ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
யாழ். நகரின் கடைகளில் கைவிசேடம் வாங்குவதற்கு இன்று காலை மக்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்ததை காணமுடிந்தது. தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான இன்று கைவிசேடம் வாங்குவதற்கு மக்கள் ஒவ்வொரு கடைக்கு முன்னால் காத்திருந்து முண்டியடித்துக்கொண்டு கைவிசேடம் வாங்கினர். ஒவ்வொரு கடைக்கு முன்னாலும் 20 மேற்பட்டவர்கள் காத்திருந்தனர். தமிழ்- சிங்கள வருடப்பிறப்பன்று கைவிசேடம் வாங்குவது தமிழர்களுடைய பண்பாடு. அந்தவகையில் தமக்கு பிடித்தவர்களிடம் முதல் தடவையாக கைவிசேடம் பெற்றுக்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=169982873214539494
-
- 7 replies
- 1.9k views
-
-
உலகமெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் நலன்களை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். இலங்கை, மலேசியா, பிஜீ தீவுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் நலன்கள் உறுதி செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாரதீய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டால் தமிழ் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்திய விவகாரங்களில் தலையீடு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார். குறித்த நாடுகளின் தலையீடுகள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மீனவர்…
-
- 1 reply
- 512 views
-
-
கருணா, டக்ளஸ், பிள்ளையானிடம் விசாரணை நடத்தப் போகிறது காணாமற்போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு! [Monday, 2014-04-14 05:52:05] அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திகாந்தன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்வதற்கு காணாமல் போனவர்களை தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முடிவெடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தும், ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கு கிழக்கில் இதுவரை நடத்திய விசாரணைகளில், அரசபடையினர் மீதும், இந்த மூவரது குழுக்களின் மீதுமே அதிகப்படியான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. யுத்த காலத்தில் ஏராளமானோர் காணாமல் போன சம்பவங்களுடன் இந்த மூவரும் வழிநடத்திய ஆயுதக் க…
-
- 2 replies
- 464 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் தோல்வியைத் தழுவியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு தொடர்பான நிபுணத்துவ பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்த களத்தில் அரசாங்கம் தோற்கடித்த போதிலும் ஊடக கள முனையில் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு என்பதிலிருந்து பாரியளவிலான பிரச்சாரப் போராட்ட இயக்கமாக பரிணமித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போலியான தகவல்களின் அடிப்படையில் புலிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார போராட்டத்தை புரிந்து கொண்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை இராஜதந்திரிகள் கூடுதல் முனைப்பு காட்…
-
- 2 replies
- 450 views
-
-
தென்னாபிரிக்க அரசின் விசேட பிரதிநிதி சிறில் ராமபோஷ எதிர்வரும் மே மாத இறுதியில் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு வருகை தரவுள்ளார். இவர் தென்னாபிரிக்க அரசால் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட பிரதிநிதியாவார். இங்கு வரும் சிறில் ராமபோஷ கள நிலைமைகளை நேரடியாக ஆராய்வதோடு, தமிழ் சிவில் சமூக, அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடுவார். அதன் பின்னர் இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுத் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தவுள்ளார். இது குறித்து "உதயனுக்கு' கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், ""சிறில்ராமபோஷயின்…
-
- 1 reply
- 411 views
-
-
இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள், கிளிநொச்சி கொக்காவில் இராணுவ முகாமில் பணியாற்றி வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கோபி என்ற செல்வநாயகம் கஜீபன், தேவியன் என்ற சுந்திரலிங்கம் கஜீபன், அப்பன் என்ற நவரட்ணம் நவநீதன் ஆகியோர் பல காலமாக கொக்காவில் முகாமில் பணியாற்றி வந்துள்ளனர். கோபி என்ற நபர் முகாமில் உணவு சமைக்கும் பணிகளுக்கு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளதுடன் ஏனையோர் முகாமில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர் என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இறுதிக்கட்ட போரில் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர், இராணுவத்திற்கு உதவி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு பொறுப்பாக கொல்லப்பட்ட இராணுவப் புலனாய்வுப்…
-
- 1 reply
- 682 views
-
-
புலத்தில் வாழும் இலட்சியவாதிகளும், தன்மானத் தமிழர்களும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது: - கலாநிதி இராம் சிவலிங்கம் [Monday, 2014-04-14 08:05:44] விலங்குகள் அகற்றப்பட்டு விடுதலையான எம் ஈழத் தாயின் மடியிலே; உங்களோடு சேர்ந்து நானும் அயர்ந்து உறங்க வேண்டும் என்ற ஆவலில்தானே எமது அரசியல் போரை முன்னெடுத்துச் செல்லவல்ல தகமையும், தகுதியும் கொண்ட தன்மானத் தமிழரை இணைந்து செயற்பட வருமாறு பல முறை அறைகூவினேன். நீதி வேண்டும் உலகம் எமக்காக போராடும்போது, எமது பங்கை நாம் செய்யத் தவறினால், எமது சந்ததி எம்மை மதிக்குமா அல்லது மன்னிக்குமா? என் வருந்தியவேளை சிங்கள அரசின் அறிக்கை வெளியானது. பதினாறு அமைப்புக்களையும், அவற்றைச் சார்ந்த நாநூற்றி இருபத்தி நான்கு உறுப்பி…
-
- 0 replies
- 267 views
-
-
நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் முயற்சிகளை தோற்கடிக்க வேண்டும்! – இராணுவத் தளபதியின் புத்தாண்டு செய்தி. [Monday, 2014-04-14 05:56:30] நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள செய்தியில், பிராந்திய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் நாட்டில் பிளவினை ஏற்படுத்தும் பல முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் முனைப்புக்களில் சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். தேசத்திற்கு எதிரான சவால்களை முறியடிக்க படையினர் எப்போது முனைப்புடன் செயற்பட வேண்டும். வடக்கு கிழக்கைச் சேர்ந்த இராணுவத்தி…
-
- 0 replies
- 335 views
-
-
பேச்சுக்களை ஆரம்பிக்க முன்னர் வடக்கு,கிழக்கில் இயல்பு நிலை திரும்ப வேண்டும்! – தென்னாபிரிக்காவிடம் வலியுறுத்தியது கூட்டமைப்பு. [Monday, 2014-04-14 05:47:08] தென்னாபிரிக்காவின் உயர்மட்டக் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தென்னாபிரிக்க அரசு மற்றும் ஆளும் ஆபிரிக்கத் தேசியக் காங்கிரஸின் தலைவர்களுடன் விவாதிக்கச் சென்ற கூட்டமைப்பின் குழுவினர் நேற்று நாடு திரும்பினர். அந்நாட்டின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் அமைந்தது என்றும், ஆப்ரிக்கத் தேசியக் காங்கிரஸின் துணைத் தலைவர் சிரில் ராமபோசா தலைமையிலான குழுவினர் இலங்கை வந்து பல்தரப்பினருடன் ப…
-
- 0 replies
- 439 views
-
-
விசுவமடு கிணற்றில் பதுளைப் பெண்ணின் சடலம் இரத்தக்காயங்களுடன் மீட்பு! [Monday, 2014-04-14 05:30:37] விசுவமடு 12 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருக்கும் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று மாலை மீட்கப்பட்ட அவரது சடலத்தின் கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயம் காணப்படுகின்றது. சடமாக மீட்கப்பட்ட பெண் பதுளையை சேர்ந்த ராஜசுலோசனா (வயது 39) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இரவு அப்பகுதியில் நாய்கள் குரைத்ததாகவும் சீருடை அணிந்தோரின் நடமாட்டம் காணப்பட்டதாவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சுற்றிவளைப்பு ஏதும் நிகழ்கின்றதோ என்ற அச்சத்தில் தாம் வீடுகளுக்கு வெளியில் வந்து பார்க்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 357 views
-
-
மட்டக்களப்பு, சந்திவெளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 3 பேர் வவுனியாவில் வைத்து பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் கணவனும் மனைவியும், கருணா குழுவில் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் கைது செய்யப்பட்ட அவர்களின் பிள்ளைகள் மூவர் மட்டக்களப்பில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். http://www.sankathi24.com/news/40383/64//d,fullart.aspx
-
- 0 replies
- 195 views
-
-
http://www.youtube.com/watch?v=gONkE3-iRU0&feature=youtu.be
-
- 0 replies
- 460 views
-
-
சர்வதேச விசாரணைகள் ஜூன் மாதமே தொடங்க வாய்ப்பு – கொழும்பு ஆங்கில வார இதழ்! சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையால் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள் வரும் ஜூன் மாதமே ஆரம்பிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக ஐ.நா உயர்அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான பொறிமுறை பற்றிய தெளிவற்ற நிலை காணப்படுகிறது. இந்த நிலை மே மாத இறுதியிலேயே முடிவுக்கு வரும். அதன்பின்னரே முழு அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நாவின் இந்த விசாரணை முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருப்பதுடன், அதற்கு அய…
-
- 2 replies
- 620 views
-
-
இராணுவத்தினரின் தாக்குதலில் மினி பஸ் உரிமையாளர் படுகாயம்! – நேற்றிரவு யாழ்.நகரில் சம்பவம். யாழ். பண்ணை மினிபஸ் நிலையத்துக்கு முன்பாக மினிபஸ் உரிமையாளரை நேற்றிரவு 7 மணியளவில் இராணுவத்தினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் துரைராசா மகேந்திரராசா என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த நபர் மினிபஸ்ஸை யாழ்.பிரதான தபால்கந்தோர் முன்பாக செலுத்தினார். இதன் போது மதுபோதையில் நின்ற இருவர் வாகனத்தை செலுத்த இடைஞ்சலை ஏற்படுத்தியதுடன்; வாய் தர்கத்தில் ஈடுபட்டனர். பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதன் பின்னர் மினிபஸ் உரிமையாளருக்கு குறித்த கைகலப்பில் ஈடுபட்டவர்கள் சம்ப…
-
- 1 reply
- 408 views
-
-
அனந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினாராம் டக்ளஸ் தேவானந்தா! [sunday, 2014-04-13 06:16:27] அண்மையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வுக்கு நடுவே - அதற்கு சமாந்தரமாகப் பக்கத்தே - நடைபெற்ற ஒன்றுகூடல் நிழ்வுகளின் போது உரையாற்றிய வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அங்கு குறிப்பிட்ட விடயங்கள் குறித்துக் கேள்விப்பட்டதும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சீற்றம் கொண்டார் என கொழும்பு ஆங்கில் வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் 'இனவழிப்பு' இடம்பெற்றிருப்பதாக அனந்தி சசிதரன் தமது உரையில் குறிப்பிட்டார் என்றும் இதுவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சீற்றமுற வைத்தது என்றும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது. …
-
- 3 replies
- 642 views
-
-
நீர்வேலி மேற்குப் பகுதியில் சேதனமுறை மாதிரிப்பண்ணையொன்றினை வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் வியாழக்கிழமை திறந்து வைத்தார். யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயத்தில் அதிகளவில் விவசாய உரங்களும், பூச்சிகொல்லிகளும், பெருமளவு நீரும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர் விவசாய இரசாயனங்களால் மாசடைந்து வருவதோடு நிலத்தடிநீரின் அளவும் குறைந்து வருகிறது. மேலும், விவசாய இரசாயனங்கள் உணவுடன் உடலைச் சென்றடைவதால் மனிதர்களின் தேக ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்கும் முகமாகவே மேற்படி சேதனமுறை மாதிரிப் பண்ணை திறந்து வைக்கப்பட்டதாக வடமாகாண விவசாய அமைச்சர் தெரிவித்தார். யாழ் குடாநாட்டின் நீர்வளத்தைக் காப்பாற்றுவதோடு ஆரோக்கியமான வாழ்வைக…
-
- 6 replies
- 560 views
-
-
கனடிய தமிழ் ஊடகங்களுக்குப் புலி முத்திரை குத்துகிறது கொழும்பு ஆங்கில நாளிதழ்! [Friday, 2014-04-11 07:55:58] கனடாவில் உள்ள பல்வேறு தமிழ் ஊடகங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஊடுருவி இருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள பாரிய தமிழ் சமூகத்தின் மத்தியில் கட்டுக்கோப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஊடுருவி இருக்கிறது. விடுதலைப் புலிகள் அந்த நாட்டில் ஊடக நிறுவனங்களை அமைத்து வழி நடத்தி வருகின்றனர். அங்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ள போதும், விடுதலைப் புலிகளின் நிதியை கொண்டு பல தமிழ் வானொலிகளும் தொலைக்காட்சி சேவைகளும் நடத்தப்படுகின்றன. கனடாவில் இயங்கும் தமிழ் வண், வணக்கம் எப்.எம். போன்றன தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியால…
-
- 2 replies
- 431 views
-
-
தென் ஆப்ரிக்காவின் ஒரு உயர்மட்டக் குழு விரைவில் இலங்கை வரவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். தென் ஆப்ரிக்கக் குழுவினருடன் கூட்டமைப்பினர். இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து தென் ஆப்ரிக்க அரசு மற்றும் ஆளும் ஆப்ரிக்கத் தேசியக் காங்கிரஸின் தலைவர்களுடன் விவாதிக்கச் சென்ற கூட்டமைப்பின் குழுவினர் ஞாயிறன்று நாடு திரும்பினர். இலங்கை அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாதத் தடைபட்டுள்ள நிலையில், அதை ஆரம்பிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தென் ஆப்ரிக்கா முன்வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.அந்நாட்டின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பயணம் அமைந்தது என்றும், ஆப்ரிக்கத் தேசியக் …
-
- 0 replies
- 582 views
-
-
விநாயகம், நெடியவனைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது:- 13 ஏப்ரல் 2014 மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டும் நடவடிக்கைகளுக்கு உதவும் நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை விரிவுபடுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிலர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை விநாயகம் மற்றும் நெடியவன் போன்றோறைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அன்மையில் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கும், மீண்டும் நாட்டில் தமிழ…
-
- 1 reply
- 616 views
-
-
கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் இராணுவ உளவாளிகளா? [saturday, 2014-04-12 08:40:33] விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என அரசாங்கம் கூறும் கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் புளியங்குளம் இராணுவ முகாமில் பல காலமாக இராணுவ உளவாளிகளாக செயற்பட்டு வந்தவர்கள் என சிங்கள இணையத்தளத் தகவல் ஒன்று கூறுகிறது. இவர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த செல்வராஜா கமலராஜா ( இலக்கம் 776927) என்பவருக்கு கீழ் பணியாற்றி வந்துள்ளனர். கமலராஜா மற்றும் ஏனைய மூவரும் நண்பர்கள். கமலராஜாவே தேவியன் மற்றும் அப்பன் ஆகியோரை இராணுவத்திற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவர்களின் கொலை மற்றும் சூழ்ச்சி நாடகம் பற்றிய உண்மை வெளியாகிவிடும் என்பதால் கமலராஜா என்ற இராணுவ புலனாய்வாள…
-
- 6 replies
- 1.2k views
-
-
ஐ.நா விசாரணைக் குழுவில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய இருவர்? கொழும்பு ஊடகங்கள் தகவல் - 13 ஏப்ரல் 2014 இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில், தமிழீழ விடுதலைப் புலிகள் டயஸ்போராவுடன் நெருங்கிய தொடர்புடைய இருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வளியாகியுள்ளதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கடந்த அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு அமைவாக இலங்கை தொடர்பில் விஷேட நிபுணர் குழுவொன்று மார்ச் மாத நடுப்பகுதியளவில் நியமிக்கப்படவுள்ளது. குறித்த குழுவின் அறிக்கை ஒரு வருடங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. http://www.glob…
-
- 2 replies
- 536 views
-
-
நரேந்திர மோடி உள்ளிட்ட இந்தியாவின் எல்லா பிரதான தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமான பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா அரசின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் என்று நம்பப்படும் நரேந்திரமோடியுடன் சிறிலங்கா அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. சிறிலங்கா விவகாரத்தில் நரேந்திரமோடி வேறுபட்ட அணுகுமுறையைகை கடைப்பிடிப்பார் என்று கூறப்படுகின்ற நிலையில், சிறிலங்கா அரசாங்கம் அங்கு மாறி வரும் சூழ்நிலைகளை சிறிலங்கா அறிந்தே வைத்துள்ளது. நாம் நரேந்திரமோடியுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். இந்தியத் தேர்தலின் முன்னேற்றங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இந்தியத…
-
- 3 replies
- 462 views
-
-
வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 23 வருடங்கள் கடந்துள்ள இன்றைய நிலையில் தனக்குக் கிடைத்துள்ள வட மாகாண சபை உறுப்பினர் பதவியை பயன்படுத்தி அம் மக்களின் மீள்குடியேற்றத்தை சாத்தியமாக்குவதே தமது முதல் பணியாக இருக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போனஸ் உறுப்பினராக நியமனம் பெற்று அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் விடிவெள்ளிக்கு அளித்த பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். நேர்காணலின் முழு விபரம் வருமாறு: நேர்காணல்: எம்.பி.எம்.பைறூஸ் விடிவெள்ளி: ஜாமிஆ நளீமியா பட்டதாரியாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் இருந்த நீங்கள் திடீரென…
-
- 0 replies
- 444 views
-
-
யாழ்ப்பாணத்து விஜயகாந்த்தும் தனிக்கட்சி தொடங்கினார்! [sunday, 2014-04-13 05:55:54] பல்வேறு மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டி ஈ.பி.டி.பியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினர் விஜயகாந்த் முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியிலுள்ள சுவர்க்கா விருந்தினர் விடுதியில் நேற்று நண்பகல் நடைபெற்ற நிகழ்வில் புதிய கட்சியை தொடக்கி வைத்து அவர் உரையாற்றினார். அவர் தனது உரையில் - "இங்குள்ள கட்சிகள் ஒன்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றியோ தேசியம் பற்றியோ சிந்திப்பதில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் வாக்குகளைப் பெறும் நோக்கிலேயே அரசியல்வாதிகள் மக்களைத் தேடி வருகின்றன…
-
- 2 replies
- 569 views
-
-
இலங்கைப் பொருளாதாரத்துக்கு சவால்கள் காத்திருக்கின்றன! – எச்சரிக்கிறது உலக வங்கி [saturday, 2014-04-12 19:06:17] இலங்கைப் பொருளாதாரம் சவால்களை எதிர்நோக்கி வருவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 2003ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் 6.4 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது .கடந்த ஆண்டு 7.3 வீத பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளது. பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்டாலும் சில கட்டமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் கல்வி, வீதி அபிவிருத்தி, வாழ்வாதார மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், நீண்டகால கொள்கை வகுப்புக்கள் இன…
-
- 1 reply
- 461 views
-