Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13ஆவது அரசமைப்பு குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவைக் குப்பைக் கூடையில் போட வேண்டும் என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=19735

    • 0 replies
    • 504 views
  2. இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - ஜனாதிபதி ராஜபக்ஷ மலேசியப் பிரதமரிடம் தெரிவிப்பு அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக்கிடம் தெரிவித்துள்ளார். தன்சானியாவில் மலேசியப் பிரதமர் நஜீப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய இருதரப்பு சந்திப்பொன்றின்போதே ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக த நியூ ஸ்ட்செய்ட் டைம்ஸ் பத்திரிகையை மேற்கோள் காட்டி கொழும்பு எக்ஸ்பிரஸ் செய்தி ஏடு தெரிவித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி சந்திப்பின்போது தனக்கு முறைப்படி அழைப்பு விடுத்த…

    • 1 reply
    • 319 views
  3. தெரிவுக்குழுவைப் புறக்கணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு அரசியலமைப்பில் மாற்றத்தைச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ள தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் நேற்று கொழும்பில் நடத்திய கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ், ரெலோ, புளொட், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள், தெரிவுக்குழுவைப் புறக்கணிக்கும் ஒருமனதாக முடிவை எடுத்தனர். அதே…

    • 0 replies
    • 424 views
  4. இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அடக்கி வாசிக்கிறது இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே இலங்கையில் மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கான அரசின் முயற்சிகள் தாமதமடைந்துவருவதாக இந்திய இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரி கர்ணல் ஹரிகரன் தெரிவிக்கிறார். வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபை அதிகாரங்களைக் குறைக்கும் விதத்தில் அரசியலமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை அரசாங்கம் முயற்சித்தபோதே, இந்திய அரசின் தலையீடு காரணமாக அந்த முயற்சிகள் தடைப்பட்டதாக அவர் கூறினார். வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றால், அரசியலமைப்பின் 13-ம் திருத்தத்தின்படியான உரிமைகளை வடமாகாணசபை பெற்றுவிடுவதைத் தடுப்பதற்காகவே அரசாங்கம் இந்த முயற்சி…

    • 0 replies
    • 474 views
  5. போர்க்குற்ற விசாரணை நவிப்பிள்ளை விடாப்பிடி இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை (நவிப்பிள்ளை) மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்திலும், இலங்கையில் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நவிப்பிள்ளை வலியுறுத்தி இருந்தார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் திட்டமிட்டுள…

    • 0 replies
    • 261 views
  6. சிங்களவர்களின் பலம் இன்னும் 50 வருடங்களே இலங்கையில் இருக்கும் - அஸ்கிரிய மாநாயக்கர் 29 ஜூன் 2013 அதன் பின்னர் அந்நிய இனங்களின் அதிகாரத்தின் கீழ் சிங்களவர்கள் வாழ நேரிடும், சிங்களவர்களின் பலம் இன்னும் 50 வருடங்களே இலங்கையில் இருக்கும் என்பதை சிங்கள மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் அதன் பின்னர் அந்நிய இனங்களின் அதிகாரத்தின் கீழ் சிங்களவர்கள் வாழ நேரிடும் எனவும் அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார். இன்னும் 50 வருடங்களில் சிங்கள மக்களுக்குரிய கலாசாரம் முற்றாக இல்லாமல் போய்விடும் எனவும் அவர் கூறியுள்ளார். கண்டி உடத்தும்பர பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் மாநாயக்க தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார். தூரநோக்கின்றி தற்காலிக லாபங்களை…

    • 2 replies
    • 1.1k views
  7. வடக்கு தேர்தலை நீதிமன்றின் உதவியுடன் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் திட்டம் வடக்கு தேர்தலை நீதிமன்றின் உதவியுடன் ஒத்தி வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வராது வட மாகாணசபைத் தேர்தலை நடாத்தினால் அதனால் தெற்கு மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் எனத் தெரிவித்து உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த மனு தாக்கல் செய்வது குறித்து சட்டத்தரணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. இவ்வாறு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தலை ஒத்தி வைத்தால் சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்தாது என அரசாங்கம் கருதுவதாகத் தெரிவிக்கப்…

    • 0 replies
    • 320 views
  8. அமெரிக்க பதில் துணைச் சட்ட மா அதிபர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் 30 ஜூன் 2013 அமெரிக்காவின் பதில் துணைச் சட்ட மா அதிபர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் என்பவர் கடமையாற்றி வருகின்றார். உலக வங்கியின் நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் ஏ.தர்மரட்னம் என்பவரின் புதல்வியான மைதிலி ராமன் துணைச் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மைத்லி ராமன், இலங்கை வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் சீ.லோகநாதனின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. மைதிலி ரமானின் பெற்றோர் வடமாராட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க நீதித் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் பதில் துணைச் சட்ட மா அதிப…

    • 2 replies
    • 429 views
  9. இந்தியா துரத்திய சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு பாகிஸ்தானின் குவேட்டாவில் பயிற்சி [ ஞாயிற்றுக்கிழமை, 30 யூன் 2013, 01:58 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்நாட்டின் வெலிங்டன் பாதுகாப்புச் சேவை அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில், பயிற்சியைத் தொடரமுடியாமல் வெளியேறிய இரண்டு சிறிலங்கா படை அதிகாரிகளும் பாகிஸ்தானுக்குப் பயிற்சிக்காக அனுப்படவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காப் படையினருக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு எதிர்ப்புகள் வலுத்ததால், இந்திய மத்திய அரசு வெலிங்டனில் பயிற்சி பெற்று வந்த மேஜர் சன்ன ஹரிஸ்சந்திர, விங்கொமாண்டர் சாந்த திசநாயக்க ஆகியோரை செகந்தராபாத்தில் பயிற்சி அளிக்க இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்தது. ஆனால் அதனை நிராகரித்து விட்டு, இரு படை…

    • 2 replies
    • 372 views
  10. 13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது – சுமந்திரன் 30 ஜூன் 2013 13ம் திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுமே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உத்தேச 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் நாட்டின் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்குமே தவிர வேறும் நன்மைகள் ஏற்படப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரப் பகிர்வினை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டங்களை நோக்கியே நகர வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு சுபீட்சமடைய வேண்டுமாயின் நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அண்மையில …

  11. ஜூலை 4 டில்லிக்கு விரைகிறார் பஸில்; மேனனின் வருகைக்குமுன் இந்தியா அவசர அழைப்பு இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே இராஜதந்திர ரீதியிலும், இராணுவ ரீதியிலும் முறுகல் நிலை வலுவடைந்துள்ள இந்த நேரத்தில் இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரில் ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 4 ஆம் திகதி புதுடில்லிக்குப் பயணமாகிறார் எனத் தெரிய வருகிறது. அரசமைப்பின் "13' ஆவது திருத்தம் மற்றும் வடக்கு மாகாணசபைத் தேர்தல் என்பன தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாட்டை இந்தியாவுக்குத் தெளிவாக விளக்குவதற்கே பஸில் அழைக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை இல்லாதொழிப்பதற்கு இலங்கை அரசு முயற்சிகளை ம…

  12. இலங்கைப் பிரச்சனைக்காக இந்தியாவுடன் சீனா முரண்பட்டுக்கொள்ளாது : கேணல் ஹரிகரன் இந்தியாவைச் சூழ உள்ள நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. உள்கட்டுமானத் துறை, தொலைத் தொடர்பு, சுற்றுலாத் துறை, மின்னுற்பத்தி போன்ற துறைகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கின்றது. ஒன்றை மறந்துவிடக்கூடாது, இந்தியாவின் உள்ளேயும் இதே வியாபாரங்களில் சீனாவின் ஆதிகம் உள்ளது. சிறிய மற்றும் மத்தியதர வியாபார நிறுவனங்களுக்கான கடன்கள் ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவுடன சீனாவின் வியாபாரம் 2015 ஆம் ஆண்டில் 100 பில்லியன் டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்ப்படுகின்றது. இலங்கை அரசியலில் இந்தியாவுடன் மோதிக்கொண்டு இவற்றைச் சீனா இழக்க விரும்புமா என்றால் நான் அப்பட…

  13. ஆளும் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயா மாஸ்டரினால் தயாரிக்கப்படுகிறது 30 ஜூன் 2013 ஆளும் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னாள் தமிழீழ விடுதபை; புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரினால் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தலில் தயா மாஸ்ட போட்டியிடுகின்றார். மாகாணத்தின் நிலவி வரும் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட உள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சில சிங்கள அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleTyp…

  14. எமது மக்களின் தியாகங்களிற்கு மாகாணசபை தீர்வாகுமா? கிளிநொச்சியில் மாவை. சேனாதிராசா கேள்வி!! 29 ஜூன் 2013 'எண்ணற்ற தியாகங்கள், எத்தனையோ உயிர்ப்பலிகள் இந்த மண்ணிற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எந்த நிலத்தில் வாழ வேண்டுமென்று இத்தனை தியாகங்கள் மேற்கொள்ளப்பட்டதோ அந்த மண் எங்கள் மக்களிடத்தில் இல்லை. ஜனநாயகத்தின் பெயரால் ஆட்சிக்கு வந்தோரல் எம் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டுவிட்டது. எமது மக்கள் பாரம்பரியமாக உரிமை கொண்டாடிய காணிகள் இப்பொழுது அரசாலும் இராணுவத்தாலும் அவை சார்ந்தோராலும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. தகுதியற்ற முறையில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டு அக்குடும்பங்கள் தமிழ்தேசியத்திலிருந்து திட்டமிடப்பட்டு அந்நியப்படுத்தப்பட்டு வருகின்றன. புனர்வாழ்வென்ற பெயரில…

    • 1 reply
    • 356 views
  15. வலிகாமம் வடக்கில் சிங்களக் கொலனிகள்! தமிழ், சிங்களம் பேசும் மக்கள் இந்த நாட்டில் சமாதானமாக ஒட்டுறவோடு வசிப்பதில் விருப்ப மில்லாத இந்த நாட்டின் ஒரு பகுதியினரின் மிகப் பெரிய பின்னடைவுத் திட்டமே இது. யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கில் 6,381 ஏக்கர் நிலப் பரப்பை சுவீகரிக்கப் போவதாக அரசு அறிவித்துள்ளது. மக்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இதற்கான நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அரசு முன்னெடுத்துவரும் நடவடிக் கையை எதிர்த்து உயர் நீதிமன்றத் திலும் மேல் முறையீட்டு நீதிமன்றத் திலும் 2,500க்கும் மேற் பட்டவர்கள் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். தோற்றுப்போன மக்கள் போராட்டங்கள் தமது சொந்த இடங்களுக்குத் திர…

    • 1 reply
    • 561 views
  16. மீண்டும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை! 29 ஜூன் 2013 1990ம் ஆண்டு மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு வலயமெனக்கூறி வெளியேற்றப்பட்ட மக்களது கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியில் சீமெந்து தொழிற்சாலை திறப்பு பற்றி மஹிந்த அரசு அறிவித்துள்ளது. இதன்படி எதிர்வரும் காலங்களில் திருத்த வேலைகள் தொடர்பிலான சர்வதேச ரீதியில் டென்டர்களை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன மற்றும் சீமெந்து நிறுவன தலைவர் சட்டத்தரணி என்.எஸ்.எம்.சம்சுதீன் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கப்படுவதால் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தின் அளவை நூற்றுக்கு 25 வீதம் குறைக்க முடியும் எ…

  17. சம்பிக்கவின் அணுசக்தி அமைச்சு பொறுப்பு வாபஸ் 30 ஜூன் 2013 அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு ஒப்படைக்கப்பட்டிருந்த அணுச் சக்திப் பொறுப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த பொறுப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் காலங்களில் சம்பிக்க ரணவக்க தொழில்நுட்ப மற்றும் ஆய்வு ஆகியவற்றுக்கு மட்டும் அமைச்சராக கடமையாற்றுவார். கடந்த 24ம் திகதி இந்த வர்த்தமானி அறிவிப்பு பிரசூரிக்கப்பட்டுள்ளது. சம்பிக்க ரணவக்க ரஸ்யாவிற்கு விஜயம் செய்துள்ளதாகவும் இதனால் இது குறித்து கருத்து வெளியிட முடியா அமைச்சர் ரணவக்க 14 திணைக்களளுக்கு பொறுப்பாக செயற்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்திற்காக இவ்வாறு குறித்த பொறுப்பு வாபஸ் பெற்றுக…

  18. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இணக்கப்பாடு கிடையாது – கருணாநிதி 30 ஜூன் 2013 இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளத் தயாரில்லை என தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிடும் போது கூட்டணி வைத்துக் கொள்வதற்காக இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும், 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டுமென இலங்கைக்கு அழுத்…

  19. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐ.தே.க 30 ஜூன் 2013 சவால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி முடிந்தால் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுக்களை அமைத்து கால நேரத்தை விரயப்படுத்தாது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்டதி 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களின் ஆணைக்குப் புறம்பாக பெற்றுக் கொண்டாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை முடிந்தால் பயன்படுத்தி திருத்தச் சட்டத்தை ரத்து செய்யட்டும் என அ…

  20. இலங்கை, பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்பது ஆபத்தானது 29 ஜூன் 2013 சிறிலங்கா அரசாங்கம் செய்த குற்றங்களை கண்டுகொள்ளாது அதற்கு கைமாறு செய்யும் நிலை காணப்படுகிறது:- இலங்கை, பொதுநலவாய அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்பது ஆபத்தானது என தி கல்ஃப் நியூஸ் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் சர்வதேச நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், மற்றொரு ஆசிய நாடான இலங்கையில் ஜனநாயகம் அழிந்து போவது, உலக நாடுகளின் கண்களுக்கு புலப்படவில்லை எனவும் இது ஆபத்தானது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் சிறிலங்கா அரசாங்கம் செய்த குற்றங்களை கண்டுகொள்ளாதது மாத்திரமின்றி, அதற்கு கைமாறு செய்யும் நிலைமை காணப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனித…

  21. தேசிய பாதுகாப்புத் தகவல்களை திருட தனது கைப்பேசி உரையாடல்கள் ஒட்டுகேட்கப்படுவதாக கோத்தாபய முறைப்பாடு 29 ஜூன் 2013 தனது கையடக்க தொலைபேசி உரையாடல்கள் செவிமடுக்கும் திட்டமிட்ட சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பெறும் சட்டவிரோத முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசேட விசாரணைகளில் வெளிநாட்டு தூதரகம் ஒன்றும் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஒன்றும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பாதுகாப்புச் செயலாளரை தவிர மேலும் முக்கிய நபர்கள் பலரின் தொலைபேசி உரையாடல்களையும் இவர்கள் செவிமடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு தேவையான கருவிகளை அவர்க…

  22. மகிந்தவின் தூக்கத்தை குலைக்கும் சந்திரிகா ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை 29 ஜூன் 2013 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அணிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், அவருக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் அமைச்சர்கள் சிலர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தில், கட்சியின் ஆலோசகரான சந்திரிகா, அந்த நிலைப்பாட்டுக்கு புறப்பான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த அறிக்கைகளை ஆராய்ந்து பார்க்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட வேண்ட…

  23. மாகாண சபை அதிகாரத் திருத்தம் - கிழக்கின் அனுமதியைப் பெறுவதில் அரசாங்கத்திற்கு கடும் அசௌகரியம் 29 ஜூன் 2013 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எதிர்ப்பு காரணமாக மாகாண சபைகளின் அதிகாரங்களில் திருத்தம் ஏற்படுத்துவது தொடர்பான யோசனையை கிழக்கு மாகாணத்தில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அரசாங்கம் கடும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளது. இந்த யோசனைக்கு தென், வடமேல், ஊவா, சபரகமுவ, வடமத்திய, மத்திய மாகாணங்கள் ஏற்கனவே அனுமதியளித்துள்ளன. அடுத்த சில தினங்களில் மேல், கிழக்கு சபைகளிடம் இருந்தும், வடக்கு மாகாணத்தின் ஆளுநரிடம் இருந்து இணக்கத்தை பெற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இந்த திருத்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படக் கூடாது என்ற கட…

  24. இலங்கையில் நல்லிணக்கத்துக்கு பொதுநலவாயம் உதவி வழங்கும்; கமலேஷ் சர்மா தெரிவிப்பு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு பொதுநலவாய அமைப்பு தொடர்ந்தும் இலங்கைக்கு உதவி புரிந்து வரும் என்று அந்த அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார். "லண்டன் பினான்சியல் ரைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விடயத்தில் இலங்கை அரசு இன்னமும் நிறையவே செய்ய வேண்டியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுநலவாய விழுமியங்களை இலங்கையில் முன்னெடுப்பதில் நாங்கள் இன்னமும் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறோம். இதில் மனித உரிமைகள…

    • 1 reply
    • 977 views
  25. மணலாற்றில் புதிய சிங்கள கிராமம்; பறிபோகிறது தமிழர் நிலங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில், மணலாறு பிரதேசத்தில் சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, புதிய சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை, ரணவிரு பியச சம்பத்நுவர என்ற மாதிரிக் கிராமத்தை சிறிலங்காப் படையினருக்கு உருவாக்குவதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் 80 பேர்ச் காணித் துண்டுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் 52 சிறிலங்காப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டுதலில், வன்னிப் படைகளின் தலைமையகத்தினால், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள்…

    • 2 replies
    • 755 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.