Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமாகாணசபையால் ஒன்றும் செய்யமுடியவில்லை: அல்ஜெசீரா குழுவினரிடம் ரவிகரன் தெரிவிப்பு [Thursday, 2014-04-10 11:09:26] கடந்த 4.7.2014 அன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்த அல்ஜெசீரா வின் அமெரிக்க பகுதிக்கு பொறுப்பான தயாரிப்பாளர்களில் ஒருவரான மார்க்கெல் ஃகொப்கின்ஸ் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை சந்தித்து தமிழர் தேசத்தின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் வினவி அதற்கான கருத்துக்களை கேட்டுச்சென்றார். கலந்துரையாடல்கள் அனைத்தும் ஒளிப்பதிவு செய்யப்பட்டதுடன் அவை இனிவரும் காலங்களில் அல்ஜசீரா தொலைக்காட்சி குழுமத்தினால் வெளியிடப்படும் எனவும் அறிய முடிகிறது. காணிப்பிரச்சினை, பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான தகவல்களை பெறவந்த அல்ஜெசீரா தொலைக்காட்சி பணிப்பாளர்கள் முல்லைத்தீவு ம…

  2. சிங்களப் படைகளின் சித்திரவதையில் கர்ப்பிணிப் பெண் கருச்சிதைவுக்கு ஆளானார்! ஏப் 10, 2014 பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்; கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சர்மிளா என்ற கர்ப்பிணிப் பெண், சிங்களப் படைகளின் சித்திரவதையில் கருச்சிதைவுக்கு ஆளாகியிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளைக் கைது செய்யும் புலிவேட்டை எனும் போர்வையில் கடந்த மார்ச் மாதம் 11ஆம் நாளன்று திருமலையில் சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்ட இவர், கொழும்பு கொண்டு செல்லப்பட்டுக் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதன் காரணமாக கருச்சிதைவுக்கு இவர் ஆளாகியுள்ளார். இருந்த பொழுதும் இவருக்குத் தகுந்த மருத்துவ சிகிச்சைகளை அளிக்காது தொடர்ந்தும் கொடூர வதைகளுக்கு சிங்களப் படை…

  3. ஜாதிக பல சேனா என்ற அமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டை அங்கு புகுந்த பொது பல சேனா அமைப்பினர் தடுத்து நிறுத்தியதோடு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த வந்திருந்த ஒருசில பிக்குமாரையும் மௌலவிமாரையும் அங்கிருந்து விரட்டியடித்தனர். மன்னார் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வில்பத்து பிரச்சினை உட்பட பொது பல சேனாவினர் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தெளிவு படுத்துவதற்காகவே இந்த ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்பாட்டாளர்கள் பக்ஸ் மூலம் அறிவித்திருந்தனர். காலை 10.30மணிக்கு ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பிக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அங்கு ஊடகவியலாளர்கள் வந்திருந்தனர். ஊடகவியலாளர் மாநாடு இடம்…

  4. சுந்தரம் அருமைநாயகம் தலைமையிலான குழுவினர் பூரண ஒத்துழைப்பு:- குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:- வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியில் பெருமெடுப்பிலான சிங்கள குடியேற்றம் மற்றும் சுற்றுலா விடுதிகளை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. வடக்கில் கோத்தா மற்றும் நாமல் ராஜபக்ஸ தரப்புக்கள் தமது முதலீடுகளை விஸ்தரித்துவருகின்ற நிலையில் தற்போது ஓட்டப்பந்தயத்தில் பிந்தி ஓடி வந்து பஸில்ராஜபக்சவும் இணைந்துள்ளார். இதன் பிரகாரம் சுண்டிக்குளம் பகுதியில் சுமார் பத்து கிலோமீற்றர் நீளமுள்ள கடற்கரையினை உள்ளடக்கி இந்த குடியேற்றம் மற்றும் சுற்றுலா விடுதிகள் அமையவுள்ளன. இப்பகுதியில் மீள் குடியமர்வதற்கான அனுமதியை பூர்வீக குடிகளான தமிழ் மக்களிற்கு நிராகரித்துள்ள அரசு ம…

  5. -அஸ்ரப் ஏ சமத் வடக்கு கிழக்கு மக்களிடம் மிகப்பிரசித்தி பெற்று விளங்கும் கொடுவாய் மீனின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாக குச்சவெளி பிரதேசத்தில் 500 சதுர அடிப்பரப்பில் கொடுவாய் மீன் குஞ்சுகளை வளர்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தமீன் திட்டத்தில் ஆர்வம் கொண்ட நோர்வேநாட்டு முதலீட்டாளர் குழு அண்மையில் கிழக்குமாகாணத்திற்கு விஜயம் செய்து அங்குள்ள வளங்களை பார்வையிட்டதுடன் திருகோணமலைக்குச் சென்று விவசாய அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கொடுவாய் மீன் வளர்ப்புத் திட்டத்தில் தமது ஆர்வத்தை வெளியிட்ட த…

    • 0 replies
    • 520 views
  6. ஐக்கிய நாடுகள் விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என இந்தியா அறிவித்துள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பு விசாரணை நடாத்துவதற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என இந்திய வெளிவிவகார செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரத்தை மீறிய செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவளிக்காதன் மூலம், இலங்கையுடன் நெருங்கிச் செயற்படக் கூடிய சாத்தியம் கிட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழர் விவகாரத்தில் இந்தியா என்ன விடயத்தை எதிர்பார்க்…

    • 0 replies
    • 770 views
  7. இலங்கையிடம் பாடம் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார் பாகிஸ்தான் படைத்தளபதி! [Wednesday, 2014-04-09 09:29:33] தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி என்று பாகிஸ்தான் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் ரசாட் மொஹமட் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதி ஜெனரல் ரசாட் மொஹமட், நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டமை ஒட்டுமொத்த தேசமும் அடைந்த வெற்றியாகும். பாகிஸ்தானை விடவும் இலங்கை சிறந்த தியாகத்தை செய்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் தொடர்பில் உலக நாடுகள் இலங்க…

  8. புலம்பெயர் மக்களுக்கு எச்சரிக்கை!? யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள புலம்பெயர் மக்களின் பெறுமதி வாய்ந்த காணிகள் ஈபிடிபியினரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் எஸ்.நிஷாந்தன் இன்று யாழ். ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தினை அம்பலப்படுத்தியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஆளும் யாழ்.மாநகர சபையின் ஆயுட் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவுக்கு வருகிறது. இந்த நிலையில் எதிர்வரும் ஆட்சி தமக்கு கிடைக்காது என்பதை நன்குணர்ந்து கொண்டுள்ள ஆளுங்கட்சியினர் மக்களின் பெறுமதிவாய்ந்த அசையும் அசையாச் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியில…

    • 0 replies
    • 1.1k views
  9. சிறுபான்மையினமாக மாறுமாம் சிங்கள இனம்! – பொதுபல சேனா கூறுகிறது. [Wednesday, 2014-04-09 09:57:02] சிங்கள இனம் சிறுபான்மை இனமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், சிறிய குடும்பம் பொன்னானது என்ற கொள்கை காரணமாக பல சிங்களப் பெண்கள் குடும்பக்கட்டுபாடு செய்து கொண்டனர். முஸ்லிம்க்ள பல்வேறு வழிகளின் சிங்களப் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்கின்றனர். இதன் காரணமாக எதிர்காலத்தில் சிங்களப்பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனமாக மாற்றமடையும். கொழும்பு, கண்டி, மாத்தளை போன்ற நகரங்களின் முக்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம…

  10. உலக கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கை அணிக்கு உற்சாக வரவேற்பு! – அலரி மாளிகையில் கேக் வெட்டி கொண்டாட்டம். [Wednesday, 2014-04-09 09:50:20] பங்களாதேஷில் நடந்த 20க்கு 20ஓவர் உலக கிண்ணப் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணிக்கு நேற்று விமான நிலையத்தில் இருந்து காலிமுகத்திடல் வரை கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அலரிமாளிகையிலும் சிறப்புக் கொண்டாட்டங்களும் நடைபெற்றன. இலங்கை அணி வீரர்கள் நேற்று பி.ப. 3.25 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. ஊடகவியலாளர்களை சந்தித்து உரையாடிய பின்னர் இலங்கை அணி வீரர்கள் திறந்த இரட்டைத்தட்டு பஸ்ஸில் விமான நிலையத்தில் இருந்து வாகன பவனியாக கட்டுநாயக்க, கொழு…

  11. ஐ.நா விசாரணையை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டும்! - என்கிறார் ஐதேக எம்.பி லக்ஸ்மன் கிரியெல்ல. [Wednesday, 2014-04-09 09:37:24] அரசாங்கம் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நேற்று நாடர்ளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஜெனீவா தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். தீர்மானத்தின் ஊடாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடும்.அரசாங்கம் இவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கத் தயாராக உள்ளதா? விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகின்றார். அவ்வாறு விசாரணைகளில் பங்கேற்காவிட்டால் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒருதல…

  12. முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கத் திட்டம்! – கொழும்புக் கூட்டத்தில் ஆலோசனை. [Wednesday, 2014-04-09 09:27:03] நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதத்திற்கு பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற அமர்வை ஒரு மாதகாலத்திற்கு ஆளும் மற்றும் எதிர் தரப்பிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் பகிஸ்கரிப்பதற்கு ஆலோசித்துள்ளதாக தெரியவந்துள்ளது. முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலேயே இந்த பகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருப்ப…

  13. 'நாட்டுக்குள் அரேபிய வசந்தம் வருவதாகக் கூறி பொதுமக்களை வீதிக்கு அழைக்கின்றனர். அரேபிய வசந்தம் போன்றவைகளுக்கு நாம் பயமில்லை. வீதியில் இறங்கியே நான் இந்த நிலைக்கு வந்தேன்' என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மத்திய வங்கியின் 2013ஆம் வருடத்துக்கான ஆண்டறிக்கை, மத்திய வங்கி கேட்போர் கூடத்தில் இன்று (08) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இவ்வருடம் மார்ச் மாதத்தில் அரசாங்கம் கவிழும் என கடந்த 10 வருடங்களாக சிலர் கூறி வந்தனர். ஆனால், அப்படியொன்று நடக்கவில்லை. மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டியது அவசியம். ஆனால் பலவந்தமாக அரசாங்கத்தை ஒருபோதும் கவிழ்க…

  14. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிகளது குழுவின் தலைவர் ஜெனரல் ரஷாட் மஹ்மூத் இலங்கை கூட்டுபடைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு வைத்து செவ்வாய்க்கிழமை(08) சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்ற மைதானத்திலுள்ள படைவீரர்களின் நினைவு தூபிக்கும் மலர்வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினார். (படங்கள்: கித்சிறி டி மெல்) http://tamil.dailymirror.lk/--main/106268-2014-04-08-09-13-32.html

  15. தமிழர்களின் அமைதியான செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் முயற்சியாக சிறீலங்கா அரசினால் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. சிறீலங்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களுக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டில் சர்வதேசத்தில் இயங்கிவரும் 16 தமிழ் அமைப்புக்கள் பெயரிடப்பட்டுள்ளமையானது, நாட்டிலுள்ள சிறுபான்மை தமிழர்களின் அமைதியான செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் முயற்சியாக கருதப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கும் நபர்கள் தொடர்பில், சிறீலங்கா அரசாங்கம், சர்வதேச நாடுகளின் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, ஒத்துழைப்பு ரீதியில் அதனை தீர்த்துக்கொள்ள வேண்டும் என அந்த கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டவிதிகளுக்…

  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவொன்று இன்று தென்னாபிரிக்கா பயணமாகவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவே இன்று தென்னாபிரிக்கா செல்லவுள்ளது. இந்தக் குழுவினர், பிரிட்டோரியாவிலும், கேப்டவுனிலும் அடுத்த நான்கு நாட்கள் தங்கியிருந்து தென்னாபிரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளனர். குறிப்பாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாள தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவினால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரதிநிதி, சிறிஸ் ரமபோசாவுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர். இதற்கிடையே, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் இடம்…

  17. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, தேசிய நலன் மற்றும் அயல் நாடுகளுடனான உறவுகளை கருத்தில் கொண்டே புறக்கணிக்க முடிவெடுக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிசேக் சிங்வி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு 4 ஆயிரம் கோடி ரூபா நலத் திட்டங்களை இந்திய அரசு செயற்படுத்தி வருகிறது. எந்தவொரு ஆட்சியிலும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படாத உதவிகளை காங்கிரஸ் அரசாங்கம் வழங்கி வருகிறது. தேசிய நலன் மற்றும் அயல் நாடுகளுடனான உறவுகளை கருத்தில் கொண்டு, ஜெனிவா தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. இதன் அர்த்தம், இந்த தீர்மானத்தை ந…

  18. இராணுவ கட்டுப்பாட்டில் 18வருடங்களாக இருந்துவந்த மிருசுவில் கெற்பெலியில் மனித எச்சங்கள் பல சற்றுமுன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட்ட கெற்பேலி கடற்கரைப்பகுதியில் கடந்த 18 வருடங்களாக இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தங்கள் காணிகளை உரிமையாளர்கள் இன்று துப்புரவு செய்த போது அங்கிருந்த மண் அணைக்கு (பண்ட்) அண்மித்த பகுதியில் சிதைந்த நிலையில் மனித எச்சங்கள் இருப்பதை கண்ணுற்றுள்ளனர். அத்தோடு மனித உடலங்கள் எரியூட்டப்பட்ட அடையாளங்களும் தென்பட்டதையடுத்து உடனடியாக இது குறித்து பொலிஸ் மற்றும்…

  19. சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்துப் பேசுவதற்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளதாக, யாழ்ப்பாண ஊடகத் தகவல் ஒன்று கூறுகிறது. வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், பசில் ராஜபக்­ச விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் மாகாண அரசுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள இடைவெளி குறித்துப் பேசுவதற்கே இந்தச் சந்திப்புக்கு, பசில் ராஜபக்ச தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சிறிலங்கா அதிபருடன் நடத்திய பேச்சு மூலம், எந்தப் பயனும் ஏற்படாத நிலையில், இந்தச் சந்திப்பு அழைப்பை வடக்…

  20. இராணுவ கட்டுப்பாட்டில் 18வருடங்களாக இருந்துவந்த மிருசுவில் கெற்பேலியில் மனித எச்சங்கள் பல சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்படட்ட கெற்பேலி கடற்கரைப்பகுதியில் கடந்த 18 வருடங்களாக இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையில் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தங்கள் காணிகளை உரிமையாளர்கள் இன்று துப்புரவு செய்த போது அங்கிருந்த மண் அணைக்கு (பண்ட்) அண்மித்த பகுதியில் சிதைந்த நிலையில் மனித எச்சங்கள் இருப்பதை கண்ணுற்றுள்ளனர். அத்தோடு மனித உடலங்கள் எரியூட்டப்பட்ட அடையாளங்களும் தென்பட்டதையடுத்து உடனடியாக இது குறித்து பொலிஸ் மற்றும் பிரதேச …

    • 0 replies
    • 524 views
  21. சட்­ட­வி­ரோத முஸ்லிம் குடி­யேற்­றங்­களை அர­சாங்கம் உட­ன­டி­யாக தடுத்­து­நி­றுத்த வேண்டும். இலங்­கையை முஸ்லிம் நாடாக மாற்றும் செயற்­பாட்­டிற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் என்று பொது­ப­ல­சேனா தெரி­வித்­துள்­ளது. வில்­பத்து பிர­தே­சத்தில் பெளத்த புரா­தன சின்­னங்­க­ளையும், விலங்­கி­னங்­க­ளையும் அழிக்கும் நட­வ­டிக்­கை­க­ளையே முஸ்லிம் அமைச்­சர்கள் செய்­து­வ­ரு­கின்­றனர் எனவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்­தி­யுள்­ளது. வில்­பத்து பிர­தே­சத்தில் பெளத்த சின்­னங்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றமை மற்றும் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்­களை மேற்­கொண்டு விலங்­கு­களை அழிக்­கின்­ற­மை­யினை எதிர்த்து ஊட­க­வி­ய­லா­ளர்­களை இணைத்­துக்­கொண்டு பொது­ப­ல­சேனா அமைப்­பினர் வில்­பத்து பகு­திக்கு நே…

    • 2 replies
    • 673 views
  22. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்:- அரசின் அபிவிருத்தித்திட்டங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதோவொரு அரசியல் ஒளிந்து கொண்டிருக்கிறது. இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தின் பின்னாலும் அரசியல் உள்ளது. அரசின் இந்த நுண்அரசியல் ஆபத்தானது. இதனைச் சரியான முறையில் எதிர்கொள்ளாவிடில், குடிநீர்த்திட்டத்தின் நன்மைகளைவிடப் பாதிப்புகளையே நாம் அதிகம் எதிர்கொள்ள நேரிடும் என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்திருக்கிறார். கிளிநொச்சி மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08.04.2014) விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தலைம…

  23. முல்லைத்தீவு போர்முனையில், விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருந்தொகையான ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே, வெளிநாடுகளில் செயற்படும் 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிநபர்களையும், தடை செய்யும் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக, சிறிலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு தகவல் வெளியிட்டுள்ள அவர், . “இந்த 16 அமைப்புக்கள் மற்றும் 424 தனிநபர்களும், பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் சந்தேக நபர்களாகவே பட்டியலிடப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இப்போது தடை விதிக்கப்பட்டிருப்பதாக அர்த்தம் இல்லை. அவர்களைத் தடை செய்வதற்கு அல்லது விலக்கி வைப்பதற்கு நாடாளுமன்றத்தில…

  24. தான் தற்போது தனது பெற்றோர் தனக்கு வழங்கிய சொத்துக்களை விற்றே வாழ்க்கை நடாத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிடுகிறார். எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற கூடமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். வாழ்க்கை முழுதும் பதவியில் நிலைகொள்ளுமாறு தான் யாப்பை மாற்றவில்லை எனவும், யாரோ அவ்வாறு செய்திருப்பதனால் தனக்கு மீண்டும் அரசியலில் நுழைவதற்குரிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார். தான் பதவி விலகும்போது மிகவும் ஏழையாக இருந்ததாகவும் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார். www.ilankainet.com

    • 8 replies
    • 850 views
  25. செவ்வாய், ஏப்ரல் 8, 2014 - 11:44 மணி தமிழீழம் | அகக்கீரன், ஐரோப்பா அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடு கடத்துமாறு கோரிக்கை மனுத் தாக்கல்!! பிரித்தானியாவில் இருந்து அடேல் பாலசிங்கத்தை இலங்கைக்கு நாடுகடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோர வேண்டும் என்று, வெளிநாடுகளில் வசிக்கின்ற சிங்களவர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் ஆலோசகர் என்டன் பாலசிங்கத்தின் மனைவியான அடேல் பாலசிங்கம், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவர்களை இலங்கைக்கு அழைத்து, அவரை தூக்கிலிட வேண்டும் என்று, நியுசிலாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளைச் சேர்ந்த சிங்கள பேரினவாத அமைப்புக்கள் கோரியுள்ளன. இதன் மூலம் இலங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.