ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
யாழ்.பல்கலை பொருளியல் துறை விரிவுரையாளரை பதவி நீக்குமாறு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: கொடும்பாவியும் எரிப்பு [ வியாழக்கிழமை, 30 மே 2013, 06:49.00 AM GMT ] யாழ்.பல்கலைக்கழக மாணவிகளுடன் பாலியல் ரீதியான செயற்பாடுகளை மேற்கொள்ள முயன்ற பொருளியல் துறை விரிவுரையாளர் செ.இளங்குமரனை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இன்று காலை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் இளங்குமரனது கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. பெருமளவான மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தருக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலைப்பீடம் சார்பில் அவசர கோரிக்கை என்னும் பெயரில் இம்மகஜர் அனு…
-
- 0 replies
- 524 views
-
-
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி. கடந்தவார இறுதியில் கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியசரர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் மூத்த புதல்வரின் திருமணம் கடந்தவார இறுதியில் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் முக்கிய விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். அத்துடன் அங்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பெருமளவானோர் திருமணத்தில் கலந்துகொண்டனர். மணமக்கள் ஜனாதிபதியின் …
-
- 4 replies
- 930 views
-
-
இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒருகோடி இந்திய ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும் என, மத்திய பிரதேசமாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். இதற்கான அனுமதியை இலங்கை அரசுவழங்கியுள்ளது. பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடந்த விழாவில், முதல்வர் சிவராஜ் இத்தகவலை கூறினார். கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணி துவக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். http://www.adaderana.lk/tamil/news.php?nid=39686
-
- 10 replies
- 853 views
-
-
தமிழர் தீர்வு தொடர்பில் புதுடில்லியில் மாநாடு; புலம்பெயர் தமிழருக்கும் அழைப்பு தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவில் கூட்டப்படும் மாநாட் டில் பங்குபற்றுமாறு புலம் பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான ”தர்சன நாச்சியப்பனினால் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படுவது தொடர்பில், இங்குள்ள தமிழ்க் கட்சிகளை டில்லிக்கு அழைத்து இவ்வாறானதொரு மாநாட்டை 2011 ஆம் ஆண்டு ”தர்சன நாச்சியப்பன் நடத்தியிருந்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கோஷம் இலங்கை அரச மட்டத்தில…
-
- 1 reply
- 717 views
-
-
அன்ரோனேவ் விமானத்தை சுட்டுவீழ்த்திய தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த இருவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி அன்ரோனோவ்-32 விமானத்தை சுட்டு வீழ்த்தி அதிலிருந்த ரஷ்ய விமானி, விமான உதவியாளர்கள் இருவர் மற்றும் 29 படைவீரர்கள் இறப்பதற்கு இவ்விருவரும் காரணமாக இருந்தனர் என்றும் அவ்விருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அன்ரோனோவ்-32 எனும் விமானம் தலாவ எனுமிடத்திலுள்ள கிரிவௌவுக்கு மேலாக பறந்துக்கொண்டிருந்த போதே ஏவுகணையினால் தாக்கப்பட்டமையினால் அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவம் தொடர்பில்; தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும் இந்த ச…
-
- 0 replies
- 504 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர்கள் இப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை விரிவுரையாளரான சொ.இளங்குமரனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நேற்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இப் போராட்டங்களின் போது குறித்த விரிவரையாளரின் கொடும்பாவி மாணவர்களால் எரிக்கப்பட்டுள்ளதுடன் அவருடைய பிரத்தியேக அலுவலகமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், மதிப்பிற்குரிய ஆசான்களே காமுகர்களை வெளியேற்ற உதவுங்கள், நிர்வாகமே படிக்க வந்த எங்களை தீய எண்ணங்கொண்டு அணுகும் கொடியவர்களை உடன் வெளியேற்று, இச்சைக்கு ஆசைப்பட்டு புள்ளிகளை பிச்சை போட நினைக்காதே, காமவெறியனை இனங்காட்டியும் குற்றவாளி என நிரூபித்துத் தண்…
-
- 0 replies
- 527 views
-
-
யுத்தம் தொடர்பில் கேள்வி எழுப்புமாறு தாய்லாந்து பிரதமர் யன்க்லுக் சின்வத்ராவிடம், நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்து பிரதமர் சின்வத்ரா இன்றைய தினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியிலேயே ருத்ரகுமாரன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கையின் பிரகாரம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொது மக்கள் கொல்லப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உணவு விநியோகத்தை அரசாங்கம் தடை செய்ததாகவும் இதனால் மக்கள் பெருமளவில் உயிரிழந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில்…
-
- 0 replies
- 520 views
-
-
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்கள் விரைவாக மீள் குடியேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்களவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அவதானிப்பதற்காக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். இதன்போதே அக்கட்சியின் செயலாளர் நிசாந்த சிறீ வர்ணசூரிய என்பவர் இவ்வாற தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இதற்கு முன்னர் நாங்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த போதும் அங்கு வாழ்ந்த சுமார் 150 சிங்கள குடும்பங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாடினோம். இதன்போது, அச்சிங்கள குடும்பங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அர…
-
- 0 replies
- 586 views
-
-
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின் ஊடாக தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என்ற நம்பிக்கை கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடும்போக்குவாத பௌத்த பெரும்பான்மைவாதம் மேலோங்கியுள்ள தற்கால சூழ்நிலையில், ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வின்வெது நடைமுறைச் சாத்தியமா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தேச தீர்வுத் திட்டம் தொடர்பிலான தமது கட்சி நிலைபாடு விரைவில் வெளியிட…
-
- 0 replies
- 437 views
-
-
2012ம் ஆண்டில் இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்புகள் மிகவும் வரையறுக்கப்பட்டிருந்ததாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டு;ள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பயங்கரவாத தடுப்பு மற்றும் இராணுவப் பயிற்சி போன்ற தொடர்புகள் இலங்கையுடன் வெகுவாக மட்டுப்படுத்திக் கொள்ளப்பட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மனித உரிமை நிலைமைகள் காரணமாகவே இவ்வாறு பாதுகாப்புத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு;ளளதாகக் குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச மற்றும் நிதி வலையமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 457 views
-
-
ஜ.தே.கவின் உத்தேச அரசியல் யாப்பு பற்றிய சுமந்திரனின் கருத்து தனிப்பட்டதே - யாழ்ப்பாணத்தில் மாவை! 30 மே 2013 ஜக்கிய தேசியக்கட்சியின் உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக அதனை வரவேற்று கூட்டமைப்பு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தவை அவரது தனிப்பட்ட கருத்துக்களேயன்றி அது கூட்டமைப்பின் கருத்தல்ல என பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அங்கு எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் கூட்டமைப்பு தலைமைகள் அடுத்த வாரம் ஒன்று கூடி ஆராய்ந்து குறித்த உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான தமது நிலைப்பாட்டை அறிவிக்குமெனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் குறித்த உத்தேச அரசிய…
-
- 2 replies
- 876 views
-
-
மீன்களின் இனப்பெருக்க காலமான ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 29-ந்தேதி வரை மீன்பிடிக்க தொடர்ந்து 45 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் மீன்பிடிக்க தடைகாலம் முடிந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ராமேசுவரம் மீனவர்கள் நாளை (1-ந்தேதி) அதிகாலை முதல் மீன்பிடி டோக்கன் பெற்று செல்ல உள்ளனர். இந்த நிலையில் இலங்கை ராணுவம் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க வந்து விடாதபடி கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதியில் 7 கடற்படை ரோந்து கப்பல்களையும், 9 குட்டி ரோந்து கப்பல்களை நிறுத்தி உள்ளது. மேலும் கச்சத்தீவு எல்லையை குறிக்கும் வகையில் மிதவை பலூன்களையும் கடலில் மிதக்க விட்டுள்ளனர். நேற்று பாம்பனில் இருந…
-
- 0 replies
- 676 views
-
-
இடத்தை சொல்லுங்கோ நானும் போறன்; அசடுவழிகிறார் றெமீடியஸ் யாழ்ப்பாணத்தில் விபச்சாரிகள் இருக்கும் இடத்தை சொல்லுங்கள் நானும் போக ஆசைப்படுகின்றேன் என றெமீடியஸ் சபையோரைப் பார்த்துக் கேட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றது. யாழ். மாநகரசபையின் மே மாதத்திற்கான மாதாந்தக் கூட்டம் இன்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது யாழ்.மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் கலாச்சார சீர்கேடுகள் தொடர்வதாக எதிர்கட்சியினரால் கேள்விகள் எழுப்பப்பட்டு அதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபையில் விவாதங்களும் நடைபெற்றன. அதில் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். மேலும் சபையில் றெமீடியஸ் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதிகளில் விபச…
-
- 1 reply
- 1.7k views
-
-
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை - ஹக்கீம் 30 மே 2013 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் எவ்வித முனைப்புக்களும் காட்டப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காணி காவல்துறை அதிகாரங்கள் n;தாடர்பிலோ அல்லது 13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலோ நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/92348/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 368 views
-
-
தெற்கில் மதமாற்றம் குறித்து பேசுபவர்கள் வடக்குக் கிழக்கில் என்ன செய்கின்றனர்? - சுரேஸ் கேள்வி! முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஏனையோரை மதம் மாற்றுவதாக குற்றம் சாட்டுபவர்கள் வடக்குக் கிழக்கில் என்ன செய்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை. யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு, கிழக்கில் புதிதாக ஒரு விகாரையேனும் அமைக்கப்படவில்லை எனவும், முடிந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரூபிக்கட்டும் எனவும் மகிந்த அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த…
-
- 0 replies
- 569 views
-
-
30th May 2013 2009 ஈழப் போரின் போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. சில தினங்களுக்கு முன்பு ஈழத்தில் இருந்து குசலக் குமாரி என்ற தாய் இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தனது மகனை மீட்க தமிழகம் வந்துள்ளார் என்ற செய்தியை வெளியிட்டோம். அதன் பின்பு பல அழைப்புகள் வெளிநாட்டில் இருந்து வந்த வண்ணம் உள்ளது. பலரும் தங்கள் உறவுகளை காணவில்லை , அண்ணனை காணவில்லை, தம்பியை காணவில்லை . இந்தோனேசியாவில் கடைசியாக அவனது குரலை கேட்டோம் என்று நமக்கு செய்தியை அனுப்பிய வண்ணம் உள்ளனர். பல ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியா செல்லும் போது படகு மூழ்கி பலியாகி உள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு இந்தோனேசிய சிறைச் சாலையில் உள்ளனர். சிலர் திறந்வெளி முகாமில் உள்ளனர். சிலர் இரண்டில் இருந்தும் தப்பித்…
-
- 0 replies
- 578 views
-
-
இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கச்சதீவை மீளப்பெறுவதற்கு டில்லி நிர்வாகம் உத்தேசித்துள்ளது என உயர் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. இந்த விவகாரம் சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் உள்ளிட்ட அரச உயர்மட்ட பிரமுகர்கள் தமது இராஜதந்திரிகளுடன் டில்லியில் ஆலோசனை நடத்திவருகின்றனர் என்றும் அவ்வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றாக 1987இல் இலங்கை இந்திய அரசுகளிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக…
-
- 9 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவின் குற்றச் சாட்டுக்களை நிராகரிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். 2012ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் மனித உரிமை அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமக்கும் தமது கட்சிக்கும் எதிராக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார். கடத்தல்கள், காணாமல்போதல்கள், கப்பம் கோரல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புகளைப் பேணுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. ஈ.பி.டி.பி. கட்சி எந்தவிதமான அடக்குமுறைகளிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக் காலமாக அமெரக்க ராஜாங்கத் திணைக்களமும் அமெரிக்…
-
- 6 replies
- 996 views
-
-
இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையே நான்கு முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து [Thursday, 2013-05-30 09:13:15] தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் நான்கு மிக முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்தாகவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 'த பெங்கொக் போஸ்ட்' என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தாய்லாந்தின் பிரதமர் யிங்லக் சின்வேட்ரா எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின் போது, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், இராஜதந்திரிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளது கடவுச் சீட்டுகளை வைத்திருப்போருக்கு, இரண்டு நாடுகளுக்கும் வீசா தேவையில்லை என்ற உடன்படிக்கை மற்றும் இரண்டு நகர இணைப்பு ஆகிய நான்கு உடன்படிக்கைகள் கைச்சாத்தாகவுள்ளன. இதன்படி, க…
-
- 7 replies
- 596 views
-
-
தீக்குளிக்க வேண்டிய தேரர்கள் உயிர்வாழும் போது , வாழவேண்டிய போவத்தை இந்திர ரத்ன தேரர் தீக்குளித்து உயிரிழந்துள்ளதாக இராவணா சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். இந்நாட்டில் சில தேரர்கள் காலையில் தானத்தை உண்டுவிட்டு, பகலில் தானத்தை உண்ணும் வழியை மட்டுமே யோசிக்கின்றனரே தவிர நாடு இனம் தொடர்பாக எந்த வலியும் அவர்களுக்கு இல்லையெனவும், தங்களை விமர்சனம் செய்யமட்டுமே தெரியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். போவத்தை இந்திர ரத்ன தேரர் துணிச்சலான, சக்திமிக்க தேரர் எனவும் அவர் வாழவேண்டிய ஒருவர் எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் மேலும் தெரிவித்துள்ளார். எனினும் அவர் எடுத்த முடிவு ஒன்று உள்ளது அது மாடுகளை வெட்டக்கூடாது என்பதாகும் அதற்காக இராவணா …
-
- 3 replies
- 675 views
-
-
Published on May 26, 2013-8:05 am · No Comments தமிழ் அரசியல் வட்டாரங்களில் இன்று இரு முக்கிய விடயங்கள் பேசப்பட்டு வருகிறது. ஒன்று வடமாகாணசபை தேர்தல், இரண்டாவது தமிழ் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை உருவாக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற கட்சியை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வது. வடமாகாணசபை தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டால் விரும்பியவர்கள் வாக்களிப்பார்கள். பெரும்பாலான தமிழ் மக்கள் வாக்களிக்கும் விருப்பு அற்றவர்களாகவே காணப்படுகின்றனர். வடக்கு கிழக்கில் தேர்தல் என்று வரும் போது முஸ்லீம்களைப்போல தமது வாக்குரிமையை செலுத்தும் ஆர்வம் தமிழ் மக்களிடம் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. இதில் இரண்டாவது விடயம் பற்றி தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதில்லை, இந்த விடயத்தி…
-
- 3 replies
- 871 views
-
-
பாரதீய ஜனதா துணைத் தலைவரும் டெல்லி மேல் சபை எம்.பி.யுமான ரவிசங்கர் பிரசாத் தலைமையில் 3 பேர் கொண்ட குழு இலங்கை செல்கிறது. வருகிற ஜூன் 4-ந்தேதி அவர்கள் டெல்லியில் இருந்து புறப்பட்டு கொழும்பு செல்கிறார்கள். அங்கு அவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே, ராணுவ செயலாளர் கோத்தபய ராஜபக்சே மற்றும் இலங்கை மந்திரிகள் அதிகாரிகளை சந்திக்கிறார்கள். இலங்கையின் வடக்கில் உள்ள தமிழர் பகுதிகளுக்கும் சென்று பார்வையிடுகிறார்கள். தமிழர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளையும் பார்வையிட திட்டமிட்டுள்ளனர். இது பற்றி வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி கட்சி எம்.பி.க்களிடம் கேட்டபோது, பாரதீய ஜனதா குழு வருகை பற்றி தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றார். இதே போல் இந்திய தூதரக அதிகாரி…
-
- 5 replies
- 714 views
-
-
மாணவியருடன் விரிவுரையாளர் பாலியல் தொல்லை - யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்! [Thursday, 2013-05-30 20:27:00] யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் இன்று போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். யாழ். பல்கலைக்கழக பொருளியல்துறை விரிவுரையாளர் ஒருவருக்கு எதிராகவே மாணவர்கள் இந்த எதிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். அதன்படி இன்று காலை யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மணிநேர போராட்டத்தினை முன்னெடுத்தனர்.குறித்த விரிவுரையாளர் மாணவியருடன் பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுப்பவர். இவரினால் பல மாணவியர் பாதிக்கப்பட்டமை தொடர்பிலான முறைப்பாடுகள் ஏற்கனவே பல்கலை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்றன. எனினும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விரிவுரையாளர் தற்…
-
- 2 replies
- 936 views
-
-
கச்சதீவு அருகே போர்க்கப்பல்களை நிறுத்தி வைத்துள்ள இலங்கை இராணுவம்! [Thursday, 2013-05-30 19:20:39] கச்சத்தீவு அருகே இலங்கைப் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய நாட்டுப் படகு மீனவர்கள் கூறியுள்ளனர். கடந்த 45 நாட்களாக இருந்த மீன்பிடித் தடைக்காலம் நேற்று மே.29ம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், ராமேஸ்வரத்தைத் தவிர்த்த மற்ற பகுதி மீனவர்கள் இன்றே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். ஆனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வரும் சனிக்கிழமைதான் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இந்த நிலையில், இன்று மீன்பிடிக்க நாட்டுப் படகில் கடலுக்குச் சென்ற தங்கச்சி மடம் மீனவர்கள் சிலர் கரை திரும்பிய பின்னர் கூறுகையில், இலங்கை ராணுவம் கச்சத்…
-
- 5 replies
- 736 views
-
-
இந்திய புலனாய்வு அமைப்பான "றோ' வின் உயரதிகாரி ஒருவர் நேற்று யாழ். மாவட்ட படைத் தளபதியை பலாலியில் சந்தித்து ரகசியப்பேச்சு நடத்தியுள்ளார். "றோ'வின் உயர்அதிகாரி எல்.ஐ.என்.ஜி.லங்கா தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் யாழ். குடாநாட்டுக்கு நேற்றுப் புதன்கிழமை இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். இவர்கள் யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். அத்துடன் இவர்கள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துரு சிங்கவை பலாலியில் சந்தித்து ரகசியப் பேச்சு நடத்தியுள்ளனர். எனினும் பேச்சின் போது ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து எதுவும் தெரியவரவில்லை. யாழ். மாவட்டத் தளபதியை "றோ' அதிகாரி சந்தித்து…
-
- 5 replies
- 711 views
-