ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
மக்கள் பிரதிநிதிகளுக்கு மன்றாட்டமான விண்ணப்பம். உரையாற்ற உங்களுக்கு உரிமை உண்டு அதற்காக….. கட்சியை காலாவதியாக்கி எங்களை ஏதிலியாக்க கூடாது…!உங்களில் அநேகர் அரசியலுக்கு புதுசு ஆயுதத்தோடு அரசியல் செய்த மாதிரி அரசாங்கத்தோட அரசியல் செய்ய ஏலாது இதுக்கு கொஞ்சம் அது வேணும் அது தான் உங்களிட்ட அறவே இல்லையே….! அதால தான் சொல்றன் கொஞ்சம் அடக்கி வாசிச்சா இனிவரும் மிச்ச காலத்தையும் நாங்கள் எம் பியளா ஆண்டிட்டு போகலாம்…! இதால தான் இந்த முடிவு வழமை போல இதை நீங்கள் ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவர் அவர் இஸ்டம் இப்ப அவசரமா உங்களின்ட C.Vதேவை மன்னிக்கவும் சுய விபரக் கோவை தேவை உங்களுக்கு தெரியும் தானே மாகாண அமைச்சுக்கும் இதை கேட்டுதான் கொடுத…
-
- 0 replies
- 643 views
-
-
Published on December 11, 2013-10:01 am · கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தனியாக அமைப்பது தொடர்பில் பாராளுமன்ற கட்டிடத்தில் பொது நிருவாக அமைச்சர் தலைமையில் நேற்று (10) இடம் பெற்ற கூட்டத்தில் கல்முனை பிரதேசத்தை சுக்கு நூறாக்கும் எந்த செயலுக்கும் நாம் உடன்படமாட்டோம் என றவூப் ஹக்கீம் மற்றும் ஹரீஸ் எம்.பீ ஆகியோர் தெரிவித்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை முஸ்லிம் மக்களுக்கு திட்டமிட்ட அநீதி நடைபெறுகின்றது என்று உரத்த குரலில் சத்தமிட்டார். நேற்று நடை பெற்ற கூட்டத்தில் தமிழ் மக்களின் சிவில் சமுக பிரதிநிதிகள், கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என 25 பேர் கலந்து கொண்டனர், முஸ்லிம் பிரதிநிதிகள் சார்பில் றவூப் ஹக்கீம், ஹரீஸ் MP, பைசால் காசீம் MP, தவ்பீக் MP, நிசாம்…
-
- 5 replies
- 908 views
-
-
சிறீலங்கா அரசு அமெரிக்கா.. பிரிட்டன் ஆகியவற்றின் பங்களிப்போடு "ஈழத்தமிழர்கள்" மீது தமிழீழ விடுதலைப்புலிகள் நிர்வகித்த வடக்குக் கிழக்கு அடங்கிய தமிழீழ தேசத்தில்.. இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்டிருப்பதாக ஜேர்மனியில் கூடிய நிரந்தர மக்கள் தீர்ப்பாய நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இந்த இனப்படுகொலை போரின் பின்னும் தொடர்வதாக அவர்கள் கண்டறித்துள்ளனர். இந்த இன அழிப்பில் இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பாக.. தீர்ப்பளிக்க நீதிபதிகள் மேலும் ஆதாரங்கள் தேவை என்றும் கண்டறிந்துள்ளனர். மேலும்.. மண்டேலாவின் (தென்) ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு மீது வெறுமனவே ஒட்டுமொத்த பயங்கரவாத அமைப்புப் பட்டம் சுமத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் பரிந்துரை வழ…
-
- 8 replies
- 1.3k views
-
-
இலங்கையில் செயற்பட்ட பிரெஞ்சு தொண்டு நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் 17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரனை தேவை என அந்நிறுவனம் வைத்துள்ள கோரிக்கையை அப்பணியாளர்களின் குடும்பங்களும் ஆதரிக்கின்றன. கிழக்கு மாகாணத்தில் போர் ஆரம்பமான கால கட்டத்தில் 2006 ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரெஞ்சு தொண்டு நிறுவனமான ஏசிஎப் நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் 17 பேர் அவர்களின் அலுவலகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இவர்களில் நான்கு பேர் பெண்கள். கொல்லப்பட்ட பெண்ணின் தந்தையும் இதில் கொல்லப்பட்டார். தமது நிறுவனத்தின் உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை அரச படைகளே பொறுப்பு என தற்போது குற்றச்சாட்டுகளை வைத்துள்ள ஏசிஎப் நிறுவனம் அதற்கான சாட்சியங்களும் தம்மிடம் இருப்ப…
-
- 0 replies
- 516 views
-
-
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து குப்பைக்கு வரி அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதுளை நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு குப்பைக்கும் வரி அறவிடப்படவிருக்கின்றது. அந்த எல்லைக்குட்பட்ட அரச நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் குப்பைகளுக்கே வரி அறவிடப்படவிருக்கின்றது. வெளியேற்றப்படும் குப்பைகளின் அளவுக்கு ஏற்பவே வரி அறிவிடப்படும் என்று அந்த சபை அறிவித்துள்ளது. குப்பைகளை, உக்கிபோகும் மற்றும் உக்கிபோகாத குப்பைகள் என வேறுபடுத்தி தந்தால் குப்பைக்காக அறவிடப்படும் வரியில் அரைவாசி குறைக்கப்படும் என்றும் அந்த நகர சபை அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/92852-2013-12-11-11-21-33.html
-
- 2 replies
- 442 views
-
-
"தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது." இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். தெரிவித்துள்ளார். இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமி…
-
- 11 replies
- 1.3k views
-
-
இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதனை அரசியலுக்குள் இழுப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ, அண்மைக் காலமாக பலத்த பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேல் மாகாண சபைத் தேர்தலில் முத்தையா முரளிதரனைக் களமறிக்கி, முதலமைச்சராக்குவதற்கு மகிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக ஆளும் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தமிழர்களுக்கு சமமான உரிமை வழங்கப்பட்டு வருவதையும், இன்னுமொரு தமிழ்ப் பிரதிநிதி முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதையும் சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்கவே மகிந்த ராஜபக்ஷ இந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எனினும், முத்தையா முரளிதரனின் மனைவியும், குடும்பத்திலுள்ள சிலரும், அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு கடுமையான …
-
- 3 replies
- 967 views
-
-
கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ ஆகியோர் நைரேபி நகருக்கு அருகில் உள்ள நசராணி நகரின் சர்வதேச விளையாட்டுத் திடலில் இன்று நடைபெற்ற கென்யாவின் 50 வது சுதந்திர தின விழாவில் கலந்து அதிதிகளாகக் கலந்து கொண்டனர். சுதந்திரதின கொண்டாட்டங்கள் உஹ_ரு பூங்காவில் கென்ய ஜனாதிபதி உஹ_ரு கென்யாட்டாவினால் கொடியேற்றப்பட்டு ஞாபகார்த்த மரம் நடப்பட்டு ஆரம்பமானது. இந்த சுதந்திரதின கொண்டாட்டங்களில் நைஜீரிய ஜனாதிபதி குட்லக் ஜொனதன் நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி ஒபசஞ்சோ, மாலாவியின் ஜனாதிபதி ஜொய்ஸ் பண்டா, தன்சானியா ஜனாதிபதி ஜகாயா கிக்வீட், கொங்கோ ஜனாதிபதி ஜோசப் கபீலா, எரிட ரியாவின் ஜனாதிபதி இஸ்ஸாயாஸ் அபவெர்…
-
- 0 replies
- 326 views
-
-
உயிர்ப்பலி கொடுப்பவர்கள் புண்ணியம் என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது. பௌத்த நாட்டில் முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ அல்லது உயிர்பலிக்கோ இடமில்லை என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் இயங்கி வரும் முஸ்லிம் அமைப்புக்களின் பின்னணியில் சவூதி அரேபியாவின் முக்கிய தீவிரவாதிகள் இருக்கின்றனர். பௌத்த கொள்கைகளை சீரழித்து மத்திய கிழக்கு நாடுகளைப் போல் இலங்கையையும் மாற்ற முயற்சிக்கின்றனர் எனவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் கருத்துத் தெரிவிக்கையில், மதம் என்ற போர்வையில் நாட்டில் உயிர்ப்பலிகளை கொடுக்கின்றனர். முஸ்லிம் மக்களின் விழாக்களில் அவர்களின் மதத்திற்கு ஏற்ப இவை செய்யப்பட்டாலும் அதை புண்ணிய…
-
- 0 replies
- 317 views
-
-
இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் மிகவும் ஆபத்தான நிலையிலேயே வாழ்ந்து வருவதாக இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதி சலோகா பெயானி தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களின் கணிசமான அளவு மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு நிரந்தரமான வீடுகள், சமூக சேவைகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் பெயானி கூறியுள்ளார். இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த பெயானி தனது இலங்கை விஜயம் தொடர்பான அறிக்கையில் இதனை கூறியுள்ளார். பெண்கள…
-
- 0 replies
- 397 views
-
-
இலங்கையில் தற்பொழுது செயற்படாமல் இருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தாக்குதல் நடவடிக்கைகளையும் மீண்டும் ஆரம்பித்து, சர்வதேச நாடுகளை ஏமாற்றி இறுதியில் அதனை தமது இருப்புக்காக பயன்படுத்தும் அரசாங்கத்தின் ரகசியமான திட்டம் ஒன்று அம்பலமாகியுள்ளது. இவ்வாறு லங்கா வெப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முக்கியமான ரகசிய திட்டம் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் தனிப்பட்ட திட்டம் என்பதுடன் இது பற்றி முப்படைத் தளபதிகளுக்கோ, அரசாங்கத்தின் உயர் மட்ட அரசியல்வாதிகளுக்கோ தெரியாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதுகாப்புச் செயலாளரின் முழுமையான மற்றும் நேரடியான கண்காணிப்பின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பாதுகாப்புத் தரப்பில் இருக்கும்…
-
- 7 replies
- 1.2k views
-
-
இன்று காலை 10.00 மணிக்கு வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் சார்பில் அதி வணக்கத்துக்குரிய அருட்தந்தை டெஸ்மொன்ட் ஏஞ்சலோ, வவுனியா இறம்பைக்குளம் பெண்கள் கல்லூரியை சேர்ந்த அருட்சகோதரிகள், கருமாரியம்மன் ஆலய குருக்களும், வவுனியா அந்தணர் ஒன்றிய செயலாளருமாகிய பிரபாசர்மா குருக்கள், வவுனியா நகரப்பகுதி பள்ளிவாசல் மௌலவியும், வவுனியா அரபுக்கல்லூரியின் பதில் அதிபருமாகிய சிட்தீக் ஆகியோரும், சிவில் சமுக அமைப்புகள் சார்பில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய செயலாளர் நிக்சன், பிரஜைகள் குழுவின் காப்பாளரும், மனித உரிமை ஆர்வலருமான சண் மாஸ்டர், தன்னார்வ தொண்டு நிறுவன ஆர்வலர்…
-
- 0 replies
- 501 views
-
-
வடக்கில் மீண்டும் இளைஞர்கள் சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்து கொண்டு கிளர்ந்தெழுந்தால் அதற்கு நாமே பொறுப்பு அதற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது. இளைஞர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு புரிகின்ற மொழியில் அவர்களுடன் பேச வேண்டும் என இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். நாம் இதற்கு முன்னர் வடக்கிலும் தெற்கிலும் மூன்று கிளர்ச்சிகளுக்கு முகம் கொடுத்திருக்கிறோம். இது எதனால் ஏற்பட்டது என்பதையும் நாம் அறிவோம். இந்நிலையில் வடக்கில் இளைஞர்கள் மீண்டும் சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்தாலோ தெற்கில் இளைஞர்கள், 'வாழ்வதை விட சாவதே மேல்' என சுவர்களில் எழுத ஆரம்பித்தாலோ என்னை பிரதானமாகக் கொண்டு நாம் அனைவரும் அதற்கு பொறுப்பாளிகளாக இருப்போம் என்றும் கூறினார்.…
-
- 0 replies
- 333 views
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துப் பேசியுள்ளார். தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்றிருந்த போதே, பில் கிளின்டனுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாடியுள்ளார். இது ஒரு சாதாரணமான நலம் விசாரிக்கும் கைகுலுக்கும் நிகழ்வே என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.seithy.com/breifNews.php?newsID=98870&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 373 views
-
-
"வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தேசிய கொடியை ஏற்ற மறுத்திருந்தார்" தேசிய கொடியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேசிய கொடியில் பொறிக்கப்பட்டுள்ள வாளேந்திய சிங்கம் பதிலீடு செய்யப்பட வேண்டும் எனவும், அது பொருத்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். விவசாய அல்லது இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் சின்னமொன்று பொறிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை, அண்மையில் மன்னாரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் தேசிய கொடியை ஏற்ற மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது…
-
- 2 replies
- 421 views
-
-
அரும்பொருட் காட்சியகத்தில் இருந்த பண்டைய காலத்து வாள் காணாமல் போனது போன்று மகிந்த சிந்தனை புத்தகமும் காணாமல் போய்விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அங்கு மேலும் தெரிவித்த அவர், மகிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பற்றி அரசாங்கத்தில் உள்ளவர்கள் எவரும் தற்போது பேசுவதில்லை. அத்துடன் இன்றைய அரசாங்கம் கெரில்லா சந்தைப்படுத்தல் முறைமையை கையாண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மக்கள் வெறுப்படைத்துள்ளனர். வரவு செலவுத் திட்டத்தில் நாய்களுக்கு கூட அரசாங்கம் நிவாரணங்களை வழங்கியுள்ளது. நாட்டு …
-
- 1 reply
- 421 views
-
-
வன்னியில் குண்டு போட்டால் கொழும்பில் குண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு திருச்சிபோய் குண்டு போட்டவர் இன்று எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுகின்றார் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் பிரச்சினைகளை பேசுபவரின் ஓட்டுக்குழுதான் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு காரணமாகும் எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வணிக அபிவிருத்தி மற்றும் சிறுகைத்தொழில்கள் மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சுக்களின் மீதான குழு நிலை விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். அமைச்சர் பதிலளித்து பேசுவதற்கு முன்பதாக பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய சில கேள்விகளுக்கு…
-
- 1 reply
- 703 views
-
-
2011 உலக கிண்ண போட்டிகளுக்காக மூன்று கிரிக்கெட் விளையாட்டு அரங்கங்களை அமைப்பதற்காக பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்தவதற்கு 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார். நீர்ப் பிரச்சினை காணப்படும் இந்த பகுதியில் நீர்ப்பாசன குளங்களை அபிவிருத்தி செய்யாமல் அரசாங்கம் விளையாட்டு மைதானங்களை அமைத்து பெருந்தொகை பணத்தை வீனடித்து விட்டதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கண்டவாறு தெரிவித்தார். சூரியவெவ விளையாட்டு மைதானத்தில் சர்வதேச போட்டிகளும் பாடசாலைப் போட்டிகள் மட்டுமே நடைபெறுவதால்…
-
- 13 replies
- 695 views
-
-
"தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவரா லும் தடுத்துநிறுத்த முடியாது." இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன். இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ந…
-
- 4 replies
- 846 views
-
-
வெளிநாடு செல்பவர்கள் தங்க நகைகள் எடுத்துச் செல்ல புதிய கட்டுப்பாடு! - நேற்றுமுதல் அமுல். [Wednesday, 2013-12-11 07:38:12] வெளிநாடு செல்பவர்கள் தங்க நகைகள் எடுத்துச் செல்வது தொடர்பாக நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை பிரஜைகள் தமது பயணப் பொதிகள், ஆவணங்கள், அணிந்து செல்லும் நகைகள் தவிர வர்த்தக நோக்கத்துடன் நகைகளோ பொருட்களோ எடுத்துச் செல்வது, நேற்று முதல் அமுலாகும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளது. திரும்பி எடுத்து வரும் அடிப்படையிலே தாங்க நகைகள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட இருப்பதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக பெருமளவில் தங்க நகைகள் கடத்தப்படுவதால் இதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக…
-
- 2 replies
- 577 views
-
-
நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. இது இல்லாதொழிக்கப்பட வேண்டும் அதுமட்டுமல்லாது மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் சபையில் தெரிவித்தார். இராணுவத்திற்கு பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய சிறுகைத்தொழிலுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாரம்பரிய சிறுகைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.இதனைத் தெரிவித்தார். கல்வி, உணவு அனைத்திற்கும் கஷ்டப்பட்டு வறுமை…
-
- 0 replies
- 283 views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு - 10.12.2013. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று பி.ப 3.00 மணி தொடக்கம் 6.00 மணி வரை இடம்பெற்றது. இந்நிகழ்வில் காணாமல் போன மற்றும் சிறைச்சாலையில் வாடும் உறவுகளதும் விடுதலையையும் நலனையும் வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்யப்பட்டது. கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் செல்வராசா கஜேந்திரன் வரவேற்புரையையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார செயலாளர் திரு.எஸ்.இளங்கோ தலைமை உரையினையும் ஆற்றினார். தொ…
-
- 0 replies
- 342 views
-
-
இலங்கையின் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை, இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்றும் மற்றும் மனித உரிமைகள் மேலும் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் கோரியிருக்கிறது. அனைத்துவிதமான சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் மக்கள் காணாமல் போதல் ஆகியவைகள் தடுக்கப்படவேண்டும் என்றும் தமிழ்ச் சிறுபான்மையினரின் கோரிக்கைகள் குறித்து ஒரு அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றும் நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் ஒரு திருச்சபைக் கடிதம் மூலம் கோரியிருக்கிறார்கள். அரசியல் சட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக அதிக அதிகாரங்களைத் தந்திருக்கிறது என்று கூறும் ஆயர்கள், இந்த அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும் என்றும் கோருகிறார்கள். இலங்கை நீதிபதிகளின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என…
-
- 0 replies
- 513 views
-
-
எதிர்வரும் மார்ச் மாதம் கூடும் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில், இலங்கை தொடர்பான விடயங்கள் முக்கிய இடம் வகிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் மனித உரிமை, பொறுப்புக் கூறல் மற்றும் தமிழ் சிறுபான்மை இனத்தின் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மூன்றாவது யோசனை கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இதனால், மனித உரிமை மீறல் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கு அனுமதிகளை வழங்கி, மேலதிக சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பல பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் கோரிக்கைகளை விடுத்து…
-
- 0 replies
- 415 views
-
-
பிரதமர் தி.மு.ஜயரட்ன உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அத்துடன் தி.மு.ஜயரட்ன பிரதமர் பதவியிலிருந்த இராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. அண்மையில் கைப்பற்றப்பட்ட 131 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டிருந்தார். இதன் பின்னணியில் உள்ளவர்களை பிரதமர் வெளிப்படுத்தாவிடின், அவர் கைது செய்யப்பட வேண்டும் அல்லது குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் வண. ஓமல்பே சோபித்த தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/92518-2013-12…
-
- 1 reply
- 392 views
-