாக முழைத்த தமிழ்த் தேசியப் பித்தர்களுக்கு தெரியுமா? 27 ஜூன் 2014 பிரசன்னவிதானகே VS மீடியா மினிஸ்ரர் சரத் அமுனுகம என்ற பிரதான வழக்கு இலங்கையின் சட்ட மானவர்களுக்கு பாடமாக இருப்பது தெரியுமா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வரதராஜன்:- திரைப்பட இயக்குனர் பிரசன்னா விதானகே நெறிப்படுத்தியுள்ள திரைப்படத்தை நான் இதுவரையில் பார்த்ததில்லை. ஆயினும் அந்த திரைப்படம் திரையிடுவதற்கு முன்னரே பலரும் அதனைப் பற்றி எழுதத் தொடங்கி உள்ளதுடன் அதனைத் தடை செய்யவேண்டும் எனக் கிளர்ந்து எழுந்துள்ளமை பின்னர் அது காட்சிப்படுத்தப் பட்டபோது சில குறுகிய விடயங்களையிட்டு விமர்சிக்கப்பட்டமை போன்ற செய்திகள் -என்னை இந்தக் குறிப்பை எழுத வைத்தது. …

    • 23 replies
    • 1.8k views
  6. நடுக்கடலில் நின்ற படகு: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் தேடிச் சென்ற ஈழத் தமிழர்கள் தவிப்பு ஆஸ்திரேலியாவில் தஞ்சம் தேடிச் சென்ற 152 ஈழத் தமிழர்களை ஏற்றிச் சென்ற படகு, எண்ணெய் கசிவு காரணமாக கிறிஸ்துமஸ் தீவுகளில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் சிக்கி உள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 13-ம் தேதி, புதுச்சேரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் 32 பெண்கள், 37 குழந்தைகள் உள்பட 152 புறப்பட்டுள்ளனர். படகில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், ஆஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவிலிருந்து சுமார் 250 கீ.மி தொலைவில் நடுக்கடலில் நின்றது. இது தொடர்பாக ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு படகில் பயணித்த டியூக் என்பவர் கூறுகையில், "இந்த படகில் தற்போது சிக்கி உள்ளவர்கள் அனைவருமே இலங…

  7. கோத்தாவிற்கும் முஸ்லீம் அமைப்புக்கிடையிலான சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க தடை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் முஸ்லீம் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டாமென கடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இறுதி முடிவொன்று எட்டப்படும் வரை சந்திப்பு தொடர்பாக எதனையும் தெரிவிக்ககூடாதென கோட்டபாய ராஜபக்ச முஸ்லீம் அமைப்பின் பிரதிநிதிகளுக்கு கண்டிப்பான உத்தரவோன்றை பிறப்பித்துள்ளார். பொது பல சேனாவின் செயற்பாடுகள்,கோட்டாவின் ஆதரவுடனேயே இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்ட வேளை அதனை மறுத்துள்ள அவர், முஸ்லீம் சமூகம் தொடர்பாக பௌத்த மதகுருமார் தம்மிடம் பல கர…

    • 0 replies
    • 704 views
  8. அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற அநீதிக்கு எதிராக முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனம் (மெஸ்ரோ) இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த 'முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும்' எனும் தலைப்பிலான கலந்துரையாடல் மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வைத் தடைசெய்யுமாறு கோரி கல்முனை பொலிஸார் இன்று கல்முனை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை நீதிமன்றம் நிராகரித்தது. இவ்வழக்கை மாவட்ட நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, கல்முனை பொலிஸார் மெஸ்ரோ நிறுவனம் இன்று நடத்தவிருக்கும் இந்த நிகழ்வினால் கல்முனை பிரதேசத்தின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படும். இவ்வமைப்பு கடந்த மூன்று நாட்களாக இந்நிகழ்வை நடத்த முயற்சித்தபோது தடைசெய்தது போல் இன்றும் இந்நிகழ்…

    • 0 replies
    • 371 views
  9. வடக்கு மாகாண சபைக்கு ஐயாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்­கி­யுள்­ள­தாக அமைச்சர் ஒருவர் தெரி­வித்­துள்­ளமை உண்­மைக்குப் புறம்­பான விட­ய­மாகும். எமது மாகாண சபைக்கு ஊழி­யர்­க­ளி­னு­டைய சம்­பளம் உட்­பட 1,872 மில்லியன் ரூபா மட்­டுமே இது­வரை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார். எங்களைப் பொறுத்தவரையில் எமக்குக் கிடைக்கின்ற நிதியினைக் கொண்டு மக்களுக்கு எவ்வாறான சேவைகளை வழங்கலாம் என்பது தொடர்பாக மட்டுமே சிந்தித்து வருகின்றோம். எமக்கு ஐயாயிரம் மில்லியன் ரூபா வழங்கியுள்ளதாக தெரிவித்துக் கொண்டு நான்காயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் தனது கையில் வைத்துக்கொண்டு பல வேலைத்திட்டங்களை செய்துவருகின்றது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார…

    • 0 replies
    • 472 views
  10. தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக அரசாங்கத்தைக கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிதி உதவியில் இயங்கி வரும் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலை நடத்தக் கூடுமெனவும், தேர்தல்களை இலக்கு வைத்து சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுதந்திரத்தி;ற்கு பின்னர் இலங்கை மக்கள் பெரும் எண்ணிக்கையிலான தேர்தல்களில் வாக்களித்துள்ளதாகவும், தேர்தல் தொடர்பில் அமெரிக்கா இலங்கை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்…

    • 0 replies
    • 580 views
  11. இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வடக்கு – கிழக்கு பிரதேசங்கள் இருக்கும் வரை அங்கு பொருளாதார அபிவிருத்தி ஏற்படாது என வட மாகாண விவசாய அமைச்சர் பி ஜங்கரநேசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் பதுளையை தலைநகரமாகக் கொண்ட ஊவா மாகாணத்திற்கு அடுத்து எங்கள் கிழக்கு மாகாணமும் தெற்கு அடுத்து வடக்கு மாகாணமும் வறுமை மிகுந்த மாகாணங்களாக உள்ளதாக அவர் தெரிவித்தார். வடக்கு கிழக்கில் நாள் ஒன்றுக்கு 100ரூபாகூட சம்பாதிக்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர் என்பதையே இந்த புள்ளி விபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் அதிகரிக்க தெற்கில் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது. இன்று வட்டக்கச்சி பண்ண…

    • 0 replies
    • 459 views
  12. ஜும்ஆத்தொழுகையின் போது பள்ளிவாசலுக்கு வெளியே நின்று தொழுவதை இயன்றளவு தவிர்த்து கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகிகள் சகல முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குறிப்பாக கொழும்பு, கோட்டை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, பொரளை உள்ளிட்ட சில பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வெளியே வீதியோரங்களில் சில முஸ்லிம்கள் ஜூம்ஆத் தொழுகையை நிறைவேற்றுகின்றனர். இதனால், பாதுகாப்பு தரப்பில் மட்டுமல்ல முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கும் பல்வேறு சிக்கல்கள் பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு என்றும் கொழும்பு பிரதேச பள்ளிவாசல்களை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு பள்ளிவாசலுக்கு வெளியே தொழும் சகல முஸ்லிம்களும் உள்ளே சென்று தமக்குரிய இடங்கள…

  13. இலங்கை அரசியலில் அமெரிக்கா, பிரித்தானியாவின் செல்வாக்கு அதிகரிப்பு! - ஆட்சிமாற்றத்துக்கு திட்டம்? [Friday, 2014-06-27 09:48:42] இலங்கை அரசியலில் மேற்கு நாடுகளின் செல்வாக்கு, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகியவற்றின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னரே இந்த செல்வாக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா தூதுவர் மிச்செய்ல் சிசன், இதில் மிக முக்கிய பாத்திரத்தை கொண்டிருக்கிறார். அளுத்கம சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரங்கீனும் ஒன்றாக சேர்ந்து ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். அமைச்சர் ரவூப் ஹக்கீமையும் அமெரிக்க தூதுவர் சந்தித்தார். அதேவேளை அளுத்…

    • 2 replies
    • 790 views
  14. தமிழர்களுடைய கலாச்சாரங்கள் அனைத்தையும் உள்ளடக்கி யாழில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையத்திற்கான மாதிரி வரைபடத்தை பெரும்பான்மையினத்தவர் ஒருவர் அமைத்துள்ளமை அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையத்திற்கான மாதிரி வரைபடத்தை பெறுவதற்கான கண்காட்சி அண்மையில் இடம்பெற்றது. அதில் 75 படவரை கலைஞர்கள் பங்கு பற்றியிருந்தனர். எனினும் அதில் முதற்கட்டமாக 50 படங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் மீண்டும் 5 மாதிரி வடைபடங்கள் தெரிவாகி அதிலும் இறுதியாக பெரும்பான்மையினத்தை சேர்ந்த மதுரா என்பவரால் வரையப்பட்ட வரைபு தெரிவாகியது. இது குறித்து யாழ். மாநகர சபை முதல்வர் தெரிவிக்கையில் , தமிழர்களுடைய கலாச்சாரத்தை நன்கு அறிந்து அதற…

  15. அளுத்கமயில் இனவாதிகள் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டின் அபிவிருத்திக்கு செலவிடப்பட வேண்டிய பணம் இன்று சேதமுற்ற வீடுகளை மீள் புனரமைக்க செலவிடப்படுகின்றது. இது போன்றதொரு கசப்பான சம்பவம் இனி மேலும் ஏற்படக்கூடாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். வன் செயலினால் அழிவுற்ற வீடுகளை மீள் புனரமைப்பது பற்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமொன்று நேற்று மாலை தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரி ஐ.எல்.எம்.மஷ்ஷுர் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், களுத்துறை மாவட்ட செயலாளர் யு.டி.சந்தன ஜயலால், பிரதேச செய…

    • 1 reply
    • 505 views
  16. -சுப்பிரமணியம் பாஸ்கரன் கிளிநொச்சி மாயவனூர் புழுதியாற்றில் ஏற்று நீர்ப்பாசனத்திட்டத்திற்கான அடிக்கல்லை இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நாட்டிவைத்தார். வடமாகாணசபையின் குறித்தொதுக்கப்பட்ட 32 மில்லியன் ரூபா செலவில் இந்த ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மேற்படி ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் 150 ஏக்கரில் சிறுதானியச் செய்கை மேற்கொள்ள முடிவதுடன், இதனால், 840 வரையான குடும்பங்கள் பயனடைவார்கள். இந்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-…

    • 0 replies
    • 411 views
  17. தமிழர்களும் இசுலாமியத் தமிழருன் ஏன் ஒன்றுபட வேண்டும் என்பதற்கான வலுவான காரணம் இந்தத் தாயின் அங்காலய்ப்பு. பிரித்தானிய தமிழர் பேரவை முதற்கொண்டு அனைத்து தமிழர் அமைப்புக்களும் எடுத்த நிலைப்பாட்டிற்கான பின்னணி இது தான். இனி இசுலாமியத் தமிழர்களை பகடைக்காய்க்களாகப் பயன் படுத்த நினினைக்கும் தலமைகள் தூக்கி எறியப்படும் நாளும் வெகு தூரத்தில் இல்லை.

  18. 12 இலட்சம் ரூபாய் வாடகையாக செலுத்துகிறோம் – திருவாய் மலர்ந்தார் விக்கி! வடக்கு மாகாணத் திணைக்களங்கள், அமைச்சுக்கள், அமைச்சர்களின் வதிவிடங்கள் மற்றும் முதலமைச்சர் அலுவலகம் என்பவற்றின் வாடகைக்காக மாதாந்தம் செலவிடப்படும் தொகை 12 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாவெனத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். 25.09.2013 ஆம் திகதியிலிருந்து வடக்கு மாகாணசபை மற்றும் சபை சார்ந்த அமைச்சுக்களின் காரியாலயங்கள், முதலமைச்சரின் காரியாலயம், ஏனைய திணைக்களங்கள் மற்றும் இதர அலுவலகங்களுக்கும் முதலமைச்சர், அவைத் தலைவர், அமைச்சர்களது வதிவிடங்களுக்கும் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கட்டங்கள், வீடுகள் தொடர்பான விடயங்கள், அந்தக் கட்டங்கள், வீடுகளின் விலாசங்கள், உரிமையாளர்களின் ப…

  19. - செல்வநாயகம் கபிலன் முக்கொலை செய்த தனஞ்செயனுக்கும் எனக்கும் தனிப்பட்ட பகையில்லையென தனஞ்செயனின் வாள்வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தங்கவேல் யசோதரன், இன்று வெள்ளிக்கிழமை (27) மன்றில் சாட்சியமளித்தார். அத்துடன், முக்கொலை குற்றவாளியினை எதிர்வரும் ஜூலை மாதம் 11ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, இன்று (27) உத்தரவிட்டார். யாழ். அச்சுவேலி கதிரிப்பாயில் கடந்த மே 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தினால் இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, கொலையுண்ட மதுசாவின் கணவரான ய…

  20. பொலிஸ் உத்தியோகம் தமக்கு தேவையில்லை! வடக்கு, கிழக்குத் தமிழர்கள் பொலிஸ் திணைக்களத்துக்கு தமிழ் அலுவலர்களை இணைத்துக் கொள்ள வடக்கு மற்றம் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் உதவி பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட வெற்றிடங்களுக்கு தமிழ் யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்பு பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் பொலிஸ் திணைக்களம் எதிர்பார்த்த அளவில் இந்தச் செயற்திட்டம் வடக்கு,கிழக்கு பகுதிகளில் வெற்றியளிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுவரை குறைவான விண்ணப்பங்களே கிடைத்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இதனையடுத்து சிவில் பாதுகாப்புக் குழுக்கள் மூலமாக இது தொடர்பான …

  21. இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது எனத்தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள செய்யாறு சிறப்பு முகாமில் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 32 வயதான செந்தூரன் என தெரிய வந்துள்ளது. தன்னையும் தனது குடும்பத்தையும் இலங்கைக்கு நாடு கடத்தாமல் அதற்கு பதிலாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியே இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்ததாகவும் இதேவேளை குறித்த நபர் தற்கொலைக்கு முயற்சித்த காரணத்தினால் தாம் அந்நபரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் ஒருவர் நீர் அருந்தாத சந்தர்ப்பத்தில் கைது செய்ய முடியும் என்ற நிலையில் அவர் நீர் அருந்தி உண்ணாவிரதத்தை ம…

  22. குருநகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. யாழ்.குருநகர் பங்சால் வீதியில் உள்ள 2வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் 3ஆவது வீடு அரைவாசி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவினரால் அணைக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த தீ எதனால் ஏற்பட்டது என இதுவரை கண்டறியப்படவில்லை. யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=237413166927688862#sthash.7PdJdWwX.dpuf

  23. யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளை காப்பெற் வீதிகளாக மாற்றியமைக்கும் திட்டத்திற்கு நிதி வழங்கும் நிறுவனம் உரிய முறையில் நிதிவழங்காமையினாலேயே வேலைகள் தாமதமாகியுள்ளதாக மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். இதற்குரிய நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அடுத்தவாரத்திற்குள் இந்தப் பணிகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் மாநகர முதல்வர் தலைமையில் இடம்பெற்ற போது சபை எல்லைகுற்பட்ட சில வீதிகளின் புனரமைப்புத் தொடர்பாக கேட்க்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்...... யாழ். மாநகர சபைக்குற்பட்ட வீதிகளை காப்பெற் வீதியா…

  24. அரச இரகசியங்களை வெளிப்படுத்தி தவறு செய்திருப்பின் மங்கள சமரவீரவை கைது செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். மங்கள சமரவீர தவறு செய்து விட்டார், தவறு செய்து விட்டார் என வாயால் மென்று கொண்டிருக்காது அவரை கைது செய்யுமாறு அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டார். கொழும்பில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாராளுமன்றத்திற்கு வெளியால் மங்கள சமரவீர தெரிவித்த கருத்து பாராளுமன்ற வசப்பிரசாதத்துக்குள் உட்படாது என அவர் சுட்டிக் காட்டினார். அவ்வாறே மங்கள சமரவீரவால் தெரிவிக்கப்பட்ட தகவல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில…

  25. நிபுணர் குழு, மிக பலமானது:- தயான் - குளோபல் தமிழ்ச் செய்திகள் முன்பு சுட்டிக் காட்டியிருந்தது:- இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கு, ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நியமித்துள்ள நிபுணர் குழு, மிக பலமானது என n;ஜனீவாவிற்கான முன்னாள் தூதுவர் தயான் ஜெயதிலஹ தெரிவித்துள்ளார். காஸா மோதல் தொடர்பான உண்மையை கண்டறியும் குழுவில் கூட தனி நபர் ஒருவரே இடம்பெற்றிருந்தார் - றிச்சட் கோல்ஸ்டோன், ஆனால் இலங்கை தொடர்பான குழுவோ வலுவானது என அவர் இந்தியன் எக்ஸ்பிரசிற்கு தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108659/language/ta-IN/article.aspx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.