Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பான 42 பக்க அறிக்கை நவநீதம்பிள்ளையிடம் கையளிப்பு! - தயாரித்தவரை அடையாளம் கண்டதாம் புலனாய்வுப் பிரிவு. [Tuesday, 2014-05-20 09:43:33] போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பாக, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையர் உள்ளிட்ட புலம்பெயர் புலி ஆதரவாளர்களினால் இந்த 42 பக்கங்களைக் கொண்ட அறிக்கை நேற்று நவநீதம்பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கையளித்த இலங்கையருக்கு சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மேஜர் ஜெனரல்களான சவேந்திரா சி…

    • 3 replies
    • 848 views
  2. -செல்வநாயகம் கபிலன் யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் யாழில் அமைக்கப்பட்ட 43 அடி உயரமான மற்றும் 42 அகலமான வெசாக் தோரணத்தில் 60 ஆயிரம் மின்குமிழ்கள் பொருத்தப்பட்ட வேலைத்திட்டம் மற்றும் அதனை இயக்கிய தொழில்நுட்பங்கள் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு திங்கட்கிழமை (19) விளக்கமளிக்கப்பட்டது. யாழ்.பொது நூலகத்திற்கு முன்னால் மேற்படி விளக்கமளிக்கும் கண்காட்சி கூடம் அமைக்கப்பட்டிருந்ததுடன், தொழில்நுட்பங்கள் தொடர்பில் இராணுவத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். வெசாக் தோரணத்தினை பார்வையிடுவதற்கான இறுதிநாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/77--image/111036-2014-05-19-1…

    • 1 reply
    • 442 views
  3. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புகைப்படங்களை ஆராய்கிறது புலனாய்வுப் பிரிவு! - நிகழ்வுகளில் பங்கேற்றோரை கைது செய்யத் திட்டம்? [Tuesday, 2014-05-20 09:30:37] வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களின் புகைப்படங்களை புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம் இவ்வாறான நிகழ்வுகளுக்கு தடை விதித்திருந்த போதும், பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பு, கத்தோலிக்க திருசபை போன்றன பல்வேறு பகுதிகளில் அஞ்சலி கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன. அவ்வாறான நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தன. அவற்றைக் கொண்ட…

  4. ஐ.நா விசாரணையில் ஆஜராக பாகிஸ்தான் வழக்கறிஞரை பணிக்கமர்த்தியது சிறிலங்கா மே 20, 2014 மனித உரிமைகள் தொடர்பான பதிவுகள், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி வழக்கறிஞர் ஒருவரை சிறிலங்கா அமர்த்தியுள்ளது. ஐ.நா. விசாரணையை எதிர்கொண்டிருக்கும் சிறிலங்கா, அயிட்ஹா அஷான் என்ற சட்ட நிபுணரை தனது சார்பில் அமர்த்தியிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அஷன் கடந்தவாரம் கொழும்பில் இந்த விடயம் குறித்துக் கலந்துரையாடியிருந்தார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததையடுத்து அஷன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். முன்னாள் இராணுவ ஆட்சியாளர் முஷாரப் பயணம் செய்த விமானத்தை 1999 இல் கடத்துவ…

  5. யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு இலங்கை இடமளிக்க வேண்டும் - HRW 20 மே 2014 யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் இடமளிக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைவாக விசாரணைகளை நடாத்த இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஆணைக்குழு ஒன்றை நிறுவுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் தீர்மானத்தில் கோரப்பட்…

  6. எம்.என்.எம். ஹிஜாஸ் புத்தளம் மாவட்டத்தில் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலந்தையடி தொடக்கம் ஆலங்குடா வரையிலான கடற்கரைப்பகுதியில் பரந்து காணப்படும் சவுக்குமரக்காடு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகின்றது. இவ் இடத்திற்கு வருபவர்கள் கடலில் நீராடுவதுடன் இவ் சவுக்கு மரத்தோட்டத்திற்குள் அமர்ந்து உணவு உண்ணும் செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் காணப்படும் சுற்றுலாத்துறையுடனான ஹோட்டல்களின் எல்லைப்பகுதிகளிலும் இச்சவுக்குமரம் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது. http://tamil.dailymirror.lk/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88/travel/111034-2014-05-19-11-26-43.html

    • 0 replies
    • 479 views
  7. யாழ்ப்பாணத்திற்கு வந்ததன் பின்னரே தான் தூய தமிழ்மொழியை கற்றுக்கொண்டதுடன், பழமொழிகளையும் தான் அறிந்துகொண்டதாக யாழ். இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் வெ.மகாலிங்கம் தெரிவித்தார். மேலும், தான் அறிந்துகொண்ட பழமொழிகளை கோப்பாக வெளியிடவுள்ளதாகவும் அவர் கூறினார். கயானா நாட்டின் இந்திய உயர்ஸ்தானிகராக மாற்றலாகிச் செல்லவுள்ள வெ.மகாலிங்கத்திற்கு யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரிவுபசார நிகழ்வு யாழ். கிறீன் கிறாஸ் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'இந்திய வெளிவிவகார அமைச்சின் வேலைகள் வெளிநாடுகளிலும் மற்றும் புதுடில்லியிலும் இருந்தமையால், என்னை விட்டுத் தமிழ்மொழி சென்றுவி…

    • 0 replies
    • 543 views
  8. நரேந்திரமோடியின் வரவு ஈழத் தமிழருக்கு நன்மை தருமா..? காங்கிரஸ் ஆட்சியை இறக்கியதே தமிழருக்கு அவர் செய்த பெரு நன்மைதான். இந்தியாவின் அரசியலே ஈழத் தமிழ் மக்களின் கண்ணீருக்கு முக்கிய காரணம், இந்தியா அல்லாத வேறொரு நாடு அருகில் இருந்திருந்தால் இதுபோல வரலாற்றுத் தவறு நடந்திருக்காது.. இது ஓர் ஆய்வு. இந்த அவல நிலையில் மோடி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவார்…? இதுதான் இந்திய தேர்தலின் பின் புலம் பெயர் நாடுகளில் எழுந்துள்ள கேள்வி.. மோடி ஆட்சிக்கு வருவார் என்பதை முன்கூட்டியே அறிந்து காங்கிரஸ் அவசரமாக இரு காரியங்களைச் செய்து முடித்திருக்கிறது.. 01. மோடி அடுத்த தேர்தலைச் சந்திக்கும்வரை ஐந்தாண்டு காலம் புலிகளுக்கு இந்தியாவில் தடை. 02. சிறீலங்கா அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 16 த…

  9. வெற்றி தினத்தில் பங்கேற்காத நாடுகள் மீது ஜனாதிபதி மஹிந்த விமர்சனம்! [Monday, 2014-05-19 22:22:59] இலங்கையில் நடைபெற்ற வெற்றி தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்காத நாடுகளை அதிபர் ராஜபட்ச விமர்சித்துள்ளார் - இலங்கையில் கடந்த 2009 மே18இல் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகளை அந்நாட்டு ராணுவம் வீழ்த்தியது. இந்த நாளை ஆண்டுதோறும் வெற்றி தினமாக அந்நாட்டு அரசு கொண்டாடி வருகிறது. இதில் பங்கேற்குமாறு இலங்கையில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. எனினும், கனடா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் வெற்றி தினக் கொண்டாட்டத்தைப் புறக்கணித்தனர். இது குறித்து கனடா தூதர் ஷெள்ளி வைட்டிங் கூறுகையில், "வெற்றி தின அணிவகுப்பை ராணுவம் தற்போது நடத்…

  10. சிறிலங்காவுக்கு பதிலடியாக பட்டியலை வெளியிட்டது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் : முன்னாள் சிறிலங்கா அரசுத்தலைவர் சந்திரிகாவும் உள்ளடக்கம் ! [Monday, 2014-05-19 19:47:40] "பயணத்தடை, சொத்துமுடக்கம், அனைத்துலக குற்றவியில் நீதிமன்றம் நோக்கிய செயல்முனைப்பு" புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு வெளியிட்டிருந்த பட்டியலுக்கு பதிலடியாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது. தமிழீழத் தேசிய துக்க நாளான மே-18ல் வெளிவந்துள்ள இப்பட்டியலில், சிறிலங்காவின் தமிழினஅழிப்பாளர்களின் 12 பேருடைய விபரங்கள் முதற்தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அறிக்கை : http://fr.calameo.com/read/00034150294a5e6d90ece http://f…

  11. ஜேர்மன் பிரஜைகள் இருவர் விபத்தில் பலி திங்கட்கிழமை, 19 மே 2014 20:05 கொழும்பிலிருந்து மிந்தெனி நோக்கி பயணித்த பஸ் மீது மோட்டார் வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஜேர்மன் பிரஜைகள் இருவர் பலியாகியுள்ளனர். காலி, தளுவெல்ல பிரதேசத்தில் இன்று(19) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/111052-2014-05-19-14-36-11.html

  12. இந்திய மீனவர்களுக்கு இலங்கை எச்சரிக்கை- 19 மே 2014 இந்திய மீனவர்களுக்கு இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் மீன்பிடி வளங்களை சூறையாட எவருக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இலங்கை மீன் வளம் அபகரிக்கப்பட்டால் சர்வதேச நிறுனங்களிடம் முறைப்பாடு செய்ய நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்து மீறி இலங்கையின் மீன் வளங்கள் அபகரிக்கப்பட்டால் சர்வதேச ரீதியான நிறுவனங்களின் உதவியுடன் அவற்றைத் தடுக்க விசேட பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆட்சி மாற்றம், மீனவர் பிரச்சினைகள் குறித்த கொள்கைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார். …

  13. இந்தியப் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்பது தெற்காசியாவை இருண்ட யுகத்திற்கு தள்ளி விடும். பயங்கரவாதமான நிலைமைகளை தோற்றுவிக்கும் என அரசின் பங்காளிக்கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்காலத்தில் இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளிலும் விரிசல்களை ஏற்படுத்த வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்று பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறப்போவதோடு பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்கிறார். இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவ…

    • 0 replies
    • 463 views
  14. -செல்வநாயகம் கபிலன் இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று திங்கட்கிழமை (19) யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவப் ஊடகப் பேச்சாளர் அஜித் மல்லவராட்சி தெரிவித்தார். இந்த நேர்முகத் தேர்விற்கு 32 பேர் அழைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களின் 30 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அரச நியமனத்தின் அடிப்படையில் சலுகைகள் அடங்கலாக இவர்கள் 30 ஆயிரம் ரூபாவிற்கு மேல் வேதனம் பெறுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார். tamilmirror

  15. தமிழகத்தில் வெற்றிபெற்ற BJP வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு முக்கிய பதவி? பிரதமராக பதவி ஏற்கவிருக்கும் நரேந்திர மோடி, புதிய அமைச் சரவையை அமைப்பது தொடர்பாக பாரதிய ஜனதா மற்றும் கூட்டணிக் கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். கடந்த சனிக்கிழமை டெல்லி வந்த நரேந்திர மோடி, கவுடில்யா மார்கில் உள்ள குஜராத் மாநில அரசு மாளிகையில் தங்கியுள்ளார். இங்கிருந்தபடி, தாம் அமைக்க இருக்கும் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் தொடர் பாக தனது நெருங்கிய சகாவான அமித் ஷா, பாஜக தேசியத் தலை வர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பிஹாரில் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததை யடுத்து, அந்த மாநிலத்தில் அரசி யல் சூழ்நிலை பரபரப்ப…

    • 0 replies
    • 954 views
  16. சுமந்திரனின் கருத்துக்கு கஜேந்திரகுமார் பதிலடி! இலங்கை அரசும் அதனோடிணைந்த துணை ஆயுதக்குழுக்களும் போர்க்குற்றங்களினில் ஈடுபட்டமை சர்வதேச ரீதியினில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய தரப்பினை காப்பாற்ற முற்படுவதாலேயே கூட்டமைப்பினை நாம் தொடர்ந்தும் விமர்சிக்க வேண்டியிருக்கிறதென தெரிவித்துள்ளார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பிலான தீர்மானம் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றவில்லை. தமிழர் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக சட்ட ரீதியாக குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். மேலும் தமிழ் மக்களுக்கான …

    • 0 replies
    • 773 views
  17. ஆளும் கட்சியை விட்டு விலகப் போவதாக ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை ஆளும் கட்சியை விட்டு விலகப் போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமது கட்சிக்கும் இடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியில் பதவிகளை மட்டுமே எதிர்ப்பார்ப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தமது கட்சி, ஆளும் கட்சியின் பதவிகளில் கவனம் செலுத்தவில்லை எனவும், ஆளும் கட்சியை விட்டு விலகவும் தயங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு அறிக்கை சமர்ப…

    • 5 replies
    • 797 views
  18. 5 வருடங்களின் பின்னர் வட இலங்கை நிலைமை - பெட்டகம் வடக்கில் போக வேண்டிய தூரம் இன்னமும் நிறைய உள்ளது இலங்கையில் போர் முடிந்து 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அங்கு முன்னாள் போர் வலயமான வடபகுதியில் பல முன்னேற்றங்கள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறினால், அவை போதுமானவை அல்ல என்று தமிழர் தரப்பில் பலராலும் கூறப்படுகின்றது. அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தமக்கு போதுமான பலனை தரவில்லை என்று மீள்குடியேறிய பலர் கூறுகிறார்கள். இன்னமும் தற்காலிக முகாமில் பலர் இராணுவ அடக்குமுறை தொடர்வதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்த நிலையில் வடக்கில் முன்னாள் போர் வலயத்தில் இன்றைய நிலை என்ன என்று ஆராயும் வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் அவர்களின் ச…

    • 0 replies
    • 556 views
  19. விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை முழுமையாகத் தோற்கடிக்க முடியவில்லை, இனிமேலும் அது சாத்தியப்படும் போலத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், லங்காதீபு நாளிதழுக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்- விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இராணுவ, அரசியல், கருத்தியல் என்று முப்பிரிவுகளைக் கொண்ட உலகின் பலம்வாய்ந்த ஒரு போராட்ட இயக்கம். அந்த வகையில் தற்போது விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன் அரசியல் மற்றும் கருத்தியல் பிரிவுகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அதன் காரணம…

    • 20 replies
    • 1.6k views
  20. கொழும்பில் சார்க் திரைப்பட விழா எதிர்வரும் 22ல் ஆரம்பம் news சார்க் திரைப்பட விழா எதிர்வரும் 22 முதல் 25 ஆம் திகதி வரை திரைப்படக் கூட்டுத்தாபன சினிமா அரங்கில் நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் தெற்காசிய வலய அங்கத்துவ நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான்,இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளது. இங்கு சகல திரைப்படங்களும் இலவசமாகவே காண்பிக்கப்படவும் உள்ளது. மேலும் கலாசார கலைகள் அமைச்சர் ரீ.பீ. ஏக்கநாயக்கா தலைமையில் ஆரம்ப வைபவம் 20 ஆம் திகதி மாலை நடைபெறும். இத்திரைப்பட விழாவில் அந்தந்த நாடுகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் வண்ணம் திரைப்பட இயக்குநர்களும், நடிகர் நடிகையரும் பங்குகொள்வர். மேலும் சார்க் கலாசார நிலையம் நான்கா…

  21. யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த இலங்கையில் தடை விதிக்கப்பட்டது – ரொய்டர்ஸ் 19 மே 2014 யுத்தம் காரணமாக உயிரிழந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு கிழக்கு மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்த இராணுவத்தினர் அனுமதியளிக்கவில்லை. தெற்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. எனினும், வடக்கில் உயிரிழந்தவர்களுக்காக பூஜை வழிபாடுகளில் ஈடுபடக் கூட அனுமதியளிக்கப்படவில்லை. கீரிமலை ஆலயத்திற்கு சென்று பிதிர்க்கடன் செய்ய முயற்சித்த தம்மை படையினர் அவமரியாதையாக திட…

  22. உள்நாட்டவர்கள் வெளிநாட்டவர்களுக்கு காணிகளை கைமாற்ற தடை! [Monday, 2014-05-19 08:31:48] உள்நாட்டவர்கள் வெளிநாட்டவர்களுக்கு காணிகளை கைமாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முன்வைக்கப்பட்ட பாதீட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி தனியார் மற்றும் அரச காணிகள் வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நடைமுறையை சட்டரீதியானதாக மாற்றும் வகையிலான சட்டத்திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர், கைமாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. http://seithy.com/breifNews.php?newsID=109602&category=TamilNews&language=tamil

  23. இலங்கையர் எனக் கூறிக்கொண்டு 19 வருடம் அநுராதபுரத்தில் வாழ்ந்த இந்தியர் கைது! உளவாளி எனச் சந்தேகம்!! தன்னை ஒரு இலங்கையர் எனக் கூறிக்கொண்டு 19 வருட காலமாக அநுராதபுரத்தில் வசித்துவந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவரிடமிருந்து பல ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணங்கள் வெவ்வேறு நாடுகளில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்தே இவர் தங்கியிருந்த இடத்தை பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தினார்கள். இதன்போது அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த ஆவணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஹம்சா ஜமால்டீன் என்று தன்னுடைய பெயரை மாற்றிவைத்த…

  24. யாழ்.கீரிமலை புனித தீர்த்தக்கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றச் சென்றவர்களை உட்செல்லவிடாமல் இராணுவத்தினர் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீரிமலையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்றும் பொருட்டு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன் மற்றும் ரி.துவாரகேஸ்வரன் (வடமாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்) ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை கீரிமலைக்குச் சென்றனர். இதன் போது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கீரிமலையில் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதியளிக்க முடியாது என்று கூறியதுடன் அவர்கள் உட்செல்லவிடாமல் தடுத்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்கான ஒழுங்குகள் துவாரகேஸ்வர…

    • 5 replies
    • 779 views
  25. விடுதலைப் புலிகள் மீதான தமது வெற்றியின் 5வது ஆண்டுநிறைவை இலங்கை அரசாங்கம், இன்று அனுஸ்ட்டிக்கிறது. அதனை முன்னிட்டு பெரும் இராணுவ அணிவகுப்பு உள்ளட்ட கணியாட்டங்களை மகிந்த அரசாங்கம் நடத்தியிருக்கிறத. எனினும், மேற்கு நாடுகளின் தூதுவர்கள் பலர் அந்தஅணிவகுப்பில் கலந்து கொள்ளவில்லை. அரசாங்கம் நல்லிணக்கத்தை நோக்கி செயற்பட வேண்டும்என்பதால், இவை பொருத்தமற்றவை என கனடா கூறியுள்ளது. தோல்வியடைந்த தரப்பில் இறந்தவர்களுக்காக, தமிழர்களால்ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகள் மற்றும் மதவைபவங்களுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் வட பகுதியில் சில குறிப்பிட்டஇடங்களில் இலங்கை இராணுவம், மக்கள் நடமாட்டத்துக்குகடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த தினத்தை கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.