Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சர்வதேச நாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=22506

    • 0 replies
    • 583 views
  2. வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்றும் நடைபெறவுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/?p=22508

    • 0 replies
    • 414 views
  3. வடக்கு, வடமேல், மற்றும் மத்திய மாகாண சபை தேர்தல்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=22511

    • 0 replies
    • 363 views
  4. தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் அங்கம் வகித்து படையினரிடம் சரணடைந்துள்ள நிலையில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. http://tamilworldtoday.com/?p=22519

    • 0 replies
    • 298 views
  5. கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யார் அமையவேண்டும் மனம் திறக்கின்றனர் வடபகுதி மக்கள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்வதில் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பு குழப்பத்தில் உள்ளது. மூன்று நாள்களாக நடத்தப்பட்ட கட்சிக் கூட்டத்திலும் முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ்மக்களிடம் கருத்துக் கேட்டோம். அவர்களது வெளிப்பாடு இப்படி இருக்கிறது. வவுனியாவிலிருந்து மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரைநிறுத்துவது என்பதுதொடர்பில் கூட்டமைப்புக்குள் பலத்த வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகிறது.கால…

    • 2 replies
    • 569 views
  6. செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிப் பட்டியலில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான் மாத்திரமே இடம்பெற்றுள்ளதாக தயா மாஸ்டர் தெரிவித்தார். புலிகளின் சர்வதேச நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பான கே.பி. என்ற குமரன் பத்மநாதனோ அல்லது புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல் பிரிவின் தலைவி தமிழினியோ இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தயா மாஸ்டர் தெரிவித்தார். இதேவேளை வடமாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து ஈ.பி.டி.பி இவ்வார இறுதிக்குள் தீர்மானிக்கும் என்று அக்கட்சியின் செயலாளர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?new…

  7. சில வருடங்களுக்கு முன், மறைந்த பத்திரிகையாளர், மாமனிதர் சிவராம் தாரகியினால், இதே தலையங்கத்துடன் ஒர் கட்டுரை எழுதப்பட்டது. அக்கட்டுரை, இங்கு என்னால் எழுதப்படும் விடயத்தை விட வித்தியசமான உள்ளடக்கத்தை கொண்டிருந்தது. அக் கட்டுரையில், சிவராம், இலங்கைதீவு 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்திலிருந்து, தெற்கின் சிங்கள அரசியல்வாதிகள் எப்படியாக, இலங்கைதீவில் வாழும் ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளை, பார்க்கிறார்கள், விளங்கிக்கொள்கிறார்கள், காலப்போக்கில் அவர்களது நிலைப்பாட்டை எப்படியாக மாற்றிக்கொள்கிறார்கள் என்பதை விளக்குவதற்காக எழுதப்பட்டது. தமிழில் எழுதப்பட்ட மிக பிரபலியமான சிவராமின் அக்கட்டுரை, காலப்போக்கில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது. 1983ம் ஆண்டு ஆரம்பமான ஆயுதப் …

  8. 13வது திருத்தச்சட்டங்களின் கீழ் உள்ள காவல்துறை அதிகாரங்கள் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு விரோதமானது என்பதால், இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் நடத்திய தனியான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறிலங்கா அதிபரைச் சந்திக்க முன்னர், கோத்தாபய ராஜபக்சவுக்கும், சிவ்சங்கர் மேனனுக்கும் இடையில் நடத்தப்பட்ட இந்தத் தனியான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இருதரப்பினாலும் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இந்தச் சந்திப்பில், …

    • 2 replies
    • 787 views
  9. அணு ஆலை தொடர்பிலான பேச்சுவாத்தையில் இலங்கை அரசாங்கம் தற்போது பாகிஸ்தான் அரசாங்கத்துடன் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்த வருடம் இலங்கைக்கு எதிராக இந்திய வாக்களித்திருந்தது. இதனை அடுத்தே இலங்கை அரசாங்கம் அணு ஆலை தொடர்பிலான பேச்சுவாத்தையில் பாகிஸ்தானுடன் ஈடுபட்டுள்ளது எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேநேரம், அணு ஆலை தொடர்பில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தையினை இலங்கை இழுத்தடிப்புச் செய்துள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74949-2013-07-14-09-51-36.html

    • 1 reply
    • 488 views
  10. வடக்கு மாகாணத்தின் ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஈ.பி.டி.பி. கட்சித் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா களமிறக்கப்படவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22469

    • 1 reply
    • 890 views
  11. ஒருபோதும், தாம் அரசியலில் ஈடுபட போவதில்லை என புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். தான் எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட போவதாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெரும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அரசியலை விட சமூக சேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார். 13வது அரசியல் அமைப்புத் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்படுவது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தான் இன்னும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93996/language/ta-…

    • 4 replies
    • 667 views
  12. இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் இரத்து செய்வதற்கோ இன்றேல் திருத்துவதற்கோ முயற்சிக்கின்றது. தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அந்த சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கு இடமளிக்கவேண்டாம் என்று தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா கோரியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கோரியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை நீர்த்து போக செய்யவோ, அல்லது ரத்து செய்ய வழிவகை செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இறுதி கட்ட போரில் பலரை இராணுவம் கொன்று குவித்த பின்பும் இலங்கை தமிழர்களுக்கு எத…

  13. சர்வதேச அளவிலான சுயேச்சையான விசாரணை நடத்த, சர்வதேச சமூகம் தயக்கம் காண்பித்து வரும் நிலையில் தனது ஆவணப்படம் எதிர்காலத்தில் முக்கிய சான்றாக இருக்கும் என்று சனல் 4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=22423

    • 0 replies
    • 583 views
  14. 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதையோ அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரும் மட்டக்களப்பு குடியியல் சமூகத்தின் போசகருமான கலாநிதி ஜோசப் பொன்னைய்யா தெரிவித்தார். http://tamilworldtoday.com/?p=22415

  15. -எஸ்.கே.பிரசாத் யாழில் சுதந்திரக் கட்சி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா 'யாழை விட்டு போக விரும்பவில்லை. இங்கு ஒரு பெண் பார்க்கவும்' என பொது மக்களிடம் கோரியுள்ளார். யாழ்.குருநகர் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'யாழ் மாவட்டத்திற்கு நான் பல தடைவகள் வருகை தந்திருக்கின்றேன். இந்த முறை நான் வருகை தந்தததை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. எனது பழைய நண்பர்கள், நான் திரிந்த இடங்கள் எல்லாம் சுற்றி வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிருக்கின்றது. எனக்கு யாழை விட்டு போகவே விருப்பவில்லாமல் இருக்க…

    • 1 reply
    • 1.1k views
  16. தமது சொந்தக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடப்போவதாக ஆராய்ந்து வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீண்டும் வெற்றிலையில் போட்டியிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.டி.பி. தனது வீணைச் சின்னத்தைக் கைவிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார். வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் தொடர்பில் அறிவிப்புகள் வெளியாவதற்கு முன்னர், ஈ.பி.டி.பி. தனித்துப் போட்டியிடுவதா, இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் பல கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. கடந்த காலங்களிலும் இவ்வாறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று பின்னர் வெற்றிலையில் போட்டியிடும் …

  17. 6,000 மாத்திரைகளுடன் பாகிஸ்தான பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாத்திரைகளை பயணப்பொதியில் மறைத்து வைத்து கொண்டுவந்தபோதே சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் மாத்திரைகளை மீட்டுள்ளதுடன் அவரையும் கைது செய்துள்ளனர். மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மாத்திரைகள் மன நோயாளிகள் சிகிச்சை பயன்படுத்தப்படுகின்ற மாத்திரைகளாகும். எனினும், அந்த மாத்திரைகள் மாணவர்கள் பயன்படுத்துவதாக வதந்தி நிலவுகிறது. ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் மஸ்கட்டிலிருந்து இன்று காலை வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74951-6000---.html

  18. லஞ்சமாக பெற்றுக்கொண்ட 400 மில்லியன் ரூபாய் பணத்தை தனியாக நாமல் தனியாக சுருட்டிக் கொண்ட விவகாரத்தில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாப ராஜபக்ஷ கொலைவெறியுடன் இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் சிங்கள இணையத்தளத்தில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கொழும்பு காலிமுகத்திடல் முன்பாக உள்ள வெற்றுக் காணித்துண்டொன்றை இந்திய நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு கொடுப்பது தொடர்பில் ராஜபக்ச குடும்பம் 700 மில்லியன் ரூபாவை லஞ்சமாக கோரியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக 400 மில்லியன் ரூபா அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தின் தரகர்களில் ஒருவரும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளருமான நாலக கொடஹேவா என்பவர் இந்தப் பணத்தைப் பெற்…

  19. இலங்கைக்கு எதிராக பத்தாயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையில் சர்வதேச மன்னிப்புச் சபை! [saturday, 2013-07-13 19:05:59] இலங்கைக்கு எதிராக கையொப்பங்களை திரட்டும் பணிகளை சர்வதேச மன்னிப்புச் சபை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபை விசேட மகஜர் ஒன்றை சமர்ப்பித்து அதற்கு ஆதரவாக பத்தாயிரம் கையொப்பங்களை திரட்டவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக இந்த கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளன. இணையத்தின் ஊடாக இந்த கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற தொனிப்பொருளிலான மகஜர்…

    • 0 replies
    • 340 views
  20. ஐ.நா.வில் எதிராக வாக்களித்த நாடுகளை தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்கத் தடை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகளை, வடக்கு மாகாணசபைத் தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்கக் கூடாது என தனக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் செயலர்களுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர்,ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்கப்படமாட்டார்கள். என்று தெரிவித்துள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகளை தேர்தல் கண்காணிப்புக்கு அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அவர் கூறியுள்ளார…

  21. சரணடைந்து காணாமற்போனவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் நாளை விசாரணை [ ஞாயிற்றுக்கிழமை, 14 யூலை 2013, 08:08 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] 2009 மே 18ம் நாள் போரின் முடிவில் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமற்போன, ஐந்து பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் வவுனியா மேல்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. போரின் முடிவில் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த தமது உறவுகள் எங்கே என்று கண்டுபிடிக்க்க் கோரி, அவர்களின் உறவினர்கள் இந்த ஆட்கொணர்வு மனுக்களை சமர்ப்பித்துள்ளனர். மனுதாரர்களின் சார்பில் சட்டவாளர் கே.எஸ்.இரத்தினவேல் முன்னிலையாகவுள்ளார். 2009 மே 18ம் நாள், முல்லைத்தீவு செல்வபுரத்தில், சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த 800 பேர் ப…

  22. கூட்டமைப்பும் முதலமைச்சருக்கான வேட்பாளரும் - நிலாந்தன் 14 ஜூலை 2013 வடமாகாண சபைக்கான கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் யார் என்பது பற்றிய முடிவுகள் வெளிவராத ஒரு நிலையில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. கிடைக்கப்பெறும் செய்திகளின் படி, மாவை சேனாதிராசாவிற்கும், ஓய்வுபெற்ற நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் கூட்டமைப்பு இரண்டு பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழரசுக் கட்சியும் உட்பட கூட்டமைப்பில் உள்ள ஏனைய எல்லாக் கட்சிகளும் மாவை சேனாதிராசாவையே முன்மொழிவதாகத் தெரிகிறது. ஆனால், கட்சித் தலைமையும் சுமந்திரனும் ஓய்வு பெற்ற நீதியரசரை முன்மொழிவதாகத் தெரிகிறது. இருப்பினும், பெரும்பாலும் கதைத்துப்பேசி ஒரு சமரச முடிவுக்கே வரக்கூடும் என்று ஒரு தகவல் உண்டு. மாவையை ஆதரிப்பவர்கள்…

  23. இலங்கை VS இந்தியா - இலங்கை பாகிஸ்தானுடன் அணுசக்தி உடன்படிக்கை கைச்சாத்திடத் தீர்மானம் - 14 ஜூலை 2013 இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானுடன் அணுசக்தி உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்க நிறைவேற்றிய தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்ததனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் இலங்கை இவ்வாறு அணுசக்தி உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடத் திட்டமிட்டுள்ளது. சிவில் அணுசக்தி பயன்பாடு குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அணுசக்தி பயன்பாடு தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிடப்படுகிறது. இதேவேளை,…

  24. மூதூர் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரம் 14 ஜூலை 2013 மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் அக்செய் பெய்ம் என்ற பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறி;த்த விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித…

  25. காவல்துறை அதிகாரம் குறித்த விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது – கோதபாய ராஜபக்ஷ 14 ஜூலை 2013 13ம் திருத்தச் சட்டத்தின் காவல்துறை அதிகாரம் குறித்த விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த விடயத்தில் எவ்வித இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.