Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. குற்றவாளிகள் தண்டிக்கப்படாத கலாசாரம் சிறிலங்காவில் தொடர்வது கவலையளிப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானியா, கடந்த மூன்று மாதங்களில் சிறிலங்காவின் மனிதஉரிமை நிலைமைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால், நேற்று வெளியிடப்பட்டுள்ள, 2012 ஒக்ரோபர் தொடக்கம் டிசெம்பர் வரையிலான காலாண்டுக்கான, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயகம் குறித்த அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கடந்த நொவம்பர் மாதம் நடந்த கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்களின் மாநாட்டின் போது, சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து அனைத்துலகம் கவனம் செலுத்திய போதிலும், கொமன்வெல்த் மாநாடு நடந்த வாரத்தில் பல மனிதஉரிமை மீறல்கள் அரங்கேற்ற…

  2. இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கூறுகிறார். தேசிய பாரம்பரிய மருத்துவர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செடி வளர்ப்பதற்கு இந்த புதிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பிபிசி தமிழோசையிடம் கூறினார். தற்போது சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ள குறித்த சட்டவரைவு, சில நாட்களில் அமைச்சரவை அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டு, நாடாளுமன்றத்தில் சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். 'பாரம்பரிய மருத்துவ உலகில் கஞ்சாவுக்கு 'மூவுலகையும் வென்ற மூலிகை'…

  3. காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் சாட்சியமளித்து வருகின்றனர். கடந்த சனிக்கிழமை (18) ஆரம்பமான இந்த சாட்சியமளிக்கு நடவடிக்கை இன்று (20) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போது ஆணைக்குழு முன் தோன்றி சாட்சியமளித்தவர்களை படங்களில் காணலாம். (படங்கள் - எஸ்.கே.பிரசாத், சுப்பிரமணியம் பாஸ்கரன்) http://tamil.dailymirror.lk/--main/97378-2014-01-20-07-35-37.html

  4. அமெரிக்க போர்க்குற்ற நிபுணர் ஸ் ரீபன் ராப்பிடம் கையளிக்கப்பட்ட ஆதாரங்களை சிங்களக் கடும் போக்கு அமைப்புக்கள் பொய் என நிரூபித்து விட்டு எங்களைக் கைது செய்யக்கட்டும் என மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் சவால் விடுத்துள்ளார். அதன்படி இலங்கைக்கான விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள விசேட போர்க்குற்ற நிபுணர் யாழ்ப்பாணத்துக்கு கடந்த 8 ஆம் திகதி வருகைதந்திருந்தார். இவருடன் யாழ் ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோர் யாழ். ஆயர் இல்லத்தில் சந்திப்புக்களை நடத்தியிருந்தனர். இதன் போது இறுதிக் கட்டப் போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் கொத்துக்குண்டுகள், இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்ற ஆதாரங்கள…

  5. குடாநாட்டில் உருளைக் கிழங்குச் செய்கை பயிர்ச் செய்கையாளர் சங்கங்கள் மதிப்பீடு . குடாநாட்டில் உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையில் விவசாயிகள் ஆர்வத்தோடு ஈடுபட்டுள்ளனர். இந்த வருடம் 75 ஹக்ரெயர் நிலப்பரப்பளவில் செய்கை மேற்கொள்ளப்படலாம் என்று உருளைக் கிழங்கு பயிர்ச் செய்கையாளர் சங்கங்களின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பயிர்ச் செய்கை அளவு மற்றும் விவரங்கள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக சங்கங்களின் சமாசத்தில் செயலாளர் ஜெ. என்.ஜெயகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த வருடம் நூறு ஹக்ரெயர் நிலப்பரப்பில் குடாநாட்டில் உருளைக்கிழங்கு செய்கை மேற்கொள்வதற்கு உத்தேச மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதற்கு வசதியாக 50 வீத மானிய விலையில் 200 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழ…

  6. India's Supreme Court has commuted the sentences of 15 death row prisoners to life in jail on the grounds of delay. Those affected include three men convicted of killing former PM Rajiv Gandhi, and four associates of the notorious bandit Veerappan. Campaigners have welcomed the ruling, saying it will impose new conditions on the use of the death penalty. India rarely carries out executions, which are often delayed indefinitely or commuted by the president. A three-judge panel headed by Chief Justice Palanisamy Sathasivam ruled that "delay is a grounds for commuting death penalty to life sentence". The panel said mental illness and solitary confinement could also be r…

  7. பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடத்தப்படும் பதிவு நடவடிக்கையில் நேற்று 110 பேர் காணாமற்போன தமது பிள்ளைகள் இறந்துவிட்டனர் எனக் கருதிப்பதிவுகளை மேற்கொண்டனர். காணாமற் போனவர்களை இறந்தவர்களாகக் கருதிப் பதிவு செய்யும் நடவடிக்கையை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவி னரால் (ரி.ஐ.டி) கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இந்தப் பதிவு நடவடிக்கையில் கலந்து கொண்ட 426 பேரில் 110 பேர் காணாமற்போன தமது பிள்ளைகள் இறந்து விட்டார்கள் எனக் கருதி பதிவுகள் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது. பகிரங்கப்படுத்தப்படாத பதிவு நடவடிக்கை காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகள் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ம…

  8. இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனவர்கள் தொடர்பில் சரியான தகுந்த ஆதாரங்கள் உரியவர்களால் வெளிப்படுத்தப்படுமாக இருந்தால், அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காகச் சுதந்திரமான விசேட சட்ட ஆணைக்குழு நிறுவப்படும் என்று காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற காணாமற்போனோர் தொடர்பான அமர்வின் முடிவில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற் போனவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் உங்களுக்குக் கிடைத்துள்ளன. இது தொடர்பில் இராணுவத்தினரிடம் எவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எ…

  9. கண்டி, அம்பதென்னை முல்லேகம மஸ்ஜிதுல் பலா முஸ்லிம் பள்ளிவாசலை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கண்டி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களுக்கும் மன்னிப்பு வழங்குவதற்கும் அது தொடர்பிலான வழக்கை மீளப் பெற்றுக்கொள்ளவும் முஸ்லிம் தரப்பினால் இணக்கம் காணப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் இருசாரருக்குமடையில் முல்லேகம் பிரியதர்ஸனாராம விஹாரையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பௌத்த மக்கள் சார்பில் வண, கொண்டதெனியே பியதஸ்ஸீ தேரர், வண.படுகொட சங்கிச்சாயன தேரர், வண, இராஜாங்கனை சோரத தேரர், வண, முல்லேகம பியரத்ன தேரர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், முஸ்லிம்கள் சார்பில் கண்டி நகர ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் ம…

  10. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. நாட்டின் இன்றைய ஆட்சியாளர் பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கும் பெறுமதியற்றவர். நாங்கள் பயந்தவர்கள் என ஆட்சியாளர்கள் எண்ணுகின்றனர். சிறைச்சாலைக்கு செல்லும் நாங்கள் அஞ்சவில்லை. எனது மூத்த புதல்வியின் கணவரை கடந்த ஆறு வருடங்களாக காண முடியவில்லை. இந்த பிரச்சினையை நாங்கள் எதிர்காலத்தில் தீர்ப்போம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளா…

  11. ஓய்வுபெறவுள்ள விமானப் படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம, இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படலாம் என வெளிவிவகார அமைச்சு தகவல்கள் மூலம் தெரியவருகிறது. விமானப் படை தளபதி எயார் மார்ஷல் ஹர்ச அபேயவிக்ரம பெப்ரவரி 28ஆம் திகதியுடன் ஒய்வுபெறவுள்ளார். இதன் பின் இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இவர் நியமிக்கப்படவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக கடமையாற்றும் பிரசாத் காரியவசம், அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராகவும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக கடமையாற்றிய ஜாலிய விக்ரமசூரிய கனடாவிற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிகிகப்பட்டு இருந்தார். எனினும், ஜாலியவ…

  12. யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் இன்று காலை தூக்கிட்டுச் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அல்லைப்பிட்டி சேர்ந்த யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் த.வித்யா (வயது 24) என்ற மாணவியே இவ்வாறு தூக்கிட்டுச் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.onlineuthayan.com/News_More.php?id=718982588220111649

  13. போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் நிலை கொண்டுள்ள படையினரின் எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெல்லிப்பளையில் நேற்று புற்றுநோய் மருத்துவமனை திறப்பு விழாவில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் படைகளைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், “போர்க்காலத்தில் 60 ஆயிரம் தொடக்கம் 75 ஆயிரம் வரையான படையினர் வடக்கில் நிலை கொண்டிருந்தனர். தற்போது இங்கு 12 ஆயிரம் படையினர் மட்டுமே நிலை கொண்டுள்ளனர். போரின் போது ஏராளமாக இருந்த இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு …

  14. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபிக்கு சற்று முன்னர் பயணமானார் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அபுதாபியில் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையிலும் நடைபெறவிருக்கின்ற எதிர்கால எரிப்பொருள் தேவைகள் தொடர்பிலான கலந்துரையாடலில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி பயணமாகியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/97368-2014-01-20-07-12-17.html

  15. நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அர்த்தபூர்வமானதாக்கும் வகையிலும் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையிலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்வர வேண்டுமென பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.தெல்லிப்பழையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார். இன்றுள்ள சூழலில் அரசியற் தீர்விற்கான களமொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ திறந்து விட்டுள்ளார். அதுவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவாகும். கடந்த காலங்களில் பல குழுக்கள் நியமிக்கப்பட்ட போதும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவானது ஒர் அர்த்தபூர்வமானதாகும் என்பது…

  16. விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கப்பல் ஒன்றின் மூலமே இலங்கைக்கு ஹெரோய்ன் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். இந்தக் கப்பல் போரின் பின்னர் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டது.இந்தநிலையில் அதன் மூலமே போதைப்பொருள் கடத்தப்படுவதாக விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.எனினும் இதனை கடத்துவோர் குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக போதைப்பொருள் கடத்தலுடன் ஐக்கிய தேசியக் கட்சியை தொடர்புபடுத்துவதாக ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் போதைப்பொருளை 24 மணித்தியாலங்களுக்குள் ஒழிக்க முடியும்.சர்வதேசத்தில் போதைப…

  17. இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் கணவர் சசிதரனை (தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன்) இராணுவத்தினரிடம் ஒப்படைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் கண்டறிவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன்மூதல் அமர்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது. அந்த அமர்பின் மூன்றாம் நாளான இன்று (திங்கட்கிழமை) கலந்து கொண்டு வாக்குமூலமளிக்கும் போதே அனந்தி சசிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி நானும், எனது கணவரும், பிள்ளைகளும் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம…

  18. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடலில் மூழ்கிய பாரிய நீராவிக் கப்பல் ஒன்றின் சிதைவுகள் மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காலி கடல்சார் தொல்லியல் அலகு மேற்கொண்ட ஆய்விலேயே, இந்தக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேர் ஜோன் ஜக்சன் என்ற நீராவிக்கப்பலின் சிதைவுகளே கல்லடி கடலேரிக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது1908ம் ஆண்டு செப்ரெம்பர் 26ம் நாள் மூழ்கியதாக தெரியவந்துள்ளது. உள்ளூர் சுழியோடியான யோகராஜா என்பவரே முதலில் இதனை கண்டுபிடித்து, காலி கடல்சார் தொல்லியல் அலகின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். 4231 தொன் எடை கொண்ட இந்த நீராவிக் கப்பல், 1905ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதுவெஸ்ட் மினிஸ்டர் கப்பல் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டது. அரிசி…

  19. வடக்கில், சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைப்பது மற்றும், மக்களின் வாழ்க்கையில் இராணுவத் தலையீட்டைக் குறைப்பது ஆகியவற்றுக்கு காலவரையறை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அதிபரிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்று நடந்த தெல்லிப்பழை புற்றுநோய் மருத்துவமனை திறப்புவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். வடக்கு - தெற்கின் இணைப்பிற்கு பாலமாக 'கலர்ஸ் ஒப் கரேச்' நிறுவனத்தின் இரு இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டுள்ளனர். இதனை மனதிற் கொண்டு வடக்கு மாகாண மக்களுக்கு சேவை செய்வதற்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் முன்மாதிரியான முயற்சிகளை எடுக்க வேண்டும். போரால் தமிழ்க் குடும்ப…

  20. கனேடியத் தமிழ்க் காங்கிரஸ் அமைப்பினால் வருடந்தோறும் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் இம்முறை ஊடகத்துறைக்கான விருது உதயனுக்கு கடந்த 18.01.2014 சனிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த "உன்னத சேவைக்கான உயர் விருதை" உதயன் குழுமத் தலைவர் ஈ.சரவணபவன் பெற்றுக்கொண்டார். ஒரு வருடத்துக்குள் சர்வதேச ரீதியில் உதயனுக்கு வழங்கப்பட்ட வழங்கப்பட்ட இரண்டாவது உயர்விருது இதுவாகும். கடந்த நவம்பர் 27ம் திகதி பிரான்ஸில் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பினால் துணிச்சல்மிகு ஊடகத்துக்கான உயர் விருது உதயனுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=481552587320726112

  21. சிறிலங்கா படையினருக்கு பிறேசிலில் பயிற்சிகளை அளிப்பதற்கு, அந்த நாட்டுடன் பாதுகாப்பு உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது. பிறேசிலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கும், பிறேசில் பாதுகாப்பு அமைச்சர் செல்சோ அமோரிம்முக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிறேசில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், சிறிலங்காவுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்பாட்டில், பயிற்சி, இராணுவ பரிமாற்றம், தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் தொழில்துறை ஒத்துழைப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டுக்கு அமைய றியோடி ஜெனீரோவில் உள்ள பிறேசில் …

  22. இலங்கை வெளிவிவகாரச் செயலராக இருந்த கருணாதிலக அமுனுகம பதவி இழந்ததற்கு அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்பும் ஒரு காரணம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகாரச் செயலராக இருந்த கருணாதிலக அமுனுகம கடந்த புதன்கிழமை 60 வயதை எட்டியதை அடுத்து, சேவையில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்குப் பதிலாக வெளிவிவகார அமைச்சின் மேலதிகச் செயலராக இருந்த சேனுகா செனிவிரத்ன, புதிய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டார். இவரை இந்தப் பதவிக்கு கொண்டு வருவதில் வெளிவிவகார அமைச்சைக் கண்காணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவே செல்வாக்குச் செலுத்தியிருந்தார். முன்னதாக, இவர் …

  23. காணாமல்போனோர் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்' - பி.பி.சி இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தனது முதற்கட்ட விசாரணைகளை சனியன்று கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பாடசாலையில் ஆரம்பித்திருக்கின்றது. கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தும் என அறிவிக்கப்டட்டிருக்கின்றது. இதற்கமைவாக இந்த ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே 13 000 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக எழுத்து மூலமான முறைப்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள். இந்த முதற்கட்ட விசாரணைகளில் 36 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுடைய சாட்சி…

  24. கரும்பு ஆலையில் இருக்கும் இராணுவத்தை வெளியேற்றுக கிளிநொச்சி ஸ்கந்தபுரம் கரும்பு ஆலைக் காணியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தி னரை வெளியேற்றி கரும்புச் செய்கையை மேற்கொள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சர் நடவடிக்கை எடுக்கும்படி ஸ்கந்தபுரம் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 200 ஏக்கர் நிலப்பரப்பில் 1965 களில் இயங்கிய கரும்பு ஆலை 1980களின் பின்னர் கரும்புச் செய்கை வீழ்ச்சி கண்டதில் மூடப்பட்டது. மீள்குடியமர்வின் பின்பு கரும்புச் செய்கைக்குரிய நிலத்தில் பயிர்ச் செய்கைக்கு இராணுவம் மறுப்புத் தெரிவித்து வருகிறது. தற்பொழுது கரும்பு ஆலைக் கட்டடத்திலும் இராணுவம் நிலை கொண்டுள்ளதால் கரும்புச் செய்கையை மேற் கொள்ள முடியாமல் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் கவலை தெரி…

    • 0 replies
    • 487 views
  25. தமிழ் மக்கள் தொடர்ந்தும் இராணுவ அடக்குமுறைக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனனர் – அவுஸ்திரேலிய செனட்டர் லீ ரியாணன் கடந்த வருட இறுதியில் இலங்கை சென்று அங்கு அரசால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்ட லீ ரியாணன் தமிழ்லீடருக்கு பிரத்தியேக நேர்காணலை வழங்கி இருந்தார். அதன் போது, தமிழ் மக்கள் அங்கு எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இராணுவ பிரசன்னம், தஞ்சம் கோரி வருபவர்களின் உண்மை நிலைப்பாடு, என பலதரப்பட்ட விடயங்களை தமிழ்லீடருடன் பகிர்ந்து கொண்டார். அதன் முழுமையான ஒலி, ஒளி வடிவினை இங்கே பார்வையிடலாம். நேர்காணலை தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழி வடிவிலும் கேட்கலாம் http://tamilleader.com/?p=26267

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.