Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமத்தில் சிங்களவர்களினால் கால்நடைகளை சுட்டுக் கொல்லும் நடவடிக்கை மீண்டும் தலைதூக்கியுள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் மிகுந்த கவலையடைகின்றார்கள். மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செலங்கல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஞ்சள் ஆறு (தற்போது சிங்களப் பெயர் மங்களகம) பகுதியில் கால்நடைகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மாடுகள் சுட்டுக் கொல்லப்படுகின்றன. கடந்த மே மாதம் 25ம் திகதி பூரணை தினமான சிங்களவர்களுக்கான வெசாக் தினத்தன்று தமிழர்க்குச் சொந்தமான மாடு ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டு சிங்களவர்களினால் அன்னதானம் வழங்கப்பட்டதாக பண்ணை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். நான்கு மாத கன்று ஒன்றின் தாய் மாடு இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மஞ…

    • 3 replies
    • 301 views
  2. அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா கூரிய ஆயுதத்தினால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் நவலோக்க தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=25052

    • 0 replies
    • 1.2k views
  3. சுதந்திரமான தேர்தல் நடைபெறுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட உரையாற்றிய இரா. சம்மந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரன், சம்பந்தன் ஒலிவடிவில், http://tamilworldtoday.com/?p=25083

    • 1 reply
    • 368 views
  4. இந்திய - இலங்கை உடன்படிக்கைக்கு எதிரான அமைப்பு கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாகÂ Â Â சத்தியாகிரக போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் கொழும்பு கொள்ளுப்பிட்டி சந்திப்பில் இருந்து காலி முகத்திடல் பிரதேசம் வரை கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து காலி முகத்திடலில் இருந்த கொள்ளுப்பிட்டி சுற்று வட்டம் வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்திய - இலங்கை உடன்படிக்கை கையெடுத்திட்டு, இன்றுடன் 26 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. இதனை முன்னிட்டு, இந்திய - இலங்கை உடன்படிக்கையை எதிர்க்கும் தேசிய அமைப்புகளின் ஒன்றியம் இன்று இந்திய தூதரகத்தின் முன்பாக சத்தியாகிரக போராட்டம் ஒன்றை நடத்தி வருகிறது. இந்திய - இலங்கை உடன்படிக்கையின் கீழ் உரு…

    • 3 replies
    • 556 views
  5. சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத் 'பொதுமக்களின் ஏகோபித்த கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருப்பதனால் எமது கூட்டமைப்பு வடமாகாண சபைத்தேர்தலில் வெல்லும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை' என்று முன்னாள் நீதியரசரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமாகிய சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்டத்திற்கான வேட்பு மனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று தாக்கல் செய்ததன் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், 'பலவருட காலமாக மக்களின் ஆதரவினை பெற்று வந்த கட்சி என்ற வகையில், எமது கட்சி இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றியீட்டும். …

    • 2 replies
    • 394 views
  6. மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக அத்துமீறிய சிங்களக் குடியேற்றத்தினை அரசாங்கம் முன்னெடுத்து வருவதில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கெவிலியா மடுக்கிராமத்தில் அம்பாரை மாவட்டத்தினைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களை அத்து மீறிக் குடியேற்றியுள்ளமையினை நேரில் சென்று பார்வையிட்டதுடன், அக்கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்துவருகின்ற தமிழ், சிங்கள மக்களையும் சந்தித்த பின்னர் அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தெடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கெவிலியா மடுக்கிராமம் மட்டக்களப்ப…

  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று நண்பகல் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பினர் பத்திரிகையாளர் சந்திப்பொன்றினை நடத்தியுள்ளனர். தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்டக் காரியாலயத்தில் இன்றுபிற்பகல் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், என். சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் பங்குபற்றியிருந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது வேட்பாளர்களுக்கான ஒன்றுகூடலும் அங்கு இடம்பெற்று வருகின்றது. http://globaltamilnews.net/GTMNEditoria…

  8. கொழும்பில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யார நடை போட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற உள்நாட்டு இறைவரி தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பின் வெள்ளவத்தை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யாரமாக நடைபோட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்தக் காட்சியை கண்ணை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இவ்வாறானதொரு நிலைமையை உருவாக்கிய பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சாரும். இன்று மட்டக்குளியிலிருந்து கொட்டாஞ்சேனை முதல் வெள்…

  9. மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு டவுன்ஹோல் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் முன்வைத்து மாலக்க சில்வா மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான மாலக சில்வா கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/local.php?vid=6185

  10. சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் தமிழ் தேசிய வீரர்கள் தினம் இன்றுஅனுஸ்ரிக்கப்பட்டது.தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. 1983 ஆம் ஆண்டு யூலைத்திங்கள் 25,27 ஆகிய தினங்களில் வெளிக்கடை வெஞ்சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் ஸ்தாபக தலைவர் தங்கத்துரை தளபதி குட்டிமணி உட்பட போராளிகள் பொதுமக்கள் 53 பேரின் 30 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு குறித்த அஞ்சலி நிழ்வுகள் இடம்பெறது. -குறித்த அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளர் நாய…

  11. வடமாகாண சபை தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவினை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தனர். (சுமித்தி தங்கராசா, எஸ்.கே.பிரசாத்) வவுனியா: ரொமேஷ் மதுசங்க, நவரட்ணம் கபில்நாத் கிளிநொச்சி: எஸ்.கருணாகரன் மன்னார்: ஆர்.லெம்பர்ட் http://tamil.dailymirror.lk/--main/76783-2013-07-29-07-38-46.html

  12. ஆட்சி அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அனைத்து அரச நிறுவனங்களும் தற்போது இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தற்போது சிவில் நிர்வாகம் முற்றாக அற்றுப் போயுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=24968

  13. யாழ்.குடாநாட்டில் மின்சாரம் நேரகாலம் எதுவும் இன்றி கண்ட கண்ட நேரங்களிலும் திடீர் திடீரெனத் தடைப்படுவதால், மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மாணவர்கள் தமது கல்வியைத் தொடர முடியாமல் திண்டாடுகின்றனர். ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நெருங்கிவரும் இந்த வேளையில் மின்சாரம் தடைப்படுவதால், பிள்ளைகளின் கல்வி நிலை குறித்து பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர். "பரீட்சைக் காலங்களில் மின்சார சபையினர் இப்படி ஏன் நடந்து கொள்கிறார்கள்?" என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். வீதி அகலிப்பு மற்றும் திருத்தப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம். அதுவும் கூட குறித்த நேரத்தை விட அதிக நேரம் இரண்டு மணித்தியாலத்துக்க…

  14. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் உள்ளிட்ட எந்தவொரு முன்னாள் போராளியும், போட்டியில் நிறுத்தப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிறேம் ஜெயந்த் தெரிவித்துள்ளார். “வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐந்து மாவட்டங்களிலும், போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டது. வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் கையளிக்கப்படும். இவர்களில் விடுதலைப் புலிகளின் எந்தவொரு முன்னாள் போராளியும் இடம்பெறவில்லை. யாழ்.மாவட்டத்தில் 7 வேட்பாளர்களையே சிறிலங்கா சுதந்திரக் கட்சி களமிறக்குகிறது. ஏனைய வேட்பாளர்கள் ஈபிடிப…

  15. மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கிடையாது என கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டமோ அல்லது மாகாணசபை முறைமையோ தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வாக அமையாது என்பதே கட்சியின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் மாகாணசபைகளின் அதிகாரங்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுனர் அல்லது அரசாங்கத்திடமே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் மெய்யான அதிகாரப் பகிர்வினை வழங்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திர…

    • 0 replies
    • 313 views
  16. கறுப்பு ஜூலை 30 ஆம் ஆண்டு நினைவு எழுச்சி நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை (27.07.13) மாலை 6 மணியளவில் london road, mitcham, figge’s marsh green ground இல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலில் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த சஞ்சய் அவர்கள் எழுச்சிச் சுடர் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பிரித்தானிய தேசிய கொடியை harrow நகராட்சி மன்ற உறுப்பினர் திரு சுரேஷ் கிருஷ்ணா அவர்களும் தமிழீழ தேசிய கொடியை கவிஞர் திரு கந்தையா ராஜமனோகரன் அவர்களும் முறையே ஏற்றி வைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து கறுப்பு ஜூலை நினைவு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. கவிஞர் திரு கந்தையா ராஜமனோகரன் அவர்கள் உரையாற்றி, பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அறிக்கையினையும் வாசித்தளித்தார். தமிழ் தேசிய மக்க…

    • 0 replies
    • 362 views
  17. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முல்லைத்தீவு மாவட்டம் கந்தையா சிவநேசன் (பவன்), வவுனியா மாவட்டம் வவுனியா நகரசபை முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசுபாரதி) மற்றும் வவுனியா நகரசபை முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), மன்னார் மாவட்டம் இருதயராஜா சார்ள்ஸ் ஆகியோர் வட மாகாணசபைத் தேர்தலில் புளொட் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களாவர். http://www.seithy.com/breifNews.php?newsID=88612&category=TamilNews&language=tamil

    • 2 replies
    • 439 views
  18. அரசியல் வெற்றியை ஈட்ட மக்களிடம் நிதியுதவி கோருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [ சனிக்கிழமை, 27 யூலை 2013, 12:14 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பலநூறு கோடிகளைக் கொட்டியும், அரச, இராணுவ இயந்திரங்களைப் பயன்படுத்தியும், சில ஆசனங்களையாவது வென்றுவிட முனையும், இலங்கை அரசாங்கத்தை எதிர்கொண்டு வெற்றி பெறுவதற்கு நிதியுதவி வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளினதும் தலைவர்களான இரா.சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, புலம் பெயர் த…

    • 23 replies
    • 1.1k views
  19. நீதிமன்ற உத்தரவின் பேரில் இறுதித் தருவாயிலும் கூட வடமாகாண சபைத் தேர்தலை நிறுத்த நடவடிக்கை எடுக்க முடியுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்தார். 30 வருடங்களின் பின்னர் இடம்பெறும் வடமாகாண சபைத் தேர்தலுக்காக முதலமைச்சர் வேட்பாளரின் பெயரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளபோதிலும் அரச தரப்பில் வடக்கில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாளரின் பெயர் இதுவரை வெளியிடப்படாமைக்கு பின்னால் பெரும் இரகசியம் ஒன்று காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டது சர்வதேச நாடுகளின் அழுத்தம…

    • 1 reply
    • 493 views
  20. அக்கரைப்பற்று இராமகிருஷ்ணர் மகாவித்தியாலத்தில் உள்ள பழமை வாய்ந்த விபுலானந்தரின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகளிடம் முறைப்பாடு தெரிவித்தும் அவர்கள் அசமந்தபோக்கில் உள்ளனர் என இந்து அமைப்புகள் விசனம் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=25010

    • 1 reply
    • 355 views
  21. விக்னேஸ்வரனை விமர்சிக்க பசிலுக்கு அருகதையில்லை – சம்பந்தன் பதிலடி [ ஞாயிற்றுக்கிழமை, 28 யூலை 2013, 05:07 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] அம்பாந்தோட்டையைச் சேர்ந்த பசில் ராஜபக்ச கம்பகாவில் போட்டியிட முடியுமானால், விக்னேஸ்வரன் ஏன் யாழ்ப்பாணத்தில் போட்டியிட முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். தமிழ் மக்களால் நேசிக்கப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முதன்மை வேட்பாளர் யார் என்பதை தீர்மானிக்கும் ஜனநாயக உரிமையும், சக்தியும் உள்ளது. எமது வேட்பாளர் குறித்து குறை கூறுவதற்கு சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எந்த அருகதையும் கிடையாது. வடக்கு, கிழக்கு மக்களால் மிகவும் நேசிக்கப்படும் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்…

    • 1 reply
    • 679 views
  22. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கான பாதுகாப்பை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமாரும் சென்றுள்ளார். நியுயோர்க்கில் பேட்டியளித்த அனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது; இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லா குடிமக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். எந்த பிரிவினரும் வஞ்சிக்கப்படக் கூடாது. நமது உணர்வுகளை இராஜாங்க ரீதியாக…

    • 5 replies
    • 396 views
  23. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (29) பிற்பகல் வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்த வாசிக்க... http://tamilworldtoday.com/?p=24927

    • 3 replies
    • 622 views
  24. நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இம்மூவரில் இருவர் நேற்றைய தினம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட தலைமைச்செயலகத்தில் கையொப்பமிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=24974

    • 2 replies
    • 649 views
  25. ஆனந்த சரத்குமாரவுக்கு வாய்ப்பில்லை: மருமகனுக்கு சந்தர்ப்பம் பாடசாலை ஆசிரியையை முழங்காலிட வைத்த வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவிற்கு எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு வழங்கப்படவில்லை என தெரியவருகிறது. வடமேல் மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளனர். இதன்போது வடமேல் மாகாணத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவருக்கும் வேட்புமனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆனந்த சரத்குமாரவிற்கு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் ஆனந்த சரத்குமாரவின் சகோதரியினுடைய மகனுக்கு வடமேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 392 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.