Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மத்தலவில் தரையிறங்கிய உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானம் உலகின் இரண்டாவது பெரிய சரக்கு விமானமான, அன்ரனோவ் ஏஎன்-124 ருஸ்லான், மத்தல விமான நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்புவதற்காகவும், விமானப் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவுமே இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து மஸ்கட் செல்லும் வழியிலேயே இந்த விமானம் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியது. இன்று அதிகாலை 1.40 மணியளவில், மஸ்கட் நோக்கி புறப்பட்டுச் செல்லத் திட்டமிட்டிருந்தது. உலகின் மிகப் பெரிய விமானங்களில் ஒன்றான ஏஎன்-124 கனரக மற்றும் பருமமான சுமைகளை ஏற்றுவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை விமானம் சிறிலங…

  2. Published By: VISHNU 21 APR, 2023 | 03:52 PM தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. 20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் (கிளி பாதர்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப…

  3. பிணையில் விடுக்கப்பட்டபோதும் வெளியில் வரமுடியாத நிலையில் விடுதலைப்புலி சந்தேக நபர்! வெள்ளி, 06 மே 2011 08:18 தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்தில் இணைந்து ஆயுதப்பயிற்சி பெற்றவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு கடந்த ஏழு வருடமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள போதும் பிணைப் பணம் இல்லாத நிலையில் மீண்டும் சிறைச்சாலைக்கு சென்ற சம்பவம் மட்டக்களப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி பிரதேசத்தின் பாரதிபுரத்தை சேர்ந்த கந்தசாமி கரண் (31வயது) என்பவர் வந்தாறுமூலையில் திருமணம் முடித்துள்ளார். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்தபோது பட…

  4. கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதக் குழுக்கள் இயங்குவதாக எச்சரித்திருக்கும் பொதுபலசேனா, அவற்றின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கிழக்கிலுள்ள இந்தக் குழுக்கள் தொடர்பான புலனாய்வு அறிக்கைகளை அரசாங்கம் அலட்சியப்படுத்தியிருப்பதாக நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். இந்தக் குழுக்கள் தொடர்பாகப் பரிசீலிக்காமல் இருந்தால் இந்த வாரம் அவுஸ்திரேலியாவிலும் பாகிஸ்தானிலும் இடம்பெற்ற சம்பவங்கள் போன்ற விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். கிழக்கைத் தளமாகக் கொண்டுள்ள பயங்கரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல் தொடர்பாக சர்வதேச முகவரமைப்புகள் எச்சரித்…

  5. மானிப்பாய் பொலிஸ் நிலையம் முன்பாக திரண்ட உறவுகள்-!! தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களை யும் சேர்ந்த 7 இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என்று சுமார் 40 இற்கும் மேற்பட்டோர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதைபதைப்புடன் திரண்டனர். வாள்வெட்டுக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் 7 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர். …

    • 5 replies
    • 1k views
  6. ராஜபக்ஷ குடும்பத்தில் 67 பேர் ஜனாதிபதி செயலகத்தில் சம்பளம் பெறுகின்றனர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பரம்பரையில் சுமார் 67 பேர் ஜனாதிபதி செயலகத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். 4 இலட்சம் ரூபா முதல் 5 இலட்சம் ரூபா வரை மாதாந்தம் ஜனாதிபதி செயலகத்தில் சம்பளம் பெறும் ராஜபக்ஷ குடும்பம், ஓர் கம்பனியாக விளங்குகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்துள்ளார். கெக்கிராவ தேர்தல் தொகுதியிலமைந்துள்ள பலாகல என்ற இடத்தில் கட்சிக் கிளையொன்றைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது; 1997 ஆம் ஆண்டு ஷ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் குடும்ப மரம் பற்றிப் பேசப்பட்டது. அப்போது அந்த ம…

  7. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டு மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் மீது இந்திய அரசு காத்து வரும் மெளனம், “அது சிறிலங்க அரசிற்கு ஆதரவாக நிற்கிறது என்பதையே காட்டுகிறது” என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாக வந்துள்ள செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கொழும்புவில் இருந்து வெளிவரும் உள்ளூர் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நேற்று பேசியுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தலைமையில் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ள “இந்திய அரசுக் குழுவின் பயணம் ஐ.நா.நிபுணர் குழு தொடர்பானது அல்ல” என்றும் கூறியிருக்கிறார்! …

    • 1 reply
    • 1.4k views
  8. மத்தளை விமான நிலையத்திற்காக பெற்றக்கொள்ளப்பட்ட கடனை செலுத்த 140000 வருடங்கள் தேவைப்படும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பிட்டகோட்டேவில் அமைந்துள்ள சொலிஸ் ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மத்தள விமான நிலையத்தின் வருமானம் 16000 ரூபாவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்தள விமான நிலையத்தினை அமைப்பதற்காக 27000 மில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மனித குலம் தோன்றி 143000 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும் அந்தளவு காலத்திற்கு இலங்கையர்களை கடன்காரர்களாக ராஜபக்ஸ அரசாங்கம் மாற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். குடும்ப நலனை கருத்திற் கொண்டே மத்தள விமான நிலையம் அமைக்கப்பட்டுள்…

  9. குள்ள மனிதர்கள் விவகாரம்-மூடி மறைக்க முயற்சிக்கும் பொலிஸார்- வடக்கு முதல்வரும் உடந்தை!! மக்­கள் பிரச்­சி­னை­க­ளைப் பற்றி மக்­க­ளி­டம் நேரில் சென்று அறி­வ­தற்கு துளி­ய­ள­வே­னும் ஆர்­வம் காட்­டாத அல்­லது விருப்­பம் இல்­லாத வடக்கு மாகா­ண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் பொலி­ஸார் கூறு­வதை நம்­பு­வ­தும், அதை பத்­தி­ரிகை­க­ளுக்­குத் தெரி­வித்து எது­வுமே நடக்­க­வில்லை என்­ப­து விச­­னத்­துக் கு­ரி­யது, ஒரு நாள் அவர் இங்கு வந்து இரவு முழு­வ­தும் நின்று நில­மை­களை அவ­தா­னித்­தால் தெரி­யும் மக்­கள் படும் பாடு. இவ்­வாறு யாழ்ப்­பா­ணம் அராலி மக்­கள் கொதித்­த­னர். யாழ்ப்­பா­ணம், அரா­லிப் பகு­தி­யில் தொடர்ந்­துள்ள வீடு­கள் மீதான கல…

  10. சிறுவர்களை தப்பிக்க வைக்கும் காவலாளி – நடவடிக்கை எடுக்காத பொலிஸார்? அச்சுவேலியிலுள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலையிலுள்ள சிறுவர்களை பணத்தைப் பெற்று அங்குள்ள காவலாளி தப்பிக்க வைத்ததாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வெளி மாகாணங்களைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுச் சிறுவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நன்னடத்தைப் பாடசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தொடர்பில், அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்றைய தினமே வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து வவுனியா பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் நீதிமன்ற விசாரணைக…

  11. அரசின் பிரச்சாரத்தை சில எறிகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 16:45 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசினால் கிழக்கு மாகாணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை கடந்த வாரம் இடம்பெற்ற மோட்டார் எறிகணைத் தாக்குதலின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர் என்று 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தனது ஆய்வில் அவர் மேலும் தொவித்துள்ளதாவது: கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மணிக்கு 373 கி.மீ (201 நொட்ஸ்) வேகமுடைய தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா போரோன் C-55 ரக விமானம் மட்டக்களப்பில் உள்ள விமானப் படைத்தள…

    • 10 replies
    • 1.9k views
  12. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமித்த கருணாவின் சகாவான இனியபாரதி தொடர்ந்தும் சிறுவர்களை கடத்தும் ஆயுத குழு என ஐக்கிய நாடுகள் சபை பெயரிட்டுள்ளது. ஆயுத மோதல்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான 10வது அறிக்கையில் இதனை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இனிய பாரதி குழுவினர் சிறுவர்களை படையில் சேர்ப்பது, அவர்களை கொலை செய்வது, அங்கவீனப்படுத்துவது, போர் காலத்தில் சிறுவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது போன்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளது. இவரது குழுவைச் சேர்ந்த விஜி என்பவர் செய்த பாலியல் பலாத்காரங்கள் அதிகம், சம்பவம்--01 தம்பிலுவிலிலுள்ள வினாயகபுரம் சின்னத்தோட்டத்தை சேர்ந்த ஒரு விவசாய…

  13. சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய வழக்கில் திருப்பம் ; யாழ். ஊடகவியலாளரை விசாரணைக்கு அழைத்தது சிஐடி புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவிக்க உதவியதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் முற்றுப் பெற்று மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளநிலையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார். சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்ப்பட்டுள்ள வடக்கு மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகிய பொலிஸ் அதிகாரிகளின் தொலைபெசி உரையாடல் தொடர்ப…

  14. வடபகுதியில் கறுவா செய்கையை ஊக்குவிக்கும் முகமாக அது குறித்த விளக்க செயலமா்வு ஒன்று எதிா்வரும் மே 20 ஆம் திகதி சனிக்கிழமை வட்டுக்கோட்டை பங்குரு முருகன் கோவில் சமூக மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையில் நடைபெறும் இந்த செயலமா்வில் கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளா் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வடக்கில் கறுவாச் செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தொடா்பாக விளக்க உரை நிகழ்த்துவாா். அதனைவிட கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் அதிகாரிகள் பலரும் இந்த செயலமா்வில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிப்பதுடன், பொதுமக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதிலளிப்பாா்கள். வடபகுதியில் கறுவாச் செய்கைய…

  15. இரகசியமாக பிரித்தானியா சென்ற நிமால் Posted by சங்கீதா on 23/05/2011 in செய்தி | 0 Comment புலம்பெயர் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு அஞ்சி சிறீலங்கா அரச தராப்பினரின் பயணங்கள் பல இரகசியமாகவே தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. அண்மையில் பிரித்தானியாவில் கொண்டாடப்பட்ட 2,600 ஆவது பௌத்த ஜெயந்தி விழாவில் கலந்துகொள்வதற்காக சிறீலங்கா அமைச்சர் நிமால் சிறீபால டி சில்வா பிரித்தானியாவுக்கு இரகசியப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த 20 ஆம் நாள் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட நிமாலின் நடவடிக்கை குறித்து நேற்றே (22) சிறீலங்கா அரசு தகவலை வெளியிட்டுள்ளது. லண்டன் பௌத்த விகாரையில் இடம்பெற்ற இந்த விழாவில் பல பௌத்த துறவிகளும், பிரித்தானியாவுக்கான சிறீலங்காவின் பிரதித் தூதுவர் அம…

  16. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள பிரமுகர் பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் பரிசோதனை இயந்திரங்களை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, அதியுயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் கருவிகளை பிரமுகர் முனையத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தில் ஸ்கேனிங் சாதனங்கள் நிறுவப்பட்டிருந்தாலும், விஐபி முனையத்தைப் பயன்படுத்துபவர்களின் பொருட்கள் மற்றும் பைகளை ஆய்வு செய்ய அத்தகைய இயந்திரங்கள் எதுவும் இல்லை. சுங்கத்துறை அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இது நிறுவப்படவுள்ளது. https://thina…

  17. 300 கோடி ரூபா பெறுமதியான காணியை பெறும் பலாத்தகார நடவடிக்கையில் மகிந்தவும் பசிலும்: 'ராவய' வார ஏடு [திங்கட்கிழமை, 12 மார்ச் 2007, 18:08 ஈழம்] [கொழும்பு நிருபர்] தனியார் உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமானதும், ரஸ்ய தூதரக அலுவலகத்திற்கு சொந்தமானதுமான 300 கோடி ரூபாவுக்கு அதிகமான பெறுமதி கொண்ட காணியை பலாத்காரமாக உரிமையாக்கிக் கொண்டு அதில் வாகனத் தரிப்பிடத்தை அமைக்கும் பணி, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்றது. இத்தகவலை கடந்த வாரம் வெளிவந்த 'ராவய' வார இதழ் தனது செய்தியில் வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட அந்த இடத்தில் வாகனத் தரிப்பிடத்தை அமைத்து அதனை அங்குரார்ப்பணம் ச…

  18. Friday, May 27, 2011, 12:54சிறீலங்கா45 views1 comment ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சே அவரது கடமை சம்பந்தமாக செய்திகள் ஒளிபரப்பப்படும் போது உரிய பிரசாரம் வழங்கப்படுவதில்லை எனக் கூறி, அண்மையில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சரத் கொங்காகேவிடம் தொலைபேசி மூலம் கடுமையாக குற்றஞ்சுமத்தியுள்ளார் இவற்றுக்கு யார் ஆலோசனை வழங்குகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்களும் இதற்கு பொறுப்பு கூறவேண்டும். அவரது சின்ன விடயம் என்றாலும் மணிக் கணக்கில் அதனை ஒளிபரப்புகிறீர்கள். எனது செய்தியை வெட்டுகிறீர்கள். இவ்வாறு செய்யும் அவர்களுக்கு நல்லது நடக்காது. சாபம் ஏற்படும் என ஜனாதிபதியின் பாரியார் தொலைபேசியில் தொடர்ந்து குறை கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த கொங்க…

  19. 9 ஆம் திகதி மாலையே தேர்தல் முடிவுகள் news ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவு ஒன்தாம் திகதி மாலையே அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி தேர்தல் நடைபெறுகின்றது.இதில்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 17 வேட்பாளர்களும் இரு சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.8 ஆம் திகதி இரவே வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிடும். தபால் மூல வாக்குகளின் முடிவுகள் முதலில் வெளியிடப்படும்.இரவு 10 மணியளவில் அந்த முடிவுகள் வெளிவர ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும்,இறுதி முடிவு மறுநாள் மாலையே உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சட்டவிரோத தேர்தல் பரப்புரைகள் மற்றும் தேர்தல்…

  20. Published By: VISHNU 05 JUN, 2023 | 03:54 PM தமிழ்த் தேசியத்தின் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராக உறுதியுடன் போராடிய முதல் வித்து பொன் சிவகுமாரன். மாணவர் எழுச்சியாக உருப்பெற்ற பொன் சிவகுமாரனின் பயணம் தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய போராட்டப்பாதையில் அத்திபாரமாக அமைகின்றது. இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். உரும்பிராயில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் முன்னர் இராணுவத்தினரால் உடைக்கப்பட்ட நிலையில் மீள பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ள பொன் சிவகுமாரனின் அஞ்சலி செலுத்திய பின் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சிவகுமாரன் அவர்களது தியாகம் எமது விடு…

  21. ‘சுமந்திரனின் கருத்துகள் தலைமைக்கு கொண்டு செல்லப்படும்’ - எஸ். நிதர்ஷன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தொடர்பில் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் கட்சித் தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்று கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் ஒன்றான புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தாத்தன் தெரிவித்தார். இவ்வாறு சுமந்திரன் கூறி வருகின்றமை தவறு என்று சுமந்திரனுக்கு நேரடியாகவும் தெரிவிக்கப்படுமென்றும் குறிப்பிட்டிருக்கும் சித்தார்த்தன்; கடந்த கால அரசியலை கற்றுக் கொண்ட பின்னர் சுமந்திரன் பேச ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். …

  22. இலங்கையில் பெற்றோலிய பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தத்தில் அரசாங்கமும் RM Parks Incம் கையெழுத்திட்டுள்ளன. அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளை அடுத்து, இலங்கையில் பெற்றோலியப் பொருட்களை விற்பனை செய்வதற்கான நீண்டகால ஒப்பந்தம் ஒன்றிற்காக ஷெல் நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கும் RM Parks Inc.க்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கம் ஆர்வத்தை வெளிப்படுத்துமாறு அழைப்பு விடுத்ததையடுத்து, இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க ஏன…

  23. ஞாயிற்றுகிழமை, யூன் 5, 2011 இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனிதப் பேரவலத்தைப் பற்றி பிரிட்டனின் "சனல்4" தொலைக்காட்சி ஒருமணி நேர ஆவணப்படத்தைத் தயாரித்திருந்தது. அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் இந்த ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் காண்பிக்கப்பட்டது. பலநாடுகளின் தூதர்கள் அதனைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கலங்கினர். அதில் இடம்பெற்றிருந்த பல காட்சிகளைத் தம்மால் பார்க்க முடியவில்லை என்று கூறினர். பலர் திகைத்தே போயினர். . ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்ட போது இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டிருந்த பிரதி சட்டமா அதிபர் ஏ.எம்.டி.நவாஸ், அந்தக் காட்சிகள் பொய்யானவை என்று பின்னர் கலந்துரையாடலில் மறுத்தார். அந்த வீடியோ நம்பகத்தன்மையற்றது என்றார்…

    • 1 reply
    • 765 views
  24. முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. தம்மை சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, முல்லேரியா – கொட்டிக்காவத்தை பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன சோலங்ஆராச்சி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் கடந்த தேர்தலின் போது புதிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் சுதந்திரகட்சியில் இருந்து மகிந்தராஜபக்ஷவினால் நீக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த மனுவில் பிரதி வாதியாக சேர்க்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 26ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/news/36887/57//d,article_full.…

  25. புலம்பெயர்ந்தோர் பாதிக்கப்பட்டவர்களை கண்டுகொள்வதில்லை: சிவாஜிலிங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு புலம்பெயர் உறவுகள் தவறுவதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சமகால விடயங்கள் தொடர்பில் ஆராயும் எமது ஆதவனின் ‘நிலைவரம்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது தமிழ் உறவுகளுக்காக ஜெனீவாவில் குரல் கொடுக்க செல்லும் எம்மை புலம்பெயர் அமைப்புகள் கண்டுக் கொள்வதில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதற்கு செல்லும் எமக்கும் எவ்வித அனுசரணையும் கிடைப்பதில்லை. கடன்பட்டே நாம் அங்கு செல்ல வேண்டியுள்ளது. அதுமாத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.