Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஓமந்தை முதல் பலாலி வரை­யான ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்றர் வரை­யான பாதையை அமைக்க 270 மில்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் மாத்­தறை முதல் பெலி­யத்தை வரை­யான ரயில் பாதையில் ஒரு கிலோ மீற்­றரை அமைப்­ப­தற்கு 1,412 மில்லின் ரூபா செல­வி­டப்­ப­டு­கின்­றது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்று ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரிவித்தார். ஒரே காலப்­ப­கு­தியில் ஒரு கிலோ மீற்றர் ரயில் பாதைக்­காக செல­வி­டப்­படும் நிதியில் இந்­த­ளவு பெரிய வித்­தி­யாசம் காணப்­பட முடி­யுமா? என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் கேந்­திர நிலை­யங்­களை சீனா­வுக்கு அடகு வைக்கும் செயற்­பாட்டில் அர­சாங்கம் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றது. குறிப…

  2. போலி ஆவணங்களை தயாரித்து அதன்மூலம் இலங்கைவர முயன்ற நான்கு இலங்கை பிரஜைகள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையை சேர்ந்த பாக்கிய நாதன் (33), சசிதரன் (26), மரியம் சர்மிளா, மற்றும் ஜீவன்தாரா (19) ஆகிய நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் தங்கியிருந்த இவர்கள் மீண்டும் இலங்கை செல்ல மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களின் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததை விட அதிக நாட்கள் சென்னையில் தங்கியிருந்ததும், அதற்காக போலி சான்றிதழ் தயாரித்து இருந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் நால்வர…

  3. சிறுவர்களுக்குத் தேவை சுதந்திர உலகம் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக பார்த்தீபன் இன்று உலக சிறுவர்கள் மற்றும் முதியோர் தினமாகும். கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் நடந்த போரின் காரணமாக தமிழ் பேசும் சிறுவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். போர் முடிந்தபோதும் அதன் விளைவுகள் முடியமையினால் எதிர்காலச் சந்ததியினரான சிறுவர்கள்மீது அவை பெரும் பாரச் சுமைகளாக இருக்கின்றன. கொல்லப்பட்ட சிறுவர்கள் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் கொல்லப்பட்ட கதைகள் இன்னமும் தாய்மாரிடம் கொடியதொரு நிகழ்வுகளாக, மறக்க முடியாதபடி நெஞ்சுக்குள் கிடக்கின்றன. சுகி மணியங்குளத்தில் வசிப்பவர். மணி அண்ணாவின் மகள் சுகியின் பெண் குழந…

  4. Started by Iraivan,

    https://www.youtube.com/watch?v=WKPXiaoubj0

    • 0 replies
    • 396 views
  5. வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லத் தயாராக இருப்பதாக, அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தனது பெயரை வெளியிட விரும்பாத சிறிலங்கா அதிபரின் உதவியாளர் ஒருவர், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தால், வடக்கு மாகாண முதல்வருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனினும், அரசியலமைப்புச்சட்டத்தின் படி, உறுப்பினர்கள், ஆளுனரின் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாக…

  6. அனந்தியை ஒதுக்குகிறதா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? [ திங்கட்கிழமை, 30 செப்ரெம்பர் 2013, 04:42 GMT ] [ கார்வண்ணன் ] வடக்கு மாகாணசபை, அமைச்சரவையில் அனந்தி சசிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக, வெளியான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், “அனந்தி ஒதுக்கப்படுவதான இந்தக் குற்றச்சாட்டு தவறானது. அனந்தி மிகவும் இளையவர். வடக்கு மாகாணசபையில் எமக்கு இளையவர்கள் பலரும், அனுபவம் வாய்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற, குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் மிக்க சிலரும் இருக்கின்றனர். முதலாவதாக, அனுபவம் உள்ளவர்களை கட்சி…

    • 28 replies
    • 2.3k views
  7. மாகாண சபைக் கட்டடம் 12 ஆம் திகதி கையளிப்பு; சம்மதித்தார் வடக்கு ஆளுநர் வடக்கு மாகாண சபைக் கட்டடத்தை எதிர்வரும் 12 ஆம் திகதி தம்மிடம் கையளிப்பதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி சம்மதித்துள்ளார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடக்கு ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறிக்கும் மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுக் காலை வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்திப்புத் தொடர்பாக "உதயனு'க்குத் தெரிவித்ததாவது: வடக்கு மாகாண சபையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடினோம். இத…

  8. வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமென TNA கோரிக்கை 01 அக்டோபர் 2013 வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படைவீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதனையே தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்புவதாக கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகளவில் இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளமை சிவில் நிர்வாக நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இராணுவத்தினர் படை முகாம்களுக்கு வரையறுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றியின் பின்னர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்…

  9. இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து கனடா கவலை 01 அக்டோபர் 2013 இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து கனடா கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் 68ம் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் இதனைத் தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதுடன், முஸ்லிம் அரசியல்வாதி அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் போதியளவு முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் உ…

  10. மெல்ல மெல்ல விரிவாக்கப்படும் கிளிநொச்சி விகாரை: குளோபல் தமிழ் செய்தியாளர் 01 அக்டோபர் 2013 கிளிநொச்சி நகரத்தில் உள்ள பௌத்த விகாரை மெல்ல மெல்ல விரிவாக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சியை இலங்கை அரச படைகள் கைப்பற்றியவுடன் இங்கு ஒரு விகாரையை இராணுவத்தினர் அமைத்திருந்தனர். தற்பொழுது அந்த விகாரையை மேலும் விரிவாக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விகாரை கிளிநொச்சி நகரத்தின் பிரதான விகாரையாக விஸ்தரிக்கப்பட்டு வருகிறது. குறித்த இடத்தில் 1996இல் இராணுவத்தினர் கைப்பற்றிய பொழுது ஒரு இந்துக்கடவுள் சிலைiயை அகற்றிவிட்டு புத்தர்சிலை ஒன்றை வைத்திருந்தனர். பின்னர் அந்த இடத்தில் புலிகளின் வெண்புறா நிறுவனம் இயங்கியது. மீண்டும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்ட பின்னர் இந்தப் பாரிய…

  11. EPDPயை ஓரம்கட்ட அங்கயன்தரப்பு முயற்சி- மாநகர தொழிலாளர்களை வீட்டுக்கனுப்ப யோகேஸ்வரி நிர்வாகம் முடிவு 01 அக்டோபர் 2013 சாகுவரை உண்ணாவிரதத்தில் தொழிலாளர்கள் - மாகாணசபைத் தேர்தல் தோல்யின் எதிரொலிகள் ஆரம்பம் வடக்கில் பங்காளிக்கட்சியான ஈபிடிபியினை ஒதுக்கி வைக்கும் நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கமாக தற்போதும் சுதந்திரக்கட்சி பிரமுகர்கள் போராட்டங்களை முடுக்கி விட்டுவருகின்றனர். ஏற்கனவே வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் யாரென்பதில் இழுபறிகள் தொடர்கின்றது. அதன் எதிரொலியாக ஈபிடிபி மீது சேறு பூசுதலை அங்கயன் தூண்டிவருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இதனிடையே ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கும் யாழ்.மாநகரசபை நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் சாகும் வரையான …

  12. முன்னாள் நீதியரசரும், வட மாகாண சபைக்கான தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியவருமான சீ.வி. விக்னேஸ்வரன் வட மாகாண முதலமைச்சருக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இந்தக் கடிதத்தை வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி வழங்கியுள்ளார்.

    • 0 replies
    • 273 views
  13. அர­சாங்­கத்தை கவிழ்த்து, தனி தமி­ழீ­ழத்தை உரு­வாக்­கு­வ­தற்­கா­கவே விக்கி­னேஸ்­வரனின் திட்டமாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இதற்காகவே வட­மா­காண சபையின் முத­ல­மைச்­ச­ராக விக்னேஸ்வரன், ஜனா­தி­ப­தியின் முன்­னி­லையில் சத்­தியப் பிர­மாணம் செய்­ய­வுள்ளார். இதனை அர­சாங்கம் உட­ன­டி­யாக நிரா­க­ரிக்­க­வேண்டும் என்று எச்­ச­ரிக்கை விடுக்கும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்கம் கூட்­ட­மைப்பின் இம் முயற்சி நிறை­வே­றினால் ஆளு­நரின் அதி­கா­ரங்களை சவா­லுக்கு உட்­ப­டுத்தும் நிலை உரு­வாகும் என்றும் தெரிவித்துள்ளது. தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் பொதுச் செய­லாளர் டாக்டர் வசந்த பண்­டார இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமையானது தமிழீழத்தை உறு…

  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வட மாகாணத்திற்கு முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இன்று நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி இந்த நியமனக் கடிதத்தை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. வடக்கு மாகாண முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையிலா, அல்லது ஆளுநர் முன்னிலையிலா சத்தியப்பிரமாணம் செய்துகொள்வது குறித்து தமிழ்க் கூட்டமைப்பு இன்னமும் முடிவை அறிவிக்கவில்லை. எனினும், ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இன்று முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை முதலமைச்சருக்கான நியமனக் கடிதம் ஆளுநரினால் வழங்கப்…

    • 0 replies
    • 434 views
  15. இலங்கைக்கு வழங்கப்பட உத்தேசித்துள்ள போர்க் கப்பல்கள் வழங்குவதற்கு தடை விதிக்குமாறு கோரி தமிழகத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு நல்லெண்ண அடிப்படையில் இந்தியா இரண்டு போர்க் கப்பல்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், குறித்த போர்க் கப்பல்கள் வழங்கப்படக்கூடாது எனக் கோரி இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் போர்க் கப்பல்கள் வழங்கப்படுவதற்கு தமிழக மக்கள் விரும்பவில்லையென குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கைக் கடலில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே இந்தக் கப்பல்கள் வழங்கப்படுவதற்கு எதிராக தடை விதிக்க வேண்டும் எனவும் குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது. http://tamil…

    • 0 replies
    • 289 views
  16. செலவு கூடிய இடம் இலங்கை ; சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி உலகிலேயே ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது சுற்றுலாப் பயணிகளுக்கான செலவு அதிகரித்த நாடாக இலங்கை காணப்படுகின்றது என மதிப்பீட்டு அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக முன்னிலையில் இருந்த இலங்கை அந்த இடத்தில் இருந்து கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளதுடன் இந்தோனேசியாவின் பாலி தீவு முன்னிலைக்கு வந்துள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது. அத்துடன் தென்னாபிரிக்கா, வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ள நிலையில் இலங்கை 5 ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது. அதன்படி ஏனைய நாடுகளின் விடுமுறை விடுதிகளுக்கான செலவுகள் குறைவாக இருக்கின்ற போதும், இலங்கையில் அதற்கான செலவு 45 வீதம் அதி…

  17. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வட மாகாண சபையில் கிடைத்துள்ள இரு போனஸ் ஆசனங்களில் ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரி ஐயாவிற்கே வழங்க வேண்டும் எனவும் இவ்வாறு ஆனந்தசங்கரிக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படாதவிடத்து தீக்குளிப்பு போராட்டம் அல்லது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என தம்பிராசா (தம்பி) தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது. கிளிநொச்சியில் கூட்டணியின் தலைவர் சங்கரி ஐயா திட்டமிட்ட முறையில் தோற்கடிப்பட்டுள்ளார். அவராலேயே கிளிநொச்சி தனி மாவட்டமாக உருவானதை மக்கள் மறந்து விடாது வாக்களிக்கத் தயாரான வேளையில் சக கட்சியில் போட்டியிட்ட சிலர் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர் வெற்றியைத் தடுத்து வி…

  18. பூநகரி மக்கள் நீருக்கு அலையும் போது இரணைமடுக்குளத்தின் நீரை எவ்வாறு வேறு பிரதேசத்திற்கு கொண்டு செல்வது? பூநகரிப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியினால் பொதுமக்கள் குடி நீருக்கு அலைந்து திரியும் நிலை காணப்படுவதால் இரணைமடுக்குளத்தின் நீரை பூநகரிப் பகுதிக்கு கிடைக்க வழி செய்ய வேண்டுமென பூநகரி பிரதேச சபைத் தலைவரும் அப் பகுதி விவசாய அமைப்புக்களும் வேண்கோள் விடுத்துள்ளனர். இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி நீரைக் கொண்டு செல்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்புக்கள், கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான சந்திப்பு கிளிநொச்சி பிரதேச சபைத் தலைவர் வி.குகராசா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இ…

  19. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில சுற்றுலா தளங்களுக்கு மக்கள் செல்லமுடியாதவாறு இராணுவத்தினர் கடந்த ஒரு சில வாரங்களாக தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் வசித்த வீடாக கருதப்படும் நிலக்கீழ் வீடு, கடற்புலிகளின் தலைவர் சூசை வசித்த வீடு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள ஜோர்தான் கப்பல் மற்றும் விசுவமடு பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் சிறை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தற்போது இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்த இடங்களுக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் தினமும் சென்று பார்வையிட்டு வந்தனர். நிலக்கீழ் வீடு அமைந்துள்ள பகுதியில் கண்ணி வெடிகள் அகற்…

  20. இலங்கை அரசாங்கம் தற்போது 75,000 கோடி ரூபா கடனில் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே தெரிவித்துள்ளார். தேசிய சேமிப்பு வங்கி நூற்றுக்கு ஒன்பது வீத வட்டிப்படி 750 மில்லியன் டொலர்களை கடனாக பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற எதிர்க் கட்சிகளின் கூட்டணி ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொதுநலவாய மாநாட்டுக்காக 500 கோடி செலவு செய்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள், அம் மாநாடு முடிந்ததன் பின்னர் அமைச்சர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெற்றதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்திருந்த போதும் வாக்குச்சீட்டுகள் மீட்கப…

  21. தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார் கடும்தொனியில் காசியானந்தன்(காணொளி) வடமாகாண தேர்தல் முடிந்து அங்கே விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இதனை பெரிதாக ஊடகர்கள் அலசி ஆய்ந்துகொண்டிருக்கின்றார்கள். அங்கிருந்து கொண்டு தமிழர்களின் விடுதலைஉணர்வினை மழுங்கடிக்கும் முயற்சியினை நாலுபக்கத்திலும் நஞ்சர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த தேர்தல் மகிந்த அரசிற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது மகிந்தவின் அரசு ஒருநேர்மையான அரசு ஜனநா…

    • 111 replies
    • 6.8k views
  22. டக்ளசின் தேவையும் தயவும் ஆட்சியாளருக்கு புளித்துவிட்டதா? 30 செப்டம்பர் 2013 எதிர்க்கட்சித் தலைவர் பதவி அங்கஜனுக்கா? பனிப்போர் தொடர்கிறது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்ட ஈபிடிபிக்கு 2 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தது. மிகுதி 5 ஆசனங்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் 1 ஆசனம் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசிற்கும் கிடைத்தது. அங்கஜன் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் வடக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமது கட்சிக்கே வழங்க வேண்டும் என்று ஈபிடிபி கோரியுள்ளது. இதனை வலியுறுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஈபிடிபியின் பொதுச்செயலரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கடிதம் ஒன்றை அனுப்பியுள்…

  23. ஒன்றரை இலட்சம் தமிழர்கள் சாவுக்கு வழிவகுத்தோர் மஹிந்தவும் விமலுமே "நாட்டின் நலனுக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ரணில் விக்கிரசிங்க செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தைக் குழப்பியடித்து மீண்டும் போர் ஆரம்பமாக காரணமாக இருந்தவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வும் அமைச்சர் விமல் வீரவன்ஸவுமே. இவர்களின் இந்தச் செயற்பாட்டின் காரணமாகத் தான் நாட்டில் ஒன்றரை இலட்சம் தமிழர்களும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் காவு கொள்ளப்பட்டனர்.'' இவ்வாறு பொது எதிரணியினர் நேற்று குற்றம்சுமத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்கப்பணிமனையில் நேற்று இடம்பெற்ற இவ்வமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன்போது நவசமசமாஜக் கட்சியின் …

  24. கூட்டமைப்பின் அமைச்சு பதவிகள் தொடர்பாக கொழும்புக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் வடமாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு போதிய பிரதிநிதித்துவமும் அதேநேரத்தில் சகல மாவட்டங்களுக்கான பிரதி நிதித்துவமும் கிடைக்கும் வகையில் பகிர்வது என்று நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் யார் யாருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது என்று கொழும்பில் நடைபெறும் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படவுள்ளதாகவும், போனஸ் ஆசனங்கள் முன்னரே தெரிவிக்கப்பட்டதைப் போன்று முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழ்த் தேசி…

  25. மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இனப் பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளது – ஜெஹான் பெரேரா 30 செப்டம்பர் 2013 மாகாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இனப் பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் டொக்டர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற மூன்று மாகாணங்களிலும் தேசியத்தை முதன்மைக் கருப்பொருளாகக் கொண்டு பிரச்சாரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் அரசாங்கத்திற்கு எதிராக 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 60க்கும் மேற்பட்ட வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இனவாத அடிப்படையிலான தேர்தல் முடிவுகள் ஆபத்தான நிலைமையாகவே கருதப்பட வேண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.