ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
வட மாகாணத்தில் உரிய சிவில் நிர்வாகத்தை ஸ்தாபிப்பதற்கும் நல்லிணக்க நடைமுறையை முன்னெடுப்பதற்கும் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் இன்றிய நடைமுறையானது அவசியமானதாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. மாகாண சபை தேர்தல் குறித்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவமிக்க மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து நாம் இலங்கை மக்களைப் பாராட்டுகின்றோம். தேர்தல்கள் இடம்பெற்ற மூன்று மாகாணங்களிலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றமையானது ஜனநாயக நடைமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். தேர்தல் வன்முறைகள் தொடர்பில் நாம் தொடர்ந்து…
-
- 0 replies
- 379 views
-
-
பக்கச்சார்பாக நடக்கும் ஆளுனர்கள் மாகாண சபை அமர்வில் கலந்துக்கொள்ள தகுதியற்றவர்கள் வடக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்கள் தேர்தல் பிரசார மேடைகளில் பிரசன்னமானதை அவதானிக்க முடிந்ததாக கெஃபே அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக குருநாகலில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவித்துள்ளார். வடமேல் மற்றும் வட மாகாண சபைகளின் ஆளுநர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களின் போது மேடைகளில் ஏறி தமது ஆதரவை வழங்கியதனை எம்மால் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. இந்த ஆளுநர்கள் கௌரவமான பதவிகளில் இருக்கும் போதே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டனர். எனவே, இவ்வாறான பக்கச்சார்பாக…
-
- 0 replies
- 387 views
-
-
மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச்சபை அமர்வில் நாளை உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று அதிகாலையில் நியூயோர்க் நகருக்கு பயணமாகிச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளையதினம் ஐக்கிய நாடுகள் அமர்வில் உரையாற்றவள்ளார். அதன்படி 2005 ஆம் ஆண்டு மகிந்த ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் 6 வது தடவையாக உரையாற்றுகிறார்.இந்த விஜயத்தின் போது ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் ஷர்மா மற்றும் ஆசிய ஆபிரிக்கக் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிமல் சிறிபால டி சில்வா டளஸ் அழகப்பெரும பா.உ. சஜின்வாஸ் கு…
-
- 0 replies
- 345 views
-
-
மட்டக்களப்பில் சிறீலங்கா உட்பட ஆறு நாடுகளின் ஒத்துழைப்புடனான படைப் பயிற்சி நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆறு நாடுகளின் 40 இராணுவ கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளன. மட்டக்களப்பு வாகரை சல்லித்தீவு கடற்கரையில் நேற்று மாலையும், ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் இன்று காலையும் இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தொப்பிகல, நரக்கமுல்ல, திருகோணமසலை, வாகரை மற்றும் கதிரவெளி அடங்கலாக கிழக்கு மாகாண இராணுவ தலையகத்தின் கீழுள்ள முப்படைகளைச் சேர்ந்த சுமார் 2,700 வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதன்போது, தரை, வான் மற்றும் கடல் மார்க்கங்களின் ஊடாக இராணுவ உபகரணங்களின் உதவியுடன் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 325 views
-
-
எதிர்பார்ப்புக்களையும் கடந்து வடக்கு மாகாண சபைத்தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ளது. வடக்கு மாகாண சபையின் ஆட்சியை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றும் என்பது தெரிந்த விடயமாயினும் தமிழ் மக்கள் என்றுமில்லாதவாறு திரண்டெழுந்து வாக்களித்து வரலாற்றுச் சாதனை படைப்பர் என்பது எவராலும் எதிர்பார்க்கப்படாத ஒரு பெரும் நிதர்சனம். வடக்கு மாகாணத்தில் அதிகூடிய வாக்களிப்பு என்ற தகவலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வரலாறு காணாத வெற்றி என்ற உண்மையையும் தனித்து தேர்தல் வெற்றி என்ற விமர்சனங்களுக்குள் அடக்கி விடமுடியாது. மாறாக என்றுமில்லாதவாறு தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் மூலம் இலங்கை அரசுக்கும் ச…
-
- 0 replies
- 511 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்து முடிந்து கட்சிகள் பெற்ற ஆசனங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது என்ற உண்மையைக் கூறித்தான் ஆகவேண்டும். இந்த உண்மைகளுக்குள் தமிழ் மக்கள் எழுச்சியோடு - உணர்வு பூர்வமாக வாக்களித்துள்ளனர் என்பதை நினைக்கும் போது நாம் தமிழனாகப் பிறந்ததில் பெருமை கொள்ளவேண்டும். தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தினால், வடமாகாணத்தில் அடங்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் வாக்களிப்பு சொல்லி வைத்தது போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தமிழ் உணர்வும் தம…
-
- 0 replies
- 372 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் முன் உள்ள உடைந்த கதிரையின் சுற்றாடலில் இனவழிப்புத் தொடர்பான புகைப்பட சாட்சியங்களை பொது மக்களின் பார்வைக்கும் சர்வதேசத்தினிடம் நீதிகேட்டும் மீண்டும் மனிதநேய செயற்பாட்டாளர் திரு கஜன் அவர்களால் வைக்கப்பட்டுள்ளது. http://www.sankathi24.com/news/33520/64//d,fullart.aspx
-
- 0 replies
- 235 views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்மக்கள் ஜனநாயக ரீதியாக அளித்துள்ள ஏகோபித்த தீர்ப்பை, சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர். யாழ்ப்பாணத்தில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். “தமிழ் மக்களின் ஏகோபித்த தெரிவின் மூலம் பெறப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையின் ஆட்சியை நடத்துவதற்கு, எமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போன்று, நிர்வாக மற்றும் நீதி அதிகாரங்கள் அனைத்தும் மக்களுக்குரிய இறைமையின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வடக்கில் தற்போது இராணுவத்…
-
- 0 replies
- 289 views
-
-
சிறிலங்காவின் வடக்கில் பல பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தமானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் தற்போது முதன்முதலாக இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறிலங்காவின் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வெற்றி பெற்றுள்ளது. 38 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக சனிக்கிழமையன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 30 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆளும் கூட்டணியானது இந்தத் தேர்தலில் ஏழு ஆசனங்களையும், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் இதயபூமியான வடக்கில் முதலாவது மாகாண சபை அரசாங்கத்…
-
- 0 replies
- 265 views
-
-
நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளத் தீர்மானித்துள்ளதாக இந்தியாவில் வெளிவரும் இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்பது குறித்து ஐயப்பாடுகள் தெரிவிக்கப்பட்டும் இரண்டாம் தர அதிகாரியொருவரை அனுப்பிவைப்பது குறித்து புதுடில்லி ஆராய்ந்து வருவதாக இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மன் குர்திஷ் இலங்கைக்கு அறிவித்துள்ளதாகவும் அந்தப் பத்திரிகைச் செய்தி மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ…
-
- 0 replies
- 193 views
-
-
தீவகத்தில் ஈ.பி.டி.பியினர் தமது தேர்தல் தோல்வியை தாங்கமுடியாது மக்களுக்கு பொல்லுத் தடியால் அடித்துள்ளார்கள். நடந்து முடிந்த வடமாகாண தேர்தலில் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியை பெற்று இருக்கிறது. இதில் ஈ.பி.டி.பி படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பாக இவர்களது கோட்டை என்று மார்தட்டிக் கொண்டு திரிந்த தீவகத்தில் தோல்வி அடைந்தது குறித்து மன விரக்தியில் உள்ள ஈ.பி.டி,பி னர் புளியங்குடல், ஊர்காவற்றுறை, வேலணை, தம்பாட்டி, சாட்டி, நாரந்தனை, போன்ற பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னின்று உழைத்த பல பேருக்கு பொல்லுத்தடிகளால் தாக்கியுள்ளனர். இதனால் தீவக மக்கள் பெரும் அல்லல்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர்களுக்குப் பயந்து யாழ் வாழும் தமது உறவுகளுக்கு அவசரத் தொல…
-
- 1 reply
- 381 views
-
-
வடக்கில் தேர்தலை நடாத்தியமை தாய் நாட்டிற்கு கிடைத்த வெற்றி - ஜனாதிபதி மஹிந்த [Monday, 2013-09-23 08:07:47] மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் நாட்டின் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடமேல், மத்திய மாகாணசபைகளில் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளது. வடக்கில் தேர்தல்களை நடாத்தக்கிட்டியமை தாய் நாடு அடைந்த வெற்றியாகும். மிகக் குறுகிய காலத்தில் வடக்கில் இயல்பு நிலைமையை ஏற்படுத்த உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிகள். பாரிய அர்ப்பணிப்புடன் கிடைக்கப்பெற்றுள்ள இந்த சந்தர்ப்பத்தை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும். மோசமாக கடும்போக்கு…
-
- 1 reply
- 393 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புடன் தமது அமைப்பு தொடர்புகளை வைத்திருந்ததாக நேபாளத்தின் மாஓ கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹால் (பிரசந்தா) முதன்முறையாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். ஒரு தசாப்தகாலமாக நேபாளத்தில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தின் பின்னர் 2008ஆம் ஆண்டு பிரசந்தா பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். நேபாளத்தின் மாஓ பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பயிற்சி பட்டறையொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் பிரசந்தா இதனைத் தெரிவித்துள்ளார். ஒரு இனத்தின் விடுதலைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கெரில்லா தாக்குதல்கள் விடயங்கள் உள்ளிட்ட பல தொடர்புகள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் தமது அமைப்பும் தேச…
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணத்தில், நடைபெற்ற தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு, அபார வெற்றி பெற்றது. அந்த கூட்டமைப்பை சேர்ந்த, இலங்கை, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரன், மாகாணத்தின் முதல்வராக பதவியேற்க உள்ளார். தேர்தலில், அதிபர் ராஜ்பக்ஷேயின், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மண்ணை கவ்வியது. இவ்வாறு தமிழக நாளேடான தினமலர் தனது இன்றைய பதிப்பில் முதன்மைச் செய்தியாக பிரசுரித்துள்ளது. இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே, பல ஆண்டுகளாக நடந்த போர், 2009ல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு மாகாணத்தில், நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் அத…
-
- 0 replies
- 509 views
-
-
ஈழத் தமிழர் சரித்திரத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கி இருக்கிறது. வாழ்த்தி வரவேற்போம்! தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்ததைப்போல, வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு தமிழக நாளேடான தினமணி ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முழுவிபரம் வருமாறு:- இலங்கை வடக்கு மாகாணத்தில் கால்நூற்றாண்டுக்குப் பிறகு ஒரு விடியல் தோன்றியுள்ளது. அங்கு நடந்துள்ள தேர்தலில், மாகாணத்தின் மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 30 இடங்கள் கிடைத்துள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்கெனவே அறிவித்திருந்ததைப் போல, முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பொறு…
-
- 0 replies
- 291 views
-
-
கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் பொது மக்களுக்கும் இடையே இன்று மாலையில் இடம் பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதைத் தொடர்ந்து குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினர் பொது மக்களினால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையான காவல்துறையினர் அந்தப் புகதயில் குவிக்கப்பட்டுள்ளார்கள். அராலி கிழக்கில் உள்ள பாலி என அழைக்கப்படும் மணியம் பாலச்சந்திரன் வயது 38 என்பவர் வட மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஊரைச் சேர்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு வாக்களிக்வில்லையெனக் கூறி பொது மக்களுடன் வாக்குவாதப்பட்டு பொது மக்களை தாக்கும் நடவடிககையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்களுக்கும் குறிப்பிட்ட நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாத…
-
- 2 replies
- 694 views
-
-
-எஸ்.கே.பிரசாத் இந்திய உள்ளிட்ட பல நாடுகளில் பல்வேறு சார்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கு 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் யாழ்ப்பாணத்தில் முக்கிய நகரங்களில் அமைக்கபடப்பட்டுள்ள எல்.சி.டி பனல் மூலம் திரையிடப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணம்இசாவகச்சேரிஇசுன்னாகம்இ நெல்லியடி போன்ற பல்வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள எல்.சி.டி பனல் ஊடாகவே இத்திரைப்படம் திரையிடப்பட்டு வருகின்றது. முன்னர் அரசாங்கத்தினாலும் இராணுவத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான காணொளிகள் எல்.சி.டி பனல் ஊடாகவே ஒளிபரப்பாகியது. அதிலேயே 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/83388-…
-
- 5 replies
- 648 views
-
-
வடக்கு தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் பிரான்ஸ் வாழ் தமிழ்மக்கள். [Monday, 2013-09-23 07:15:21] தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு வரலாற்று வெற்றியைப் பெற்றுக்கொண்டுள்ள மகிச்சிகரமான செய்தி வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து, தாயக மக்களைப் போன்று பிரான்சிலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்றுள்ளன. பாரிஸ் லாச்சப்பல் பகுதியில், தமிழர்நடுவப் பிரதிநிதிகளுடன், பொதுமக்கள் இணைந்து இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். வெற்றியை மகிழ்வோடு வரவேற்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், மக்கள் இனிப்புப் பண்டங்களைப் பரிமாறி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். லாச்சப்பல் பகுதியிலுள்ள தமிழர் வர்த்தக உரிமையாளர்கள், பணியாளர்கள், இந்த மகிழ்சியில் இணைந்துகொண்டனர். தமிழ்த் தேசியக…
-
- 0 replies
- 441 views
-
-
முஸ்லிம்களுக்குரிய அரசியல் சக்தி முஸ்லிம் காங்கிரஸ் தான் என்பது தேர்தலில் உறுதி நடந்து முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தலில் வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றதையிட்டு பாராட்டு தெரிவிப்பதோடு மூன்று சபைகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டுவதற்கு வாக்களித்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், வரலாற்று முக்கியத்துவம் வாய்த்த வட மாகாண சபையில் தமது கட்சி தனித்துவக்குரலாக ஒலிக்கும் என உறுதியாகக் கூறியது உண்மையாகிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளிவந்த பின்னர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
-
- 1 reply
- 450 views
-
-
2013 ஆம் ஆண்டிற்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது ஈழக் கவிஞர் அகரமுதல்வனுக்கு . ஈழத்தின் வடபகுதியான கிளிநொச்சியின் பளை என்கிற ஊரில் பிறந்த கவிஞர் அகரமுதல்வன் எமது தேசம் குறித்த மக்களின் வலிகளை தனிமனித உணர்வுகளை கவிதையினூடாக எழுதுவருகிறார். ஈழத்தில் இருந்து வெளிவந்த இலக்கியங்கள் நடந்து முடிந்த போருக்கு பிறகு இன்னும் காத்திரமாகவும் வீரியமாகவும் வளர்ந்து வருவதில் இவருக்கும் பெரிய பங்குண்டு . அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்ட “அத்தருணத்தில் பகைவீழ்த்தி” எனும் இவரின் கவிதைத் தொகுப்பிற்கு தமிழ் இலக்கிய பரப்பின் முக்கியமான எழுத்தாளராக இருந்த ஜெயந்தன் நினைவாக வழங்கப்படும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது-2013 அறிவிக்கப்பட்டுள்ளது. தனது இருபத்தொராவது வயதில் இந்த விருதினைப் பெறு…
-
- 3 replies
- 607 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் என தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஒர் பொறிமுறைமையை உருவாக்க அரசாங்கம் தயாராக உள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்காது என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். மீண்டும் பிரிவினைவாதப் பாதையில் பயணிக்க கூட்டமைப்பு முயற்சி எடுக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு இளைஞர்களின் நலனை தமிழ்த் தேசியக் கூட்டமைப் மேம்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். http://globaltamilnews.net/GTMNEd…
-
- 1 reply
- 449 views
-
-
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் இரு குழுக்களுக்கள் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கபே அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரது குழுக்கள் மற்றும் சிறீ.Pலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த கபே அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஊடகவியலாளர்களை தடுத்து அவர்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முகமாக …
-
- 2 replies
- 793 views
-
-
வடமேல் சபையின் முதமைச்சராக தயாசிறி ஜயசேகரவும், மத்திய மாகாணத்தின் முதலமைச்சராக அந்த மாகாணத்தில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற பிரதமர் டி.எம். ஜயரத்னவின் மகன் அநுராத ஜயரத்னவையும் நியமிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் விருப்பு வாக்குகளின் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட பிரதமர் டி.எம். ஜயரத்னவின் மகன் அநுராத ஜயரத்ன 1,07,644 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், இரண்டாவது இடம் முன்னாள் முதலமைச்சரான சரத் ஏக்கநாயக்கவிற்கே கிடைத்துள்ளதுடன் அவரது விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 70,171 ஆகும். முதலமைச்சர் பதவி தீர்மானிக்கப்படுவது விருப்பு வாக்…
-
- 0 replies
- 574 views
-
-
வடக்கில் தமிழ் கூட்டமைப்பின் வெற்றி குறித்து சிங்கள பத்திரிகையான லங்காதீபவின் இணையத்தளத்தில் இடப்பட்டிருந்த பின்னூட்டங்கள் சிலவற்றைப் பார்வையிட்ட போது வடக்கும் தெற்கும் எவ்வாறு பிளவுபட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. පළමු ප්රතිපලයෙන්ම ඊළමට පාර කැපෙන බව පේනවා முதலாவது முடிவிலேயே ஈழத்திற்கான பாதை வகுக்கப்படுகிறது මෙයාලව කොටින්ගෙන් බේරාගෙන . අනාථ කදවුරුවලින් නිදහස් කරලා, නිදහසේ ඉන්න දීපු කෙලෙහි ගුණ තමා මේ ;පෙන්වලා තියන්නේ இவர்களை புலிகளிடமிருந்து காப்பாற்றி அகதி முகாம்களிலிருந்து விடுவித்துசுதந்திரமாக வாழ வழி வகுத்ததற்கு செய்கின்ற பிரதி உபகாரம் මෙහේ ඉන්න මෝඩයොන්ට නමි සීනි බෝල දීලත් ඡන්ද ගන්න පුලුවන් ඒත් අන්න මිනිස්සු සාධාරණ ඡන…
-
- 24 replies
- 2.7k views
-
-
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்குக் கிடைத்த விருப்பு வாக்குகளின் விபரங்களை மாவட்டச் செயலகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் கீதாஞ்சலியும் தோல்வியடைந்துள்ளனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட ப.அரியரட்ணம் 27,264 விருப்பு வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஆனந்தசங்கரி 2896 விருப்பு வாக்குகளை மட்டும், பெற்று ஆறாவது இடத்தையே பிடித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி 1.ப.அரியரட்ணம் - 27,264 வாக்குகள் 2. குருகுலராஜா - 2…
-
- 0 replies
- 1.3k views
-