Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆயுத பிரிவுக்கு பொறுப்பாக இருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களை வடபகுதிக்கு கொண்டு சென்ற இதுவரை கைதுசெய்யப்படாதிருக்கும், புலிகளின் காவற்துறை பிரிவில் உயர் பதவி வகித்த நபரை கைதுசெய்ய விசாரணைகளை நடத்தி வருவதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தற்போது யாழ்ப்பாணத்தில் வசித்து வரும் இந்த நபர், விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான 53 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தென்னந் தோட்டம் ஒன்றை பராமரித்து வருவதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர். போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தேவையான வாகனங்களை விநியோகித்து வந்துள்ள இந்த நபர், புலிகளின் …

  2. தமிழ் அரசியல் களத்தில் தற்போது தமிழ் தேசிய அரசியல் தேக்கநிலை காணப்படுகிறது. இந்த தேக்கநிலையை மாற்றி அமைப்பதற்கு தாயகத்தமிழ் மக்களும், புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களும் இணைந்து தமிழீழ அதிகாரசபை ஒன்றை உருவாக்க வேண்டும் தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=27606

    • 3 replies
    • 748 views
  3. ரொறன்ரோ - ஸ்காபறோ பகுதியில் நேற்றையதினம் மாலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு-இராசம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு-எம் .எ. சுமந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்த இராப்போசன விருந்துபசார நிகழ்வி்ல் பெருமளவான வர்த்தகபிரமுகர்கள் நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வானது (11-08-13) மாலை 5 மணிக்கு 90 Nolan Court - Jaasmin Banguet Hall மண்டபத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கனடிய கிழைத் தலைவர் திரு- நக்கீரன் தங்கவேலு தலைமையிலான கனடாக்கிழை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வை திரு - குகதாசன் ,திரு- துரைராஜா ,திரு- வீரசுப்ரமணியம் ஆகியோர் முன்நின்று ஒருகமைத்து நடாத்தினர். நிகழ்வில் கூட்டமைப…

    • 10 replies
    • 784 views
  4. இலங்கையின் பிள்ளைகளை பலிகொடுக்க நாம் தயாரில்லை - சம்பிக்க ரணவக்க [Tuesday, 2013-08-13 09:47:40] நியூஸிலாந்தின் பால் மாக்களிலுள்ள டி.சி.டி. இரசாயன கலவை சோதனைக்காக இலங்கையின் பிள்ளைகளை பலிகொடுக்க நாம் தயாரில்லை என்று தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி மற்றும் அணுசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நியூஸிலாந்து நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் திருமதி ஜேன் அன்டர்ஸன் அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்தித்தபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்திலிருந்து இறக்குமதி செய்யும் பால்மாக்களின் சிலவற்றில் டி.சி.டி. இரசாயனம் கலந்துள்ளதை அண்மையில் தொழில்நுட்பவியல் அமைச்சு கண்டுபிடித்ததோடு, சுகாதார அமைச்சு இது தொடர்பில் நுகர்வோர் …

    • 0 replies
    • 473 views
  5. -எஸ்.கே.பிரசாத் இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் வருகை தந்துள்ளன. யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப்பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன. http://tamil.dailymirror.lk/--main/78429-2013-08-11-08-58-26.html

    • 33 replies
    • 2.2k views
  6. கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 12 ஆகஸ்ட், 2013 - 17:31 ஜிஎம்டி காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போது கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்டதாக ரிசாத் பதியுதீன் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர் இலங்கையில், தலைநகர் கொழும்பில் கிரான்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையால் இரண்டு இரவுகளாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று திங்கட்கிழமை காலை தளர்த்தப்பட்டது. ஆனால் இன்றும் அப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினரும் கலகத்தடுப்பு பொலிசாரும் பெருமளவு குவிக்கப்பட்டிருந்தனர். பழைய பள்ளிவாசலை புனரமைக்கும் நோக்கோடு, அதன் அருகில் இருந்த அரச மரத்தை வெட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தன…

  7. சீனாவுக்கு சொந்தமான 40 மீன்பிடி கப்பல்கள் இலங்கை தேசியக் கொடியுடன் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியை ஆரம்பிக்கும் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன நிறுவனம் பிடிக்கும் மீன்களில் 30 வீதம் சீன நிறுவனத்துக்கும், 10 வீதம் இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்துக்கும், எஞ்சிய 60 வீதம் கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள நிறுவனத்துக்கும் வழங்கப்படும் என்று உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடன்வட்டியில் ஒருபகுதியினை சீர்செய்ய உதவும் என கூறப்படுகின்றது. இதற்கு முன்னரும் உடன்படிக்கை ஒன்று இரகசியமாக மஹிந்த அரசினால் கையெழுத்திடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இரண்டு சீனக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, அ…

    • 0 replies
    • 1.2k views
  8. கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையில் எதிர்க்கட்சி என்ற பாத்திரத்தை ஏற்றுள்ளதாகவும் அது தடிமன் ஏற்பட்டாலும் அதை கண்டித்து அறிக்கைவிடும் எனவும் அமைச்சர் விமல் வீரசன்ஸ இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். 'ரதுபஸ்வல சம்பவத்தை நாம் சரியொன கூறவில்லை. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை பிள்ளை வருகின்றார். ஒரு பூச்சி பக்கத்தில் பறந்தாலும் ஐக்கிய அமெரிக்க அறிக்கை விடுகின்றது' என மாத்தளையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் தெரிவித்தார். இந்த வெளிநாட்டு அவதானிகள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்பதில் முழு மூச்சமாக உள்ளனர். அவர்கள் நாட்டை இன அடிப்படையில் பிரிக்க முயல்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். "மேற்கத்…

    • 4 replies
    • 487 views
  9. இலங்கை அதிபர் ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். லீ குவான் யூ உடனான உரையாடல்கள் (‘Citizen Singapore: How To Build A Nation – Conversations with ’) என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள நூலில்தான் இவ்வாறு ராஜபக்ச குறித்து படு காட்டமாக கூறியுள்ளார் லீ. அதில் சில பகுதிகள்… இலங்கையில் சிங்களர்கள் எப்போது முதல் இருக்கிறார்களோ அப்போதிலிருந்தே தமிழர்களும் இருக்கின்றனர். தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான சூழல் இல்லை. இலங்கை ஒற்றை நாடாக இருக்கும் வரை மகிழ்ச்சியான நாடாக இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்காகப் ப…

  10. 34 நாடுகளில் விடுதலை புலிகளை தடை செய்ய வழிவகுத்தவர் லக்ஷ்மன் கதிர்காமர் - பீரிஸ் [Tuesday, 2013-08-13 09:06:57] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 34 நாடுகள் தடை செய்வதற்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தவர் லக்ஷ்மன் கதிர்காமர் எனவும் இலங்கையின் உண்மை நிலையை சர்வதேசத்திற்குத் தெளிவுபடுத்தியவர் அவரே எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் 8 வது நினைவு தின நிகழ்வுகளில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் பீரிஸ் தொடர்ந்தும் உரையாற்றுகையில், முன்…

  11. புதுவை இரத்தினதுரை அவர்களின் பாடலை யாரும் தடைசெய்யவில்லை! - ஆலய நிர்வாகம்! [Tuesday, 2013-08-13 10:55:31] மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் அமைந்துள்ள வரலாற்று பிரசித்திபெற்ற தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் வழமையாக ஒலிக்கப்படும் ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு யாரும் தடைவிதிக்கவில்லை என கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கிழக்கு ஆலயங்களில் ஒலிபரப்புச் செய்யப்பட்டு வந்த புதுவை இரத்தினதுரையின் பாடலுக்கு இராணுவம் தடைவிதித்துள்ளதாக வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்பதுடன் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலனசபையினருக்கு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளியான செய்தியு…

    • 0 replies
    • 1.6k views
  12. ஈழத்தமிழ் மக்களுக்கு எந்தவகையிலும் பயன்தராத பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டை இலங்கையில் ஏற்பாடு செய்துள்ளமையானது, அர்த்தமில்லாத செயற்பாடு என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள இந்த சர்வதேச மாநாடு காரணமாக தமிழர்களுக்கோ ஏனைய பாதிக்கப்பட்ட மக்களுக்கோ எந்த தீர்வினையும் பெற்றுத் தரப் போவதில்லை. இலங்கையில் இடம்பெற்ற பிரச்சினைகள் தொடர்பில் அந்த மாநாட்டில் ஆராயப்படப் போவதும் இல்லை. கொழும்பு அரச நிர்வாகிகள் தமிழர்களின் நிலைமை தொடர்பாக சர்வதேச தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பதும் சந்தேகம். இவ்வாறான தருணத்தில் அந்த மாநாட்டினால் இலங்கை மக்கள…

    • 0 replies
    • 528 views
  13. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளை முன்னெடுத்த சீன நிறுவனம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு தரகுப் பணமாக 50 வீதத்தை வழங்கியுள்ளதாக ''ஊழலுக்கு எதிரான அரசாங்கப் பணியாளர்கள்'' (Government servants against corruption) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தாம் இந்தத் தகவலை மிகவும் பொறுப்புடன் கூறுவதாக அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=27578

  14. கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராண்ட்பாஸ் ஸ்வர்ன ஜயந்தி மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதும், அண்மித்த வீடுகள் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியதை அடுத்து இந்தப் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு... http://tamilworldtoday.com/?p=27293

    • 29 replies
    • 1.6k views
  15. மறைந்த அமைச்சர் டி.எம்.தசநாயக்கவின் சகோதரர் (51 வயது) வீட்டுத் தோட்டத்திலிருந்து சடலமாக இன்று திங்கட்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள் ளைகளின் தந்தையான இவர், ஆண்டிகம பிரதேசத்திலுள்ள தனது வீட்டின் தோட்டத்திலிருந்தே சடலமாக மீட்கப் பட்டுள்ளார். இந்த சடலத்தை கண்ட உறவினர்கள் பொலிஸாரிற்கு அறிவித்துள்ளனர். பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, குறித்த சடலத்திற்கு அருகில் கையடக்க தொலைபேசி மற்றும் ஒரு சோடி பாதணி ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.ilankainet.com/2013/08/blog-post_3854.html

  16. மன்னார் மடு மாதா வருடாந்த ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களின் நன்மை கருதி விசேட ரயில் சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது. தலை மன்னார் ரயில் பாதையின் முதல் கட்ட பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதனால் மடு ரயில் நிலையம் வரை ரயில்சேவைகள் நடைபெறும். கொழும்பு கோட்டை, நீர்கொழும்பு, அலுத்கம, மொரட்டுவ ஆகியபிரதேசங்களிலிருந்து ரயில் சேவைகள் இடம்பெறும். மடு உற்சவத்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் சொந்தவூர் திரும்பும் மக்களுக்காக எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில்சேவைகள் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதே வேளை மடு ரயில் நிலையத்திலிருந்து மடு ஆலயத்திற்கு விசேட இ.போ.ச பஸ் சேவைகளும் இடம்பெறவுள்ளன. http://www.ilankainet.c…

  17. யாழ். நாவற்குழியில் விகாரை மீதான கைக்குண்டு தாக்குதலின் பின்னணியில் இராணுவத்தினரே உள்ளனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இந்த கைக்குண்டு தாக்குதல் இராணுவ பிரசன்னத்தை நியாப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டமிட்ட நாடகம் எனவும் இந்த தாக்குதலை கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக வேடமிட்டு அரசாங்கமும் அதன் இராணுவமும் அரங்கேற்றும் காடைத்தனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாவற்குழி சிங்கள குடியேற்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விகாரை மீது கடந்த சனிக்;கிழமை இரவு குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக…

  18. வடிவேலு ஆனைமுகனும் சந்திரசேகரம் துர்க்கேஸ்வரனும் குற்றச்சாட்டு- மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமெனும் பேரில் அரச தரப்பு பங்காளிகள் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நேற்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமென்ற பெயரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட்டமொன்றை கூட்டியுள்ளார். முற்றுமுழுதான தேர்தல் பிரசாரக்கூட்டமாக நேற்று காரைநகரில் நடத்தப்பட்டதாகவும் விடுமுறை தினத்தில் அதிகாரிகள் அழைக்கப்பட்டதாக கூட்டமைப்பு சார்பு காரைநகர் பிரதேச சபை தலைவர் வடிவேலு ஆனைமுகன் குற்றஞ்சாட்டியுள்ளார். காரைநகர் பிரதேச சபை தமிழ்க் கூட்டமைப்பு வசம் உள்ளபோதும் பிரதேச சபையினருக்கு இக்கூட்டத்துக்கான உத்தியோகபூர்வ அழைப்பு வ…

  19. புலம்பெயர் தமிழர்கள் ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக வன்முறையற்ற போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம்! [Monday, 2013-08-12 19:36:13] இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் உரிமைகளை பெற்று கொடுக்க புலம்பெயர் தமிழர்கள் வன்முறையற்ற போராட்டத் தளத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் சமாதான பிரதிநிதியுமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சிங்களவர்கள், முஸ்லிம் மற்றும் ஏனையோரின் ஜனநாயகம், பொருளாதார, சமூக வளர்ச்சியை மீளமைப்பதற்கான முனைப்புகளையும் புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும். இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்ப…

  20. இக்பால் அலி கண்டி - குருநாகல் பிரதான வீதியின் மாவத்தகம பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் 'அமைதியாகச் செல்லவும்' என்று போடப்பட்டுள்ள விளம்பரப் பதாஇயை பொலிஸார் இன்று முற்பகல் அகற்ற முற்பட்டதை அடுத்து கிராமவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. பொது பல சேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டமொன்று குருநாகல் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் கண்டி - குருநாகல் வீதியில் பறகஹதெனிய பள்ளிவாசலுக்கு முன்னால் 'அமைதியாகச் செல்லுங்கள்' என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ள விளம்பரப் பதாதையை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதனை அகற்றா விட்…

    • 2 replies
    • 404 views
  21. அனுராதபுரத்தில் இருந்து 1300 சிங்களக் குடும்பங்களை மன்னார் மாவட்டத்தில் உள்ள கொண்டைச்சிக்கும் கொக்குப்படையானுக்கும் இடையில் குடியேற்றும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சிறப்பு மீள்குடியேற்றத் திட்டம் என்ற பெயரில், 4 கி.மீ பிரதேசத்தில் இடம்பெற்று வரும் இந்த சிங்களக் குடியேற்ற நடவடிக்கை முசலிப் பிரதேச மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குடியேற்றத்துக்காக சுமார் 400 ஏக்கர் வரையிலான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. இந்த நிலத்தில் சிங்களக் குடும்பங்களுக்கு தலா அரை ஏக்கர் காணியும், வீடு ஒன்றும் விரைவில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. அனுராதபுர மாவட்டத்தில் உள்ள மகாவிலாச்சிய, நொச்சியாகம போன்ற கிராமங்களில் இருந்து முசலிக்கு பேருந்துகளில் கொண…

    • 0 replies
    • 373 views
  22. யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த 30 ஆம் திகதி கொழும்பு வந்த தனியார் பயணிகள் சொகுசு பஸ்ஸில் வந்த பெண்ணொருவரின் கைப்பையிலிருந்த 25பவுண் நகை காணாமால் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெண் சம்பவதினம் இரவு எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளையயேற்றம் பகுதியிலிருந்து பஸ்ஸில் ஏறி கொழும்பு வந்துள்ளார். பஸ்ஸில் இவர் ஆசனத்துக்கு அருகில் கிளிநொச்சியிலிருந்து யுவதி ஒருவர் ஏறி அமர்ந்து வந்துள்ளார். ஓமந்தையில் இராணுவ சோதனை நிலையத்தில் இந்தப் பெண் இறங்கி பின்னர் பஸ்ஸில் ஏறியுள்ளார். இதன்போது கைப்பையை அவர் பார்த்த போது நகை பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்ட சிறிய பெட்டி கைப்பையின் அடியில் இருந்துள்ளது. இடையில் எந்த இடத்திலும் இவர் பஸ்ஸிலிருந்து இறங்கவில்லை. பஸ்ஸில் குறிப்பிட்ட நேரம் கண்ண…

    • 1 reply
    • 481 views
  23. புலிப் போராளிகளின் தியாகமே சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைத்தது – அகிம்சைப் போராட்டமல்ல - பேராசிரியர் சிற்றம்பலம மஹிந்த அரசு 'எமது பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றை தர தொடர்ந்தும் பின்னடிக்குமானால் போராடுவதை தவிர வேறு வழியில்லை' என கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருமான சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கூட்டமைப்பு வேடபாளர்களிற்காக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார். 'முதலில் மஹிந்த அரசுடன் பேசிப்பார்ப்போம். அது சரிப்பட்டு வரவில்லையானால் சர்வதேசத்திடம் இந்தியாவிடம் முறைப்பாடு செய்வோம். அவர்களுடாக தீர்வை பெ…

    • 1 reply
    • 467 views
  24. பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்க உள்ளார். இளவரசரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராயும் நோக்கில் பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இளவரசர் சார்ள்ஸ் இலங்கையில் தங்கியிருக்கும் போது விஜயம் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படும் இடங்களின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்துள்ளனர். பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் விசேட பிரதிநிதியாக இளவரசர் சார்ள்ஸ் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தூரப் பயணங்களை வரையறுக்கும் நோக்கில் பிரித்தானிய மஹாராணி இலங்கை விஜயத்தை தவ…

    • 2 replies
    • 451 views
  25. ந.ஜெயகாந்தன் கிராண்ட்பாஸிலுள்ளது பள்ளிவாசலேயல்ல. எனவே அதனை அகற்றியே தீரவேண்டுமென அப்பகுதியிலுள்ள ஜயதிலக்கராமய விகாரையின் விகாராதிபதி தம்மானந்த தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்; கிராண்ட்பாஸில் அமைந்துள்ளது பள்ளிவாசல் அல்ல. அது ஒரு தொழிற்சாலையாகவே ஆரம்பிக்கப்பட்டது. நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் ரமழான் காலத்தை முன்னிட்டு 10.08.2013 வரை அதனை பயன்படுத்த அனுமதி கொடுத்தோம். ஆனால், அக்கட்டிடத்தை தொடர்ந்தும் பள்ளிவாசலாக பயன்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இதற்கு ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டோம். அது பள்ளிவாசலே அல்ல என்பதனால் அதனை அகற்றியே தீர வேண்டும். நாம் எதிர்க்கும் இக்கட்டிடத்திற்கு முன்னால் உள்ளதுதான் பள்ளிவாசல். அதனை நாம் எதிர்க்கவில்…

    • 1 reply
    • 474 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.