Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்­துடன் கூட பேச்­சு­வார்த்தை நடத்த இலங்கை அர­சாங்கம் தயா­ரா­கவே உள்­ளது .யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் திறந்த கொள்­கை­யு­ட­னேயே செயற்­பட்­டது. ஆனால் அவற்றை தவ­றாக அர்த்­தப்­ப­டுத்­திய சர்­வ­தேச பார்­வையே இலங்கை மீதும் காணப்­ப­டு­கின்­றது என தேசிய பாது­காப்பு கொள்­கைகள் மற்றும் பயங்­க­ர­வாத ஒழிப்பு தொடர்பான ஆலோ­சகர் கலா­நிதி ரொஹான் குண­ரட்ன தெரி­வித்தார். யுத்­தத்தின் இறுதிக் காலப்­ப­கு­தியில் பல்­லா­யிரம் தமி­ழர்கள் கொல்­லப்­பட்­டார்கள் என்­பது போலி­யான பிர­சா­ர­மாகும். 2009 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் தொடக்கம் மே மாதம் யுத்தம் முடி­வ­டையும் வரை வடக்கில் 7 ஆயிரம் பேர் மாத்­தி­ரமே கொல்­லப்­பட்­ட…

  2. வடமராட்சி பல்லப்பைப் பகுதியில் மனித எலுப்புக் கூடுகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கோரிக்கை மனு எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி திருமதி.சிறிநிதி நந்தசேகரத்திடம் நேரிலேயே கையளிக்க உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரும், வடக்கு மாகாணசபை வேட்பாளருமான சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். வடமராட்சிப் பகுதியில் மிக நீண்ட காலமாக இராணுவத்தினருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு பொது மக்களுடைய பாவனைக்காக பல்லப்பபை என்னும் கிராமம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்படிப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றினை தூய்மைப்ப…

  3. தோப்பூர் - அக்­கரை கிரா­மத்தில் விகாரை அமைக்­க­வென சில விஷ­மி­களால் 50 ஏக்கர் நிலம் சுவீ­க­ரிக்க முயற்சி எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது? இது அப்­ப­கு­தி­யி­லுள்ள முஸ்லிம் மக்­களை சீண்டி பார்க்கும் செய­லாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஃறூப் தெரி­வித்தார். முஸ்லிம் மக்கள் பள்­ளி­வாசல் இருக்கும் பகு­தி­யிலும் இன்று வாழ முடி­ய­வில்லை விகா­ரைகள் இருக்கும் பகு­தி­யிலும் வாழ முடி­யாத அவலச் சூழ்­நி­லை­யொன்று திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் நில­வு­கின்­றது. இப்­ப­கு­தியில் முஸ்லிம் மக்கள் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழ்ந்து வரு­கின்­றார்கள். இப்­ப­கு­தியில் எந்த வித விகா­ரையும் இல்­லாத போதும் 50 ஏக்கர் நிலம் விகாரை அமைக்க ஒதுக்­க ப்­பட்­டுள்­ள­தாகக் கூறி சேருவில் பிர­தே…

  4. பாட­சாலை மாணவன் ஒரு­வனைத் தாக்­கிய கபடி விளை­யாட்டுப் பயிற்­சி­யா­ள­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­காத அதி­ப­ரி­டமி­ருந்து பாதிக்­கப்­பட்ட மாண­வனின் விடு கைப் பத்­தி­ரத்­தினைப் பெற்­றுத்­த­ரு­மாறு கோரி மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் யாழ்.பிராந்­திய அலு­வ­ல­கத்தில் முறைப்­பாடு ஒன்று பதி­வு­செய்­யப்­பட்­டுள்­ளது. இம் முறைப்­பாட்­டினை பாதிக்­கப்­பட்ட மாண­வனின் தாயார் பதிவுசெய்­துள்ளார். இம் முறைப்­பாடு தொடர்­பாக தாம் நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழுவின் யாழ். பிராந்­திய இணைப்­பாளர் த.கன­கராஜ் தெரி­வித்­துள்ளார். மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­விற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள முறைப்­பாட்டில், இள­வாலையிலுள்ள பிரபலமான கல்லூரி ஒன்றில் தரம் 8 இல் கல்விகற…

  5. மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள் மற்றும் சம்பவங்கள் குறித்த முறைபாடுகள் அதிகரித்துச் செல்வதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய 376 முறைபாடுகள் தமது அமைப்பிற்கு கிடைத்துள்ளதாக கெஃபே அமைப்பு தெரிவிக்கின்றது. மத்திய மாகாணத்திலேயே கூடுதல் முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நாவலப்பிட்டி மற்றும் கம்பளை பகுதிகளில் இந்த நிலைமைகள் தொடர்பில் ஒருவார காலமாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். தேர்தல் வன்முறைகள் படிப்படியாக அதிகரிக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகி வருவதுடன், ஒரே அரசியல் கட்சியிலுள்ள குழுக்களிடையே மோதல்கள் ஏ…

  6. இலங்­கையில் பிரி­வி­னை­வா­தத்தை தூண்டும் பிர­சா­ரத்தை மேற்­கொண்­டுள்ள சம்­பந்­தனை பாராட்­டிக்­கொண்­டி­ருக்­காது உட­ன­டி­யாக கைது செய்து சிறையில் அடைக்க அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ள பொது­ப­ல­சே­னாவின் பொது­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் இல்­லையேல் எதிர்­கா­லத்தில் சிங்­கள மக்கள் தமது உரி­மை­க­ளுக்­காக ஆயுதம் ஏந்தும் ஆபத்­தான நிலை உரு­வாகும் என்று எச்­ச­ரிக்கை விடுத்தார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் இவ்­வாறு தெரி­வித்தார். வடக்கு கிழக்கு என்­பது இந்­நாட்டின் பிரிக்­கப்­பட்ட தனி பிர­தே­சங்கள் அல்ல. அவை இலங்­கையின் தன்­னா­திக்­கத்­…

  7. வடமாகாணசபைத் தேர்தல் முடிந்த கையோடு ஆளுநர் பதவியில் மாற்றம் ஏற்பட இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவிக்கின்றன. நடைபெறவிருக்கின்ற வடமாகானசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான வாக்குகளுடன் வெற்றி பெறும் என்று அரசியல் ஆலோசகர்கள் தெரிவத்துள்ள நிலையிலும் சர்வதேச அழுத்தங்களைக் குறைத்து அவற்றின் ஆலோசனை வர முன்னரே ஆளுநர் பதவியில் சிவில் சமூகம் சார்ந்த ஒருவரை நியமிக்க அரச மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாக தகவலறிந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன. தமிழ் அரசியல் வட்டாரங்களிலும் இந்தப் பேச்சு கசிந்துள்ளது. முன்னர் வடகிழக்கு மாகாணத்தின் ஆளுநராக பிரபல சிங்கள நடிகரும் தொழில் அதிபருமான காமினி பொன்சேகா மூன்று வருடங்கள் (1995…

  8. தமிழ் இனம் வடக்கு கிழக்கு எனும் சிறுபரப்பினிலே தனக்கு உரித்துடைய வாழ்வுரிமையினைக் கேட்டு நிற்கிறது. அந்த உரிமையினைக் கூட சிங்கள இனவாத அரசு தரமறுத்தால், இன்று 10 வயதுகளில் இருக்கின்ற குழந்தைகள் இன்னும் 10 வருடத்தில் ஆயுதங்கள் பற்றிச் சிந்திப்பதை யாரும் தடுக்க முடியாது என பரந்தன் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் பரந்தன் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரந்தன் பிரதேச அமைப்பாளர் ரஞ்சன் தலைமையில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 8.00மணிக்கு நிறைவு பெற்றது. இப்பரப்புரைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேலும் தெரிவிக்கை…

    • 3 replies
    • 1.1k views
  9. நாட்டின் பல பகுதிகளில் பல பெண்களை ஏமாற்றி சட்ட ரீதியாக பதிவுத் திருமணம் செய்து கொண்ட முன்னாள் படைச் சிப்பாய் ஒருவரை அனுராதபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக ஐந்து பெண்களை சட்ட ரீதியாக திருமணம் செய்து, அவர்களுடன் திருமண வாழ்க்கை நடத்தியுள்ளதாகவும் மேலும் இரண்டு பெண்களுடன் சட்ட ரீதியாக திருமணம் செய்து கொள்ளாது, கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நபர் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு 16, 09, 07, 05 வயது மற்றும் 9 மாத குழந்தைகள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆறு ஆண்டுகள் இராணுவத்தில் கடமையாற்றிய குறித்த நபர், தப்பிச் சென்று ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமைமாற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டார், மலேசியா போன்ற ந…

  10. -லக்மால் சூரியகொட ஐந்து நட்சத்திர ஹோட்டலின் கட்டணத்தை செலுத்தாத பிரித்தானிய பிரஜையை கொழும்பு நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்துள்ளது. கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலின் முகாமையாளர் இருவரின் முறைப்பாடுகளுக்கு அமைய பிரித்தானிய பிரஜையொருவர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதனையடுத்து 50,000 ரூபா சரீரப் பிணையில் பிரித்தானிய பிரஜை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். தனது சேவைகளுக்கான கட்டணமான 14,224 ரூபாவை செலுத்தாமையினாலேயே ஹோட்டல் பாதுகாப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/81501-2013-09-05-13-3…

  11. முல்லைத்தீவு முள்ளியவளைப் பொலிஸ் பிரிவிலுள்ள நீராவிப்பிட்டியில் 21 வயதான யுவதி ஒருவரின் சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோகேந்திரன் நிஸானி என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளைப் காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர். http://www.sankathi24.com/news/32884/64//d,fullart.aspx

  12. நாட்டில் இனவாத அரசியல் தலைதூக்கியுள்ளது – ஜே.வி.பி. வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று சொன்னால் ஏனைய ஏழு மாகாணங்களும் சிங்களவர்களின் தயகமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸ்ஸநாயக்க. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்று கூட்டமைப்பு தெரிவித்திருப்பது தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வாகாது என்று தெரிவித்த அவர் நாட்டில் உள்ள தமிழர்களில் 51.2 வீதமானவர்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியில் உள்ளனர் என்றார். வடக்கு கிழக்கை தமிழர்களின் தாயகம் என்றால் ஏனைய பகுதி தமிழர்க…

  13. தமிழீழ விடுதலைப்புலிகளின் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கு புதிதாக மேல் நீதிமன்றம் ஒன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்திலேயே இந்த நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸே இந்த நீதிமன்றத்தை திறந்துவைத்தார். மனித உரிமைகளை பாதுகாத்தல் எனும் கொள்கை மற்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சர்வதேச அழுத்தங்களினால் ஏற்படுத்தப்பட்டதொன்றல்ல. கருணை,இரக்கம் மற்றும் பரிவு போன்றவற்றை கவனத்தில் கொண்டே இந்த நீதிமன்றம் திறந்து வைக்கப்பட்டதாக மொஹான் பீரிஸ் மேலும் தெரிவித்தார். சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மொஹான் பீரிஸ் அவ்வாறான குற்றங்களை குறைப்ப…

  14. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிஷெல் ஜெ.சிஸன் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளார். அவருடன் யுஎஸ்எயிட் பணிப்பாளர் ஷெரி கார்லினும் நேற்று புதன்கிழமை சென்றுள்ளார். புதிதாக புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முல்லைத்தீவு பொதுச்சந்தையை அமெரிக்க தூதுவர் திறந்து வைத்துள்ளார். தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கவும் உள்ளூர் சமூகங்களை ஒன்றுசேர்ப்பதற்கு வழிகோலும் வகையிலும் முல்லைத்தீவு சந்தை அமெரிக்காவினால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமிப் பேரழிவினாலும் பாதிக்கப்பட்ட இச்சந்தை 4,16,000 அமெரிக்க டொலர்கள் ( ஏறத்தாழ 54 மில்லியன் இலங்கை ரூபா) செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொர…

  15. இந்தியா, இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு, 2017அல்லது 2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன என இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. கடல் எல்லையை பலப்படுத்த உதவுமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த கப்பல்கள் அந்நாட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது என்றும் அந்த செய்திகளில் தெரிவிகப்படுகின்றது. ஏற்கெனவே இந்தியாவில் உள்ள 4 தென்மாநிலங்களை தவிர ஏனைய மாநிலங்களில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து வரும் சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவாக அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இ…

  16. -எஸ்.கே.பிரசாத் ஆனையிறவில் பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இராணுவச்சிப்பாய் பலியானதுடன் ஏழுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்றிரவு 9.40 மணியளவிலேயே இடம்பெற்றுள்ளது. யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பேரூந்து உழவு இயந்திரத்துடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று இராணுவத்தினர் பயணித்த உழவு இயந்திரத்தை ஆனையிறவு பகுதியில் வைத்து முந்திச் செல்ல முற்றபட்டபோது அந்த பேரூந்து உழவு இயந்திரத்திற்கு பின்புறமாக மோதியுள்ளது. த…

  17. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டென்பது அறிவியல் புரட்சிக்கு முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானியான நியூட்டனின் மூன்றாம் விதியாகும். இலங்கைத்தீவு முதல் சிரியா வரையான மையங்களில் வெளிப்படும் சில வினைகளுக்குக் கூட அதற்கு இணையான ஒரு பலமான எதிர்வினையை வழங்கும் வகையில் அரசியலில் கூட இந்த மூன்றாம் விதிக்கு பலம் உள்ளது. கடந்த மாதம் சிரியாவில் அசாத் அதிகார மையம் மேற்கொண்ட நாசகாரத்தனமான இரசாயனத் தாக்குதல் வினைக்கும் அதனால் ஏற்பட்ட சுமார் 1400 பேரின் உயிரிழப்புக்கும் உரிய எதிர்வினை அமெரிக்காவின் நேரடித் தாக்குதல் என்ற வடிவத்தில் பிரயோகிக்கப்பட முனைகிறது. இவ்வாறான வினையாட்டங்களில் எந்தத் தரப்பு சரியாகச் செல்கிறது, எந்தத் தரப்பு பிழையாக நகர்கிறது என்பதற்கு அப்பால், ஒவ்வொரு வி…

    • 0 replies
    • 601 views
  18. கொழும்பு தெற்கு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களில் ஒருவர், அவருக்குக் கீழ் பணி புரியும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்தமை தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதி பொலிஸ்மா அதிபர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை தனது அறைக்குள் அழைத்து தனது மடிக் கனிணியிலிருந்த ஆபாசப் படங்களைக் காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் கான்ஸ்டபிள் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பொலிஸ் உயரதிகாரி ஒருவரிடம் கூறியுள்ளார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறன்றன. இதேவேளை,கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை பணத்துக்காக கொலை செய்தமை, களனி பிரதேச அரசியல்வாதியைக் …

  19. எந்த இலட்சியத்துக்காக எந்த அரசியல் அபிலாஷைக்காக நாங்கள் இலட்சக்கணக்கான மக்களைப் பறி கொடுத்தமோ அதனைச்சர்வதேச ஆதரவுடன் அடைந்தே தீருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். சுன்னாகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரி வித்ததாவது: எங்கள் மக்கள் சார்பான தீர்வுத் திட்டத்தை நாங்கள் இந்த அரசிடம் முன் வைத்தோம். இந்த அரசு பேச்சு என்ற பெயரில் காலம் கடத்தியதே தவிர எங்களுக்குப் பதில் தரவில்லை. இதன் பின்னர் அவர்கள் உருவாக்கிய நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் நாம் பங்கெடுக்கவில்லை. இதற்காக எம்மை யாரு…

  20. இந்தியாவின் பின்வாசலாக உள்ள சிறிலங்காவில், அதிகரித்து வரும் சீனாவின் தலையீட்டை, கவலைக்குரிய விடயமாக இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கொள்கை ஆய்வு மையத்தின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான ஆய்வுப் பேராசிரியர் பாரத் கர்நாட் தெரிவித்துள்ளார். நொய்டாவில் உள்ள அமிதி பல்கலைக்கழக சட்ட பாடசாலை மாணவர்கள் மத்தியில் நேற்று நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். "புவிசார் அரசியலும் இந்திய மூலாபாயமும் என்ற தலைப்பில் உரையாற்றிய பேராசிரியர் பாரத் கர்நாட், பாகிஸ்தானுடன் மட்டுமன்றி சீனாவுடனும் கூட, இந்தியா பாதுகாப்பு ரீதியாக செற்பாட்டு நிலையில் இருக்க வேண்டும். பாகிஸ்தான், நேபாளம். பூட்டான் உள்ளிட்ட ஏனைய அண்டை நாடுகளிலும் சீனத் தலையீடு அதிகமாக உள்ள நிலையில், இந்…

  21. தமிழ் மக்களுடைய பிரச்சினை இன்று சர்வதேச மயமாக்கப்பட்டுள்ளது. இதனாலே சர்வதேச கண்காணிப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்மந்தன் வேண்டுகோள் விடுத்திருந்தார். தேசிய இனப்பிரச்சினைக்கு கடந்த 60 வருடமாக உள்நாட்டில் தீர்வு காணப்படாததாலேயே அது இன்று சர்வதேச மயமாக்கப்பட்ட போராட்டமாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று காலை யாழ்.மாட்டின் வீதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வடக்குமாகாணசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு விஞ்ஞாபனத்தினை வெளியிட்டு வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்வி…

    • 8 replies
    • 1.3k views
  22. இலங்கைக்கு வருகை தந்த நவிபிள்ளை முள்ளிவாய்க்காலில் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த முயற்சித்தமை தொடர்பாக ஐ.நா அலுவலகம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ நாவின் பேச்சாளர் ரூபேட் கொல்விலி, ஐ.நாவின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தான் இதுவரை சென்ற அனைத்து நாடுகளிலும் மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதேபோல கடந்த 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்ற பகுதியில் இறந்தவர்கள் நினைவாக அஞ்கலி செலுத்துவது தவறான செயல் அல்ல மேலும் அவர் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கே தனது இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்த முயற்சித்தார் என்றும் தெரிவித்தார். ஆனால் அதை இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நவி பிள்ளை அ…

  23. -எஸ்.கே.பிரசாத் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதுவர் வை.கே. சிங்ஹா, மீள்குடியேறியுள்ள அரியாலை மற்றும் எழுதுமட்டுவால் பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்து நேற்று கலந்துரையாடினார். அத்துடன் தென்மாராட்சி பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளையும் அவர் பார்வையிட்டார். அதேவேளை யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் தோப்பில் நேற்று மாலை நடைபெற்ற தெய்வீக சுக அனுபவம் கலை நிகழ்வில் பிரதம அதீதியாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். http://tamil.dailymirror.lk/--main/81387-2013-09-04-18-00-31.html

  24. யாழ் நல்லூர் ஆலய திருவிழாவின் போது படையினரின் உலங்கு வானூர்தி தாழபறந்ததில் மரகிளை முறிந்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ். நல்லூரில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் புலோலி மேற்கு பருத்தித்துறையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜங்கரன் (வயது 39) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. யாழ். நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது ஹெலிகொப்டர் மிகவும் தாழ்வாகப் பறந்து பூக்களைச் சொரிந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் ஹெலிகொப்டர் விசிறியின் காற்று வேகத்தில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வீதியிலிருந்த மரம் ஒன்றின் கிளை முறிந்து இவர் மீது விழுந்துள்ளது.இதில் படுகா…

  25. ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள், சிறிலங்கா காவல்துறையினராலும், இராணுவத்தினராலும் அச்சுறுத்தப்பட்டதற்கு, அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. தன்னைச் சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று நவநீதம்பிள்ளை கடந்த சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, நியுயோர்க்கைத் தளமாக கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் நேற்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தநிலையில், நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள சிறிலங்கா அரசின் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.