ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இலங்கை அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து,பின்னர் தகவல்கள் ஏதும் தெரியாதுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உட்பட 5 பேர் தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 2 ஆம் 3 ஆம் திகதிகளில் நடைபெறும் என முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருக்கின்றது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் இவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனுக்களைப் பரிசீலனை செய்த மேல் நீதிமன்ற நீதிபதி,அவர்கள் தொடர்பான சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றிருப்பதனால்,அதுகுறித்து விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த வழக்க…
-
- 0 replies
- 412 views
-
-
-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா '13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவோம்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'எமது மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கம் அனுசரணையாக இயங்க வேண்டுமே தவிர மத்திய அரசாங்கத்திற்கு தோள்கொடுக்க மாகாண சபைகள் முன்வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகாரப்பரவலின் தார்ப்பரியத்தினை மத்திய அரசாங்கம் அறிய முற்படவில்லை என்ற கருத்தையே வெளிப்படுத்தும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். யாழ். ரில்கோ ஹோட்டலில் வியாழக்கிழமை (24) நடைபெற்ற வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ…
-
- 5 replies
- 773 views
-
-
பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் தனிமைப்படுத்தப்படும் என இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் எச்சரித்துள்ளார். இலங்கையில் நடக்கவிருக்கும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என இன்று நடந்த தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்க்கட்சிகளான தி.மு.க. உள்ளிட்ட தமிழக கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு வரவேற்றன. இந்த தீர்மானம் குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறுகையில் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். இது குறித்து பிரதமரிடம் தெரிவிக்கப்படும். அவர் வெளிநாட்டு பயணம் முடிந்து வந்த பிறகு முடிவுகள் எடுக்கப்படும். பிரதமர் இது குறித்து நல்ல முடிவு எடுப்பார் என்றார். இந்த தீர்மானம் குறித்து இலங்கைக்கான இந்திய தூதர் பிரசாத் கரியவாச…
-
- 3 replies
- 546 views
-
-
காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்படும்: இலங்கை தூதர் மிரட்டல் இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டிற்கு இந்தியாவில் இருந்து எந்த பிரதிநிதியும் கலந்துகொள்ளக் கூடாது என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதுபற்றி கருத்து தெரிவித்த இலங்கை தூதர் பிரகாஷ் கரியவாசம், காமன்வெல்த் மாநாட்டை பிரதமர் புறக்கணித்தால் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும் என்று எச்சரித்துள…
-
- 4 replies
- 810 views
-
-
யாழ். குடநாட்டின் தீவகப்பகுதிகளிலிருந்து ஈ.பி.டி.பி.யின் பிரமுகர்கள் பலரும் தமது குடும்பங்களை வெறியேற்ற தொடங்கியுள்ளனர். தமது கோட்டையாக அவர்கள் கருதி வந்த தீவகப்பகுதியினில் கடந்த மாகாண சபைத் தேர்தலினில் ஏற்பட்ட படுதோல்வியால் ஈ.பி.டி.பி தலைமை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்தே தமது குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற ஈ.பி.டி.பி.யின் தலைமைகள் முடிவு செய்துள்ளன. பெரும்பாலான ஈ.பி.டி.பி.யினது தீவக அலுவலகங்கள் வெறிச்சோடிப்போயேயுள்ளன. மக்கள் அவர்களது அலுவலகங்களிற்கு செல்வதும் நின்று போயுள்ளது. ஈ.பி.டி.பி தனது அஸ்தமனத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக ஆதரவாளர்கள் தரப்பினில் கூறப்படுகின்றது. குறிப்பாக, கடந்த காலங்களினில் தமது வாகனங்களை தீவகப்பகுதிகளினிலேயே கூடுதலாக தரித்து வைத்…
-
- 8 replies
- 1.2k views
-
-
தமிழக சட்டசபையில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்ளக் கூடாது என்று கோரி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு பரிசீலிக்கும்.இந்த தீர்மானம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நிச்சயம் கவனத்தில் கொள்வார். கலந்துகொள்வதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் உள்ளது என்று தெரிவித்தார். http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 266 views
-
-
ராணுவ மேலாதிக்கத்தில் துப்பாக்கி முனைகளின் கீழ் நடத்தப்படுவது பாலியல் வல்லுறவேயன்றி பாலியல் தொழில்ல 24 அக்டோபர் 2013 அனந்தி சசிதரன் (எழிலன்) முள்ளிவாய்க்கால் பேரவலத்தினிலிருந்து ஒருவாறு மீண்டெழுந்து கொண்டிருக்கும், வட-கிழக்கு பெண் சமூகத்தினை மீண்டும் மீண்டும் சகதிக்குள் இழுத்து வீழத்த கொழும்பு ஆட்சியாளர்களும், அவர்களது நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்து வரும் சில தரப்புக்களும் முற்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அவ்வகையிலே தற்போது ஒருங்கிணைந்;த பிராந்திய தகவல் வலையமைப்பு (IRN) இனால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையும் அமைந்துள்ளது. தமிழர் தாயக ஊடகங்கள் பெரும்பாலும், இத்தகைய உள்நோக்கம் கொண்ட போலி அறிக்கைகளை புறந்தள்ளி விடுகின்றபோதும் மற்றொரு புறம் சில தரப்புக்கள், புலம்பெயர…
-
- 2 replies
- 744 views
-
-
மனித உரிமைகள் குறித்த பதிலில்லாக் கேள்விகள்?' - காணொளி ஆய்வு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 அக்டோபர், 2013 - 15:10 ஜிஎம்டி http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/10/lankajaffna_131024_lankapeace_16x9_hi.mp4 இலங்கையின் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு ஒத்துழைப்பதற்கு முதற்தடவையாக இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. உலகில் நீண்ட காலம் நடந்த உள்நாட்டுப் போர் ஒன்று முடிந்து 4 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், இலங்கையில் மனித உரிமைகள் என்பது இன்னமும் மிகவும் மோசமான நிலையிலேயே இருக்கின்றன. இந்த மனித உரிமைகள் நிலவரங்களைக் காண்பித்தே சில காமன்வெல்த் நாடுகள் கொழும்பில் நடக்கவிருக்கும், காமன்வெல்த…
-
- 1 reply
- 367 views
-
-
பொலிஸ் அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளர் தனது கையில் வைத்துக்கொண்டு வட மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பொறுப்பாகும் எனக் கூறுவது நகைப்பிற்குரிய விடயமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் சட்டம், ஒழுங்கை முதலமைச்சர்தான் நிலைநாட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு முதலமைச்சருக்குத் தான் உண்டு என பாதுகாப்பு செயலாளர் கருத்து தெரிவித்துள்ள நிலையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ் அதிகாரங்களை எழுத்து மூலம் முதலமைச்சருக்கு வழங்கி அவரது கடமையை செய்ய வழிவிட வேண்டும் அத்துடன் மாவீரர்களின் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்கியது சர்வதேச சட்டங்களை மீறிய செயலாகும். சர்வதேச சட…
-
- 1 reply
- 572 views
-
-
"வடக்கில் சட்டம், ஒழுங்கை முதலமைச்சர்தான் நிலைநாட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு முதலமைச்சருக்குத் தான் உண்டு. விழிப்புக்குழுக்கள், சிவில் பாதுகாப்புக்குழுக்களை அமைத்துப் பொலிஸாருக்கு உதவுவதன் மூலம் வடக்கில் இடம்பெறும் களவு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கமுடியும்'' இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக் நேற்று நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் பழைய விடயங்களையே கூறி வீண் குழப்பங்களை ஏற்படுத்தாது வடக்கில் தற்பொழுது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும். அர்த்தமற்ற தேவையற்ற பேச்சுகளை சம்பந்தன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.'' என்றும் அவர் கூறினார். பாதுகா…
-
- 0 replies
- 331 views
-
-
புதிய கட்டடத்தில் வட மாகாண சபையின் கன்னி அமர்வு நாளை வடக்கு மாகாண சபையின் கன்னி அமர்வு நாளை காலை 9.30 மணிக்கு கைதடியிலுள்ள வடமாகாண சபையின் புதிய கட்டடத்தில் இடம்பெறவுள்ளது. சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இந்த முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. இதனை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதன் தொடர்ச்சியாக வடமாகாண சபை உறுப்பினர்களுடைய சத்தியப்பிரமாண உடன்படிக்கையை உறுதிப்படுத்துதல், உறுப்பினர்களை வழிகாட்டி இருக்கைகளுக்கு அழைத்துச் செல்லுதல், செயலாளர் சபையில் உட்பிரவேசித்தல் மற்றும் செயலாளரின் அறிவித்தல்கள் வெளியிடுதல் போன்றன இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து செயலாளர் ஆளுநருடைய ப…
-
- 1 reply
- 372 views
-
-
கனடா உறங்கா விழிகள் அமைப்பின் நிதி உதவியுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டுப் பிரிவினரால் கிளிநொச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2013.10.13) கலை 10.30 மணியளவில் இவ்வருட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் மாவட்ட ரீதியில் முன்னிலை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு த.தே.ம.மு வின் கல்விமேம்பாட்டுப் பிரிவுப் பொறுப்பாளரும் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளருமான திரு.செல்வராசா இரவீந்திரன் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் க.கந்தசாமி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத்தலைவர் திரு.மரியாம்பிள்ளை இக்னேசியஸ் அவர்…
-
- 6 replies
- 648 views
-
-
காணொளி : இலங்கை தொடர்பாக பீ.பீ.சி வெளியிட்ட புதிய காணொளி காணொளி... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9713:2013-10-24-13-28-08&catid=1:latest-news&Itemid=18
-
- 0 replies
- 459 views
-
-
"ஈழம்பற்றிப் பேசுவது பயனளிக்காது வடக்கின் முழுப் பொறுப்பு விக்கியிடமே" 24 அக்டோபர் 2013 "தேவையற்ற பேச்சை சம்பந்தன் நிறுத்த வேண்டும்" - கோத்தாபய 'வடக்கில் சட்டம், ஒழுங்கை முதலமைச்சர்தான் நிலைநாட்ட வேண்டும். அதற்கான பொறுப்பு முதலமைச்சருக்குத் தான் உண்டு. விழிப்புக்குழுக்கள், சிவில் பாதுகாப்புக் குழுக்களை அமைத்துப் பொலிஸாருக்கு உதவுவதன் மூலம் வடக்கில் இடம்பெறும் களவு மற்றும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கமுடியும்' என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச நேற்று (23.10.13) நடைபெற்ற தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் பழைய விடயங்களையே கூறி வீண் குழப்பங்களை ஏற்படுத்தாது வடக்கில் தற்பொழுது கிடைத்துள்ள சந்தர்…
-
- 1 reply
- 723 views
-
-
மனித உரிமைகள் குறித்து இலங்கை கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவியும், நோபள் சமாதான விருது வென்றவருமான ஆங் சான் சூகி கோரியுள்ளார். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனை நேற்று (23) லண்டனில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்கும்போது மனித உரிமை குறித்த இலங்கையின் அணுகுமுறை குறித்து பிரித்தானியா ஆராய்ந்த பார்க்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். வெறுமனே அரசாங்கத் தரப்பை மட்டும் சந்திக்காது, அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டறிவது அவசியமானது எனவும் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன், ஆன் சான் சூ கீயின் கருத்து மிகவும் சரியானதுத் தெரிவித்துள்ளார். கொழும்பு அமர்வுக…
-
- 2 replies
- 551 views
-
-
மானிப்பாய், போறான்தோட்டம் பகுதியில் மக்கள் சந்திப்பு- 24 அக்டோபர் 2013 யாழ்.மானிப்பாய் போறான்தோட்டம் வைரவர்கோவில் முன்றலில் நேற்றுமாலை பொதுமக்கள் சந்திப்பு நிகழ்வொன்று இடம்பெற்றது. மருதடி விநாயகர் சனசமூகநிலைய தலைவர் ஆ.வொஷிங்டன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்தொகையான பெண்களும், ஆண்களுமாக கலந்து கொண்டிருந்தார்கள். இந்நிகழ்வில் வலி தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் கௌரிகாந்தன், வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கினர். இதன்போது மக்கள் தங்களுடைய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் சம்பந்தமாக எடுத்துக் கூறினார்கள். தங்களது அதிகாரத்துக்கு உட்பட்ட அளவிற்குள் செய்யக்கூடிய விடயங…
-
- 0 replies
- 281 views
-
-
வன்னிப் பெருநிலப்பரப்பின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதைத் தடுத்து நிறத்த கோருகிறார் சிவசக்தி ஆனந்தன் 24 அக்டோபர் 2013 வன்னிப் பகுதியில் பெருமளவிலான காட்டுமரங்கள் அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினரின் துணையுடன் கடத்;தப்படுவதாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, வன்னிப் பெருநிலப்பரப்பின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பெறுமதி வாய்ந்த பலவருடங்கள் பழமையான பாலை, முதிரை போன்ற காட்டு மரங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றன. அரசாங்க மற்றும் படைத்தரப்பின் செல்வாக்கினைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில தனிநபர்கள் தொடர்ச்சியாக பெறுமதி வாய்ந்த இம் மரங்களை வெட்டி வ…
-
- 0 replies
- 330 views
-
-
'யாழ் நாவற்குழி சிங்களக் குடியேற்றத்தை சட்ட ரீதியாக அணுகுவேன் கால அவகாசம் தேவை' விக்னேஸ்வரன் 24 அக்டோபர் 2013 நாவற்குழியில், அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள சிங்களக் குடியேற்றம் தொடர்பிலும் அங்குள்ள தமிழ் மக்களுக்குக் காணிகள் இதுவரை பகிர்ந்தளிக்கப் படாமை குறித்தும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளப் போவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இது சட்ட ரீதியான விடயம் என்பதால் அதனைத் தாம் சட்ட ரீதியாகவே அணுகவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்;. நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியேறியுள்ளன. இவர்களுக்கான காணிகள் அண்மையில் அளவீடு செய்யப்பட்டுப் பங்கிடப்பட்டுள்ளன. ஆயி…
-
- 0 replies
- 327 views
-
-
மனித உரிமை மீறல் கேள்விகளுக்கு இன்னமும் பதிலளிக்கப்படவில்லை – HRW 24 அக்டோபர் 2013 மனித உரிமை மீறல் கேள்விகளுக்கு இன்னமும் இலங்கை பதிலளிக்கவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. பாலியல் குற்றச் செயல்கள் அதிகளவில் இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. குறிப்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் பெண்கள் மீது அதிகளவில் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாகவும், பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. குற்றச் செயல்கள் தொடர்பில் கருத்து வெளியிட இலங்கை மக்கள் அஞ்சுவதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் அடக்குமுறைகள் காரணமாக இவ்வாறு மக்கள் கருத்து வெளியிட அஞ்சுவதாக குறித்த சர்வதேச ஊடகம் தக…
-
- 0 replies
- 390 views
-
-
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் யுத்தத்தால் பாதிக் கப்பட்ட கிழக்கில் படுவான்கரையயும் - எழுவான்கரை யையும் இணைக்கும் மண்முனை பாலத்தின் நிர்மாண பணிகளை மக்கள் தொடர்பாடல் மற்றும் மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா நேரில் சென்று பார்வையி ட்டார். இதன்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்(கருணா) மற்றும் அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். வேலைத்திட்டம் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. ஜப்பான் அரசாங்கத்தின் 1473 மில்லியன் ரூபா நன்கொடை மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 397 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு இப்பாலம் பாலம் 2014 மே மாதமளவில் இந்தப் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளி…
-
- 51 replies
- 3.7k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஊடகம் ஒன்றின் தகவலின் படி, தற்போது தமிழ் நாட்டில் உள்ள அவர், ஜெயலலிதாவை சந்திப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக, சம்பந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்ததாக தெரிகிறது. அவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு இந்த வாரம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் நேற்று முன்தினம் பா.ஜ.க வின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://akkinikkunchu.com/new/
-
- 2 replies
- 818 views
-
-
உடுப்பிட்டியில் இன்று காலை இரண்டு பாடசாலை மாணவர்கள் வெள்ளை நிறவாகனத்தில் கடத்தப்பட்டனர் அவர்களில் ஒருவர் கண், வாய், கைகள் என்பன கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். மற்றையவரின் கதி என்னெவென்று தெரியவில்லை. இதனால் அந்தப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று (22.10.2013) காலை உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரியில் பயிலும் 2 மாணவர்கள் உடுப்பிட்டி யூனியனுக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது ஒரு வெள்ளை நிற வாகனத்தில் வந்தவர்கள் 2 மாணவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். “ அவர்களின் கையில் 2 போட்டோக்கள் இருந்தன. அது நான் இல்லை என்றதும் என்னை, மற்றவரின் ‘ரையால்’ வாயைக் கட்டினர். பிறகு கண்ணையும் கையையும் கட்டி எள்ளங்குளம் மயானத்துக்கு அருகே உள்ள பற்றைக்குள் போட்டுவிட்டு சென்…
-
- 4 replies
- 1.3k views
-
-
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=27997
-
- 41 replies
- 7k views
- 1 follower
-
-
தமிழீழ தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சுரேஷ்கண்ணன் அவர்களால் பின்லாந்தில் பின்லாந்து அரசு ஊடாக முதல்தரமான (first class) தபால்த்தலை வெளியிட்டு பெருமையும் சிறப்பையும் சேர்த்துள்ளார். இவர் கடந்த வருடமே பல தடவைகள் இதே போன்ற தபால்த் தலை வெளியிட பல தரப்பட்ட முயற்சிகள் எடுத்த போதிலும் அந்த நாடு நிராகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் வெளியிட்டேதீர வேண்டும் என்ற வெறியுடன் பல கடினமான முயற்சிகளோடு பின்லாந்து அரசினை நாடி இது பற்றிப் பேசி சம்மதிக்க வைத்து தமிழர்களின் விடிவிற்காகப் போராடிய வீரத்தலைவன் என்ற அடிப்படையில் தமிழீழ தேசியத் தலைவர் அவர் குடும்பத்துடன் இருக்கின்ற படத்தினை தபால் தலை ஊடாக வெளியிட்டு தமிழர்களின் வீரப் போராட்…
-
- 7 replies
- 921 views
-
-
இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்த அருட்தந்தை பிரான்சிஸ் வழக்கு ஒத்திவைப்பு 23 அக்டோபர் 2013 இறுதிப்போரின் முடிவில் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அரசாங்கத்தின் அழைப்பையேற்று இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளுடன், இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் உட்பட்டவர்கள் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 7 ஆட்கொணர்வு மனு வழக்குகள் தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதிக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி ஒத்திவைத்துள்ளார். மேலும் இரண்டு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா நீதவான் நீதிமன்றத்திற்கு இந்த நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது. …
-
- 1 reply
- 594 views
-