Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன்மை வேட்பாளராக தெரிவு செய்துள்ளதில் இந்தியா தொடர்புபட்டுள்ளதாக வெளியான செய்திகளை, இந்தியத் தூதரகம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, கொழும்பிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் பி.குமரன், "விக்னேஸ்வரனின் நியமனத்திலோ அதுதொடர்பான முயற்சிகளிலோ நாம் எந்த வகையிலும் தொடர்புபடவில்லை. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் நிச்சயமாக வீண் தலையீடுகளைச் செய்யவில்லை. இது சிறிலங்காவின் உள்நாட்டுத் தேர்தல் நடைமுறையாக இருக்கும் நிலையில், இதில் நாம் தலையிட வேண்டிய உறுதியான காரணம் என்ன?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=88091&cat…

  2. வடக்கு மட்டுமல்ல, கிழக்கும் கூட அத்துப்படியானது தான் - விக்னேஸ்வரன் [ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 01:42 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வடக்கு மாகாணம் மட்டுமல்ல, கிழக்கு மாகாணமும் கூட தனக்குப் பரிச்சயமான இடம் தான் என்று தெரிவித்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் அவர், கொழும்பில் பிறந்து வளர்ந்த ஒருவர், எவ்வாறு வடக்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியும் என்று எழுப்பப்படும் கேள்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “நான் பிறந்து வளர்ந்தது கொழும்பில் என்றாலும், எனது மூலம் யாழ்ப்பாணம் தான். தமிழரின் அரசியல் வரலாற்றில், சேர்.பொன்.இ…

  3. ஈழத்துக்கான அரசியல் போரை கூட்டமைப்பு முன்னெடுக்கும்; குணதாச அமரசேகர 22 ஜூலை 2013 பொலிஸ் காணி அதிகாரங்களை நீக்காது அரசு வடமாகாணசபைத் தேர்தலை நடத்துமானால், அதைப் பயன்படுத்திக்கொண்டு ஈழத்தை உருவாக்குவதற்கான அரசியல் போரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமாகாணசபைத் தேர்தல், பொதுநலவாய மாநாடு ஆகியன முடிவடைந்த பின்னர் அரசமைப்பில் அரசு திருத்தங்களை மேற்கொள்ளும் என வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். 'வடமாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் 13 இலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குவதென்பது மு…

  4. வடக்கு முழு அளவில் இராணுவமயப் படுத்தப்பட்டுள்ளது – ஜே.வி.பி. 22 ஜூலை 2013 வடககு முழு அளவில் இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தத்தின் பின்னர் வடக்கு முழு அளவில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படுவதாக ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வடக்கின் ஆளனரும் முன்னாள் இராணுவ அதிகாரி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கின் அனைத்து நிகழ்வுகளுக்கும் இராணுவத்தின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும், பாடசாலை நிகழ்வு ஒன்றை நடாத்த வேண்டுமாயின் இராணுவ முகாமொன்றின் அனுமதி அவசியம் எனவு; அவர் குறிப்பிட்டுள்ளார். பாரியளவில் காணிப் பிரச்சினை நிலவி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்கள்…

  5. இலங்கை பாகிஸ்தான் உடன்படிக்கையினால் இந்திய - இலங்கை உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாது - சல்மான் குர்திஷ் 22 ஜூலை 2013 இலங்கைக்கும், பாகிஸ்தானும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகளினால், இந்திய - இலங்கை உறவுகளுக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்திஷ் நேற்று மும்பாயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் வலுவான பிணைப்பு காணப்படுகிறது. இந்த பிணைப்புடன் எந்த நாட்டுக்கும் போட்டிப் போட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இலங்கை - பாகிஸ்தானுடன் செய்து கொண்டுள்ள அணுசக்தி உடன்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் இலங்கையுடன் இ…

  6. அரசாங்கம் பிரபாகரனைப் போன்று செயற்படுகின்றது – ரணில் 22 ஜூலை 2013 இந்த அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தலை துரித கதியில் நடத்துமாறு மக்கள் பாரியளவில் போராட்டம் நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி கீழ் மட்ட நிலைகளில் ஆயத்தப் பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணபைத் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளா…

  7. நவநீதம் பிள்ளை இந்த மாத இறுதியில் கொழும்புக்கு விஜயம் : 22 ஜூலை 2013 ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இந்த மாத இறுதியில் கொழும்புக்கு விஜயம் செய்வார் என கூறப்படுகின்றது. அவருடைய வருகை ஒக்டோபர் மாதம் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் முன்கூட்டியே வரக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அவருடைய வருகை தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை என எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார் http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94298/language/ta-IN/article.aspx

  8. இவை ராணுவத்துக்குரிய காணி- மன்னாரில் அறிவிப்புப்பலகைகள் 22 ஜூலை 2013 மன்னார் மாவட்டத்தில் உள்ள பல காணிகள் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காணிகளை அடையாளப்படுத்தும் வகையில் 'இது இராணுவத்தினருக்கு உரிய காணி'' என தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் பெயர் பலகைகள் காணிகளில் நடப்பட்டுள்ளன. மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, மன்னார் சௌத்பார் பிரதான வீதி மற்றும் பனை மரக்காடுகள், அடர்ந்த காடுகளிலேயே காணி ஒதுக்கீடுகள் இடம் பெற்றுள்ளன. அதிகளவான தனியார் காணிகளும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. கடந்த போர் காலத்தில் அதுவும் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து பல ஆயிரக்கணக்காண தமிழ், முஸ்ஸிம் குடும்பங்கள் அகதிகளாக…

  9. யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டவில்லை – 22 ஜூலை 2013 சி.வீ.விக்னேஸ்வரன் - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என முன்னாள் நீதியரசரும், வட மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளருமான சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு வரையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார் அப்போதைய தமிழ்த் தமிழ்த் தலைவர்கள் கடவுளாலேயே தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என தெரிவித்திருந்தனர் என அவர் குறிப்பி…

  10. வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கட்சிகளின் தலைவர்களும் தேர்தலில் களமிறங்குவது குறித்து ஆராயப்பட்டு வருகிறது. மேலும், http://tamilworldtoday.com/?p=23833

    • 0 replies
    • 294 views
  11. வடக்கு மாகாண சபைத் தேர்தல் வரலாற்று திருப்புமுனை வெற்றியாக அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=23803

  12. மணற்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரைக்கும் நீண்டு செல்கின்ற வடமராட்சிக்கிழக்கு பெருங்கடல் ஏறக்குறைய 30 கீலோமிற்றர் ஆகும். இந்தக் கடலை நம்பி சுமார் 4000 மீனவக் குடும்பங்கள் வாழ்கின்றனர். தற்போது நாளாந்த உணவைக்கூட பெறுவதில் கடும் கஸ்ரப்படுகின்றனர். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே தமது ஐPவனோய தொழிலை மேற்கொள்ளவேண்டிய நிலை உள்ளது. தைமாதம் தொடக்கம் மார்கழி மாதம் வரைக்கும் எந்தெந்த மீன் எந்த மாதத்தில் அதிகளவில் பிடிபடும் என தொழிலாளர்கள் தெரிந்து அதற்கேற்றவாறு தொழிலை மேற்கொண்டு வந்தார்கள். ஆனால் யுத்தம் முற்று முழுதாக முடிவடைந்து இலங்கை பாதுகாப்பு படையினர் இலங்கையின் அனைத்து இடங்களையும் கைக்கொண்டபின்னர் தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள முஸ்லீம் மீனவர்கள் வடமராட்சி கிழக்கு கடல் பகுத…

  13. வடமராட்சி கிழக்கின் நுழைவாயிலில் வலிக்கண்டி, மணற்காடு குடத்தனை பொற்பதி அம்பன் நாகர்கோயில் மக்களின் எதிர்ப்புக்களை பெறுட்படுத்தாது செல்வந்தர் ஒருவருக்கு மதுபானச்சாலையை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ் இடத்தில் மதுபானச்சாலை அமைப்பதனால் சுமார் 350மேற்பட்ட பனங்கள்ளு உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாமல் உள்ளதுடன் மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். வயல் நிலங்களில் கட்டிடங்கள் அமைக்கமுடியாது என்ற சட்டங்கள் உள்ளபோதும் அம் மதுபானச்;சாலை வயல் நிலத்திலே அமைக்கப்பட்டுள்ளது. அருகில் சுமார் 150 மீற்றர் தொலைவில் ஆலயம் அமைந்துள்ள புனித பிரதேசம் அமைந்துள்ளது. வீதியோரமாக இம் மதுபான சாலை காணப்படுவதால் மதுப்பிரியர்களால் போக்குவரத்துக்கு இடையூ…

  14. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த தமிழ் இளைஞனொருவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சிவராஜா பிரகாஷ் என்ற இளைஞனே பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தின் 2வது மாடியிலிருந்து குதித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் தங்கியிருந்த அவர், 6 நாட்களுக்கு முன்னர், இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பும் தமிழர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விசேட விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இவர்களில் சிலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்த…

  15. தமிழர்களை நம்பவில்லை - பசிலுக்குப் பதிலடி கொடுத்தார் விக்னேஸ்வரன் [ சனிக்கிழமை, 20 யூலை 2013, 00:32 GMT ] [ தா.அருணாசலம் ] மாகாணசபைகளின் காணி காவல்துறை அதிகாரங்களை பறித்துக் கொள்ளும் முடிவு தற்கொலைக்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபைத் தேர்தல் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை ஒப்படைக்காமல் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை. மாகாணங்களில் சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த மாகாணசபைகளிடமே ஒப்படைக்க வேண்டும். வடக்கு மாகாணத்தில் தற்போது நிலை கொண்டுள்ள சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினர் அனைவரும் சிங்களவர்களே. அங்கு, சிறிலங்கா இராணுவத்தின் 15 படைப்பிரிவுகள்…

    • 3 replies
    • 797 views
  16. வலிகாமம் வடக்கில் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான 55 காணித் துண்டுகளைச் சுவீகரித்தமைக்கான காரணத்தைக் குறிப்பிடுமாறு காணி அமைச்சருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=23763

    • 0 replies
    • 609 views
  17. எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த 22 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைக்க தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தீர்மானத்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=23760

    • 0 replies
    • 536 views
  18. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஐந்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் இன்று (21) முற்பகல் வவுனியாவில் நடைபெற்றது. மேலும், http://tamilworldtoday.com/?p=23758

    • 0 replies
    • 536 views
  19. கிளிநொச்சி இரணை மடுவுக்கு அருகே பாழடைந்த கிணற்றுக்குள் இரணை மடு இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் இரண்டுபேர் நேற்று(20.07.2013) சனிக்கிழமை நன்பகல் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி இரணை மடுப்பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றில் தண்ணீர் இறைத்துவிட்டு மீன்பிடிக்க இறங்கியிய போது எதிர்பாராதவிதமாக கிணறு இடிந்ததில் சுகத் அமரசிங்க (26 வயது) இராணுவ சிப்பாயொருவர் இடிபாடுகளுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இவருடன் கிணற்றினுள் இறங்கிய மற்றுமொரு சிப்பாய் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.…

  20. இந்தியாவை எதிர்க்கவில்லை, ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்:தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படை வீரர் விஜிதமுனியின் பேட்டி vijitha rohan இந்தியாவை எதிர்க்கவில்லை. ராஜீவ் காந்தியென்ற ஆக்கிரமிப்பாளனையே எதிர்த்தேன்.ராஜீவை தாக்கியமை அரச துரோகமானாலும் அது தேசத்துரோகமல்ல. இந்தியாவை திருப்திப்படுத்தவே எனக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தேசப்பற்று இன்று அரசியல் வயிற்றுப் பிழைப்பாக மாறிவிட்டது. நான் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் இலங்கையின் வான் பரப்பில் அத்து மீறி, எமது நாட்டை ஆக்கிரமித்த ராஜீவ் காந்தி பலாத்காரமாக இந்திய - இலங்கை உடன்படிக்கையை மேற்கொண்டு நாட்டைப் பிரிக்கும் 13ஆவது திருத்தத்தையும் மாகாண சபை முறைமையையும் எமது அரசியலமைப்புக்குள் புகுத்தினார…

    • 0 replies
    • 555 views
  21. அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்துவதில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல் அளிப்பவர்களுக்கு பண சன்மானங்கள் அளிக்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருபவர்களை பபுவா நியூகினியாவில் மீள்குடியமர்த்தும் தனது புதிய கடும் போக்குக் கொள்கையை வலுப்படுத்தும் அங்கமாகவே அவர் மேற்படி அறிவிப்பைச் செய்துள்ளார். சட்டவிரோதமாக படகுகளில் வரும் அகதிகள் அவுஸ்திரேலியாவில் மீள் குடியமர்த்தப்பட வாய்ப்பில்லை எனவும் அவரது புகலிடக்கோரிக்கை அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் வறிய நாடான பபுவா நியூகினியாவிலேயே மீள்குடியமர்த்தப்படுவார்கள் என்றும் கெவின் ருத் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையி…

  22. அரசமைப்புத் திருத்தம் 6 மாதம் ஒத்திவைப்பு; இந்தியாவின் தலையீட்டால் பின்வாங்கியது இலங்கை வடமாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் அரசமைப்பில் முக்கிய சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்த இலங்கை அரசு, இது விடயத்தில் இந்தியாவின் தலையீட்டையடுத்து தனது யோசனையை 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. இதன் பிரகாரம் மாகாண சபைத் தேர்தல், பொதுநலவாய மாநாடு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஆகியவை முடிவடைந்த பின்னரே இது விடயம் குறித்து அரசு மீள பரீசிலிக்கும் என அறியமுடிகின்றது. கடந்த 9 ஆம் திகதி உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்த இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், தமிழ்த் தேசியக் கூட…

    • 1 reply
    • 368 views
  23. வலி வடக்கில் 6 387 ஏக்கர் அரச உடைமையாக்கப்படும் அதில் எந்த மாற்றமும் கிடையாது காணி அமைச்சர் 21 ஜூலை 2013 வடக்குஇ கிழக்கிலுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் ஒரு முடிவு கட்டப்படும் என்று தெரிவித்துள்ள காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்இ வலி.வடக்கில் காணி சுவீகரிப்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அடித்துக் கூறிவிட்டார். வடக்கு கிழக்கிலுள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் காணித் துண்டுகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளுமாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்தப் பிரச்சினைகளுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவு எட்டப்படுமெனவும் குறிப்பிட்டார். வடக்கில் பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன் துறை துறைமுக விஸ்தரிப்புக்காக…

    • 1 reply
    • 321 views
  24. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக, முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், வடக்கு முதல்வர் பதவிக் கனவுடன் இருந்த ஈபிடிபி பொதுச்செயலர் டக்ளஸ் தேவானந்தா தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=23711

  25. நா.நவரத்தினராசா யாழ்.மாவட்ட ஸ்ரீ ரெலோ அலுவலகத்தின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குக்கும் மேற்பட்டவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீ ரெலோ அமைப்பின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சோசூரியர் செந்தூரன் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/75825-2013-07-21-07-13-29.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.