ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீண்டும் போராட்டம் நடாத்தத் தீர்மானித்துள்ளனர். இவர்களின் சம்பள அடிப்படைக்கான முரண்பாடுகளுக்கு அரசாங்கம் இதுவரையில் தீர்வு வழங்கவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மீளவும் தமது தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமது கோரிக்கைகளில் ஒரு சிலவற்றை மட்டுமே அரசாங்கம் இதுவரையில் நிறைவேற்றியுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார். அத்துடன் தமது கோரிக்கைகள் முழுவதையும் நிறைவேற்றி தருவதாக அரசாங்கம் எழுத்து மூலம் வாக்குறுதி அளித்துள்ளதாகத் தெரிவித்தார். தமது சம்பளத்தை 25 வீதத்தினால் உயர்த்துவதாக வாக்குறு…
-
- 0 replies
- 244 views
-
-
யாழ். நகரப்பகுதியில் அண்மைக்காலமாக மிதிவண்டி திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.நகரப் பகுதிக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் தமது துவிச்சக்கர வண்டிகளை வீதியோரமாக நிறுத்தி பூட்டிவிட்டுச்செல்கின்றனர். இதனை மறைவாக இருந்து அவதானிக்கும் திருடர்கள் தமது கைவரிசையை காட்டுகின்றனர். மிதிவண்டியினை பறிகொடுத்தவர்கள் காவல்துறையில் முறையிட்டும் இதுவரையில் காவல்துறையினரால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். இரண்டுமுறை மிதிவண்டியினை திருடர்கள் திருடிசென்றபோதும் இனி காவல்துறையில் முறையிட்டு பலனில்லை என்ற நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். http://www.sankathi24…
-
- 0 replies
- 305 views
-
-
சிறீலங்காவில் சிறுவர்களில் பெருமளவானோர் 16 வயது முடிவதற்கு முன்னரே திடீர் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர். இந்தத் தகவலை குடும்ப சுகாதார செயற்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன தெரிவித்தார். பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வருடாந்த தரவுகளின் பகுப்பாய்வுகளுக்கு அமைய திடீர் விபத்துக்களால் ஆண்டொன்றில் 16 200 பேர் வரையிலான சிறுவர்கள் உயிரிழக்கின்றனர் என்று அவர் கூறினார். மூச்சுத்திணறல் வீதி விபத்துக்கள் நீரில் மூழ்குதல் நஞ்சு உடலில் சுவறுதல் பாம்புக் கடிகள் தீக்காயங்கள் மற்றும் நாய்க்கடிகள் ஆகிய விபத்துக்களால் இவ்வாறு சிறுவர்கள் உயிரிழக்கின்றனர் என்று அவர் கூறினார். விபத்துக்களால் ஆண்டொன்றில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஏறக்குற…
-
- 0 replies
- 299 views
-
-
மன்னார் மாவட்டத்தில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பப்பெண்களுக்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையினால் சுய தொழில் உபகரணங்கள் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 2003ம் ஆண்டு தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் சேவை புரியும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தனது சேவையை மக்கள் மத்தியில் விரிவு படுத்தி வருகின்றது. இதன் ஒரு கட்டமாக பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்ப பெண்களுக்கு 2வது கட்டமாக சுய தொழில் உபகரணம் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மன்னார் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதாம விருந்தினராக அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி அ.டியூக்.குரூஸ் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட…
-
- 0 replies
- 384 views
-
-
வழமைபோல் கனடாவில் இம்முறையும் ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகள் நடைபெறும் என கனடா தமிழர் நினைவெழுச்சி அகவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையின் முழுவடிவம் கீழே தரப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/34596/64/2013/d,fullart.aspx
-
- 0 replies
- 448 views
-
-
இலங்கை அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் சுவிஸ் அதிகாரிகள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர் அண்மையில் நாடு கடத்தப்பட்டிருந்தார். இவர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த நிலையில் நாடு கடத்தப்பட்டிருந்தனர். மீண்டு;ம் கடந்த வாரம் குறித்த குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தை சென்றடைந்திருந்தனர். இவர்களுக்கு புகலிடம் வழங்குவதுற்கு சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர், குறித்த குடும்பத்திற்கு புகலிடம் வழங்குவது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுகின்றனவா என்பது குறித்து சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இலங்கை…
-
- 0 replies
- 514 views
-
-
விசேட அதிரடிப்படையினருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக இவ்வாறு விசேட அதிரடிப்படையினருக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டு தீவிரவாத அமைப்புக்கள் உள்ளுர் குழுக்களுடன் இணைந்து செயற்படக் கூடிய சாத்தியம காணப்படுவதாக சட்டம் ஒழங்கு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவாரச்சி தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகள் நிலவிய உள்நாட்டு பயங்கரவாதத்தை விடவும், வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன் கூட்டாக இணைந்து மேற்கொள்ளப்படக் கூடிய நாசவேலைகள் ஆபத்தானவை என அவா சுட்டிக்காட்டியுள்ளார். களுத்துறை விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் நடைபெற்ற நிகழ்வு ஒன…
-
- 0 replies
- 321 views
-
-
தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளா குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செயற்ட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை தூண்டும் வகையில் சில கடும்போக்குவாத சக்திகள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும்போக்குவாதிகளும், புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களும் நல்லிணக்க முனைப்…
-
- 0 replies
- 308 views
-
-
மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் அத்துமீறி காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்களை அப்பிரதேச மக்களும் காத்தான்குடி பொலிசாரும் சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். கோடாரி, மண்வெட்டி, போன்றவற்றுடன் கர்பலா பள்ளிவாசலில் இருந்து சென்ற சுமார் 100 பேருக்கும் மேற்பட்டவர்கள் ஆரையம்பதி எல்லைக்குள் அமைந்திருக்கும் மயானத்துக்குள் தமக்கும் மயானம் வேண்டும் எனக்கோரி தனிப்பட்ட ஒருவரின் காணியில் அத்துமீறிப் பிரவேசித்து காணி சுவீகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்றயதினம் (18.10.13) தமது காணி சுவீகரிக்கப்படுவதை அறிந்த கணிக்குச் சொந்தங்காரரான தியாகலிங்கத்தினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவம் இடம் பெற்ற இடத்திற்கு காத்தான்குடி பொலிஸாருடன் ஆரையம்பதி பிரதேச சிவில் நிர்வாக அதிகாரிகள்;, ஆல…
-
- 0 replies
- 478 views
-
-
ஆவணப்படம் மட்டக்களப்பில் எஸ்.எம்.ஜி.ரக துப்பாக்கி 1, கிளைமோர் குண்டு 1, ரீ.56 ரக துப்பாக்கி -10 என்பவற்றை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறு பொலிஸ் பிரிவில் உண்ணிச்சை குளத்தின் காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இவற்றை இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை (18.10.13) மீட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகலையடுத்தே இவை மீட்கப்பட்டுள்ளதாகவும் இவை விடுதலைப் புலிகள் மறைத்து வைத்திருக்கலாம் என்றும்; பொலிசார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கிரான் பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் இருந்து கிளேமோர் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. கிரான் வைரவன் கோயில் வீதியிலுள்ள வீட்டு வளவிலிருந்தே இந்த கிளேமோர்…
-
- 0 replies
- 350 views
-
-
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை முன்னிட்டு கொழும்பு வீதிகளில் உள்ள பிச்சைக்காரர்கள் அனைவரையும் வெளியேற்றுவதற்கு பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். பிச்சைக்காரர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் அவர்கள் மீண்டும் அத்தொழிலுக்கே வந்து விடுகின்றனர். இதனை நிறுத்த நீண்ட காலத் திட்டமொன்றை அமுல்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மேலும் தெரிவிக்கையில், முன்னரெல்லாம் மத ஸ்தலங்களில் பிச்சையெடுப்பார்கள்.இதனால் பொதுமக்களுக்கு பெரிதாக அசௌகரியங்கள் காணப்படவில்லை. ஆனால், இன்று அதனை மீறி நடுவீதியில் இறங்கி வாகனங்களின் கதவுகளைத் தட்டி பிச்சை கேட்கின்றனர். இதனால…
-
- 0 replies
- 396 views
-
-
வடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது - க.வி.விக்னேஸ்வரன் : வடக்கும், கிழக்கும் இணைந்து செயற்பட விரும்பினால் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. கெஹலிய என்ன சொன்னாலும் இரு மாகாண சபைகளும் இணைய விரும்பினால் இணைத்துத்தான் ஆக வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வலி.மேற்குப் பிரதேச சபையின் கட்டடத் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். முழு நாட்டையும் நாடாளுமன்றம் நிர்வகிக்கும் போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையானோர், ஒரு குறிப்பிட்ட இனத்தையும் மதத்தையும் மொழியையும் கொண்டவர்களாக இருந்து மற்றைய இனங்களை, மதங்களை, ம…
-
- 2 replies
- 610 views
-
-
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை புறக்கணிக்கும் எண்ணங்கள் இல்லை. நிச்சயமாக கலந்து கொண்டே எதிர்ப்பை வெளியிடுவோம் ஜோன் கீ குறிப்பிட்டுள்ளதாக ஐ.ரீவி(ITV) நேற்று வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. பொதுநலவாய மாநாட்டினை நியூசிலாந்து புறக்கணித்தாலும், அதனால் முன்னேற்றங்கள் ஏதும் ஏற்படப்போவதில்லை. எனவே, கலந்து கொண்டு எதிர்ப்பை வெளியிடுவதே சிறந்ததாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் உறுப…
-
- 0 replies
- 386 views
-
-
TNA நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைக்க முயற்சிக்கின்றது – குமரன் பத்மநாதன் தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டின் நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளா குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செயற்ட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் துயிலும் இல்லங்களை புனரமைக்க வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை தூண்டும் வகையில் சில கடும்போக்குவாத சக்திகள் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தம…
-
- 0 replies
- 874 views
-
-
ட்ரோஜான் குதிரையும், தமிழர்களும் http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=25222%3A2013-10-18-16-31-50&catid=1%3Aarticles&Itemid=264
-
- 2 replies
- 536 views
-
-
அவுஸ்திரேலியாவின் பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர் கொழும்பு நகரில் நிறுவவுள்ள பெரிய சூதாட்ட நிறுவனம் தொடர்பாக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமையவுள்ள இந்த திட்டத்தில் கேட்போர் கூடம் உட்பட பல வசதிகளுடன் கூடிய 400 அறைகள் கொண்ட நட்சத்திர தங்குமிடம் சூதாட்ட வசதிகள் ஆடம்பர உணவகங்கள் மற்றும் தொடர்பாடல் வசதிகள் கொண்டதாக அமையவுள்ளது. ஒஸ்ரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கர் இந்த சூதாட்ட நிறுவனத்திற்கு 400 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை முதலிடவுள்ளதாகவும் இதனூடாக நாட்டின் சுற்றுலாத்துறை மேன்;மையடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளிட்டுள்ளார். இந்த திட்டத்தினூடாக 2500 தொழில்வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சூதாட்ட நிறுவனத்திற…
-
- 1 reply
- 785 views
-
-
தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின் சனநாயக போராட்ட வடிவமாக திகழும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அரசவைக்கான மக்கள் பிரதிநிதிகளின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமைத் தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்கான தேர்தலுக்காக வேட்பாளர் மனுக்கள் கோரப்பட்டது யாவரும் அறிந்ததே. வேட்புமனுக்கள் உலகளாவிய முறையில், அந்தந்த நாட்டுத் தேர்தல் ஆணையங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் பலத்த போட்டி எதிர்பார்க்கப்பட்டுத், தேர்தல் ஆணையம் அதனை எதிர் நோக்கியிருந்த நிலையில், இந…
-
- 8 replies
- 1.1k views
-
-
காணொளி : பிரித்தானிய ஐ.டீ.வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இலங்கை சித்திரவதைகள் http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9633:2013-10-18-17-14-46&catid=1:latest-news&Itemid=18
-
- 3 replies
- 791 views
-
-
சிறிலங்கா அரசைச் சேர்ந்த எவர் வரினும் முழுப் பலத்துடன் அதனை எதிர்ப்போம் – இன அழிப்பின் சூத்திரதாரி ஜி எல் பீரிஸின் லண்டன் வருகையை எதிர்க்கத் தயாராகும் பிரித்தானியத் தமிழர்கள் ((( தயவுசெய்து விரைவாக உங்கள் சமூக வலைத்தளம் மற்றும் இணையதளதில் பிரசுரித்து உதவுமாறு வேண்டிகின்றோம் ))) சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் பிரித்தானியாவுக்கு வருகின்றார். வரும் 21ம் நாள் திங்கள் பிரித்தானியாவில் நடைபெற உள்ள சந்திப்பொன்றில் இவர் கலந்து கொள்ள உள்ளார். பொதுநலவாய மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் மிக வேகமாக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையிலேயே ஜி எல் பீரிஸின் பிரித்தானியப் பயணமும் அமைவது குறிப்பிடத்தக்கது. போர்க்குற்றம்…
-
- 2 replies
- 617 views
-
-
ஆஸ்திரேலியாவின் பிரபல க்ரவுன் கஸினோ நிறுவனம் இலங்கையில் ஆடம்பர கஸினோ நட்சத்திர விடுதியை திறக்கும் தனது திட்டத்தை முதற்தடவையாக வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 40 கோடி டாலர்கள் செலவில் இலங்கையில் ஐந்து நட்சத்திர கஸினோ சூதாட்ட விடுதியை திறக்கும் தனது திட்டம் பற்றி க்ரவுன் கஸினோ நிறுவனத்தின் உரிமையாளர் ஜேம்ஸ் பாக்கர் ஆஸ்திரேலிய பங்கு பரிவர்த்தனைச் சந்தைக்கு அறிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் பட்சத்தில் தனது வேலைத்திட்டத்தை தொடங்கவுள்ளதாக ஜேம்ஸ் பாக்கர் கூறியுள்ளார். தலைநகர் கொழும்பின் மத்தியில் அமையவுள்ள இந்த பெரும் செயற்திட்டத்திற்கான முதலீட்டை ஈர்க்கும் வகையில் இலங்கை அரசாங்கமும் பல வகைகளிலும் ஜேம்ஸ்…
-
- 0 replies
- 326 views
-
-
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், அது தொடர்பான அறிவிப்பை உறுதியோடு அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் இலங்கைக்கு அழுத்தம் தரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தின் மூலமே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ரயில் மற்றும் வீதி மறியல், முற்றுகை, அரச அலுவலங்களுக்கு பூட்டு, உண்ணாவிரதம் என மாணவர்களும், அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தொடர்ச்சியான பொராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து …
-
- 1 reply
- 340 views
-
-
மன்னார் – விடத்தல் தீவு பகுதியில்வைத்து குடும்ப பெண்ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வசீந்திரன் மரியாசாந்தா என்ற குறித்த 31 வயது பெண் ஒன்றரை வயது குழந்தையுடன் நேற்று விடத்தல் தீவு பகுதியில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்.2009 ஆம் அண்டின் டிபின்னர் வவுனியா யாழப்பாணம் கிளிநொச்சி மன்னார் போன்றபகுதிகளில் உள்ள தங்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கி இருந்துள்ளார். இந்தகாலப்பகுதியில் அவர் தங்கி இருந்து வீடுகளில் இருந்து பெறுமதிமிக்க தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றதாக கிடைக்கப் பெற்றபல்வேறு முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணையின் போது அவர் கொள்ளையிட்ட நகைகளை அரச வங்கிகளில் அடகு வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. …
-
- 0 replies
- 471 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நிரல் http://www.sankathi24.com/news/34572/64//d,fullart.aspx
-
- 0 replies
- 545 views
-
-
சிறிதரன் கொழும்பிற்கு வர அனுமதிக்கக் கூடாது – ராவனா பலய 18 அக்டோபர் 2013 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொழும்பிற்கு வர அனுமதிக்கக் கூடாது என ராவனா பலய அமைப்பு கோரியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேற வேண்டுமென சிறிதரன் கோரியுள்ளதாகவும், அவ்வாறு கோரினால் அவர் கொழும்பு வர அனுமதிக்கக் கூடாது எனவும் ரவனா பலய அமைப்பின் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றி, சிறிதரன் கொழும்பிற்கு வர முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த முயற்சிக்கு தமது அமைப்பு ஒருபோதும் அனுமதியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க …
-
- 1 reply
- 627 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நேற்று (27-04-2013) நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவின…
-
- 19 replies
- 1.3k views
-