ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143515 topics in this forum
-
"ஒரு காலத்தில் நாடாளுமன்றத்தில் கூட தீபமேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்படியிருக்கையில் போர் முடிந்த பின்னர் இறந்தவர்களை நினைவுகூரக் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்? எமது உரிமைக்காகப் போராடி மரணித்த உறவுகளுக்கு அமைதியான முறையில் அஞ்சலி செலுத்த இறுதிவரை நாம் முயல்வோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போனவர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை நினைவு கூரப்படவுள்ளது. இந்த நிலையில், அன்றைய நாள் பயங்கரவாதிகளை நினைவுகூரும் நாள் என்றும், அந்த நாளில் ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அவர்களை எவரும் நினைவுகூர முடியாது என்றும் இ…
-
- 0 replies
- 427 views
-
-
வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றுள்ள நிலையில் அரசியல் அமைப்பில் ஏற்றுகொள்ளப்பட்டுள்ள 13ஆவது திருத்தின் பிரகாரம் மாகாணம் அதிகாரம் முதலமைச்சருக்கா? அல்லது ஆளுநருக்கா என்பது தொடர்பில் தீர்மானிக்கும் தருணம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரங்கள் தமிழர்களுக்கு கிடைக்குமா என்பதனையும் தீர்மானிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி கூறிய சம…
-
- 1 reply
- 444 views
-
-
2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்குள் 18,777 சிறுவர் துஷ்பிரயோகங்கள், துர்நடத்தைகள் இடம்பெற்றிருப்பதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார். பாராளுமன்றத்தில் இன்றைய அமர்வின்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.யான ரோசி சேனாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். http://www.virakesari.lk/?q=node/359414
-
- 0 replies
- 427 views
-
-
மஹிந்த சிந்தனைக் கொள்கைகளை அமுல்படுத்துமாறு விக்னேஸ்வரனுக்கு பணிப்புரை 24 நவம்பர் 2013 'மஹிந்த சிந்தனை' என்ற அரசியல் நோக்கத்துக்காக செயற்பட முடியாது: சி.வி அரசாங்கத்தின் மஹிந்த சிந்தனைக் கொள்கைகளை அமுல்படுத்துமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக இந்தப் பணிப்புரையை எழுத்து மூலம் விடுத்துள்ளார். கடந்த வாரம் வடக்கில் நடைபெற்ற இரண்டு மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை. இதனை அடுத்து ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் என்ற ரீதியில் கூட்டங்களில் விக்னேஸ்வரன் பங்கேற்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டி…
-
- 3 replies
- 550 views
-
-
மாவீரர் தின அனுஸ்டிப்புக்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது - இராணுவம் 24 நவம்பர் 2013 மாவீரர் தின அனுஷ்டிப்புக்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். மாவீரர் தின வார நிகழ்வு நடைபெறும் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் அமைதியாக காணப்படும் என எதிர்பார்ப்பதாக யாழ்க் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். குழப்ப நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் கிடையாது எனவும் இதனால் அதிகளவில் இராணுவத்தினரை குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் தமது வீரர்கள் அல்ல என்பதனை வடக்கு மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆதரவான சிலர் மட்டும் இவ்வாறு குழப்பங்களை விளைவிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவ…
-
- 3 replies
- 605 views
-
-
இசைப்பிரியா உள்ளிட்ட அனைத்து மாவீரர்களிற்கும் கரவெட்டி பிரதேசசபை அஞ்சலி:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியா உள்ளிட்ட அனைத்து மாவீரர்களிற்கும் கரவெட்டி பிரதேசசபை அஞ்சலியை செலுத்தி மாவீரர் தினத்தை அனுஸ்டித்திருக்கிறது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழுள்ள கரவெட்டிப்பிரதேச சபையில் பிரதேசச பை உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சகிதம் இன்று மாவீரர்களிற்கு மலரஞ்சலி செலுத்தியும் சுடரேற்றியும் மௌன வணக்கம் செலுத்தியும் அஞ்சலிக்கப்பட்டுள்ளது. வட-கிழக்கெங்;கும் மாவீரர் தினத்தை முன்னிட்டு கண்களுள் எண்ணெய் விட்டவாறு இராணுவமும் அதன் புலனாய்வுத்துறையும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றது. ஆனாலும் தமிழ் தரப்புக்களோ கிடைக்கின்ற சந்தர்ப்…
-
- 0 replies
- 447 views
-
-
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் ! ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பாடுதல், பெருமை போற்றுதல் சட்டவிரோதமானதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அவ்வாறு எவரும் நடந்துகொண்டால் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என அந்த நிலையம் எச்சரித்துள்ளது. நாளை மறுதிகம் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாகும். அத்துடன் நாளை (26.11.13) விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநநாள் அனுஸ்டிப்பும் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுகளை தமிழ் மக்கள், அனுஸ்டிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பது சட்டவிரோதமான செயல் என பொலி…
-
- 0 replies
- 455 views
-
-
எப்போ நாடு கடத்தப்படுவார் என்பது தெளிவில்லை - தற்போது வரை தடுப்பிலேயே உள்ளார்:- விசா விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான ஈழத்து கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார். இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெயபாலன் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். தனது தாயின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் இலங்கை சென்ற நோர்வே பிரஜை ஜெயபாலன், விசா விதிமுறைகளை மீறி யாழ்ப்பாணத்தில் கூட்டங்களை நடத்தியதாக…
-
- 0 replies
- 639 views
-
-
இலங்கை தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என இலங்கையில் உள்ள சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சீன வெளிநாட்டமைச்சு வெளியிட்ட கருத்து மற்றும் பொதுநலவாய மாநாட்டின் போது இலங்கை மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக, திகதி நிர்ணயித்து பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் கூறிய கூற்று தொடர்பாகவே இலங்கையிலுள்ள சீன தூதுவர் அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மனித உரிமைகளை முன்னேற்றுவதிலும் நாட்டை கட்டியெழுப்புவதிலும் முன்னேற்றத்தை காட்டுகின்ற இலங்கைக்கு எதிராக பல்வேறு குற்றச் சாட்டுக்களை முன்வைத்து நாட்டுக்குள் குழப்ப நிலைமையை ஏற்படுத்துவதற்கு காரணமாகின்…
-
- 0 replies
- 334 views
-
-
தனது தாயின் சமாதியைப் பார்க்கப் போனதால்தான் கவிஞர் ஜெயபாலன் இலங்கையில் கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி வாசுகி கூறியுள்ளார். அவரது கைதுக்காக இலங்கை அரசாங்கம் வேறு காரணங்களைக் கூறினாலும், தனது வீட்டில் உள்ள தனது தாயின் சமாதியைப் பார்க்க போனதற்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக தான் நம்புவதாக வாசுகி வலியுறுத்தியுள்ளார். எங்களுடைய காணிக்குள் நாங்கள் போவதில் என்ன பிழை உள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னுடைய கணவர் இலங்கையில் இனவிரோதத்துக்கு குந்தகமாக எதுவும் அங்கு பேசவில்லை என்றும் வாசுகி கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=97599&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 399 views
-
-
ஐ.நா விசேட பிரதிநிதி ஒருவர் அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மனிதஉரிமைகள் சம்பந்தமான ஐ.நா விசேட பிரதிநிதி கலாநிதி சலோகா பயானி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கயிருக்கும் அவர், வடக்கில் இடம்பெயர்ந்தவர்களை சந்திக்க உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை தவிர ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உட்பட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளும் ஐ.நா பிரதிநி…
-
- 0 replies
- 187 views
-
-
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடத்தும் உள்நாட்டு, விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை என்று பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “மனிதஉரிமை விவகாரங்கள் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும், விசாரணைகள் முற்றிலும் சுதந்திரமானவையல்ல. அவற்றில் பெரும்பாலானவை இராணுவம் தலைமை தாங்கும் விசாரணைகள். போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, சரியான, சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுவதையே எதிர்பார்க்கிறோம். சிறிலங்கா விவகாரம் தற்போது, பிரித்தானிய வெளிவிவகாரக் கொள்கையின் ஒரு பகுதியாக உருவ…
-
- 37 replies
- 2.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைமையகம் மொரிசியஸில் உருவாக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று சந்தேகம் வெளியிட்டுள்ளது. சர்வதேச புலனாய்வுப் பிரிவை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொரிசியஸில் 9 வீதமானவர்கள் தமிழர்கள் எனவும், மொத்த சனத்தொகையில் 75 வீதமானவர்கள் இந்திய தமிழர் பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மொரிசியஸில் புலிகள் அமைப்பின் செயற்பாடுகளுக்கு உசிதமான பின்னணி காணப்படுகின்றது. புலிகளுக்கு ஆதரவான தரப்பினர் பிரயோகித்த அழுத்தம் காரணமாக அண்மையில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் மொரிசியஸ் நாட்டுப் பிரதமர் ராம் குலாம் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.seithy.c…
-
- 4 replies
- 1.5k views
-
-
விடுப்பு மூலை: தப்பியோடும் தலைவர்கள் நந்திமுனி யாழ்.நூலக வாசலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் நின்றிருந்தேன். சம்பந்தர், பின் வாசலால் தப்பியோடியபின் நிராசையோடும், ஆற்றமையோடும் கலைந்துசென்ற மக்களில் ஒருவனாக பஸ் ஸ்ரான்டை நோக்கி நடந்துகொண்டிருந்த போது எனக்கு முன் இரண்டு முதியவர்கள் கதைத்தது கேட்டது. அவர்கள் இருவரும் ஓய்வூதியர்கள். ஒருவர் போஸ்ற் மாஸ்டர் மற்றவர் கிளார்க். அரசியலை அலசியபடி நடந்து பஸ் ஸ்ரான்டில் போய் நின்றார்கள். அவர்கள் கதைத்ததை அப்படியே தருகிறேன் பாருங்கள்... போ.மா: என்ன இருந்தாலும், சம்பந்தன் உப்பிடி பின் கதவாலை ஓடியிருக்கக் கூடாது. கிளார்க் : ஓடாமல் என்ன செய்யிறது. சனங்களின்ர கோபத்தை உவையலாள தாங்கேலாது. போ.மா : மெய்தான்.... நல்ல தலைவர்கள் சனத்தின்…
-
- 5 replies
- 938 views
-
-
அன்பான எம் தமிழ் உறவுகளே! எமது தேசிய விடுதலைக்காக தேசியத்தலைவரின்; வழிகாட்டலில் களமாடி காவியமான விடுதலை வீரரின் வீரநாள். தமிழரை இப்பூமிப்பந்தில் மீண்டும் தலைநிமிரச் செய்த எம் மாவீரச் செல்வங்களை ஒரு கண நேரம் எம் நெஞ்சிருத்தி அவர் நினைவுகளில் தடம்பதித்து தாயக விடுதலைப்பயணத்தில் அனைவரும் அணிதிரள உறுதியெடுக்கும் எழுச்சி நாள். உலகத்தமிழினமே எம்வீரர் பாதம் பணிந்து கண்ணீர்ப் பூச்சொரியும் புனிதநாள். இது எமது தேசிய நாள். இந்நாளை 1989ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பரிமாண வளர்ச்சியுடன் விடுதலை வீரரின் தியாகத்தினை தாயகத்து உணர்வுகளுடன் வணங்கி வருகிறோம். எமது இனத்தின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றின் பாதையில் ஏற்பட்ட இராணுவ நெருக்கடியும், சர்வதேச அழுத்தமும் எமது விடுதலைப்பய…
-
- 3 replies
- 838 views
-
-
வவுனியாவிற்கு விஜயம் செய்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், விருந்தினர்களை குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பிரதான வீதி வழியாக அழைத்து வந்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது வவுனியா வர்த்தகர் சங்கம், நகர பள்ளிவாசல் நிர்வாகம் ஆகியோரும் முதலமைச்சரை கௌரவித்தனர். பின்னர் வவுனியா மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் கீழான வவுனியா நகரப் பகுதியில் கூட்டுறவு வங்கி ஒன்றினை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோதரலிங்கம், வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.டி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, வட மாகாண கூட்டுறவு …
-
- 3 replies
- 744 views
-
-
இதுவரை காலமும் அரச அதிகாரம், இராணுவ பலம், அனுசரணைப் படையின் அட்டூழியங்கள் போன்றவற்றின் உதவியுடன் நடத்திவந்த அரச நிர்வாகத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். இராணுவத்தைத் தொடர்ந்தும் மாகாணத்தில் இருக்கவிட்டு அதன் அரவணைப்பில் குளிர்காயலாம் என எண்ணுவது மடமை. எனவே மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் தத்தமது கடமைகளில் ஈடுபட சகலரும் வழியமைத்துக் கொடுக்கவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ், முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் எம்மை இயங்க விடாமல் தடுக்கின்றனர். ஒருவேளை அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையில் நெருங்கிய உறவு அடுத்த தேர்தலின் போது ஏற்பட்டால் தமது பாடு இக்கட…
-
- 5 replies
- 854 views
-
-
ஜெனிவா கூட்டத்தொடர் சிறிலங்காவுக்கு கடுமையானதாக அமையும் – ஆங்கில நாளிதழ் எச்சரிக்கை [ சனிக்கிழமை, 23 நவம்பர் 2013, 07:18 GMT ] [ கார்வண்ணன் ] அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் சிறிலங்காவுக்கு கடுமையானதா அமையும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு பிரித்தானிய மீண்டும் தெரிவு செய்யப்பட்ட நிலையில், வரும் மார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகளை ஜெனிவாவில் மேற்கொள்ளவுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரொன் எச்சரித்துள்ளார். இதனால், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்கா முன்னெப்போதும் எதிர்கொண்டிருக்காத நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளதாக, இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மன…
-
- 1 reply
- 695 views
-
-
வலி.வடக்கு பாதுகாப்பு வலயப்பகுதியில் நின்று போயிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம் - 24 நவம்பர் 2013 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வலி.வடக்கு பாதுகாப்பு வலயப்பகுதியில் நின்று போயிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் இன்று ஆரம்பமாகி உள்ளது. கடந்த சில நாட்களாக கமரூனின் விஜயம் மற்றும் இடம்பெயர்ந்த மக்களது போராட்டங்களை அடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடித்தழிப்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக வலி.வடக்கு மீள் குடியேற்றத்திற்கும் புனர்வாழ்விற்குமான அமைப்பின் தலைவர் ச.சஜீவன் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக இடித்தழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதற்கு எதிராக இடம்பெயர்ந்த மக்கள் போரா…
-
- 0 replies
- 349 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவிற்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டமொன்றின் போது பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தேஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்காக கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகேவும், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் பொதுபல சேனா அமைப்பிடம் மன்னிப்பு கோரியிருந்தனர்.இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இதேவேளை, உத்தியோகபூர்வமாக ஐக்கிய தேசியக் கட்சி பொதுபல சேனாவிடம் மன்னிப்பு கோரவில்லை என கட்சியின் தலைவர் ரணி…
-
- 1 reply
- 376 views
-
-
சுற்றுலா வீசாவில் மலேசியா சென்று அங்கு தொழில் புரிந்த இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியம் தெரிவித்துள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரன்தெனிய குறிப்பிட்டார். தினந்தோறும் 15 பேர் வரையில் சுற்றுலா வீசாவில் சென்று தொழில் செய்கின்றமை குறித்து மலேசியாவிலுள்ள இலங்கை துதரகத்திற்கு தகவல்கள் கிடைக்கப்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99430/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 343 views
-
-
இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை ஒர் அரசியல் ரீதியான தீர்மானமாகும் என இந்திய முன்னாள் இராணுவத் தளபதி வீ.பி.மாலீக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைப்பது குறித்து அப்போதைய அரசாங்கம், இராணுவத்திடம் ஆலோசனை கோரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசியல் தலைமைகள் இராணுவத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்காமை பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99427/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 448 views
-
-
ஈழத் தமிழ் அரசியலைப் பொறுத்து இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அணுகுமுறை மூன்று தடங்களைக் (Tracks) கொண்டது. முதலாவது சீன விரிவாக்கத்திற்கு எதிரான தடம். இரண்டாவது லிபரல் ஜனநாயகத்தை உலகம் முழுவதும் பரப்பும் ஒரு தடம். மூன்றாவது உள்நாட்டில் உள்ள தமிழ் வாக்காளர்களைக் கையாளும் ஒரு தடம் இம்மூன்று தடங்களையும் உள்ளடக்கியே மேற்கத்தைய மற்றும் இந்திய அணுகுமுறைகள் அமையும். இவற்றைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம். முதலாவது சீன விரிவாக்கத்திற்கு எதிரான தடம். இது ஓர் உலகளாவிய வியூகம். சீனாவின் செல்வாக்கு மண்டலத்துள் காணப்படும் இலங்கை அரசாங்கத்தை அதிலிருந்து வெளியில் எடுப்பதற்குரிய ஒரு கருவியாக இங்கு தமிழ் அரசியல் பயன்படுத்தப்படுகின்றது. அரசாங்கத்தை வளைத்தெடுக்க முற்படும் இந்நிகழ்…
-
- 0 replies
- 462 views
-
-
ரஷ்யாவின் 05 கடற்படைக் கப்பல்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (24.11.13) கொழும்புத் துறைமுகத்தை சென்றடைந்துள்ளன. இந்தக் கப்பல்களை இலங்கை கடற்படையினர் வரவேற்றுள்ளனர். 'அட்மிரல் பான்ரெலியவ்', 'பேரேஸ்வட்', 'அட்மிரல் நெவில்ஸ்கி', 'போட்ரி க்ரிலோப்;', 'பெஷிங்க' ஆகிய ரஷ்ய கப்பல்களே கொழும்புத் துறைமுகத்தை சென்றடைந்துள்ளன. இந்தக் கப்பல்கள் ரஷ்யாவின் விளாடிவோஸ்ரொக் துறைமுகத்துக்குச் செல்லும் வழியிலேயே கொழும்புத் துறைமுகத்தை சென்றடைந்துள்ளன. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/99432/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 244 views
-
-
எமது பொறுமையை பலவீனம் என்று தப்புக்கணக்கு போடக் கூடாது - முதல்வர் விக்னேஸ்வரன் [ சனிக்கிழமை, 23 நவம்பர் 2013, 07:21 GMT ] சிறிலங்கா இராணுவத்தைத் தொடர்ந்தும் வடக்கு மாகாணத்தில் நிலைகொள்ள வைத்து, அதன் அரவணைப்பில் குளிர்காயலாம் என்று எண்ணுவது முட்டாள்தனம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி பிரதேசசபையின் உள்ளூராட்சி வாரநிகழ்வு நேற்று இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “மக்கள் தமது மனோநிலையை தேர்தலில் எடுத்தியம்பி இருந்தாலும் அரசாங்கத்துக்கு சார்பானவர்கள் அதை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்தும் தமது மத்திய அரசாங்க அதிகாரங்களை …
-
- 9 replies
- 747 views
-